எவின் சிறையிலிருந்து ஒரு பரிசு


5 ஜூன் 2009

இரான் நாட்டில் பஹாய் சமயம் ஆரம்பித்ததிலிருந்து பஹாய்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். இன்றும் அவர்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர், மற்றும் பல பஹாய்கள் ஜோடிக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளின் விளைவாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; அவர்களுள் ஒருவர் திருமதி பாஃரிபா கமாலபாடி.

திருமதி பாஃரிபா கமாலபாடி, மற்றும் ‘யாரான்’ எனப்படும் ஆறு பஹாய் தலைவர்கள், மற்றும் வேறு பல பஹாய்கள் பிரசித்தமான எவின் சிறையில் வாடுகின்றனர். அவர்களின் உடல்கள் சிறைப்படுத்தப்பட்டும் உளவியல் ரீதியில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட போதிலும், அவர்களின் குடும்பங்கள், நண்பர்கள், மற்றும் உலகைச் சுற்றியுள்ள இலட்சக்கணக்கான அவர்களின் நலன்விரும்பிகளை மனதிற்கொண்டு அவர்களின் ஆன்ம ஒளி மேலும் மேலும் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது.

எவின் சிறையில் தரானிக்கான பாஃரிபாவின் பரிசு
எவின் சிறையில் தரானிக்கான பாஃரிபாவின் பரிசு


மார்ச் மாதம் திருமதி கமாலபாடியின் கடைக்குட்டி மகளான, தரானியின், பிறந்த நாளாகும், ஆனால் அவளுடைய அன்னையினால் தம் மகளுக்கு சிறைக்கம்பிகளின் பின்னாலிருந்து ஒன்றும் செய்யமுடியவில்லை! இருந்தபோதும், தம்மால் முடிந்த ஒன்றை தமது மகளுக்காக செய்தார். அவர், கடுமையான சிறைவாசத்திற்கு உட்பட்டிந்தபோதிலும், தம்மைப்போல் சிறைப்படுத்தப்பட்டோருக்காக வாழ்வும் அன்பும் துளிர்விட முடியும் என்பதை நினைவூட்ட சிறைச்சாலைக்குள்ளேயே ஒரு சிறு செடியை வளர்த்தார் — அச்செடியை தமது மகளான தரானிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார்.

இங்கு இணைக்கப்பட்டுள்ள படத்தில் அச்செடியையும் அதைப் பெற்ற தரானியையும் காணலாம். அடுத்தவருடமாவது, எவின் சிறையின் கடுமைகளுக்கு வெகு தொலைவிற்கு அப்பால், தங்கள் சொந்த வீட்டிலேயே களிப்போடு ஒரே குடும்பமாக தரானியின் பிறந்த நாள் கொண்டாடப்பட நாம் பிரார்த்திப்போமாக.

இப்படம் Iran Press Watch எனப்படும் செய்தி நிறுவனத்திற்கு திருமதி பாஃரிபாவின் சகோதரரால் வழங்கப்பட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: