ரித்வான் 2009 செய்தி மீதிலான சிந்தனைகள்
டாக்டர் பீட்டர் கான் வழங்கிய உரை
3 ஜூலை 2009
ரித்வான் செய்தி
முக்கியமானதும், நீண்டகாலத்திற்கு அவசியமானதுமான ரித்வான் 2009 செய்தி எனும் செய்தி பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் மகிழ்ச்சியடைகின்றேன். உங்களுக்குத் தெரிந்திருப்பதைப் போல, அச்செய்தியானது உலக நீதிமன்றத்தின் பல்வேறு செய்திகளிடையே தனது சுருக்கத்திலும், தனது உள்ளீட்டிலும் தனித்தன்மை வாய்ந்ததொரு செய்தியாகும். முன்பு எப்போதுமில்லாத அளவுக்கு ஒரு சிறப்பான நிகழ்வு பற்றி, மேலும் சொல்லப் போனால், உண்மையில் மானிட உலகம் முழுவதிலும் சமய வரலாறு பற்றி அச்செய்தி மிகக் கடுமையாக எடுத்துரைக்கின்றது; அது யாதெனில், உலக நீதிமன்றத்தின் உத்தரவுக்கேற்பவும், அனைத்துலக போதனை நிலையத்தின் உறுப்பினர்களுடைய விலைமதிப்பில்லா துணையுடனும் உலகம் முழுவதிலும் நடைபெற்று முடிந்த, சுமார் எண்பதாயிரம் மக்கள் பங்கேற்ற 41 வட்டார மாநாடுகள்தான் அது.
உங்களுக்குத் தெரிந்திருப்பதைப் போல, அத்தொடர்ச்சியான மாநாடுகளை உலக முழுவதிலுமுள்ள பஹாய் சமூகத்தின் மீதும், இறுதியாக பொது சமுதாயத்தின் மீதும் ஓர் ஒன்றிணைக்கவல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. நமது சமயம் உலகம் முழுவதும் படர்ந்திருக்கின்றது என்பதற்கு அது வெளிப்படையான ஒரு சித்தரிப்பாகும். அத்துடன், அவ்வட்டார மாநாடுகள், தற்போதைய திட்டத்தின் இறுதிக்குள் உலகம் முழுவதிலும் 1,500 தீவிர வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிட வேண்டும் எனும் குறிக்கோளுக்கு ஒரு சாதகமான எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வருடத்திய ரித்வான் பண்டிகை கொண்டாட்ட உணர்வு கொண்டது என கருதப்படலாம்: அதாவது, ரித்வான் 2009க்குள் உலகம் முழுவதிலும் 1,000 தீவிர வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்தியிருப்பதற்கான கொண்டாட்டம் என்பதுடன், அதன் அடிப்படையில் பார்த்தால், ஐந்து வருடத் திட்டத்தின் இலட்சியம் நிச்சயம் நிறைவேற்றம் காணும் எனும் உலக நீதிமன்றத்தின் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு தெரிகின்றது.
இன்றிரவு நான் பேசப்போவது அத்தகைய விவரங்கள் அல்ல. ஆனால், நான் பேசப்போவது, அந்த செய்தியினுள் புதைந்திருக்கும் இரண்டு முக்கியமான பிரச்சனைகள் பற்றிதான். அந்த இரண்டு அம்சங்களை ஆய்வு செய்வதானது, இந்த ரித்வான் செய்தியை ஆழமாகக் கற்பதற்கும், சமயம் போய்க் கொண்டிருக்கும் போக்கை நன்கு புரிந்து கொள்வதற்கும் அவசியமானதாக இருக்கும்.
நான் பேசப்போகும் அந்த இரண்டு அம்சங்கள், முதலாவதாக, உலகின் சரித்திரத்தில் தற்போதைய பஹாய் நடவடிக்கையின் முக்கியத்துவத்தை முதலில் ஆய்வு செய்திடும். இரண்டாவதாக, சமயத்தில் மாற்றம் குறித்த ஒரு மனப்பாங்கினையும் ஆய்வு செய்திடும்.
பஹாய் நடவடிக்கையின் முக்கியத்துவம்
வீழ்ச்சி எனும் செயல்பாடு
இன்றைய உலகில் இரண்டு செயல்பாடுகள் இயங்கிக் கொண்டு வருகின்றன என்பது மக்களால் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றுதான் நான் நினைக்கின்றேன். அவற்றில் ஒன்று, வாழ்க்கையின் தரத்தில் வீழ்ச்சி எனும் செயல்பாடு. மற்றது, உரிமைகளை இழந்துள்ள சிறுபான்மை மக்களின் விடுதலை, அனைத்துலகத் தன்மை வாயிலாக ஓர் உலகளாவிய இயல்புநிலை, பயனளிக்கும் காரியங்களில் தொழில்நுட்ப பயனீடு ஆகியவை உட்பட சாதகப்பூர்வமான அம்சங்களில் வளர்ச்சி. இந்த இரண்டு செயல்பாடுகள் இருந்து வருகின்றன என்பதை அங்கீகரிப்பதானது, பல வருடங்களாக மானிடத்தின் குணவியல்பாக இருந்து வந்துள்ளது என்று பொருள்படாது. 20ம் நூற்றாண்டின் சரித்திரத்தை நாம் ஆய்வு செய்வோமாகில், அந்நூற்றாண்டில் அளவுக்கதிகமான மகிழ்ச்சி நிரம்பிய காலங்களும் இருந்துள்ளன என்பது தெரிய வரும். அந்த மகிழ்ச்சி நிரம்பிய காலங்கள் பிரபல அரசியல் தலைவரைத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டதைப் போன்றதாகவும் இருக்கலாம் அல்லது 1989ம் ஆண்டு பெர்லின் சுவர் இடித்துத் தள்ளப்பட்டதைப் போன்று எல்லையற்ற வாக்குறுதியைக் கொண்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் அமைந்திருக்கலாம். ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, நெருக்கடிமிக்க கடும் பிரச்சனைகள் வந்திருப்பதன் காரணமாக நடப்புக்கள் அவ்வளவு சுமூகமாக இல்லை என பொதுப்படையாக மனிதர்கள் நினைக்கத் தொடங்கி விட்டனர் என்றுதான் எனக்குத் தோன்றுகின்றனர்.
உலக நடப்பு குறித்து சாதாரண பார்வையாளர் ஒருவரிடம் நீங்கள் கேட்பீர்களாயின், அவர், “வீழ்ச்சி, உயர்ச்சி என இரண்டு விஷயங்கள் ஒரே நேரத்தில் உலகில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன,” என பதிலளிப்பார்.
இந்தத் தலைப்புப் பற்றி நமது பஹாய் போதனைகளில் நிச்சயமாக நிறையவே எழுதப்பட்டுள்ளது. ஆனால், இப்போது நமது கருத்து அதுவல்ல. இந்த வீழ்ச்சி எனும் செயல்பாடு குறித்து மக்களிடையே எழுந்த உணர்வலைகள் பல வடிவங்களில் வெளிப்பட்டு வருகின்றன. இப்பிரச்சனை தற்காலிகமானது என்றும், விரைவில் அது சீர்பட்டு விடும் என்றும் பெரும்பான்மையான மக்கள் எண்ணுகின்றனர். “இந்த நெருக்கடி வந்த பிறகு பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் ஆசியாவிலும், ஆப்ரிக்காவிலும் அல்லது மற்ற நாடுகளிலும் விவகாரங்கள் அவ்வளவு நன்றாக இல்லை. ஆனால், சில அதிர்ஷ்ட நிலையுடன் நிலைமை வழக்க நிலைக்குத் திரும்பும், அமைதிமிக்க சமுதாயமாக நாம் திரும்பவும் மாறுவோம்,” என்றுதான் பலர் நினைக்கின்றனர்.
ஆகவே, இந்த வீழ்ச்சி தற்காலிகமானதே எனும் ஒரு பொதுவான எதிர்பார்ப்பு நிலவுகின்றது. உலகளாவிய நிலையில் அவ்வீழ்சியின் அகலம் எடைபோட்டுப் பார்க்கப்படவில்லை. அதன் இறுதியான கடுமை ஏற்கப்படவுமில்லலை. அந்த வீழ்ச்சியிக்கான அடிப்படை காரணங்களைப் பற்றி உலகளாவிய நிலையில் ஓர் அறியாமை நிலவி வருகின்றது. அதற்கு மாறாக, அவ்வீழ்சிக்குக் காரணம் சில மாற்றங்களின் அறிகுறிகளே என கருதப்பட்டு வருகின்றது: அதவாது, அரசியல் மாற்றங்கள், கல்வியின் மேம்பாடு, சில சிறுபான்மை மக்களின் சுய கட்டுப்பாடின்மை, பெண்களின் சுதந்திரம் ஆகியவை அந்த மாற்றங்களாகக் கருதப்படுகின்றன. இப்பிரச்சனைகளுக்குத் தீர்வாக ஒரு திடீர் நிவாரணம் ஏற்பட்டு அப்பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து, கவலையெனும் மேகங்களைக் கலைத்து விட்டு, அதனால் மானிடமானது தனது வருங்காலத்தை நோக்கி அமைதியுடனும், இணக்கமாகவும் பணம் செய்திடும் என பெரும்பான்மையாக மக்கள் நம்பிக்கையுடன் கருதுகின்றனர்.
இவ்வாறான மனபோக்குகளை நாம் பஹாய் திருவாசகங்களின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது என நினைக்கின்றேன். ஏனெனில், பஹாய்கள் எனும் முறையில் நாம் சந்திக்கும் சவால் யாதெனில், அறியாத நிலையில் பொது சமுதாயத்தின் இத்தகைய மனப்போக்குகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர்க்கும் சவாலாகும். அதற்கு மாறாக, நாம் அதிகாரப்பூர்வமான பஹாய் வாசகங்களின் அடிப்படையில் இப்பிரச்சனைகளுக்கான தீர்வு குறித்த நமது மனக்கருத்துகளை உருவாக்கிக் கெள்ள வேண்டும். இந்த அதிகாரப்பூர்வமான பஹாய் வாசகங்கள் பொது சமுதாயத்தில் தற்போது பரவியுள்ள கருத்திலிருந்து முற்றாக மாறுபட்டவையாகும். இத்தலைப்பு மீது பாதுகாவலர் எழுதியுள்ள சில பகுதிகளை நான் உங்களுடைன் பகிர்ந்து கொள்கின்றேன். பஹாவுல்லாவினுடைய சமயத்தின் பரந்தளவிலான பரப்பெல்லையைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது பாதுகாவலர் பின் வருமாறு கூறுகின்றார்:
“அத்தகைதோர் அதி உன்னத உதவி வெளிப்படுவதற்கு, தீவிர குழப்பநிலை கொண்ட காலமும், பரந்தளவிலான துயரமும் தவிர்க்கவியலாததாக இருந்திடும்..1”
இன்னோரிடத்தில் அவர் சொல்வதாவது:
“ஏற்கனவே உலகினைச் சூழ்ந்துள்ள இருளைப் போலவே, உலகம் அனுபவிக்க வேண்டிய வேதனைமிக்க துயரங்கள் இன்னும் தயாரிப்பு நிலையிலேயே இருக்கின்றன.அதன் கருமைத்தன்மை இன்னமும் கற்பனை செய்து பார்க்கப்படாமலேயே இருக்கின்றது..”
சமயத்தினுடைய அதிகாரப்பூர்வமான வாசசகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இன்னுமொரு வாசகப் பகுதி மிக விவரமான வாசகப் பகுதியாகும். அது இக்கூட்டத்தினரை கவலையுறச் செய்யக்கூடும். வருங்ாகலத்தைப் பற்றி ஷோகி எஃபெண்டி விவரமாகக் குறிப்பிட்டு பகுதி இது:
“திவ்விய உண்மைகளையும், கோட்பாடுகளையும் ஏற்கவும், கடைப்பிடிக்கவும் மறுத்தொதுக்கி மாசுபடுத்திய கவனக்குறைவான மானிடத்தின் ஆன்மாவின் மீது, கற்பனை செய்து பார்க்க முடியாத பேரச்சத்தைக் கொடுத்திடும் இன்னல்களும், நினைத்துப் பார்க்க முடியாத நெருக்கடிகளும், புரட்சிகளும், போர்களும், பஞ்சமும், கொடிய நோய்களும் ஒன்று சேர்ந்து தொடர்ந்து தாக்கி வரும். மானிடம் இது வரை அனுபவித்திடாத முடக்க நிலை அதனைப் பீடித்து, ஏற்கனவே சீர்குலைந்து போன சமுதாயத்தை, அச்சமுதாயம் மறுசீரமைப்புச் செய்யப்பட்டு, மறுமலர்ச்சியடையச் செய்யப்படுவதற்கு முன்னதாக மேலும் துன்புறுத்திடும் .”
இவ்வாசகத்தில் காணப்படும் “சீர்குலைந்து போன சமுதாயம்” எனும் சொற்றொடர் இவ்வருடத்திய ரித்வான் செய்தியில் “சீர்குலைந்து போன உலகம்” என எதிரொலிக்கின்றது. நமது வாசகப் பகுதிகள் எதிர்பார்ப்பது போலவே, உலகின் வீழ்ச்சி எனும் செயல்பாடு நெடு நீண்டகாலத்திற்குத் தொடர்ந்து நடைபெற்று வரும். காலவரை எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆனால், அது பல ஆண்டுகாளக இருக்கக்கூடும் அல்லது பல நூற்றுணாடுகளாகவும் இருக்கக்கூடும். அத்துயர்மிகுந்த காலத்தில், சமுதாயத்தின் சீர்குலைவும், மனிதகுலத்தைத் தாக்கிடும் இன்னல்களும் தற்போது கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு நெடு நீண்டகாலம் நீடிக்கவல்லதாகவும், மாபெரும் பரப்பெல்லையைக் கொண்டதாகவும் இருக்கும். அத்தொல்லைகள் தொடர்ந்திடும்போது, நம்மைச் சுற்றியுள்ள மக்களிடமிருந்து பல்வேறான உணர்வகளை நாம் எதிர்பார்க்கலாம்.
அவர்களுடைய முதல் வேலை மறுப்பு தெரிவிப்பதாகும்: “நீங்கள் கூறுவது போல நிலைமை அப்படியொன்றும் மோசமாக இல்லை. ஜெரெமியா போன்று நீங்கள் நடந்து கொள்கின்றீர்கள். நிலைமை மேம்பட்டு வருகின்றது.”
அம்மாதிரி மறுப்பு தெரிவிக்கும்போது, அப்பிரச்சனைக்கு எவரையாவது பலி கடாவாக இரையாக்க ஆள் தேடப்படும். குறிப்பாக அந்த பலி கடா, ஒரு சிறுபான்மை சமூகத்தவராக இருக்கலாம், அல்லது வட அயர்லாந்தைப் பாதித்துக் கொண்டிருக்கும் அங்குள்ள குறவர்களாக இருக்கலாம், மத்திய கிழக்கிலுள்ள யூத மக்களாக இருக்கலாம் அல்லது உலகின் வேறெங்கிலுமுள்ள மற்ற மக்களாகவும் இருக்கலாம். கல்வியின் படர்க்கை ஒரு கவர்ச்சிகரமான வில்லனாக சித்தரிக்கப்படும். “மக்கள் பள்ளிக்குச் சென்று சில பைத்தியக்காரத்தனமான கருத்துகளைக் கற்றுக் கொண்டு வந்து சமுதாயத்திற்குத் தொல்லை கொடுக்கின்றனர்.”
பெண் விடுதலைப் பற்றிய பேச்சு இன்னொரு கவர்ச்சிகரமான பலிகடாவாக இருக்கின்றது. “பெண்களை வீட்டில் தங்கி பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டால், ஆண்களுக்கு நிறைய வேலைகள் காலியாக இருக்கும். சட்டர்டே ஈவினிங் போஸட் எனும் பத்திரிகையில் 1940ம், 50ம் ஆண்டுகளில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இருந்த அமைதியான நிலைமை மீண்டும் திரும்பும்.” இப்பிரச்சனைக்கு ஒரு தீர்க்கமான தீர்வை தேடும்பொழுது இவ்வாறான மனநிலை நிச்சயமற்ற ஒரு நிலைமையை ஏற்படுத்தி விடும் என்று நான் நினைக்கின்றேன்:”ஏதோ ஒன்று மிக மோசமான நிலையில் தவறாக இருக்கின்றது. அதற்கான பதில் என்ன என்பதை நாம் கண்டாக வேண்டும். அது இதுவா? அதுவா?” அதற்காக ஒரு தீவிர நிவாரணம் முதலில் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிறகு கைவிடப்படும். அதன் சில அறிகுறிகளை பல நாடுகளின் அரசியல் அரங்குகளில் நாம் இன்று காண்கின்றோம். அதவாது, தீவிர இடதுசாரி நிலையிலிருந்து வலதுசாரி நிலைக்கு தேர்தல் முடிவுகள் திரும்புகின்றன. ஒவ்வொரு நபரும் தேர்ந்தெடுக்கப்படும்போது, மக்கள் குழப்பமடைகின்றனர். சில வேளைகளில், நேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நபரின் பதவிகாலம் முடியும் முன்னரே அவர் வெளியேற்றப்படுகின்றார். மற்ற வேளைகளில், அவ்வாறான நபருக்குப் பதிலாக, அவருக்கு முற்றிலும் நேரெதிரான இன்னொரு நபரை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இது, மேலும் ஒரு தலைவரைத் தேட வைத்து இறுதியில் ஏமாற்றத்திற்கும், நம்பிக்கையின்மைக்கும் இட்டுச் சென்று விடுகின்றது: “இது வரை என்ன பயன் அடைநதோம்? ஏன் மீண்டும் முயற்சிக்க வேண்டும்?” என்ற எண்ணம் வந்து விடுகின்றது.
ஷோகி எஃபெண்டி ஓரிடத்தில் வீழ்ச்சி நிலையைக் குறிப்பிட்டு, அது இறுதியில், “காட்டுமிராண்டித்தனம், குழப்பங்கள், அழிவு ஆகியவற்றுடன்4.,” முடிவுறும் என்று கூறுகின்றார். இக்கசப்பானதும், இறுதியானதுமான இந்த முடிவின்போது மானிடத்தின் கொஞ்சங் கொஞ்சமான பகுதிகள் மட்டுமே அதனுடன் இணைந்திருக்கும் என்பதுதான் உண்மை.
சமயத்தின் பங்கு
அதன் அடிப்படை காரணம் என்ன? இவை யாவும் ஏன் ஏற்பட்டது? இவை யாவும் எங்கிருந்து வந்தது? இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. உலகின் அக்கொந்தளிப்புக்கள் மற்றும் பதற்றத்தினுடைய மூலம் என்ன என்பதைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் சில ஒளிமயமான பகுப்பாய்வுகள் இன்றைய சமுதாய இலக்கியங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன: அவை உட்பார்வைமிக்கவை, ஆழ்ந்த கண்ணோட்டமிக்கவை. ஆனால், ஒருகேள்விக்கு மட்டும் அந்தப் பகுப்பாய்வுகள் பதிலளிக்கவில்லை: இவை யாவும் எங்கிருந்து வந்தது? எனும் கேள்விதான அது. குழந்தைகளின் கேள்வி மாதிரி: “என்னைப் படைத்தது யார்?” – “கடவுள்”- “கடவுள் எங்கிருந்து வந்தார்?” -“இங்கிருந்து சென்று விடு”
மானிடச் சமுதாயத்தின் இந்த அடிப்படையான இறுதிக் கேள்வி பற்றி பஹாவுல்லா பேசியுள்ளார். மெய்யான சமயத்தை மனிதன் கடைப்பிடிக்கத் தவறியதே அந்த வீழ்ச்சிக்குக் காரணம் என பஹாவுல்லா கூறுகின்றார். அவர் கூறுவதாவது:
“உலக மக்களின் பாதுகாப்புக்கும், பொதுநலனுக்கும் சமயம் என்பது ஒரு பிரகாசமான ஒளியும், வெல்லப்படவியலா ஒரு வலிமையான அரணுமாகும்……….சமயமெனும் ஒளிவிளக்கு மூடி மறைக்கப்படுமானால், ஒழுங்கற்ற நிலையும், குழப்பங்களுமே விளையும். நேர்மை, நீதி, சாந்தி, அமைதி ஆகிய தீபங்கள் ஒளிரத் தவறி விடும்.” .”5
இந்த அடிப்படையில்தான் ஒருவர் ரித்வான் 2009 செய்தியை வாசிப்பார். உலகம் முழுவதிலும் நிலவி வரும் கொடுமைக்குள்ளாதல் என்பது குறித்தும், மானிடத்தை அக்கொடுையிலிருந்து மீட்க வேண்டியது நமது பொறுப்பும், பஹாவுல்லாவினுடைய பொறுப்புமாகும் எனும் அடிப்படையில் ரித்வான் 2009 செய்தியைக் காண முடியும். சமயம் என்ற ஒன்று இல்லாமல் போனதற்கும், கொடுமைக்குள்ளாதலுக்கும் என்ன தொடர்பு என நாம் கேட்கக் கூடும் அதற்கான பதில் கித்தாப்-இ-இகான் எனும் திருநூலில் காணப்படுகின்றது. அத்திருநூலில் பஹாவுல்லா பின்
வருமாறு கூறுகின்றார்: “ உண்மையைத் தேடிடும் ஓர் ஆன்மா இறைவனுடைய அறிவைப் பெற முயன்றிடும் வேளைதனில் எங்குச் செல்வது,எவரிடமிருந்து அதனைப் பெறுவது என்று எதுவும் அதற்கு தெரிந்திராவிடில் அதனை விடவும் கொடுரமானதொரு “கொடுமைக்குள்ளாதல்” இருந்திடவும் கூடுமா?”
மக்களை சிறையில் தள்ளி விடாமல் அல்லது வேறொரு நாட்டிற்கு அவர்கள் அகதிகளாக விரட்டி விடாமல் அல்லது அவர்களுடைய மனித உரிமைகளை இழக்கச் செய்து விடாமல் வாட விடப்படும் இந்நிலையே இறுதியான கொடுமைக்குள்ளாதல் நிலையாகும். ஒரு மானிட ஆன்மா உண்மைக்காக அலைந்து, இறைவனுடைய அறிவுக்காக அலைந்து, அதனைப் பெற எங்கே செல்வது என்றும், அதனை யாரிடமிருந்து பெறுவது என்றும் அவ்வான்மாவுக்குத் தெரியாவிடில், அதுவே ஆக உச்ச கட்ட அதி கொடுமைக்குள்ளாதல் நிலையாகும். மனிதகுலத்திடமிருந்து பஹாவுல்லா அகற்ற வந்துள்ள மெய்யான கொடுமைக்குள்ளாதல் இதுவேயாகும். அவ்விஷயத்தைப் பற்றியதுதான் ரித்வான் 2009 செய்தி.
உண்மைக்கு தேடியலைந்து திரிதலை நாம் இன்று காண்கின்றோம். மெய்யான சமயத்திற்குப் பதில் அதற்கான மாற்று ஏற்பாடுகளின் பல வடிவங்களின்பால் அத்தேடுதல் ஈர்க்கப்படுகின்றது. உதாரணமாக, சமய தீவிரவாதம், மதத்தலைவர்களின் சர்வதிகாரம் ஆகியவை மெய்யான சமயத்தின் வீழ்ச்சியினுடைய ஆதாரங்களாக நான் காண்கின்றேன்.
“வாக்களிப்பட்ட நாள் வந்து விட்டது” எனும் நூலில் ஷோகி எஃபெண்டி அவர்கள் இஸ்லாத்தின் வீழ்ச்சியையும், அதன் அதிகாரம் மற்றும் செல்வாக்கினுடைய தோல்யையும் பற்றிக் குறிப்பிடுகின்றார். அதற்கு நேர்மாறான சம்பவங்களாக இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கும் தற்போதைய நடப்புக்களின் அடிப்படையில் அந்த வீழ்ச்சியை நாம் எவ்வாறு மதிப்பீடு செய்வது? அதாவது, உலகின் பல நாடுகளில் (ஷியா அல்லது சன்னி பிரிவினரின்) இஸ்லாத்தின் எழுச்சி நிலவி வரும் இவ்வேளையில் அந்த வீழ்ச்சியை எப்படி மதிப்பீடு செய்வது? இஸ்லாத்தின் எழுச்சி என்பதை விட அதனை வீழ்ச்சியின் ஆதாரமாகத்தான் நான் பார்க்கின்றேன். அதிகாரத்தின் அப்பட்டமான சக்தியை அடைந்து தங்களுடைய பதவிகளையும், அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக மதத்தலைவர்கள் ஆன்மீகச் செல்வாக்கை கைக்கழுவி விடுகின்றனர்.
சமயத் தீவிரவாதம்- அது கிறிஸ்துவம் சார்ந்ததாக இருந்தாலும் சரி, முஸ்லீம்களைச் சார்ந்ததாக் இருந்தாலும் சரி, யூதர்களைச் சார்ந்ததாக இருந்தாலும் சரி, இந்து அல்லது புத்த சமயத்தினரைச் சார்ந்ததாக இருந்தாலும் சரி, அது மெய்யான சமயத்தின் வீழ்ச்சியைப் பிரதிநிதித்து, கொடுமைக்குள்ளாதலைத் தொடக்கி வைக்கின்றது.
உலகில் நடைபெற்று வரும் பகைமைகளும், பிளவுகளும் இக்கொடுமைக்குள்ளாதலின் ஒரு வெளிப்பாடாகவே நான் காண்கின்றேன்: ஓர் உள்ளார்ந்த அமைதியையயும், மன நிறைவையும் பெறும்பொருட்டு ஒருவர் தனது எல்லா ஏமாற்றங்களையும், ஆத்திரங்களையும், கோபதாபங்களையும், சினத்தையும் ஒரு வெளிச்சக்தியின்பால் திருப்பிடுவதற்காக அச்சக்தியை அடையாங்காணும் முயற்சி நடைபெறுகின்றது.
கொடுமைக்குள்ளாதலின் இன்னொரு வடிவம் யாதெனில், அர்த்தமுள்ள திடீர் தீர்வுகளை: தாக உணர்வு, வாழ்வில் பறிகொடுத்து விட்ட ஒன்றுக்கான பரிதவிப்பு-காலப்போக்கில் அது மணவாழ்க்கை மற்றும் சமுதாயத்தின் சீர்குலைவுக்கு இட்டுச் செல்கின்றது.
ஆன்மீக வெற்றிடத்தை நிரப்புவதற்காக அதீத சாகசச் செயலில் ஈடுபடுதல், மதுவருந்தலில் ஈடுபாடு அல்லது போதை பழக்கத்தில் ஈடுபடுதல் அல்லது அபாயகரமான விளையாட்டுக்களில் வேண்டுமென்றே ஈடுபடுதல் போன்ற செயல்களின் அடியில், பஹாவுல்லா தமது கித்தாப்-இ-இகான் திருநூலில் கூறுவதுபோல் ஓர் ஆன்மாக அர்த்தத்திற்காகத் தேடியலைந்து, உண்மையைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு, அத்தேடுதலின் மன உளைச்சலினால் சுய தீங்கு விளைவிக்கவல்லதும், மனநிறைவளிக்கவியலாததுமான காரியங்களில் ஈடுபடுகின்றது.
கொடுமைக்குள்ளாதலின் இன்னொரு வடிவம் யாதெனில், பிரபல ஹீரோவின்பால் பக்தி விசுவாசம் காண்பித்தல். அது கற்சிலையோ அல்லது வெண்கலச் சிலையோ அல்ல. ஆனால், அரசியல் பிரமுகர்கள், மனமகிழ்சசியூட்டுவதில் பிரபலமானவர்கள், விளையாட்டுத்துறையில் பிரபலமானவர்கள் முதியவர்கள். உதாரணமாக, அண்மையில் அகால மரணமடைந்த மைக்கல் ஜேக்ஸசனின் மறைவுக்காக உலகம் முழுவதிலும் காண்பிக்கப்பட்ட உணர்ச்சியலைகளைப் பாருங்கள். பிரபல சமயத் தலைவர் ஒருவருக்குக் கிடைக்கும் வீரவணக்கம் போன்று அப்பாடகருக்கு பக்தி விசுவாசம் காட்டப்பட்டுள்ளது: “மைக்கல் இறக்கவில்லை, மைக்கல் இன்னமும் உயிரோடுதான் இருக்கின்றார். மைக்கல் தனது இசையில் தொடர்ந்து வாழ்ந்து வருவார்.” நெவர்லாந்து மாளிகையின் முன் இரசிகர்கள் ஒன்று திரண்டு அங்கு மலர்கள் வைக்கப்படுகின்றன, அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெறப்போகும் நிகழ்வரங்கிற்கு பதினேழாயிரம் பேர் வரும் செவ்வாய்க்கிழமையன்று நேரிடையாகக் கலந்து கொள்ளப் போகின்றார்கள். எல்விஸ் பிரஸ்லே போன்று அவர் ஒரு ஹீரோவாகி, டென்னனெஸ்ஸி எனுமிடத்திற்கு ஆண்டுதோறும் ரசிகர்கள் யாத்திரைக்குப் போவதுபோல் இவரது இடத்திற்கும் யாத்திரைக்குப் போவார்கள்.
பிரபலமானவர்களுக்குச் செலுத்தப்படும் வழிபாடு பலவாறாகக் வெளிப்படுவதை நாம் காணலாம். ஆனால், அவற்றில் தேடுதலின் வேட்கையையும் நாம் காண முடியும், நானும் நீங்களும் போன்று தங்களுடைய ஆழ்ந்த உணர்வுகளை அர்ப்பணம் செய்வதற்கான ஒரு தேடியலைதலை அதில் நாம் காண முடியும், மெய்யான சமயயத்தினால் மட்டுமே மனநிறைவளிக்கப்படவல்ல ஒன்றை நாடிடும் தேடியலைதலை நாம் அதில் கண்டு கொள்ள முடியும். இத் தேடுதல் தற்போது பிரபல அரசியல் ஹீரோக்களின்பால் காண்பிக்கப்படுகின்றது. முதன் முதலாக அந்த அரசியல் தவைவர் பதவிக்கு வரும்போது சமயத்தலைவருக்குரிய பக்தி விசுவாசம் காண்பிக்கப்படுகின்றது. அதன் பிறகு நிலைமை வேறு விதமாக சென்று விடுகின்றது. சமய வழிபாட்டுச் சடங்கின்பால் காட்டப்படும் விசுவாசம்போல் விளையாட்டு ஹீரோக்களுக்கும் பக்தி காண்பிக்கப்படுகின்றது. நியாயமற்ற நம்பிக்கைகளும் விதிமுறைகளும் இக்கொடுமைக்குள்ளாதலின் இன்னொரு அம்சமாகும்.
நான் ஏன் இதையெல்லாம் சொல்கின்றேன்?
நான் இதைச் ஏன் சொல்கின்றேன் என்றால், ரித்வான் செய்தியின் அறிவுரைகளுக்கேற்ப வீழ்ச்சியெனும் செயல்பாட்டிற்கு அடிப்படையான நிவாரணம், பஹாய் சமயத்தைப் பறைசாற்றுதலேயாகும் என்பதை நாம் நம்புவதால்தான். ஷோகி எஃபெண்டியினால் தெளிவாக வருணிக்கப்பட்டிருக்கும் வீழ்ச்சி செயல்பாட்டின் இயல்பு மீது நாம் கவனம் செலுத்துகின்றோம். வருத்தப்படுவதற்கோ, ஊக்கமிழப்பதற்கோ நாம் அவ்வாறு செய்வதில்லை. மாறாக, நம்மைச் சுற்றி நடைபெற்று வரும் மானிடத் துன்பங்களை கண்டு, சமயத்தின் தேவைகளுக்கு சேவையாற்றுவதற்கும், தற்போதைய ஐந்தாண்டு திட்டத்தின் நிறைவேற்றத்திற்கு பங்களிப்புச் செய்வதற்கும், அணி அணியாக பிவேசித்தல் எனும் செயல்பாட்டில் இனி வரவிருக்கும் எல்லா அம்சங்களையும் நிறைவு செய்வதற்காகவும் அந்தத் தன்முனைப்பைப் பெறுகின்றோம். பிரார்த்தனைகள், திருவாசகங்கள், மற்றவர்களின் முன்னுதாரணம் ஆகியவற்றிலிருந்து மட்டுமே நாம் தன்முனைப்பைப் பெறுவதில்லை. ஆனால், அவற்றுடன் சேர்த்து தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் துயரமான செய்திக் காட்சிகள், உதாரணமாக டர்ஃபாரில் அல்லது சோமாலியாவில் அல்லது மேற்கு ஆப்ரிக்காவில் அல்லது கம்போடியாவில் மக்கள் அனுபவிக்கும் அவதிகள் பற்றிய செய்திப் படங்களிலிருந்தும் சமயத்தைப் போதிக்க வேண்டியதற்கான முனைப்பு நமக்குக் கிடைக்கின்றது.
அவ்வாறான செய்திக் காட்சிகளில் சமயத்தினுடைய தேவைகளுக்குச் சேவையாற்றுவதற்கான ஒரு புதிய சக்தியை நாம் காண்கின்றோம்: அச்செய்திப்படம் சமயப் போதனையுடன் மறைமுகமாக அல்லாமல் நேரடியாகவே சம்பந்தப்பட்டுள்ளது. அதாவது, வீழ்ச்சியிலிருந்து மானிடத்தை மீட்டெடுக்க வேண்டும் எனும் நோக்கத்தில் சமயப் போதனை நேரடியாகவே இணைந்துள்ளது.
சமயத்திற்குச் சேவையாற்றுதல் என்பது பல வேளைகளில் உற்சாகமளிப்பதாகவும், சக்தியளிப்பதாகவும், விடுதலையளிப்பதாகவும் இருக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், சில வேளைகளில் அச்சேவை அசதிமிக்கதாகவும், மன உச்ைசல்மிக்கதாகவும், ஏமாற்றமிக்கதாகவும் இருக்கின்றதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அது மனித சூழ்நிலையின் ஒரு பகுதி. அவ்வாறான நேரங்களில், மானிடத்தை
கொடுமைக்குள்ளாக்கப்படுதலிலிருந்து மீட்டெடுப்பதில் பஹாவுல்லாவுக்கு உதவிடும் நமது இலட்சியப் பணியிலிருந்து நாம் நமது உற்சாகத்தைப் பெறுகின்றோம். இதைத்தான் ரித்வான் 2009 செய்தி கூறுகின்றது.
நாகரிகத்தின் இயல்தன்மை
“சீர்குலைந்து விட்ட ஒரு சமுதாயத்தின்” மறுசீரமைப்பதில் சமயம் ஆற்றிடும் பங்கு பற்றி ரித்வான் 2009 செய்தி குறிப்பிடுகின்றது. தற்போதைய சமுதாயத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், பண்படுத்தப்பட்டுள்ள வாழ்வினுடைய கட்டுமானத்திற்குப் பயமுறுத்தல் என ஷோகி எஃபெண்டி குறிப்பிடுகின்றார். அவர் சொல்வதாவது:
நாகரிகங்கள், மிதவாதத்தின் எல்லைகளை மீற அனுமதிக்கப்படுமாயின், அது, தீமையின் தோற்றுவாயாக ஆகிவிடும். மிதவாதத்துடன் ஒரு கட்டுப்பாட்டுக்குள் நாகரிகம் இருந்து வந்தபோது அது நன்மையே அளித்து வந்துள்ளது.
“(நாகரிகத்தின்) தீச் சுவாலை மாநகரங்களை அழித்திடும் நாளை நெருங்கிக் கொண்டிருக்கின்றது….”
மனிதகுலத்தினுடைய பிரகாசமான வருங்காலத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர் பின் வரும் கேள்வியைக் கேட்கின்றார்:
“பரந்தளவினாதும், தனித்தன்மை வாய்ந்ததும், ஒளிமயமானதுமான ஒரு காலம் மானிட வரலாற்றில் பிரவேசிப்பதற்கு கிறிஸ்த சகாப்தத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் சம்பவித்த ரோமாபுரியின் நாகரிக வீழ்ச்சியையே மிஞ்சிடும் ஒரு வீழ்ச்சி வரத்தான் வேண்டுமா?”
உங்களுக்குத் தெரிந்துள்ளதைப் போலவே, ரோமாபுரியின் சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைய சுமார் 400 ஆண்டுகள் பிடித்தது. அவ்வீழ்ச்சி திடீரென நடைபெறவில்லை. முதலில் வீழ்ச்சி நடைபெறத் தொடங்கி அங்குமிங்குமாக குளறுபடிகள் ஏற்பட்ட பிறகு கட்டுமானம் முழுவதுமே சரிந்தது. தற்போதைய காலத்தின் வீழ்ச்சிச் செயல்பாட்டை ஷோகி எஃபெண்டி நாகரிக வீழ்ச்சியாகக் குறிப்பிட்டு, அது மத்தியத்தரைக் கடல் பகுதியிலுள்ள ரோமாபுரி உலகில் மட்டுமே அல்லாமல் உலகம் முழுவதுமே நடந்தேறவிருக்கின்றது எனக் கூறுகின்றார். ரோமாபுரி இராஜ்யத்தின் வீழ்ச்சி குறித்து சிறிது பேசுவது நமக்குப் பயனுள்ளதாக இருக்கும். கிப்பன் முதல் ஸ்பெங்லர் வரை பலரும் அது குறித்து பல நூல்கள் எழுதி விட்டனர். ஆனால், நமது தற்காலத்திய எழுத்தாளர்கள் சிலர் அது குறித்து எழுதியவற்றின் மீது நான் அக்கறை கொண்டுள்ளேன். “நாகரிகம்” எனும் தலைப்பில் கென்னத் கிளார்க் என்பவர் ஒரு நூலை எழுதி, நாகரிகம் என்பது வரலாற்றின் பல்வேறு நேரங்களில் சம்பவிக்கும் அம்சம் என அதில் குறிப்பிட்டு, எந்தளவுக்கு நாகரிகம் வலுவான கட்டுமானத்தின் மீது எழுப்ப்பட்டிருப்பினும் அது உண்மையில், நொருங்கிபோகவல்ல அளவுக்கு மென்மையானதுதான் என அவர் விவரித்துள்ளார்.
நியூ ஆர்லின்ஸ் எனும் பகுதியை காட்ரினா எனும் கடும்புயல் தாக்கிய கொடூரக் காட்சிகளை தொலைக்காட்சியில் கண்டவர்களை, நாகரிகத்தின் மென்மைத் தன்மையையும் பார்த்திருப்பார்கள் (அது ஒரு தற்காலிக அம்சமாக இருப்பினும் கூட). ரோமாபுரி நாகரிகத்தின் வீழ்ச்சிக்கான பல காரணங்களை கிளார்க் முன் வைக்கின்றார்: அச்சத்தின் அதிகரிப்பு, விளங்கிக் கொள்ள முடியாதவற்றின் மீதுள்ள அச்சம், சமுதாயம், தத்துவம், சட்டங்கள், மனோபாவ செயல்பாடுகள் ஆகியவற்றின் மீது தன்னம்பிக்கையின்மை, (நன்னெறியில் அல்லாது சக்தியின்மை தொடர்பான) நடத்தையில் வீழ்ச்சி. நாகரிகத்தைப் பற்றி இன்னொருவரும் எழுதியிருக்கின்றார். அவர்தான் இந்திய தத்துவவாதியும், இந்தியாவின் மந்தைய துணை அதிபருமான டாக்டர் ராதாகிருஷ்ணன். “கிழக்கத்திய சமயமும், மேற்கத்திய சிந்தனையும்” எனும் தலைப்பு கொண்ட நூல் அது. ரோமாபுரியின் வீழ்ச்சியையும், கிறிஸ்துவத்தின் எழுச்சியையும் பற்றிய கிறிஸ்துவரல்லாத ஒருவரின் கண்ணோட்டம் அது. ரோமாபுரியின் சாம்ராஜ்ய வீழ்ச்சிக்கு அவரும் பல்வேறு காரணங்களை முன் வைக்கின்றார்: பேராசை, ஊழல். பரந்தளவிலான செழிப்புவளங்களின் வளர்ச்சியையும், பரந்தளவிலான வறுமையையும் சமுதாயத்தின் சமநிலையின் தடுமாற்றத்திற்கு இட்டுச் சென்றதை அவர் குறிப்பிடுகின்றார். என்ன நடைபெற்றது என்பதை அவர் முடிவாகக் கூறி, அது அமைதியின்மையின் ஒரு காலம் என்றும், உயர்ந்த அறிவார்ந்த வாழ்வின் வீழ்ச்சி என்றும், நேர்மைத்தன்மையின் வீழ்ச்சி என்றும், தத்துவம் தோல்வியடைந்து, இலக்கியம் மங்கி, சமயம் என்பது கண்டிப்பானதும், மூடநம்பிக்கைமிக்க ஒன்றாகவும் ஆகி விட்டது எனக் குறிப்பிடுகின்றார் அவர்.
அத்தகைய நாகரிக வீழ்ச்சி கொண்ட அபாயத்தை நமது உலகில் நாம் எதிர்நோக்கியிருக்கின்றோம். நமது சமயமானது, ஓர் உலக நாகரிகம் உருவாகுவதை இலட்சியமாகக் கொண்டிருக்கின்றது என்பது நமக்குத் தெரியும். பஹாவுல்லாவினுடைய மாற்றப்படவியலா வாக்குறுதியான அது நிறைவேற்றம் காணும் என்றும் நமக்குத் தெரியும். ஆனால், அந்த மாற்ற காலத்திற்குள் மிகப் பெருமளவிலும், நெடு நீண்ட காலத்திற்கு நீடிக்கவல்லதுமான பழைய நாகரிகத்தின் வீழ்ச்சி ஏற்பட்டு அதற்குப் பதிலாக புதியதொரு நாகரிகம் மலரும்.
ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்குவதில் தனது நோக்கத்தை உணர்வுப்பூர்வமாக காணும் முதல் சமயம் பஹாய் சமயமே என்றுதான் எனக்குத் தோன்றுகின்றது. வரலாறு பற்றிய எனது அறிவு ஓர் எல்லைக்குட்பட்டதுதான். நான் ஒரு பொறியியலாளர். நாங்கள் பல நூல்கள் வாசிப்பதில்லை. ஆனால், உதாரணமாக நான் கிறிஸ்துவத்தை பார்க்கும்போது, ஆரம்பகால கிறிஸ்துவர்களின் வாழ்வு சிரமிக்கதாயிருந்தது, இஸ்ரேயர்களல்லாதோரிடத்திலும் யூதர்களிடத்திலும் அவர்கள் கிறிஸ்துவின் வருகை பற்றிய நற்செய்திகளை மத்திய தரைப் பகுதியில் எடுத்துச் சொல்வதில் ஈடுபட்டு அதில் அவர்கள் வெற்றியடைந்தனர். கிறிஸ்துவ சமயம் விஸ்தரிப்பு அடைந்தபோது, பைசெண்டீன் நாகரிகமும் உயர்ச்சியடைந்து வந்தது. முஹம்மதுவின் ஆரம்பகால நம்பிக்கையாளர்கள் வருங்கால பாக்தாத், கொர்டோவா, டமாஸ்கஸ் ஆகிய ஆட்சி பீடங்களின் புகழொளிகளை தாங்கள் கண்ணுற்றதாக எடுத்துரைக்கவில்லை. ஆரம்ப கலாத்தில் அவர்களுடைய பணி பேகன் சிலைவழிபாட்டை துடைத்தொழிப்பதாகத்தானிருந்தது.
நமது சமயமோ, தனது ஆரம்ப நாட்களிலிருந்தே தனது இலட்சியம் ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்குவதுதான் என்றும், அது தொடர்பான வழிமுறையை அது தயாரித்துள்ளது என்றும் தொடர்ச்சியாக சொல்லி வந்துள்ளது.
நமக்கு ஒரு வினோத சக்தி இருக்கின்றது என்றும், “ஒரு புதிய நாகரிகத்திற்கான தேவைகளை இங்கு நீங்கள் எழுத வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டு ஒரு வெற்றுத் தாளை நமக்குக் கொடுக்கப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். நாம் அது குறித்து சிந்திக்கின்றோம். கையடக்கக் கணினிகளை விட அது மிகப் பெரிதான ஒன்று என நாம் கருதுகின்றோம்.
ஒரு நாகரிகத்தை எப்படி உருவாக்குவது?
ஆன்மீக தன்மை மாற்றம் வாயிலாக அடிப்படை நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஈடுபடுவதுதான் நாகரிகச் செயல்பாடு. நாம் அதனை ஒப்புக் கொள்ளக் கூடும். ஒரு நாகரிகம் என்பது சில தார்மீக, நன்னெறி மற்றும் ஆன்மீகப் பண்புநலன்களைப் பொருத்துள்ளது. (சற்று முன் நான் சொன்னது போல) நமக்குக் கொடுக்கப்பட்ட வெற்றுத்தாளில் நாம் விவரிக்கப்போகும் புதிய நாகரிகத்தின் புதிய நாகரிகத்தின் கட்டுமானம் என்ன?
அதில் சிலவற்றை நாம் சேர்க்கக் கூடும்:
-பல்வேறு காரணங்களுக்காக தனி நபர்களின் நடைமுறை வாழ்க்கை, சமூக வழிபாடு ஆகியவற்றை நாம் சேர்க்க விரும்புவோம்.
-அன்றாட வாழ்வின் தெய்வீக போதனைகளை பற்றிய ஆய்வு மற்றும் அவற்றின் அமலாக்கம் ஆகியவற்றில் ஈடுபடும் ஒரு நாகரிகத்தைக் கொண்ட தனிநபர்களை நாம் அதில் சேர்க்க விரும்புவோம். அதனால், நாம் நியாயமான வழியிலும், ஆக்கப்பூர்வமான வழியிலும் நாம் ஒரு நாகரிகத்தை உருவாக்க இயலும்.
-மானிடத்திற்கு சுயநலமற்ற உணர்வுடன் சேவையை வழங்கவல்ல ஒரு சமுதாயத்தை நாம் விரும்பக்கூடும். பேராசையும், சுயநலமுமிக்க மக்கள் நமக்குத் தேவைப்படாது. ஆனால், மக்களுக்கு பரந்தளவில் நன்மை செய்யக் கூடிய மக்களே நமக்குத் தேவை.
-பண்படுத்தப்பட்ட பண்புநலன்களை புதிய தலைமுறையின் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் அவர்கள் கொண்டு செல்ல வேண்டும் என நாம் விரும்புவோம்.
ஒரு நாகரிகத்தின் கட்டுமானத்தினுடைய அடிப்படை அம்சங்கள் அவைதான் என நீங்கள் ஒப்புக் கொண்டால், அவை சரியானவை அல்ல என்பதை நான் சொல்லியாக வேண்டும். ஏனெனில், அவை ஐந்து வருடத் திட்டத்தின் மைய நடவடிக்கைகள். வழிபாட்டுக் கூட்டங்கள், பயிற்சியக செயல்பாடு, ரூஹி பாட நூல்களைக் கற்றல், மானிடத்திற்குச் சேவையாற்றுதல் பாலர் வகுப்புகள், இளைஞர் வகுப்புகள், பால்ய இளைஞர் பயிற்சிகள் ஆகியவற்றைத்தான் நான் குறிப்பிட்டேன்.
நான் சொல்ல வரும் கருத்து என்னவென்றால், சமயத்தைப் பறைசாற்றும் நடவடிக்கையிலும், ஐந்து வருடத்தின் இலட்சியங்களை நிறைவேற்றுவதிலும், அதற்கும் அப்பாற்பட்டு வரவிருக்கும் காரியங்களிலும் நாம் ஈடுபட்டுள்ளோம் என்பதுதான். ஆனால், இங்கு மிக முக்கியமான விஷயம் என்னவெனில், தற்போதைய திட்டத்தின் நமது அன்றாட நடவடிக்கைகளின் வாயிலாக நாம் ஒரு புதிய நாகரிகத்தின் வேர்கள் ஸ்தாபிப்பதில் ஈடுபட்டு வருகின்றோம் என்பதுதான். அதீனா தெய்வம் போன்று நாகரிகம் ஒரு மாயஜாலமாக திடீரென வெளிப்பட்டு விடும் என்பது இதன் அர்த்தமல்ல. மாறாக, பொற்காலத்தின் இலட்சியமான அந்த நாகரிகம் படிப்படியாகவும், மெதுவாகவும், தலைமுறைக்கு தலைமுறை, ஆண்டுக்கு ஆண்டு, நூற்றாண்டுக்கு நூற்றாண்டு மலர்ந்து வரும். ஆனால், அந்த நாகரிகத்தின் வேர்கள் வரலாற்றின் இந்த நேரத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இருக்கின்றன. அதுதான் முக்கியம்.
சமயத்தில் மாற்றத்தைக் கையாளுதல்
தீர்க்கதரிசன வட்டத்தின் சமயங்கள்
இப்பொழுது நான், ஐந்து வருடத் திட்டத்தின் அம்சங்கள் அடிப்படையில் எனது இரண்டாவது கருப்பொருளை பற்றி பேசவிருக்கின்றேன். சமயத்தினுள் மாற்றம் எனும் கருப்பொருளின்பால் உங்களுடைய கவனத்தை நான் ஈர்க்க விரும்புகின்றேன்.
தீர்க்கதரிசன வட்டத்திலுள்ள எல்லா சமயங்களும் தங்களுக்குள் ஒரு முரண்பாட்டைக் கொண்டிருக்கின்றன என்பதை நான் கூற விரம்புகின்றேன்: அவற்றின் ஸ்தாபகர்களிடத்தில் பழுது இருந்தது என்பது இதன் பொருளல்ல. மாறாக, மானிட வரலாற்றில் அது ஒரு பரிணாம வளர்ச்சிக் கட்டம். இச்சமயங்கள் ஒவ்வொன்றும் மானிட ஆவிக்கு விடுதலை வழங்கி, அதன் வாயிலாக படைப்புத்தன்மையும், புதிய கண்டுபிடிப்புகளும், இறுதியில் சமூக பரிணாம வளர்ச்சியும் ஏற்பட்டது. அவற்றில் நான் முரண்பாட்டைக் காண்கின்றேன். இவையெல்லாம் நடைபெறுகையில், ஒரு சமயம் தோன்றும்போது, அதன் தொடக்கத்தில் எழுத்துப்பூர்வமான வரையறுக்கப்பட்டிந்த நடத்தையமைப்பு காலப்போக்கில் காலாவதியாகி விடுகின்றது. அது நடைபெறுவதற்குக் காரணம், சமயம் வெற்றிகரமாக அமைந்து விடுவதால்தான்: அது நாகரிகத்தை உருவாக்குகின்றது, அது கண்டுபிடிப்பை ஏற்படுத்துகின்றது, அது நடத்தையில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றது. ஆகவே, ஆரம்பத்தில் அதன் அவதாரப்புருஷராலோ, மற்ற தரப்பினராலோ கொடுக்கப்பட்டநடத்தைக் கோட்பாடுகள் காலாவதியாகி விடுகின்றன.
இந்த முரண்பாடு சமயம் சார்ந்த சமூகத்தில் பிளவை ஏற்படுத்தி விடுகின்றது. ஒரு தரப்பினர், சமயத்தினுடைய அதிகார மையத்தின்பால் விடாப்பிடியான விசுவாசம் கட்டிய நிலையில், மாற்றத்தை எதிர்க்கின்றனர். “பரவாயில்லை, அது நமக்கு தேவாலயத்தின் பாதிரியாரால், சமயத்தில் ஸ்தாபகரால் கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நாம் கடைப்பிடித்து வருவோம்” என்ற நிலை வருகின்றது. எனவே, மாற்றத்தின்பால் விடாப்பிடியான எதிர்ப்பு ஏற்பட்டு
இறுதியில், தொடக்கநிலை வடிவத்தை தற்காத்திடும்பொருட்டு அது தீவிரவாதமாக உருவெடுத்து விடுகின்றது. இதில் இன்னோர் அதீத நிலை என்னவென்றால், மாற்றத்தை விரும்பும் தரப்பினர் அதிகாரத் தரப்பினருடன் முரண்படுகின்றனர். ஆகவே, பிரிவுகள் ஏற்படுகின்றன, எதிரணிகள் உருவாகின்றன. அங்கு அந்த மாற்றத்திற்கு ஒரு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட்டு விடுகின்றன. ஒவ்வொரு சமயத்திலும் நாம் இதனைக் காண்கின்றோம்.
உதாரணமாக இஸ்லாத்தை எடுத்துக் கொள்வோம். இஸ்லாத்தின் புகழை நிலைநாட்ட மீண்டும் ஷரியா சட்டத்திற்கு திரும்பிட தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுவதை நாம் இன்று காண்கின்றோம். (அதனுடன் சேர்த்து அது தொடர்பான எல்லா பிரச்சனைகளும் உட்பட.). இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் நிலவிய நிலைபோன்று, தனித்து வாழும் ஒரு கட்டுப்பாட்டுக்குட்பட்ட நிலைக்கு பெண்கள் உட்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவதையும் நாம் காண்கின்றோம். அது முஹம்மதுவினால் கட்டளையிடப்பட்டதா, இல்லையா என்பது வேறு விஷயம். இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் நிலவிய உணவுக் கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவதையும் நாம் காண்கின்றோம். இவை அனைத்திலும் ஒரு மன உளைச்சலை நாம் காண்கின்றோம்.
அதே மன உளைச்சல் கிறிஸ்துவத்திலும் எழுகின்றது: கிறிஸ்துவத்தின் ஆரம்ப காலத்தில் மணவிலக்குத் தடை இப்பொழுது மன உளைச்சலுக்குக் காரணமாகி வருகின்றது; மக்களின் படிப்பறிவற்ற நிலை அதிகமாக நிலவிய ஆரம்ப காலத்தில் பொருத்தமாக இருந்த தேவாலாயத்தின் பாதிரிமார் அதிகாரம் இப்பொழுது இன்னொரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. (படிப்பறிவற்ற நிலையின்போது ஏதாவது ஒரு தலைவரின்பால் வழிகாட்டலுக்காககத் திரும்ப வேண்டிய அவசியம் இருந்தது). உணவுக் கட்டுப்பாடு தொடர்பான சட்டங்கள். இந்த மன உளைச்சல் குறித்து ஷோகி எஃபெண்டி குறிப்பிட்டிருப்பது சுவாரசியமானது. அவர் கூறுவதாவது:
தீவிரவாதிகளுக்கும், சுதந்திர விரும்பிகளுக்குமிடையே உள்ள இடைவெளி தொடர்ந்து அகலமாகிக் கொண்டே வருகின்றது.
அதன் பிறகு அவர், வீழ்ச்சியின் ஒர் பகுதியைக் குறிப்பிடுகின்றார். வீழ்ச்சியின் ஒரு பகுதியாக தீர்க்கதரிசன வட்டத்தின் மதம் சார்ந்த சமூகங்களின் இரு வேறு அதீத நிலைகளுக்கிடையிலான உளைச்சல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது
பஹாய் சமயத்தில் மாற்றம்
இப்பொழுது நாம் பஹாய் சமயத்திற்கு வருகின்றோம். நிச்சயமாக பஹாய் சமயம் மாற்றம் என்ற ஒன்றைக் கையாள வேண்டும். தோற்றத்தில் இரு வேறு நிலைகளாகவும், அதே நேரத்தில் ஒன்று மன்றொன்றுடன் தொடர்பு கொண்டதாகவுமுள்ள இரு வேறு நிலைகளை அது கையாள வேண்டும்: ஒன்று, சட்டப்பூர்வமானது, மற்றது, மனோத்துவ ரீதியதிலானது.
பஹாய் சட்டத்தின் கட்டமைப்பினுள் பிரச்சனை மிகவும் நேரடியானது: பஹாவுல்லாவினுடைய அதிகாரம், அவருக்குப் பிறகு, அப்துல் பஹாவிடம் வழங்கப்பட்டு, பின்னர், அவருக்கும் பிறகு பாதுகாவலரிடம் வழங்கப்பட்டு, பின்னர் உலக நீதிமன்றத்திடம் வழங்கப்பட்டு, இப்பொழுது, மாற்றம் எதையும் மேற்கொள்வதற்கு அசைக்க முடியாத சட்ட அதிகார மையாக அந்த உலக நீதிமன்றம் விளங்கி வருகின்றது. உலக நீதிமன்றத்தின் நிலையைப் பொருத்த வரை, மாற்றத்தை அமல்படுத்த அந்த அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் மிக சுவாரசியமானது. அதற்கு பல பரிமாணங்கள் உண்டு. அவை:
-பஹாய் சட்டம் குறித்து படிப்படியாக தெளிவு அளிப்பதிலும், அதனை அமலாக்கம் செய்வதிலும் அந்த அமைப்புக்கு வழங்கப்பட்ட அதிகாரம், மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் அதிகாரம் வழங்குகின்றது. உதாரணமாக, ஹூக்குக்குல்லா: அச்சட்டம் திருநூலில் பல காலமாக இருந்து வந்தது. ஆனால், 1992ம் ஆண்டுதான் அது உலகளாவிய நிலையில் அமல்படுத்தப்பட்டது. இன்னமும் உலகளாவிய நிலையில் அமல்படுத்தப்படாத பல சட்டங்கள் கித்தாப்-இ-அக்டாஸில் இருக்கின்றன. அவற்றை உலக நீதிமன்றம் அமலாக்கம் செய்வதற்கு மாற்றம் வரும்.
-துணை விதிகள் ஏற்படுத்தி அதனை அமலாக்கம் செய்வதும், அதன் சட்ட எல்லைகளின் வரம்புகளுக்குள் உலக நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் சட்ட உரிமையாகும். வருங்காலத்தில் சமயம் அபிவிருத்தியடையவிருப்பதை ஷோகி எஃபெண்டி குறிப்பிட்டு பின் வருமாறு கூறுகின்றார்:
“புதியதும், மிகச்சிறந்தவையாகவுமுள்ள வழிமுறைகளைத் தேர்வு செய்வதில் பஹாய்கள் எப்பொழுதுமே கடைசி ஆளாக இருக்கக் கூடாது. ஆனால், அவ்வாறான வழிகளைத் தேர்ந்தெடுப்பதில் அவர்கள் முதல் ஆளாக இருக்க வேண்டும். ஏனெனில், அது சமயத்தினுடைய வலிமைமிக்க தன்னியல்புடன் ஒன்றிணைந்திருக்கின்றது. அது படிப்படியாக வளர்ச்சியடைந்து வருவது மட்டுமன்றி, முழுதும் புதிய கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை தன்னுள் கொண்டுள்ளது.”
துணை விதிகள் மீது மாற்றத்தைக் கொண்டு வரும் உலக நீதிமன்றத்தின் சட்டப்பூர்வமான இந்த உரிமை, சமயம் வளர்ச்சிக்குரியதாகவும், கலாச்சாரப்பூர்வமான பண்படுத்தப்பட்ட மாற்த்தின் முன்னணியில் இருந்து வருவதற்கும் வழியமைத்துக் கொடுக்கும் கருவிகளில் அது ஒரு பகுதியாகும்.
-உலக நீதிமன்றத்தில் சட்ட அமைப்பில் எடுத்துரைக்கப்பட்டிருப்பதைப் போன்று, அதற்கு பரந்தளவிலான அதிகாரம் உள்ளது; பஹாவுல்லாவினுடைய உலக அமைப்புமையைக் கொண்டு வருவதற்காக ஸ்தாபனங்களை நிறுவிக் கொள்ளும் மாபெரும் அதிகாரம் அதற்கு உண்டு: இச்சமயத்தில் அந்த அமைப்புக்கு வழங்கப்பட்ட அதிகாரம் ஒரு மாபெரும் அதிகாரம். அவ்வாறிருந்தபோதிலும், மாற்றம் தொடர்பான மனோத்துவ அங்கத்தை சமாளிப்பது பஹாய் சமூகத்தின் சவாலாக இருந்து வருகின்றது. நான் இதனைச் சொல்வதற்குக் காரணம், மாற்றம் இல்லையென்றால், ஒருவர் பாதுகாப்பு உணர்வுடனே சதா இருந்து வருவார்: அதாவது, ஒவ்வொரு நாளும் ஒருவர் பழையதையே திரும்ப திரும்ப செய்து வருவார், அதனைச் செய்வதற்கு சிந்தனை தேவையில்லை. ஒவ்வொன்றும் அந்தந்த இடத்தில் நிதானமுடன் செயல்பட்டு வரும். மாற்றம் வந்தவுடன் அவையெல்லாவற்றையும் அம்மாற்றம் தடம் மாற்றி விடுகின்றது. அது குறித்து ஒருவர் எதிர்ப்பு காட்டுவார்:” எப்போதும் இருந்து வந்துள்ளதைப் போன்று அது இல்லை. சிறு குழந்தையாய் நான் இருந்தபோது, அது குறித்தும், அப்போதைய நடத்தை குறித்தும் எனக்கு பல ஞாபகங்கள் உண்டு.” அதீத நிலைகளைத் தவிர்த்திடுமாறு ஷோகி எஃபெண்டி நமக்குப் பல இடங்களில் எச்சரித்துள்ளார். உதாரணத்திற்கு:
சமயத்தினுடைய வளர்ச்சியினுடைய குணவியல்பின் தன்மை மற்றும் அதன் வழிமுறை குறித்து அதிகவனத்துடன் கண்காணித்து வருவது நமது பிரதான பணியாகும்……. வெற்றியை நோக்கி எது மட்டுமே சமயத்தை வழிநடத்திச் செல்லவியலுமோ, அந்த நேரான பாதையிலிருந்து அதீத பழமைவாதம் ஒரு புறத்திலும், பொறுப்பற்ற சுதந்திரம் மறுபுறத்திலும் சமயத்தினுடைய வளர்ச்சியை தவற வைத்திடாத வகையில் அந்த அக்கண்காணிப்பு நடைபெற்று வரவேண்டும்..
அதே கருப்பொருளை கொண்ட மற்ற பல வாசகப்பகுதிகளும் உண்டு. உலக நீதிமன்றமும் அது குறித்து இவ்வாறு ஓரிடத்தில் கூறுகின்றது:
“கடந்த அருளாட்சிக் காலங்களில் நம்பிக்கையாளர்கள் பரஸ்பர பகைமைக் கொண்ட இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்தனர்: திருவெளிப்பாடு எடுத்துரைத்த அனைத்தின் மீதும் கண்மூடித்தனமான விசுவாசம் கொண்ட அணியினர் ஒரு தரப்பாகவும், எல்லாவற்றையுமே சந்தேகித்து கேள்வியெழுப்பிய இன்னொரு தரப்புமாக அவர்கள் பிரிந்திருந்தார்கள். எல்லா அதீத நிலைகளைப் போலவே, இந்த இரண்டு அணிகளும் தவறுக்கு வழிகாட்டப்பட முடியும்.
நான் இதை ஏன் சொல்கின்றேன் என்றால், கண்மூடித்தனமாக சட்டத்தை அப்படியே கடைப்பிடிக்கும் ஒருவருக்கு அந்நிலை பழைய நிலை மிக வசதியாக இருக்கும்:
-“நீ ஏன் இதை செய்கின்றாய்?”
-“இங்கே பாருங்கள், எழுத்துப்பூர்வமாகவே இங்கு தெளிவாக எழுதப்பட்டிருக்கின்றது. நீங்களே படித்துப் பாருங்கள்!”
அதீத பழைமைவாதத்திற்கு எதிராக ஷோகி எஃபெண்டி நம்மை எச்சரித்துள்ளதைப் போன்று, கண்மூடித்தனமாக சட்டத்தை அப்படியே கடைப்பிடிக்கும் பழக்கத்தை கடைப்பிடிப்பதைத் தவிர்த்திட நாம் எச்சரிக்கப்படுகின்றோம். இது குறித்து அப்துல் பஹாவும் நம்மை எச்சரித்துள்ளார். மேற்கின் நட்சத்திரம் எனும் சஞ்சிகையில் அவர் இப்படிக் கூறியுள்ளார்:
“கண்மூடித்தனமாக சட்டத்தை அப்படியே கடைப்பிடிக்கும் பழக்கம், தலைமைத்துவ ஆசையைத்தான் சுட்டிக் காட்டுகின்றது. அச்சட்டத்தை அமல்படுத்துவபர் சமயத்தினுடைய அறிவுப்பூர்வமான புரிந்துகொள்ளலைக் காண்பிக்கின்றார். ஆனால், அதிலுள்ள ஆன்மீக வழிகாட்டல் இன்னமும் ஸ்தாபிக்கப்படவில்லை.”
அப்துல் பஹாவிடமிருந்து வந்துள்ள கவலையளிக்கும் ஒரு வாசகப் பகுதியாகும் இது.
சமயம் வெளிப்பட்டு வரும் ஒவ்வொரு கட்டத்திலும், அங்கு மாற்றம் நிகழ்ந்தபோதெல்லாம், அது நம்பிக்கையாளர்களுக்கு ஒரு சோதனையாகவே இருந்து வந்துள்ளது: பஹாய் சரித்திரத்தை நான் வாசிக்கும்பொழுது, அப்துல் பஹாவினுடைய நிர்வாகக் காலத்தில் நடைபெற்ற பல செயல்கள் பல நம்பிக்கையாளர்களுக்குச் சோதனையாக அமைந்துள்ளன என்பது எனக்குத் தெரிய வந்தது. அவர் மேற்கத்திய நாட்டின் மீது காண்பித்த கவனம் அவற்றில் ஒன்று: “சமய போதனைகளைப் பெறுவதற்கு இங்கு இன்னமும் பல மக்கள் இருக்கின்றபோது, ஏன் கனடா அல்லது ஐக்கிய அமெரிக்கா அல்லது ஆஸ்திரேலியா அல்லது மற்ற தொலை தூரத்துப் பகுதிகள் பற்றி கவலைப்பட வேண்டும்?
“அவர்களை நாம் இறுதியில் சென்றடைவோம்”-; தெய்வீகத் திட்டத்தின் நிருபங்கள், நண்பர்கள் உலகம் முழுவதும் அனுப்பி அவரது உயில் மற்றும் சாசனத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளைத் தொடக்கி வைத்தன.
சமயத்தின்பால் விசுவாசமாக இருந்த பல நண்பர்களுக்கு அந்த நேரத்தில் ஒரு சோதனை இருந்தது. ஷோகி எஃபெண்டி காலத்திலும் அம்மாதிரியான சோதனை இருந்தது. அவரது நடத்தை அப்போது சிலருக்கு சோதனையாக இருந்தது. அச்சோதனை இப்போது சரித்திரத்தில் மறைந்து விட்டது. ஷோகி எஃபெண்டி செய்த ஒரு காரியம் விசுவாசமான பல நம்பிக்கையாளர்களுக்கு சோதனையாக அமைந்தது. அந்த நம்பிக்கையாளர்கள் ஒப்பந்தமீறிகள் அல்லர். அவர்கள் ஒப்பந்தத்தில் சந்தேகம் கொண்டவர்களும் அல்லர். ஆனால், குழப்பத்திற்கு இலக்கானார்கள்: “ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஏன் அவர் மசூதிக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டார். அவரது பாட்டனார், உதராணப்புருஷர் அவ்வாறு சென்று வந்தாரே? தனது மூதாதையர்களைக் போலன்றி ஏன் அவர் மேற்கத்திய உடைகள் அணிகின்றார்?” “ஏன் அவர் 1921 முதல் 1937ம் ஆண்டு வரை நிர்வாக அமைப்புமுறையை எழுப்புவதில் மிகக் கவனமாக இருந்தார்? கட்டுப்பாடு மிக்க சமயம் எனும் நிலையிலிருந்து சுதந்திரமான ஆன்மீக சமயம் என்பதற்குப் பதிலாக அவர் சமயத்தை ஓர் அமைப்பாக மாற்றியமைப்பதில் ஈடுபடுகின்றாரே?” “பஹாய் சட்டத்தை மிகக் கடுமையாக மீறியவர்களை ஏன் சமயத்தை விட்டே அவர் வெளியேற்றினார்? அன்பு எங்கே? மன்னிப்பு எங்கே? பாவத்தை மறைக்கும் கண்கள்தாம் எங்கே?” “உயிரோடிருக்கும்போதே சிலரை ஏன் இறைசமயத்தின் திருக்கரங்கள் எனும் அமைப்புக்கு உறுப்பினர்களாக்கி இறுதியில் துணைவாரிய உறுப்பினர்களைக் கொண்டு வந்தார்?” சில விசுவாசமான நம்பிக்கையாளர்கள் அவர்களது இறப்புக்குப் பிறகு இறைசமயத்தின் திருக்கரங்கள் என அழைத்து, பின்னர், சில காலம் கழித்து உயிரோடு வாழ்ந்து கொண்டிருந்த சில நம்பிக்கையாளர்களை அதே அமைப்பின் உறுப்பினர்களாக்கினார்.
உலக நீதிமன்றம் தனது பொறுப்புக்களை ஆற்றிக் கொண்டிருந்த காலத்தில் அந்த உயரிய ஸ்தாபனம் மாற்றத்தை ஏற்படுத்தி அதே மாதிரியான சோதனையைக் கொண்டு வந்தது. நேர்மையான, அர்ப்பணமிக்க, விசுவாசமிக்க நம்பிக்கையாளர்கள் அச்சோதனைக்கு இலக்கானார்கள். உலக நீதிமன்றம் தனது முதற் காரியமாக, கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய யாத்திரிகர்கள் ஒன்றிணைத்தபோது, அக்காரியத்தினால் ஆழமான சோதனைக்குள்ளான சிலருடன் நான் பேசினேன். அவர்கள் சமத்தின்பால் விசுவாசமிக்கவர்கள், அவர்கள் சமயத்தின்பால் அர்ப்பண உணவுமிக்கவர்கள். ஆனால், அக்காரியத்தினால் அவர்கள் ஆட்டங் கண்டனர். அதே போன்று, பாதுகாவலர் இல்லாத நிலையில், ஹூக்குக்குல்லா பணம் உலக நீதிமன்றத்தின்பால் வழங்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டபோது, அது பலருக்கு சோதனையாக அமைந்தது. கண்ட ஆலோசகர்கள் வாரியங்களின் ஸ்தாபிதம், நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குறித்து சந்தேகம் கொண்ட பலருக்கு சோதனையாக அமைந்தது. அதுபோல, அனைத்துலக போதனை நிலையம் ஸ்தாபிக்கப்பட்டபோதும் அதே சோதனை காத்திருந்தது. உலக நீதிமன்றம் புதிய ஸ்தாபனங்கள் அமைத்துக் கொள்ளலாம் என்று உலக நீதிமன்றத்தின் விதிமறைகள் இருந்தும்கூட, வட்டார பஹாய் பேரவைகள் அமைக்கப்பட்டபோது, அதுவும் பலருக்கு சோதனையைக் கொண்டு வந்தது: “ தேசிய ஆன்மீகச் சபைகள் என்ன ஆகும்? ஏன் அவற்றின் அதிகாரம் அகற்றப்பட்டு விட்டது?” பல ஆண்டுகளாக நாம் வட்டார பஹாய் பேரவைகள் இல்லாமல் செயல்பட்டு வரவில்லையா, ஏன் இப்போது மட்டும் அதற்கு தேவை ஏற்பட்டது?”
நாம் இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக வாழ்வோமாகில், வருங்காலத்தில் பல விதமான மாற்றங்களை நாம் சந்திக்க நேரிடும்.
நான் எனது உரையில் இறுதியாக ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசப்போகின்றேன். ஏனென்றால், 1996ம் ஆண்டு உலக நீதிமன்றம் ஒரு முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்தது. அந்த மாற்றம் நேர்மையான பல நம்பிக்கையாளர்ரகளுக்குச் சோதனையாக அமைந்து விட்டது. கிளஸ்டர்கள் என்ற ஒன்றை அனைவருக்கும் அல்லாமல் சிலருக்கு மட்டும் உலக நீதிமன்றம் அறிமுகப்படுத்தியது. அது சோதனையாக அமைந்தது: “உள்ளூர் ஆன்மீகச் சபைகள் என்ன ஆகும்? அவற்றை நாம் மறந்துவிடப் போகின்றோமா? ஷோகி எஃபெண்டிதானே நமக்கு உள்ளூர் ஆன்மீகச் சபைகளைக் கொடுத்தார்? ஏன் நமக்கு கிளஸ்டர் தேவை?”
மைய நடவடிக்கைகளுக்கு கொடுக்கப்பட்ட முன்னுரிமையும், ரூஹி பாட நூல்களை நெடு நீண்டகாலமாகக் கற்க வேண்டும் எனும் தேவையும் சிலருக்கு சோதனையாக அமைந்து விட்டது: “நாம் இனிமேல் சமய சிறுவிளக்கக் கூட்டம் நடத்த முடியாது என்று இதன் அர்த்தமா? ஆழ்நிலை வகுப்புகளை நாம் இனிமேல் நடத்த முடியாதா? திருவாசகங்களில் பல விஷயங்கள் உள்ளனவே, அவை என்ன ஆவது? ரூஹி பாடநூல்களை மட்டுமே நாம் கற்க வேண்டுமா?”
தீவிர வளர்ச்சித் திட்டத்தின் மீது செலுத்தப்பட்ட கவனம் ஒரு சோதனையாக ஆகி விட்டது. அனைத்துலக போதனை நிலையம், ஆலோசகர்கள், துணைவாரிய உறுப்பினர்கள் ஆகியோர் சமூகத்தினுடைய வாழ்வில் நேரடியாக ஈடுபட்டது ஒரு சோதனையாக ஆகி விட்டது. முந்தைய காலத்தில் சமூக வாழ்க்கை மிக எளிமையாக இருந்தது: அப்போதிருந்த நம்பிக்கையாளர்கள் பண்டிகைக்குச் சென்றனர், ஆழ்நிலை வகுப்புக்குச் சென்றனர். அவ்வப்போது வேறு ஏதாவதொரு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். வாழ்க்கை அப்போது எளிமையாக இருந்தது. வாழ்க்கை நேரடியான வாழ்க்கையாக இருந்தது. அதன் பிறகு, நெடு நீண்டகாலத்திற்குப் பிறகு இந்த மாற்றங்களெல்லாம் வந்து விட்டன. அவை திருவாசகங்களில் எழுதப்பட்டிருக்கவில்லை: கிளஸ்டர், தீவிர வளர்ச்சித் திட்டம், மைய நடவடிக்கை ஆகியவை சமய நூல்களில் இல்லை..
இது மாற்றத்தின் சவாலாகும். சமயம் வளர்ச்சியடையாமல் இருந்து விட்டு மங்கிப் போக அனுமதிப்பதின் வாயிலாக இந்த சவாலை நாம் தவிர்த்து விடலாம். அது மாதிரி நாம் செய்ய முடியாது. நமக்கு வேறு வழியில்லை. பஹாவுல்லாவினுடைய உலக அமைப்புமுறையை நாம் எழுப்பியாக வேண்டும். நம்மால் புரிந்து கொள்ளவியலாத வழிகளில் சமயம் விரிவடைந்து வளர்ச்சியடைய வேண்டும். சமயம் தனக்கு கட்டளையிடப்பட்டுள்ள இலட்சியத்தை நிறைவேற்றி தனது வருங்காலத்தில் பிரவேசிக்க வேண்டுமானால், மாற்றம் நகிழ்ந்தாக வேண்டும் என்பது ஒரு கட்டாயம்.
மாற்றத்திற்குத் தடையாயுள்ள எந்தவொரு மனோபாவ தடையையும், தவறான தகவல்களையும், தொல்லைகளையும் நாம் வென்றிட வேண்டும். மாற்றம் வரும்போது, தீவிரவாதம் தலைதூக்கும் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். 1996ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மாற்றம் தொடர்பாக, சிலர் தீவிரவாதத்திற்குத் தள்ளப்பட்டனர்: அதவாது, ரூஹி பாடநூல்கள் மூன்றாம் உலக நாடுகளுக்கு மட்டுமே பொருத்தமான பாடநூல்கள். ஏன்? நீங்கள் அப்பாடநூல்களைத் திறந்தவுடன் அங்கே காணப்படுவது திருவாசகங்ள்! அதிகாரப்பூர்வமான வாசகப்பகுதிகள்.
நீங்கள் முதலாவது பாடநூலைப் பார்த்தால், உங்களுடைய வாழ்நாள் முழுவதும் ஆழமாகச் சிந்திக்கக் கூடிய வாசகப் பகுதிகள் அங்கு காணப்படும். பக்திமிக்க கிறிஸ்தவர்கள் ஆண்டவருடைய பிரார்த்தனையின் சொற்றொடர்களை வாழ்நாள் முழுவதிலும் கற்றதைப் போன்ற செயல் அது. இன்னுமொரு குற்றச்சாட்டு என்னவெனில், நாம் சபைகளையும், பண்டிகைகளையும், சமய சிறுவிளக்கக் கூட்டங்களையும் ஆழ்நிலை வகுப்புகளையும் அலட்சியப்படுத்துகின்றோம் என்பதுதான். ரூஹி பாடநூலில் விவரிக்கப்பட்டிருக்கும், குமாரி அனாவின் சமய போதனை முறை, கிளிப்பிள்ளைக்கு பாடம் சொல்வது போன்ற ஒரு செயல் எனும் பொய்யான குற்றச்சாட்டு அது. உலக நீதிமன்றத்தினால் மாற்றம் கொண்டுவரப்படுகையில், அது குறித்து ஒருவரது அதிருப்தியை வெளிக்காட்டி எழுகின்ற தீவிரவாதத்தின் பன்முகங்கள் இவை.
உலகின் சூழுநிலைகள் அடிப்படையிலும், மனிதகுலத்தின் ஆன்மீகத் தாகத்தை அடிப்படையாகக் கொண்டும் சமயத்தை நேரடியாக போதிக்க வேண்டும் என்றும், பஹாவுல்லாவினுடைய வருகையை மேலும் நேரடியாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் உலக நீதிமன்றம் விடுத்த வேண்டுகோளை சிலர் திரித்து விட்டனர். மாற்றம் வந்தபோது அதைக் கண்டு தடுமாற்றமடைவோரின் போக்குகளின் வெளிப்பாடே இவை என நான் கருதுகின்றேன். ஒரு தீவிரவாத நிலைக்கு செல்லும்போது, மறு முனையின் தீவிரவாதத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பத்தான் செய்யும். பயிற்சியக செயல்பாட்டில் ஈடுபட்டிராதவர்களிடமிருந்து விமர்சனங்கள் வரும். உள்ளூர் ஆன்மீகச் சபையை அல்லது சமய சிறுவிளக்கக் கூட்டத்துடன் அதனைத் தொடர்புபடுத்தி தொந்தரவு அளிக்க வேண்டாம், முன்னுரிக்கும் ஏகபோக உரிமைக்கும் உள்ள குழப்பம் என பல விமர்சனணங்கள் வரும்.
இதுவே நாம் சந்திக்கும் சவாலாகும். இச்சவால் ரித்வான் 2009 செய்தியில் உள்ளார்ந்த நிலையில் காணப்படுகின்றது. அதற்கான தீர்வு மிக மிக எளிமையானது. அது என்னவெனில், சமயத்தினுடைய மையமாக விளங்கும் உலக நீதிமன்றம் எடுத்துரைக்கும் எதனையும் மறுப்பின்றி ஏற்றுக் கொள்வதாகும்.
அதனை நாம் செயல்படுத்துவோமாகில், அது குறித்து நாம் ஆழமாகச் சிந்திப்போமாகில், சமயத்தினுடைய அதிகார மையமாக விளங்கிடும் உலக நீதிமன்றம் விடுக்கும் எதனையும் நாம் ஏற்றுக் கொண்டு பாதுகாப்பாக இருப்போம். எதுவும் நமக்குத் தொல்லைக் கொடுக்காது. தகர்க்கவியலா கோட்டையினுள் பாதுகாப்பாக நாம் இருப்போம். அத்துடன், பேராபத்துமிக்க ஒழுங்கின்மையிலிருந்தும், வீழ்ச்சியிலிருந்தும் மானிடத்தை மீட்டு, பொற்காலத்தில் அதற்குக் கட்டளையிடப்பட்டிருக்கும் புதியதோர் நாகரிகத்திற்கு உலகினை வழிநடத்திச் செல்லும் இச்சமயத்தின் ஒரு பகுதியாக நாம் ஆகிவிடுவோம்