மனலில் காற்சுவடுகள்
கடலோரத்தில் தன் ஆண்டவரோடு மனலில் நடப்பதாக கனவொன்று கண்டான் ஒருவன்.
அவ்வேளை, அவன் வாழ்வில் நடந்த யாவும் வானவெளியில் காட்சிகளாக பளிச்சிட்டன.
ஒவ்வொரு காட்சிக்கும் அவன் மனலில் இரு ஜோடி காற்சுவடுகளைக் கண்டான்…
ஒன்று அவனுடையதாகவும், மற்றது ஆண்டவருடையதாகவும் தோன்றியது.
அவன் வாழ்வின் இறுதிக் காட்சி அவன்முன் பளிச்சிட்டபோது,
மனலில் பதிந்த காற்சுவடுகள் யாவற்றையும் அவன் மறுபடியும் பின்னோக்கிப் பார்த்தான்.
அப்போது, அவன் வாழ்வெனும் பாதையில் அவ்வப்போது ஒரு ஜோடி காற்சுவடுகள் மட்டுமே தென்படுவது கண்டான்.
அவன் வாழ்வில் பெரும் சோகங் கப்பிய போதும், இன்னல்கள் தாக்கியபோதும், அக் காற்சுவடுகள் பதிக்கப்பட்டிருப்பது கண்டான்.
அதனால் பெரிதும் மனகுழப்பமுற்று, தன் ஆண்டவரை அது குறித்து வினவினான்.
“இறைவா, நான் உங்கள் வழி நடக்க தீர்மானித்தவுடன் நீங்கள் என்னுடன் வழி முழுவதும் கூட வருவேன் என்றீர்களே!
ஆனால், என் வாழ்வில் பெரும் கஷ்டங்கள் சூழ்ந்த போதெல்லாம் ஓர் இரட்டைக் காற்சுவடுகள் மட்டுமே தென்படுகின்றனவே!
இது எனக்கு விளங்கவில்லையே, நீங்கள் எப்போதெல்லாம் என்னருகே இருந்திருக்க வேண்டுமோ அப்போதெல்லாம் நீங்கள் என்னை விட்டு அகன்றீர்களே” என்றான்.
அதற்கு ஆண்டவர், “என் மதிப்பிடற்கறிய மகனே, நான் உன்னை நேசிக்கின்றேன் உன்னை விட்டு என்றுமே அகலமாட்டேன்.
உன்னை பெரும் சோதனைகளும், இன்னல்களும் தாக்கிய வேளைகளில், மனலில் ஒரு ஜோடி காற்சுவடுகளை மட்டும் நீ கண்டபோதினில், நான் உன்னை என் கைகளில் சுமந்துகொண்டல்லவோ இருந்தேன்!, என்றார்.
மனதை வருடும் அருமையான கதை. நன்றி.