இறைவனின் வார்த்தையும் அதன் ஆற்றல்கள் அனைத்தும் எல்லாம்-அறிந்தவரும் சர்வ-விவேகியுமான அவரால் முன்விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுக்குட்பட்டே மனிதர்களுக்கு வெளிப்படுத்தப்படவேண்டுமென எம்மால் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அதனை மறைத்திடும் திரையாக வேறெதுவுமின்றி அதனையே யாம் விதித்துள்ளோம். எமது நோக்கங்களை எய்திடக்கூடிய ஆற்றல் இவ்வாறாகவே உள்ளது. அவ்வார்த்தை தன்னுள்ளடங்கியுள்ள சக்திகளையெல்லாம் திடீரென வெளிப்படச்செய்திட அனுமதிக்கப்படுமேயானால், எம்மனிதனாலும் அவ்வித ஆற்றல்மிகு வெளிப்பாட்டின் பலுவைச் சுமந்திட முடியாது. மாறாக, விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள அனைத்தும் அதன் முன்னிலையிலிருந்து வெருண்டோடிப் போகும்.
மனிதர்களின் இறைநம்பிக்கையின் உள்ளுரம் எல்லா நாடுகளிலும் மறைந்துகொண்டிருக்கின்றது; அவரது முழுமையான குணமளிக்கும் மருந்தைத் தவிர வெறெதுவுமே அதனை மறுபடியும் உயிர் பெறச் செய்யமுடியாது. இறைநம்பிக்கையின்மையின் அரிக்குந்தன்மை மனுக்குலத்தின் உயிர்நாடியை அரித்துக்கொண்டிருக்கின்றது; அவரது ஆற்றல்மிகு வெளிப்பாடெனும் அமுதத்தைத் தவிர வெறெதுதான் அதனைத் தூய்மைப்படுத்தியும் மீட்டுயிர்ப்பெறவும் செய்யமுடியும்? ஓ ஹாக்கிம், பருப்பொருளின் நுட்பமானதும் பகுக்கமுடியாததுமான ஏதாவது ஒரு பகுதியின் மூலக்கூற்று தனிமங்களில் அவற்றைத் தங்கமாக உருத்திரிபு செய்யவல்ல ஒரு பூரணமான தன்மைமாற்றத்தை உண்டாக்கிடுவது மனித சக்திக்கு உட்பட்டதா? திகைக்க வைப்பதும் சிறமமானதுமாக இரு தோன்றினாலும், இதனினும் பெரிய காரியமாக பேய்த்தனமான வலிமையை தெய்வீக வளமாக மாற்றஞ்செய்வதற்கு யாம் ஆற்றல் பெற்றுள்ளோம். இவ்வித தன்மைமாற்றத்தை உண்டாக்கக்கூடிய சக்தி அமுத சக்தியினையும் மிஞ்சிய ஒன்றாகும். இறைவனின் வார்த்தை ஒன்றே, தனியே, இவ்வித உயர்ந்த மற்றும் எட்டும்வரையிலான விளைவுகளை உண்டாக்கக்கூடிய மாற்றத்திற்கான ஆற்றலைப் பெற்றுள்ளது எனும் தனித்தன்மையைக் கோரிட முடியும்.
உண்மையான வெற்றிக்கு வழிகாட்டுபவர் வந்துவிட்டார். இறைவனின் நேர்மைத் தன்மையின் சாட்சியாக! ஒரே ஒரு வார்த்தையின் சக்தியின் மூலம் உலகத்தையே மாற்றியமைக்க அவர் முழுமையான ஆற்றல் பெற்றுள்ளார். விவேகத்தைக் கையாழுமாறு எல்லா மனிதர்களுக்கும் ஆணையிட்டு, தாம் மட்டும் பொறுமை மற்றும் கீழ்படிகை எனும் கயிற்றைப் பற்றிக்கொண்டுள்ளார்.
ஆன்மீகச் சபைகளை நிறுவுவீர்களாக; இவ்வுலகில் ஒற்றமை மற்றும் உடன்பாடு ஆகியவற்றிற்கான அடித்தலத்தை அமைப்பீர்களாக; உலகத்தின் மீதிருந்து சச்சரவு மற்றும் போர் ஆகியவற்றின் கட்டமைப்பை அழித்திடுவீராக; இணக்கம் மற்றும் ஒத்திசைவு ஆகியவற்றின் ஆலயத்தை அமைப்பீராக; மனுக்குல ஒறுமைத்தன்மை நிலையின் ஒளியைத் தூண்டிவிடுவீராக; உங்கள் கண்களைத் திறந்திடுவீராக; மருமை உலகைக் கண்ணுற்று உற்று நோக்குவீராக! அமைதி, கடைத்தேற்றம், நேர்மை மற்றும் மறுஇணக்கம் ஆகியவற்றின் இராஜ்ஜியம் அருவ உலகில் அமைக்கப்பட்டுள்ளது, இறைவனின் வார்த்தையின் ஆற்றல் மூலமாக அது சிறுகச் சிறுகவே வெளிப்பட்டும் தோற்றம் காணவும் செய்யும்!
நீங்கள் நட்புறவு கொண்டுள்ளோரின் வட்டத்தை அதிகரித்திட முயற்சி செய்தும், நன்மைகள் புறிந்திட வேண்டுமெனும் ஒரே நோக்கும், அனைத்துலக அமைதி கோட்பாட்டின் செயலாக்கத்திற்காக பாடுபட்டும், மனுக்குலம் ஐக்கியப்படுதலை காண்பதன்றி வேறு ஆசைகள் எதனையும் மனதிற் பேணாத, நன்மைகள் மட்டுமே புரிந்திட வேண்டுமெனும் ஒரே எண்ணங்கொண்டுள்ள பரந்தமனப்பான்மைக் கொண்ட ஆன்மாக்களோடு மிக நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவும் வேண்டும். தெய்வீக இராஜ்ஜியம் குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு ஊட்டிடவேண்டி, இவ்விதமான மக்கள் கூட்டை நீங்கள் நாடிட வேண்டும். அவர்களது நோக்கங்கள் மிக நேர்த்தியானவையாக இருந்தபோதிலும், இவ்வுலக சக்திகள் அனைத்தும் அனைத்துலக அமைதியை ஸ்தாபித்திடவோ அல்லது மனுக்குல ஒறுமைத்தன்மையை மேம்பாடடையச் செய்திடவோ சக்தியற்றிருக்கின்றன என்பதை அவர்கள் உணரவில்லை. இறைவனின் வார்த்தையின் சக்திக்கும் புனித ஆவியின் மூச்சுக் காற்றுக்கும் குறைந்து வேறு எதுவுமே இதில் வெற்றி பெற்றிட முடியாது.
அலியே! எல்லா உலகங்களுக்கும் ஆண்டவராகியவரின் கொடை, உமக்கு அருளப்பட்டுள்ளது, தொடர்ந்து அருளப்பட்டும் வருகின்றது. அவரது வலிமையையும் ஆற்றலையும் கொண்டு கவசம் பூண்டு, அவரது சமயத்துக்கு உதவிடவும் அவரது புனித நாமத்தை மிகைப்படுத்திடவும் முன்னெழுந்திடுவீராக. மானிடக்கல்வியின்பால் அறியாமையும் வாசிப்பதிலும் எழுதுவதிலும் உமது இயலாமையும் உமது உள்ளத்தை வருத்தமுறச் செய்திட அனுமதியாதீர். அவரது பன்முகமான அருள்பாலிப்புகளின் கதவுகள் அந்த ஒரே உண்மை இறைவனின் ஆற்றலின் வலிமையான பிடிக்குள் அடங்கியுள்ளன. அவருக்குச் சேவைச் செய்யும் அனைவர்பாலும் அவர் அவற்றைத் திறந்துவிட்டுள்ளார், தொடர்ந்து திறந்துவிடவும் செய்வார். தெய்வீக நறுமனமெனும் இத்தென்றல், உமது உள்ளமெனும் பசும்புல்வெளியிலிருந்து அதன் விளைவுகள் வெளிப்படுமளவுக்கு தொடர்ந்து உலகம் முழுமையின் மீதும், எல்லாக் காலங்களிலும், தொடர்ந்து வீசிட வேண்டுமென யான் உறுதியாக எதிர்பார்க்கின்றேன்.
அவரது வார்த்தைகளை அறிந்துகொள்வதென்பதும் விண்ணுலகப் பறவைகளின் உச்சரிப்புக்களை ப் புரிந்துகொள்வதென்பதும் மனிதக் கல்விக்கு எவ்வகையிலும் உட்பட்டவையல்ல. அவை, உள்ளத் தூய்மை, ஆன்மநெறி, மற்றும் ஆவியின் தன்னிச்சையையுமே முற்றாக சார்ந்துள்ளன. இன்று, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கல்வி முன்மாதிரிகளைச் சார்ந்த ஒரு வார்த்தையைக் கூட அறிந்திராமல், அறிவின் மிக உயர்ந்த இருக்கைகளில் அமர்ந்துள்ளோர்களாலேயே இது உதாரணப்படுத்தப்பட்டுள்ளது; மற்றும் அவர்களது உள்ளங்களெனும் தோட்டம், தெய்வீக அருட்பொழிவுகளின் மூலமாக, விவேகமெனும் ரோஜாக்களாலும் பூவரசம்பூக்களெனும் அறிவினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.