இத் தெளிவுமிகு செய்யுட்கள்


இந்நாளில் விண்ணுலகத்தில் ஒரு மாபெரும் விழா நடைபெறுகின்றது; ஏனெனில் புனித நூல்களில் வாக்களிக்கப்பட்டவை யாவும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது பரமானந்தம் அடைய வேண்டிய நாள். தூரமெனும் நெருப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனும், ஆனந்தத்துடனும், பேருவகையுடனும், களிப்புடனும் அவரது அருகாமையெனும் அரணுக்கு விரைந்திட வேண்டியது ஒவ்வொருவருக்கும் ஏற்புடையதாகும். -பஹாவுல்லா

பின்வரும் நிருபம் பஹாவுல்லாவின் எழுத்துக்களான, பஹாவுல்லாவின் நிருபங்கள், மற்றும், ஒநாயின் மைந்தனுக்கான திருமுகம் ஆகியவற்றில் காணக்கிடைக்கின்றது. இரண்டிலும், இந்த நிருபம் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட ஒரு நிருபம் என பஹாவுல்லா கூறுகின்றார். ஆக, மூன்று முறை பல்வேறு சூழ்நிலைகளில் இந்நிருபம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிருபத்தின் முக்கியத்துவம் அதன் இறுதிப் பத்தியிலேயே விவரிக்கப்பட்டுள்ளது.

இத் தெளிவு மிகு செய்யுட்கள்

பிற விஷயங்களுக்கிடையே, இத்தெளிவு மிகு செய்யுட்கள், மறுமொழியாக, குறிப்பிட்ட சில நபர்களுக்கு, தெய்வீக அறிவெனும் இராஜ்ஜியத்திலிருந்து கீழே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன:

‘எமது வதனமெனும் பிரகாசங்களின்பால் தனது முகத்தை திருப்பியுள்ளவரே! உலகவாசிகளை வீன் ஆசைகள் சூழ்ந்து, உறுதிப்பாடெனும் தொடுவானத்தையும், அதன் பிரகாசத்தையும், அதன் வெளிப்பாடுகளையும் அதன் ஒளிகளையும் நோக்கித் திரும்புவதிலிருந்து அவர்களை தடுத்துவிட்டிருக்கின்றன. தனித்தியங்க வல்லவரான அவரை அனுகுவதிலிருந்து வீன் கற்பனைகள் அவர்களை தடுத்துள்ளன. புறிந்து கொள்ளாமல், தங்கள் சபலங்கள் தூண்டிய வண்ணம் அவர்கள் மொழிகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் இவ்வாறு கூறியவர்கள் ஆவர்: ‘செய்யுட்கள் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டனவா?’. கூறுங்கள்: ‘ஆம், விண்ணுலகங்களின் பிரபுவான அவரது பெயரால்!” “நேரம் சம்பவித்து விட்டதா?” “அல்ல, அதனினும் மேலாக; தெளிவான அடையாளங்களை வெளிப்படுத்தும் அவரது பெயரால், அது கடந்து சென்றுவிட்டது! மெய்யாகவே, தவிர்க்கவியலாதது வந்துவிட்டது, ஆதாரங்களுடனும் சான்றுகளுடனும் உண்மையானவரான, அவர் தோன்றிவிட்டார். ‘திருவெளி’ வெளிப்படுத்தப்பட்டுள்ளது, மனிதகுலம் கடுந்துன்பமும் பீதியும் கொண்டுவிட்டது. பூகம்பங்களும் வெடித்துவிட்டன, சர்வ உந்துதல் அளிக்கும், வலிமையின் பிரபுவான இறைவன்பால் உள்ள பயத்தால் இனங்கள் யாவும் புலம்பவும் செய்கின்றன.” கூறுங்கள்: “ஸ்தம்பிக்கவைக்கும் தாரை ஒளி உரக்க எழுப்பப்பட்டுவிட்டது, ஏகமானவரான, கட்டுப்படுத்தப்படாதவரான இறைவனுடையது இந்நாள்.” திடீர்ப் பேரழிவு கடந்து சென்றுவிட்டதா?” கூறுங்கள்: “ஆம், பிரபுக்களுக்கெல்லாம் பிரபுவின் பெயரால்!” “மறு உயிர்த்தெழல் வந்துவிட்டதா?” “அல்ல, அதற்கும் மேலாக; தனித்தியங்குபவரான அவர் தமது அடையாளங்கள் எனும் இராஜ்ஜியத்துடன் தோனறிவிட்டார்.”மனிதர்கள் தாழ்வுற்றுக் கிடப்பதை காண்கின்றீரா?” “ஆம், மேன்மைபடுத்தப்பட்டவரான, அதி உயர்ந்தவரான எனது பிரபுவின் பெயரால்.” “அடிமரங்கள் வேருடன் பிடுங்கியெறியப்பட்டுவிட்டனவா?” “ஆம், அதனினும் மேலாக; நற்பண்புகளின் பிரபுவானவர் பெயரால், மலைகளே தூசிப்படலங்களாக சிதறடிக்கப்பட்டுவிட்டன.” அவர்கள் கூறுவதாவது: “சுவர்க்கம் எங்கே, நரகம் எங்கே?” கூறுங்கள்” “இறைவனோடு பங்காளியாக இனைந்து சந்தேகங்கொள்பவனே, ஒன்று எம்முடன் மறுபடியும் இனைதலாகும்; மற்றது உனது சுயநிலையே ஆகும்.” அவர்கள் கூறுவதாவது: “துலாபாரத்தை காண்கின்றோமில்லை.” கூறுங்கள்: நிச்சயமாகவே, கருணைத் தேவரான என் பிரபுவின் பெயரால்! உட்பார்வை பெற்றுள்ளோர்களைத் தவிர வேறு எவரும் அதைக் காண இயலாது.” “விண்மீன்கள் வீழ்ந்துவிட்டனவா?” கூறுங்கள்: ஆம், தனித்தியங்க வல்லவரான அவர் மர்ம பூமியில் (ஆட்ரியாநோப்பில்) வாசம் செய்திட்ட போதே.” பகுத்தறியும் தன்மை பெற்றுள்ளவர்களே, கவனங் கொள்ளுங்கள்! யாம் எமது வல்லமையெனும் கரத்தை மாட்சிமை மற்றும் வலிமை எனும் நெஞ்சிலிருந்து அகற்றியபோதே எல்லா அடையாளங்களும் தோன்றிவிட்டன. மெய்யாகவே, வாக்களிக்கப்பட்ட நேரம் தோன்றிய கனமே கூவுபவர் கூவிட, சைனாயின் மகிமைகளை கண்டுணர்ந்தோர் படைப்பின் பிரபுவான உன் பிரபுவின் பிரமிக்க வைக்கும் மாட்சிமையின் முன்னிலையில் தாமதிப்பு எனும் வனாந்திரத்தில் மூர்ச்சையாகிவிட்டனர். ‘தாரை’ வினவுவதாவது: “ஊது குழல் ஒலிக்கப்பட்டுவிட்டதா?” கூறுங்கள்: “ஆம், வெளிப்பாட்டின் அரசரின் பெயரால்!, சர்வ-தயாளமுடையவரெனும் அவரது நாமமெனும் சிம்மாசனத்தில், அமர்ந்தவுடன்.” பிரகாசங்கள் யாவற்றுக்கும் தோற்றுவாயானவரான உன் பிரபுவின் கருணையின் உதய ஒளியினால் இருள் விரட்டப்பட்டுவிட்டது. சர்வ-தயாளமுடையவரின் தென்றல் வீசிட, அவர்களின் உடல் எனும் கல்லறையினுள் ஆன்மாக்கள் புத்துணர்வுபெறச் செய்யப்பட்னர். இவ்விதமாகவே, வலிமைமிக்கவரும் கொடையாளியுமாகிய இறைவனால் ஆணை நிறைவேற்றப்பட்டுள்ளது. வழிதவறியோர் கூறியுள்ளனர்: “விண்ணுலகங்கள் எப்போது பிளக்கப்பட்டன?” கூறுங்கள்: “வழிதவறுதல் மற்றும் தவறுகள் எனும் புதைகுழிகளில் நீங்கள் உரங்கிக்கொண்டிருந்த போது.” தன் கண்களைத் தேய்த்துக்கொண்டு, வலதுபுறமும் இடதுபுறமும் பார்ப்பவன் கவனமற்றவர்களில் ஒருவனாக உள்ளான். கூறுங்கள்: “நீ கண்ணிழந்தவனாக ஆகிவிட்டாய். ஓடி ஒளிந்திட உனக்குப் புகலிடம் கிடையாது.” அவர்களிடையே இவ்வாறு கூறுபவனும் உள்ான்: “மனிதர்கள் ஒன்று திரட்டப்பட்டுள்ளனரா?”. கூறுங்கள்: “ஆம், என் தேவரின் வாயிலாக! நீங்கள் உங்கள் வீண் ஆசைகள் எனும் தொட்டிலில் சாய்ந்திருந்தபோதே.” அவர்களிடையே இவ்வாறு கூறுபவனும் உள்ளான்: “உண்மையான சமயத்தின் சக்தியின் மூலமாக திருநூல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா?” கூறுங்கள்: “உண்மையான சமயம் தானே திகைப்படைந்துள்ளது. புறிந்துகொள்ளும் உள்ளம் கொண்ட மனிதர்களே, அச்சங்கொள்ளுங்கள்!” அவர்களிடையே இவ்வாறு கூறுபவனும் உள்ளான்: “குருடனாக நானும் மற்றவர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளேனா?”. கூறுங்கள்: “ஆம், மேகங்களின் மீது அமர்ந்து வருபவரின் பெயரால்!” சுவர்க்கம் மர்ம ரோஜாக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டும், நரகம் பக்தியற்றோரின் தீயினால் எரிந்திடச் செய்யப்பட்டும் உள்ளது. கூறுங்கள்: “வெளிப்பாடெனும் தொடுவானத்திலிருந்து ஒளி உதயமாகிவிட்டது, திருவொப்பந்த நாளின் பிரபுவின் வருகையினால் உலகம் ழுவதுமே ஒளிபெறச் செய்யப்பட்டுவிட்டது!” நம்பிக்கையற்றோர் அழிந்துவிட்டனர். அதே வேளையில், உறுதியெனும் ஒளியினால் வழிகாட்டப்பட்டு, மெய்யுறுதியெனும் பகலூற்றின்பால் திரும்பியவன், செழிப்படைந்தான். எம்மீது உன் பார்வையை குத்திடச் செய்துள்ளோனே, உனக்காக அனுப்பப்பட்டுள்ள — மனிதர்களின் ஆன்மாக்களை வானோங்கச் செய்யும் ஒரு நிருபமான இந்த நிருபத்திற்காக நீ ஆசீர்வதிக்கப்பட்டுள்ளாய். அதை மனனம் செய்து ஒப்புவிப்பாயாக. என் உயிரின் மீது ஆணை! உன் பிரபுவின் தயைக்கு அது ஒரு நுழைவாயிலாகும். மாலை வேளைகளிலும் காலை வேளைகளிலும் அதை வாசிப்பவன் நலமடைவானாக. அறிவெனும் மலை நொறுக்கப்பட்டும், மனிதர்களின் கால்களை வழுக்கிட செய்திடும் இந்த சமயத்தின் புகழை நீர் பாடியதை யாம், மெய்யாகவே, செவிமடுக்கின்றோம். உன்மீதும், சர்வ-வல்லவரும், சர்வ-கொடையாளியுமானவர்பால் திரும்பியுள்ள எவர்மீதும், எமது மகிமை சாரட்டுமாக. இந்நிருபம் முடிவுற்றது, ஆனால் அதன் பொருள் வற்றாமல் உள்ளது. பொறுமை கொள், ஏனெனில் உன் தேவர் பொறுமையானவர்.
பஹாவுல்லா, பஹாவுல்லாவின் நிருபங்கள், ப. 117-119

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: