மனம் புண்புடுவது


மனம் புண்படுவது

மிக எளிதில் தங்கள் மனம் புண்பட்டுப் போகும் அதிக எண்ணிக்கையிலான பஹாய் அன்பர்களையும், அப்படி மனம் புண்பட்டோர்களுக்குத் தங்கள் “அனுதாபத்தைக்” காட்ட முற்பட்டு, அவர்களுக்கு “அன்பு” காட்டுவதாக நினைத்துக் கொண்டு, அவர்கள் மனதைப் புண்படுத்தியததாக நம்பப்படும் நபர்கள்பால் ஒரு கடுமையான மனப்பான்மையை உருவாக்கிக்கொள்ளும் அன்பர்களைப் பார்க்கையில் நிலைமை மிகவும் கவலைக்கிடமளிப்பதாக உள்ளது.

நாம் எவர் மனதையும் புண்படுத்தலாகாது என அப்துல் பஹா கேட்டுக் கொண்டுள்ளார். அதே சமயம் நாமும் மனம் புண்பட்டுப்போகலாகாது எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நமது எதிரிகளையும் (நம்மோடு பேச்சுவார்த்தையற்றுப் போன பஹாய்களை மட்டும் அல்ல) நமது நண்பர்களாகவே கருத வேண்டும் எனவும் கூறியுள்ளார். அவர்களை வெறுமனே நண்பர்களாக மட்டும் நாம் கருதக்கூடாது எனவும் கூறியுள்ளார். ஏன்? நாம் சமயநம்பிக்கையில் உறுதியாக இருக்க வேண்டுமானால் நாம் மனவளர்ச்சி பேற வேண்டும் என வற்புறுத்தும் சோதனைகளே இவ்விதமான பிரச்சினைகளாக நமக்கு வருகின்றன. நமது வளர்ச்சியைத் திசைத் திருத்தம் செய்யக்கூடிய சோதனைகள் அவை. மனிதகுலம் முழுவதையும் உண்மையாகவே நேசிக்க வேண்டும் எனும் நமது வேட்கையை அவை சோதனைக்கு உட்படுத்துகின்றன.
மக்கள் அனைவரின் குறைபாடுகளையும் சேர்த்தே நாம் அவர்களை நேசிக்க வேண்டுமென அப்துல் பஹா கூறுகின்றார். “மனிதர்களைப் பார்க்காதீர்கள், அவர்கள் குறைபாடுகள் நிறைந்தவர்கள், ஆனால் இறைவனுக்காக அவர்களை நேசியுங்கள்,” என அவர் மேலும் கூறுகின்றார்.

வாஞ்சையும் அன்பும் நிறைந்தவர்கள் கொடுத்துவைத்தவர்களே. இரக்கம் இல்லாதவர்களாகவும், அருகே நெருங்க முடியாதவர்களாகவும் இருப்பவர்கள் பெரும்பாலும் தங்களைத் தாங்களே வெறுத்துக் கொள்பவர்களாகவும், குறுகுறுப்பும் பயமும் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். அதிக சக்தி வாய்ந்த உண்மையான அன்பே இருகிப்போன அவர்களின் உள்ளங்களை இளக வைத்தும் அவர்களை குணப்படுத்திடவும் முடியும். ஒருதலைப் பட்சமான அன்பு உண்மையில் அன்பே அல்ல.

விறகு எரிகின்றது போல் தோன்றினாலும், அதைத் தூண்டுவதால் அது பற்றிக் கொள்ளும் போதே அது “தீப் பிடித்துக் கொண்டது” எனக் கூற முடியும். பிறர் நம்மை விரும்பும் போது மட்டும் நாம் அன்பு செலுத்தினல் நாம் “பற்றிக் கொண்டவர்கள்” ஆக மாட்டோம். அதை அறிந்து கொள்வது நம்மைப் பற்றி ஒரு கசப்பான உண்மையை அறிந்து கொள்வதாகும், ஆனாலும் நண்மை பயக்கக்கூடிய ஒரு கசப்பான உண்மை அது. (அன்புக்காக) பிறரையே முழுவதுமாக சார்ந்திருக்கும் நிலையாகப்பட்டது மிகவும் அபாயகரமான ஒரு நிலை. இதற்கு நிவாரணம் யாது? அது, நம்மை முழுவதுமாக அவரது புனித வாசகங்கள் எனும் சமுத்திரத்தில் மூழ்கச் செய்துக் கொள்வதாகும்; தகுந்த நடவடிக்கைகள் எடுத்திடவும், மறு இணக்கம் காணவும் அன்பெனும் நெருப்பையும் ஈர்க்கப்படுதலையும் தூண்டிவிடுமாறு இறைவனைப் பிரார்த்தித்து மன்றாடுவது; என்னதான் இதயம் வேதனையால் வெடித்துவிடுவது போல் இருந்தாலும் அந்தச் சூழ்நிலையிலும் அன்பர்களுக்குச் சேவைச் செய்திடுவது; சமயத்தைப் போதித்து அன்பு மற்றும் ஒளியின் உதயபீடத்தின்பால், இறைவனின் வெளிப்பாட்டின்பால், அன்பர்களை வழிநடத்துவது, ஆகியவையே தகுந்த நிவாரணமாகும். (இந்த காரியத்திற்குத் தகுந்தவர்களாக நம்பிக்கையாளர்கள் இருக்கமுடியாது, ஏனெனில் அவர்கள் தூண்டப்பெற்றவர்களாகவோ பெறாதவர்களாகவோ இருக்கலாம்.)

அப்துல் பஹாவிடமே பலர் முறைத்துக் கொண்டுள்ளனர். பூரண உதாரண புருஷராகிய அவர் இவர்கள் புண்பட்டதற்கு பொறுப்பாக இருந்திருக்க முடியுமா?

இதிலிருந்து, புண்படுத்தவேண்டும் எனும் எண்ணமும் அப்படிச் செய்வதற்குத் தகுந்த காரணம் இல்லாத போதும் ஒருவர் வருத்தப்பட்டுக்கொள்ளவோ அல்லது மனம் புண்படவோ செய்யலாம் என்பது தெளிவாகின்றது. அப்துல் பஹா, மனிதர்கள் வெளிப்படுத்தக்கூடிய மிகவும் வெறுக்கத்தக்க நடத்தைகளுக்கு உட்படுத்தப்ப்டடார். இருந்தும் அவர் அதனால் எப்போதாவது மன வருத்தம் அல்லது மனம் புண்பட்டார் எனும் நிலையை எய்தினாரா? எதையும் பொறுத்துக்கொள்ளும் தன்மை, மன்னிப்பு, தயை போன்றவை சார்ந்த ஆன்மீக வலிமைகளை இங்கு உபயோகித்து மனவருத்தம் மற்றும் மனம்புண்படுதலை நிச்சயமாக தவிர்க்கமுடியும். இது எப்படித் தெரியும்? தெரியும், ஏனென்றால் அப்துல் பஹா இதை நமக்குச் செய்து காண்பித்துள்ளார். “ஆனால் நான் அப்துல் பஹா இல்லை” என நீங்கள் கூறிட நினைக்கலாம். “அது தெளிவுதான், நாம் அப்துல் பஹா இல்லைதான்,” இருந்த போதிலும் அவர்தான் நமது உதாரண புருஷர் என்பது மாற்ற முடியாத உண்மை. நம்மைப் புண்படுத்துபவரும் ஒர் “அப்துல் பஹா அல்ல,” அவரும் முயற்சி செய்கிறார், ஆகவே நம்மைப் புண்படுத்துபவர்களும் நமது உதாரணத்தைப் பின்பற்றுவர் என்பதே எதிர்பார்ப்பு. பஹாவுல்லா, நம் எல்லோரையும் பல உடல்களில் வசிக்கும் ஓருயிராகப் பார்க்க விரும்புவதாகக் கூறுகிறார். நம்மைப் புண்படுத்தியவர், ஆன்மீக தடை ஓட்டப் பந்தயத்தில் ஏதோ ஒரு தடையில் சிக்கித் தவிக்கும் ஓர் அன்பர். அதே வேளை புண்பட்ட நாமும் அவரைப் போன்றே ஏதோ ஒரு தடையில் அகப்பட்டுக் கொண்டவர்கள்தாம். மனிதகுல ஒருமைத் தன்மையை நாம் உண்மையிலேயே நம்புபவர்களாக இருப்போமானால், இந்த இருவகையான மனிதர்களான நாம், அப்படியே போகிற போக்கில் நமது வெற்வேறு தடைகளையும் தாண்டிச் செல்வதற்குக் கற்றுக் கொள்ள ஒருவருக்காக ஒருவர் பிரார்த்திக்க, நாம் தேவையான அளவு விவேகத்துடனும்  திருத்தமாகவும் ஒருவரை ஒருவர் நேசிக்கவேண்டும், அதே வேளை ஒருவரை ஒருவர் மறுபடியும் மறுபடியும் நேசிப்போம், நேசிப்போம், நேசிப்போம்

அமெரிக்காவில் மிர்ஸா அபுல்-பஃடல்


அமெரிக்காவில் மிர்ஸா அபுல்-பஃடல்

தமது தந்தையிடம் சேகரித்த விஷயங்களின் அடிப்படையில் மார்ஸியே கேய்ல் அவர்களால் எழுதப்பெற்ற கட்டுரை.

மாலை வேளைகளில் நியு யார்க் நகரின் மேற்புறமாக உள்ள அந்த பழைய இடுகாட்டில் அவரும் நானும் நடப்போம். கல்லரைகள் எங்களைச் சூழ்ந்திருக்க, மரங்களின் கீழ் மேலும் கீழுமாக நடந்த வன்னம் இருப்போம். மறுமை வாழ்வைப் பற்றி நான் அவரிடம் வினவுவேன், அவர் அதற்கு பதிலளிக்க மாட்டார். ஒரு நாள் நான் பொறுமை இழந்து அவரிடம் கேட்டே விட்டேன்:

‘மாஸ்டர் அவர்கள், நான் உங்களோடு இருக்கும் போது பல விஷயங்களை கற்க முடியும் என்றார், ஆனால் நான் எதையுமே கற்க முடியவில்லை… நான் மறுபடியும் உங்களை கேட்கின்றேன்: இவ்வுலகில் நாம் நமது பௌதீக உடலால் அறியப்படுகிறோம்; மறுமை உலகில் நாம் எவ்வாறு அறியப்படுவோம்? மாஸ்டர் அவர்கள் நீங்கள் இதைப்பற்றி எனக்கு விளக்கம் சொல்வீர்கள் எனக் கூறியுள்ளார்.’

அதற்கு அவர்: நீர் என்னை வற்புறுத்துகின்றீர், நான் பதிலளித்தே ஆகவேண்டும். ஆனால் நான் அளிக்கும் பதிலினால் நீர் சந்தோஷப்படப்போவதில்லை.’

‘ஏன்’

‘ஏனென்றால், இறப்பிற்குப் பின் வரும் வாழ்க்கையை நீர் புறிந்துகொள்ள இயலாது.’

‘ஆனால் நான் ஷொப்பன்ஹோவர் மற்றும் காண்ட் ஆகியோரின் எழுத்துக்களை புறிந்துகொள்ள முடிகிறதே. கிரேக்கர்களை என்னால் புறிந்துகொள்ள முடிகிறது. இதை மட்டும் என்னால் புறிந்துகொள்ள முடியாது என ஏன் கூறுகிறீர்கள்?’
அதற்கு அவர்: நீர் இது குறிந்து கேள்வி கேட்கின்றீர் என்பதே இதை நீர் புறிந்து கொள்ளமுடியாதவர் என்பதற்கு ஆதாரம்,’ என்றார்.

அதன் பின், படைப்பினங்கள் வாழும் தளங்கள் ஒவ்வொன்றிற்கும் அந்தந்த தளத்தை வர்ணிக்க பாஷை ஒன்று தேவைப்படுகிறது, என என்னிடம் கூறினார். பூவுலகில், இங்கிருப்பதை விட உயர்ந்த நிலையில் வாழும் ஆன்மாவின் வாழ்வைப் பற்றி விளக்கங்கள் அளிக்கக்கூடிய பரிபாஷை ஏதும் கிடையாது என்றார்.  அதன் பிறகு, அமர நிலை குறித்து எனக்கு பல வழிகளிலும் விளக்கமளிக்க முற்பட்டார். அவர் உபயோகித்த ஓர் உதாரணம் முதிர்ச்சி நிலை குறித்தது: ஒரு குழந்தைக்கு முதிர்ச்சி நிலை என்றால் என்ன என்பதை விளக்குவதற்கு தகுந்த மொழி கிடையாது என்றார். அக்குழந்தை குழந்தை பருவத்தைத் தாண்டி ஒரு முதிர்ச்சி நிலைய அடைந்த பிறகே அதை புறிந்து கொள்ள முடியும். ‘அமர நிலையை புறிந்துகொள்ளத்தக்க ஒரு நிலையை நாம் எப்படி அடைவது?’ என நான் கேட்டேன்.

‘சமயத்தை தொடர்ந்தாற் போன்று பக்தியுடன் ஒழுகி வருவதன் மூலம்,’ என அவர் பதிலளித்தார். ‘சிறுகச் சிறுக ஒருவர் அந்த ஞானத்தை அடையலாம். நீர் சேவை செய்கிறீர்; ஆகவே நீர் சரியான திசையில் செல்கிறீர். நீர் அந்த ஸ்தானத்தை புறிந்து கொள்ள நான் பஹாவுல்லாவை வேண்டிக்கொள்கின்றேன். ஆனால் அது கல்வி கற்பதன் மூலம் கற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அந்த (அமர) நிலை குறித்த ஒருவரது அறிவு அவரது செயல்களின் மூலமே வெளிப்படுத்தப்படுகிறது. ஒருவர் அந்த அறிவு நிலையை எய்திவிட்டார் என மக்கள் மனதில் படுமே அன்றி அது வார்த்தைகளால் விவரிக்கப்பட முடியாதது.

மிர்ஸா அவர்கள் அமெரிக்க சென்றது இதுவே முதன் முறை அன்று. பாரசீகத்தின் குல்பைகான் எனும் இடத்தில் 1844 அவர் பிறந்தார். பஹாவுல்லா மற்றும் அப்துல் பஹா ஆகியோரின் கட்டளைகளுக்கினங்க சமயத்தைப் பரவச் செய்ய பல்வேறு இடங்களுக்கு அவர் சுமார் 30 வருட காலம் பிராயணங்கள் மேற்கொண்டார். கிழக்கத்திய வாசகர்களுக்கு அவர் ஒரு சிறந்த கல்விமான் என்பது குறித்து அறிவிக்கப்பட வேண்டியதில்லை; ஹக்கீம்-ஹாஷீம் எனப்படும் தெஹரானின் முன்னனி அரபுப் பல்கலைக்கழகம் ஒன்று அவர் தலைமையில் இயங்கியது என்றும், மேலும் அங்கு அவர் தத்துவ ஞானம் பற்றி விரிவுரையாற்றினார் எனவும்; ஆயிரம் ஆண்டுகள் ஆன இஸ்லாமியக் கல்வி மையமான கைரோவின் புகழ்பெற்ற அல்-அஸ்ஹார் பல்கலைக்கழகத்தில் அவர் இஸ்லாமியச் சான்றுகள் குறித்து ஒரு அதிகார நிலையில் இருந்தார் எனவும் (அத்தாரிட்டி), அங்கு அவர்கள் தாங்கள் இயற்றிய காரியங்களை பரிசீலனை செய்திட அவரை நாடினர் என்றும்; புதிய மற்றும் பழைய பாரசீக மொழிகளில் புலமை பெற்றவர் எனவும், அரபு மொழி வல்லுனர் எனவும், கிழக்கு மற்றும் மேற்கத்திய கலாச்சாரங்களை நன்கு அறிந்தவராகவும் அவர் விளங்கினார். 1876-இல் எட்டு மாத விவாதத்திற்குப் பிறகு சமயத்தை ஏற்றார், அதன் பிறகு சமயத்தின் போதனைகளை அச்சமின்றி போதித்ததன் பயனாக பல முறை சிறை சென்றும் மரண தண்டனை பெறக் கூடிய ஒரு நிலைக்கும் உள்ளானார். அமெரிக்காவிற்கு பிராயணம் செய்வதற்கு முன்பாக, பாரசீகம், துருக்கி, ரஷியா, கோக்கசஸ், தார்த்தரி, சிரியா, மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் அவர் பிரயாணம் செய்தும், போதித்தும், எழுத்துப் பணிகளும் செய்திருந்தார்; சமயத்தை சீனாவின் எல்லை வரையிலும் கொண்டு சென்றிருந்தார். தமது போதனைத் திறன்களுக்கு தமக்காக பஹாவுல்லா வெளிப்படுத்தியிருந்த ஒரு பிரார்த்தனையே காரணம் என அவர் சுட்டினார்: ‘பஃடல் அவர்கள் விவேகத்துடனும் விளக்கத்துடனும் தமது உண்மையை பொதிக்க உதவிடுமாறும், அவரது அறிவின்கண் மறைக்கப்பட்டும் அரும்பொருளாய் வைக்கப்பட்டும் உள்ளவற்றை திரைநீக்கம் செய்திடவும், யான் ஆண்டவனை இறைஞ்சுகின்றேன். மெய்யாகவே அவரே வலிமைமிக்கவர், வழங்குபவர்!’

நான் மட்டும் அப்துல் பஹாவையும் பாதுகாவலரையும் அறியாது இருந்திருந்தால், பஃடல் அவர்களே இவ்வுலகில் ஒரு மாபெரும் மனிதர் என நினைத்திருப்பேன். மாஸ்டர் அவர்கள் நான் அவரை விட்டு அமெரிக்கா செல்ல வேண்டும் எனக் கூறியபோது நான் விம்மி அழுதேன். என் துக்கம் பாரசீக முறையில் வெளிப்பட்டு அதன் பயனாக ஆக்கா நகரில் மாஸ்டர் அவர்களின் வீட்டுச் சுவற்றில் நான் என் சிரசை மோதிக்கொண்டேன். ‘மிர்ஸா அவர்களின் பெரும் கல்வி மற்றும் சமயத்தின்பாலான அவரது பக்தியை நோக்குங்கால் நீர் அவருடன் இருக்க இதுவே உமக்கு நல்லதொரு வாய்ப்பு, எனப் பிறகு அப்துல் பஹா கூறினார்.
அந்த நாட்களில் மாஸ்டர் அவர்களின் உதவியாளர்கள் மிகக் குறைவு, மற்றும் சமயத்தின் வேலைப் பழு அதிகரித்த வன்னமாக இருந்தது. ஒரு மொழிபெயர்ப்பாளர் எனும் முறையில் என் சேவை அதிகமாகத் தேவைப்பட்டது. மாஸ்டர் அவர்களுக்காக இரவும் பகலுமாக சேவை செய்து வந்தேன். ஆனால், அந்த அமெரிக்கா சம்பந்தமான வேலை அதி முக்கியமானதாக இருந்தபடியால் அவர் என்னை என் கடமைகளிலிருந்து விடுவித்தார். 1901-ஆம் ஆண்டின் வசந்த காலத்தின் போது, திருமதி லுவா மற்றும் அவரது கனவருடன் நான் பாரீஸ் சென்றடைந்தேன். அங்கு மிர்ஸா அவர்கள் மே போல்ஸ் (பின்னாளில் திருமதி மே மாக்ஸ்வல்), லோரா பார்னி, ஜூலியட் தோம்சன், சார்ல்ஸ் மேசன் ரேமி, லிட்டல் சிகுர்ட் ரஸ்சல் மற்றும் ஏனைய நம்பிக்கையாளர்களுடன் இருக்கக் கண்டேன். மாஸ்டர் அவர்கள் என்னை உடனடியாக அமெரிக்கா செல்லும்படி உத்தரவிட்டார். நியு யார்க்கில், என்னை சிக்காகோ போகும்படி கட்டளையிட்ட, அப்துல் பஹா அனுப்பி வைத்த இரண்டாவது தந்தியைக் கண்டேன். இருண்டு மாதங்கள் சென்று மிர்சா அவர்கள் அங்கு என்னுடன் வந்து சேர்ந்துகொண்டார்.

சிக்காகோவில் நடந்தது இதுதான்: அந்த சிரியா நாட்டவரான, இபுராஹிம் கைருல்லா, புனர்ஜன்மம், கனவு விளக்கம், மாயவித்தைகள் போன்ற தமது சொந்து கற்பனைகள் பலவற்றை சமய போதனைகளுடன் சேர்த்து போதித்து வந்தார். அவர் இவற்றையெல்லாம் ஒரு புத்தகமாக எழுதி அதை அச்சிடுவதற்கு அனுமதி கேட்க ஆக்கா நகருக்கும் சென்றார். மாஸ்டர் அவர்கள் அவரை இத்தகைய மூட நம்பிக்கைகளை விட்டுவிடுமாறு கூறினார். அவர் அவ்வாறு செய்து சமயத்தை மட்டும் ஒழுங்காக போதிப்பாரேயானால் அவர் ஒரு முன்னனி போதகராக திகழ்வதற்கு வாய்ப்புள்ளது எனவும் கூறினார். ஆனால் அவர் அமெரிக்கா திரும்பி அப்புத்தகத்தை வெளிட்டார். நம்பிக்கையாளர்கள் இடையே ஒரு பிளவு ஏற்பட்டது; அப்பிளவை சரிசெய்ய மிர்சா அவர்களும் நானும் அனுப்பிவைக்கப்பட்டோம்.

சிக்காகோவில் நாங்கள் அசாடுல்லாவைச் சந்தித்தோம். அவர் அமெரிக்கவுக்கு எகிப்து நாட்டைச் சார்ந்த மிகவும் பற்று நிறைந்த இரு நம்பிக்கையாளர்களான ஹாஜி அப்துல்-காரிம் மற்றும் ஹாஜி மிர்சா ஹசான்-இ-குராசானி எனப்படுவோருடன் வந்திருந்தார். அவர் நன்கு அறிமுகமான ஒரு பொதகராக இருந்த போதிலும், கனவு விளக்கங்களும் மூட நம்பிக்கைகளையும் அவர் நம்பிக்கையாளர்களிடையே பரப்பிக் கொண்டிருந்தார். நம்பிக்கையாளர்கள், மிர்சா அபுல்-பஃடல் அவர்களோடு சிறிது பேசிய பிறகு அவர் ‘கடின சித்தமும் பகுத்தறிவு வாதமும்’ மிக்கவரென கூறினர். அசாடுல்லா ஆன்மீகமானவர், அவர் தங்கள் கனவுகளையெல்லாம் விளக்குகிறார் எனக் கூறினர். அவர்கள் மிர்சா அவர்களின் அரைக் கதவைக் கடந்து அசாடுல்லாவின் அரைக்கே செல்வர். அவர்கள் ஆவியினால் வழிகாட்டப்பட்டதாகவும், அல்லது அசரீரி ஒன்று அவர்களை தங்கள் சக நம்பிக்கையாளர் ஒருவர்பால் ஜாக்கிரதையாக இருக்கும்படி எச்சரித்ததாகவும் சொல்வர். (மிர்சா அவர்கள் இவர்களை பேயோட்டிகள் என அழைத்தார்)

இந்த மாயஜாலங்கள் யாவும் அன்பரிடையே ஒரு பிளவையே உண்டாக்கும் என நாங்கள் நினைத்தோம். அவர்களில் பலர் சமய நம்பிக்கையில் இன்னும் உறுபடுத்தப்படாமல் இருந்தனர். நாங்கள் அவ்விஷயத்தைக் கலந்தாலோசித்து பின்வரும் வழியை பின்பற்ற முடிவு செய்தோம்: யாராவது எங்களிடம் வந்து, ஆவியினால் ஒரு காரியத்தை புரிய வழிகாட்டப்பட்டதாகக் கூறினால், சர்வலோக ஆவியே இன்று பஹாவுல்லாவிடம் வெளிப்பட்டுள்ளது, என நாங்கள் கூறினோம். உங்களுக்கு அசரீரியான காட்சிகள், அல்லது அனுபவங்கள் ஏதேனும் ஒரு காரியத்தை செய்யச் சொல்வது போல் தோன்றினால், அதை பஹாவுல்லாவின் வெளிப்பாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கும்படி கூறினோம். அச்செயல் சமய போதனைகளுக்கு ஒப்ப இருந்தால் அது உண்மையான வழிகாட்டுதலாகும், இல்லையேல் அது வெறும் கனவே.’

சிக்காகோவில், மிர்சா அவர்கள் வாரம் மூன்று வகுப்புகள் நடத்தினார். அதோடு நாங்கள் இருவரும் மேசனிக் மண்டபத்தில் வாரம் ஒரு முறையும் போதித்தோம். கிழக்கத்திய பஹாய் போதகர்களுக்கான மையமாக விளங்கிய எங்களது இல்லம், மேற்கு மொன்ரோ வீதியில் இருந்தது. அங்கு நாங்கள் சந்தித்த உறுதியான பக்திமிகுந்த நம்பிக்கையாளர்கள், தோர்ன்டன் சேஸ், அவரது செயலாளர், ஜெர்ட்ருட் புய்கெமா, குமாரி நாஷ், டாக்டர் பார்ட்லட், டாக்டர் தாட்சர், ஆர்த்தர் அக்னியு, திரு லேய்ஷ், அல்பர்ட் வின்டஸ்ட், திருமதி பிரிட்டிங்காம், திரு திருமதி சார்ல்ஸ் ஐயோவாஸ், கிரீன்லீஃப் எனப்படும் சிறந்த வழக்குறைஞரும் அவரது மனைவியும் ஆவர். அப்துல் பஹாவின் கடித வழி கட்டளையின் பேரில் திரு பீட்டர் டீலி அலபாமாவின் பேஃர்ஹோப்பில் இருந்து மிர்சாவுடன் சமய தீர்க்கதரிசனங்கள் மற்றும் அதன் பிற அம்சங்களை கற்க வந்து சேர்ந்தார்.

அமெரிக்காவின் முதல் பஹாயான திரு தோர்ன்டன் சேஸ் அவர்களைப் பற்றிய எனது முதல் ஞாபகம், எங்கள் வீட்டிற்கு எதிரே இருந்து ஒரு மூலை மருந்துக் கடைக்கு என்னை அழைத்துச் சென்று நான் மிகவும் வெறுத்த கொக்கக்கோலா பானத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதுதான். இது மருந்து, என நான் அவரிடம் கூறுவேன். ‘இல்லை,’ ‘இது நல்லதொரு பானம்; நீர் கண்டிப்பாக இதை விரும்பி அருந்தப் போகிறீர்,’ என அவர் கூறுவார். அவரது கூற்று தற்போது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.

என் தந்தையாகிய, ஆரம்ப கால நம்பிக்கையாளர், ‘அப்துர்-ரஹீம் காஃன், தெஹரானின் நகர முதல்வராகவும், காவல் துறை தலைவராகவும் இருந்தபோது மிர்சா அவரை நன்கு தெரிந்து வைத்திருந்தார். ஒரு நாள் அவர் பின்வரும் கதையைக் எனக்குக் கூறினார்: அவர், மிர்சா அபுல்-பஃடல், சமயத்தை ஏற்றக்கொண்ட போது, உற்சாகத் தீயில் மிதந்து கொண்டிருந்தார். சாயங்காலங்களில் அவர் அருகிலிருந்த ஒரு காப்பிக் கடைக்குச் சென்று அங்கு மாடத்தைப் போன்றிருந்த ஓரிடத்தில் அமர்ந்து, பகிரங்கமாக சமயத்தைப் போதித்தார். ஒரு நாள் கிருஸ்துவ புரடஸ்ட்டன் பிரிவைச் சேர்ந்தவரும் தெஹரான் புரட்டஸ்டன் மிஷனோடு தொடர்புகொண்டவருமான ஓர் ஆர்மீனியர், அக்காப்பிக் கடைக்குள் நுழைந்து பஹாவுல்லாவைக் குறித்து மிகவும் தரக் குறைவாக ஏதோ கூறிவிட்டார். அதைக் கேட்டுத் தன் வசமிழந்த மிர்சா அவர்கள் கீழே குதித்து அந்த ஆர்மீனியரைத் தாக்கிவிட்டார். வெளிநாட்டுத் தூதரக வாரியத்திடம் அந்த மனிதர் பிராது ஒன்றை சமர்ப்பித்தார். அவர்கள் அதை காவல் துறையினரிடம் அனுப்பி மிர்சா அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வற்புறுத்தினர். என் தந்தையாகிய கலாந்தர், ‘இவ்வித பிரச்சினைகளை நானே தீர்ப்பதுதான் நலம்,’ எனக் கூறினார். அவர் மிர்சாவை தமது பாதுகாப்பில் வைத்தார்; அவர் புரிந்தது மிகப் பெரிய குற்றம் எனக் கூறினார்; மிர்சாவின் சமயநம்பிக்கையை மிகவும் பாராட்டுவதாகக் கூறினார், ஆனால் காலம் மிகவும் ஆபத்தானதாக இருப்பதால் எல்லோரும் மிகவும் ஜாக்கிரதையாக காட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் எனக் கூறினார். அவர் மிர்சாவை தமது காரியாலயத்திலேயே விட்டுவிட்டு அந்த ஆர்மீனியரை அழைத்து வர ஆளனுப்பினார். அவர் வந்தவுடன், “சிறிது நாட்களுக்கு முன் நமது மன்னர் கத்தோலிக்க சமயப்பணி மன்றத்தை எவ்வாறு மூடினார் என்பது உமக்கு ஞாபகத்தில் இருக்கின்றதா?” என வினவினார். மிர்சா அவர்கள் இந்த நாட்டு மதகுருமார்கள் மத்தியில் எவ்வளவு உயர்ந்த ஸ்தானம் வகிக்கிறார் என்பதை உமக்குத் தெரியும். மிர்சா அவர்கள் மேல் சாற்றப்படும் எந்த குற்றச்சாட்டும் மன்னரை கோபம் கொள்ளச் செய்வதோடு, அவர் உமது புரடெஸ்டன்ட் சமயப் பணி மன்றத்தையும் இழுத்து மூடிவிடுவார், நீர் உமது வேலையையும் இழக்கப் போகின்றீர். நீர் இப்போது எதை விரும்புகிறீர்? நான் மிர்சா அவர்களை தண்டிப்பதா அல்லது நீர் உமது வேலையை தக்க வைத்துக் கொள்வதா?” குற்றச்சாட்டுகள் அவசரத்துடன் வாபஸ் பெறப்பட்டன.

ஒரு நாள் மிர்சா அவர்கள் என்னை கூப்பிட்டு அனுப்பி என்னுடன் மிகவும் பனிவுடன் பேசினார். என் பின்னனியையும் குடும்பத்தையும் நன்குணர்ந்துள்ள அவர் மிகுந்த தயக்கத்துடனேயே ஒரு வாக்குறுதியை என்னிடமிருந்து பெற விரும்புவதாகக் கூறினார்: அதாவது சமயம் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் நான் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கலாம், ஆனால் அவரது தனிப்பட்ட விவகாரங்களில் நான் தலையிடக் கூடாது. அதற்கு நான், ‘மிர்சா அவர்களே, என் குடும்பத்தை உமக்கு நன்கு தெரியும், அதன் அங்கத்தினர்கள் எவருமே மகிமை மிகுந்த ஒருவரான உமது தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடப்போவதில்லை. ‘எப்படியாயினும் நீர் வாக்குறுதி தாரும்,’ என அவர் வற்புறுத்தினார். நானும் வரப்போவது தெரியாமல் வாக்குறுதி அளித்தேன்.
1901 டிசம்பர் மாதம், நாங்கள் இருவரும் வாஷிங்டன் சென்றோம். அங்கு லோரா பார்னி அவர்கள் எங்களுக்கு தங்குமிடம் ஏப்பாடு செய்திருந்தார். எங்கள் அறைகள் நான்கு மாடி கட்டிடம் ஒன்றின் நான்காவது மாடியில் இருந்தன. மிர்சாவுக்கு இரைச்சல்கள் தாங்க முடியவில்லை; இதனாலேயே நாங்கள் வாஷிங்டனில் தங்கியிருந்த நான்கு வருட காலங்களில், இரைச்சல்களில் இருந்து தப்பிக்க அவர் பல முறை அவர் தமது தங்குமிடங்களை மாற்ற வேண்டியிருந்தது. அவர் தாம் எழுதிக்கொண்டிருந்த நூலில் கவனம் செலுத்த வேண்டியிருந்தபடியால், நாய்களோ அல்லது பிற குழப்பங்களோ (ஆனாலும் அவர் பூனைகளை விரும்புவார்) நிறைந்த மாடியின் கீழ்த்தளம் அவருக்கு பெரும் திகிலளித்தது.

அவரது உணவு கட்டிட உரிமையாளரினால் வழங்கப்பட்டது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல மிகக் குறைந்த அளவே உணவு உட்கொண்டார் என்பது எனக்கு தெரிய வந்தது. நாள் முழுவதும் கிழக்கத்திய தேநீர் வகை ஒன்றை தயாரித்து, அதுவும் நீரைப்போல, குடித்துக் கொண்டிருப்பார்; அவர் எகிப்திய சுருட்டு வகை ஒன்றை புகை பிடித்து வந்தார் (ஆனால் நண்பர்கள் அதை கண்டித்ததால் அவர்களுக்குச் சோதனையாக இருக்கக் கூடாத என விட்டுவிட்டார்); எப்போதாவது மெல்லிய பிஸ்கட் ஒன்றை உண்பார். அதனால் தாங்க முடியாத அந்த குளிரிலும் அன்னியமான சூழ்நிலையிலும் அவர் மிகவும் இளைத்துப்போக ஆரம்பித்தார். மாஸ்டர் அவர்களின் வேண்டுகோளின்படி அவர் எழுதிக்கொண்டிருந்த நூலை தொடர்ந்து எழுதும்படி நான் வற்புறுத்தி வந்தேன்; ஆனால் அவர் அதை செய்யக்கூடிய உடல் நிலையில் இல்லை என்பது தெரிந்த போதும், நான் அவருக்கு அளித்த வாக்குறுதியின்படி நான் எதிலும் தலையிட முடியவில்லை.

மிர்சா அவர்கள் சதா பிரார்த்தனையிலேயே லயித்திருப்பார். அவரது காலை, நண்பகல் மற்றும் மாலை வேளைகள் பிரார்த்தனையிலேயே கடந்துவிடும். ஒரு முறை நான் அவரது அறைக்குச் சென்ற போது கதவு தாழிடப்பட்டிருந்தது. தட்டினேன் பதில் இல்லை. பிறகு கதவை உடைத்து உட்சென்ற போது, மிர்சா அவர்கள் தமது பிரார்த்தனையின் போது பிரக்ஞை இழந்துவிட்டதும், அவரது வாய் கிட்டித்துப்போயிருந்ததும் தெரிந்தது. அவர் அவ்விதம் மிகவும் கடுமையாகவும் உளம்இளகியும் வேண்டியதன் காரணம், அவர் இறைவனைப்பற்றி கொண்டிருந்த ஓர் அதி உயர்ந்த எண்ணமும் தம்மைத் தாழ்மையின் சாரமாக நினைத்ததுமே ஆகும். தெய்வீகக் கருனையினால் அருளப்பட்ட மிர்சாவின் ஜனனம், “உனது தேவரின் முகத்திலிருந்து பிரகாசிக்கும் கதிர்களின் ஒளியைத் தவிர வேறெதுவுமே காணக்கூடாத,” இந்நாளில் ஒரு பெரும் பாவம் என்பதே அவருடைய நம்பிக்கையாக இருந்தது.  ஒரு புனித ஆன்மாவாகிய நீர் இவ்விதம் அழுவதா? என நான் அவரிடம் கூறுவேன். நீரே ஒரு பாவி என்றால் நாங்கள் எல்லோரும் என்ன கதிக்கு ஆளாவது எனக் கூறினேன். அவர்: “நாம் பஹாவுல்லாவை வாழ்த்துவதற்கு தேவைப்படும் ஒரு மொழியாக பக்தியின் அளவை நீரும் அறிந்து கொள்ளும் நாள் வரும்”, என அவர் கூறினார்.

இறுதியில், மிர்சா மரணத்தோடு போராடிய காலம் வந்தது. மிர்சா அவர்கள் பெரும் மதிப்பு வைத்திருந்த லோராவின் தாயாரான பார்னி அவர்களிடம் நான் சென்றேன். நான் மிர்சாவிடம் கொடுத்த வாக்குறுதியைப் பற்றிக் கூறி, அதை அவர் ஏன் அப்போது வாங்கிக்கொண்டார் என எனக்குத் தெரியாது எனவும் கூறினேன்; அவர் அப்போதே ஒரு கோழியை சமைத்து, டெ சால்ஸ் வீதியில் இருந்த அந்த வீட்டிற்கும் கொண்டு வரப்படச் செய்தார். வந்தவுடன், விடுதித் தலைவியிடம் மிர்சா அனுப்பப்படும் உணவை ஏற்கிறாரா இல்லையா என வினவினார். ‘இல்லை, உணவுக்கு பணம் கொடுக்கிறார் ஆனால் அதைச் சாப்பிடுவதில்லை,” என பதில் வந்தது. அவர் பிறகு மேலே மிர்சாவிடம் சென்றார். நீங்கள் உணவு ஏதும் உண்பதில்லை என கீழே என்னிடம் கூறுகிறார்கள். ஒழுங்காக சாப்பிடாமல் நீர் உமது புத்தகத்தை எவ்வாறு எழுதப் போகிறீர்? எனக் கேட்டார். கண் புறுவத்திற்கு கீழே இருந்து அவரது சிறிய கூரிய கரு விழிகள் என்பால் பார்த்தன.

திருமதி பார்னி சென்றவுடன் அவர், ‘நீர் வாக்குறுதி அளித்தீர்,’ எனக் கூறினார்.

விடுதித் தலைவி அவரிடம் கூறினார் என நான் பதிலளித்தேன்.

உமக்கும் அதில் பங்கிருந்தது, என மிர்சா கூறினார்.

நீர் மரணத்தோடு போராடுவதை என்னால் காண முடியவில்லை என நான் கூறினேன்.

நான் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன் என மிர்சா கூறினார்: ஒரு வீட்டைப் பற்றி அதில் 60 வருடம் குடியிருப்பவருக்கு நன்கு தெரியுமா அல்லது அதை அப்போதுதான் அறிந்தவருக்கு நன்கு தெரியுமா? அந்த இருவரில் அந்த வீட்டை யார் நன்கு அறிந்து வைத்திருப்பார்? ‘உண்மைதான், அந்த மனிதர் அதில் 60 வருட காலம் குடியிருந்திருக்கலாம், ஆனால் அவர் அவ்வீட்டை ஒழுங்காக வைத்திருக்காமல் அது இப்போது ஒழுக ஆரம்பித்தும் சுவர்கள் இடிந்தும் குடியிருக்கத் தகுதியில்லாமலும் அல்லவோ போய்விட்டது,’ என நான் கூறினேன்.

மிர்சா சாப்பிடாமல் உடல் நலிவுற்றும், அமெரிக்க உணவையும் வாழ்க்கைைையயும் ஏற்க முடியாமல் இருந்தார்.  நான் அவருக்கு சேவை செய்வதையும் அவர் தடுத்து வந்தார். கடைகளுக்கு சாமான் வாங்க சென்றால் அவர் வாங்கும் பொருட்களைக் கூட தூக்கி வர விடமாட்டார். இறுதியில் பொறுக்க மாட்டாமல் நான் மாஸ்டர் அவர்களுக்கு கடிதம் எழுதினேன். மிர்சாவின் வாழ்க்கைக்கும் வேலைக்கும் ஆன பொறுப்பு என்னால் பொறுக்க முடியாத ஒன்றாக இருந்தது. நிலைமையை உள்ளது உள்ளவாறு விளக்கி புத்தகம் எழுதும் வேலை சுனங்கிவிட்டிருப்பதையும் அப்துல் பஹாவிடம் எழுதினேன். பிரச்சினைக்குத் தீர்வாக மிர்சாவுக்கு உணவு தயாரிக்கவும் அவரது தேவைகளை கவனிக்கவும் ஒரு பார்சி உதவியாளன் இருந்தால் நல்லது எனக் கூறினேன். நான் போர்ட் சைட் வழியாக அமெரிக்கா வந்த போது, அங்கு பதினைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் அஹ்மத் யஸ்டியின் கடையில் வேலை பார்ப்பதைக் கண்டேன். அவன் பெயர் அஹ்மத்-இ-இஸ்பஃஹானி (பின்னாளில் அவன் தனது பெயரை அஹ்மத் சொஹ்ராப் என மாற்றிக்கொண்டான்) அப்பையன் தன்னை அமெரிக்கா அனுப்பி வைக்கும்படி மாஸ்டர் அவர்களை நான் வேண்டிக் கொள்ள வேண்டும் என விண்ணப்பித்தான். இப்போது அவன் இங்கு வந்து மிர்சா கவனித்துக் கொள்ளலாம் என நான் மாஸ்டரிடம் கூறினேன். மாஸ்டர் அவர்களும் அவன் அமெரிக்கா வந்து மிர்சாவுக்கு சேவை செய்தும் பிறகு அவரோடு வீடு திரும்பலாம் எனவும் கூறினார். ஆனால் 1904-இல் மேக்நட் தம்பதியர், திருமதி ஜூலியா கிரன்டி, மற்றும் ஊட்கொக்களுடனும் அவர்களின் மகளுடனும் – மிர்சா நாடு திரும்பிய போது அஹ்மத்-இ-இஸ்பஃஹானி நாடு திரும்பவில்லை. அவன் மாஸ்டர் அவர்கள் 1912-இல் அமெரிக்கா வரும் வரையிலும் வந்து அவரோடு அவனை கிழக்கிற்கு அழைத்துச் செல்லும் வரையிலும் அவன் அமெரிக்காவிலேயே இருந்தான். அப்போதும் அவனுக்கு நாடு திரும்ப விருப்பமே இல்லை.

எப்படியோ எங்கள் வேலை நடந்தது. எங்கள் வகுப்புகள் தவிர்த்து பொருளகத்திற்கு எதிரே இருந்த பழைய கோர்க்கோரன் கட்டிடத்தில் பஹாய் கூட்டங்களில் சொற்பொழிவாற்றுவோம். மிர்சா பேசும் போது நான் அருகே நிற்க, எழுந்து நின்றே சொற்பொழிவாற்றுவார். அவர் இயல்பாகவே சிறந்த சொற்பொழிவாளர்; மிகுந்த ஆர்வத்துடன் அவர் பேசுவார், அவரு பேசும் விஷயத்திற்குத் தகுந்தவாறு அவரது குரலும் மாறும், சில வேளைகளில் உரக்கவும் இருக்கும். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் என் மொழிபெயர்ப்பு அவர் நினைத்தவாறு சரியாக இருக்கின்றதா, தெளிவாக இருக்கின்றதா; என என் உடல் அசைவுகளிலிருந்தும் அது செவிமடுப்போர்களில் என்ன விளைவினை ஏற்படுத்துகிறது என்பதிலிருந்தும் தெரிந்து கொள்வார். சுமார் ஐந்து நிமிடங்கள் பேசிய பின் நான் அதை மொழி பெயர்த்திட தமது பேச்சை நிறுத்திக் கொள்வார்.

ஒரு சிறமான விஷயத்தை விளக்கிடும் போது, அது மனதில் நன்கு பதிந்திட மீண்டும் மீண்டும் அதே விஷயத்தையே பேசுவார். ஒரு நாள் ஒரு இளம் நம்பிக்கையாளர் மிர்சாவிடம் வந்து, ‘மிர்சா அவர்களே, நாங்கள் திறமைசாலிகள்தாம். நீங்கள ஒரு முறை ஒரு விஷயத்தைப் பற்றிக் கூறினால் நாங்கள் அதை கிரகித்துக்கொள்ள முடியும். ஆனால் நேற்று இரவு நீங்கள் பேசியதைப் போன்று அதே விஷயத்தை மீண்டும் மீண்டும் நீங்கள் கூறினால் மக்கள் உங்களையும் எங்களையும் குறை கூறக்கூடும்,’ என்றார். மிர்சா அந்த இளம் பெண்ணுக்கு பனிவுடன் நன்றி கூறினார். ‘இது பேசப்படும் விஷயத்தை மேலும் தெளிவாக்கவே நான் அவ்வாறு செய்தேன்,’ எனக் கூறினார். சரி, இப்போது ஒரு சந்தேகம். நான் நேற்றிரவு எதைப்பற்றி மீண்டும் மீண்டும் கூறினேன்?’ என வினவினார். அந்தப் பெண் சிறிது நேரம் சிந்தித்து விட்டு, ‘எனக்கு ஞாபகமில்லை,’ எனக் கூறினார். ‘அதனால்தான் நான் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் கூற வேண்டியுள்ளது,’ என மிர்சாவும் பதிலளித்தார்.

மிர்சா அவர்கள் ஒரு விஷயத்தை ஆழமாக ஆராய்வதில் நிபுணர் — வாதிடுவோரைச் சுற்றி ஒரு சுவற்றை எழுப்பி அவர்களை அதில் சிக்கிக் கொள்ளச் செய்து, ஒன்று தாம் கூறியவற்றை அவர்கள் ஏற்கவோ அல்லது அவர்கள் அறிவிலிகள் என்பதை ஒப்புக் கொள்ளவோ செய்திடுவார். சகல விதமான பண்டிதர்களும் அவருடன் வாதிடுவதை நான் கண்டேன். ஆனால் ஒரு முறை கூட அவர் தோற்றது கிடையாது. கிருஸ்தவ சரித்திரம், ஐரோப்பிய இறையியல் மற்றும் நுன்பொருள் கோட்பாட்டியல், அல்-அஸ்ஹாரில் அவர் பாண்டித்தியம் பெற்ற விஷயங்கள், ஆகியவற்றை அவர் ஆழக் கற்றிருந்தார். ஒரு முறை ஒரு கிருஸ்தவர் அவரிடம் வந்து நபி அவர்களை கடுமையாகச் சாடினார். அதற்கு மிர்சா: ‘முதலாம் நூற்றாண்டின் யூத மற்றும் ரோமானிய சரித்திர ஆசிரியர்கள் ஒருவர் கூட யேசு பிரானைப் பற்றி குறிப்பிடவில்லை எனவும், பலர் யேசு நாதரின் சரித்திரவாய்மைப் பற்றி சந்தேகப்படுவதாகவும் உங்கள் தலைமைத்துவம் கூறுகின்றது. ஜோசப்ஃபஸின் எழுத்துக்களில் ஏசு நாதர் குறித்து சில கிருஸ்தவர்களால் ஏதோ செருகப்பட்டதாகவும், ஆனால் அந்த ஏமாற்று வேலை பின்னாட்களில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதும் தெரியும். வேறு பலர் முதலாம் நூற்றாண்டிலேயே கிருஸ்தவ சமயம் சீனாவுக்கு பரவியதாகக் கூறும் ஒரு கல்வெட்டை அங்கு புதைத்தனர். ஆனால் அதுவும் ஏமாற்று வேலை என கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இறைத் தூதர் நபியவர்களைப் பொறுத்த மட்டில், அவர் சரித்திரவாய்மை பெற்ற ஏசுவை மட்டும் பிரகடணம செய்யவில்லை, அவரை 30 கோடி மக்கள் ஏற்கவும் செய்தார்; அவர்கள் அவரை ஒரு சரித்திர புருஷராக மட்டும் ஏற்காமல் அவரை இறைவனின் ஆவியாக  (ரூஹுல்லா) ஏற்கவும் செய்தார். இதையெல்லாம் பார்க்கும் போது, நீர் இப்போது சாடிக் கொண்டிருக்கின்றீரே, அந்த முகம்மது அவர்கள் உங்கள் சமயத்திற்கு கிருஸ்தவ சமயப் பிரச்சாரிகளை விட அதிக வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார் என்பது தெளிவாகின்றதல்லவா?
பிரிவினையை ஏற்படுத்தும் எந்த ஒரு உரையாடலையும் மிர்சா ஊக்குவிக்க மாட்டார். ஒரு முறை ஒரு அன்பர் அவரிடம் வந்து வேறொரு அன்பர் சமயத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறினார். மிர்சா அதை கவனத்துடன் கேட்டார். பிறகு தமது பதிலை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்குமாறு என்னிடம் கூறினார். ‘பஹாவுல்லாவே வாக்களிக்கப்பட்ட தெய்வீகப் படையினரின் நாயகர் என்பதை நீர் நம்புகிறீரா?’

‘ஆமாம்’.

‘நல்லது, அவர்தான் நாயகர் என்றார், இவர்கள் அவரது படையினர். அவரது படையினரைப் பற்றி குற்றம் பேசுவதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கின்றது?’

மிர்சா அவர்கள் பஹாய் நிரூபணங்கள் எனும் அந்த நூலை எழுதச் செய்வதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. ஒவ்வொரு வரியையும் வாக்கியத்தையும் பக்கத்தையும் அவரிடமிருந்து பறிக்க வேண்டியிருந்ததாகவே எனக்குத் தோன்றியது. அமெரிக்க நண்பர்கள், அது ஏன் நிறைய அறிமுகங்களையே கொண்டுள்ளது என கேட்கின்றனர். கிழக்கத்திய பண்டிதர்களின் மரபு முறை மட்டும் அல்ல இது, மிர்சா அதோடு சேர்த்து மேலும் ஒரு பெரிய நூலை எழுதத் திட்டமிட்டிருந்தார். பொங்கும் அவரது அறிவுடன் ஒப்பிடுகையில், இங்கு நாம் பெற்றிருப்பது சொற்பமே. மாஸ்டர் அவர்கள் மிர்சா அவர்களை நூலை எழுதச் சொல்லியும் என்னை அதை மொழி மாற்றம் செய்யும்படியும் கூறியிருந்தார். மிர்சா அவர்களும், மோசமடைந்து கொண்டே போன அவரது உடல் நலத்தையும் பாராமல், நூலை முடிக்காமல் அமெரிக்காவை விட்டு அகலவே இல்லை. அவர் மிகவும் கவனம் நிறைந்த, நுட்பத் திறமை வாய்ந்தவர். இருந்தும் எழுத்துப் பிழைகள் இல்லாமலும் எந்த எழுத்தையும் அடிக்கமாலும் விரைவாகவே எழுதுவார். அவர் தமது தொடையின் மேல், பாரசீக முறையிலேயே, காகிதத்தை வைத்து நாணல் எழுத்தானி கொண்டு எழுதுவார்.

மிர்சா உண்மயிலேயே ஒரு தெய்வீகப் புலவர். தாம் இகான் நூலை பகுத்தறிவுக் கண்களுடன் 17 முறை படித்ததாகவும், ஆனால் அதன் வார்த்தைகள் அர்த்தமில்லாத வார்த்தைக் கோர்வைகளாகவே அவருக்குத் தென்பட்டதாக என்னிடம் கூறினார். ஆனால் பிறகு அவற்றை ‘பற்றுறுதியுடன்’ படித்த போது கடந்த கால சமய நூல்கள் அனைத்தின்  பூட்டுகளையும் திறக்கக்கூடிய சாவியை அதில் கண்டதாகக் கூறினார். இவ்வித விஷயங்களைப் பற்றி அவர் எழுதியிருந்த ‘பஃராய்ட்’ எனும் நூல் இன்னும் மொழி மாற்றம் செய்யப்பட வில்லை. 1914-இல் மிர்சாவின் மறைவுக்குப் பிறகு வாஷிங்கடன் நம்பிக்கையாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘அவரது ஆசீர்வதிக்கப்பட்ட இதயம், தகித்திருக்கும் ஒவ்வொருவரின் தாகத்தையும் தீர்க்கவல்ல,
மெய்மையும் குறிப்பிடத்தக்கவையும் நிறைந்த ஊற்றாகும்.’1 நூல் எழுதும் காரியம் மெதுவாகவே நகர்ந்தது எப்போதுமே அவருடையத் தவறாக இருந்ததில்லை. வகுப்புகள்–கூட்டங்கள்–அளவுக்கதிகமான விருந்தினர்கள் சந்திப்பு என நிறைய காரியங்ளை நாங்கள் கவனிக்க வேண்டியிருந்தது. அவரைச் சந்திக்க வருபவர்கள் அவருக்கு பூக்களும் பழங்களும் கொண்டு வந்தால் நிறையவே கோபப்படுவார். ‘இவற்றை இவர்கள் ஏன் எனக்காக கொண்டு வருகின்றனர்?’ எனக் கேட்பார். ‘நான் பஹாவுல்லாவின் அடியார்க்கு அடியான்தானே! எனக் கூறுவார். அவரது இத்தகைய பனிவின் அடிப்படையில் எழும் வார்த்தைகளை நான் மொழி பெயர்க்க மாட்டேன், ஏனெனில் அவற்றை கர்வத்தின் வெளிப்பாடுகள் என விஷயம் அறியாதவர்கள் நினைக்கக்கூடும். நானும் பழம் மற்றும் பூ கொண்டுவந்தவர்களுக்கு நன்றி கூறிவிட்டு, மிர்சா கூறியதை ஏன் மொழிபெயர்க்கவில்லை என்பதையும் அவரிடம் விளக்கிவிடுவேன்.

இரயில்களிலும் பொதுவிடங்களிலும் மக்கள் மிர்சாவை கவனிப்பார்கள். அவரும் அவர்களைத் தமது கூர்மையான, ஆழப் பதிந்த, கருமையான கண்களைக் கொண்டு பார்த்து புன்னகைப் புரிவார். எல்லா விஷயங்களையும் மிர்சா நுட்பமாக கவனித்தைப் போன்று கவனித்தவர் எவரையும் நான் கண்டதில்லை. அவர் எப்போது தவறமாட்டார். ஒரு முறை நான் சாமுத்திரிகா லக்ஷனங்கள் மூலம் ஒருவரது இயல்பைக் கண்டறியும் முறையைப் பற்றி லவாட்டர் எனும் ஜெர்மானியர் எழுதிய ஒரு நூலைப் படித்துக் கொண்டிருந்தேன். கீய்த் கூட அது ஒரு விஞ்ஞான முறைப்படியான விஷயம் அல்லவென கைவிட்டிருந்தார். அந்த வருடம் எமர்சனைப் போல் தோற்றமளித்த ஒரு முதியவரை கிரீன் ஏக்கரில் கண்டேன்; அவரது கடைவாய் சிறிது உறுதியற்று இருந்தாலும் அவருக்கும் எமர்சனைப் போலவே உயர்ந்த நெற்றியும் நீண்ட நாசியும் இருந்தன. லவாட்டரின் கூற்றுப்படி இவர் ஒரு பெரும் அறிவாளியாகவே இருக்க வேண்டும் என நான் மிர்சாவிடம் கூறினேன். மிர்சா என்னைப் பார்த்து புன்னகைத்து, ‘ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கக்கூடிய ஞானம் கூட இவருக்கு இல்லையே,’ என்றார். ‘உங்களுக்கு எப்படித் தெரியும்?’ ‘நானும் சாமுத்திரிகா லக்ஷனம் படித்துள்ளேன்,’ என்றார். ‘இருந்தாலும் என் சாமுத்திரிகா லக்ஷனம் பற்றிய எனது அறிவுக்கு இவர் கூர்மையான அறிவும் ஞானமும் பெற்றவராகவே இருக்கவேண்டும்,’ என நான் கூறினேன். அடுத்த நாள் காலை, எங்கள் வகுப்பிற்கு பிறகு அந்த மனிதர் ஒரு கேள்வி கேட்டார். அக்கேள்வியிலிருந்தே அவரது ஞானம் துல்லியமாக வெளிப்படையாகி, அவர் குறைந்த அறிவு படைத்தவரே என்பதும் தெரிந்தது.

அமெரிக்காவில் நமது சமயத்திற்கு மிர்சா என்ன செய்துள்ளார் என்பதை எதிர்காலம் தீர்மாணிக்கவேண்டும். எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியையே நான் இங்கு வெளிப்படுத்தியுள்ளேன்; எவருமே அறியாத அவரது பயணங்களின் ஒரு சில பகுதிகளையே நான் எழுத்தில் வடித்துள்ளேன். மிர்சா அவர்கள் நாடு திரும்பியதும், அவர் விட்டுச் சென்ற காரியங்களை நான் தொடர வேண்டும் என மாஸ்டர் அவர்களின் கட்டளையினால் நான் எப்படி கதிகலங்கிப் போனேன் என்பதை எதிர்காலத்திலேயே மக்கள் உணர முடியும்.

அவர் மறைந்து பல காலங்கள் ஆகிவிட்டன. அப்துல் பஹாவும் நம்பிக்கையாளர்களும் அவரது மறைவினால் துக்கித்தனர். ஆனால் நான் அவரைக் காண்கின்றேன், அவர் இங்கு என் முன் இருப்பது போலவே தோன்றுகிறது. நல்ல உயரம், மெலிந்த தேகம், வெள்ளைத் தலைப்பாகை, இளம் பழுப்பு வண்ணத்தில் உடை. கலைத்திறன் மிகுந்த உணர்வுமிக்க ஆனால் அதே வேளை அறிவுத் திறனும்  ஆக்கமும் மிகுந்த அழகிய கரங்கள். உயர்ந்த நெற்றி, அசாதாரணமாக உயர்ந்திருந்த கண்ண எலும்பு, துறவியின் பார்வை, ரோஜா வாசனை.  மற்றும் அந்த சிறிய மிகக் கருமையான, கூர்ந்த கண்கள்.

ஆமாம், ஆனால் அவரது உண்மையான உயர்வைக் காண வேண்டுமென்றால் அவரை அப்துல் பஹாவின் முன்னிலையில்தான் பார்க்க வேண்டும். அந்த முன்னிலையில், அங்கு மிர்சாவின் அறிவு அவரை ஒன்றுமில்லா நிலைக்கு கொண்டு சென்றுவிடும். பரந்த சமுத்திரத்தின் கரைகளிலே அங்கு அவரை ஒரு சிறு கூழாங்கல்லாகவே காண்போம்.

படைப்புச்சக்திமிக்க இறைமொழி


படைப்புச்சக்திமிக்க இறைமொழி
(டாக்டர் பீட்டர் கான்)

அவைத்தலைவி அவர்களே, நண்பர்களே,

பஹாய்களுக்கு ஒரு புனித ஸ்தலமாக விளங்குகின்ற இந்த இடத்தில், இப்புனித கட்டிடத்தின் மண்டபத்தின் கீழ் ஒன்றுகூடியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த இனிய மாலைவேளையில், பல பழைய புதிய நம்பிக்கையளர்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.

டாக்டர் கார்னி அவர்கள் அறிவித்ததைப்போன்று “படைப்புசக்திமிக்க இறைவார்த்தையின்” பரிபூரண மாற்றத்தின் சக்தி எனும் பொருள் பற்றி நான் பேசவிருக்கிறேன். பஹாவுல்லாவின் திருவெளிப்பாடு தன்னுள் பல புதிர்களை உள்ளடக்கியிருக்கின்றது என்றுதான் எனக்கு தோன்றுகின்றது, அதைப்பற்றி நமக்கு சிறிதளவே தெரிந்துள்ளது. கடவுள் அவதாரப்புருஷரின் வாயிலாக வருகின்ற திருவெளிப்பாட்டை புனித வாசகங்கள் விளக்குகின்றன. புனித வாசகங்கள் என்று நாம் கருதுகின்ற அந்த திருநூல்களின் ஒரு சில பகுதிகளே நமக்கு தெரிந்தவை.

உதாரணமாக, திருவெளிப்பாடு இறைதூதர்மீது பொழியும்போது, அந்த அருள் மழை மாபெரும் வேகத்தொடச்சியாகவும், பெரும்பாலும் இறைதூதரின் சுய விருப்பத்திற்கப்பாற்பட்டே சம்பவிக்கின்றது என நமக்குத் தெரியும். அத்தகைய அருள் மழை பொழியும்போது, பஹாவுல்லாவுக்கு அருகில் இருந்து அந்த திருவெளிப்பாட்டின் வரவைக் கண்ணுற்றவர்கள் அவர்மீது அந்த அருள் மழை எப்படி பொழிந்தது என்பதை விவரித்துள்ளனர் – பஹாவுல்லாவினால் வெளியிடப்பட்ட இறைவார்த்தைகள் பெருக்கெடுத்த வேகத்திற்கு ஈடுகொடுத்து எழுத முடியாமல் எப்படி அவரது செயலாளர்கள் திணறினார்கள் என்பதையெல்லாம் அவர்கள் விவரித்துள்ளனர். ஆக, நமக்கு அந்த திவ்விய அருள்மழையைப் பற்றி ஒன்று நிச்சயமாக தெரிகின்றது. அதாவது, அந்த அருள் மழை கடும் வேகத்தில் சம்பவிக்கின்றது. அந்த சம்பவத்தின்போது இறைமொழிகள் மடைதிறந்த வெள்ளம்போல் பிரவாகமெடுத்து அவை மனதிற்கு சவால் விடுக்கின்றன. நூற்றாண்டு காலங்களுக்கு தியானத்தின் மூலாதாரமாகவுள்ள மானிட ஆவியினை அந்த இறைமொழிகள் அதிர்ச்சியுறச் செய்கின்றன. ஆக, அந்த அருள் மழையின் ஒரு தன்மை கடும் வேகமாகும்.

அந்த திருவெளிப்பாட்டின் அருள் மழையோடு சம்பந்தப்பட்ட சக்தியான அந்த அருள்மழையின் இன்னொரு தன்மை. திருவெளிப்பாட்டின் அருள்மழை பொழிந்ததை நேரில் கண்டவர்கள் அந்த அருள்மழையில் ஒரு மாபெரும் சக்தியை உணர்ந்ததாக விவரித்துள்ளனர். ஒரு மாபெரும் ஒளியினைக் கண்டதாக சிலர் சொல்லியுள்ளனர். வேறுசிலர் அதிர்ச்சியுற்றுவிட்டனர். ஈரான் நாட்டு உயிர்த்தியாகிகள் குடும்பம் என அழைக்கப்படும் வர்க்கா குடும்பத்தைச் சேர்ந்த வர்க்கா பஹாவுல்லாவின் முன்னிலையில் அனுமதிக்கப்பட்டபோது மயக்கமுற்று வீழ்ந்துவிட்டார். இந்ந அதிர்ச்சி, சக்தி எல்லாம் பஹாவுல்லாவின் சமயத்தில் மட்டும்தான் உண்டு என்பதற்கில்லை. முகம்மது நபியின் மீது திருவெளிப்பாடு பொழியப்பட்டபோது மாபெரும் சக்தி உணரப்பட்டதை இஸ்லாம் சமயத்தில் காண்கின்றோம். ஒருமுறை அண்ணல் முகமது நபி அவர்கள் மீது திருவெளிப்பாடு பொழியப்பட்டபோது அவர் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்தார். அந்த திருவெளிப்பாட்டின் சக்தியின் தீவிரத்தால் அந்த ஒட்டகம் மண்டியிட்டுச் சாய்ந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் விவரித்துள்ளனர். ஆக, அந்த அருள்மொழியின் இன்னொரு தன்மை மாபெரும் சக்தி என்பது நமக்கு தெரிகின்றது.

இந்த திருவெளிப்பாட்டின் மூன்றாவது தன்மை என்னவென்றால், அது பொழியப்படும் இறைதூதர் மீது ஏற்படும் அதன் பாதிப்புதான் அது. திருவெளிப்பாடு அண்ணல் முகமதுநபியின் மீது பொழிந்தபோது, அந்த அருள் மழையின் வேகத்தொடர்ச்சியின் தீவிரத்தால் எப்படியெல்லாம் அந்த அண்ணல் தமது போர்வையால் தம் முகத்தை மூடிக்கொண்டார் என்பதையெல்லாம் அங்கே சூழ்ந்திருந்தவர்கள் விவரித்துள்ளனர். அத்தகைய ஒரு சம்பவத்தின்போது முகமது நபியின் தோழர் ஒருவர் அவரது போர்வையை விலக்கிப் பார்த்தபோது அந்த அண்ணலின் திருமுகம் வேர்வை வெள்ளத்தில் இருந்ததைக் கண்டார். அந்த திருமுகம் செஞ்சிவப்பாக இருந்தது. திருவெளிப்பாட்டின் அதிதீவிரத்தால் அவர்தம் நெற்றியின் நரம்புகள் புடைத்து பெரிதாகி இருந்தன.

இம்மாலையில் இங்கு வந்திருக்கும் அன்புமிகு எட்னா ட்ரூவின் தாயாரும், தெய்வ சமயத்தின் திருக்கரமுமான கொரீன் ட்ரு அவர்கள், தாம் மாஸ்டர் அப்துல் பஹா அவர்களை சந்தித்த நிகழ்ச்சியை ஒருமுறை விவரித்துள்ளார். பஹாவுல்லாவின் திருவெளிப்பாட்டின் அருள்மழை பொழிந்த ஒரு நிகழ்ச்சியையும், அதனால் அவர் மீது ஏற்பட்ட பாதிப்பையும் அப்துல் பஹா எடுத்துச் சொல்லியுள்ளார். அந்நிகழ்ச்சி குறித்து அப்துல் பஹா இப்படிச் சொல்லியுள்ளார் “ஆசீர்வதிக்கப்பட்ட பேரழகான பஹாவுல்லா தெய்வீக போதனையைப் பறைசாற்றிக் கொண்டிருந்த நாட்களில் அவர் மீது தெய்வீகத் திருவாக்கு சதா பொழிந்து கொண்டிருந்தது. அந்த தெய்வீகத் திருவாக்கின் பாதிப்பால் இதயம் பெரும் துடிப்புக்கு உள்ளாகி அவரால் மிகவும் சிறிதளவு உணவைத்தவிர வேறெதுவுமே சாப்பிட இயலாதிருந்தார். இறைதூதரின் மீது அந்த அருள் மழையின் பாதிப்பு இப்படித்தான் இருந்தது. அவரது இதயம் பெரும் துடிப்புக்கு உள்ளாகி அவரது நாளங்களுக்குள் இரத்தம் மிக வேகமாக பாயும். அவரது உடல் கடும் உதறலுக்கு உள்ளாகி, பாதிக்கப்பட்டு அவரால் எதுவுமே சாப்பிட இயலாமல் போய்விடும்.

ஆக, திருவெளிப்பாடு பொழியும்போது ஏற்படும் ஒரு சிறு பகுதிதான் இந்த பாதிப்புக்கள். திருவெளிப்பாட்டு அருள் மழை என்பது ஒரு புதிரான ஜீவ அம்சம் என்பதைக் குறிக்க இந்த பாதிப்புக்கள் போதுமானவையே. கடும் உழைப்பின் பயனாகவும், மறு சரி பார்ப்புக்களினாலும், மாபெரும் சிந்தனை செலவழிப்புக்களினாலும், மிக மெதுவாகவும் உருவாக்கப்படும் மனிதனுடைய எழுத்துக்கோர்வையிலிருந்து இந்த இறை வாசகங்கள் வேறுபட்டவை என்பதைக் காட்ட அந்த பாதிப்புக்கள் போதுமானவையே. மாபெரும் சக்தியோடு இறைதூதரின் மீது பொழிந்து அந்த திருவுடலின் மீது பாதிப்பு ஏற்படுத்தும் திரு வெளிப்பாட்டு அருள்மழை என்பது ஒரு திடீர் சம்பவமாகும். ஆகவே, தேசிய ஆத்மீக சபை இந்த மாலையில் எனக்கு விடுத்த அழைப்பை ஏற்று இக்கருப்பொருள் பற்றி நான் பேசவிருக்கின்றேன். அந்தக் கருப்பொருள் பற்றி போசுவதற்கு முன்பதாக சமயத்தின் மூன்று அடிப்படை கோட்பாடுகளை விவரிக்க விரும்புகின்றேன். முதலாவது, படைப்பின் இயல்பு. இரண்டாவது காந்தசக்தி எனும் கோட்பாடு. மூன்றாவது, பரிணாமம் எனும் கோட்பாடு. தெய்வீகத் திருவெளிப்பாட்டை போதுமான அளவுக்கு விளக்கிட எந்தவொரு முயற்சிக்கும் அடிப்படை இந்த கோட்பாடுகள்தான் என நான் நம்புகின்றேன். இந்த அடிப்படைக் கோட்பாடுகள் நமது சமயத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படை கோட்பாடுகள் ஒவ்வொன்றைப்பற்றியும் சுருக்கமாக பேசிவிட்டு அந்த கோட்பாடுகள் எப்படி திருவெளிப்பாட்டுச் செயல்முறைக்கு பொருந்துகின்றன என்பதை எடுத்துக்காட்ட விரும்புகின்றேன்.

முதலாவதாக, படைப்பின் தன்மை நாம் வாழும் இவ்வுலகில் படைப்புச் செயலின் இரு ஜீவ அம்சங்கள் ஒன்றாகக் கலந்துள்ளன என அப்துல் பஹா அவர்கள் பல இடங்களில் அதனைப் பற்றி பேசும் பொழுது குறிப்பிட்டுள்ளர். அவற்றில் ஒன்று ஜடப் பொருள் எனும் வஸ்து. மற்றது உயிர்ப்பு சக்தி (ஆவி) . அவரது விளக்கங்களை நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். ஏனென்றால், அவரது விளக்கங்கள் நடைமுறை வாழ்க்கையில் புழங்கி வரும் விளக்கங்களிலிருந்து மாறுபட்டவை. உதாரணமாக, அப்துல் பஹா அவர்கள் ஜடப்பொருளைப் (வஸ்து) பற்றி விவரிக்கும்போது, அதனை விசேஷ தன்மை கொண்டதாகவும், அமைதியான, ஐடமான ஒன்று என விவரிக்கின்றர். ஆகையால், அவரது விளக்கம் நமது விளக்கத்திலிருந்து மாறுபட்டது என்பது புரிகின்றது. அதனை அவர் விவரிக்கும்போது இடத்ததை நிரப்பும் பொருள் என குறிப்பிடுகின்றார். ஒரு பௌதிக வல்லுணர் அதனை விளக்கும்போது, இடம் சம்பந்தப்பட்ட பொருளாகத்தான் அதனை குறிப்பிடுவார். அப்துல் பஹா அவர்கள் படைப்பின் இதர அமசங்களைப் பற்றியும் பேசுகின்றார். படைப்பை உயிர்ப்பு சக்தி எனக் குறிப்பிட்டு அதனை செயல்துடிப்பு, ஆக்கசக்தி, ஆன்மீக மற்றும் எல்லா ஜடப்பொருள்ளையும் ஊடுருவல்லது என விளக்குகின்றார் அப்துல் பஹா. அண்மையில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது நிருபங்களடங்கிய நூலில் படைப்பு என்பது ஜடப்பொருள், உயிர்ப்பு சக்தி இரண்டுக்கிடையே எற்படும் தொடர்புறவினால் ஆளப்படுவதுதான் என அப்துல் பஹா விளக்கியுள்ளார். இந்த விளக்கம் நம்மைச் சுற்றியுள்ள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விளக்கம் என இப்போதைக்கு கருதிக்கொள்வோம்.

பெரும்பாலும் எல்லாருமே உயிர்ப்பு சக்தியைப்பற்றிய விளக்கத்தை ஏற்றுக்கொள்வர், அவர்கள் மண்வகை உயிர்ப்பு சக்தி, தாவர வகை உயிர்ப்பு சக்தி மற்றும் மிருக இன உயிர்ப்பு சக்தி உள்ளதை ஒப்புக்கொள்வர். பஹாய்கள் உட்பட பெரும்பாலான மக்கள் மிருக இன உயிர்ப்பு சக்திக்கும் மானிட உயிர்ப்பு சக்திக்கும் (மானிட ஆவி) உள்ள வேறுபாட்டை உணர்வர். இந்த வகையிலான உயிர்ப்பு சக்திகள் பற்றி விளக்கம் கேட்கப்படும் பொழுது, அவர்கள் மிருகம், மனிதன், மண், தாவரம் முதலிய ஒவ்வொரு பொருளோடும் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளையே அந்தந்த உயிரினங்களுக்கு விளக்கங்களாக குறிப்பிடுவர். காலங்காலமாக வழங்கப்பட்டு வரும் மண்வகை, தாவர வகை, மிருக வகை முதலிய ஜீவ சக்திகளோடு சேர்த்து இன்னும் இரன்டு உயிர்ப்பு சக்தி (ஆவி)கள் இருப்பதாக பஹாய்கள் நம்புகின்றனர். அவற்றை நாம் நம்பிக்கை விசுவாசம் என்று ஒரு ஜீவ சக்தியாகவும், பரிசுத்த ஆவி என்று இன்னொரு உயிர்ப்பு சக்தியாகவும் கருதுகின்றோம். மேலே நான் சொல்லியுள்ள இதர உயிர்ப்பு சக்திகளின் வடிவங்களைத் தவிர்த்து தனித்தன்மை வாய்ந்த இந்த இரு ஜீவ சக்திகள் எல்லாம் வல்ல படைப்பாளியிடமிருந்து தோன்றுகின்றன. அதுவே நான் விவரிக்கப்போகும் மூன்று கோட்பாடுகளில் முதல் கோட்பாடு இரண்டாவது காந்தசக்தி எனும் கோட்பாடாகும். பஹாய் திருவாசகங்களின் பல இடங்களில் காணப்பட்டிருக்கும் இதுவே அடிப்படைக் கருத்தாக நான் கருதுகின்றேன். இந்த கோட்பாட்டை முழுமையாக சொல்லிய பிறகு அதற்கான சில உதாரணங்களை கொடுக்கின்றேன் பாஹாய் புனித வாசகங்களில் குறிக்கப்பட்டிருக்கும் காந்தசக்தி கோட்பாடு என நான் விளங்கிக்கொள்வது இதுதான். ஒரு தெய்விக நியதியின் சட்டத்திற்கு ஏற்ப பொருளுலகில் ஒரு செயல் ஓர் ஒழுங்கு முறை ஏற்படும்போது அது உயிர்ப்பு சக்தியின் உத்தரவிடப்பட்ட ஒரு அளவினை கவர்ந்து ஈர்க்கின்றது. நான் மீண்டும் அதனைக்கூறிவிட்டு சில உதாரணங்களைக் கொடுக்கின்றேன். ஒரு தெய்வீக நியதியின் சட்டத்திற்கு ஏற்ப ஒரு செயல் அல்லது ஒர் ஒழுங்கு முறை ஏற்படும்போது அந்த சம்பவம் உயிர்ப்பு சக்தியின் உத்தரவிடப்பட்ட ஒரு பகுதியை கவர்ந்திழுக்கிறது. இப்போது சில உதாரணங்களைச் சொல்கின்றேன். முதல் உதாரணம் அந்த காந்தம். எல்லாருக்குமே காந்தம், திசைக்காட்டும் கருவி என்பதெல்லாம் தெரிந்த ஒன்றுதான். அந்த காந்தத்தினுள் ஓர் ஒழுங்கு முறை ஒன்று உள்ளது. அங்கே அணுக்கள், மின்னணு முதலியவை உள்ளன. அங்கே காந்த ஈர்ப்புத்தன்மையின் ஆதிக்கம் ஒரு குறிபிட்ட ஒழுங்கு முறையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். அந்த ஒழுங்குமுறை இந்த மண்ணுலகில் ஒரு தெய்வீக நியதிக்கு ஏற்ப உள்ளது. அந்த தெய்வீக நியதியை நீங்கள் காந்த சக்தியின் நியதி என்றோ, ஈர்ப்பு சக்தியின் நியதி என்றோ, அல்லது வேறு ஏதாவது ஒரு பெயரிட்டோ அழைக்கலாம். ஆனால், அது என்ன பெயராக இருந்தாலும், அது இயற்கையின் நியதி என்பதுதான் உண்மை. அந்த ஒழுங்கு முறை இயற்கையின் நியதிக்கு ஏற்ப ஒழுங்குப் படுத்தப் பட்டிருப்பதால் அணுக்களின் அந்த ஒழுங்கு முறை உயிர்ப்பு சக்தியின் உத்தரவிடப்பட்டுள்ள ஒரு பகுதியை கவர்ந்து ஈர்க்கின்றது. இங்கே உயிர்ப்பு சக்தியின் ஈர்ப்புக்கு மண்ணுலக உயிர்ப்பு சக்தி காந்த சக்தியின் ஒரு வெளிப்படையான தோற்றம் இது. நான் என்ன சொல்லவருகின்றேன் என்றால் காந்தத்தினுள் அணுக்கள் ஒரு விஷேச முறையில் ஒழுங்குப்படுத்தப்பட்டு அமைந்திருப்பதால் அது இயற்கையின் நியதிக்கு ஏற்ற ஒரு சரியான அமைப்பு முறை. அதனால்தான் காந்தசக்தி அந்த உலோகத்தோடு தொடர்பு கொண்டுள்ளது.

நாம் இன்னொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு சாதாரண விதையை இப்பொழுது பாபர்ப்போம். செடி வளர்க்கப்படுவதற்காக தோட்டத்தினுள் தூவப்படுவது விதை. ஒரு விதையின் உள்ளே அடிப்படையிலேயே ஓர் ஒழுங்து முறை உள்ளது. அந்த சிறு சிதையை நாம் பிளந்து பார்த்தோமானால் அணுக்கள் பல ஒரு விஷேச முறையில் ஒழுங்கு படுத்தப்பட்டிருக்கும். அணுக்களின் குவியல் அங்கே ஒரு விஷேச முறையில் இயற்கையின் நியதிக்கு ஏற்ப ஒழுங்கு படுத்தப்பட்டிருப்பதால் அந்த சரியான அமைப்பு முறையானது உத்தரவிடப்பட்டுள்ள உயிர்ப்பு சக்தியினை கவர்ந்திழுக்கின்றது. உத்தரவிடப்பட்டுள்ள அந்த உயிர்ப்பு சக்தி என்ன? அதுதான் தாவர உயிர்ப்பு சக்தி. எனவே, தாவர உயிர்ப்பு சக்தி ஒரு விதையோடு தொடர்பு கொண்டிருக்கின்றது. காந்தசக்தி எனும் கோட்பாட்டினை மீண்டும் ஒருமுறை நான் வாசிக்கின்றேன். ஒரு தெய்வீக நியதியின் சட்டத்திற்கு ஏற்ப பொருளுலகில் ஒரு செயல் அல்லது ஓர் ஒழுங்குமுறை ஏற்படும்பொழுது, அது உயிர்ப்பு சக்தியின் உத்தரவிடப்பட்ட ஓர் அளவினை ஈர்க்கின்றது. எனவே, காந்தத்தின் பரந்த அளவு விளக்கத்தினை நாம் பார்க்கும்பொழுது, அவ்விளக்கத்தின் ஒர் உதாரணம் விதையாகும். ஏனெனில், அந்த சிறு விதையில் அமையப்பட்ட ஒர் ஒழுங்கு முறை உயிர்ப்பு சக்தியின் ஒர் அளவினை ஈர்க்கின்றது. கருத்தரிக்கப்பட்ட மானிட சிசு மேலுமோர் உதாரணமாகும். கருத்தரிப்பின்போது ஆன்மா உலக வாழ்வுக்கு உருவெடுத்து வருவதாக பஹாய்களாகிய நாம் நம்புகின்றோம். இங்கே என்ன நடைபெருகின்றது என்பதைப்பார்ப்போம். இங்கு சினை, விந்து என்ற இரு இயற்கை அம்சங்கள் உண்டு. இந்த இரு அம்சங்களின் இணைப்பின்போது கருத்தரிப்பு உண்டாகின்றது. சினை கருத்தரிக்கப்பட்ட மானிட சிசுவாக கருவாகி உருவாகின்றது. இதன் பயனாக என்ன நடக்கின்றது? அணுக்களின் ஒழுங்கு முறை அங்கே உள்ளது. அந்த ஒழுங்கு முறை ஒரு தெய்வீக நியதிக்கு ஏற்ப அமைந்திருப்பதால், அதற்கு ஈர்ப்பு சக்தி உண்டு. அது ஓர் உயிர்ப்பு சக்திக்கு ஏற்ப அமைந்திருப்பதால், அதற்கு ஈர்ப்பு சக்தி உண்டு. அது ஒர் உயிர்ப்பு சக்தியோடு தொடர்பு கொண்டுள்ளது. அந்த உயிர்ப்பு சக்தியைத்தான் நாம் மானிட உயிர்ப்பு சக்தி என்றும் மானிட ஆவி என்றும் அழைக்கின்றோம். மீண்டும் ஒரு முறை காந்த சக்தியின் கோட்பாடு இங்கே இயங்குகின்றது. பஹாய் சமயத்தின் புனித வாசகங்களைக் கற்றிடும்போது எனக்கு புரிகின்ற விளக்கம் என்ன வென்றால், காந்த சக்தி என்பது இயற்கையின் நியதிகளுக்கு மட்டுமோ, அல்லது காந்த உலோகங்கள், விதைகள், கருத்தரிக்கப்பட்ட மானிடர் ஆகிய அம்சங்களுக்கு மட்டுமோ பொருந்தும் ஒன்றல்ல. கடவுளது இறைத்தூதர்கள் கொடுத்துள்ள தெய்வீக சட்டங்களக்கும் இந்த காந்த சக்தி பொருந்தும். அதாவது, எங்கெல்லாம் தெய்வீக சட்டம் இயங்குகின்றதோ அங்கெல்லாம் இந்த காந்த சக்தி கோட்பாடு வரும். இது இயற்கைச் சட்டங்களுக்கு மட்டுமல்லாமல், கடவுளது இறைத்தூதர்களின் சட்டங்களுக்கும் பொருந்தும்.

மூன்றவது கோட்பாடு, பரிணாம் எனும் கோட்பாடு. பஹாய் புனித வாசகங்களைப்பற்றி அதிகம் தெரிந்துள்ளவர்கள் பரிணாம் எனும் கோட்பாடு பஹாய் நித்திய கோட்பாடுகளின் சாரம் என்பதை ஒப்புக்கொள்வர். அதாவது, காந்தம் என்பதை ஒரு மாபெரும் இசைவு பொருத்தத்தை, மாபெரும் ஒற்றுமையை, மாபெரும் ஒழுங்கு முறையை ஏற்படுத்தவல்ல உயிர்ப்பு சக்தியோடு தொடர்பு கொண்டுள்ளது. நமது உலோக காந்தத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்போம். அதை நாம் கீழே போடுகிறோம் காந்தம் விழுந்த இடத்திற்கு அருகே இரும்புத்துகள்ளோ அல்லது காந்த ஈர்ப்பு சக்தி கொண்ட உலோகங்களோ இருந்தால், அவை காந்த உலோகத்தின் வட, தென் துருவங்களக்கு அருகில் ஒர் ஒழுங்கு முறையிலான அமைப்புடன் பொருத்தமாக ஈர்க்கப்பட்டிருக்கும். ஒரு மாபெரும் இசைவு பொருத்தம், மாபெரும் ஒழுங்கு முறை எல்லாம் அங்கே அணிவகுத்து நிற்கும். பரிணாமம் எனும் கோட்பாட்டின் இயக்கம் அங்கே இருக்கும். உலோக காந்தத்தின் இதே கோட்பாடுகள் விதை என்ற இன்னோரு காந்தத்தில் இருப்பதைக் காணலாம். அந்த விதை என்ற காந்தத்தோடு தாவர உயிர்ப்பு சக்தி தொடர்பு கொண்டுள்ளது. நாம் அழைத்திடும் காந்தத்தில் மென்மேலும் பல அணுக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டவாறு அமைந்திருக்கின்றன. இதன் பயனாக முதலில் இளந்தளிர், பிறகு செடி, அப்புறம் மரம் உருவாகும். மென் மேலும் அணுக்கள் ஒர் இசைவு பொருத்தத்தில் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டு, அதன் பயனாக ஒற்றுமை சம்பவிக்கும். மானிட சிசு வளரும்போது இதே கோட்பாடுதான் இயங்குகின்றது. மானிட சிசு என நாம் அழைத்திடும் காந்த்ததோடு மானிட ஆவியானது பிறப்பு ஏற்படும் வரை மானிட சிசுவை மாபெரும் அளவில் வளர்த்து கொண்டே வருகின்றது. இசைவு பொருத்தம், மானிடபொருத்தம், மாபெரும் ஒற்றுமை வளர்ச்சி எல்லாம் சம்பவிக்கின்றது.

எனவே, பரினாமம் எனும் கோட்பாடு இயங்குகின்றது. இதனைத் தொட்டு பேசும்பொழுது அப்துல் பஹா அவர்கள் இப்படி குறிப்பிடுகின்றார்கள். “பரிணாம வளர்ச்சியின் போது, தனது வெளிப்படுத்துதலின் சாதனாமாக மானிட ஆவி எல்லையற்ற உபரிபாகங்களைக் கொண்ட அமைப்புக்களை அல்லது சரீரங்களை உருவாக்குகின்றது,” அப்துல் பஹா என்ன சொல்கின்றார் என்று எனக்கு என்ன படுகின்றது என்றால், பரிணாம வளர்ச்சியின் செயல்முறையின்போது, காந்தத்தின் ஒரு பகுதியான உயிர்ப்பு சக்தி, அந்த சக்தியின் வெளிப்படுத்துலுக்கான சாதனங்களையும், அமைப்புக்களையும், சரீரங்களையும் உருவாக்குகின்றது, கருநிலையிலுள்ள மானிட சிசுவோடு சம்பந்தப்பட்ட மானிட குழந்தையானது மானிட ஆவியை வெளிப் படுத்திக்காட்டும் ஓர் சாதனம் அல்லது வாகனம். இதுவே பரிணாம வளர்ச்சியின் கோட்பாடு என விளங்கிக் கொள்கின்றேன்.

இந்த மூன்று கோட்பாடுகளைப் பற்றி விளக்கிய பிறகு, அவற்றை நான் பேசப்போகும் தலைப்போடு தொடர்பு படுத்த வேண்டியதுதான் எனது வேலை. நான் பேச வேண்டிய தலைப்பு சக்திமிக்க இறைமொழி என்பதாகும். படைப்பு, காந்தசக்தி, பரிணாம் என்ற மூன்று கோட்பாடுகள் அவை. சுருக்கமாக சொன்னால், இந்த மூன்று கோட்பாடுகளும் இறைத்தூதரின் திருவெளிப்பாட்டிற்கு மிகவும் பொருத்தமானவை என்பது எனது கருத்தாகும். நான் ஏன் அப்படி சொல்கிறேன் எனறால், இறைத்தூதரிடமிருந்து வாருகின்ற திருவெளிப்பாடு ஒரு தெய்வீக நியதிக்கு ஏற்ப நிகழ்கின்றது என்பதுதான் காரணம். இறைத்தூதர் தமது திருவெளிப்பாட்டில் வெளியிடுகின்ற மெய்மையே தெய்வீக சட்டத்தின் வெளிப்பாடு. அது படைப்பு சக்திமிக்க சொல் என்று அழைத்திடும் இறைமொழியில் அடங்கப்பட்டுள்ளது. திருவெளிப்பாடு என்பது உயிர்ப்பு சக்தியின் மூலதாரம். ஏனெனில், அதுவே ஒரு காந்தம். அது ஏன் ஒரு காந்தம்? ஏனெனில், அது ஒரு தெய்வீக நியதியினைப் பின்பற்றுகின்றது அது ஒரு சொற்களஞ்சியம். திருவெளிப்பாட்டிலுள்ள சொற்கள் ஒரு நல்ல அகராதியில் இருக்கும். அந்த சொற்கள் வெப்ஸ்டர் அகராதியிலும் காணப்படுகின்ற வார்த்தைகள் தாம். ஆனால், திருவெளிப்பாட்டில் அவை ஒழுங்குபடுத்தப்பட்ட ஓர் அமைப்பில் உள்ளன. சாதரண அமைப்பு முறையில் இல்லாமல் இறைத்தூதர் வகுத்துள்ள ஓர் ஒழுங்கு முறையில் அவை அமைந்திருக்கும். அப்படிப்பட்ட ஒழுங்குமுறையின் காரணத்தினால்தான் அந்த சொற்களஞ்சியம் ஓர் உயிர்ப்பு சக்தியோடு தொடர்புகொண்டுள்ளது. பரிசுத்த ஆவியின் சக்தி அந்த சொற்களஞ்சியத்தோடு தொடர்பு கொண்டுள்ளது. அந்த சக்தியைத்தான் நாம் படைப்பு சக்திமிக்க இறைமொழி என்று அழைக்கின்றேம். மனித சிசு என்பது கோடிக்கணக்கான அணுக்களின் கூட்டுத்திரட்டு. அந்த அணுக்களும் சாதரண அணுக்கள்தாம். ஆனால், அந்த அணுக்கள் அமையப்பட்டுள்ளது. அதே உவமானம்தான் திருவெளிப்பாட்டிற்கும். இறைதூதரினால் வழுங்கப்படும் வார்த்தைகள் அமையும் முறை, பரிசுத்த ஆவி அவற்றுடன் தொர்பு கொள்ளும் வகையில் அமையப்படுவதால் அவற்றை படைப்பு சக்திமிக்கசொற்கள் என அழைக்கின்றேம். பஹாவுல்ல இப்படிமொழிகின்றர், “எமது திருவாயிலிருந்து வெளிவருகின்ற ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு மனித கூட்டினுள் ஒரு புதிய வாழ்வினை வழங்கவல்ல அளவுக்கு ஆற்றலைக்கொண்டுள்ளது.” இன்னொரு இடத்தில் பஹாவுல்லா அவர்கள் இறைவனுடைய புதிர்களை இறந்து விட்ட உடல்களுக்கு ஒரு புதிய வாழ்வினை வழங்கவும் உயிர்வாழ்க்கையின் அமைப்புகளுக்கு பரிசுத்த ஆவியினை வழங்கவும் போதுமானது ஒரேயொரு வார்த்தை, என்று குறிப்பிடுகின்றார். மேலுமோர் அப்துல் பஹா அவர்கள் திருவெளிப்பாடு பற்றி பேசுகின்றார். அப்படி பேசும்பொழுது அவர் திருவெளிப்பாட்டினை தெய்வீக காந்தமாக விவரிக்கின்றார். அப்துல் பஹாவின் நிருபங்கள் என்ற புத்தகத்தில் அவர், ” இறைவனின் திருவாக்கினுடைய சக்தி எனும் தெய்வீக காந்தம் இதயங்களைக் கவர்ந்து ஆத்மாக்களின் மீது பேரின்பத்தையும் உற்சாகத்தையும் வழங்கும்,” என்று கூறுகின்றார்.

திருவெளிப்பாடுபற்றிய இன்னொரு அம்சம் என்னவென்றால், அதனுள் பரிணாம வளர்ச்தியின் கோட்பாடு உள்ளடங்யிருக்கிறது என்பதுதான். திருவெளிப்பாட்டின் சக்தி வயிலாகவும், அந்த இறைமொழிகளோடு ஒன்றரக் கலந்திருக்கும் ஆவியின் வாயிலாகவும் மாபெரும் ஒற்றுமை அமைப்பயையும் நம்மைச்சுற்றியுள்ள உலகில் நாம் காண்கிறோம். இறைவனின் திருவாக்கினை குறிப்பிட்டுப் பேசும் பொழுது அப்துல் பஹா அவர்கள் இப்படி மொழிகின்றார். “இறைவனின் திருவாக்கின்பால்தான் சகல மானிடமும் திரும்பவேண்டும். மானிட முழுவதிற்கும் அது ஒற்றுமையின் மையமாகும். அது மனித இனத்தின் ஒருமைப் பாட்டிற்கு கூட்டு மையம், இதயங்களை இணைப்பதற்கும், தொடர்புறச் செய்வதற்கும் அது நித்திய வாழ்வின் மூலாதாரம், எனவே இங்குதான் நாம் இறைத்தூதரின் சுவடுகளைக் காண்கின்றோம். அவரது உடல் மண்ணில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மானிட உடல் வடிவில் அவர் இப்போது நம்மிடையே இல்லை. இறைத்தூதரோடு நாம் பிராத்தனைகள் வழியாகவும், தியானத்தின் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். விண்ணுலகிற்கும் இறைதூதர் சிறகடித்து பறந்து சென்றுவிட்ட பிறகு, இவ்வுலகில் அவரது சுவடுகளை நாம் அவர்தம் திருவெளிப்பாட்டில்தான் காணமுடியும். நமது இதயங்களை இறைதூதரின் வார்த்தைகளின்பால் திறப்பதின்வழி, தியான நிலையில் நம்மை நாம் திருவெளிப்பாட்டிற்கு சரணடையச் செய்வதன் வழி, அந்த திரு ஆவியோடு நாம் தொடர்புகொள்கின்றோம். ஆவியினைக் கவர்ந்திழுக்கும் காந்தமாக நாமும் மாறிவிடுகின்றோம், பரிணாம வளர்ச்சியின் செயல்பாட்டின் ஒரு பகுதியாக நாம் ஆகிவிடுகின்றோம். “மனித இனத்தின் ஒருமைப்பாடு நிலைநாட்டப்பட்டு இணக்கமும், தொடர்பும் நிகழ்ந்தேறும்,” என அப்துல் பஹா கூறியுள்ளதற்கு நாம் வாகனமாக ஆகின்றோம். அந்த எல்லா கொட்பாடுகளுக்கும் முக்கியத்துவங்கள் உண்டு. உதாரணமாக, நாம் முழுதாக அடிப்படையிலே இறைவார்த்தைகளை பிரித்து உயர்த்திப்பார்க்க வேணண்டும். மானிட வார்த்தைகள் தெய்வீக வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன என்றும், மானிட வார்த்தைகள் ஒரு தேய்விக அமைப்பு முறையினை பின் பற்றுகின்றன என்றும் யார் கோரிக்கொள்ள முடியும்? முடியாது. ஏனெனில், இறைவனின் திருவாக்கு என்பது ஓர் ஆன்மீக காந்தத்தோடு தொடர்புகொண்டுள்ளது. இதன் பொருள் யாதெனில், இறைதூதரது வார்த்தைகளை நாம் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும். அவற்றை புனிதமானதாகவும், பரிசுத்தமிக்கதாகவும், மரியாதைக்குரியதாகவும் பயபக்திக்குரியதாகாவும் கருதவேண்டும். ஏனெனில், இவ்வார்த்தைகள்,சாதாரண காகிதத்தாளில், சாதாரண அகரர்யில் காணப்படும் அதே சொற்கள் இங்கே இறைதூதரின் இறைமொழியாக ஓர் அமைப்பு முறையில் விளங்குகின்றது. அவற்றில் ஒரு மாபெரும் ஆன்மீக சக்தி தொடர்பு கொண்டுள்ளது. அறிவுக்காக மட்டும் திருவெளிப்பாட்டின்பால் நாம் திரும்ப்கூடாது உற்சாகத்திற்காகவும் நாம் அதன்பால் திரும்பவேண்டும். அறிவுக்காக ஒருவர் சில நேரங்களில் பஹாவுல்லாவின் நூல்களின்பால் திரும்பக்கூடும். வாழ்க்கைப்பற்றியும், இறப்புபற்றியும், ஆண் பெண்சமத்துவம் பற்றியும், இவ்வுலகின் எதிர்கால நிலைமை பற்றியும் பஹாவுல்லா என்ன சொல்கின்றார் என அறிவதற்காக ஒருவர் சமய நூல்களைப் படிக்கக்கூடும் ஆனால், நாம் சக்திக்காகவும், ஆன்மீக வாழ்வுக்காகவும் திருவெளிப்பாட்டு நூல்களின்பால் திரும்புவதுண்டு. தனிப்பட்டு களையிழந்து இருக்கும் நேரங்களிலும், உற்சாகமிழந்து, துணிவிழந்து இருக்கும் நேரங்களிலும் திருவெளிப்பாட்டின் நூல்களின்பால் நாம் திரும்புவதுண்டு. அத்தகைய நேரங்களில் நாம் அறிவுக்காக அந்தநூல்களை திறக்காமல் அவற்றில் உளளடங்கியுள்ள உயிர்ப்பு சக்திகாகவும் நாம் திருவெளிப்பாட்டின்பால் திரும்பவதுண்டு. அத்தகைய நேரங்களில் புனிதவாசங்காளாக இருந்தாலும் சரி, பிரார்த்தனைகளாக இருந்தாலும் சரி, ஏழுபள்ளத்தாக்குகள் என்ற நூலாக இருந்தாலும் சரி, மறைமொழிகளாக இருந்தாலும் சரி, அல்லது பஹாவுல்லாவின் வேறெந்த நூலாக இருந்தாலும் சரி, அவை மனதிற்கு மனநிறைவையும், ஆறுதலையும் அளிப்பதாகத்தான் இருக்கும். ஏனெனில், இந்த புனித வார்த்தைகளின் பஹாவுல்லாவின் உயிர்ப்பு சக்தி ஒளிர்கின்றது அவற்றின்பால் நமது இதயம் கவர்ந்திழுக்கப்படுகின்றது.

நம்மில் சிலர் ஆர்வலர்களுக்கு திருவெளிப்பாட்டை அறிமுகம் செய்து வைக்க புதிய உத்திகளை கடைப்பிடிப்போம். ஆஸ்திரேலியாவிலும் பஸிபிக் தீவுகளிலும் மக்கள் எவ்வாறு திருவெளிப்பாட்டின் சக்தியினால் மட்டுமே சமயத்தின்பால் கவரப்பட்டனர் என்பதுபற்றி பல உதாரணங்களை போதிய நேரமிருந்தாலும் உங்களோடு பகிர்ந்து கொள்வேன், பீஜி நாட்டில் முதல் பஹாய் நம்பிக்கையாளர் எப்படி சமயத்தின்பால் ஈர்க்கப்பட்டார் என்பதை எனக்கு ஞாபகமிருக்கின்றது. 1950-இல் அல்லது 1951-இல், பீஜி நாட்டின் சுவா என்ற இடத்தில் எப்படி ஒரு முன்னோடி போனார், சுவா தகவல் ஒளிபரப்புக் கழகத்தில் எப்படி வேலை வாய்ப்பு பெற்றார், எப்படி எப்படி மக்களிடம் நட்புகொண்டு பழகலானார், ஆர்வமுள்ளவர்களுக்கு எப்படி சமயத்தைப்பற்றி எடுத்துச்சொல்ல ஆரம்பித்தார் என்பதையெல்லாம் நான் நினைவில் வைத்துள்ளேன். அந்த முன்னோடி வேலை செய்த தகவல் ஒலிபரப்புக் கழகத்தில் உள்ள சக தொழிலாழி சமயத்தில் ஆர்வம் காட்டினாராம். அக்காலத்தில் உள்ள பஹாய் சமயத்துண்டு பிரசுரங்கள் சிலவற்றையும், பஹாய் சமயத்தைப் பற்றி விளக்கும் கட்டுரைகளையும் அந்த முன்னோடி கொடுத்தாராம். அவர் அந்த கட்டுரைகளையும் துண்டுப் பிரசுரங்களையும் படித்தாலும் கூட அவர் சமயத்தின்பால் கவரப்படவில்லையாம். ஒரு நாள் முன்னோடி தாம் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு புனித வாசகத் தொகுப்பு நூலை கொண்டு வந்து தமது மேஜை மேல் வைத்திருந்தாரம் அங்கு வந்த அவரது நண்பர் அப்புத்தகத்தை திறந்து ஒரு சில வரிகளைப்படடித்து விட்டு “இதை நான் எடுத்துச் சென்று கண்டிப்பாக படிக்க வேண்டும். நான் இதைக் கொண்டு செல்லலாமா? “என்று கேட்டாராம். அந்த முன்னோடியும் “சரி” என்று அனுமதிக்கவே, அந்த நண்பரும் அப்புத்தகத்தை எடுத்த சென்றார். மறுநாள் புத்தகத்தைக் கொண்டு வந்து “நான் நம்புகிறேன், இப்பொழுது இது என் இதயத்தில் இருக்கிறன்றது” எனறாராம். இப்படிப்பட்டதுதான் திருவெளிப்பாட்டின் சக்தி. திருவெளிப்பாட்டடின் சக்தி பற்றிய உதாரணங்களில் இது ஒன்று. சமயத்தை சமய ஆர்வலர்களுக்கு போதிக்கும் போது திருவெளிப்பாட்டின் சக்தி பற்றிய கதைகள் பற்றி இங்கு குழுமியிருக்கும் நண்பர்கள் எத்தனையோ அநுபவங்களை சந்தித்திருப்பீர்கள். கடந்த ஆண்டின்போது ஆஸ்திரேலியாவில் (ஐக்கிய அமெரிக்காவில் கூட அது போன்று இருக்கக்கூடும்) சமயத்தைப் பொதிப்பதில் நமது அணுகுமுறை மாற்றப்பட்டுள்ளது. கடந்த வருடத்திற்கு முன்பதாக ஆஸ்திரேலியாவில் சமயத்தைப் போதித்தலில் நமது அணுகுமுறை பல வழிகளில் வழக்கமான ஒன்றாகத்தான் இருந்துவந்துள்ளது. அப்பொழுதெல்லாம் நாம் சமயத்தைப் போதிக்கும்பொழுது பஹாய் சமயத்தின் உலகளாவிய கோட்படுகள், உலக ஒற்றுமை, உலக உணர்வு, சமயங்களின் இணக்கம் விஞ்ஞானத்திற்கும் சமயத்திற்கும் இடையே இணக்கம், ஆண்பெண் சமத்துவம் மற்றும் இதர பொது விஷயங்கள் பற்றிதான் பேசுவோம். இத்தகைய உலகளாவிய கோட்பாடுகள் வழி மக்கள் பஹாய் சமயத்தை ஆய்வு செய்யவும், அதைப்பற்றி அக்கறையோடு எடைபோடவும் அவர்களை கவர்ந்திடுவோம். படிப்படியாக அவர்களும் இறைதூதரின் ஸ்தானத்தைப்பற்றி கேள்வி எழுப்பி, அவர்மீது நம்பிக்கைக்கொள்பவர்கள் சமயத்தை ஏற்று தாங்களும் ஒரு நம்பிக்கையாளர் என பதிவு செய்து கொள்வர். கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நமது அணுகுமுறையும் முழுதாக மாறியுள்ளதுதான் நமக்குக் கிடைத்துள்ள வெற்றி. நாம் எப்படி அதை மாற்றினோம்? அது இப்படித்தான். ஆஸதிரேலியா என்பது இப்பொழுதெல்லாம் பொருள்வளமிக்க செல்வ செழிப்பு மிக்க ஒரு நாடு. சொல்வவளமிக்க, நகர்புற, நாகரிகமிக்க, கல்விகற்ற மக்களுக்கிடையே ஒர் ஆத்மீக பசி ஏற்பட்டுள்ளதை உனர்ந்துள்ளோம். அது ஓர் மாபெரும் ஆத்மீக தாகம். எனவே, இந்த சூழ்நிலைக்கு நமது அணுகுமுறை இப்பொழுது மாறுபட வேண்டாம்.

நாம் சர்வ சாதரணமாக சமயத்தைப்பற்றி ஒருவரிடம் பேசுவோம். மிக விரைவில் நாங்கள் அவருக்கு பஹாவுல்லாவின் ஆக்கசக்கமிக்க வார்த்தைகளை அறிமுகப்படுத்துவோம். ஒரு வருடத்திற்கு முன்பு விவேகமற்றது அவசரமிக்கது என நான் எதை கருதுவேனோ அதை அவருக்கு எடுத்துச் சொல்வோம். சமயத்தில் ஆர்வம் காட்டும் அந்த நபருக்கு நாங்கள் முதலில் கொடுக்கும் பத்தகங்களில் ஒன்று ஏழுபள்ளத்தாக்குகள் என்ற நூல்தான். இதைக்கண்டிப்பாக ஒவ்வொருவரும் செய்யவேண்டும் என்று நான் சொல்லவில்லை. எனெனில், ஒவ்வொரு மனிதரும் மாறுபாடு மிக்கவர்தான். ஒருவருக்கு பொருத்தமில்லாத ஒன்றாக இருக்கும். ஒருவருடத்திற்கு முன்பு அதை நான் விவேகமற்றது என கருதினேனோ அது இந்த செயல்தான். இது மிகப்பொருத்தமான செயல்தானா என இவரும் என்னைக் கேட்டால், நான் “மிக ஆபூர்வமாக” என பதிலளிப்பேன். ஏனெனில், அந்த நூலின் ஆரம்பத்தில் முதல் இரண்டு பக்கங்களில் அகமது, மாமூட், முகமது என்றும், குர்-ஆன் மேற்கோள்களும் உள்ளன. சில சமூக பேதங்கள் கொண்ட சராசரி மேற்கத்திய நண்பருக்கு இதெல்லாம் பொருத்தமில்லாத விஷயங்கள். மூன்றாவது அல்லது நான்காவது பள்ளத்தாக்கிற்கு அந்நபர் சென்றால் கேட்கவே வேண்டாம் அவர் குழம்பிவிடுவார். என்ன நடக்கின்றது என்பது அவருக்கே தெரியாது. எதுவும் புரியாது. அத்தகைய தகவல் ஒரு நபரை துரத்திவிடும். இப்படித்தான் நாம் நம்பிக்கொண்டிருந்தோம். இருந்தாலும், உண்மையில் இது உண்மை நிலையல்ல. நாம் சந்திக்கும் பெரும்பாலான மக்களுக்கு அக்கசக்திமிக்க திருமொழியினை அறிமுகப்படுத்தி, அதன் ஆவி அவர்களை ஓளிரச்செய்து அந்த ஆன்மீகப் பசியினை உரசட்டும் என்பதில் குறியாய் இருப்போம். தங்களுக்கு அந்த ஆன்மீகப் பசி உண்டென்பதை பெரும்பாலோர் ஒத்துக்கொள்வதில்லை, இப்படி அவர்களிடம் பேசும்பொழுது நாம் அவர்களிடம், “உங்களிடம் ஒரு மாபெரும் ஆன்மீக பசி உள்ளதை நான் உணருகின்றேன்,” என குறிப்பிடுவோம். அதற்கு, அவர்கள், “அது உண்மையல்ல, நான் கடவுளை நம்புவதில்லை. ஆன்மீக ஆற்றல்களையோ நான் நம்புவதில்லை. இதுபொன்ற விஷயங்களெல்லாம் பழமையானவை, அறையெல்லாம் மனநிலை விவாகாரம்” என்பார். இருப்பினும், பஹாய் போதனைகள் நமக்கு வழங்கிடும் கட்டொழுங்கின் உணர்வினால் அந்த ஆன்மீகப் பசியினை நாம் உணரமுடியும். கேட்கப்படாத அந்த கேள்வியினை நாம் எடுத்துரைக்க முடியும். தேடுபவரின் இதயத்தினுள்ளே இருக்கும் சொல்லப்படாத அந்த தேவையை நம்மால் எடுத்துரைக்க முடியும்.

நான் எனது தலைப்பின் இன்னொரு அம்சத்தைப்பற்றி பேசப்போகிறேன். அது திருவெளிப்பாட்டை புரிந்துகொள்ளுதலைப்பற்றியது. திருவெளிப்பாடு என்பது நாம் அனுபவப்படுகின்ற எல்லா விஷயங்களிலிருநஙதும் முற்றக மாறுபட்டது என்பதைத்தான் நான் சற்றுமுன்பு சொன்னேன். அதில் ஒரு தந்திரமான தன்மை உண்டு. அந்த தந்திரத்தன்மை என்னவென்றால் அந்த திருவெளிப்பாட்டின் வார்த்தைகள் சாதரணமாகத்தான் அச்சிடப்பட்டுள்ளன. மிகச்சாதாரண வகையில் தொகுக்கப்பட்டுள்ளன. பை பில் திருநூலின் புனித மத்தேயு சுவிசேசக்திற்கு ஏற்ப தமது வருகை குறித்து கோடிகாட்டியுள்ள மேகங்கள் இவைதான். தனிநபருக்கும் மெய்யான புரிந்துகொள்ளுதலுக்கும் இடையே மேகங்கள் என ஏசுநாதர் சொல்லியுள்ளார். திருவெளிப்பாடு மனிதர்களுடைய வார்த்தைகள் போன்றுதான் தோன்றும், மனிதர்களுடைய பேச்சுமொழியில்தான் இறைமொழிகள் வெளிப்படும் என்பதுதான் அந்த மேகம். இத்தகைய மேகங்களை யெல்லாம் ஊடுருவி அந்த மெய்யான திருவெளிப்பாட்டை கண்ணுறுவதுதான் நமது சாவல்களில் ஒன்று. அதனை நாம் அணுகிடும் முறையில் ஒரு மாபெரும் வேறுபாடு எழுகின்றது.

இங்கு அந்த மூன்று கோட்பாடுகள் சம்பந்தப்படுவதாக எனக்கு தோன்றுகின்றது. முதலாவது, திருவெளிப்பாட்டைப் புரிந்து கொள்ளல் என்பது எல்லையற்றது, முடிவற்றது என்பதைத்தான் பொதனைகள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. எந்தவொரு வேளையிலும் நாம் “நான் பஹாவுல்லாவினுடைய இந்த நூலை கற்று தேர்ந்துவிட்டேன். மறைமொழிகள், கித்தாப்-இ-இகான் அல்லது பஹாவுல்லாவின் மற்ற சில நூல்களைப் பற்றி எனக்கு இப்பொழுது முழுதாக புரிகின்றது,” என்று கூறிவிடவே முடியாது. புரிந்து கொள்ளுதல் என்பது எல்லையற்றது, பஹாவுல்லாவே இப்படி கூறுகின்றார். “கடவுளது (அவரது மகிமை உயர்த்தப்படுவதாக) திருவாக்கு சதாகாலமும் நீடித்திருக்கும் என நீங்கள் நம்புவதைப்போன்று, அதன் அர்த்தம் முடிந்துவிடாது என்பதையும் நீங்கள் சந்தேகமற்ற விசுவாசத்துடன் கண்டிப்பாக நம்பிவிடவேண்டும்,” இக்கூற்று நமக்கு மிகமுக்கியமான அம்சத்தை எடுத்துச் சொல்கின்றது. அதாவது, திருவெளிப்பாட்டை நாம் கற்பது ஒரு முடிவுக்கு வராது. நாம் வாழ்நாள் முழுவதுவே அக்கல்வியில் நாம் இன்பம் துய்க்கலாம். திருவெளிப்பாடு நமக்கு வழங்கவிருக்கும் விவேகத்தை நாம் பெறுகின்றோம். ஆதியில் எனது பின்னனி இஸ்லாம், பிற்காலத்தில் இஸ்லாமிய பாரம்பரியம் வீழ்ச்சியுற்றுவிட்டாலும், எனக்கு தூய்மையான ஆதிகால இஸ்லாமிய பாரம்பரியம் தெரியும். அன்றைய காலத்தின் பற்றுறுதிமிக்க நம்பிக்கையாளர்கள் எவ்வாறு திருக்குர்-ஆன் புனித நூலிலிருந்து தங்களது வாழ்வுக்கான ஆற்றலைப் பெற்றனர் என்பதையும் உணர்ந்துள்ளேன். அந்த புனித நூலை அவர்கள் சிறுபிள்ளைகளாய் இருக்கும்போதும், இளைஞராய் இருக்கும்போதும், முதியவராய் இருக்கும்போதும், அடுத்த உலகிற்கு தங்களை தயராக்கிக்கொள்கின்ற வயதான காலத்திலும் படிப்பார்கள். அத்திருநூலைப்பற்றிய தங்களது புரிந்துகொள்ளுதல் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என அவர்கள் கருதவேமாட்டார்கள். அதுபோன்றுதான், பொற்காலத்தை நோக்கி மலர்ச்சியுடன் முனனோக்கி நடைபோடும் பஹாய் சமயகாலகட்டத்திலும். நாம் பெற்றிருக்கும் புனித நூல்களை வாழையடிவாழையாக, தலைமுறையாக, நாளுக்கு நாள், வாரத்திற்கு வாரம், மாதத்திற்கு மாதம், வருடத்திற்கு வருடம், தாங்கள் முழதும் வாசித்துக்கொண்டேயிருப்பார்கள். எந்தவொரு கட்டத்திலும் அவர்கள், “புனித நூல் கற்பது முடிந்துவிட்டது, ஒரு முடிவுக்கு வந்து விட்டது” என்று சொல்லவே மாட்டார்கள். ஏனெனில், திருவெளிப்பாட்டை புரிந்து கொள்ளல் என்பது உண்மையில் எல்லையற்றதாகும். இந்த ஓர் அம்சம்தான் திருவெளிப்பாட்டினை மனிதர்களது வார்த்தைகளிலிருந்து வேறுபடுத்தி உயர்த்திக் காண்பிக்கின்றது.

இன்னொரு அம்சம் என்னவென்றால், திருவெளிப்பாடு பற்றிய ஆழமான அறிவு பெறுவதற்கு பிரதான தேவை ஆன்மீக அடிப்படையே அன்றி ஏட்டுப்படிப்பல்ல, தமது வார்த்தைகளை புரிந்துகொள்வதும், விண்ணுலகக் குயில்களின் திருமொழியினைவிளங்கிக்கொள்வதும் மானிட கல்வியை அடிப்படையாகக் கொண்டதல்ல என பஹாவுல்லா கூறுகிறார். அது உள்ளத்தூய்மை, ஆத்மாவின் புனிதம், ஆவியின் சுதந்திரத் தன்மை ஆகியவற்றை பிரதான அடிப்படைகளாகக் கொண்டது. இது மிக முக்கியமான அம்சம். அதனைப் பற்றி பிறகு மீண்டும் சொல்கிறேன்.
பஹாய்க் கல்விப்புலமை பற்றி நான் ஓரிரு வாத்தைகள் சொல்ல விரும்புகிறேன். பஹாய்களாகிய நாம் மானிடக் கல்விக்கு எதிரனவர்கள் அல்ல. திருவெளிப்பாடுபற்றிய நமது புரிந்துகொள்ளுதலோடு மானிடக் கல்வி தொடர்புகொள்வதை நாம் காணலாம். ஆனாலும், திருவெளிப்பாடு பற்றிய ஓர் ஆழ்நிலை கல்விக்கு, அதனைப்பற்றிய ஒர் ஆழமான புரிந்து கொள்ளுதலுக்கு ஒருவரது ஏட்டுக் கல்வித் தகுதி பிரதான அடிப்படைத் தேவையாகாது. திருவெளிப்பாடு பற்றி ஆழமாக தெரிந்து கொள்ளுதல் என்பது நமது எந்த விதமான ஏட்டுக்கல்வி பாண்டித்யத்தையும் பொறுத்தது அல்ல. ஒருவர் எழுத்துப்படிப்பு வாசனையே இல்லாமலிருக்கலாம். ஆனால் அப்படியிருந்தும்கூட அவருக்கு திருவெளிப்பாடுபற்றி ஆழமான புலமை இருக்கும். ஏட்டுக்கல்வியற்ற எத்தனையோ நம்பிக்கையாளர்கள், தங்களது இதயங்களைத் தூய்மைப்படுத்தி, தங்களது உயிர்ப்பு ஆவியினை பரிசுத்தப்படுத்தி, கனல்மிகுந்த ஆவலுடனும், பக்தியுடனும், பணிவுநிலையிலும், கடவுளின்பால் வழிகாட்டலுக்காகவும், உதவிக்காகவும் பிரார்த்தித்து அதன் வழி அவர்கள் மாபெரும் விவேகத்தையும், மாபெரும் புரிந்துகொள்ளுதலையும் பெற்றுள்ளனர். இப்படி பல உதாரணங்கள் உண்டு. இங்கு முக்கியமான கருத்து என்னவென்றால், எவரும் திருவெளிப்பாடுபற்றிய புரிந்துகொள்ளலைப் பெறலாம். ஏனெனில், படிப்பறிவு இல்லாதவரும் சரி, எமுதப்படிக்கத் தெரிந்தவரும் சரி, கல்வி பெற்றவரும் சரி, கல்வியறிவு இல்லாதவரும் சரி, ஒவ்வொருவரின் மானிட ஆவியிலும், திருவெளிப்பாட்டில் உள்ள ஞான முத்துக்களை கண்டுணரக்கூடிய, மாபெரும் உண்மைகளை பகுத்துணரக்கூடிய ஆற்றல் உண்டு. எனவே, எவரும் திருவெளிப்பாடு பற்றிய கல்வி எனக்கு இல்லை என சொல்லிவிட முடியாது. இது முக்கியமான விஷயம். இந்த சமயக் காலகட்டத்தில் இதனை நாம் பாதுகாத்து, தூய்மையாக மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். அதனால், அது எதிர்கால தலைமுறைளுக்கு விவேகத்தின் பொக்கிஷமாக அமைவது மட்டுமின்றி, யாவரும் திருவெளிப்பாட்டை மனிதர்களுடைய வார்த்தைகளிலிருந்து வேறுபடுத்தி சரியான பாதையில் அணுகுவர்.
கற்றல் என்ற பதத்திற்கு பஹாய்களாகியா நாம் விளக்கம் கொடுக்கும்போது நமது விளக்கம் திருவெளிப்பாட்டோடு சம்பந்தப்படிருக்கும். அவ்விளக்கம் சாதாரண வழக்கமான விளக்கத்திலிருந்து மாறுபட்டிருக்கும். கற்றல் என்ற வார்த்தையை நாம் வேறுவகையில் விளக்கப்படுத்தியுள்ளோம். அந்த விளக்கம்பற்றி சொல்லும்போது முதலில் பஹாவுல்லாவின் வார்த்தைகளை உங்களுளோடு நான் பகிர்ந்துகொள்கின்றேன். “இறைத்தூதைரை ஏற்றுக்கொள்ளத் தவறும் ஒரு மனிதன், எல்லைக்குப்பட்ட மானிட அறிவைப் பெறுவதில் பல காலங்களை செலவழித்திருப்பினும், எங்கனம் அவனை நீதியுடன் கற்றறிந்தவன் என அழைத்திட முடியும்?” மேலும் அவர் தொடர்ந்து சொல்கின்றார் இப்படி “எல்லா மனிதர்களிடையேயும் எழுத்துவாசனையற்ற ஒரு மனிதன் இந்த ஓர் உயரியநிலையை பெற்றிருப்பின், அவன் மெய்யாகவே கடவுளது அறிவைப் பெற்றிருக்கும் இக்கற்றறிந்த மனிதர்களில் ஒருவன் எனக் கருதப்படுவான்.” எனவே, அளவுகோள் வித்தியாசமானது. கற்றறிந்தவர் என்பது பற்றிய நமது கருத்து, மெய்யான அறிவின், அதாவது இக்காலகட்டத்தில் பஹாவுல்லாவின் திருவெளிப்பாட்டோடு தொடர்புகொள்வதிலிருந்து வருகின்றது. இதற்கு திருவெளிப்பாட்டை ஏற்றுக்கொள்ளும் ஒரு மனிதர், அந்த திருவெளிப்பாட்டிற்கு தமது இதயத்தைத் திறக்கும் ஒருவர் அவர் படித்தவரோ, எழுதப் படிக்கத் தெரியாதவரோ, உலக வழக்கத்தில் கல்வியறிவு பெற்றவரோ அல்லது கல்வியறிவு பெறாதவரோ, அவர் மெய்யாகவே கற்றறிந்தவர். மெய்யான கற்றறிதல் என்பது நமக்கு இவ்வாறுதான் விளக்கப்படுத்தப் பட்டுள்ளது.

நான் ஒரு விஷயத்தைப்பற்றி ஒருசில வார்த்தைகள் பேசவிரும்புகின்றேன். பஹாய் சமய சொற்களஞ்சியத்தில் அந்த விஷயம் கடந்த சில வருடங்களில் ஒரு பகுதியாக மாறிவிட்டது. பஹாய் கல்விப்புலமை என்பதுதான் அந்த சொற்பகுதி. பல பஹாய் நூல்களில் இவ்வார்த்தை பயன்படுத்தப்படுவதை நீங்கள் காணலாம். உலக நீதிமன்றத்திலிருந்து வரும் செய்தியில் பஹாய் கல்விப்பலமை குறிப்பிடப்பட்டுள்ளது. உலக நீதிமன்றத்தின் வழிக்காட்டலின் கீழ் சில பஹாய் ஸ்தாபனங்கள் இந்த விஷயத்தை மேற்கொன்டுள்ளன. பஹாய்க் கல்விப் புலமையை மேம்படுத்துவதற்காக உலக நீதிமன்றம் அண்மையில் அனைத்துலக போதனை நிலையத்தை உலகெங்கிலுமுள்ள ஆலோசகர்களிடம் பஹாய்க் கல்விப்புலமையை மேம்படுத்திடும் கூடுதல் பொருப்பினை வழங்குமாறு பணித்தது. எனவே, இந்த காரணத்திற்காகத்தான் நான் அதுபற்றி ஒருசில வார்த்தைகள் பேசவிரும்புகின்றேன். அது எவ்வாறு பஹாவுல்லாவின் திருவெளிப்பாட்டோடு தொடர்பு கொண்டுள்ளது என்பதைப் பற்றியும் நான் எனது கருத்தினை கூறவிரும்புகின்றேன். நான் என்ன புரிந்துகொள்கின்றேன் என்றால், அது சம்பந்தமாக “தேசிய பஹாய் மறுசீராய்வு” என்ற சஞ்சிகையின் 1979-ஆம் ஆண்டில் ஜுன் மாத இதழில் பிரசுரமான மிக ஒளிமயமான ஒரு கட்டுரையில் விளக்கப்படுத்தப்பட்டுள்ளது. அந்த விளக்க அறிக்கை உலக நீதிமண்றத்தின் ஆராய்ச்சித் துறையினால் வெளியிடப்பட்டதாகும். இரண்டு பக்கங்கள் நீளமான அக்கட்டுரையில் இந்த வாக்கியம் காணப்படுகின்றது. ” சமயத்திற்கும் விஞ்ஞானத்திற்குமிடையேயுள்ள இணக்கம் என்பது சமய போதனைகளை தர்க்கரீதியாகவும், ஆதாரப் பூர்வமாகவும் நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் கற்க வேண்டு மென்பது மட்டுமல்ல. அவற்றோடு சேர்த்து படைப்பில் உள்ள யாவற்றையும், மானிட வாழ்வின் சகல அமசங்களையும், அறிவையும், தர்க்கரீதியாகவும், திருவெளிப்பாட்டின் கண்கொண்டும் கற்றல் வேண்டும். ” அதை நான் எளிமையாகப் பிரித்துச் சொல்கிறேன். அந்த வாக்கியம் என்ன சொல்கின்றது என்றால் நம் சமயத்தில் சமயமும் விஞ்ஞானமும் ஒத்து இயங்குதல் என்றால் சமய போதனைகளை நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் மட்டும் கற்பது அல்ல. அதோடு சேர்த்து தர்க்க ரீதியாகவும், ஆதாரப் பூர்வமாவும் கற்க வேண்டும். இது அந்த வாக்கியத்தில் ஒரு பாதி. அதில் மறுபாதி என்னவென்றால் படைப்பில் உள்ள வாழ்வில் உள்ள, மானிட அறிவில் உள்ள யாவற்றையும்நாம் பகுத்தறிவோடும் திருவெளிப்பாட்டின் கண்கொண்டும் கற்க வேண்டும். வேறொருவகையில் சொல்வதென்றால், திருவெளிப்பாட்டினைப் பகுத்தறிவு கொண்டும் நாம் கற்கவேண்டும் நம்பிக்கை மற்றும் தியானத்தோடும் நாம் கற்க வேண்டும். அதோடு பகுத்தறிவு கொண்டு கற்கப்படும் விஞ்ஞானம், முகவியல் விஞ்ஞானம் முதலிய துறைகளிலுள்ள அம்சங்களைப் திருவெளிப்பாட்டின் துனைக்கொண்டு கற்க வேண்டும். பஹாய் கல்விப்புலமை எனபது இந்த இரு அம்சங்களையும் கொண்டது என்றுதான் நான் நினைக்கின்றேன்.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் அம்சம் போதனைகளை தர்க்க ரீதியாகவும், ஆதாரப்பூர்வமாகவும் கற்க வேண்டும் என்பதுதான். இது சம்பந்தமாக பாதுகாவலரது எழத்துக்களில் காணலாம். அதில் ஒன்றிரண்டை நான் படிக்கின்றேன். ஒன்றில் அவர் கூறுகின்றார், “கல்வியின் பல கூறுகளை கற்பதானது ஒருவரது அபிப்பிராயத்தை விரிவடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. பிறகு பஹாய் இயக்கம் மற்றும் அதன் கோட்பாடுகளின் முக்கியத்துவத்தை நம்மால் மேலும் புரிந்துகொண்டு உணரமுடியும்”. வேறொரு வகையில் சொல்வதென்றால் மாணிட கல்வியின் பல்வேறு கூறுகளை கற்பதினால் நாம் சமயபோதனைகளைப் பற்றி ஆழமாகத் தெரிந்துகொள்ள முடியும். இது பஹாய் கல்விப்புலைமயின் மீதி அம்சம். இன்னொரு இடத்தில் பாதுகாவாலர் தமது செயலாளர்வழி இப்படி எழதுகின்றார், “இளம் வயதினர் சரித்திரம், பொருளாதாரம், சமுகவியல் மற்றும் இதரகல்விகளை ஆழமாக கற்றிட பாதுகாவலர் எப்போதுமே அறிவுறுத்தியுள்ளார். அது எல்லைக்குட்பட்ட பட்டியல் அல்ல. அதனால் நாம் திருவெளிப்பாட்டினைப் புரிந்துகொள்ள புதிய கோணங்களைப் பெறுகின்றோம்,” இதற்கு நேர்மாறான நடைமுறையும் உண்டு. நேர்மாறான நடை என்னவென்றால் திருவெளிப்பாட்டின் சக்தியின் வாயிலாகவும், ஒளியின் வாயிலாகவும் மானிட அறிவின் பலகூறுகளை கற்பதுதான். பாதுகாவலர் மோலும் கூறகிறார் இப்படி, “சரித்திரம் பொருளாதாரம் சமுகவியல் முதலிய துறைகள் வழங்கும் அறிவுகள் மீது நமது போதனைகள் புதிய ஒளியினை பாய்ச்சமுடியும்”. இது நான் சற்றுமுன்பு படித்தவாக்கியத்திற்கு நேர்மாறான விஷயம் என்பதை கவனியுங்கள். நான் முதலில் படித்த வாக்கியம் என்ன சொல்கின்றது என்றால், நாம் சரித்திரம், பொருளாதாரம் சமுகவியல் முதலிவற்றை படிக்கவேண்டும். ஏனென்றால் அவை பஹாய் போதனைகளைப் புதிய கோணத்தில் புரியவைக்கின்றன. நான் இப்பொழது படித்த வாக்கியம் என்ன சொல்கின்றது என்றால் நாம் அந்தப் பாடங்களை படிக்க வேன்டும். ஏனெறால், நமது போதனைகள் அவற்றின் மீது புதிய ஒளியினை பாய்ச்சுகின்றது. இதன் பொருள் என்ன வென்றால் பாதுகாவலர் இங்கே ஒத்து இயங்கும் ஒருபொது உறவை விவரிக்கின்றார். ஏனெனில், மானிட அறிவு என்ற உலக கல்வியும் திருவெளிப்பாட்டு அறிவும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. மானிட கல்வியான சரித்திரம், பொருளாதாரம், சமுகவியல் மற்றும் இதர பாடங்களைக் கற்பதன் வழி பஹாய் போதனைகளை புதிய கோணத்தில் புரிந்துகொள்ளலாம். அதுபோல பஹாய்ப் போதனைகள் வழி கொண்டு மானிட கல்வியைப் புதிய கோனத்தில் புரிந்து கொள்ளலாம். எனவே கல்விக்கும் திருவெளிப்பாட்டுக் கல்விக்கும் இங்கே ஓர் இணக்கம் உண்டு.

சரித்திரத்தில் கற்றுக்குட்டியாக இருக்கும் எனக்கு இந்த வாக்கியம் பெரிதும் மன நிறைவளிக்கின்றது. ஏனெனில், பல்வேறு சமய காலக்கட்டங்களின் இரண்டாம் நூற்றான்டில் அறிவார்ந்த நிலைக்கு எதிர்ப்பு இருந்தது. கிறிஸ்துவ சமயத்தின் இரண்டாம் நூற்றண்டு காலத்தில் நிலவிய அறிவுப்பூர்வமான கல்விக்கு இருந்துள்ள எதிர்ப்பை நீங்கள் கவனித்தால், இஸ்லாம் சமத்தின் இரண்டாவது நூற்றாண்டில் இருந்த நிலையினை நீங்கள் கவனித்தால், ஒரு நிலைக்கு சமயம் பரவியதுடன் சமயம் ஏளனத்திற்கும், கொடுமைக்கும் உள்ளானது. அறிவுப்பூர்வ நிலைக்கு எதிரியாக விளங்கிய சமயவர்கள் ” தேவையான எல்லா அறிவும் எங்களுக்கு உண்டு. இதற்கு வெளியே உள்ள அறிவில் எங்களுக்கு அக்கறையில்லை ” என்று சொன்னார்கள். மிதமிஞ்சிய நிலையில் அவர்கள், “அது சாத்தானின் உலகம். எங்களுக்கு திருக்குர்-ஆன் போதும், எங்களுக்கு ஏசுநாதரின் திவ்விய மொழிகள் உண்டு. அவரது மருவருகையின் வாக்குறுதியும் உண்டு, அது போதும்” என்று சொன்னார்கள். இதனால் மதம் என்பது அறிவுப்பூர்வமான கல்விக்கு எதிரியாக மாறி, ஒரு வடுவை ஏற்படுத்த, கடந்த நூற்றாண்டுகளில் மதம் வீழ்ச்சியுற்றது. நமது சமயத்தில் அத்தகைய வீழ்ச்சி, ஒப்பந்தத்தின் சமயமும் விஞ்ஞானமும் ஒத்து இயங்குதல் என்ற கோட்பாட்டின் வழி சமயம் அறிவுப்பூர்வமான கல்வி நிலைக்கு எதிரி என்ற அபாயம் தடுக்கப்பட்டது. மேலும் சமயம் முழுக்க முழுக்க அறிவுப்பூர்வமான சமாச்சாரம் என்ற நினைப்புக்கு இட்டுச்செல்லும் பாதகமும் பஹாய் கல்விப்புலமையின் கோட்பாடுகளால் தவிர்க்கப்பட்டுள்ளது. மானிட சரித்திரத்தில் யுகம்-யுகமாக பஹாய் மிகவும் கடினப்பட்டு சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் பரந்த அளவிளான மானிட அறிவோடு சமயத்தையும் அதன் உயிர்ப்பு சக்தியையும் இணைப்பதன் வழி சமயம் பாதுகாப்பாக இருக்கின்றது என்ற நிலையையும் அந்த பஹாய் கல்விப்புலமை கோட்பாடு உறுதிசெய்ததுள்ளது. அக்கோட்பாடு மிக அற்புதமான ஓர் இணக்க நிலையைப் பேணி பாதுகாத்துள்ளது. மானிட அறிவுக்கும் பஹாய் திருவெளிப்பாட்டிற்கும் இடையேயுள்ளதொடர்புறவை நாம் துண்டித்தால் சமய வெறி தலைதூக்கும். அறிவுப்பூர்வமான கல்வி நிலைக்கு எதிரான நிலை ஏற்பட்டுவிடும், அல்லது சமயம் என்பது விஞ்ஞான அளவுகோள்களிடம் சரணடைந்துவிடும். வெறும் அறிவுப்பூர்வமான நிலையிலேயே சஞ்சரிக்கும். இத்தகைய எல்லா அபாயங்களும் பஹாய் கல்விப்புலமையில் உள்ள ஏக்கத் தன்மையின் வழி தடுக்கப்பட்டுள்ளது.

இறுதியாக, நான் எனது உரையை முடிப்பதற்க்கு முன்பு ஆக்க சக்திமிக்க இறைவனின் திருவாக்கினை பயன்படுத்தி நாம் பரிபூரண மாற்றம் அடைவதில் நாம் சந்திக்கும் வீழ்ச்சிகளை மிக சுருக்கமாக கூறிவிடுகின்றேன். நாம் பஹாவுல்லாவினுடைய திருவெளிப்பாட்டின் சக்தியை பெற முயலுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். நமது இதயங்களை அதன்பால் திறக்கின்றோம். அந்த திருவெளிப்பாட்டில் உள்ளுர புதைந்து கிடக்கின்றது என வாக்களிக்கப்பட்ட அருளாவியினைப் பெறுவதற்கு நாம் முயலுகின்றோம். இதில் தடைகள் என நான் கருதுவதை முதலில் பட்டியலிடுகின்றேன். அப்படி முயற்சி மேற்கொள்ளும்போது ஒருவரது கண்களுக்கு அனைத்துமே தெரிந்துவிடாது. அதனால் ஒரு ஏமாற்றம் வரக்கூடும், அதை நான் அப்பட்டியலில் இணைக்கவில்லை. நான் சொல்லப் போகும் முதல் தடை ஒரு மாபெரும் அபாயம். அது என்னவென்றால், திருவெளிப்பாட்டினை மனிதர்களது வார்த்தைகளிவிருந்து வேறுபடுத்தி உணராமல் இருப்பதன் வாயிலாக சமயபோதனைகளை வெறும் மனிதர்களின் வார்த்தைகளாக கருதிவிடும் அபாயம். பிறகு நாம் போதனைகளை மனிதனின் சாதாரன வார்த்தைகளாக கருதுவோம். பிறகு என்ன இருக்கும்? பல நிகழ்ச்சிகள் நடக்கும். அந்த போதனைகளில் குற்றம் குறைகளை கண்டுபிடிக்க ஆரம்பிப்போம். இறைதூதரின் நாவிலிருந்து வெளிவருகின்ற தெய்வீகமாக கட்டளையிடப்பட்டு வெளிவருகின்ற புனிதமிகு வார்த்தைகளை எடைபோட குறையுள்ள மானிதனின் மானிட அளவுகோல்களைப் பயன்படுத்துகின்றோம். நண்பர்களே, இது எவ்வளவு நகைப்புக்குரிய விஷயம். பஹாவுல்லா இவ்வாறு நம்மை கடுமையாக எச்சரிக்கின்றார், கடவுளது திருநூலை உங்களுக்கிடையே உள்ள எத்தகைய அளவு கோல்களினாலும், விஞ்ஞான முறைகளினாலும் எடைபோடப் பார்க்காதீர்கள். ஏனெனில், அந்த திருநூலே மாசற்ற துலாக்கோலாக மனிதர்களுக்கிடையே நிலை நாட்டப்பட்டுள்ளது”. உலக நீதிமன்றமும் இதுபற்றி எழுதியுள்ளது. உலக நீதிமன்றம் இப்படி எழுதியது, “எனவே, புனிதவாசகங்களை புரிந்துகொள்ள முயலும்போது, அந்த வாசகங்களில் உண்மையான முரண்பாடு இல்லை என்றும், அப்படிப்பட்ட முரண்பாடு காணப்படமாட்டாது என்றும் உணரவெண்டும்”. இந்த பார்வைகொண்டுதான் அவ்வாசகங்கள் கொண்டிருக்கும் பொருளின் ஒற்றுமையை நாம் நம்பிக்கையோடு தேடவேண்டும். இது ஒரு தடை.

இரண்டாவது தடை என்னவென்றால் போதனைகாளப் பற்றி நமக்கு ஏற்கனவே தெரிந்துள்ள அபிப்பிரயாயங்களோடு சமய போதனைகளை அணுகுதல். இந்த முன் அபிப்ராயாயத்தால் போதனைகள் நம்மை வழிநடத்திடவிடுதற்கு பதிலாக, போதகைளை நாம் விரும்பும் வழிக்கு கொண்டுபோகிறோம். பஹாவுல்லாவின் திருவெளிப்பாட்டு நூல்கள் ஏறத்தாழ 100 இருக்கும். நாம் சில வேளையில், இங்கே ஒரு வார்த்தை, அந்த நூலில் ஒரு சொற்றொடைரயும், இன்னொரு நூலின் ஒரு வாக்கியத்தையும் எடுத்து விரும்பியவாறு பயன்படுத்துவோம். பிறகு என்ன நடக்கும்? திருவெளிப்பாட்டிற்கு நமது ஆன்மாக்களை சரணடையச்செய்து அதனிடம் முழுதும் ஒப்படைத்து அது இட்டுச்செல்லும் வழியில் செல்ல தயாராகாமல் நாம் விரும்பிய வழிக்கு போதனையை எடுத்துச் செல்ல ஆரம்பிப்போம். எனவே, போதனைகளை வாசிப்பதிலும், அவற்றை கற்பதிலும், அவற்றிலிருந்து விவேகத்தை பெறுவதிலும் நமக்கு மாபெரும் சோதனை உண்டு, அகந்தை எனும் சோதனை உண்டு, போதனைப் பற்றி ஏற்கனவே நாம் முடிவு செய்திருக்கும் முன் அபிப்பிராயத்தில் திளைத்திருக்கும் சோதனை உண்டு, நமது விருப்பத்தை இறைத்தூதரின் விருப்பத்திற்கு சரணடைந்து அவர்தம் போதனைகள் நம்மை வழிநடத்தவிடும் சோதனை உண்டு. இந்த சோதனையில் எனக்கு ஏற்படும் அதிர்ச்சி உங்களுக்கும் ஏற்படும். உங்களுடைய அதிர்ச்சி எனக்கும் ஏற்படும். இது நமது சோதனை. போதனைகள் நம்மை வழிநடத்திட வழிவிட விரும்பமுகின்றோமா அல்லது போதனைகளை நிறுத்தி நாம் விரும்பு வழிக்கு அதை வற்புறுத்தி இழுக்கின்றோமா? ஒரு சில காலத்திற்கு பஹாய் நம்பிக்கையாளராக இருந்துவிட்ட ஒருவர் அதிர்ச்சியளிக்கும் ஒருசில போதனைகளைப் படித்துவிட்டு” எனக்கு தெரியாதே இதையெல்லாம் நாம் நம்புகின்றோம் என்று, இது உண்மையாய் இருக்கும் என்று நான் நினைத்ததே இல்லையே” என்று கூறுவார்கள். எனக்கும் இந்த அனுபவம் உண்டு, உங்களுக்கு நிச்சியமாக இந்த அனுபவம் இருக்கும்.

மூன்றாவது அபாயம் அறிவுப்பூர்வமான அகந்தை. சமூகத்திற்கு வெளியே “கல்விமான்” என்ற அடைமொழியை படித்திருப்போம். அத்தகைய “படித்த மேதையோடு” பழகும்போது நாம் அவமானப்படுத்தப்பட்டிருப்போம், ஒதுக்கப்பட்டிருப்போம். நாம் போதனைகளைப்பற்றி ஆராயும்போது, பஹாய் கல்விப்புலமையில் நாம் நடைபோடும் போது பஹாய் சமுகத்தினுள் அகந்தை என்ற அறிவுத் தற்பெருமையை நுழையவிடாமலிருப்பதில் நாம் பெருமுயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். பஹாவுல்லா நமக்காக தயார் செய்த நல்விருந்து மேஜைக்கு அந்த வேன்டத்தகாத விருந்தாளியைக் கொண்டுவரக்கூடாது. பஹாவுல்லாவே இப்படி சொல்லியுள்ளார், “தங்களது சாதனைகளில் பெருமையடையாதவர்கள் ஆசிபெற்றவர்கள்” இன்னொரு இடத்தில் உலக நீதி மன்றத்தின் ஆராய்ச்சித் துறையினால் வெளியிடப்பட்ட மிக அழகிய, அற்புதமான இந்த வாக்கியம் ஒரு முக்கியமான கேள்விக்கு பதிலளிப்பதாய் உள்ளது. கேள்வி இதுதான், மாபெரும் கல்வியைத் தொடர்பவர்கள், தங்களது அபிப்பிராயங்கள் கருத்துக்கள் சம்பந்தமாக நாம் காட்டிட வேண்டிய அதே பணிவுநிலை, தோழமைநட்பு, சகிப்புத்தன்மை, மரியாதை ஆகியவற்றை பிரதிபலிப்பதிலிருந்து விதிவிலக்களிக்கப்பட்டவர்களா?” இக்கோள்விக்கு இதே வாக்கியத்தில் காணப்படும் பதில் அபாரம், “இல்லை. நீங்கள் விதிவிலக்கப்படவில்லை. ஒவ்வொரு மனிதரும் அந்த தன்மைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவரது மெய்யான கல்வியிலும் விலக்களிக்கப்படவில்லை”.

அந்த வாக்கியத்தில் தொடர்ந்து இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, “கல்விமான்கள் மட்டுமின்றி எல்லா மனிதர்களும் தங்களது பேச்சுகளின் விவேகத்தையும், மற்றவர்களது கருத்தை மதிப்பிடும்போது சகிப்புத்தன்மையையும், தங்களது நடத்தையிலும், பேச்சிலும் தோழமைநட்பையும் காண்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.”

இன்னும் இரண்டு தடைகள் உள்ளன. நான் முடிப்பதற்து முன்பு இவற்றை சொல்ல விரும்புகின்றேன். அதில் ஒன்று, நமக்கு எல்லாருக்கும் தெரிந்ததுதான். நாம் திருவெளிப்பாட்டை கற்றிடும்போது தனிநபர் விளக்கவுரையின் திருவாசகங்களில் தெளிவாக உள்ளது. நமது சமயத்தின் நோக்கம் எல்லைக்குப்பட்ட ஒரு அறிவுக்கல்வி கூடு அல்ல. ஒரு கருத்தை நமது மனங்களில், நமது அக்கறையை எழச்சிபெறச்செய்து, நமது சிந்தனையின் எல்லைகள் அகலப்படுத்திட நமது சமயம் ஊக்குவிக்கின்றது. அதன் விளைவுதான் விளக்கம். ஆனால் இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் அது தனிநபரின் சுயவிளக்கம். சமய போதனைகளில் அதிகாரப்பூர்வமாக உள்ள, இலைமறை காய்மறையாக உள்ள சட்டங்களுக்கு தெளிவையும் விளக்கத்தை கொடுக்கும் பொறுப்பு உலக நீதிமன்றத்திற்கு உள்ளது.