இஸ்முல்லாஹுல்-அஸ்டக்


மெய்யன்பர்களுக்கான நினைவோவியங்கள்
நினைவோவியங்கள்

இஸ்முல்லாஹுல்-அஸ்டக்

இம்மை நீத்து அதி உயர்ந்த தொடுவானத்திற்கு ஏகிய இறை சமயத்தின் திருக்கரங்களில் ஜிநாப்-இ-இஸ்முல்லாஹுல்-அஸ்டாக் ஒருவராவார்.

மற்றொருவர் ஜிநாப்-இ-நபில்-இ-அக்பர் ஆவார். மற்றும் பலரில் ஜிநாப்-இ-முல்லா அலி-அக்பரும் ஜிநாப்-இ-ஷெய்க் முஹம்மட்-ரிடாய்-இ-யாஸ்டியும் ஆவர். மேலும், பலரிடையே, வணக்கத்திற்குறிய உயிர்த் தியாகியான, அகா மிர்சா வர்காவும் வீற்றிருந்தார்.

இஸ்முல்லாஹுல்-அஸ்டாக் மெய்யாகவே தமது வாழ்வின் ஆரம்பத்திலிருந்து தமது இறுதி சீமுச்சு வரை தேவரின் சேவகனாகவே இருந்தார். இளமைக் காலத்தில், இவர் காலஞ் சென்ற சிய்யித் காசிம் அவர்களின் வட்டத்தில் சேர்ந்துகொன்டு அவரது சீடர்களில் ஒருவரானார்.

பாரசீகத்தில் தமது தூய்மையான வாழ்விற்கு பெயர் பெற்றவர் இவர், புனிதர் முல்லா சாடிக் எனும் புகழும் எய்தினார். ஆசிர்வதிக்கப்பட்டவர் இவர், திறண்வாய்ந்தவர், கற்றவர், பெரும் மதிப்பும் பெற்றவர் எனத் திகழ்ந்தார்.

குராசானின் மக்கள் இவர்பால் அதிகமாய் பற்று கொண்டார்கள், ஏனெனில் இவர் ஒரு சிறந்த பண்டிதரும் மத குருக்களில் ஒப்பற்றவரும் தனிச்சிறப்பு பெற்றவருமாவார்.

சமயத்தின் போதகராக, தனக்கு செவிசாய்ப்போர் எல்லோரையும் வெகு சுலபமாக வென்றிடும் அளவிற்கு இவர் அத்துனை சொல்லாற்றலாலும், அத்துனை சக்தியோடும் உரை நிகழ்த்துவார்.

பக்தாத்திற்கு வந்து பஹாவுல்லாவின் முன்னிலையை அடைந்த பிறகு, ஒரு நாள் ஆண்கள் வசிக்கும் அறையின் வாசலில், ஒரு சிறு தோட்டத்தின் அருகே அவர் அமர்ந்திருந்தார்.

நான் மேலே அந்த வாசலை முன்னோக்கிய வன்னம் இருக்கும் அறைகள் ஒன்றில் இருந்தோன். அத் தருணம், பத்-ஆலி ஷாவின்யீ பேரனான, ஒரு பாரசீக இளவரசர் வீட்டிற்குள் நுழைந்தார்.

அந்த இளவரசர் இவரைக் கேட்டார், *நீங்கள் யார்?* என. *இந்த இல்லத்தின் ஒரு சேவகனாவேன் நான்*. இவ் வாசலைக் காத்திருக்கும் காவலர்களில் ஒருவன் நான் என இஸ்முல்லா பதில் அளித்தார்.

நான் மேலே இருந்து செவிமடுத்துக்கொண்டிருக்க, கீழே இவர் சமயத்தைப் போதிக்கத் துவங்கினார். அந்த இளவரசரோ ஆரம்பத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்- ஆயினும், கால் மணி நேரத்திற்குள், சாந்தமாகவும் மரியாதையுடனும், ஜிநாப்-இ-இஸ்முல்லா அவரை அமைதி பெறச்செய்துவிட்டார்.

இவர் சொன்னதை அந்த இளவரசர் மிக்க கோபத்தோடு மறுத்தபிறகு, தனது முகம் தன் கோபத்தை வெகு தௌவீவாக பிரதிபலித்துவிட்ட பிறகு, இப்பொழுது அவரது கோபம் புன்னகைகளாய் மாறின, இஸ்முல்லாவை சந்தித்ததிலும் அவர் உரைத்தவற்றை செவிமடுத்ததிலும் இளவரசர் அதிகபட்சமான மனதிருப்தியினை தெரிவித்தார்.

இவர் எப்பொழுதுமே கலகலப்புடனும் ஆனந்தத்துடனும் போதிப்பார், மற்றும் தான் பேசுபவர் எத்துனை ஆவேசமான கோபத்தை தன்பால் செலுத்திட்ட போதும் இவர் சாந்தத்துடனும் ஏற்கக்கூடிய நகைச்சுவையோடும் பதிலளிப்பார்.

இவரது போதனை முறை தனிச்சிறப்பு வாய்ந்தது. இவர் மெய்யாகவே, இறைவனின் நாமமாகிய இஸ்முல்லாவே, இது அவரது புகழின் காரணமாக அல்ல, மாறாக, இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆன்மா என்பதினாலேயே ஆகும்.

இஸ்முல்லா அதிக எண்ணிக்கையிலான இஸ்லாமிய மரபுக்கூற்றுகளை மனனம் செய்திருந்தார் மற்றும் ஷேய்க் அஹ்மத் சிய்யித் காசிம் அவர்களின் போதனைகளில் தேர்ச்சியும் பெற்றிருந்தார். இவர் ஷீராசில், சமயத்தின் ஆரம்ப காலத்தில் அதன் நம்பிக்கையாளர் ஆனார், பிறகு விரைவில் அவ்வாராகவே பரவலான புகழும் பெற்றார்.

இவர் வௌவீப்படையாகவும் அச்சமின்றியும் போதித்ததன் காரணமாக, அவர்கள் இவர் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி நகரத்தில் உள்ள சாலைவழிகளிலும் சந்தைவழிகளிலும் இழுத்துச் சென்றனர். அந்த நிலையிலுங்யீ கூட, சாந்தமாகவும் நகைத்துக்கொண்டும், இவர் மக்களோடு பேசிய வன்னமிருந்தார்.

அவர் இணங்கவில்லை@ அவர் ணியீபசுவதை தடுக்கவும் முடியவில்லை.. அவரை அவர்கள் விடுவித்தவுடன் அவர் ஷீராஸை விட்டு குஃராசானுக்குச் சென்றார், அங்குங் கூட சமயத்தைப் பரப்பத் துவங்கினார், அதன் பிறகு அவர் தபார்சி கோட்டையை நோக்கிய பயணத்தை பாபுல்-பாப் அவர்களுடன் துவங்கினார்.

அங்கு இவர் தியாகத்திற்கு ஆளாக்கப்பட்டவர்களுடன் ஒருவாராகி கொடுமையான துன்பங்களைத் தாங்கினார். அந்தக் கோட்டையில் அவரைக் கைதியாக்கி அவர்கள் மசிந்தரானின் தலைவர்களிடம், ஆங்காங்கே அவரை இழுத்துச் செல்ல, ஒப்படைத்துவிட்டு இறுதியில் அந்த மாநகரத்தின் ஒரு வட்டாரத்தில் கொல்லப்படுவதற்காக ஒப்படைத்தனர்.

சங்கிலியால் கட்டப்பட்டு, நியமிக்கப்பட்ட இடத்திற்கு இஸ்முல்லா கொண்டுவரப்பட்ட போது, நடு இரவில் அவரை சிறையிலிருந்து விடுவித்து ஒரு ஆபத்தில்லா இடத்திற்குக் கொண்டுச்செல்ல இறைவன் ஒருவரது மனதைத் தூண்டிவிட்டார். நடுங்கச்செய்யும் இந்த சோதனைகள் முழுவதிலும் அவர் தம் நம்பிக்கையில் உறுதியாகவே இருந்தார்.

உதாரணமாக, எதிரிகள் எப்படி அந்த கோட்டையைச் சுற்றி தாக்கினர் என்றும், தங்களது பீரங்கிகளிலிருந்து தொடர்ச்சியாக குண்டுகளைக் கொட்டிக் கொன்டிருந்தனரென்றும் சிந்தித்துப்பாருங்கள். நம்பிக்கையாளர்கள், இஸ்முல்லா உட்பட, பதினெட்டு நாட்களுக்கு உணவின்றி இருந்தனர்.

தங்களது காலனிகளின் தோல்களை உன்டு வாழ்ந்தனர். அதுவும்கூட விரைவில் தீர்ந்துவிட்டது, பிறகு அவர்களுக்குத் தண்ணீரைத் தவிர வேரெதுவும் இல்லை. காலையில் ஒரு மிடர் நீரை அவர்கள் அருந்தி விட்டு பசியோடும் கலைப்போடும் கோட்டையில் கிடந்தனர்.

ஆயினும், தாக்கப்பட்ட பொழுது, அவர்கள் உடனே குதித்தெழுந்து நிற்பர்யீ, மற்றும் எதிரிகளின் முன்னே அற்புதமான அஞ்சாமையையும் தாக்குதல்களின்பால் திகைக்க வைக்கும் தற்காப்பையும் காண்பித்து, எதிரிகளை கோட்டைச் சுவர்களிலிருந்து பின் ஓடச்செய்தனர்.

பசிக் கொடுமை பாதினெட்டு நாட்கள் நீடித்தது. இது ஒரு மோசமான சோதனையாய் ஆயிற்று. ஆரம்பமாக, அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெகு தூரம் இருந்தனர், எதிரிகளினால் தாக்கப்பட்டும் தடுக்கப்பட்டும் இருந்தனர், மேலும் அவர்கள் பசியினால் வாடியுமிருந்தனர் – அதற்கும் மேலாக எதிரிப் படையின் திடீர்த் தாக்குதல்களும், குண்டுகள் மழை போல் பொழிந்து கோட்டையின் மத்தியில் விழுந்த வன்னமுமாக இருந்தது.

இத்தகைய ஓர் சூழ்நிலையில் அசையாத நம்பிக்கையும் பொறுமையும் கொள்வது முற்றிலும் சிரமமானது, அத்தகையதொரு கொடூரமான சேதனைகளைத் தாங்கிடுவது காணக்கிடைக்காத ஒர் அற்புதச் செயலாகும்.

தாக்குதல்களில் இஸ்முல்லா தளரவில்லை. விடுதலை பெற்றவுடன், இவர் முன்பைவிட வெகு பரவலாக போதித்தார். ஒவ்வொரு உயிர் சீமுச்சையும் இவர் மக்களை இறைவனது இராச்சியத்திற்கு அழைப்பதற்கென்றே செலவிட்டார்.

:ராக்கில் இவர் பஹாவுல்லாவின் சந்நிதானத்தை அடையும் வாய்ப்பினைப் பெற்றார், மறுபடியும் அதி பெரும் சிறையில் அவரிடமிருந்து கருணையையும் தயையையும் பேற்றார்.

இவர் ஒரு அலைமோதிடும் கடலைப்போலவும், உயரப் பறந்திடும் இராஜாளியைப் போலவும் திகழ்ந்தார். இவரது வதனம் பிரகாசித்தது, இவரது நா சொல்வன்மை கொன்டிருந்தது, இவரது ஊக்கமும் உறுதியும் பிரமிக்கத்தக்கதாய் இருந்தது. இவர் தன் உதடுகளை போதிப்பதற்கெனத் திறந்தபொழுது, ஆதாரங்கள் பொழிந்திடும் – இவர் ஓதவோ அல்லது பிரார்த்தனைச் செய்யவோ செய்தாரேயானால், அவரது கண்கள் மேகங்களைப் போல் கண்ணீரைப் பொழிந்திடும்.

இவரது முகம் பிரகாசமாகவும், வாழ்க்கை ஆன்மீகமாகவும், அறிவு கற்றதும் ஓதாது இயல்பானதாகவும் இருந்தது. அவரது ஆர்வம், உலகின்பால் பற்றின்மை, இறைவனின் மீதுள்ள பக்தியும் அச்சமும் யாவும் தெய்வீகமானது.

இஸ்முல்லாவின் கல்லறை ஹமாதானில் உள்ளது. அதிகமான நிருபங்கள், அவர் இறந்த பிறகு ஒரு விசேஷ நினைவு நிருபம் உட்பட, பஹாவுல்லாவின் அதி உயரிய எழுதுகோலினால் அவருக்காக வௌவீப்படுத்தப்பட்டுள்ளன. இவர் ஒரு அதி பெரும் மனிதராவார், எல்லா வகையிலும் சிறந்தவராவார்.

அத்தகைய சிறப்பான ஜீவன்கள் இப்போது உலகைவிட்டுச் சென்றுவிட்டன. நல்ல வேலை, அவர்கள் பஹாவுல்லாவின் விண்ணேற்றத்திற்யீகு பிறகு நிகழ்ந்த பெருஞ்சோகங்களை – அந்த கோடுரமான பேரிடர்களை – காண இன்னும் இருந்திட வில்லை – ஏனெனில் உறுதியாக ஊன்றப் பட்டிருக்கும் மலைகள் கூட இவைகளால் ஆடி நடுங்கிடக் கூடும், ஊயர்ந்த சிகரமிட்டிருக்கும் மலைகளும் குன்றிடக்குடும்.

மெய்யாகவே இவர், இறைவனின் பெயரான இஸ்முல்லாவே. இவரது கல்லரையை வலம் வருபவரும், அந்த அடக்க ஸ்தலத்தின் மன்னைக் கொன்டு தன்னை ஆசிபெறச் செய்கிறவுரும்யீ பலனடைவார். அப்ஹா இராஜியத்தில் இவர்பால் போற்றுதலும் புகழும் சேரட்டுமாக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: