ஆசிய்யி காஃனும்


ஆசிய்யி காஃனும்
(பாஹிய்யா காஃனும் வாய்மொழிந்தவை)

திருமணம்

பஹாவுல்லாவுக்கு ஏறத்தாழ பதினைந்து வயதாகிய போது, அவரது மூத்த தமக்கையாகிய  சாரிஃ காஃனுமுக்கும், யால்ரூட் நகரை சார்ந்த மிர்ஸா இஸ்மாயில்-இ-வஸீரின் மகனாகிய மிர்ஸா மஹ்மூட்டுக்கும் திருமணம் நடந்தது. புதிய சமயத்தை ஏற்றுக்கொள்ளாத இந்த மிர்ஸா மஹ்மூட்டுக்கு ஓர் இளைய தங்கை இருந்தார். அவருடைய பெயர், ஆசிய்யி காஃனும் என்பதாகும். இவர் கவர்ச்சிமிக்கவர், துடிப்புமிக்கவர், மற்றும் பெரும் அழுகுடையவர். இவர் பருவமடைந்ததும், சாரிஃ ஃகானும் தமது தந்தையை அனுகி ஆசிய்யி காஃனுமைத் தமது தம்பியாராகிய பஹாவுல்லாக்குப் பெண் கேட்கும்படி வேண்டினார். அப்போது பஹாவுல்லா பதினெட்டு வயதை அனுகிக்கொண்டிருந்தார். இவர்களுடைய திருமணம் 1835ம் வருடம் அக்டோபர் மாதம் நடந்தது. இந்த ஆசிய்யி ஃகானுமே மாஸ்டராகிய அப்துல் பஹாவின் தாயார் ஆவார்.

பாஹிய்யா காஃனும் கூறியவை

அவர் மிர்ஸா இஸ்மாயிக்  எனும் ஒரு உயர்நிலை பாரசீக வஸீரின் ஒரே மகளாவார். இந்த வஸீரும் மிர்ஸா அப்பாஸ் புஸூர்க்காகிய என் பாட்டனாரும் பெரும் செல்வம் படைத்தவர்கள். என் தாயாரின் சகோதரர் என் தந்தையாரின் சகோதரியை மணந்தபோது, அந்த இரண்டு மேல்மட்ட குடும்பங்களின்  இரட்டை உறவு மாநிலம் முழுவதும் பெரும் ஆர்வத்தை உண்டாக்கியது. “செல்வத்தோடு செல்வம் சேர்ப்பது இதுவென” மக்கள் பேசிக்கொண்டனர். ஆசிய்யி காஃணும் அவர்களின் சீர்வரிசைகள் அவருடைய குடும்பத் தகுதிக்கு ஏற்றவாறு மிக அதிகமாகவே இருந்தன. அவர் தமது கனவரின் வீட்டுக்கு வந்த போது நாற்பது கோவேறு கழுதைகளில் அவருடைய பொருள்கள் சுமந்துவரப்பட்டன.

ஆசிய்யி காஃனும் மிர்ஸா மிஹ்டி ஆகியோரின் கல்லரைகள்

திருமணத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே ஒரு பொற்கொல்லர் அவருடைய வீட்டிற்கு வந்து நகைகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டார். அவருடைய உடைகளின் பொத்தான்கள் கூட தங்கத்தினாலும் வைரங்களாலும் ஆனவை. (இந்தப் பொத்தான்கள் பஹாவுல்லா நாடுகடுத்தப்பட்டு திஹரான் நகரிலிருந்து பாக்தாத் செல்லும் மிகக்கடுமையான பயணத்தின் போது ரொட்டிக்காக பண்டமாற்று செய்யப்பட்டன) நான் அவரை முதன் முதலில் கண்டது போல் நீங்கள் காண முடிந்தால்! அவர் உயரமாகவும், மெல்லிய தேகம் கொண்டவராகவும், மென்நயம்மிக்கவராகவும்,  கருநீலக் கண்களுடையவராகவும், பெண்டிரிடையே ஒரு முத்தாகவும், ஒரு மலராகவும் விளங்கினார்.

சிறுவயது முதற்கொண்டே அவருடைய விவேகமும் நுண்ணறிவும் தனிச்சிறப்பு மிக்கவையாக விளங்கியதாக நான் அறிந்துள்ளேன். என் சிறு வயது முதலான அவரைப் பற்றிய என் ஞாபகத்தில், அவர் தமது குணபாவத்திலும் வனப்பிலும் ஒரு ராணியைப் போல் விளங்கியே வந்துள்ளார். அனைவரைப் பற்றியும் அக்கறை கொண்டவராகவும், மென்மைமிக்கவராகவும், வியக்கவைக்கும் தன்னலமற்றவராகவும், இருந்தார். அவருடைய எந்த ஒரு செயலும் அவருடைய தூய்மையான இதயத்தை வெளிப்படுத்தத் தவறியது கிடையாது. எங்கெங்கு அவர் சென்ற போதும் நான்கு திசைகளையும் மென்மையான பணிவெனும் நறுமணத்தால் அரவணைக்கும், அன்பும் மகிழ்ச்சியும் மிக்க ஒரு சூழ்நிலையை அவருடயை பிரசன்னம் உருவாக்கியது.

என் பெற்றோர்கள், அவர்களுடைய திருமணத்தின் ஆரம்பகாலத்திலிருந்தே, அரசாங்க அலுவல்கள், சமூக சடங்குகள், பாரசீகத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்களும், பொருள்வளம் மிகுந்தவர்களும் கடைப்பிடித்து வந்த ஆடம்பர வாழ்வுமுறைகள் ஆகியவற்றில்  குறைந்த அளவே கலந்துகொண்டனர்; என் தாயாரும் அவருடைய மேன்மைமிகு கனவரும், இத்தகைய லௌகீக மகிழ்ச்சிகளை அர்த்தமற்றவை என கணக்கிட்டு, ஏழைகள், வாட்டமுற்றோர், துன்பமுற்றோர் ஆகியோருக்கு உதவுவதில் தங்கள் நேரத்தை செலவிடுவதையே விரும்பினார்கள்.
எங்கள் வீட்டு வாசலிலிருந்து எவருமே திருப்பியனுப்பப்பட்டதில்லை; வருகையளித்த எல்லாருக்குமே எங்கள் விருந்து மேஜை தயாராக இருந்தது. ஏழைப் பெண்கள் என் அம்மாவைக் காண அடிக்கடி வருவார்கள்; அவரிடம் தங்கள் சோகக் கதைகளைக் கூறுவார்கள்; அவருடைய அன்பான உதவியின் மூலமாக ஆறுதலும், தேறுதலும் பெற்றுச் செல்வார்கள்.

என் தந்தையை எல்லாருமே “ஏழைகளின் தந்தை” என அழைத்த அதே வேளை என் தாயை “ஆறுதலின் அன்னை,” என அழைத்தார்கள். அதிலும், என் தாயின் முகத்தைப் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே ஏறெடுத்துப் பார்த்ததுண்டு.

இவ்வாராக எங்களுடைய அமைதியான நாள்கள் நகர்ந்துகொண்டிருந்தன. சில வேளைகளில் நாட்டுப்புறத்தில் உள்ள எங்களுடைய வீட்டுக்கு நாங்கள் செல்வதுண்டு; அங்கு என் அண்ணன் அப்பாஸும் நானும் அற்புதமான பூக்கள் மலர்ந்தும் பழுத்த பழங்களுமுடைய அழகான தோட்டங்களில் விளையாட மிகவும் விரும்புவோம்; ஆனால் என் இளவயதில் நடந்த இந்த நிகழ்ச்சிகளின் நினைவுகள் எனக்கு மங்கலாகவே இருக்கின்றன.

ஒரு நாள், எனக்கு அப்போது ஆறு வயதுதான் இருக்கும், நன்றாகவே ஞாபகம் இருக்கின்றது, ஒரு சில மூளை குழம்பிய பாப்‘இக்களால் ஷா மன்னர் மீது கொலை முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. அப்போது நியாவரானில் உள்ள தமது நாட்டுப்புற வீட்டிற்கு என் தந்தை சென்றிருந்தார். அஃது அவர் வசமிருந்த சொத்தாகும். அங்கு வசித்த கிராமவாசிகள் அனைவரும் என் தந்தையால் பராமரிக்கப்பட்டு வந்தவர்களாவர்.

திடீரென ஒரு சேவகன் என் அம்மாவைக் காண திகிலுடன் ஓடி வந்தார். “நமது யஜமானர், நமது யஜமானரைக் கைது செய்துவிட்டார்கள், நான் என் கண்ணால் கண்டேன்,“ என கூக்குரலிட்டான்.

அவர் பல மைல்கள் நடத்திவரப்பட்டுள்ளார்! ஐயோ, அவரை அவர்கள் அடித்துவிட்டிருக்கின்றார்கள்! அவர் பாஸ்டினாடோ சித்திரவதையை அனுபவித்துள்ளார் எனவும் கூறுகின்றார்கள்”. அவருடைய கால்களில் இரத்தம் வடிந்துகொண்டிருக்கின்றது. அவருடைய கால்களில் காலணிகள் இல்லை. அவருடைய தலைப்பாகையையும் காணவில்லை! அவருடைய மேலாடைகள் கிழிந்திருக்கின்றன! அவருடைய கழுத்தைச் சங்கிலிகளால் பிணைத்திருக்கின்றார்கள்!

பாவம், என் தாயாரின் முகம் சிறிது சிறிதாக வெழுத்து வந்தது. சிறார்களாகிய நாங்கள் பெரிதும் பயப்பட்டிருந்தோம்; எங்களால் உரக்க அழவே முடிந்தது. உடனடியாக எல்லாரும், எங்கள் உறவினர்கள், நண்பர்கள், சேவகர்கள் உள்பட அனைவரும் எங்கள் வீட்டிலிருந்து ஓடிவிட்டார்கள். இஸ்ஃபாண்டியார் எனப்படும் ஒரே ஒரு சேவகரும் ஒரு பெண்ணும் மட்டும் ஓடிப்போகவில்லை.

எங்கள் மாளிகை, மற்றும் அதனைச் சுற்றிய சிறிய வீடுகள் அனைத்தும் சூரையாடப்பட்டன. அவற்றில் இருந்த மரச்சாமான்கள், பொக்கிஷங்கள், யாவுமே மக்களால் திருடப்பட்டன. எங்கள்பால் எப்போதுமே அன்பாக இருந்த எங்கள் தந்தையின் தம்பியாகிய மிர்ஸா மூசா, என் தாயாரும் அவருடைய மூன்று குழந்தைகளும் தப்பிச் சென்று மறைந்துகொள்ள உதவினார். என் தாயார் தமது திருமண சீர்வரிசைகளிலிருந்து ஒரு சிலவற்றை பாதுகாப்பாக மறைத்துவிட்டிருந்தார். எங்களுடைய பரந்த சொத்துக்களில் மீதமிருந்தவை இவை மட்டுமே.

இவை விற்கப்பட்டன; அந்தப் பணத்தைக்கொண்டு சிறையில் இருந்த என் தந்தைக்கு என் தாயார் சிறைக்காவலர்களின் மூலம் உணவு கொண்டுசெல்லப்பட வழி செய்தார்; மற்ற செலவுகளை ஈடு செய்யவும் வழி வகுத்தார். இப்போது நாங்கள் சிறைக்கு அருகாமையிலிருந்த ஒரு சிறிய வீட்டில் குடியிருந்தோம். மிர்ஸா யாஹ்யா (ஸூப்-இ-அஸால்) பேரச்சத்துடன் மாஸிந்தரான் ஓடிச் சென்றார்; அங்கேயே அவர் மறைந்தும் இருந்தார்.

ஆகா, அந்த நேரத்தில் என் தாயார் அனுபவித்த பெரும் துயரத்தை என்னவென்றுதான் சொல்வது! குழந்தைப் பேற்றை எதிர்நோக்கிய (இதை நான் இதற்குப் பிறகே அறிய வந்தேன்) எந்த ஒரு பெண்ணும் எதிர்நோக்கக்கூடியதற்கும் அதிகமானதுதான் அந்தத் துயரம். என் தந்தை அடைக்கப்பட்டிருந்து சிறை மிகவும் பயங்கரமானது; பூமிக்குக் கீழே ஏழு தளங்கள் இரங்கவேண்டும்; கனுக்கால் அளவு கஸ்மலம் நிறைந்தும், புழுப்பூச்சிகள் பரவியும், விவரிக்கமுடியாத துர்நாற்றமுமாக அந்த இடம் இருந்தது.

இவற்றோடு சேர்ந்து அந்தக் கொடுமையான இடத்தில் சிறிது கூட ஒளி கிடையாது. அதனுள் நாற்பது பாப்‘இக்கள் அடைக்கப்பட்டிருந்தனர்; கொலைகாரர்களும் வழிப்பறிக்கொள்ளையர்களும் அங்கு நிறைந்திருந்தனர். என் மேன்மைமிக்க தந்தை இந்தத் கரிய அறைக்குள் தள்ளப்பட்டிருந்தார்; கனமான சக்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தார்; அவரோடு வேறு ஐந்து பாப்‘இக்களும் சங்கிலிகளால் இணைக்கப்பட்டிருந்தனர்; இங்கு அவர் நான்கு மாதங்கள் இருந்தார். இப்பயங்கரத்தை நீங்களே கற்பனை பன்னிப்பாருங்கள்.

சிறிது நகர்ந்தாலும் சங்கிலிகள் சதையை மேலும் ஆழமாக வெட்டின. ஒருவரை மட்டும் அல்ல, மற்ற ஐவருக்கும் இவ்வாரே நடந்தது. சிறிதும் தூங்கமுடியாது; உணவு கொடுக்கப்படவில்லை. மிகுந்த சிரமங்களிடையேதான் அந்த பயங்கர சிறைக்குள் என் தாயார் என் தந்தைக்கு உணவும் நீரும் அனுப்பி வைக்க முடிந்தது. அதே நேரத்தில், இந்த நிலையிலும், பாப்‘இக்களின் உற்சாகம் சிறிதும் குறையவில்லை.

உயிர்த்தியாகிகளின் ஜீவமகுடமாகிய துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உயிர்த்துறப்பதென்பதே, அவர்களுடைய நோக்கமும் தீவிர ஆவலுமாக இருந்தது. அவர்கள் இரவும் பகலும் பிரார்த்தனைகளைப் பாடிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு காலை வேளைகளிலும் இந்த மனோதைரியமும் அர்ப்பண உணர்வும் மிக்க நண்பர்களில் ஒருவரோ பலரோ பல வழிகளில் சித்திரவதை செய்யப்படவும் பிறகு கொல்லப்படவும் வெளியே கொண்டு செல்லப்படுவர்.

இந்த பாப்‘இக்களுக்கு நடந்தது போல நாஸ்திகர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் அல்லது பலரின் மீது சமய தீவிரவாதம் தூண்டிவிடப்படும்போது, அவர்கள் வெறுமனே அரசாங்கக் கொலைஞரால் கொல்லப்படுவதில்லை, மாறாக, மக்களில் பல்வேறு பகுதியினரிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவர். கசாப்புக் கடைக்காரர்கள் சித்திரவதை செய்வதற்கு தங்களுக்கென பிரத்தியேக முறைகளை வைத்திருந்தனர்; ரொட்டி செய்பவர்களும் அவ்வாரே தனி முறைகளைக் கையாண்டனர்; காலனி தைப்பவர்களுக்கும், கொல்லர்களுக்கும் அவ்வாறே வெவ்வேறு சித்திரவதை முறைகள் இருந்தன. பாப்‘இக்கள் மீது இவர்கள் அனைவரும் தங்களுடைய பட்சாதாபமற்ற சத்திரவதைகளை செயல்படுத்த வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன.

இந்தக் கொடும்பாவிகள் பாப்’இக்களின் தணிக்கவியலா ஆன்மவுணர்வைக் கண்டு மேலும் அதிக கோரத்தனமாக நடந்துகொண்டனர். பாப்‘இக்களும் அதற்குத் தகுந்தாற்போல், தங்களுடைய இறுதி மூச்சு வரை சிறிதும் அசராமலும், பிரார்த்தனைகளைப் பாடியும், தங்களைச் சித்திரவதை செய்வோருக்காக இறைவனிடம் மன்னிப்பு வேண்டியும், இறைவனை வாழ்த்திக்கொண்டும் இருந்தனர். இத்தகைய பயங்கர காட்சிகளைக் காண கூட்டங்கள் கூடியும், சபித்துக்கொண்டும் இருந்தனர். இவையெல்லாம் நடக்கும் போது மேளம் ஒன்று சப்தமாக தட்டப்படும். இந்தக் கொடூர சப்தங்கள் எனக்கு நன்கு ஞாபம் இருக்கின்றது. நாங்கள் மூவரும் என் தாயாரை இருகக் கட்டிப்பிடித்துக்கொண்டிருப்போம். அவரோ, அங்கு பலியாகிக்கொண்டிருப்பது, தமது அன்புக் கணவரா அல்லவா என்பது தெரியாமல் கலங்கிக்கொண்டிருப்பார்.

என் தகப்பனார் உயிரோடு உள்ளாரா இல்லையா என்பதை என் தாயார் அன்று நல்லிரவு வரை தெரிந்துகொள்ள முடியாமல் இருந்தார். அதுவும், தமது உயிரைப் பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல் வெளியே சென்று விசாரித்த பிறகே அவர் தெரிந்துகொண்டார். அக்கொடூரங்கள், பெண்கள் அல்லது குழந்தைகள் என பாகுபாடு பார்க்கவில்லை. என் தம்பி மிர்ஸா மிஹிடிக்கு அப்போது இரண்டே வயதுதான் இருக்கும். நான் என் தம்பியை என் மடியில் உட்கார வைத்துக்கொண்டு என் பலமே இல்லாத என் கைகளால் அவனை இருகப் பிடித்துக்கொண்டு கும்மிருட்டில் பேரச்சத்தால் நடுநடுங்கிய வண்ணம் உட்கார்ந்திருப்பேன். அப்போது நடந்த கொடுமையான செயல்கள் அனைத்தும் எனக்குத் தெரிந்திருந்தன. என் தாயாரும் அக்கொடும்ைக்காரர்களின் கைகளில் சிக்கியிருப்பார்கள் என்பதையும் நான் உணர்ந்திருந்தேன். ஒன்றும் செய்ய இயலாத நிலையில் என் தாயாரின் வருகைக்காக நான் வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தேன்.

அப்போது ஒளிந்த வண்ணம் இருந்த என சிற்றப்பாவாகிய மிர்ஸா மூசா, என் தாயார் என்ன செய்தி கொண்டுவந்துள்ளார் என்பதை அறிய வருவார். இந்த துயர்மிகு காரியங்களின் போது என் அண்ணன் அப்பாஸும் என் தாயாரோடு செல்ல நேர்ந்தது. என் சிற்றாப்பாவிடம் என் தாயார் தெரிவித்த விஷயங்களை நாங்களும் ஆர்வத்தோடு செவிமடுப்போம். இச்செய்திகள் யாவும் என் தாத்தாவின் சகோதரி ஒருவரின் வாயிலாகவே கிடைத்தது. அவர் மிர்ஸா யூசிஃப் எனும் ஒரு ருஷ்ய பிரஜையை மணந்திருந்தார். மிர்ஸா யூசிஃப் தெஹரானில் உள்ள ருஷ்ய தூதரின் நண்பராக இருந்தார்.

என் தாத்தாவின் மைத்துனரான இவர், விசாரனைகள் நடக்கும் போதெல்லாம் சென்று என் தகப்பனார் பற்றிய செய்திகளை அறிந்து வருவார். யார் யார் அன்று கொல்லப்படப்போகிறார்கள் என்பதை அறிந்து அக்கொடுமையான நாட்கள் கடந்துசெல்லும் வரை என் தாயாரின் துயரத்தைக் கலைவதற்கு வழி செய்தார். மிர்ஸா யூசிஃப் அவர்களே என் தகப்பனாருக்கு உணவு கொண்டுசெல்லப்பட என் தாயாருக்குப் பெரிதும் உதவினார். அவர்தான் எங்களையெல்லாம் சிறைச் சாலைக்கு அருகே இருந்து இரண்டு சிறிய அறைகளுக்கு இடம் பெயர உதவிசெய்தார். அங்குதான் நாங்கள் மறைவாக தங்கியிருந்தோம்.

இக்காரியங்களைச் செய்வதில் அவர் பெரும் அபாயங்களுக்கும் தம்மை உட்படுததிக்கொண்டார். அவர் ருஷ்ய பிரஜை எனும் முறையில் ருஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பைப் பெற்றிருந்ததால் இந்த அபாயங்களின் கடுமைகள் சிறிது தனிவாக இருந்தன. அந்த நாட்களின் போது என் தாயாரை வந்து சந்திக்க எங்கள் நண்பர்கள், உறவினர்கள் எவருக்குமே, தைரியமில்லை. ஆனால், என் தகப்பானாரின் அத்தையாகிய மிர்ஸா யூசிஃபின் மனைவி மட்டுமே எங்களை வந்து கண்டு சென்றார்.

ஒரு நாள் மிர்ஸா யூசிஃப் என் தகப்பனாரின் எதிரிகளான கொலைகார முல்லாக்கள் அவரைக் கொல்வதற்கு திட்டமிட்டுக் கொண்டிருப்பதை அறிந்தார். மிர்ஸா யூசிஃப் ருஷ்ய தூதரைச் சந்தித்தார்; பெரும் செல்வாக்கு பெற்றிருந்த அந்த நண்பரும் இத்திட்டம் உடனடியாக முறியடிக்கப்பட வேண்டுமென தீர்மானித்தார். மரண தண்டனைகள் விதிக்கப்படும் நீதிமன்றத்தில் மிகவும் பிரமிக்க வைக்கும் ஒரு நிகழ்சி நடந்தது. ருஷ்ய தூதர் நீதிமன்றத்தில் அச்சமின்றி எழுந்து நின்று: “நான் கூறக்கூடியவற்றின்பால் செவிசாயுங்கள்! நான் மிகவும் முக்கியமான விஷயங்களை உங்களுக்குத் தெரிவிக்கப்போகின்றேன்” (அவரடைய குரல் சப்தமாக ஒலித்தது. நீதி மன்றத் தலைவரும், அதிகாரிகளும் பதலிளிப்பதற்குக்கூட முடியாமல் பிரமித்து நின்றனர்.) “நீங்கள் இதுவரை பலிவாங்கியதெல்லாம் போதாதா? அடிப்படையற்ற பொய்க்குற்றச்சாட்டுகளென நீங்களே நன்கு அறிந்துள்ள இக்குற்றச்சாட்டுகளின் விளைவாக, ஒன்றுமறியா மக்கள் பலரை நீங்கள் இதுவரை கொலைசெய்துள்ளீர்கள். உங்களையெல்லாம் திருப்திப்படுத்த இதுவரை நீங்கள் இயற்றிய இக்கொலைகாரக் கொடுமைகள் போதாதா? ஷா மன்னரை சுடுவதற்கு இம்மேன்மைமிகு கைதி தான் அந்த முட்டாள்தனமான திட்டத்தைத் தீட்டினார் என உங்களால் எப்படித்தான் சிந்திக்க முடிகின்றதென என்னால் நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை.

“அந்த இளைஞர்களால் பயன்படுத்தப்பட்ட அந்த வெற்றுத் துப்பாக்கி ஒரு குருவியைக் கூட கொன்றிருக்க முடியாதென்பது உங்களுக்குத் தெரியாததல்ல. மேலும், அவ்விளைஞன் வெளிப்படையாகவே மனநிலை பாதிக்கப்பட்டவன் என்பதும் தெரிந்ததே. இக்குற்றச்சாட்டு பொய்யானதுமட்டுமல்ல, அது ஐயத்திற்கிடமில்லாமல் முட்டாள்தனமானதும் கூட. இதற்கெல்லாம் ஒரு முடிவேற்பட வேண்டும்.

இக்குற்றமற்ற மேன்மகனுக்கு ருஷ்ய நாட்டின் பாதுகாப்பை வழங்குவதற்கு நான் முடிவெடுத்துள்ளேன்; இது உங்களுக்கு நான் விடுக்கும் எச்சரிக்கை! இக்கணத்திலிருந்து அவரது சிரசிலிருந்து ஒரு முடி பாதிப்படைந்தாலும், உங்கள் நகரத்தில் குருதி வெள்ளமாகப் பாயும்.

“இவ்விஷயத்தில் என் எச்சரிக்கையை நீங்கள் செவிமடுப்பது உங்களுக்கு நல்லதென்றே நினைக்கின்றேன். இவ்விஷயத்தில் என் நாடு எனக்கு முழு பக்கபலமாக இருக்கின்றது.” இவ்விஷயம் மிர்ஸா மூசா அவர்களால் என் தாயாரிடம் தெரிவிக்கப்பட்டது.

என் தம்பியும் நானும் அங்கு நடந்ததை எவ்வளவு ஆர்வத்துடன் செவிமடுத்தோம் எனவோ, நாங்கள் எல்லாரும் வடித்த ஆனந்தக் கண்ணீரையோ இங்கு நான் அறிவிக்க வேண்டியதில்லை.

அந்த எச்சரிக்கையின் விளைவாக என் தந்தை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார், ஆனால், அவரும் அவரது குடும்பமும் பாரசீகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனும் விதியின் பேரிலேயே அவர் விடுவிக்கப்ட்டார்.

நாங்கள் அனைவரும் பத்தே நாட்களில் தெஹரானைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது. என் தந்தை அப்போது மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவர் எங்கள் இரு சிறிய அறைகளுக்கு வந்தார். அவரது வருகையால் நாங்கள் அடைந்த இன்பத்திற்கு அளவேயில்லை!

ஜமால்-இ-முபாரக் (என் தந்தைக்கு வழங்கப்பட்ட ஒரு பெயர்) தாம் அந்த பாதாளச் சிறறையிலல் அனுபவித்த அந்த நான்கு மாத கொடுமையான சிறைவாசத்தைப் பற்றி வெகு குறைவாகவே பேசினார். அவர் அனுபவித்த கொடுமைகளின் சின்னங்களை நாங்கள் பார்த்தோம்; அவருடைய மென்மையான தோலை, குறிப்பாக அவரது கழுத்தில், சங்கிலிகள் வெட்டிய இடத்தைப் பார்த்தோம், பாஸ்டினாடோ சித்திரவதைக்குட்படுத்தப்பட்டும் நீண்ட காலமாக கவனிக்கப்படாமல் இருந்த அவருடைய கால்களை நாங்கள் கண்டோம். எங்கள் தாயாரோடு சேர்ந்து நாங்கள் வடித்த கண்ணீரை என்னவென்று சொல்வது.

நாங்கள் பத்து நாட்களில் மேற்கொள்ளவேண்டிய பயணத்திற்கு வேண்டிய வலுவை என் தகப்பானார் பெற வேண்டும் என்பதற்காக என் தாயார் தம்மால் முடிந்த அனைத்தையும் செய்தார். ஆனால், காலமோ மிகவும் கடியதாக இருந்தது. என்தாயார் எவ்வாறுதான் ஏற்பாடுகளைச் செய்ய போகின்றார்?

பரிதாபத்திற்குரிய அப்பெண்மனி தமக்கு சீர்வரிசைகளாக வழங்கப்பட்ட, கிட்டத்தட்ட, எல்லா பொக்கிஷங்களையும் விற்றார். அவற்றுள், ஜரிகை வேலைப்பாடு செய்யப்பட்ட துனிகள், நகைகள், மற்றும் இதர பொருட்கள் அனைத்தையும் விற்றார். அவை அனைத்திற்கும் அவருக்குக் கிடைத்தது 400 டூமான்களே. இப்பணத்தைக் கொண்டு அக்கொடுமையான பயணத்தின் வழிசெலவுகளை அவர் சரி செய்ய முடிந்தது. (அவர்கள் நாடுகடத்திய எவருக்கும் அரசாங்கள் உதவி எதையுமே வழங்கவில்லை.)

பயணம் விவரிக்க முடியாத கொடுமைகள் நிறைந்ததாக இருந்தது. என் தாயாருக்கு எந்த அனுபவமும் கிடையாது, வேலைக்காரர்கள் இல்லை, உணவுப் பொருட்கள் கிடையாது, செலவுக்கு பணமும் மிகவும் குறைவாகவே இருந்தது. என் தந்தையார் சிறைவாசத்தின் கொடுமைகளிலிருந்து இன்னமும் மீளாது கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தார். நாங்கள் பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது விடைகூறுவதற்கு, எங்கள் உறவினர்களும், நண்பர்களும்  பயந்துகொண்டு வரவில்லை. என் தாயாரின் வயதான பாட்டி ஒருவர் மட்டுமே வந்நார்.

எங்களோடு இருப்பதற்கு சிறிதும் பயப்படாத இஸ்ஃபாண்டியாரும், நீக்ரோ பெண்மனி ஒருவரும் மட்டுமே எங்களுக்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர். ஆனால், குழந்தைகளாகிய நாங்கள் மூவரும் மிகவும் சிறிய வயதினராக இருந்தோம், என்ன அண்ணனுக்கு எட்டு வயதும், எனக்கு ஆறு வயதும்  ஆகியிருந்தன. மிகவும் பலவீனமாகவும், குழந்தையாகவும் இருந்த மிர்ஸா மிஹ்டியை தெஹரானிலேயே, என் தாயாரின் பாட்டியோடு விட்டுச் செல்ல என் தாயார் சம்மதித்தார். ஆனால், அவனை விட்டு பிரிவது தாங்க முடியாததாக இருந்தது.

இறுதியில், நான்கு வாரங்கள் பிடித்த அந்த பிராயாணத்தை நாங்கள் ஆரம்பித்தோம்; அது கொடிய குளிர்காலம், தரையெங்கும் வெண்பனி விழுந்து கிடந்தது. பாக்தாத் செல்லும் வழியில் நாங்கள் ஒரு சில வேளைகளில் மக்கள் நடமாட்டமே இல்லாத பிரதேசங்களில் நாங்கள் தங்கவேண்டியிருந்தது. ஆனால், அந்த டிசம்பர் மாதத்தில் குளிர் மிகவும் பயங்கரமாக இருந்தது; நாங்கள் அக்குளிருக்குத் தயாராகவும் இல்லை. பாவம் என் தாயார்; பயணம் முழுவதும் அவர் பெரும் இம்சைக்குள்ளானார். அவர் கோவேறு கழுதைமேல் ஏற்றப்பட்ட ஒரு பல்லக்கில் பிரயானம் செய்தார்! அதுவும், அவர் மகப்பெற்றை எதிர்நோக்கியிருந்த ஆறு வாரங்களுக்கு முன்பாக இத்துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருந்தது!

ஆனாலும், அவர் ஒரு வார்த்தைகூட இதைப்பற்றி முறையிடவில்லை. அவர் எல்லா வேளைகளிலும் மற்றவர்களுக்கான உதவிகளைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தார். அவர் எல்லாருடைய இன்னல்களின்போதும் தமது எல்லையற்ற கருணையை வழங்கத் தயங்கியது கிடையாது.

அவர் கூறிய கதையைக் கேட்ட என் கண்களில் வழிந்ததது: “அது மிகவும் சோகமான காலம். அதைப் பற்றி நான் கூறினால் நான் உன்னை மேலும் சோகத்திற்குள்ளாக்க நேரிடும்.” “ஆனால், அன்பிற்கினிய ஃகானும், உங்கள் சோகம் அனைத்திலும் நானும் மானசீகமாகப் பங்குகொள்ள விரும்புகின்றேன்,” என நான் கூறினேன். “என் சோகம் மிகுந்த நாட்களில் நான் என் சிந்தனைகளில் வாழ்ந்ததைத் தவிர என் வாழ்வில் வேறு எதுவும் கிடையாது. சோகத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை; ஆனால், இறைவனின் பாதையில் சோகத்தை அனுபவிக்கும் போது, அதுவே உண்மையான ஆனந்தமாகும்!”

பிரயாணத்தின்போது நாங்கள் ஏதாவது ஒரு பட்டனத்திற்கு வந்தோமானால், என் தாயார் துணிகளையெல்லாம் எடுத்துச் சென்று பொது குளியலறைகளில் துவைத்து வருவார்; நாங்கள் அங்கு குளிப்போம். அவர் சில்லிட்ட ஈரமான துணிகளை தமது கைகளில் ஏந்தி வருவார் — அவற்றைக் காய வைப்பது பெரும்பாலும் முடியாத காரியமாகவே இருக்கும்; அத்தகைய காரியங்களில் சிறிதும் அனுபவமற்ற அவருடைய கைகள் வலியெடுத்துப்போகும்.

ஒரு சில வேளைகளில் நாங்கள் ஏதாவது சத்திரத்தில் தங்க நேரிடுவதுண்டு. அவ்விடங்களில் ஒரு குடும்பத்திற்கு ஓர் அறைதான் வழங்கப்படும், அதுவும் ஒர் இரவுக்கு மட்டுமே. இரவில் ஒளி கிடையாது, படுக்கைகளும் கிடையாது. சில நேரங்களில் எங்களுக்குத் தேநீர் கிடைக்கும், அல்லது முட்டைகள், சிறிது உறை பாலேடு, கரடுமுரடான ரொட்டி போன்றவையும் கிடைக்கும். என் தந்தையார் இருந்த நிலையில் அவரால் அத்தகைய கரடுமுரடான உணவை உட்கொள்ள முடியவில்லை. மிகவும் விசனமுற்ற என் தாயார் வேறு ஏதாவது உணவு கிட்டுமாவென சிந்தனை செய்தார். என் தந்தை நல்ல உணவு கிடைக்காமல் அதிகரிக்கும் பலவீனத்திற்குள்ளானார்.

இவ்வாறு இருக்கையில், ஒரு நாள் என் தாயாருக்கு சிறிது கோதுமை மாவு கிடைத்தது. ஒரு சத்திரத்தை நாங்கள் அடைந்தபோது, அவர் என் தகப்பனாருக்கு இனிப்பான கேக் ஒன்று செய்ய நினைத்தார். ஆனால், அந்தோ! – துரதரிஷ்டவசமாக, இருளில் சீனிக்குப் பதிலாக, அவர் உப்பைக் கொட்விட்டார். அந்த கேக் உண்ணமுடியாமல் போயிற்று!

தெஹரானின் கவர்னர், நாட்டின் எல்லை வரை எங்களோடு சில இராணுவ வீரர்களை அனுப்பி வைத்திருந்தார். எல்லையில் எங்களை துருக்கிய வீரர்கள் சந்தித்து பாக்தாத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எங்களுக்கு முதலில் ஒரு சிறிய வீடே கிடைத்தது; என் தந்தைக்கு ஒரு சிறிய அறையும், என் தாயாருக்கு ஒரு சிறிய அறையுமாக அமைந்திருந்த சிறிய வீடது. நானும், என் அண்ணனும் குழந்தையும் என் தாயாருடன் அந்த சிறிய அறையிலேயே தங்க வேண்டியிருந்தது. எங்களைக்காண அராபிய பெண்மனிகள் வந்த போது இந்த சிறிய அறையே வரவேற்பறையாக செயல்பட்டது. இந்த அராபிய பெண்கள் எங்களைக் காண வந்ததற்குக் காரணம், தாஹிரிஃ பாக்தாத்திற்கு வருகையளித்த போது அவர் அப்பெண்மனிகளுக்குச் சமயத்தைப் போதித்திருந்ததே ஆகும்.

ஒரு நாள் ஒரு வயதான பெண்மனி வருகை தந்திருந்த போது, சமோவாரைத் தயார் செய்யும்படி நான் பணிக்கப்பட்டேன். அது மிகவும் கனமான சமோவாராக இருந்தது. என் கைகளிலும் அவ்வளவாக பலமில்லை. மேல்மாடிக்கு அதை நான் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. என்னைப் பார்த்து அந்த மூதாட்டி: “பாப்’இ போதனைகள் மிகவும் அற்புதமானவை என்பதற்கு ஆதாராமாக, ஒரு சிறிய வயது பெண் சமோவார் சேவை செய்கிறாள் என்பதே உள்ளது,” என்றாள். என் தந்தை அதை வேடிக்கையாக எண்ணினார். அவர் பிறகு, “உண்ணுடைய சமோவார் சேவையில் வாயிலாக சமயத்தை ஏற்றுக்கொண்ட பெண்மனி இதோ,” என கூறுவார்.

மிர்ஸா மூசாவுக்கும் அவரது மனைவிக்கும் பஹவுல்லாவின்பால் எப்போதுமே பக்தி அதிகம். என் சிற்றப்பாவாகிய மிர்ஸா மூசா அவர்கள், எங்களுடைய தேசப்பிரஷ்டத்தில் தானும் பங்குகொண்டார். அவர் எல்லா விஷயங்களிலும் மிகவும் உதவி செய்வார். ஒரு முறை முழு சமையலையும் அவரே கவனித்துக் கொண்டார். அவர் சமயல் கலை நன்கு அறிந்தவர் ஆவார்; அவர் துணிகளை அவ்வப்போது துவைக்கவும் உதவினார்.

என் தாயார் மிகவும் பலவீனமானவர். அவருடைய பலமெல்லாம் அவர் அனுபவித்த கொடுமைகளால் பெரிதும் நலிவுற்றிருந்தன. ஆனால், அவர் தமது ஆற்றலுக்கும் மீறிய நிலையிலேயே செயல்பட்டார்.

என் தாயாருக்கு உதவியாக, அந்த மேல்வர்க்கத்துப் பெண்மனிக்கு அவ்வித வேளைகள் பழக்கமில்லாதவையாகவும், சிறமமானதாகவும் இருந்ததனால், ஒரு சில வேளைகளில் என் தந்தையாரே சமையல் வேலையில் உதவிகள் புரிவார். அவர் அனுபவித்த சிரமங்களைக் கண்டு அவருடைய தெய்வீகக் கணவரும், அவருடைய பிரபுவுமாகியவரின் மனம் பெரிதும் சோகமடைந்திருந்தது. இத்தகைய உதவிகளை அவர் சுலைமானிய்யா வாசத்திற்கு முன்பாகவும் அதற்குப் பின்பாகவும் புரிந்தார்.

பஹாவுல்லா சுலைமானிய்யாவை நாடிச் செல்வதற்கு சுப்-இ-அஸால் எனப்படும் பஹாவுல்லாவின் ஒன்றுவிட்ட தம்பியின் நடத்தையே காரணமாக இருந்தது. அவருடைய நடத்தையினால் பாக்தாத் பாப்’இக்களுள் பெரும் பிளவு ஏற்பட்டிருந்தது. நம்பிக்கையாளர்கள் தமக்கும் தமது தம்பிக்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்துகொள்ளவேண்டும், பிளவுக்குக் காரணமாக தாம் இருக்கக்கூடாது என்பதற்காக அவர் தமது குடும்பத்தையும் சமூகத்தையும் விட்டு யாருக்கும் தெரியாமல் சுலைமானிய்யாவுக்கு சென்றுவிட்டார். அவ்வாறு அவர் சுலைமானிய்யா செல்வதற்கு முன்பாக பாப்’இக்கள் அனைவரும் மிர்ஸா யாஹ்யாவை நல்லவிதமாக நடத்தவேண்டும் என எச்சரிக்கை விடுத்தார். மிர்ஸா யாஹ்யாவுக்குத் தமது இல்லத்திலேயே குடியிருக்கவும் ஏற்பாடுகள் செய்திருந்தார். திடீரென்று ஒரு நாள் பஹாவுல்லா எங்களையெல்லாம் விட்டுச் சுலைமானிய்யா சென்றுவிட்டார். ஆனால் அப்போது அவர் எங்கு சென்றார் என்பது எங்களுக்குத் தெரியாது. இதனால் பெரிதும் ஆனந்தமடைந்தது மிர்ஸா யாஹ்யாவே.

அதற்குப் பிறகு மிர்ஸா யாஹ்யா எங்கள் வீட்டு நிலையான விருந்தினராகிவிட்டார். சாப்பாடு சரியில்லையென அவர் எங்களுக்குப் பெரும் துன்பங்கள் கொடுத்தார். அதுவும், எங்கள் வீட்டின் மிகச் சிறந்தவை யாவும் அவருக்கே கொடுக்கப்பட்டன.

அதே வேளை தாம் கைது செய்யப்பட நேரலாம் எனும் பயம் அவரை இப்போது வாட்ட ஆரம்பித்தது. அவர் வீட்டினுள் மறைந்துகொண்டு, எந்நேரமும் கதவை பூட்டியே வைத்திருந்தார். யாராவது கதவைத் திறந்தால் போதும், உடனடியாக அவ்வாறு செய்தவர் மேல் சீறிப் பாய்வார்.

என்னைப் பொறுத்த வரையில் நான் தனிமைமிக்க ஒரு வாழ்வே வாழ்ந்தேன் எனச் சொல்லவேண்டும். மற்ற பிள்ளைகளோடு நட்புகொள்ளவேண்டுமெனும் ஆசை எனக்கும் இருந்தது. ஆனால், சுப்-இ-அஸால் அதற்கு அனுமதிக்கமாட்டார். என் வயதுடைய குழந்தைகளை அவர் வீட்டினுள் அனுமதிப்பதில்லை, அதே வேளை என்னையும் வெளியே செல்ல அனுமதிக்கமாட்டார்!

என் பக்கத்து வீட்டில் என் வயதுடைய இரு பெண்கள் வசித்தனர். நான் அவ்வப்போது அவர்களைப் பார்ப்பேன்; ஆனால் எங்கள் வீட்டு விருந்தாளி கதவைத் திறந்ததற்காக என்னைப் பார்துக் கத்துவார்; உடனடியாக கதவையும் மூடிவிடுவார். கைது பயம் அவரை எப்போதும் வாட்டியது, அவர் தமது பாதுகாப்புத் தவிற வேறு எதைப் பற்றியும் அக்கறை கொண்டவர் இல்லை.

இந்த காலகட்டத்தில் எங்கள் வாழ்வு மிகுந்த சிறமத்திலும், அதே வேளை தனிமையிலுமாக கழிந்தது. நாங்கள் ஹம்மாம் சென்று குளிப்பதற்கும் அவர் அனுமதிக்கவில்லை. எங்கள் வீட்டிற்குள் வந்து உதவி செய்யவும் அவர் யாரையும் அனுமதிக்கவில்லை. வீட்டு வேலை பெரும் சிறமம் மிக்கதாக இருந்தது. தினசரி வீட்டினுள்ளே இருந்த ஒரு ஆழமான கிணற்றிலிருந்து, நின்றுகொண்டு, மணிக்கணக்காக நான் நீர் இரைத்துக்கொண்டிருப்பேன்; கயிறு மிகவும் கடினமானது, நீர் இரைக்கும் வாளியோ மிகவும் கனமாக இருந்தது. என் தாயார் எனக்கு அவ்வப்போது உதவி செய்வார், ஆனால் அவரும் பலவீனமானவர், என் கைகளும் வலுவற்றவைகளாக இருந்தன. எங்கள் வீட்டு விருந்தினர்கள் உதவியதே இல்லை.

இக்கொடிய மனிதனுக்கு உதவி செய்ய வேண்டுமென என் தகப்பனார் கூறிச் சென்றுவிட்டார். நாங்களும் எங்களால் இயன்றவரை முயன்றோம், ஆனால், அது சுலபமாக இல்லை, அம்மனிதர் எங்கள் வாழ்க்கைகளை பெரும் சோகமிக்கவைகளாகச் செய்தார். இவ்வேளையில்தான் என் அருமைக் குட்டித் தம்பிக்கு மோசமான நோய் கண்டது. எங்கள் விருந்தினர் ஒரு டாக்டரோ, எங்கள் அண்டைவீட்டாரோ வந்து எங்களுக்கு உதவிபுரியக்கூட அனுமதிக்கவில்லை.

என் குட்டித் தம்பி இறந்த போது என் தாயார் மனமுடைந்து போனார்; என் தம்பியின் பூவுடல் யாரோ ஒரு மனிதனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவன் என் தம்பியை எங்கு கொண்டு சென்றான் எங்கு புதைத்தான் என்றே எங்களுக்குக் கடைசி வரை தெரியாது போயிற்று. அந்த நாட்களின் சோகம் எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கின்றது.

சில காலத்திற்குப் பிறகு நாங்கள் ஒரு பெரிய வீட்டிற்குக் குடிபெயர்ந்தோம். நல்ல வேளையாக தன்னை யாரும் பார்த்துவிடுவார்களோ எனப் பயந்த மிர்ஸா யாஹயா எங்களோடு வரவில்லை. எங்க் வீட்டிற்குப் பின்புரம் இருந்த ஒரு சிறிய வீட்டில் அவர் மறைந்துகொண்டார். அவருக்கும், வரிவடைந்திருந்து அவருடைய குடும்பத்தினருக்கும் இப்போதும் நாங்கள் தினமும் உணவு அனுப்பி வந்தோம். அவர் எங்கள் வாழ்க்கையில் இப்போது நேரடியாக குறுக்கிடாததால் எங்கள் வாழ்க்கை இப்போது சிறிது மகிழ்ச்சியாக இருந்தது.

இப்போது எங்கள் கவலையெல்லாம் ஜமால்-இ-முபாரக் எங்குள்ளார் என்பதைப் பற்றியே இருந்தது. அதுவரை என் தாயாரும், மிர்ஸா மூசாவும் தங்களால் இயன்றவரை விசாரித்தே வந்தனர். தன் தந்தையின் பிரிவினால் என் அண்ணனின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குறியதாக இருந்தது. ஒரு நாள் இரவு என் அண்ணன் ஒரே பிரார்த்தனையை, ஒரே நோக்கோடு, எங்கள் தகப்பானார் எங்களுக்கு மீண்டும் கிடைக்க வேண்டுமென நினைத்து, பிரார்த்தித்தார்.

சின்னாட்களுக்குப் பிறகு எங்கள் தந்தையாரைப் பற்றி எங்களுக்கு செய்தி கிடைத்தது. அவரை அழைத்து வர எங்களுடைய விசுவாசமிக்க நண்பர் ஒருவரும், மற்றொரு நம்பிக்கையாளரும் சென்றனர். எங்கள் உள்ளங்கள் அவர்களோடு சென்றன என்பதைக் கூறவேண்டியதில்லை. அவர்கள் வெற்றி பெற வேண்டும் எனும் எங்களுடைய பிரார்த்தனைக்கு முடிவே இல்லை. எங்கள் எதிர்ப்பார்ப்பு இருண்ட எங்களுடைய வாழ்வின் இருண்ட பகுதிகளுள் ஒளியை வீசியது.

எதிர்ப்பார்ப்புமிக்க அந்த நாட்கள் கடந்து செல்லச் செல்ல, எங்கள் நம்பிக்கையும், எதிர்ப்பார்பும் அதிகரிக்கவும் வளரவும் செய்தன. வரப்போகும் நாட்களில், மிக அருகாமையில் உள்ள நாட்களில், வழிப்போக்கரான எங்கள் தந்தை, எங்களோடு மீண்டும் ஒன்று சேரப்போகிறார். “திர்மி” எனப்படும் ஒரு வகை சிகப்புத் துணியினால் என் தாயார் என் தந்தைக்கு ஒரு வித மேற்சட்டை தைத்தார். இத்துணியை இதற்கென்றே தமது திருமண பொக்கிஷங்களிலிருந்து பாதுகாத்து வைத்திருந்தார். என் தந்தையார் அனிந்துகொள்வதற்கு அஃது இப்போது தயாராக இருந்தது. இறுதியில், இறுதியில், என் தாயாரும், அணணனும் நானும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் அமர்ந்திருந்த வேளையில், காலடியோசை கேடடது. ஒரு துறவி. ஆனால், அந்த உருவத்தின் பின்னனியில் எங்கள் நேசத்திற்குறியவரின் ஒளியைக் கண்டோம். நாங்கள் அனைவரும் அவரைக் கட்டிக் கொண்ட போது எங்கள் ஆனந்திற்கு அளவே கிடையாது.

என் தாயார் இப்போது மிகவும் சாந்தமாகவும், அமைதியாகவும் இருக்கக் கண்டேன், என் அண்ணன் என் தந்தையாரின் கைகளை, இனி என்றுமே தன் பார்வைக்கு அப்பால் விடப்போவதில்லை என்பது போல் இறுகப்பிடித்துக்கொண்டிருந்தான். அவன் அந்த துறவியின் அருவருப்பான மாறுவேட உடையில் கிட்டத்தட்ட மறைந்தே விட்டிருந்தான். மனதைத் தொட்டதும், மகிழ்ச்சிமிக்கதுமான அக்காட்சியை என்னால் மறக்கவே முடியாது;

பாஹிய்யா ஃகானும் கூறியபடி லேடி ப்லொம்ஃபீல்ட் உரைத்தது

பாக்தாத் வாசகாலத்தின் போது, அதிப்புனித இலையாகிய பாஹிய்யா ஃகானுமே தமது தாயாரின் அன்பான உதவியாளராக இருந்தார். பல்வேறு வீட்டு வேலைகளை பொருத்த வரையில் அவர் தமது சக்திக்கும் மீறிய அளவிலேயே செயல்பட்டுவந்தார். குழந்தைத்தனமான பொழுபோக்குகளோ, சினேகிதர்களோ அவருக்குக் கிடையாது. எப்போதும் தமது தாயாரின் மீதே அவர் கண்ணாக இருந்தார், தன் தாயாருக்குக் களைப்பேற்படுத்தும் எதையும் அவர் விட்டுவைத்ததில்லை, தமது தாயாருக்கோ, தந்தைக்கோ அவர் ஏதாவது செய்ய இயன்ற போது அவர் அளவுக்கு மீறிய மகிழ்ச்சியடைவார்.
“என் தாயார் சில வேளைகளில் என் அண்ணன் அப்பாஸுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பார்; மற்ற வேளைகளில் மிர்ஸா மூசா சொல்லிக் கொடுப்பார், பிற நேரங்களில் அப்பாஸுக்கு என் தந்தையாரே பாடம் சொல்லிக் கொடுப்பார்.”

டூபா ஃகானும் வாய்மொழிந்தது

என் அன்பான பாட்டி ஆசிய்யா ஃகானுமை எனக்கு நன்றாகவே ஞாபகம் உள்ளது. அவர் மறைந்தபோது எனக்கு ஏழு வயதுதான் இருக்கும். பஹாவுல்லா அவரை “நவ்வாப்” என்றுதான் அழைப்பார். பாரசீக பிரபுக்கள் தங்கள் மனைவிமார்களை இவ்விதமாகத்தான் அழைப்பார்கள். அது மிகவும் மரியாதையும் பனிவும் மிக்க ஒரு பெயராகும். அவர் மிகுந்த அழகுடையவர், அன்பானவர், மென்மை குணம் படைத்தவர். பிரச்சனையுள்ள எவருமே அவரைத்தான் நாடிச் செல்வார்கள். ஒருவருக்கு நோய் கண்டிருந்தால் அவர்தான் அவர்களைப் பேணுவார், ஆறுதலளிப்பார், பார்த்தும் கொள்வார்.

ஆக்கா சிறைச்சாலையில் நாங்கள் இருந்தபோது சலவைத் தொழிலாளிகள் யாருமே அங்கு உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. ஃகாணும் அவர்கள்தான் பெரும்பாலான சலவைக் காரியங்களைக் கவனித்துக்கொள்வார். சமயல் வேலைகளையும் அவர்தான் கவனித்துக்கொள்வார். அவருக்கு என் அத்தையார்தான் (பஹிய்யா ஃகானும்) உதவி செய்வார்.

அங்கிருந்த ஒரேயொரு ஊழியரான ஒரு கருப்பினப் பெண்மனியினால் எல்லா வேலைகளையும் செய்ய இயலவில்லை. அச்சேவகி கலைப்படைந்துவிடக்கூடாது என்பதற்காக என் பாட்டியும், இளம் வயதினராகவிருந்த ஃகானுமும்தான் பெரும்பாலான கடின வேலைகளைச் செய்வார்கள்.

குடும்பத்தினரின் துணிகளை அவர்கள்தான் தைத்தும், ஒட்டுப்போடவும் செய்வார்கள். அவ்வேலை மிகவும் கடினமான வேலையாகும். பஹாவுல்லா சுலைமானிய்யாவிலிருந்து திரும்பியவுடன் அவருக்காக அவர்கள் இருவரும் அற்புதமான மேலுடுப்பு ஒன்றை எவ்வாறு தைத்தார்கள் என்பதை எனக்குக் கூறியிருக்கின்றனர். அன்புகலந்த அக்காரியத்திற்காக அவர்கள் சிறு சிறு துண்டுகளாலான சிகப்பு திர்மி துணியைப் பயன்படுத்தினர். பாட்டியின் திருமண பொக்கிஷங்களில் காணாமல் போன அனைத்திலும் அது மட்டும் எப்படியோ பாதுகாக்கப்பட்டது.

அவர்கள் இருவரும் சுமார் ஆறு மாத காலமாக அதை வெட்டி தைத்தார்கள். அதன் பயனாக மிகவும் அழகிய மேற்சட்டை ஒன்று உருவாகியது. மிகவும் தேவையான ஒரு மேலாடையாகவே அது விளங்கியது. அக்காலத்தில் பாக்தாத்தில் புதிய மேலுடுப்பு வாங்குமளவுக்கு அவர்களிடம் பணம் கிடையாது. ஆசிய்யா ஃகானும் அவர்கள் ஆக்கா சிறைச்சாலையிலிருந்து அருகிலிருந்து வாடகை வீட்டுக்குச் செல்லும் வரை உயிர்வாழ்ந்திருந்தார். அவரது சிறிய அறை வெற்று அறையாகவே காட்சியளித்தது. மிகவும் குறுகலான வெள்ளைப் படுக்கை, அது பகல்வேளைகளில் திவானாகவும் பயன்படுத்தப்பட்டது.

அறையிலிருந்த ஒரு சிறு மேஜையில் அவரது பிரார்த்தனை புஸ்தகமும் பிற நூல்களும், அவரது “ஃகலாஐ-தான்” எனப்படும் எழுதுகோல் வைக்கும் பெட்டியும், எழுதவதற்கான தாள்களும் இருந்தன; அவரது ஜெபமணிமாலையும் அதன் மேல்தான் இருந்தது; சில வேளைகளில் ஒரு ஜாடியில் மலர் இருக்கும், மற்றும் ஒரு பழைய வர்ணம் பூசப்பட்ட பெட்டி ஒன்று, அதனுள் அவருடைய உடைகள் இருந்தன.

பஹாவுல்லாவுக்கு இரண்டே மேலுடுப்புகள்தான் (கோட்) இருந்தன. அவை பாராக் எனப்படும் பாரசீக கம்பளியினால் நெய்யப்பட்டவை. அந்த இரண்டு மேலுடுப்புகளும் அடிக்கடி கிழிந்து போகச் செய்தன. அவற்றை ஒட்டுப்போடுவதிலும், தைப்பதிலும் அவருடைய பெரும்பாலான நேரங்கள் செலவழிந்தன. பஹாவுல்லாவின் காலுறைகளையும் அவர்தான் ஒட்டுப்போடுவார்.

என் கண்களுக்கு, நீல வர்ண மேலுடையிலும், அவருடைய தலையில் வெள்ளை “நிஃகாப்புமாகவும்,” அவரது சிறிய பாதங்களில் கரு நிறத்திலான மெல்லிய செருப்புமாகவும், மெய்மறந்த நிலையைக் குறிக்கும் முகபாவத்தோடு, அவர் தமது இனிய குரலில் பிரார்த்தனைகளைப் பாடுவதுமாகவுமே அவர் தெரிகின்றார். ஒரு நாள் என் பாடங்கள் முடிந்து நான் வீடு திரும்பிய போது அனைவரும் பெரிதும் சலனத்தோடு ஒன்றுகூடி நிற்பதைக் கண்டேன். “என்ன விஷயம்?” என வினவினேன்.

“உன் பாட்டி மிகவும் நோய்வாய்ப்ட்டுள்ளார்கள்,” என பதில் வந்தது. அவருடைய அறைக்குள் பஹாவுல்லா சென்றார்; சில நேரங்களுக்குப் பிறகு அவர் வெளியே வந்தார்; என் பாட்டி இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார்; இவ்வுலகையும் தமது சோகமும் துயரமும் நிறைந்த நாட்களை விட்டு அவர் மறைந்துவிட்டார். நாங்கள் அழுத அழுகையை என்னவென்றுதான் விவரிப்பது! அவர் இல்லாமல் அனைத்துமே வெறிச்சோடிப் போனது; மாறாத அவருடைய அன்புக்கருணையை இழந்து நின்றோம்; அவருடைய பூரண தன்னலமின்மை எங்களையெல்லாம் ஆட்கொண்டு விட்டிருந்தது. வசீகரமும் பாசமும் மிகுந்தவர், நற்பண்பும் நேர்த்தியும் மிக்கவர், கூறிய அறவுத்திறமும், உடல்பலத்தைவிட பண்புநலன்களின் பலம் பெற்றவர் அவர். நிறைந்த நகைச்சுவைப்பண்புடையவர். அவர் பட்ட சிரமங்களும், வாழ்வின் துயர்களும் அவருடைய உடல்நலத்தை பெரிதும் பாதித்திருந்தன; அவர் என்னதான் இயலாதபோதும், தமது முழு பலத்தையும் அவர் பிரயோகிக்கத் தவறியவே இல்லை.

ஆக்கா சிறைச்சாலைவாசத்தின் போது பட்ட துன்பங்களும் கொடுமைகளும் போதாதென மனதையே சுக்கு நூறாக்கிய சம்பவம் ஒன்று நடந்தது. ஆம், “அதி தூய்மையான கிளை” என பஹாவுல்லாவால் அழைக்கப்பட்ட மிர்ஸா மிஹ்டி ஒரு நாள் சிறைச்சாலையில் கூறையின் மீது தமது பிரார்த்தனைகளைக் கூறிக்கொண்டிருக்கும் போது தவறுதலாக காற்றோட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்து ஓர் இடைவெளியின் வழியாக கிழே விழுந்துவிட்டார். அவருடைய வயிற்றில் பயங்கரமான அடி பட்டிருந்தது; தொடை நைந்துபோய்விட்டது; வாயிலிருந்து இரத்தம் பெருகியது. இதன் விளைவாக மிர்ஸா மிஹ்டி மரணமடைந்தார். சிறைவாசத்தின் கடுமையின் காரணமாக இரகசியமாகவும், ஏழ்மையிலும், அவசரமாகவும் அதி தூய்மையான கிளை அடக்கம் செய்யப்பட்டார். அவருடைய தாயாராகிய ஆசிய்யி ஃகானும் இதனால் பெரும் விசனமுற்று நிற்காது அழுதுகொண்டே இருந்தார். இதையறிந்த பஹாவுல்லா, அவரிடம் வந்து அவர் அழத்தேவையில்லை எனவும், நம்பிக்கையாளர்கள் தம்மை வந்து காண்பதற்கான வழிகள் திறக்கப்படுவதற்கு மட்டுமின்றி மனிதனின் புத்திரர்கள் அனைவரும் ஒன்றுபடுத்தப்படுவதற்கும் அவர் தம் மகனை பிணையாக ஏற்றுக்கொண்டுவிட்டார் எனவும் ஆறுதல் கூறினார். இவ்வார்த்தைகளைக் கேட்ட அப்புனித ஆன்மா பெரிதும் ஆறுதலுற்று தமது பேரிழப்பின் துக்கத்தை மறந்தார்.

ஷோகி எஃபெண்டியின் 21 டிசம்பர் 1939 எனும் கடிதத்திலிருந்து.

இத்தகைய ஒரு தாயார் யார்? அவர், கடவுளின் பாதையில் யாவற்றையும் துறக்க மனமுவந்த தெய்வீகமும், விசுவாசமும் வாய்ந்த ஒரு பெண் மட்டுமல்ல. ஆனால், புனித பைபிளின் பழைய ஏற்பாட்டிலுள்ள ஐசையாவின் 54வது பகுதி அவரைப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது:

“ஏனெனில் உம்மை உருவாக்கியவர் உமது கணவரே ஆவார்; தேவகணங்களின் பிரபு என்பது அவரது பெயர்; உம்மை விடுவிப்பவர் இஸ்ரேலின் தெய்வீக புருஷராவார்ஆ; அவர் உலகம் முழுவதின் இறைவன் என அவர் அழைக்கப்படுவார்…”

அவருக்கு பஹாவுல்லா பின்வருவனவற்றையும் வெளிப்படுத்தியுள்ளார்:

“எம்மை மீண்டும் செவிமடுப்பாயாக, இறைவன் உன்மீது பெரிதும் திருப்பதிகொண்டுள்ளார்… அவருடைய உலகங்கள் ஒவ்வொன்றிலும் நீயே அவரது துணையாக இருக்கச் செய்தும், அவரது நாமமும், அவரது நினைவும், அவரது அரசும், அவரது சாம்ராஜ்யமும் நிலைத்திருக்கும் வரை அவரது அருகாமை, முன்னிலை ஆகியவற்றைக்கொண்டு உணக்கு ஊட்டமளித்துள்ளார்.”

அவர் மேலும் ஒரு நிருபத்தில் கூறுவது:

“ஓ நவ்வாப்! எமது விருட்சத்திலிருந்து உதித்தும், எமது துணையாகவும் இருந்துவந்துள்ள இலையே! எமது மகிமையும், எமது அன்புக் கருணையும், எல்லா ஜீவன்களையும் விஞ்சியுள்ள எமது இரக்கமும் உன்னைச் சாரட்டுமாக. உனது கண்களை இன்புறச் செய்யக்கூடியதையும், உனது ஆன்மாவிற்கு உறுதியளிப்பதையும், உனது உள்ளத்தை மகிழ்சியுறச் செய்யக்கூடியதையும் யான் உனக்கு அறிவிக்கின்றேன். மெய்யாகவே, உனது பிரபு கருணைமிக்கவர், சர்வ-கொடைாளி. இறைவன் உன் மீது திருப்திகொண்டுள்ளார், திருப்தி கொள்ளவும் போகின்றார்; அவருக்குச் சேவை செய்திட, அவர் உன்னை அவருக்கென தேர்தெடுத்தும், பகல் வேளையிலும், இரவு நேரத்திலும், அவருக்குத் துணையாக நியமித்துள்ளார்.”

இந்நாளின் மகத்துவம்


12 ஏப்ரல் 1912
திருமதி பிலிப்ஸ் அவர்களின் ஸ்டூடியோவில் ஆற்றப்பட்ட உரை
39 வெஸ்ட சிக்ஸ்டி-செவன்த் ஸ்ட்ரீட், நியு யோர்க்
திரு ஜோஃன் ஜி. க்ரன்டி அவர்களால் எடுக்கப்பட்ட குறிப்புகள்

அன்பும், ஐக்கியமும் கலந்த வாழ்த்துக்களை நான் வழங்குகின்றேன். இறைவனின் அன்பர்களைச் சந்திப்பதில் ஏற்படும் களிப்போடும், தெய்வீக மகிழ்ச்சியோடும் ஒப்பிடுகையில் இவ்வுலக காரியங்கள் ஒன்றுமற்றவை எனவே கணக்கிடப்படுகின்றன. நீண்ட கடல்வழி பயணத்தால் நான் சோர்வடைந்திருந்தாலும், இப்பெரும் களிப்பையும், ஆசீர்வாதத்தையும் அனுபவிப்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். இன்றிரவு, இந்த இறைவனின் கூட்டத்தினரின் மீது பார்வையை செலுத்தும் நான் அதிஉயர்ந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றேன். நீங்கள் இங்கு ஒன்றுகூடியிருப்பது நீங்கள் இறைவனின் சமயத்தை நிலைநிறுத்தியுள்ளீர்கள் என்பதற்கும், இறைவனின் சாம்ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கு உதவியளிக்கவும், கைகொடுக்கவும் செய்கிறீர்கள் என்பதற்கும், நிச்சயமாகவே ஓர் அடையாளமாகும். ஆகவே, என் ஆனந்தத்தின் உச்சநிலையென்பது உங்கள் வதனங்களைப் பார்த்து ஆசீர்வதிக்கப்பட்ட அழகர், பஹாவுல்லாவின் சக்தியால் நீங்கள் இங்கு ஒன்றுதிரட்டப்பட்டுள்ளீர்கள் என்பதைக் கண்டுணர்வதிலேயே அடங்கியுள்ளது. இக்கூட்டத்தில் நீங்கள் அவரது போதனைகளை நிலைநிறுத்தி, அவரது சமயத்திற்குக் கைகொடுக்கவும் செய்கின்றீர்கள். ஆகவே, மனுக்குல உலகிற்கு ஊட்டம் வழங்குவதற்கான தெய்வீக கனிகள் தோன்றக்கூடிய நல்விருட்சமாக நீங்கள் ஆகிடுவதை நான் காண்கின்றேன்.

பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன் முன்னெழுந்த சீடர்களைப் போல், இறைவனின் அன்பெனும் நெருப்பால் உங்கள் உள்ளங்கள் தீப்பிடித்தும், தெய்வீக ஆவியெனும் உணவால் உங்கள் ஆன்மாக்கள் புத்துணர்வு பெற்றும், நற்செய்தியின் அறிவிப்பினால் மனித உள்ளங்களை உயிர்ப்புறச் செய்தும், உங்கள் முகங்களில் இறையொளியுடனும், இறைவனைத் தவிர மற்றெல்லாவற்றிலிருந்தும் உங்களைத் துண்டித்துக்கொண்டும் நீங்கள் முன்செல்லவேண்டும். ஆகவே, தெய்வீக போதனையின் முதல் கோட்பாடாகிய அன்புக்கு ஏற்ப உங்கள் வாழ்க்கைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே ஆசீர்வதிக்கப்பட்ட அழகரது நூற்றாண்டு!
இதுவே அவரது அழகின் ஒளியின் காலவட்டம்!
இதுவே எல்லா அவதாரங்களின் முழுமை நிறைந்த நாள்!

விதைகள் விதைத்திட வேண்டிய நாட்கள் இவையே. மரங்கள் நட வேண்டிய நாட்கள் இவையே. இறைவனின் தாரள அருட்கொடைகள் ஒன்றடுத்து ஒன்றென உள்ளன. இந்நாளில் ஒரு விதையை விதைப்பவன், தெய்வீக இராஜ்யத்தில் அதன் கணிகளிலும் அறுவடையிலும் தனது சன்மானங்களைக் காண்பான். உரியநேரத்திற்கேற்ற இந்த விதை, இறைவனின் அன்பர்களின் இதயங்களில் விதைக்கப்படும்போது, தெய்வீகப் பரிவெனும் மழையினால் நீர்பாய்ச்சப்பெற்றும், தெய்வீக அன்பெனும் சூரிய ஒளியால் வெப்பமளிக்கவும் படும். மனுக்குல ஒருமைப்பாடு, நீதியின் பூரணத்துவம், மனுக்குலத்தினரிடையே வெளிப்படும் சுவர்க்கத்தின் வாழ்த்துக்குறிய பண்புகள் ஆகியவை அதன் கணியும், மலரும் ஆகும். பஹாவுல்வாவின் போதனைகளுக்கேற்ப இவ்விதமான ஒரு விதையை விதைக்கவும், இவ்விதமான ஒரு மரத்தை நடவும் செய்பவர்கள் இத்தெய்வீக விளைவை அதன் முழுநிறைவின் படிப்படியான வெளிப்பாட்டினூடே கண்ணுறவும், தயைமிக்கவரது நல்விருப்பத்தை அடையவும் செய்வார்கள்.

இன்று உலக நாடுகள், சுயகாரியங்கள் நிமித்தமாய் இருந்தும், அழியக்கூடியதும், நிலையற்றதுமான சாதனைகளில் ஈடுபட்டும், தாபம் மற்றும் அகந்தையெனும் நெருப்பில் பொசுங்கியும் உள்ளனர். அகந்தையே ஆதிக்கம் செலுத்துகின்றது; பகைமையும், விரோதமும் மேலோங்கி நிற்கின்றன. தேசங்களும், மக்களும் தங்கள் உலகாசைகள் மற்றும் பலன்களைப் பற்றியே சிந்திக்கின்றனர். சண்டையின் மோதல் சத்தமும், சச்சரவின் இரைச்சலும் அவர்கள் மத்தியில் செவிமடுக்கப்படுகின்றது. ஆனால், ஆசீர்வதிக்கப்பட்ட பூரணரின் நண்பர்களுக்கு விண்ணுலகம் மற்றும் இறையன்பைத் தவிர வேறு எண்ணங்கள் கிடையாது. ஆகவே, இறை அன்பின் பிறங்கொளியின் மினுமினுப்பைப் பரப்புவதில் உங்கள் சக்திகளை பயன்படுத்துவதில் தாமதம் செய்யாமல், அதன் பிரகாசத்தின் உதாரணங்களென அறியவும் காணவும் படும் வகையில் உங்கள் வாழ்க்கைகளை ஒழுங்குபடுத்திக்கொள்வீர்களாக. நட்டுவைப்பீர்கள் என உங்களை நம்பிவிடப்பட்டுள்ள இந்த அரிய விதை மேலும் தொடர்ந்து வளர்ந்தும், அதன் கணிகளை வழங்கவும் கூடிய வகையில் நீங்கள் எல்லாரையும் அன்புக்கருணையோடு நடத்தவேண்டும். உங்கள் உள்ளங்களில் நீங்கள் அன்பு கொண்டிருப்பீர்களேயானால் இறைவனின் அன்பும், இரக்கமும் உங்கள் மூலமாக இதை நிச்சயம் சாதிக்கும். இராஜ்யத்தின் வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. உண்மைச்சூரியனின் ஒளிகள் பிரகாசிக்கின்றன. தெய்வீக இரக்கம் எனும் மேகங்கள் தங்கள் விலைமதிப்பற்ற மணிக்கற்களைப் பொழிகின்றன. புதியதும், தெய்வீகமானதுமான இளவேனிற்காலத்தின் மென்பூங்காற்றுகள் அருவ உலகிலிருந்து சுகந்த மூச்சுக்களை மெல்ல வீசச் செய்கின்றன. ஆகவே, இந்நாளின் மதிப்பினை அறிவீராக.

இத்தெய்வீக வாய்ப்பின் நிறைவேற்றத்திற்குத் துயிலெழுவீர்களாக. இந்த நற்செய்தியைப் பரப்புவதற்கும், இந்த இரக்கம் மிகுந்த கொடையின் தோற்றத்திற்கும், உங்கள் ஆன்மாக்கள், உங்கள் செயல்கள், நடவடிக்கைகள் மற்றும் வார்த்தைகளின் சக்திகள் அனைத்தையும் கொண்டு உதவிபுரிவீர்களாக. நீங்களே உங்கள் செயல்கள் மற்றும் நடவடிக்கைகளின் மெய்நிலையும், வெளிப்பாடும் ஆவீர்கள். ஆசீர்வதிக்கப்பட்ட பூரணரின் கட்டளைகளுக்கும், போதனைகளுக்கும் இணங்க நடப்பீர்களேயானால், தெய்வீக உலகும், தொன்மையான இராஜ்யமும் உங்கள் உடைமையாகும் – நித்திய ஆனந்தமும், அன்பும், நிலையான வாழ்வும் உங்களுக்கே உரித்தாகும். தெய்வீகக் கொடைகள் பொழிகின்றன. மிகுந்த கனிகளை வழங்கும் ஒரு மரமாவதற்கான வாய்ப்பு உங்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதுவே பஹாவுல்லாவின் இளவேனிற்காலம். ஆன்மீக வளர்ச்சியின் பசுமையும், இலைதழைகளும் மனித உள்ளங்கள் எனும் தோட்டங்களில் பெரும் அளவில் தோன்றிக்கொண்டிருகின்றன. இந்த உருண்டோடிம் நாட்கள் மற்றும் மறைந்துபோகும் இரவுகளின் மதிப்பினை அறிவீர்களாக. ஒருவர்பால் ஒருவர் முழுநிலை அன்பெனும் ஸ்தானத்தை அடைந்திட முயலுவீர்களாக. அன்பின்மையால், பகைமையே அதிகரிக்கும். அன்பை கடைப்பிடிப்பதால், அன்பு பலப்படுவதோடு, பகைமைகள் சிறிது சிறிதாக ஒழிந்துவிடும்.

என்னைக் கவனியுங்கள் – உங்கள் முகங்களைக் காண்பதற்காக, முற்றிய வயதான காலங்களில், உடல் பலவீனத்தின் சுமையைத் தாங்கி, பரந்த சமுத்திரத்தைக் கடந்து வந்துள்ளேன். ஆவியின் வாழ்வின் வாயிலாக நீங்கள் அனைவரும் ஒரே ஆன்மாவாகவும், இராஜ்யத்தின் ரோஜாவனத்தை அலங்கரிக்கும் ஒரே மரமாகவும் ஆவீர்கள் என்பது என் எதிர்பார்ப்பு. இறைவனின் கொடைகள் எனும் முடிவற்ற பொக்கிஷங்கள் இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கே உரித்தாகும் என்பது என் எதிர்பார்ப்பு. நித்தியமான மகிமை எனும் சுவர்க்கத்தில் என்றென்றும் பிரகாசிக்கும் உங்களுடைய பளிச்சிடும் ஒளிகளின் வாயிலாக விண்ணுலகத் திருக்கூட்டத்தினர் ஒளிரப்பெறுவார்கள் என்பது என் பிரார்த்தனை.

அப்துல்-பஹா: அனைத்துலக அமைதிக்கான பிரகடணம், பக். 7-9)

ஆன்மீக மெய்நிலை


ஆன்மீக மெய்நிலை

வாழ்க்கையின் நோக்கம் என்ன? மனிதனின் மெய் இயல்பு யாது? சோதனைகளும் தீமையும் இந்த உலகில் ஏன் தோன்றுகின்றன? மரணத்திற்குப் பிறகு வாழ்வு உண்டா? இத்தகைய கேள்விகள் வரலாறு முழுவதும் மனிதகுலத்திற்கு ஒரு சவாலாகவே இருந்துள்ளன. ஏனெனில், மனிதகுலம் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் உண்மையைத் தேடி அலைகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த நோக்கத்தைத் தேடுவதானது மேலும் அதிகரிப்பு கண்டுள்ளது. ஏனெனில் ஒன்று மற்றொன்றோடு போரிட்டுக் கொண்டிருக்கும் எதிர்மாறான சித்தாந்தங்கள் தங்களது ஆற்றல்களை இழந்துவிட்டன. சர்வாதிகார ஆட்சியும், கம்யூனிஸ ஆட்சியும் நிராகரிக்கப்பட்டுவிட்டன. கட்டுப்படுத்தப்படாத ஜனநாயகச் சிந்தனையோ மனிதனின் சுதந்திரத்திற்குப் பேருதவிகள் வழங்கிட்ட போதிலும், அந்தச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தப்படாத பெரும் பொருளாசையின் விளைவாகப் பேராசையாக நிலைதாழ்ந்திடச் செய்யபட்டுவிட்டது. மற்ற கலாச்சாரங்களின் நன்மைகள் அவற்றின் சொந்தமாதிரியான சர்வாதிகாரத்தை கொண்டுள்ளன. அதிகப்பட்சம், இந்தக் கலாச்சாரங்களின் நன்மைகள் மேற்கத்திய பண்புகளுக்கு எதிராக வெறுமனே ஒரு தற்காப்பை உருவாக்கிக்கொள்வதே ஆகும்.

உண்மையை அறியவேண்டும் எனும் மனித ஜீவனின் தாகத்தைச் சமயமும் ஞானமும் பாரம்பரியமாக பூர்த்தி செய்தன. ஆயினும் விஞ்ஞான உலகக் கண்ணோட்டத்தின் முன்னே தன் செல்வாக்கினைக் காப்பாற்றுவதற்குச் சமயம் இப்போது போராடுகிறது. ஞானமோ காலப்பொறுத்தமெனும் வலையில் சிக்குண்டுவிட்டது.

படைப்புலகத்தை ஆராயும் அறிவியலைப் பொறுத்த வரையில், அதன் சாதனைகளும் ஒளிமயமான உட்திறன்களும் இந்த நூற்றாண்டின் ஆரம்பக்காலத்தில் பெரும் கற்பனைகளைத் தூண்டிய போதிலும், இக்காலத்துச் சமுதாயத்தின் நோய்களுக்கேற்ற மருந்தினை அவை வழங்கவில்லை. மாறாக மற்ற பிரச்சினைகளை அவை உருவாக்கியுள்ளன. மனித சமுதாயம் அர்த்தமும், நோக்கமும் கொண்ட ஒரு தெளிவான தூரநோக்கைக் கொண்டிருக்கவோ, தெளிவற்ற அதன் வருங்காலத்தை வழிநடத்த ஒரு நன்நெறி திசைகாட்டியைக் கொண்டிருக்கவோ இல்லை.

இச் சூழ்நிலையில், பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லாவின் போதனைகள் ஒரு புது ஒளியினை வழங்குகின்றன. மனிதகுலம் எதிர்நோக்கும் ஆன்மீகப் பிரச்சினைகளுக்கான விடைகளை பஹாவுல்லாவின் பல தொகுக்கப்பட்ட எழுத்துக்கள் வழங்குகின்றன.

பண்டைய சமயங்களில் பொதிந்துள்ள ஆழமான உண்மைகளையும் நன்மைகளையும் பஹாவுல்லா புதுப்பிக்கின்றார். ஓர் உலக சமுதாய அமைப்பு முறை தோன்றவிருக்கும் கட்டத்தில் மனித குலம் நின்று கொண்டிருக்கின்றது. அதன் தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் அறிவியல் விஞ்ஞானம் ஆகியவற்றுக்குச் சாதகமான குரலில் இவர் இந்த உண்மைகளை வழங்குகின்றார். படைப்புலகை வெல்லக் கூடிய ஒரு கருவியை விஞ்ஞானம் வழங்கியுள்ள போதிலும், மனித இனம் ஒரே ஒரு சிறகை மட்டும் கொண்ட பறவையைப் போல் ஆகிவிட்டது.. இறுதியில், இந்தப் பறவை பறக்கவியலாமல், மண்ணாசை எனும் சகதியில் மூழ்கிவிடும். வேறொரு நிலையில் இயங்கும் மெய்மைத்தன்மை ஒன்று இருக்கின்றது என பஹாவுல்லா உறுதியாகக் கூறுகின்றார். ஆன்மீகத் தன்மைதான் அது. மனிதகுலம் எனும் பறவை சிறகடித்துப் பறக்கச் செய்திடுவதற்கான மற்றுமொரு சிறகை இது வழங்கிடும். இந்தத் தன்மையானது ஐம்புலன்களுக்கும் எளிதில் புலப்படாது. இருந்தபோதிலும், இந்த ஆன்மீகத் தன்மையினை அறிந்துகொள்வதானது, மூட நம்பிக்கை, கண்முடித்தனமான நம்பிக்கை அல்லது பகுத்தறிவுக்கு உட்படாத நம்பிக்கைகள் ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்படவில்லை.

படைப்புலகின் மீது ஆதிக்கம் செய்யும் விதிகளை அறிந்து அவற்றைப் பயன்படுத்தும் முறைகளை ஸ்தாபிக்கக்கூடிய ஒரு முறையான ஆய்வு மற்றும் கணிப்புமுறையினை விஞ்ஞானம் வழங்குகின்றது. இதைப் போலவே ஆன்மீகத்தன்மையை ஆட்கொள்ளும் விதிகளாவன கண்டறிந்துகொள்ளக் கூடியவை என பஹாவுல்லா விளக்குகின்றார். ஆன்மீக ஆற்றல்களின் விளைவுகளை அத்தகைய ஆற்றல்கள் படைப்புலகில் வெளிப்படுத்தக்கூடியவைகளில் இருந்து அறிந்திடலாம். ஆன்மீக விதிகளின் செல்வாக்கினை அனுபவங்களின் வாயிலாக சோதிக்கலாம். மற்றும் கட்டுக்கோப்பான செயல்களின் வாயிலாக செயல்படுத்தலாம்.

பௌதீக விதிகளை அறிந்துகொள்வதற்கு எப்படி விஞ்ஞானம் மூலாதாரமாக இருக்கின்றதோ, அதைப் போலவே உண்மையான விஞ்ஞானம் முறையானதும், வெற்று சம்பிரதாயங்களையும், மூட நம்பிக்கைகளையும் துறந்திட்ட ஓர் உண்மை சமயத்தின் ஆன்மீகத் தன்மையின் விதிகளை அறிந்திட வகைசெய்வதற்கு மூலதரமாக விளங்கும். ஆன்மீகத் தன்மையைப் பற்றிய அறிவு தொடர்ச்சியாக வரும் தெய்வீக ஆசான்களின் வாயிலாக மனித குலத்திற்கு வந்து சேரும் என பஹாவுல்லா விளக்குகிறார். இவர்கள் உலத்தின் மாபெரும் சமயங்களின் ஸ்தாபகர்களாவர்.

சுய வளர்ச்சி, சமூகத்தின் ஒழுங்கமைப்பு மற்றும் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக இந்த அறிவை செயல்திட்டமாக முறையான வகையில் செயல்படுத்தும் வழிமுறைதான் ஆன்மீகத் தன்மை அடைதல் என்பதற்குப் பொருளாகும். ஆன்மீகத் தன்மை சம்மந்தப்பட்ட பஹாவுல்லாவின் போதனையானது பெரும் எண்ணிக்கையில் அடங்கிய பாடங்களை உள்ளடக்கியுள்ளது. இவைகளில் மனிதனின் இயற்கைத் தன்மை, ஆன்மாவின் வளர்ச்சி, ஆன்மீக வாழ்வு, படைப்புத் தன்மைக்கும் ஆன்மீகத் தன்மைக்கும் உள்ள உறவு, ஆன்மாவின் முன்னேற்றம் மற்றும் மனித குலத்தின் ஆன்மீக கல்விக்கான வழிமுறைகள் ஆகியவை அடங்கும்.

இந்தத் தொகுப்பில் முக்கியமான இந்த போதனைகளைச் சம்பந்தப்பட்ட பஹாய் எழுத்துக்களில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து சிலவற்றைத்தான் வழங்கமுடியும்.. இதன் நோக்கம் ஆன்மீகத் தன்மை தொடர்பான பஹாவுல்லாவின் போதனைகளுக்கு ஓர் அறிமுகம் வழங்குவதே ஆகும். மனிதகுலத்தின் ஆன்மீகத் தாகத்தைத் தீர்த்திடும் பஹாவுல்லாவின் அர்ப்பணிப்பான பஹாய் எழுத்துக்களை ஆர்வங் கொண்ட வாசகர் மேலும் ஆராய்ந்திட தூண்டப்படுகின்றார்.

எளிதாகப் பயன்படுத்துபவதற்கென இந்த நூல் ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, மேலும் பல சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும், அது தொடர்பான விஷயத்தை விவரிப்பதற்கு பஹாய் எழுத்துக்களிலிருந்து பொறுக்கு மணிகள் வழங்கப்பட்டுள்ளன. எல்லா பகுதிகளுக்கும் எண்கள் சேர்க்கப்பட்டுள்ளன; அதற்கான மூல நூல்களின் விபரம் இந்த நூலின் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. வாசகர்கள் மூல வாசகத்தில் இந்த பகுதிகளைக் கண்டறிய இது உதவும். ஒரு சுருக்கமான முன்னுரை இந்த நூலின் ஒவ்வொரு பகுதியையும் அறிமுகம் செய்யும். வழங்கப்படும் பகுதிகள் யாவும் வெவ்வேறு நயங்களைக் கொண்டுள்ளன. இதன் காரணம் யாதெனில், இந்த நூல் ஐந்து மூலாதாரங்களிளிருந்து வாசகங்களைத் தொகுத்துள்ளது — இவை பஹாவுல்லாவின் எழுத்துக்கள், அவருடைய முன்னோடியான பாப் அவர்காளின் எழுத்துக்கள், மற்றும் பஹாய் சமயத்தின் தொடர்ச்சியான அதிகாரத் தலைமைத்துவங்கள் ஆகியோரின் எழுத்துக்கள்: அப்துல் பஹா, ஷோகி எஃபென்டி மற்றும் உலக நீதி மன்றம் ஆகியவை. இவற்றின் நயம் வேறுபட்டு இருந்த போதிலும், இதன் சாரம் சம்மந்தப்பட்ட பகுதிகளைப்பற்றி பஹாவுல்லாவின் போதனைகளின் தெளிவான பிரதிபலிப்பை வழங்குகின்றன.

“எமது வார்த்தைகளெனும் சமுத்திரத்தில் உங்களை மூழ்கச் செய்வீர்களாக” என்று பஹாவுல்லா மனித குலத்தை அழைக்கின்றார், “அதன் வழி அதன் இரகசியங்களை நீங்கள் அறிந்திடக் கூடும்” ஆவலோடு தேடும் ஒவ்வொருவரும், இச்சமுத்திரத்தின் ஆழங்களை அடைய தன்னை தூண்டிக்கொண்டு முயற்சிக்கவேண்டும் என்று பஹாவுல்லா உற்சாகம் அளிக்கின்றார். இதன் வாயிலாகத் தன் தேடும் ஆவலின் அளவிற்கேற்பவும், தான் செய்யும் முயற்சிகளுக்கேற்பவும், அவன் வெகுமதிகளைப் பெறக் கூடும். இந்தப் போதனைகளில், ஆன்மா, சமுதாயம், மற்றும் மனிதனின் நோக்கத்தைப் பற்றி பஹாவுல்லா ஒரு புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அறிவினை வழங்குகின்றார்.

தெய்வீக சாம்ராஜ்யம்


டாக்டர் பீட்டர் காஃன் அவர்களின் சொற்பொழிவு
வெள்ளிக்கிழமை, 29 ஜூன் 2001
இராஜ்யத்தின் மாநாடு, மில்வௌக்கீ, விஸ்கான்சின்

அன்பு மிகு நண்பர்களே, ஐக்கிய அமெரிக்காவின் எல்லா பாகங்களிலிருந்தும் நாம் இங்கு கூடியுள்ளோம். பார்க்கப்போனால், உலகின் பல பாகங்களிலிருந்தும் கூடியுள்ளோம் எனவே கூறலாம். அப்படி கூடியுள்ள நாம், இறைவனின் சாம்ராஜ்யம் உலகில் நிறுவப்படும் நாள் வரப்போகின்றது எனும் நம்பிக்கையையும், எதிர்ப்பார்ப்பையும், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அனையாமல் வைத்திருந்த எண்ணிகையிலடங்கா தலைமுறையினரின் வாரிசுகள் ஆவோம். சில சமய நம்பிக்கைகளில், இறைவனே பூமிக்கு வந்து தமது மக்களிடையே குடியிருப்பார் எனும் நம்பிக்கையோடு இது தொடர்புபெற்றிருந்தது. இந்த அனைத்து எதிர்ப்பார்ப்புகளிலும், மனித நடவடிக்கைகளில் இறைவனே தலையிடுவார் எனவும், நீண்ட காலமாக வாக்களிக்கப்பட்டிருந்த சுபிட்சம், ஐக்கியம், மற்றும் சாந்தி ஆகியவை உலகம் முழுவதும் ஸ்தாபிக்கப்படும் எனவும் ஒரு விழிப்புணர்வு இருந்துவந்துள்ளது.

நாம் வாழ்ந்துவரும், சமய முக்கியத்துவம் பெரிதும் குறைந்துள்ள இக்காலத்தில், அந்த எதிர்ப்பார்ப்பு மங்கிவிட்டது. ஆனால், கடந்த பல வருடங்களாக, உலகில் நடந்துவரும் சம்பங்களால் அது மீண்டும் தலைதூக்கியுள்ளது. அதோடு, உலகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளின் பரினாமம் குறித்த விழிப்புணர்வினாலும் இந்த எதிர்பார்ப்பு தலைதூக்கியுள்ளது. உங்களில் பலர் அல்லது எல்லாருமே உணர்ந்துள்ளதுபோல், இது பஹாய் சமயத்தின் மைய செய்தியும் ஆகும். உலகத்தில் இறைவனின் சாம்ராஜ்யம் பூமியில் ஸ்தாபிக்கப்படப் போகின்றதெனும் தொன்மையான தீர்க்கதரிசனம், நிறைவேறும் காலத்தில்தான், நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

நாம் எங்கெங்கு பார்க்கினும், மாற்றியமைக்கும் சக்திகள், மனித சிந்தனை மற்றும் நடவடிக்கைகளின் எல்லா நிலைகளினூடும் தனியாத வேகத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை, இக்குறிக்கோளின் நிறைவேற்றத்திற்கு ஏற்புடைய மாற்றங்களை உருவாக்கிவருகின்றன. நம்மிடையே பலர், பஹாய் சமயத்தின் உறுப்பினர்களாக உங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளீர்கள். நீங்கள், உலகில் நடப்பவற்றை ஆன்மீகமயமாக்குதல் குறித்தும் அஃது ஒரு நிலையான அஸ்திவாரத்தில் ஸ்தாபிக்கப்படுவதற்கும் ஒரு முக்கிய பங்காற்றவிருக்கின்றீர்கள். இந்தக் கடமையை நீங்கள் தொண்டு ரீதியில் ஏற்றுள்ளீர்கள். இது நமது சலுகையாகும். இது நமது உரிமையாகும்.

பூமியில் இறைவனின் சாம்ராஜ்யம் என்றால் என்ன என்பது குறித்து நாம் சிந்திக்கும் அதே வேளையில், இது குறித்து பஹாய் சமயம் என்ன கூறுகின்றது என்பது பற்றிய எனது புரிந்துகொள்ளலை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவரவிரும்புகிறேன். என் நம்பிக்கை என்னவெண்றால், நம்மைச் சுற்றிலும் இந்த விஷயம் குறித்து மேலோங்கியுள்ள பொதுவான நம்பிக்கையிலிருந்து பஹாய் சமயத்தின் கண்ணோட்டம் மூன்று வகைகளில் வேறுபடுகின்றது என்பதாகும். முதலாவதாக, பஹாய்களெனும் முறையில், இது தீடீரென நடக்கப்போகும் ஒரு நிகழ்ச்சி. என நாம் நம்பவில்லை. மனித காரியங்களில் இறைவனின் தலையீடு என்பது தொடரும் வளர்செயற்பாடே என்பது நமது நம்பிக்கை. சரித்திரமென்பது பெரும் வியப்பளிக்கும் முறையில் ஒரு முடிவிற்கு வரும் எனவோ, கண்சிமிட்டும் நேரத்தில் ஒரு தன்மை மாற்றம் ஏற்பட்டு, இறைவனின் சாம்ராஜ்யம் பூமியின் மீது படியும் எனவோ நாம் எதிர்பார்க்கவில்லை. பார்க்கப்போனால், இறைவனின் சாம்ராஜ்யம் என்பது, நீண்ட கால இடைவெளியில், மகத்தான, வலுமிக்க ஒரு முயற்சியின் விளைவாகவே உருபெறும் என நாம் நினைக்கின்றோம். இந்த உருபெறும் காலம், பத்தாண்டுக் காலங்களாக அல்ல, மாறாக, நூற்றாண்டுக்காலங்களாக கணக்கிடப்படுகின்றது..

இந்த உலகில் இறைவனின் சாம்ராஜ்யத்தின் வருகையானது, தற்போதைக்கு அற்பமாகத் தோன்றும், ஆனால், காலப்போக்கில் பெரும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படப்போகின்ற செயல்களைக் கொண்டு ஆரம்பிக்கப்படும் என்பதே நமது நம்பிக்கை. தனிமனிதர்கள், தங்களின் மாபெறும் சாதனைகளை, தங்களின் ஆழ்ந்த மனதிருப்தியை, தங்களின் வாழ்க்கையின் அர்த்தம் குறித்த அதி ஆழ்ந்த ஞானத்தை, சாம்ராஜ்யத்தை உருவாக்கும் வளர்செயற்பாட்டில் தங்களை ஈடுபடித்திக்கொள்வதன் வாயிலாக அடையப்போகின்றனர் என்பதே நமது நம்பிக்கை. இந்த சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்திடுமாறு நாம் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளோம். ஆரம்பமாக, இதை நமக்குள், நமது இதயங்களில், நமது ஜீவனின் ஆழ்மையத்திற்குள்ளேயே ஸ்தாபிக்கவேண்டும். அடுத்ததாக, உலகந்தழுவிய நிலையில் உள்ள பஹாய் சமூகத்திற்குள் அதை ஸ்தாபிக்கவேண்டும்.

மூன்றாவதாக, இராஜ்யத்தை உருவாக்குவதற்காக உலகின் நாலாமூலைக்களுக்கும் இந்த சமூகம் பரவிச்செல்வதன் வாயிலாக அது ஸ்தாபிக்கப்படப்போகின்றது. இராஜ்யத்தைப் பற்றிய பஹாய் எண்ணத்தின் அசாதாரன அம்சங்களில் அதுவும் ஒன்று. எல்லா தேசங்களையும், இனங்களையும், பின்னனிகளையும் சார்ந்த மக்களின் பெரும் முயற்சி, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பின் வாயிலாக அது சிறுகச் சிறுக உருபெறப்போகின்றது. எனது இரண்டாவது கருத்து என்னவென்றால், இராஜ்யத்தின் உருவாக்கம் குறித்த நமது அறிவு, மனித வரலாற்றில் இதுவரையிலும் நடந்திராத அதிமேன்மையான படைப்புச் செயல் ஒன்றை அது உள்ளடக்கியுள்ளது என்பதே ஆகும். குழுக் குறிக்கோளைப் பின்தொடருவதில் மனிதர்களின் கூட்டுமுயற்சியில் ஒரு மகத்தான நிலைமாற்றமாகும் இது.
பஹாவுல்லா, உயிர்ப்பொருளியல் சார்ந்த ஒருமங்களை உருவாக்கும்படி விதித்துள்ளார் என்பதே என்னுடைய புரிந்துகொள்ளல் ஆகும். இது, மனித நடவடிக்கை மற்றும் நடத்தைமுறைகளின் வரலாறு இதுவரை கண்டிராத ஓர் அம்சமாகும். இந்த உயிர்ப்பொருளியல் ஒருமங்கள், பஹாய்கள் எனும் முறையில் ஒரே நம்பிக்கையைக் கொண்டுள்ள குழுக்களையும், தனிநபர்களையும் உள்ளடக்கியுள்ளன. ஆனால், இந்த ஒருமங்கள் அவற்றின் தனிக்கூறுகளின் ஆற்றலைக்காட்டிலும் அதி உயர்வான ஆற்றலைக் கொண்டுள்ளன. அவற்றை நாம் உள்ளூர் ஆன்மீக சபைகளெனவும், தேசிய ஆன்மீக சபைகளெனவும், நியாய மன்றங்கள் எனவும் அழைக்கின்றோம். அவை, நடைமுறை ரீதியில் உண்மையாகவே மனிதநிலைக்கும் அப்பாற்பட்டவை. அவற்றின் கூறுகளின் ஒன்றுதிரண்ட ஆற்றல்களைக்காட்டிலும் அவை அதி உயர்வான ஆற்றல்களைக் கொண்டுள்ளன. எந்த ஒரு நேரத்திலும், அவற்றின் உறுப்பினர்களாக உள்ளடங்கியிருக்கும் தனிபர்களின் வாழ்க்கையைக் காட்டிலும், அவற்றிற்கு நிலைத்து நிற்கும் ஓர் இருப்பு நிலை உண்டு.

அவை அதி ஆழ்ந்த ஆன்மீக ஆற்றல்களின் வாயிலாக உந்துதல் அளிக்கப்படுகின்றன. அறிந்துள்ளவரை, பெரும்பாலும் ஆற்றல் குறைந்த ஓர் ஆரம்ப நிலையிலிருந்து வலுவும், ஆற்றலும் நிறைந்த ஓர் நிலையை நோக்கி படிப்படியாக வளர்ச்சியடைகின்றன. நம்மைச் சுற்றிலும், செயல்படாத நிலையில் இருக்கும் பல உள்ளூர் ஆன்மீக சபைகளை அடிக்கடி காணுகின்றோம். ஒன்றுகூடுவதற்கு இயலாதவைகளாகவும், மிகவும் அடிப்படையான தீர்மானங்கள் எடுப்பதற்கு இயலாதவைகளாகவும், தங்களின் கலந்தாலோசனை குறித்த கடமைகளின் அடிப்படை அம்சங்களிலேயே பிரச்னைகளை எதிர்நோக்குபவைகளாகவும் இவை இருக்கின்றன. நாம், ஒரளவிற்கு வலுவற்றிருக்கும் இந்த ஸ்தாபனங்களைப் பார்க்கின்றோம். பெரும் அன்புடனும் நம்பிக்கையடனும் நாம் அவற்றை பார்க்கின்றோம். ஏனெனில், இந்த சாதாரன ஆரம்ப நிலைகளிலிருந்துதான், ஆன்மீகப் படிமுறை வளர்செயற்பாட்டின் வழி, பத்தாண்டுக்காலங்கள் மற்றும் நூற்றாண்டுக்காலங்களினூடே, வரலாறு காணாத இந்த மகத்தான உயிர்ப்பொருளியல் ஒருமங்கள் உருவாகின்றன என்பது நமக்குத் தெரியும்.

அவற்றின் தற்போதைய ஆற்றல் குறைந்த நிலையை நாம் கண்டனம் செய்ய கிளம்புவோமானால், தெளிவாகவே ஆற்றல் குறைந்த நிலையில் இருக்கும் பச்சிளம் சிசுக்களையும் நாம் கண்டனம் செய்யவேண்டும். இந்த ஆன்மீக சபைகளின் பராமரிப்பு, அன்பு, மற்றும் மேம்பாட்டில் நாம் ஈடுபட மறுத்தோமானால், அன்றலர்ந்த பச்சிளம் சிசுக்களையும் நாம் புறக்கணிக்க வேண்டும், அவற்றை அவற்றின் வழிக்கே விட்டுவிட வேண்டும், கேட்பாரற்று அவை அழிந்து போகவும் விடவேண்டும். உலகம் முழுவதும் உள்ள இந்த உள்ளூர், தேசிய உயிர்ப்பொருள் ஒருமங்கள், ஓர் உலகளாவிய உயிர்ப்பொருள் அமைப்பாக ஒன்று சேர்கின்றன. இந்த ஒன்றசேர்க்கை, இறைவனின் சாம்ராஜ்யம் பூமியில நிறுவப்படுவதற்காக நாம் பயன்படுத்தவிருக்கும் குறைவான வளங்களை செயல்விளைவுகளிக்கும் வகையில் பஹாய் சமூகங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்கின்றது. பூமியில் இறைவனின் சாம்ராஜ்யம் குறித்த பஹாய் புரிந்துகொள்ளலாக, மூன்றாவது அம்சமாகவும், ஒரு வேளை மனதை பெரிதும் ஈர்ப்பதாகவும் இருக்கக்கூடிய ஒன்று உள்ளது. இராஜ்யத்திற்குள் நிறைவளிக்கும் இருப்புநிலை, வளர்ச்சியாற்றல் கொண்டநிலையே எனவும், இயங்காநிலையி அல்ல எனும் பஹாய் புரிந்துகொள்ளலே அது. இயங்காநிலை, மாற்றமற்றநிலை, மற்றும் உண்மையில் சொகுசுநிலை ஆகியவை சம்பந்தமான உணர்விலேயே சுவர்க்கநிலை மனதுக்குகந்த நிலையென்பது பாரம்பரிய சமயநம்பிக்கையாகும். இதற்கு நேர் எதிர்நிலையில் மேற்கண்ட பஹாய் கருத்து உள்ளது.

தனிமனிதர்களும் சமூகஅமைப்புக்களும் நிறைவு பெறுவதற்கு, தொடர்ந்தாற் போன்ற நிலையிலான மாற்றங்களும், வளர்ச்சியும் அத்யாவசிய தேவைகளாகின்றன என்பது நமது கருத்தாகும். ஏன்? ஏனெனில், மனிதர்கள் படைப்புணர்வு மிக்கவர்கள். பஹாய்கள் எனும் முறையில், இதன் காரணமாகவே படைப்புத்திறன் வெளிப்படும் ஓர் தூண்டுகோலாக நமது சமயம் இருப்பதே நமது குறிக்கோளாகவும், முயற்சியாகவும் இருக்கவேண்டும். அன்றி, பகுத்தறிவுக் கைவிலங்காக அது இருக்கக்கூடாது. அஸ்திவார நம்பிக்கைகளின் மாற்றவியலா தன்மையை இசைவிணக்கமான பயன்படுத்துதலோடு இணைத்திட நாம் முற்படுகின்றோம்.

என்றும் தொடர்ந்து கல்வி கற்கும், என்றும் தொடர்ந்து மேம்பாடு காணும், என்றும் தொடர்ந்து விரிவடையும் ஓர் சமூகத்தை உருவாக்கவே நாம் முயற்சி செய்கின்றோம். அவ்வித சமூகத்தில், பல்வகைப்பட்ட பின்னனிகள், திறன்கள், ஆற்றல்கள் மற்றும் விருப்பங்களைக் கொண்ட எல்லா தனிமனிதர்களும் தங்களுடைய ஆழ்ந்த நிறைவுநிலையை அடையமுடியும். ஒன்றுக்கொன்று எதிர்மாறானவை என கருதப்படும் அம்சங்களை அறிவுக்கப்பாற்பட்ட உயிர்ப்பொருளியல் ரீதியில் ஒன்றிணைக்க நாம் முயலுகின்றோம். வாழ்க்கையில், தியாகம் சார்ந்த முயற்சிகளுடன் ஒத்துப்போகும் இன்பத்தைத் தேடுவது நியாயமான ஒன்றாக இருக்கக்கூடிய இராஜ்யத்தை அமைக்க நாம் முயற்சி செய்கின்றோம். தன்னிச்சை என்பது இணக்கமான முறையில் கட்டொழுங்குடன் ஒன்றிணையும் ஓர் இராஜ்யத்தை நாம் உருவாக்குகின்றோம்.

கூட்டு ஸ்தாபனங்களின் அதிகாரத்திற்குக் கீழ்படிவதோடு இசைவிணக்கம் கொள்ளக்கூடிய, தனிமனிதத்தன்மை பராமரிக்கப்படும் ஓர் இராஜ்யத்தை நாம் உருவாக்குகின்றோம். நம்பிக்கையில் உறுதிப்பாடு என்பது, எதையும் ஆராயும் ஓர் உணர்வுடன் இசைவுகொள்ளக்கூடியதும், வேறுபடும் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கக்கூடியதுமான ஓர் இராஜ்யத்தை நாம் ஸ்தாபிக்க முயலுகின்றோம். இராஜ்யத்தை உருவாக்கு வழிவகைகள் குறித்து அடுத்த சில நாட்களில் பல விஷயங்கள் பேசப்படவிருக்கின்றன. நாளை, தேசிய ஆன்மீக சபை தனது அற்புதமான திட்டத்தை நம்மோடு பகிர்ந்துகொள்ள விருக்கின்றது. இத்திட்டம், இந்த வளர்செயற்பாட்டில் ஒரு பெரிய அடி எடுத்துவைக்கப்படுவதற்கு இணையாகும். இருந்தபோதிலும், இராஜ்யத்தை உருவாக்கும் விஷயம் குறித்து ஒரிரண்டு கருத்துக்களை முன்வைக்க எனக்கு அனுமதி தாருங்கள்.

ஒரு தூரநோக்கை மேம்படுத்திக்கொள்வதே நமது மிகப் பெரியதும், அதி அடிப்படையானதுமான ஒரு தேவையாக இருக்கின்றது என்பது என் கருத்து. நமக்கு என்ன வேண்டும், எங்கு செல்கின்றோம், மற்றும் அங்கு எவ்விதம் சென்றடையப்போகின்றோம் என்பது குறித்த ஓர் கூர்நோக்கை நாம் நம் மனதில் உருவாக்கிக்கொள்வோம். அடிப்படையில், புனித வாசகங்களில் மூழ்குவதன் வாயிலாகவும், பஹாய் வாழ்வுமுறையின் வாயிலாகவும், அவ்வப்போது நமது ஸ்தாபனங்கள் அமுல்படுத்தும் வெவ்வேறு திட்டங்களின் வாயிலாகவும் இந்தக் கூர்நோக்கை நாம் அடையலாம். இந்தக் கூர்நோக்கை சுலபமாக அடைந்துவிடுவோம் என நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். அவ்வப்போது வாசகங்களில் மூழ்குவதால் மட்டும் இந்தக் கூர்நோக்கு ஒரு பரிசாகக் கிடைக்கும் என நம்மை நாம் ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அல்லது, அவ்வப்போது பஹாய் சமூக வாழ்வு முறையில் பங்கெடுப்பது, அமெரிக்க பஹாய் சமூகத்தின் முயல்வுகளான பல்வேறு திட்டங்களில் அவ்வப்போது பங்கெடுப்பது, ஆகியவை மூலமாகவும் கிடைக்கும் என நாம் நம்மை ஏமாற்றிக்கொள்ளவேண்டாம். இந்த எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதன் வாயிலாக மட்டுமே இக்கூர்நோக்கு நமக்குக் கிடைக்கும்.

இந்த கூர்நோக்கை அடைவதன் வாயிலாக, விலைமதிப்பற்றதும், அபூர்வமானதும், பார்க்கப்போனால், தனிச்சிறப்புடையதுமான ஒன்றை நாம் அடைவோம். ஒரு விசாலநோக்கை அடைவோம். அந்த விசாலநோக்கு, உலகில் இராஜ்யத்தை உருவாக்கிட உதவும் ஆன்மீக, பௌதீக சக்திகள் மற்றும் வளர்செயற்பாடுகள் ஆகியவற்றின் இயக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும். ஒரு புதிய அறிவு, ஒரு புதிய பார்வை, ஒரு புதிய உள்ளம், ஒரு புதிய செவிப்புலன், மற்றும் உறுதியாகவே, ஒரு புதிய குரலையே நாம் பெறுவோம். இறைவனின் திருவிருப்பத்திற்கிணங்க, உலகில் செயல்பட்டும், அதை மாற்றியமைத்தும், நிலைமாற்றம் செய்யவும் கூடிய ஆன்மீக மற்றும் பௌதீக சக்திகளை உள்ளடக்கிய ஒரு கூர்நோக்கு அது. இந்த மேம்படுத்தப்பட்ட பார்வையின் வாயிலாக, ஒரு சமூக உணர்வையும் நாம் பெறுவோம். பல்வகைப் பரிமானங்களை உள்ளடக்கிய ஒரு சமூகமாக அது இருக்கும். குறிப்பிட்ட இடம் எனும் குறுகிய உணர்வுக்கு அப்பாற்பட்ட ஒரு சமூக உணர்வு அது. ஐக்கிய அமெரிக்காவில் உள்ள பஹாய்களோடோ, வட அமெரிக்காவில் உள்ள பஹாய்களோடோ, அமெரிக்க துணைக் கண்டத்தில் உள்ள பஹாய்களோடோ மட்டும் கொண்ட ஒற்றுமை மற்றும் ஐக்கிய உணர்வல்ல. மாறாக, உலகம் முழுவதையும் உள்ளடக்கிய ஒரு உணர்வாக அது இருக்கும்.

ஒரே உண்மையான, அறிவிற்கப்பாற்பட்ட பல்வகைத் தன்மை, புலனுக்கோ, கணிப்பிற்கோ அப்பாற்பட்ட அன்பெனும் பந்தங்களால் ஐக்கியப்படுத்தப்பட்ட குடும்பம் எனும் உணர்வை இன்று, இங்கு இந்த கூட்டத்தில் நாம் உணர்வது போலவே நாம் உணர்வோம். காலப்பரிமானத்தைத் தாண்டிய ஒரு சமூக உணர்வையும் நாம் பெறுவோம். நமக்கு முன் சென்றவர்களோடும் நாம் ஒரு சமூக உணர்வைப் பெறுவோம். ஈரான் நாட்டின் ஆரம்ப பஹாய்கள் மற்றும் உதயத்தைத் தோற்றுவித்தவர்களின் உற்சாக உணர்வில் நாமும் பெங்குபெறுவோம். இந்த வீர ஆன்மாக்களோடு ஒரு சமூக உணர்வை நாம் பெறுவோம். நாம் உற்சாகம் அடைவோம். அமெரிக்க பஹாய்கள், ஈரானிய பஹாய்களின் ஆன்மீக சந்ததியினராக தங்களை கருதிக்கொள்கின்றனர், எனும் ஷோகி எபெஃண்டி அவர்களின் எதிர்பார்ப்பை நாம் நிறைவேற்றுவோம். அதற்கும் அப்பால் நமது சமூக உணர்வு, வானவெளியை மட்டும் தொடுவதாக இருக்காது, கடந்தகாலங்களை மட்டும் உள்ளடக்கியதாக இருக்காது, ஆனால், இனி வரப்போவோருடனும் நாம் தொடர்புகொள்வோம்.

வருங்காலத்தில் வரப்போகிறவர்கள், கால ஓட்டத்தில் தங்கள் உலகவாழ்வை நோக்கி வந்துகொண்டிப்பவர்கள், வருங்காலத்திலிருந்து நம்மை நோக்கி அனிவகுத்துவருபவர்கள், தங்கள் கைகளில் நிர்வாகத்தை எடுத்துக்கொள்ளப்போகின்றவர்கள், இந்த காரியங்களில் நமக்கு உதவிசெய்ய போகின்றவர்கள், வரப்போகும பத்தாண்டுகளிலும், நூற்றாண்டுகளிலும் தாங்கள் அனுபவிக்கப்போகும் ஐக்கியத்திற்கும் சுபிட்சத்திற்குமான அஸ்திவாரமாக நமது தற்போதைய முயற்சிகளை காணப்போகின்றவர்கள் குறித்து நாம் விழிப்புணர்வு கொள்வோம்.

இந்த தூரநோக்கின் மூலமும், இந்த சமூக ரீதியிலான உணர்வின் மூலமும், இன்னமும் பிறந்திடாத வருக்கால சந்ததியினரின் நல்வாழ்வு குறித்து நாம் எந்த அளவிற்கு பொறுப்பேற்றுள்ளோம் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இராஜ்யத்தை உருவாக்கும் இந்த நேரத்தில், மனதில் வீர உணர்வுகளை மறுமலர்வு பெறச் செய்வதே இப்போதைய தேவையாகும்.

சுகவாழ்வை நாடும், பேராசையும் தன்னலமும் மிகுந்த, அவநம்பிக்கை மிக்க ஒரு காலத்தில் நாம் வாழுகின்றோம். இங்கு, இன்று கூடியுள்ள நாம், அமெரிக்க வாழ்வுக்கும், ஈரானிய பஹாய் சமூகத்தின் வாழ்வுக்கும், மேற்கு நாடுகளின் வாழ்வுக்கும் கடந்த காலங்களில் மையமாக விளங்கிய அந்த அம்சங்களை மறுஉயிர் பெறச் செய்திட ஆணையிடப்பட்டுள்ளோம். வீர உணர்வு பெற ஆணையிடப்பட்டுள்ளோம். மேன்மை மிகு குறிக்கோள்களின்பால் நாம் நம்மை அர்ப்பணம் செய்திட வேண்டும். மனித இயல்பின் சிறப்பு அம்சங்களை மறு உயிர்பெறச் செய்திட நாம் அழைக்கப்பட்டுள்ளோம். தியாகம் செய்ய தூண்டும், மனிதர்களின் அதிய உயர்ந்த நாட்டங்களாக மேன்மையான நோக்கங்களை உள்ளடக்கியிருக்கும் மனிதர்களின் அந்த சிறப்பம்சங்களை, நாம் மறு உயிர்பெறச் செய்திட வேண்டும்.
இன்று நிலவக்கூடிய அந்த இன்னல்களுக்கு எதிராக விடாமுயற்சியை நமது உள்ளங்களில் மறுஉயிர்பெறச் செய்திட நாம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளோம். இந்த இன்னல்கள், இராஜ்யத்தை ஸ்தாபிக்கும் நமது முயற்சியின்போது வருங்காலங்களிலும் கண்டிப்பாக எழவே செய்யும். வீரம், அர்ப்பண உணர்வு, மற்றும் விடாமுயற்சி ஆகிய இந்த அம்சங்கள், தனிமனித ஆன்மீக ம்ேமாடுக்கும், நமக்குள்ளேயே இராஜ்யத்தை அமைத்துக்கொள்வதற்கும் மிகவும் இன்றியமையாதவை. இது சுலபமாக நிறைவேறப் போவதில்லை. இது விரைவாகவும் நடக்கப்போவதில்லை. அவ்வப்போது நிகழும் நடவடிக்கைகளின் மூலமாகவும் அது நடந்தேறப்போவதில்லை. நமக்குள், இராஜ்யத்தின் ஆன்மீக பண்புகளை அடைவதற்கு, தேவையான சீரான, தொடர்ந்தாற்போன்ற நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

இவ்வழியில், மேம்பட்ட ஓர் அர்ப்பண உணர்வை நாம் பெறுவோம். நம்முடைய சமயத்தின் அஸ்திவாரமாக விளங்கும் ஆன்மீக நடைமுறைகளின்பால் ஒரு புதிய விழிப்புணர்வைப் பெறுவோம். அதோடு, பிரார்த்தனை நடவடிக்கைகள், தியானம், நோன்பு நோற்பது, நல்லியல்புகளை உருவாக்கிக்கொள்வது ஆகியவற்றின்பாலும் ஒரு புதிய விழிப்புணர்வை நாம் ஏற்படுத்திக்கொள்வோம். வீரம், அர்ப்பணம், மற்றும் விடாமுயற்சி ஆகிய இந்த அம்சங்களை பஹாய் நிர்வாக முறையில் ஊக்கத்துடன் ஈடுபடுத்துவதற்கு கேட்டுக்கொள்ளப்படப்போகின்றோம். அதன் வாயிலாக கூட்டு மற்றும் பரஸ்பர நடவடிக்கைகள் குறித்த புதிய மாதிரிகள் உருவாக்கப்பட்டும், அவை ஸ்தாபன நிலையை அடையவும் கூடும். அதன் வாயிலாக, பஹாய் சமூகத்தின் தனிநபர் மற்றும் சமூக மேம்பாட்டை மேம்படுத்துவதன் குறிக்கோளை நிர்வாகமுறை சாதிக்கவும் கூடும்.

நான் மேற்கொண்டு ஒரு விஷயத்தை மட்டுமே குறிப்பிட விரும்புகிறேன். ஆனால் அது மிகவும் முக்கியமானது. மனித வரலாறு தோல்வியடைந்த முயற்சிகளையும், நிறைவேறாத மேன்மையான குறிக்கோள்ககளையும், மண்ணாகிப்போன ஆவல்களையும், உருபெறாத உற்சாகமூட்டும் திட்டங்களையும் கொண்ட ஒரு குறிப்பேடாக விளங்குகிறது. நூற்றாண்டுகளாக, மேன்மையான குறிக்கோள்கள் ஆகாயக்கோட்டைகள் என விமர்சிக்கப்பட்டுள்ளன என்பதை வரலாறு காண்பிக்கின்றது. அற்புதங்கள் நிறைந்த நாட்கள், அமைதி நிறைந்த நாட்கள், இணக்கம் நிறைந்த நாட்கள் ஆகியவவை குறித்து மனிதர்கள் ஏங்கியுள்ளனர். இந்த மேன்மை மிக்க குறிக்கோள்களை நோக்கிய முயற்சியில் தங்கள் வாழ்நாட்களை அர்ப்பனித்து தோல்வியடைந்துள்ளனர்.

தற்போதைய மனிதவரலாற்றில், நனவாகாத கனவுகளின் குறிப்புகள் நிறைய உள்ளன. நிரந்தரமான நிலையில் ஓர் புதிய உலகை ஸ்தாபிக்கும் மனித முயற்சிகள் ஏன் சதா தோல்வியடைந்துள்ளன என்பது குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன என்பது அவர்களின் முடிவாகும். அதிகாரத்தில் உள்ளவர்களின் ஊழல்; லௌகீகம்; பொருளாசை மிகுந்திருத்தல்; அகங்காரம் ஆகியவை. வெளியே உள்ள கெட்ட எண்ணம் கொண்ட எதிர்வாதிகளின் வேற்றுமை வளர்க்கும் போக்கு. சமூகத்தினுள் கடுமையான போட்டிக் குழுக்களாக பிரிந்து போகுதல். இவை யாவும், பல நூற்றாண்டுகளான, ஆயிரமாண்டுகளான, மனுக்குலம் முயற்சித்து வந்த மேன்மையான குறிக்கோள்கள் மற்றும் உயர்ந்த எண்ணங்களின் தோல்வியின் குறிப்புகளின் ஒரு பகுதியாகும்.

பஹாய் கண்ணோட்டம் யாதெனில், இந்த யுகத்தில், வரலாறு இனி மீண்டும் திரும்பப்போவதில்லை என்பதாகும். உணர்வு ரீதியில் இந்த விஷயம் குறித்து வாதிடுவது வீன் வேலையாகும். நமது நோக்கங்கள் கடந்த காலத்தில் வாழ்ந்தவர்களின் குறிக்கோள்களை விட தூய்மையானவை என நாம் கோர முடியுமா? அல்லது, மனித நிலையை மேம்படுத்திட ஏங்கிய கடந்தகால மனிதர்களின் பண்புக்கூறுகளைவிட நமது பண்புக்கூறுகள் மேன்மையானவை என நாம் கூறிட முடியுமா? நான் அப்படி நினைக்கவில்லை. வரலாறு இனி திரும்பாது எனும் நமது கண்ணோட்டம், முன்பு மனித, சமய அல்லது சமூக வரலாற்றில் காணப்படாததும், இக்காலத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததுமான ஒரு புதிய அம்சம் உள்ளது என்பதை அடிக்கோலிடுகிறது. இந்த அம்சம், பல ஆயிரம் நூற்றாண்டுகளான வரலாற்று வடிவங்களை தலைகுப்புற வீழ்த்தக் கூடியதாகும்.

அந்த சிறப்பு மிகுந்த வலிமை வாய்ந்த புதிய அம்சம் மட்டும் இல்லையனில், கடந்தகாலத்தில் மனுக்குலத்தை பீடித்த அதே தோல்வியை நாமும் அடைவது தின்னம். நமது வாதங்கள் யாவும் இந்த ஒரு விஷயத்தையே முற்றாக சார்ந்துள்ளன. பஹாய் ஒப்பந்தம் என நாம் அழைக்கும் அந்த ஒன்றே இந்த தனிச்சிறப்பு வாய்ந்த அம்சமாகும். அஃது இல்லையெனில் நாம் வெற்றியை அடைய முடியாது. பஹாய் ஒப்பந்தத்தினால் நமது வெற்றி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பஹாய் ஒப்பந்தம் எனும் சிறப்பினால் அஃது அதிகாரம் சார்ந்த ஒற்றுமையை வழங்குகிறது. அஃது ஒன்றிணைவை வழங்குகிறது. நமது போதனைகளின் பிரிவுபடாமயை அஃது உறுதிபடுத்துகிறது. வளரும், விரிவடையும் மற்றும் மேம்பாடு காணும் பஹாய் சமூகத்தின் வளைந்துகொடுக்கும் தன்மையை மற்றும் ஆக்கமிக்கமையை பராமரிக்கும் உத்தரவாதத்தையுைம் அது வழங்குகிறது.

அகங்காரம் நோக்கிய நமது உள்ளார்ந்த நடத்தையை ஒப்பந்தம் கட்டுப்படுத்துகிறது. தனிநபர்களின் கட்டுப்படுத்தப்படாத தனியாத நடவடிக்கைகளினால் பஹாய் சமூகத்திற்கு ஏற்படக்கூடிய நிரந்தர பாதிப்புக்களிலிருந்து தற்காப்பு தரும் வஜ்ரம் போன்ற வழிவகைகளை ஒப்பந்தம் பெற்றுள்ளது. தனிநபர்கள் தாங்கள் மற்றவர்களைவிட சிறந்தவர்கள் எனும் நினைப்பால் மனுக்குலத்தின் ஐக்கியத்தை தகர்ப்பதிலிருந்து அது நமக்கு பாதுகாப்பு அளிக்கின்றது. தலைமைத்துவம், சக்தி, மற்றும் அதிகாரத்திற்கான பேராசையினால் விளையும் பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாக்கின்றது. இந்த வெளிப்பாட்டில் பரிசுகளிலெல்லாம் சிறந்த பரிசை ஒப்பந்தம் நமக்கு வழங்கியுள்ளது. ஒப்பந்தம் நமக்கு நிர்வாக முறையை வழங்கியுள்ளது. மக்கள், அது தரவல்ல சமநிலை, புதிரான விஷயங்கள், வழங்கக்கடிய ஆன்மீக வெகுமதிகள் ஆகியவற்றைக் கண்டு வியப்படைவார்களாக. கூட்டு அதிகாரம் கொண்ட தேர்வு செய்யப்பட்ட அமைப்புக்கள்; உற்சாகமளிக்கவும், ஆலோசனைகள் வழங்கவும், தூண்டுதலளிக்கவும், பாதுகாப்பு தரவும், விவேகமும் அன்பும் கூடிய தனிநபர்கள். அன்பு, பரஸ்பர ஒத்துழைப்பு, மற்றும் பொதுவான குறிக்கோள்களுடன் அனைவரும் ஒன்றாக செயல்படுகின்றனர்.

நான் குறிப்பிடும் விஷயம், என்னுடை இறுதி குறிப்பு, இதுவே: பூமியின் மீது இறைவனின் சாம்ராஜ்யம் உருவாகுவதற்காக உழைத்திட உறுதியெடுத்திட நாம், இன்று, இங்கு கூடியிருந்தோமானால், இதுவே நமது வாழ்க்கையில் மையக் குறிக்கோள் என முடிவெடுத்தோமானால், நமது அதிஉயரிய குறிக்கோள்கள் மற்றும் முயற்சிகள், இந்த வழியிலேயே பூரணமான நிறைவேற்றத்தைக் காணப்போகின்றன என முடிவெடுத்தோமானால், ஒப்பந்தத்திலிருந்து உதித்துள்ள நிர்வாக முறையின் ஸ்தாபனங்களுக்கு நமது முழு ஆதரவையும் வழங்க வேண்டியது அவசியமாகும். இந்த புதிய படைப்பினை இறுதி அழிவிலிருந்து இந்த ஒரே வழியினால் மட்டுமே நாம் பாதுகாக்க முடியும். உணர்ச்சிகளைத் தூண்டும் கோரிக்கைகள் மூலமாக அவை பாதுகாக்கப்பட போவதில்லை. அல்லது, அதி உயரிய நமது நோக்கங்கள் குறித்து உரக்க பிரகடணப்படுத்துவதன் வாயிலாகவும் அது பாதுகாக்கப்பட போவதில்லை. நிர்வாக முறையின் ஸ்தாபனங்களுக்கு ஆதரவு நல்கிடுவதற்காக நாம் அளிக்கும் நமது முழு ஈடுபாட்டின் வாயிலாகவே அது அழிவிலிருந்த பாதுகாக்கப்படுகின்றது. இதுவே நமது அரண். இதுவே நமது முன் நோக்கிய வழி. இதுவே முன்னேற்றத்திற்கான பாதை. நமது தனிச்சிறப்புடைய குறிக்கோள்களையும், நமது அவாக்களையும், நமது ஆவல்களையும் நமது இலட்சியங்களையும் இந்த ஒரு வழியின் வாயிலாகவே நாம் அடையமுடியும்.

கடவுள் சமயத் திருக்கரம் டாக்டர் முஹாஜர்


டாக்டர் முஹாஜர் மறைந்து இவ்வருடத்துடன் 43 வருடங்கள் பூர்த்தியாகின்றன. அவர் நினைவாக இந்தக் கட்டுரை உங்களுக்கு மீண்டு வழங்கப்படுகின்றது.

என் நினைவை விட்டகலா வியத்தகு பஹாய் போதகர்
(ஆ. ஆந்தோனிசாமி)

டாக்டர் முஹாஜர்
4 ஏப்ரல் 1923 – 29 டிசம்பர் 1979

ஒரு நாள் சில நண்பர்களுடன் போதனைப் பயணம் மேற்கொண்டபோது தென்னமெரிக்காவிலுள்ள பொலிவியா மலைத்தொடர் பகுதியில் கால் நடையாக ஒரு போதகர் பலமணி நேரம் நடந்து கொண்டிருக்கின்றார். போய்ச் சேரவேண்டிய ஊர் கண்ணில் தெரிந்தபாடில்லை. கொட்டும் மழையும் ஆரம்பித்துக்கொண்டது. அந்நேரத்தில், அசதியின் காரணமாக தரையில் உட்கார்ந்து, “வேறு வழியில்லை, எனது போதனை இலட்சியங்களை அப்ஹா உலகிற்கு கொண்டு சென்றுதான் நிறைவேற்ற வேண்டும்,” என புலம்புகின்றார். அப்படி புலம்பினாலும், இறைசேவை என்னும் பாதையில் பல்லாயிரக்கணக்கான போதனைப் பயணங்களை மேற்கொண்டுவிட்டு மங்காப் புகழுடன் மறைந்து விட்ட கடவுள் சமயத்திருக்கரம் டாக்டர் முஹாஜர் அவர்களே என்னால் மறக்க முடியாத பஹாய் போதகராவார். நினைக்க முடியாத கொடுமைகளுக்கு ஆளாகி நெஞ்சகத்தில் மறக்க முடியாமல் போதிக்கின்றவர்கள் வீரர்கள், விவேகிகள், தீரர்கள், தியாகிகள் மட்டுமல்ல நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு அந்த சுடர் விளக்குகள் இருக்கத்தான் செய்கின்றனர். அத்தகைய தியாகச் சுடர்களில் ஒருவர்தான் டாக்டர் முஹாஜர்.

தியாகத்தின் விலாசம்

மற்றொரு சமய திருக்கரமான இனோக் ஒலிங்காவுடன் டாக்டர் முஹாஜர்

1923-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 4-ஆம் தேதி ஈரான் நாட்டில் ஹஃபிசுல்லா காணுக்கும், இஸ்மாட் கானும் அம்மையாருக்கும் எழுவர் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளையாக ரஹ்மத்துல்லா முஹாஜர் பிறந்தார். இவரது பாட்டனார்கள் பஹாய் சமயத்தை 1850-ஆம் ஆண்டிலேயே ஏற்றுக்கொண்டவர்கள். இவரது பாட்டனார்கள் புனித பூமிக்கு யாத்திரிகர்களாகச் சென்று பஹாவுல்லாவின் கருணை மழையில் நான்கு மாதங்கள் திளைத்திருந்த வேளையில் அன்பார்ந்த மாஸ்டர் அப்துல் பஹா இவர்களுக்கு ஒரு நிருபம் எழுதியபோது அவர்களை முஹாஜிரான் என அழைத்தார். அன்றிலிருந்துதான் குடும்பப் பெயர் முஹாஜிர் ஆனது.

முஹாஜிருக்கு ஒன்பது வயது இருக்கையில் தெஹ்ரான் நகருக்கு இவரது பெற்றோர்கள் குடிபெயர்ந்தனர். இவரது தெஹ்ரான் இல்லத்தில் சமய சிறு விளக்கக் கூட்டம் இடைவிடாது நடைபெற்றது. அதில் முக்கிய பேச்சாளராக திரு. புஃருட்டானும் மற்ற பிரபல பஹாய் ஆசிரியர்களும் கலந்து கொள்வர். முஹாஜிருக்கு பதினைந்து வயதிருக்கையில் அவரது தந்தையார் மாரடைப்பினால் காலமானார். முஹாஜிர் பதினாறு வயது பருவத்தில் தமது நெருங்கிய தோழர்களான ஹூஷ்மன்ட் பாத்தியாஸம், டாக்டர் அபாஸியன், கடிமி முதலிய நண்பர்களுடன் உதயத்தை வென்றவர்கள் எனும் சரித்திர நூலின் பிரசித்திப்பெற்ற இடங்களான மாஃகு சிறைச்சாலையையும், இதர புனித இடங்களையும் சுற்றிப்பார்த்து சமயத்தினுள் தம்மை இறுக்கமாக இணைத்துக் கொண்டார். 1944-இல் தெஹ்ரான் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மாணவராக தம்மை பதிந்து கொண்டார். 1946-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 1950-ஆம் ஆண்டு ஜூலை வரை 45 மாத கால போதனைத் திட்டத்தை ஷோகி எஃபெண்டி ஈரானிய பஹாய்களுக்கு வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் பல பஹாய்கள் அயல் நாடுகளுக்கு, குறிப்பாக, அராபிய நாடுகளில் முன்னோடிகளாகச் சேவையாற்றினர். அப்படி முன்னோடியாகப் பயணத்தை தொடங்கும் நம்பிக்கைாளர்களுக்கு முன்னோடிக் குழுவின் செயலாளராகச் சேவையாற்றிய முஹாஜிர் அம்முன்னோடிகளின் பிரியாவிடையின்போது அவர்களுக்கு விருந்தளிப்பார். அப்படி விருந்தளித்த நிகழ்ச்சி ஒன்றின்போது அராபிய நாட்டிற்கு முன்னோடியாச் செல்லவிருந்த திரு கோல்மாமுடியா என்பார் தம்மிடம் கித்தாப்-இ-அக்டாஸ் திருநூல் இருந்தால் நன்மையாக இருக்கும் என்றார். மறுநாள் கொட்டும் வெண்பனி குளிரில் பஸ்நிலையத்தில் அவர் தமது பயணத்தை தொடங்கியபோது முஹாஜிர் அவரைச் சந்தித்து தம்மிடம் இருந்த ஒரே பஹாய் நூலான அக்டாஸை பரிசளித்து, “இது என்னிடம் இருப்பதை விட ஒரு பஹாய் முன்னோடியிடம் இருப்பதுதான் சிறந்தது” என்றார். குறிப்பாக, பஹாய் முன்னோடிகளின் தேவையை முன்னறிந்து தீர்த்து வைப்பதில் முஹாஜர் அக்கறை காட்டி வந்தார்.

இல்வாழ்க்கை

1951-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் நாள் ஈரான் என்ற மங்கை நல்லாலை மனைவியாகக் கரம்பிடித்தார். கடவுள் சமய திருக்கரம் அலி புஃருட்டான் அவர்களின் திருநிறைச் செல்விதான் குமாரி ஈரான். திருமணம் முடிந்த சில மாதங்களில் தமது மருத்துவக் கல்வியை முடித்து பட்டம் பெற்றார். ஷோகி எஃபெண்டியிடமிருந்து ஆசியும், அனுமதியும் கிடைத்த பிறகுதான் திருமணமே நடந்தது.

சேவைப்பாதையில்

1953-இல் பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி அவர்கள் பத்து வருட உலகத் திட்டத்தை ஆரம்பித்தார். அந்தத் திட்டத்தின் கீழ் எந்த நாட்டிற்காவது முன்னோடியாக செல்ல வேண்டும் என டாக்டர் முஹாஜிர் பெரும் ஆவல் கொண்டார். இந்தோனீசியாவின் மெந்தாவாய் தீவுகளுக்கு ஒரு முன்னோடியை அனுப்புவதற்கு சரியான போதர் தேவை என அப்போதைய ஆஸ்திரேலியா தேசிய ஆன்மீக சபையின் உறுப்பினர் திரு கோல்லிஸ் ஃபெதர்ஸ்டன் ஈரான் நாட்டு முன்னோடிக் குழுவிடம் தெரிவித்தார். அதையறிந்து டாக்டர் முஹாஜர் அக்குழுவிடம் தமது ஆவலை வெளிப்படுத்தினார். தற்போதுதான் திருமணம் ஆகியுள்ளது, இளம் மனைவி என காரணம் சொல்லி அக்குழு அந்த ஆவலுக்குத் தடை விதித்தது. மனம் தளராத முஹாஜர் ஈரான் தேசிய சபையை சந்திக்க முடிவெடுத்தார். ஆத்மீக சபையை சந்திக்க ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருந்த இரவில் கனவொன்று கண்டார். தெஹ்ரான் வீதியொன்றில் பஹாவுல்லா ஓர் அழகிய கம்பளத்தின் ஒரு முனையை தமது தோளில் சுமந்தவாறு நடப்பதை முஹாஜர் கண்டவுடன் ஓடிச் சென்று கம்பளத்தின் மறுமுனையை தனது தோளில் சுமந்தார். அப்போது, திவ்யபேரழகர் பஹாவுல்லா திரும்பிப்பார்த்து புன்முறுவலுடன் “எமது சுமையை சுமப்பதில் நீர் எமக்கு உதவியதில் யாம் மகிழ்ச்சியடைந்தோம்,” என மொழிந்தார். அந்தக் கனவைக் கண்ட பிறகு தமது இலட்சியக் கனவு எப்படியும் நிறைவேறிவிடும் என்பதில் உறுதியாக இருந்தார். மறுநாள் ஆத்மீக சபை தனது அனுமதியை வழங்கியது. மெந்தாவாய் தீவைப் பற்றி ஒன்றுமே அறிந்திராத நிலையில் உற்றாரும் பெற்றோரும் கண்ணீர் மல்க பிரியாவிடை கூற, 1954-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்து கடுங்குளிர்கொண்ட ஒரு பிற்பகலில் தமது இளம் மனைவியுடன் தெஹ்ரான் விமான நிலையத்தில் தமது பயணத்தைத் தொடங்கி, பாகிஸ்தானின் கராச்சி வழியாக ஜாக்கார்த்தா சென்றடைந்தார். பல சிரமங்களுக்குப் பிறகு அவருக்கு மெந்தாவாய் தீவில் அரசாங்க மருத்துவர் வேலை கிடைத்தது.

மெந்தாவாய் தீவினிலே

அந்தக் காலத்தில் மெந்தாவாய் தீவுகளின் ஜனத்தொகை 25,000ம்-தான், நாகரிகக் காற்று வீசாத பிரதேசம் அது. காட்டுவாசிகளே அங்கு நாட்டுவாசிகள், பண்டமாற்று வியாபாரமே நடைமுறை வாழ்க்கை. வசதிகளற்ற அந்த வனாந்திரத்தில்தான் முஹாஜர் சமயப்பணியாற்றினார். அவரை அங்கு “துவான் டாக்டர்” என்றுதான் அழைப்பார்கள். காட்டுக்குச் சென்றால் வீடு வந்து சேர பல நாட்கள் ஆகும். ஒற்றையடிப் பாதையும், காட்டு மரங்களடர்ந்த சூழலும், படகுப் பயணங்களுமே அவரது அன்றாட காட்சிகள். ஒருமுறை தமது மனைவி சுகவீனமடைந்தும் கூட தாம் அறிந்திராத நிலையில் நடுகாட்டில் போதித்துக் கொண்டிருந்தார். சில நாட்கள் சென்ற பிறகுதான் அவருக்குச் செய்தி கிடைத்து திரும்பி வந்தார். அத்தகைய பயணங்களின்போதுதான், அமாத்தா சினாங்கா எனும் படகோட்டி சி பாய் பஜெட் என்னும் கிராமத்தில் சமயத்தை ஏற்றுக்கொண்டார். அவர்தான் மெந்தாவாய் தீவின் முதல் பஹாய் நம்பிக்கையாளராவார். அன்றைய தினமே 25 நண்பர்கள் பஹாவுல்லாவை ஏற்றுக்கொண்டனர். படிப்பறிவற்ற அப்பகுதியில் சமயத்தை ஏற்றுக்கொள்ள விரும்புவோரை முஹாஜர் தங்களது கைகளை மட்டுமே உயர்த்த சொல்வார். படிப்படியாக முஹாஜர் மெந்தாவாய் மொழியான இந்தோனீசிய மொழியை நன்கு கற்று அம்மொழியிலேயே சமயத்தைப் போதிக்கலானார்.

கடிதப் போக்குவரத்து, தபால் சேவை என்பதெல்லாம் இங்கு மிக அரிது. கப்பல் தீபா எனும் தபால் கப்பல் மாதம் ஒரு முறை அங்கு வந்து தபால்களை பட்டுவாடா செய்யும். அப்படித்தான் அவரது கடிதங்கள் வந்தன. 1957-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஷோகி எஃபெண்டி இவருக்குத் கடவுள் சமய திருக்கரம் எனும் நிலையை வழங்கிய செய்தி கூட இவருக்கு மிகத் தாமதமாகத்தான் கிடைத்தது. அந்தச் செய்தி கிடைத்தவுடன் அந்த மாபெரும் பட்டத்தை சுமக்க தமக்கு தகுதி உள்ளதா என நினைத்து நீர் மல்கிய கண்களுடன் பல மணி நேரம் பிரார்த்தனையில் மூழ்கியிருந்தார். இப்படி சமயப் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் பாதுகாவலர் ஷோகி எஃபெண்டி அகால மரணமடைந்தார் என்னும் சோகச் செய்தி பஹாய் உலகை உலுக்கியது. அந்த சோகத்திற்கிடையில் பாதாகாவலரது வேண்டுகோளுக்கிணங்க ஒரு வட்டார பஹாய் மாநாடு ஜாக்கார்த்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இறுதிநேர எதிர்ப்பு காரணமாக அம்மாநாடு கடைசி நிமிடத்தில் சிங்கப்பூருக்கு மாற்றப்பட்டது.

சேவைப்பாதைக்கு புதிய திறப்பு

கடவுள் சமய திருக்கரம் என்னும் ரீதியில் சேவைப்பாதையில் செல்ல வேண்டியிருந்ததால் அவர் தமது மனைவியுடன் மெந்தாவாய் தீவை விட்டு புறப்பட வேண்டியதாயிற்று. அப்பொழுது மெந்தாவாய் தீவில் 9,000 பஹாய்களுடன், எட்டு பஹாய் பள்ளிகளும் இருந்தன. புனித பூமியில் தங்கி சமயத்தை நிர்வகித்து வந்த கடவுள் சமயத்தின் திருக்கரங்கள் மெந்தாவாய் தீவை விட்டு உலக ரீதியில் சேவையாற்றுமாறு முஹாஜரை வலியுறுத்தினர். அதன் காரணமாகவே அவர் இந்தோனீசிய எல்லைகளை விட்டகன்றார்.

மலாயாவுடன் நெருக்கம்

“இருக்கின்ற பஹாய் சமூகங்களிலேயே ஓர் அழகிய ஆபரணமாகத் திகழவல்ல சமூகத்தைத் தெரிவு செய்யும் பொறுப்பை முஹாஜரிடம் விட்டிருந்தால் அவர் மலேசியாவைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார்,” என ஒரு முறை அவரது மனைவி ஈரான் கூறியுள்ளார். 1961-ஆம் ஆண்டு ஆரம்பத்தில்தான் அவருக்கு மலேசியாவைப் பற்றி அணுக்கமாக தெரிந்திருக்கின்றது என்பதை அவரது டைரியின் 13 பிப்ரவரி என்னும் நாள்செய்தி காட்டுகின்றது. சிங்கப்பூரில் நடைபெற்ற தென்கிழக்காசிய பஹாய் மாநாடுகளின்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக இவர் மலாயா வரத்தொடங்கினார். இவரது பயணத் தோழராக வந்தது மலேசியாவின் முதல் நம்பிக்கையாளரான யான் கீ லியோங்தான். மலேசியாவைப் புகழின் உச்சிக்குக் கொண்டு போன பெருமை டாக்டர் முஹாஜரையே சாரும். முன்னறிவிப்பு ஏதுமின்றி முஹாஜர் மலேசியா வருவார். இருபெரும் உத்திகளை டாக்டர் முஹாஜர் எப்போழுதுமே தமது ஆயுதமாகக் கையாண்டு வந்தார். ஒன்று, நண்பர்களை ஊக்குவித்து மலேசியாவின் குறிக்கோள்களை உயர்த்திக்கொண்டே போனார். மற்றொன்று, அயல்நாடுகளில் முன்னோடிச் சேவையின்பால் தண்பர்களது கவனத்தை ஈர்த்தார். உதாரணத்திற்கு, ஒன்பது வருட திட்டத்தில் 63 புதிய உள்ளூர் சபைகளை ஸ்தாபிக்கும் குறிக்கோளைத் தாண்டி 93 உள்ளூர் சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன. இதையறிந்த முஹாஜர் அந்த குறிக்கோளை 135 ஆக மாற்றி மலேசியாவைப் புகழேனியின் உச்சிக்கு உயர்த்தினார். இவரது ஊக்குவிப்பால் ஒருமுறை தேசிய சபை உறுப்பினர்கள் முன்னோடிகளாக சேவை செய்ய முன்னெழுந்ததால் எதிர்பாராத இடைத்தேர்தல் வந்தது.

இறுதி நேரம்

1979-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி ஒரு பஹாய் மாநாட்டிற்காகத் தென்னமெரிக்கா போய்ச் சேர்ந்த வேளையில்தான் டிசம்பர் 28-ஆம் தேதி வெள்ளிக்கிழமை குயிட்டோ சென்றடைந்தார். மறுநாள் சனிக்கிழமை பஹாய் நிலையத்தில் பயணபோதகர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய டாக்டர் முஹாஜர் 1980-ஆம் ஆண்டினை பயணபோதனை ஆண்டாக அறிவித்து 10,000 புதிய ஆன்மாக்களை சமயத்தின்பால் ஈர்க்கும் இலட்சியத்தையும் அறிவித்தார். அந்நேரத்தில்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அங்குள்ள அமெரிக்கானா அட்வெண்டிசா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பாட்டார். சிகிச்சை பலனளிக்காமல் போகவே காலை மணி 11.20-க்கு அப்ஹா இராஜ்ஜியத்திற்குச் சிறகடித்து பறந்துவிட்டார்.

மிதமிஞ்சிய துக்கத்தையோ, மிதமிஞ்சிய மகிழ்ச்சியையோ அப்படி அப்படியே விவரித்து விடுவதற்கு நமது சொந்த மொழிகூட ஒத்துழைப்பு நல்குவதில்லை. சேவை என்னும் ஆடையையே தமது நிரந்தர ஆடையாகத் தரித்திருந்த இப்போதகரின் மறைவு ஏற்படுத்தியது சொல்லொன்னா துயரம். இருப்பினும் ஆண்டுகள் பல ஆனாலும், நமது நெஞ்சம் விட்டகலா போதகர் முஹாஜரே ஆவார்.

ஹாஜி முல்லா இஸ்மாயில்


ஹாஜி முல்லா இஸ்மாயில்

ஹாஜி முல்லா இஸ்மாயில்-யி-கூஃமி, பஃராஹானைச் சேர்ந்தவராவார். அவரது இளமையிலேயே தாம் மிகவும் சிரத்தையுடன் அறிந்துகொள்ள முயன்ற உண்மையைத் தேடி அவர் கர்பிலாவுக்குச் சென்றார். நாஜாஃப் மற்றும் கர்பிலாவைச் சேர்ந்த முக்கிய உலாமாக்கள் பலரோடு அவர் தொடர்பு கொண்டிருந்தார். சையிட் காசிம் அவர்களின காலடியில் உட்கார்ந்து அவர் அறிவும் ஞானமும் பெற்றிருந்தார். பின்னாளில், சில வருடங்களுக்குப் பிறகு, அவர் ஷராஸில் இருந்த போது, பாப் அவர்களின் வெளிப்பாட்டை ஏற்றுக்கொள்ள இந்த அறிவும் ஞானமும் வழிவகுத்தன.

அவர் தமது நம்பிக்ககையின் திடத்தினாலும், தமது அழ்ந்த பக்தி விசுவாசத்தினாலும் தனிச்சிறப்படைந்திருந்தார். அனைவரும் கூராசானுக்கு விரைந்து செல்லுமாறு பாப் அவர்களின் ஆணையை அவர் செவிமடுத்ததுமே, மிகுந்த உற்சாகத்துடன் அவர் அதற்கு அடிபனிந்தார். பாதாஷ்ட்டை நோக்கி சென்ற அன்பர்களுடன் அவர் சேர்ந்துகொண்டார். அங்கு அவர் சிர்ருல்-வுஜுட் எனும் நாமமும் பெற்றார். அந்த அன்பர்களின் சகவாசத்தினால் சமயம் பற்றிய அவரது அறிவு மேலும் ஆழமடைந்தது. சமயத்தை மேலும் மேம்பாடடையச் செய்ய வேண்டும் எனும் அவரது அவாவும் அதே விகிதத்தில் அதிகரிக்கவும் செய்தது.

அவர் பற்றுறுதியின் மறு உருவமாகவே ஆனார். தமது சமயம் அவருக்கு அளித்த உற்சாக உணர்வைத் தகுந்த முறையில் வெளிப்படுத்திடுவதற்கு அவர் பெரிதும் ஆவலுற்றார். திருக்குர்’ஆனின் வாசகங்களின் அர்த்தங்களையும், இஸ்லாமிய மரபுகளையும் விளக்குவதில் அவர் வெளிப்படுத்திய நுண்ணறிவுக்கு இனையாக வெகு சிலரே இருந்தனர். பேச்சாற்றலுடன் அவற்றின் உண்மைகளை அவர் வெளிப்படுத்தியதானது அவரது சக சிஷ்யர்களின் போற்றுதலை பெற்றது.

பாப் அவர்களின் சிஷ்யர்களுக்கு தபார்சி கோட்டையே ஒன்றுகூடும் மையமாக விளங்கிய நாட்களின் போது, அவர் படுத்தபடுக்கையாக நோய்வாய்ப்பட்டு அல்லலுற்றிருந்தார். அவரால் அந்தக் கோட்டையின் பாதுகாப்பிற்கு உதவிடவோ அதற்குத் தமது பங்கை ஆற்றிடவோ முடியவில்லை. அவர் உடல் சௌகர்யம் அடைந்தவுடன், அந்த நினைவில் நிற்கும் முற்றுகை ஒரு முடிவிற்கு வந்திருப்பதைக் கண்டார். அதில் அவரது சக சிஷ்யர்கள் பெரும் அழிவுக்கு ஆளாகியிருந்தனர். சமயம் அடைந்திருந்த அந்த பெருத்த நஷ்டத்திற்கு அவர் தமது சுயத்தியாகமிக்க உழைப்பால் ஈடுகட்டும் எண்ணத்துடன் அவர் மேலும் அதிகமான உறுதியுடன் முன்னெழுந்தார். இந்த உறுதி, அவரை உயிர்த்தியாகமெனும் களத்திற்கு இட்டுச் சென்றும், அதன் மகுடத்தை அவருக்கு ஈட்டித் தரவும் செய்தது.

சிரசைத் துண்டிக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அதற்காக காத்திருந்த வேளை, தம்மை முந்திக்கொண்டு சிரம் துண்டிக்கப்பட்டும், ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இருக்கவும் செய்த அந்த இரு உயிர்த்தியாகிகளையும் அவர் கண்ணுற்றார். அவர்களின் இரத்தம் தோய்ந்த சிரங்களை நோக்கியவாறு, “நன்கு செய்தீர்கள் அன்புத் நண்பர்களே,” என முழங்கினார். “தெஹரானையே சுவர்க்கலோகமாக மாற்றிவிட்டீர்,” எனக் கூவினார். “நான் உங்களை முத்திக்கொள்ள முடியவில்லையே!” தமது காற்சட்டைப் பைக்குள் கையை விட்டு ஒரு காசை எடுத்து, தமது சிரச்சேதம் செய்யப்போகும் காவலாளிக்கு அதைக் கொடுத்து, அவர் தமது வாயை இனிப்பாக்கிக்கொள்வதற்கு ஏதாவது வாங்கி வருமாறு வேண்டினார்.

அதில் சிறிதை தாம் அருந்தி மற்றதை காவலாளியிடமே கொடுத்தார். கொடுத்துவிட்டு, “உனது செய்கையை நான் மன்னித்துவிட்டேன்; எம்மை அனுகி எமது சிரசைச் துண்டிக்கலாம், என்றார். முப்பது வருட காலமாக இந்தப் புண்ணியநாளுக்காக நான் ஏங்கியிருந்துள்ளேன். எங்கே எனது இந்த ஆசை நிறைவேறாமலேயே நான் எனது சவக்குழிக்குச் சென்றுவிடுவேனோ என பயந்திருந்தேன்,” என மேலும் கூறினார். விண்ணை நோக்கியவாறு, “இறைவா, எம்மை ஏற்றுக்கொள்வீர்,” எனக் கூவினார். நான் தகுதியற்றவனான போதிலும் “தியாகமெனும் பலிபீடத்தில் தங்கள் உயிர்களை காணிக்கையாக்கியுள்ள அந்த அந்த அமரர்களின் சுருள்சுவடியில் எழுதிட, முயலுகின்றேன்,” என்றார். அவர் தமது வழிபாட்டைக் கூறிக்கொண்டிருக்கையிலேயே, அவரது வேண்டுகோளின் பேரில் காவலாளி அவரது வழிபாட்டை பாதியிலேயே துண்டித்

தன்னகத்தை வெற்றிகொள்வது


இறைவனின் சமயத்தின் திருக்கரம் திரு லெரோய் ஐயவாஸ்

(ஆகஸ்ட் 31, 1958ல் பதிவு செய்யப்பட்ட ஒரு சொற்பொழிவின் பகுதி)

பாதுகாவலர் ஸ்தானம் குறித்து ஒரிரு வார்த்தைகள் கூற விரும்புகிறேன். அப்துல் பஹா விண்ணேற்றமடைந்தபோது, அவருக்கு (ஷோகி எபெஃண்டி அவர்களுக்கு) இவ்வுலகமே இருளாகிவிட்டது. எல்லா ஒளிகளும் அனைந்துபோய்விட்டன. அவர் புனித நிலத்திற்கு வந்தபோது, அப்துல் பஹா அவரிடம் கூறியவற்றிலிருந்து, ஷோகி எபெஃண்டி சில விஷயங்களை ஞாபகத்தில் வைத்திருந்தார். அவர் கூறியவற்றை நான் இங்கு குறிப்பிடுகிறேன், “அப்துல் பஹா, உலக நீதி மன்றத்தை தேர்வு செய்யும் அந்த மகா சபையை ஒன்றுகூட்டும் தனிச்சிறப்பைத்தான் எனக்கு வழங்கப்போகின்றார் என நான் நினைத்திருந்தேன். (மாஸ்டர்) அவர்களின் உயில் மற்றும் சாசனத்தில் அதைச் செய்திடுமாறுதான் உத்தரவு பிறப்பித்திருப்பார் என நினைத்திருந்தேன்.”

“ஆனால், அதற்குப் பதிலாக, இறைவனின் சமயத்திற்கு நானே பாதுகாவலராக நியமிக்கப்பட்டிருப்பதை அறிந்தேன். நான் சமயத்தின் பாதுகாவலராக இருக்க விரும்பவில்லை. முதலாவதாக, நான் அதற்குத் தகுதியுடையவன் என நினைக்கவே இல்லை. அடுத்து, இந்தப் பொறுப்புக்களை சுமக்க நான் விரும்பவில்லை.” எனக் கூறினார்.

“நான் பாதுகாவலராக இருக்க விரும்பவில்லை. அதன் அர்த்தத்தை நான் அறிந்துவைத்திருந்தேன். ஒரு மனிதன் எனும் முறையில் என் வாழ்க்கை முடிந்துவிட்டதை நான் அப்போது உணர்ந்தேன்.” அதை நான் விரும்பவில்லை, அதை எதிர்நோக்கவும் நான் விரும்பவில்லை. ஆகவே, நான் புனித நிலத்தை விடுத்துச் சென்றதை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள். சுவிட்சர்லாந்தின் மலைகளை நாடிச் சென்றேன். அங்கு, நான் என்னை வெற்றிகொள்ளும்வரை என்னோடு போராடினேன். அதன் பிறகே நான் திரும்பினேன். என்னை இறைவனிடம் ஒப்புவித்தேன், பிறகு பாதுகாவலரானேன்.”

“இப்போது, உலகில் உள்ள ஒவ்வொரு பஹாயும், ஒவ்வொரு மனிதனும், இதையேதான் செய்ய வேண்டும். நீங்கள் சமயத்திருக்கரமாக இருந்தபோதிலும், பஹாவுல்லாவின் வீரப்பெருந்தகையாக இருந்த போதிலும், நீங்கள் முன்னோடியாக இருந்தபோதிலும், நிர்வாகியாக இருந்தபோதிலும், எதுவாக இருந்தபோதிலும், சமயத்தைப் பொறுத்தமட்டில், ஒவ்வொரு பஹாயும் தன்னோடு போராடிக்கொள்ளவே வேண்டும். அதன் பிறகே அவர், இறைவனின் சமயத்தின் சேவைக்குத் தக்க கருவியாகின்றார். அது நடக்கும் வரையில் அல்ல. உலகில் உள்ள ஒவ்வொரும் பஹாயும் அறிய வேண்டியது இதுவே.”
“இந்த இரவின் உரையிலிருந்து நீங்கள் அறிய வேண்டிய முக்கிய விஷயங்களில் ஒன்று இதுவே. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னோடு போராடிக்கொள்ளவேண்டும், தன்னை வெற்றிகொள்ள வேண்டும், தனது கீழான இயல்புகளை வெல்ல வேண்டும், தனது அகங்காரத்தை ஜெயிக்க வேண்டும், பிறகு, புனித ஆவி உங்கள் மூலமாக செயல்படுவதற்கு ஏதுவாக உங்களை இறைவனுக்கு அர்ப்பனிக்கவேண்டும்.” என்பது பாதுகாவலரின் அறிவுரை. புனித ஆவி உங்கள் வாயிலாக செயல்படும்போதுதான், நீங்கள் வெற்றிக்கு மேல் வெற்றி அடைவீர்கள். புனித ஆவி என்பது இறைவனின் படைப்பாற்றலின் அம்சமே ஆகும். வெற்றிகள் அடைவதும், சமயத்திற்கு ஜெயங்களை கொண்டுவருவதுமன்றி வேறெதனையும் அதனால் செய்ய முடியாது.”

கார்மல் மலைமீது நாடாலுடன் ஓர் உரையாடல்


டான் கெய்கர் மற்றும் புனிதநிலத்திலிருந்து ஒரு மிகவும் மாறுபட்ட, இனிமை மிகு கதை
(இது நடந்து பல வருடங்கள் ஆகியபோதும் அதன் மையக்கருத்து எக்காலத்திற்கும் எவ்வேளைக்கும் பொருத்தமானதாகும்)

நாடால்

“மிஸ்டர் டான், நான் உங்களோடு சற்று பேசமுடியுமா?” என என் அறையின் பாதி திறந்திருந்த கதவின் வழியாக, இரு கைகளிலும் காப்பிக் கோப்பைகளை ஏந்தியிருந்த நாடால் கேட்டார். “நான் இங்கு வேலை செய்து வந்து இரண்டு வருடங்களில் உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன.” என மேலும் கூறினார்.

நாடால் ஜோர்டான் நாட்டைச் சார்ந்த ஓர் அரேபியராவார். அவர் கார்மல் மலை படித்தளங்களில் நிர்மானிக்கப்பட்டுவரும் அலங்கார நீரூற்றுக்களின் நீர்குழாய் அமைப்பாளரிடம் உதவியாளராக கடந்த மூன்றாண்டுகளாக பனியாற்றி வந்துள்ளார். தமது குடும்பத்தை ஜோர்டான் நாட்டிலேயே விட்டு வந்த அவர் ஓர் சிறந்த உழைப்பாளியாவார்.

“நாம் இதயபூர்வமாக சேவையாற்றும் போது வாழ்க்கை வளமாக இருக்கும், ஆனால், வெரும் பணத்திற்காக மட்டுமே நாம் செய்யும் போது நாம் ஒன்றுமற்றவர்களாக ஆகிவிடுகின்றோம்,” என ஆரம்பித்தார். உயரமான, மெலிந்த முப்பதிற்கும் சற்று அதிகமான வயதுடைய அவர் மீசையில்லாத ஒமார் ஷாரிஃப்பைப் போன்று காட்சியளித்தார். கூர்ந்த கருமை நிற கண்களும் எந்நேரமும் சிரித்த முகத்துடனான அவர் தமக்குத் தெரிந்த சிறிதே ஆன ஆங்கிலத்தில் உரையாட தயங்கமாட்டார், அதிலும் அவ்வப்போது ஓரிரு அரபு வார்த்தைகளும் கலந்து வரும்.

“தொழில் என்பது ஒரு நூலைப் போன்றது, அதை முன்புறம் ஆரம்பித்து பின்புறமாக செல்வது நல்லது. மாறாக, அதை நடுவில் ஆரம்பித்து அதை முடிக்காமல் விடுவது நல்லதல்ல. நான் ஆரம்பத்தில் துவங்கி பிறகு முடிவிற்குச் செல்ல விரும்புகிறேன். இந்த அலங்கார நீருற்றுகள் அனைத்திலும் நீர் ஊறுவதைக் காண விரும்புகிறேன்,” நான் இங்கு இரண்டு வருடங்களாக வேலை செய்கிறேன். ஓர் அராபியர் ஒருவரோடு பதினான்கு நாட்கள் ஒன்றாக உணவுண்டாரேயானால் அவர் அக்குடும்பத்தைச் சார்ந்தவராகின்றார் என என் தாத்தா கூறுவார். நான் இங்கு இரண்டு வருடங்களாக இருக்கின்றேன், உங்களுக்கு அது புரிகின்றதா?” என்றார் அவர்.

“ஆமாம், நீர் குடும்ப அங்கத்தினர் போன்றவர். சரி, இங்கு நீர் என்ன கற்றுக்கொண்டுள்ளீர்?” என நான் வினவினேன்.

“இங்கு நாங்கள் ஆற்றும் கடமை நமக்குத் தெரிந்த அளவைவிட மிகவும் முக்கியமானதாகும். ஒரு நாள் நான் ஜோர்டான் நாட்டிற்கோ அமெரிக்காவிற்கோ சென்று அங்கு பஹாய் ஆகிவிடுவேன்,” என தொடர்ந்தார்.

“நீர் ஏன் பஹாய் ஆகிட விரும்புகிறீர்?” என நான் வினவினேன்.

“பஹாய்கள், முஸ்லீம்கள் மற்றும் கிருஸ்தவர்களிலிருந்து மாறுபட்டுள்ளனர். நீங்கள் நபி முகம்மது மீது நான் கொண்டுள்ள நம்பிக்கையை மதிக்கின்றீர்கள். ஆகவே, உங்கள் நம்பிக்கைகள் நல்லதாகவே இருக்கவேண்டும்,” என்றார்.

“பஹாய்களின் நம்பிக்கை என்னவென்பது உமக்குத் தெரியுமா?” என கேட்டேன்.

“நான் நூல்கள் படிக்காததினால் அது குறித்து எனக்கு அவ்வளவாக தெரியாது ஆனால் அது ஒரு நதியைப் போன்றது. முகம்மது அந்த நதியின் ஒரு பகுதியாவார் ஆனால் நதி நீர் ஓடிச் சென்று பஹாய்’இல் கலக்கின்றது பிறகு நதி கடலைப் போன்று பெரிதாகின்றது. இப்போது நான் காத்திருப்பேன் ஆனால் ஒரு நாள் நான் நிச்சயமாக நூல்கள் படிப்பேன்,” என மேலும் தெரிவித்தார்.

நான் அவருடைய கண்களில் தேடுதல் மற்றும் அறிவுப்பசியைக் காண்கின்றேன். “நீர் இங்கு கடுமையாக சேவையாற்றியுள்ளீர் மற்றும் கடமைகளை செவ்வனே முடித்திட எங்களுக்கு உதவுவதற்காக நிறைய தியாகங்கள் செய்துள்ளீர். இந்த தியாகம் எனும் வார்த்தையை நீர் அறிவீரா?” என நான் கேட்டேன்.

இரண்டு பேனாக்களை மேஜையின் மீது வைத்து, “இதில் நான் உமக்கு ஒரு பேனாவை வழங்கினால் அது தியாகமல்ல ஆனால், நான் இரண்டையுமே உங்களுக்குக் கொடுத்து என்னிடம் ஒன்றுமே இல்லாது போனால், அது தியாகமாகும்,” என்றேன்.

“ஆமாம், இந்த மலையின் நிர்மானங்களை அமைத்திட நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்கின்றேன். அவை வெகு அழகுமிக்கவை. இதன் வாயிலாக பஹாய்கள் ஒன்பது நாட்கள் மட்டுமே வருகின்றனர் ஏனெனில் ஒன்பது நாட்களுக்காக அவர்கள் இதை விட்டு வருவதில்லை,” என்றார்.

“நாடால், அது எனக்குத் தெரியும், கடவுள் அதை மறக்கமாட்டார், ஒருநாள் நீர், உமது குழந்தைகள் மற்றும்  பெற்றோருடன் இத்தியாகங்களுக்கான பிரதிபலன்கள் வழங்கப்படுவீர்கள்,” என நான் கூறினேன்.

“அப்பிரதிபலன்கள் என்னவாக இருக்கும்?” என்றார் அவர்.

“எனக்குத் தெரியாது, கடவுளுக்கு மட்டுமே அது தெரியும்,” என நான் பதிலளித்தேன்.

நீண்ட தாமதத்திற்குப் பிறகு, நாடால் தமது நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து, நீண்ட புன்முறுவலுடன், கண்கள் பிரகாசிக்க, “ஆமாம், நீர் கூறுவது சரியே, இந்த மலையில் ஏதோ ஒன்று உள்ளது, இப்போது நமக்கே தெரியாத ஒன்று அது ஆனால், சுவர்க்கத்தில் அது என்னவென்பதை நாம் தெரிந்துகொள்வோம்,” என்றார்.

“நிச்சயமாக நீர் தெரிந்துகொள்ளத்தான் போகிறீர் நாடால். கடவுள் அதை மறக்கமாட்டார்,” என்றேன் நான்.

“ஆமான் நீர் கூறுவது உண்மை, கடவுள் என்றுமே மறப்பதில்லை.”

ஹுகுகுல்லா


ஹுகுகுல்லா

உலக மையத்ததில் 1987ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி திரு  அலி நக்ஜவானி அவர்களினால் ஆற்றப்பட்ட உரை.

அமாத்துல் பஹா ருஹியா கானும் அவர்களே, அன்புக்குரிய நண்பர்களே!

நம்மில் பலர் ஹுகுகுல்லாவுக்குச் செலுத்துவதற்குத் தாயாராகிக்கொண்டு வருவதைப் பார்க்கையில் உண்,ையில் மனதுக்கு இதமாக இருக்கிறது. நான் இச்சட்டத்தின் ஆன்மீக முக்கியத்துவம் பற்றி பேச விரும்புகிறேன். பஹாவுல்லா அதனைப் பின்வரும் வார்த்தைகளில் குறிப்பிடுகிறார். ஹுகுக் ஸ்தாபணம் “புனிதமானது,” “ஹுகுக் பற்றிய கேள்வி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது,”  “ஹுகுல்லா என்பது உண்மையிலேயே ஒரு மாபெரும் சட்டமாகும். ” இந்த மேற்கோள்கள் யாவுமே ஐக்கிய அரசின் (பிரிட்டன்) தேசிய ஆன்மீக சபை பிரசுரித்துள்ள ஹுகுகுல்லா பற்றிய தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டவை, பிற தேசிய ஆன்மீக சபைகள் அதனை அச்சடிக்கும் என உலக நீதி மன்றம் நம்புகிறது. மேலும் உலக நீதி மன்றம் இந்த தொகுப்பின் சுருக்கமான வடிவத்தையும் வெளியிட்டுள்ளது. எந்தத் தேசிய ஆன்மீக சபையும் அதன் சுருக்கப்பட்ட வடிவத்தையோ அல்லது அச்சட்டத்தின் சுருக்கத்தையோ இன்னும் பிரசுரிக்கவில்ல. இச்சட்டம் உலகம் முழுதும் அமுலுக்கு வருவதை எதிர்பார்த்தவாறு அதனைப் பற்றி நண்பர்கள் கற்றறிந்து ஆழமாக அறிந்துவைக்கவேண்டும் என்பதற்காக எல்லா தேசிய ஆன்மீக சபைகளுக்கும் இவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

நாம் பிற சமயங்களின் சட்டங்களை ஆய்வு செய்யும் போது, நன்கொடைகளையும் தர்மங்களையும் கொடுப்பதற்கான கட்டளை எனவும் , இத்தகைய செயல்கள் சுயவிருப்பத்துடனும் ஒருவரால் முடிந்த அளவுக்குச் செய்யப்பட வேண்டும் என்ற கட்டளை இருப்பதையும் அவற்றை கடவுள் மீது கொண்டுள்ள நன்றியின் அடையாளமாகச் செய்யவேண்டும் என இருப்பதையும் நாம் ஒவ்வொரு சமயத்திலும் காணச்செய்கிறோம். உதாரணமாக பழைய ஏற்பாட்டில் நாம் இவ்வாறு காண்கிறோம், “உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் ஊக்கத்தைக் கடை பண்ணு”.

மேலும் ஒருவருடை சொத்தில் இருந்து பத்தில் ஒரு பகுதி என தீர்மாணிக்கப்பட்ட தசமபாகம் பற்றியும் இவ்வாறு இருக்கக் காண்கிறோம். “தேசத்திலே நிலத்தின் வித்திலும் விருட்சங்களின் கனியிலும், தசமபாகம்  எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது. (லெவியராகமம் 27:30) இஸ்லாம் சமயத்திலும்கூட, ஒருவருடைய செல்வத்தில் இருந்து ஒரு பகுதியைக் குறிக்கின்ற “ஃகும்” பற்றிய ஒருவருடைய நிலத்தில் இருந்து பெறப்படும் வருவாயைக் கணக்கிடுவதில் மிகவும் குழப்பமாக உள்ள சக்காட் பற்றியும் குறிப்புக்கள் இருப்பதைக் காண்கிறோம்.

அடைப்புக்குறிகளில் உள்ள சாதாரண குறிப்புக்கள் (கூம் 8) ஹுகுகுல்ல எனும் தொகுப்பில் உள்ள பாராக்களின் எண்களைக் குறிப்பவை. மேலும். இந்தக் குறிப்புக்களும், இவைப் போன்ற அடிக்குறிப்புக்களும் ஆசிரியரின் இடைச்செருகளே அன்றி அகல் உரையின் பகுதி அல்ல. இறுதியாக எங்கெங்கும் அர்த்தம் தெளிவாக இருக்காது எனப் பட்டதோ, அல்லது ஒரு குறிப்பிட்ட மேற்கோளை முழுமையாகப்ப பயன்படுத்தும்படி செய்வதற்கோ (உரையில் உள்ள வார்த்தைகள் மேற்கோளில் உள்ள வார்த்தைகளைவிட அதிகமாக வேறுபடாதபோது) சில திருத்தங்கள் செய்யப்பட்டன. இவை அடைப்புக்குறியில் குறிப்பிடப்பட்டுள்ளன. {இப்படி}

இது குறிப்பாக கேனடா மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற சில நாடுகளில் நிறைவேற்றபட்டுள்ளது.
பயானில் முதன் முறையாக ஹுகுகுல்லா எனும் சொல் பாப் அவர்களாலும் பயண்படுத்தப்பட்டது. ஆனால் அதன் வடிவமும் உள்ளடக்கமும், பஹாவுல்லா நமக்குக் கொடுத்ததில் இருந்து மாறுபடுகிறது. ஹுகுகுல்லா என்பது கடவுளின் உரிமை என ஷோகி எபெண்டியால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது, ஆனால், பாரசீகப் பின்னனியில் இருந்து வந்தவர்கள் நன்கு தெரிந்து வைத்திருப்பதுபோல், “ஹுகுக்” என்பது ஹுக் என்ற சொல்லின் பன்மையாகும். ஆகவே ஹுகுகுல்லா என்பது கடவுளின் உரிமைகள் ஆகும். கித்தாப்-இ-அக்டாஸின் பின் இணைப்பில் உள்ள கேள்விகளும் பதில்களும் எனும் பகுதியில், ஹுகுகுல்லா எனும் இச்சட்டம் பயானில் இருந்து எடுக்கப்பட்டதாக பஹாவுல்லாவே ஒப்புக்கொள்வதை நீங்கள் அறிவீர்கள்.

இப்பொழுது தம்முடைய சட்டங்கள் தொடர்பாக பஹாவுல்லா எவ்வாறு கையாண்பார் என்பது பற்றி சில வார்த்தைகள் கூரிட விரும்புகிறேன். தம்முடைய சட்டங்களின் நூலை வெளியிடுவதற்கு, தம்முடைய முப்பத்தொன்பது வருட பதவிக்காலத்தில் இருந்து இருபதுக் ஆண்டுகளை அவர் எடுத்துக்கொண்டார் என்று அவர் கறுதுவதையூம், கிதாப்-இ-அக்டாஸின் சுருக்கத்தில் இது மிகவும் தெளிவாக இருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். இருபது ஆண்டுகள் திருவெளிப்பாடு பிறந்தது 1853ல், சட்டங்களின் நூலாகிய கித்தாப்-இ-அக்டாஸ் 1873ல் வெளியிடப்பட்டது. பின்னர் அந்த நூலை வெளியிட்டபின்னர், அவர் அதனைத் தம் நண்பர்களுக்கு அனுப்பிவைக்க விருப்பவில்லை. அவர் அதனைக் சில நாட்களுக்கு வைத்திருந்தார். அவர் அதனை எவ்வளவு நாட்களுக்குத்தான் வைத்திருந்தார் எனத் திட்டவட்மாகத் தெரியாது. ஆனால் அது எப்படியும் ஒரு வருடத்திற்கு இருக்கக்கூடும். அதன் பிறகு அவருடைய சீடர்களில் பெரும்பாலானோர் வசித்துவந்த ஈரானுக்கு அதனை அவர் அனுப்பிவைத்தார். கித்தாப்-இ-அக்டாஸில் ஹுகுகுல்லா பற்றிய ஒரு குறிப்பு உள்ளது. அதனை நாம் அனைவரும் இன்று மாலையில் ஒன்றாகப் படிப்போமாக. எனினும், அந்த ஹுகுகுல்லாவைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் எவரையும் நியமிக்கவில்லை. இந்த நன்கொடையைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. இந்த நூல் வெளியிடப்பட்டு ஐந்து அன்டுகளுக்கு மௌனம் பூண்டார். பிறகு, இறுதியில் 1878ல் தான் அவர் இப்படிச் சொன்னார்: யாம் இப்பொழுது ஹுகுகுல்லாவைப் பெற்றுக் கொள்வதை அதிகாரபுர்வமாக்குகிறோம். ஆகவே, திருவெளிப்பாடு பிறந்த காலத்தில் இருந்து ஹுகுகுல்லா இருபது ஆண்டுகளுக்குத் தள்ளிப்போடப்பட்டது. இதே காலத்தில்தான் பஹாவுல்லா கட்டாயப் பிரார்த்தனைகளை வெளியிட்டார்,ஆகவே, இத்தகைய தெய்வீகக் கட்டளைகளைப் பெற்றுகொள்ளும் வண்ணம் ஈரானிய சமூகத்தில் நிலைத்தன்மை மற்றும் போதிய முதிர்ச்சியும் நிலவியதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். அதனை நண்பர்கள் மீது கட்டுண்டபோது, சமயத்தின் பொதுவான தேவைகளின் பொருட்டே அவ்வாறு செய்யப்பட்டதாக அவர் தெளிவுப்படுத்தினார். சமயமும் விரிவு அடைந்துவிட்டது. நண்பர்களும் இத்தகைய கூட்டணங்களைச் செலுத்தும் வகையில் நிலவரங்களும் சூழ்நிலைகளும் கேட்டுக்கொண்டன. ஆகவே, அவருடைய தூதுப் பணியின் கடைசிப் பதினான்கு ஆண்டுகளில்தான் அவர் ஹுகுக் பற்றி இன்னும் குறிப்பாக எழுதி இந்த முக்கியமான சட்டம் பற்றி நண்பர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலுரைத்து, இந்த முக்கியமான நிதியை இயக்கச் செய்தார்.

சமயத்தின் தேவைகள் பற்றிய பேசுகையில் சமயத்தின் வளர்ச்சிக் லௌகீக வழிமுறைகளின் முக்கியத்துவம் பற்றிய பல குறிப்புக்கள் இருக்கின்றன. உதாரணமாக, “கடவுளின் சமயத்தின் வளர்ச்சியும் மேம்மாடும் லௌகீக வழிமுறைகளை நம்பியுள்ளது ” (1) “அல்லது லௌகீக விமுறைகளின் தேவையை முன்னிட்டு இந்த செயல் விதிக்கப்பட்டுள்ளது.” (27) மேலும் “சில அத்தியாவசிய விவகாரங்களை ஏற்பாடு செய்வதற்காக, இந்தகைய கூட்டணங்களை ஏற்றுக்கொள்ளும்படி அனுமதி வழங்கப்பட்டது” (28) மீண்டும் “ சில பேர்கள் உதவியைப்பெறுவதும் பிறர் கவனத்தையும் பரிவையும் பெறுவதும் அத்தியாவசியமாகிறது, ஆனால் இவை யாவும் கடவுளின் அனுமதியுடன் நடைபெற வேண்டும். ” (32) அவர் ஹுகுக் பெற்றுக்கொள்வதை அனுமதித்தார், ஆனால் அதனை செலவு செய்வது மற்றும் செலுத்துவது யாவும் அவரிடம்  தெரிவிக்கப்படவேண்டும். “தற்போது பல்வேறு பகுதிகளில் சமயத்தின் சேவையில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டு, ஆனால் சம்பாதிக்க இயலாமல் இருக்கின்ற பல தனிநபர்கள் உள்ளனர்,” (33) மறுபடியும் “கடவுளின் உரிமையில் இருந்து ஏழைக்கு வாங்குவது அனுபதிக்கப்படுகிறது, இது அனுமதி வழங்கப்படுவதற்கு உட்பட்டதாகும்.” அனுமதி பொதுவாகவே வழங்கப்படுமாயின், “அது கலகத்துக்கு இட்டுச் சென்று தொல்லையை ஏற்படுத்தும்,” (44) ஆகவே அவர் இந்த நிதியை ஒருங்கிணைத்துவருவதை நீங்கள் காண்பீர், இது கடவுளின் உரிமையாகும் அங்கே ஒரு மத்திய அதிகாரம் தேவைப்பட்டது. அவர் ஈரானில் ஒரு தலைமை அறங்காவலரை நியமித்தார், அவர் நாட்டின் பிற பகுதிகளிலும் வட்டாரங்களிலும் என அறங்காவலர்களையும் துணை அறங்காவலர்களையும் நியமித்துக்கொள்வதற்கு அனுமதி  கொடுக்கப்பட்டார். இவை யாவுமே அவரால் ஒருங்கிணைக்கப்பட்டன.

கித்தாப்-இ-அக்டாஸில் விளக்கப்பட்டுள்ள வாரிசு முறை இங்கே ஹுகுகுல்லா தொடர்பாக மேலோட்டமாக குறிப்பிடப்பட வேண்டும். கித்தாப்-இ-அக்டாஸில் ஆஸ்திகளைப் பற்றி குறிப்பிடுகையில், பஹாவுல்லா வாரிசு முறையில் இந்த வரிசையை வைக்கிறார். கடவுளின் அவதாரப் புருஷர்; அவருக்குப் பிறகு கிளைகள், பன்மை; அவர்களுக்குப் பிறகு உலக நீதி மன்றம். ஆஸ்திகள் பற்றி குறிப்பிடுகின்ற கித்தாப்-இ-அக்டாஸின் அப்பகுதியில் அது இவ்வாறுதான் விதிக்கப்பட்டுள்ளது. பஹாவுல்லா காலமானபோது, ஹுகுகுல்லா பற்றியோ, அல்லது யார் ஹுகுகுல்லாவைப் பெறுபவர் என்பது பற்றியோ அவர்தம் உயில் ஏற்பாட்டில் குறிப்பு இல்லை. ஆகவே அன்பர்கள் அது பற்றி அப்துல் பஹாவிடமே கேட்டனர். அதற்கு பதிலுரைக்கையில், பாரசீகப் பின்னனியில் இருந்து வருபவர்களுக்குப் பழக்கப்பட்ட ஒரு வார்த்தையை அவர் பயன்படுத்தினார் – அந்த வார்த்தை மார்ஜா 5 என்பதாகும். அதன் பொருள் அனைவருமே நாடிநிற்கவேண்டிய சமயத்தில் உள்ள அதிகாரம் என்பதாகும், அதுவே மார்ஜா. ஆகவே, பஹாவுல்லாவுக்குப் பிறகு தாமே அந்த மார்ஜா என அப்துல் பஹா குறிப்பிட்டார். அனைவரும் அவரிடம்தான் திரும்பவேண்டும். அந்த அதிகாரத்தின்பால்தான் ஹுகுகுல்லா போய்ச்சேரவேண்டும் என அவர் சொன்னார். ஆகவே பிறகு, தம்முடைய உயில் ஏற்பாட்டில் ஹுகுகுல்லா பாதுகாவலரிடம் கொடுக்கப்படவேண்டும் என அப்துல் பஹா மிகவும்  தெளிவுபடுத்தினார். ஷோகி எபெண்டி அந்த உயில் ஏற்பாட்டை மொழிபெயர்க்கையில், அந்த ஹுகுகுல்லா அவர் மூலமாகத்தான் செலுத்தப்படவேண்டும் என மொழிபெயர்த்துள்ளார். சமயத்தின் தலைவர்களாக ஷோகி எபெண்டிக்கு நேரடியான வாரிசுகள் இருந்திருப்பார்களேயானால், அவர்களே ஹுகுகுல்லாவைப் பெறுபவர்களாக இருந்திருப்பார்கள். அது அவர்கள் “மூலமாகத்தான்” செலுத்தப்பட்டிருக்கும் காலப்போக்கில் நமக்கெல்லாம் தெரிந்ததுபோல், ஷோகி எபெண்டியின் மறைவுக்குப் பிறகு கடவுளின் சமயத்தன் திருக்கரங்களின்  இடைவெளிக் காலம் முடிவடைந்த பிறகு, சமயத்தின் தலைமைப் பொறுப்பு உலக நீதி மன்றத்தின்பால் போய்ச் சேர்ந்தது. ஆகவே, “மார்ஜா” பற்றி அப்துல் பஹா கொடுத்த வழிமுறை உலக நீதி மறைத்தினால் பயன்படுத்தப்பட்டது. இத்தகைய சூழ்நிலைகளில் தாம் ஹுகுகுல்லா பெறலாம் எனவும், புனித எழுத்துக்கலில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக பணத்தை உலக நீதி மன்றத்தின் மூலம் செலுத்திடலாம் என அந்த ஸ்தாபனம் நண்பர்களுக்கு அறிவித்திருந்தது.

தமது சொந்த நாட்களில் இருந்த ஹுகுகுல்லா பற்றி குறிப்பிடுகையில் பஹாவுல்லா இப்படி எழுதியுள்ளார்,

“ஹுகுகுல்லாவுக்கு என விசேவுமாக வெளியிடப்பட்ட விதி ஒன்று உள்ளது. உலக நீதி மன்றம் உரு பெற்றபின்னர், அதற்கான சட்டம் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப தெளிவுபடுத்தப்படும்.” (59) உலக நீதி மன்றம் அமைக்கப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று உலக நீதி மன்றம் இச்சட்டத்தை உலகாலாவிய ஆறு ஆண்டுத்திட்டத்தின்  இலக்குகளில் ஒன்றாகச் செய்து, அனைவரின் மீதும் சுமத்தப்படுகின்ற நாளை எதிர்நோக்கியவாறு இச்சட்டம் பற்றி நாம் கல்விப் பெறும்படியாகவும் செய்துள்ளது.

ஹுகுகுல்லா தொடர்பாக ஒரு விளக்கம் இருக்கிறது. நான் அதனை உங்களுக்காக வாசிக்க விரும்புகிறேன். அது இரண்டு இடங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஒன்று கித்தாப்-இ-அக்டாஸில் இருந்து எடுக்கப்பட்டது, (நாம் கட்டாயம் படிக்கவேண்டும் என நான் முன்னரே குறிப்பிட்ட பகுதியாகும்)  அடுத்த அப்துல் பஹாவின் நிருபமாகும். அதன் சில பாகங்களை நான் வாசிக்கிறேன்.

பஹாவுல்லா எவ்வாறு இது பற்றி முதன் முதலாக கித்தாப்-இ-அக்கடாஸில் குறிப்பிட்டுவிட்டு, அது பற்றி விளக்கம் கொடுப்பதற்காக எப்படி 25 ஆண்டுகளுக்கு காத்திருந்தான் என்பதனை நாம் பார்த்துவிட்டோம். “ஒரு மனிதனின் 100 மிஸ்கால் தங்கள் பெற்றிருந்தால், அதில் இருந்து 19 மிஸ்கால் புமியையும் சொர்க்கத்தையும் படைத்தவர்ராகிய கடவுளுக்குச் சொந்தமாகும் இந்த மாபெரும் வள்ளன்மை உங்களுக்குக் கிடைத்தப்படி இருந்துவிடாமல்  கவனமாக இருப்பீராக, ஓ மக்களே உங்களிடமிருந்தும் சொர்க்கங்களின் மீதும் பூமியின் மீதும் உள்ள அனைத்தில் இருந்தும் தாங்கள் முழுமையாக சுதந்திரமாக இருக்கையில் நாங்கள் இச்சட்டத்தை உங்கள் மீது விதித்துள்ளோம். உண்மையில், எல்லாம் தெரிந்தவரும் எல்லாமறிந்தவருமான கடவுளைத்தவிர அனைவரின் புரிந்துகொள்ளுதலுக்கும் அப்பாலான மர்மங்களும் நலன்களும் இந்தக் கட்டளைகளுக்குள்ளே மறைந்துகிடக்கின்றன. சொல்விராக: இந்த கட்டளையின் வழியாக கடவுளின் உங்கள் உடமைகளில் இருந்து உங்களைத் தூய்மைப்படுத்தி, கடவுளாக விரும்புகின்றவர்களைத் தவிர வேறெவருமே அடையமுடியாதபடியான ஸ்தானங்களுக்கு நீங்கள் நெருக்கமாக ஈர்க்கப்படும்படியாக அவர் உங்களுக்கு உதவுகிறார், அவரே தாரளகுணமுடையவர், இரக்கமுடையவர், வள்ளன்மை நிறைந்தவர்.” (10)

இப்போழுது, பின்வரவுள்ள சில வாக்கியங்களில் காணப்படுகின்ற ஆழ்ந்த அறிகுறிகளைப் பற்றி நீங்கள் சிந்திக்கவேண்டும் மென நான் கேட்டுக்கொள்கிறேன். “ ஓ மக்களே, ஹுகுகுல்லா விவாகாரத்தில் துரோகமாக நடந்துக் கொள்ளாதீர், அவருடைய அனுமதி இன்றி அதனைக் கொடுத்துவிடாதீர்.” (10)  இதன்வழி உண்மையில் 19 வழுக்காடு நமக்குச் சொந்தமில்லை என்று பொருள் படும், நாம் அவருடைய அனுமதி இல்லாமல் 19 விழுக்காட்டைப் பயன்படுத்தினால், நாம் துரோகமுடன் நடத்துகொள்கிறோம். அது நமக்குச் சொந்தமல்ல, அது கடவுளுக்கே சொந்தமாகும். அதுவே கடவுளின் உரிமையாகும். “இது இவ்வாறுதான் அவர்தம்  மடல்களிலும் இந்த மகிமைமிகு நிருபத்திலும் விதிக்கப்பட்டுள்ளது. ” இப்பொழுது எச்சரிகை வருகிறது. “ எவரொருவர் கடவுளிடம் நேர்மையில்லாமல் நடந்துகொள்கிறாரோ”- அவர் ஹுகுகுல்லாவைக் குறிப்பிடுகிறார்; வார்த்தைகளில் கனுவதானால், நாம் அந்த 19 விழுக்காட்டை நாம் விரும்பிய விதம் பயன்படுத்தினால், நாம் கடவுளிடம் நேர்மையற்ற முறையில் நடந்துகொள்கிறோம்- “எவரொருவர் கடவுளிடம் நேர்மையின்றி நடந்துகொள்கிறாரோ அவர் நீதியின்றிபடி வெளிப்படுத்தப்படுவார்.”(10) கடவுளின் நீதி அந்த நபர் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோருகிறது. இப்பொழுது அந்த சாதகமானப் பகுதியைக் காண்போம் – “ எவரொருவர் தமக்கு இடப்பட்டுள்ளவற்றை நிறைவேற்றுகிறரோ, அவர் மீது, வழங்குபவரும், அதி தாராளகுணமுடையோருமாகிய தம் பிரபுவின் வள்ளன்மை எனும் சொர்க்கத்தில் இருந்து தெய்வீக நல்லாசிகள் பொழியும்.”(10)

அப்துல் பஹாவின் நிருபத்தைப் பொருத்தவரைக்கும், அது “அப்துல் பஹாவின் எழுத்துக்களில் இருந்து எங்களிடம் பகுதிகள்” என்ற பகுதியின் முதல் பகுதியில் காணப்படுகின்ற மிக நீண்ட நிருபமாகும். அதில் இருந்து நான் சுமார் ஐந்து அல்லது ஆறு பகுதிகளை வாசிக்கிறேன். நான் இந்த ஸ்தாபணத்தின் தத்துவம் எனவும் அதன் ஆன்மீக முக்கியத்துவம் எனவும் நாம் வருணிக்க இயன்றதை அவர் இங்கு நமக்காகக் கொடுக்கிறார். “உலகின் ஆலயம் என்பது மனிதனுடைய உருவத்தையும் சாயலையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. லௌகீக உலகின் அமைப்பு என்பது தன் கைகால்களும் அங்கங்களும் இனைப்பிரியாமல் ஒன்றாக இனைக்கப்பட்டுள்ள ஒரு  தனி உருவுக்குச் சமமாகும். படைக்கப்பட்டுள்ள எல்லாம் பொருட்களும்மே நெருக்கமான தொடர்புடையவை என இருப்பதுபோல, ஒத்துழைப்பு, பரஸ்பர உதவி, மற்றும் கைமாறு என்பவை உருவின் உலகின் ஒன்றுபட்ட உடலுக்கு அத்தியாவசியம் பண்புகளாகும்.”(61) இப்பொழுது இந்த விஷயத்தை கவனிப்பீர்களாக, உயர்வு எனும் பிறைவட்டத்தின் மீது படைக்கப்பட்ட பொருட்களின் இராஜ்யம், எந்த அளவுக்கு உயரமாக ஏறுகின்றதோ அந்த அளவுக்கு உண்மையின் அறிகுறிகளும் ஆதாரங்களும் இன்னும் கூடுதல் வெட்டவெளிச்சமாக அதனால் உயரிய நிலையின் எல்லையில் கானப்படுகின்ற ஒத்துழைப்பும் கைமாறும் கிழுநிலையின் எல்லையில் காணப்படுபவையைக் காட்டிலும் இன்னும் பெரிதாக உள்ளன. உதாரணமாக, இந்த அடிப்படை உண்மையியலின் ஆதார அறிகுறிகள் உலோக இராஜ்த்தைக் காட்டிலும் தாவர இராஜ்யத்தில்தான் இன்னும் அதிகமாக வேறுபடுத்திக் காணமுடிவதோடு, தாவர உலகைக் காட்டிலும் விலங்கு உலகில்தான் இன்னும் கூடுதாலாகப் புலப்படுகின்றது. ஒத்துழைப்ப, பரஸ்பர  உதவி, மற்றும் கைமாறின் செயல்கள் யாவும் உடலுக்கும் லௌகீக உலகின் பொருளுக்கும் மட்டும் சார்ந்தவை அன்று, ஆனால் அவை லௌகீக சூழ்நிலைகளானலும் சரி, அல்லது ஆன்மீக சூழ்நஉலைகள் ஆனாலும் சரி எல்லாச் சூழ்நிலைக்கும் பொருந்துகின்றன. ஒன்றுக்கொன்றுள்ள இந்த உறவுகள் எந்த அளவுக்கு பலப்படுத்தப்பட்டு விரிவடையும் போது, அந்த அளவுக்கு மனித சமுதாயம் வளர்ச்சியிலும் செழிப்பிலும் மேம்பாடு அடையும். இதுவே ஹுகுகுல்லா எனும் ஸ்தானம் நிறைவப்பட்டுள்ளது அடிப்படை கோட்பாடாகும்.

வேறு வார்த்தைகளில் கூறவதானால் மனித சமுதாயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கும் அங்கத்தினர்களுக்கும் இடையில் பரஸ்பர கைமாறும் இணைந்த செயலும், ஒத்துழைப்பும் மேம்பாடு கானுப்படி செய்வதற்காகவே அது பஹாவுல்லாவினால் அங்கு நிறுவப்பட்டுள்ளது. பஹாவுல்லா இச்சட்டத்தை ளிெப்படுத்துகையில் பஹாவுல்லாவினால் அங்கு கோட்பாடைத்தான் கொண்டிருந்தார் என அப்துல் பஹா குறிப்பிடுகிறார். நான் இந்த நீண்ட நிருபம் முழுவதையும் வாசிக்க இயலாது, அனால் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது நீங்கள் இதனைக் படிப்பீர்கள் என நான் நம்புகிறேன்.
ஹகுகுல்லா எவ்வாறு கொடுக்கப் படவேண்டும்? எந்தப் பாராக்களில், ஹுகுகுல்லாவின் அறங்காவலர்கள் இந்தக் கட்டணத்தை வரப்புறுத்தி வாங்கவோ அல்லது கெட்டு வாங்குவதோ கூடாது என அவர் மீண்டும் மீண்டும் தெள்ளத்தெளிவாகத் தடைவிதிக்கிறார். (8,9,27,32, 38, 40, 44,46, 51, 53). அவர் மறையிடும்படி கேட்டுக்கொள்கிறார். அது அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அத்தகைய முறையீடுகளும்கூட பொதுவானவையாகவும் நண்பர்களின்  கூட்டத்திற்கும் இருக்க வேண்டும். எவ்வித அழுத்தமோ வற்புறுத்தலோ அவர்கள் மீது சுமத்தப்படலாகாது. எப்பொழுதும் எல்லாச் சூழ்நிலைகளிலும் சமயத்தின் கண்ணியத்தைக் காக்கும்படி அவர் தம்முடைய தலைமை அறங்காவலரையும். பிற அறங்காவலர்களையும் கேட்டுக் கொள்கிறார். இந்தக் கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது? அவர் நண்பர்களின் இதயங்களிலும் மனங்களிலும் காணவிரும்புகின்ற பண்புகள் மற்றும் மனப்பாட்ன்மைகளையும் கொண்ட முழுப் பட்டியல் ஒன்று உள்ளது.

இதுவே அந்தப் பட்டியல்:-

மகிழ்ச்சி;
பிரகாசம்;
பரிபூரண பணிவு எனும் உணர்வு;
தாழ்மை எனும் உணர்வு;
நிறைவு தரும் மனது;
கடவுளுக்காக

அளவு என்பது முக்கியமல்ல, சிறு மருவானாலும் பரவாயில்லை. வெறு வார்த்தைகளில் கானுவதானால், உங்களிடம் ஐந்து தானியங்கள் இருந்தால், நீங்கள் பஹாவுல்லாவுக்கு ஒரே ஓரு தானியம் மட்டுமே தரவேண்டும். அவர் அதனை ஏற்றுக்கொள்கிறார், அதுவே அவருக்கு விலைமதிப்பில்லாத பொருளாகிறது. இன்னும் தொடர்கிறென்:-

சந்தோஷத்துடன்
நல் இணக்கத்துடன்
கொடுப்பது இயற்கையாக வரவேண்டும்
நல்விருப்பத்தைதுடன்;
விரும்பிய தாழ்பனிவுடன்;
இயன்றபோகுதெல்லாம் கொடுத்தல்;
ஆர்வத்துடன்;
அது மனசாட்சியைப் பொறுத்தது;
அது ஒரு ஆன்மீக மற்றும் நேர்மையான கடமையாகும்;

இவ்வாறுதான், கட்டணம் எந்த மனப்பான்மையோடு கொடுக்கப்பட வேண்டும், எவ்வாறு கொடுக்கப்படவேண்டும் என்று விளக்கும் இந்தத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட சில வார்த்தைகளே இவை.
அது இவ்வாறு இல்லாமல் போனால், அதனை ஏற்றுக் கொள்ளாதீர்கள் என்று தமது அறங்காவலர்களுக்குச் சொல்லும்  அளவுக்கு அவர் போகிறார். (9) அவர் அவ்வளவு தூரம் செல்கிறார். அதுதான், அது கடவுளுன் கண்களுக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பது.

இப்பொழுது நாம் சில பலன்கள் பக்கம் திரும்புவோம். பலாபலன்கள் கொடையாளர்களுக்கே  திரும்பவும் போய்ச் சேர்கின்றன என அவர் மீண்டும் மீண்டும் கூறுகிறார் (2,3,4,5,35,36,38,40,44,45,47,48). ஹுகுகுல்லா என்பது “இரக்கம், நிறைவு மற்றும் எல்லா நன்மைகளின் பிறப்பிடம்.” அது கடவுளின் உலகங்களின் ஒவ்வொரு உலகிலும் ஒவ்வொரு ஆன்மாவுக்குள்ளும் நிலைக்கவல்ல ஒரு வள்ளன்மையாகும். “ (7)” ஹுகுகுல்லாவின் பாலும், அவர்தம் சேவர்களின்பாலும் எவ்விதமான கடமையுணர்வும் இன்றி கடவுளின்பால் பெயர்கின்ற அவர் நிலமடைவாராக. “(22) மனிதனுக்கோ அல்லது கடவுளுக்கோ எந்தவிதமான கடன்களும் இருக்ககூடாது. கட்டணம் செலுத்துவது என்பது “ நல்லாசிகளின் பிறப்பிடமும் உள்ளது.”(29) “அதன் நல்ல பலன்களும் அதன் கனிகளும் பூமியின் இராஜ்ஜியமும் சொர்க்கமும் நீடிக்கும்வரைக்கும் நிலைக்கும்.”(36) அது “மனிதர்களின் ஆன்மாக்களை சுத்தரித்து, தூய்மைப்படுத்தி, சுத்தப்படுத்துகின்ற ஒரு சாதனமாகவும்,”செழிப்பு மற்றும் ஆசிக்கான பிறப்பிடமாகவும் உள்ளது. “(40) அது தெய்வீக அதிகரித்தலுக்கும் மோட்சத்துக்கும்… ஏதுவானது.” (41) “ அதனைக் கடைபிடிப்பதனால் ஒருவர் தன்மதிப்புக்கு பெயர்த்தப்படுவார்,” (42) அது “ஒருவருடைய உடைமைகளை தூய்மைப்படுத்தஉதவுகின்றது. “(42) அது கூடிதல் செழிப்புக்கு” ஏதுவாகிறது (42) அது நண்பனை வழிப்போக்கனிடம் இருந்து வேறுபடுத்துவதற்கு ஒரு அபூர்வமான சோதனையாகும் (62) அது “கொடையாளர்கள் உறுதிப்பபெற்று பலம் பற்றிறுதி அடைவதற்கும் உதவும்.”(62) அது கொடையாளர்களின்மீது “தெய்வீக அதிகரித்தலை” ஈர்த்து (45,63) இறுதியில் அது “கண்ணியத்திற்கும் நன்மதிப்புக்கும் ஏதுவாக இருக்கும்.”(45 )இவை யாவுமே இந்த தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டவை. அவை அடுக்கப்பட்டுள்ளன.
அங்கு எச்சரிக்கைகளும் உள்ளன. நாம் கித்தாப்-இஅக்டாஸில் இருந்து ஓர் எச்சரிக்கையைக் கேட்டுவிட்டோம், இங்கு இன்னும் சில உள்ளன. “எவரொருவர் இந்த அழைப்புக்கு செவிசாய்க்கிறரோ, அது அவருக்கே நலனாக அமையும், எவரோருவர் தவறுகிறரோ, அவர் தம் ,ருத தோல்வியைக் கொண்டுவருவார்.” (6) இரண்டு பாராக்களில் இன்னெரு கற்று உள்ளது. நான் அதனைச் சுருக்கித் தருகிறேன். ஒரு வட்டாரத்தில் ஒவ்வெருவரும் ஹுகுக் செலுத்தி, கடவுளின் இந்த உரிமையை பிடித்துவைத்துக் கொள்ளாமல் இருந்தால் நன்பர்கள் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்கப்போவதில்லை, மாறாக அவர்கள் வசதியும் சொகுசும் (20,22) அனுவிப்பார்கள். பிறகு இரகையும் காணுங்கள், ஹுகுகுல்லாவைப்  பிடித்துாவத்துக்கொண்டு அவர்தம் காக்கப்பட்ட நிருபத்தில் அவர்கள் மீது விதிக்கப்பட்டதை கடைபிடித்கத் தவறுகின்ற செல்வந்தர் மீது துக்கம் நிகழட்டுமாக மேலும், “செல்வங்களைத் தங்களுடைய வாரிசுகளுக்கு மாற்றி எழுதுவதற்காக மக்கள் ஆற்றச் செல்வங்களை சட்ட பூர்வமாகவோ சட்டத்துக்கு விரோதமாகவோ திரடுவதற்குத் தொடர்ச்சியாக முயற்சிக்கின்றனர், ஆனால் இது எந்த அளவுக்கு நன்மைத்தரும் என்பதை யாருமே சொல்ல இயலாது. சொல்வீராக இந்நாளில் உண்மையான வாரின க்வமுளின் வார்த்தையே ஆகு. ”(42) நான் உங்களுக்கு வாசித்ருக்காட்டப்போகும் இந்தப் பகுதி தெய்வச் சமயத் திருக்கரமாகிய ஜீனாப்-இ-சாமாண்டாரி அவர்களின் தந்தைக்கு எழுதப்பட்டதாகும். அவர் சொல்கிறார். கடுமையான உழைப்பினாலும் முயற்சியினாலும் ஒரு கைப்பிடி அளவுக்கு உலகுசார்ந்த பொருட்களை சேகரித்துவிட்டு இச்செயலுக்காக மிகவும் மனிழ்கின்ற ஆன்மாக்கள்தான் எத்தனை, ஆனாலும் உண்மையில் அதிவுயரிய எழுதுகோல் இந்தச் செல்வத்தை உலக நீதி மன்றம் இந்தச் சட்டத்தை உலகம் முழுதும் அனைவர் மீதும் அமுலாக்கம் செய்வதற்கான காலம் இன்னும் கனியவில்லை. அந்த நாள் வெகு தூரத்தில் இருக்கக் கூடாது என நாம் எதிர்பார்த்து பிரார்த்தனைக் கூறுவோமாக.

கேள்விகளும் பதில்களும்

கேள்வி        : ரசீதுகள் பற்றி சில விளக்கங்கள் தரமுடியுமா?

பதில்    : அறங்வலர் ரசீது கொடுக்க வேண்டும் என பஹாவுல்லா தமது நிருபங்களில்    விதித்துள்ளார். (56) இது அவர்தம் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஒருவர் எவ்வளவு ஹுகுகுல்லா  செலுத்தியுள்ளார் என்பதைக் காட்டுவதற்கு அது ஒரு நல்ல குறியீடு ஆகும். காரணம், ஒருவர் மரணமடைந்ததும், அந்தச் சொத்துக்களின் மீது நடவடிக்கை எடுப்வர் ஆதாரத்தைக் கொண்டிப்பார்; ஒருவர் உண்மையில் நேர்மையாக இருந்து அந்தத ரசீதுகளை வைத்திருப்பாரேயானால், எவ்வளவு ஹுகுகுல்லா செலுத்ததப்பட்டுள்ளது என்பது செல்வத்தின் மீது நடவடிக்கை எடுப்போருக்குத் தெரியும்.
கேள்வி    : ஒரு வருடத்தின் காலத்தில் ஹுகுகுல்லாவை நாம் எத்தனை முறை செலுத்தவேண்டும்?
பதிதல்    :அப்துல் பஹாவின் எழுத்துக்களிலும் (65) பஹாவுல்லாவின் எழுத்துக்களிலும் (18) ஒருவருடைய எனும் குறிப்பு ஒன்று உள்ளது. உண்மையில், பாப் அவர்கள் கூட ஒரு வருடத்தையே குறிப்பிடுகிறார், ஆனால் ஒருவர் ரு வருஷம் என்ந கட்டுப்பாட்டுக்குள் இருக்குறார் என்று பொருள்படாது. நீங்கள் எப்பொழுது விரும்புகிறீர்களோ அப்பொழுதே அதனைச் செல்த்தலாம். மேலும், ஒரு ஆண்டு எப்பொழுது தொடங்குகிறது என்பதற்கு எவ்விதமான குறிப்பும் கிடையாது. ஆகவே அது வசதிக்கேற்றவாறு இனங்கும் தன்மை உடையது.

கேள்வி    :இக்கேள்வி எழைகளுக்கும் வறியவர்களுக்கும் உதவுவது பற்றியதாகும்.  இது ஹுகுகுல்லா பற்றியதும் கூட. உள்ளூர் ஆன்மீக சபை  அதன் மத்தியில் இருக்கின்ற ஏழைகளை கவனிக்க வேண்டும் எனக்கூறுகின்ற உள்ளூர் ஆன்மீக சபையில் சட்த்திட்டங்கள் பற்றி நான் நினைக்கிறேன். எது முதல் பொறுப்பாகும்? உள்ளூர் சமூகம் அதன் ஏழை மக்களுக்கு உதவமுடியாமல் போகும்போதா, அல்லது ஏழைகள் உதவும் கட்டுதலாக இருக்கும்போதா அவர்கள் ஹுகுகுல்லா பக்கம் திரும்ப வேண்டும் ? இது எவ்வாறு செயல்படுகிறது?

பதில்    :உதாரணத்திற்கு நாம் சமயத்தின் பாதுகாப்பை எடுத்துக்கொள்வொம். இது ஒவ்வொரு உள்ளூர் ஆன்மீக சபையின் கடமையாகும். இது தெய்வச் சமயத் திருக்கரங்கள் மற்றும் ஆலோசகர்களின் கடமையும் ஆகும். அது பற்றி எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் அப்துல் பஹாவின் உயில்  ஏற்பாட்டைப் படித்துப்பார்த்தால், அவர் சமயத்தைப் பாதுகாக்கின்ற பொறுப்பை ஒவ்வொரு தனிப்பட்ட பஹாய் அன்பரின் மீதும் சரிசமாக வைக்கிறார். இதனால், யார்தான் முதல் அடியை எடுத்துவைப்ப ஒன்று தணிப்பட்ட நம்பிக்கையாளரும், உள்ளூர் ஆன்மீக சபைகளும் கண்ட ஆலொசகரிகளும் முததலில் கலந்பேசவேண்டும் என்று பொருள்படுமா என்ன? இல்லை. அனைவருமே தம்மால் இயன்றவரை சிறப்பாகக் செய்யவேண்டும். இங்குகூட அதே நிலைதான் பொறுத்துகின்றது. ஏழைக்கு உதவுவது, உதாரணத்திக்கு, குடும்பத்தின் பொறுப்பாகும். அது அந்த நபரின் குடும்பத்தின் அங்கத்தினர்களின், அந்த நபரின் நண்பர்களின் அந்த உள்ளுர் சமூகத்தின், தேசிய சமூகத்தின் பொறுப்பாகும். அங்கு ஏதாவது ஒரு தரப்புத் தவறினால், கடவுள் மன்னிப்பாராக இவற்றிடங்களை புர்த்தி செய்வதற்காகவே அனைத்துலக சமூகம் இருக்கின்றது. நான் இவ்வாறுதான் புரிந்துகொண்டுள்ளேன். இந்த நிதியை நிர்வகிக்கையில் உலக நீதி மன்றம் கூட உதவிக் கரம் நீட்டுவதற்காக தனனிப்பட்ட விவரங்களை மாத்திரமே நாடுவதில்ல, மாறாக ஒரு நாடு முழுதுக்கும் அல்லது ஒரு வட்டாரம் முழுதுக்கும் பலன்தரக்கூடிய மனிதாபிமானமுள்ள திட்டங்ளைப் பற்றியும் சிந்திப்பதுண்டு. இந்த கைமாறு மற்றும் பரஸபர உதவிப் பற்றி நீங்கள் நினைக்கும் போது இவ்வாறுதான் இருக்கும்: தான் செலவு செய்வதற்கு வைத்துள்ள இந்த நிதியைப் பற்றி நினைக்கும் போது உலக நீதி  மன்றம் இதனைத்தான் நினைத்துவந்துள்ளது.

புனிதத்தன்மையும் தன்மைமாற்றத்தின் இயல்பும்


புனிதத்தன்மையும் தன்மைமாற்றத்தின் இயல்பும்

டாக்கடர் பீட்டர் காஃன்

அ. வஸ்துவும் ஆவியும்

கூட்ட தலைமையாளரே, சிறப்பு வருகையாளர்களே மற்றும் நண்பர்களே! இங்கு நமக்கிடையே உலகின் ஏதோ ஒரு மூலையிலிருந்து ஒருவர் இங்கு வருகையளித்திருப்பதாக நாம் கற்பனை செய்துகொள்வோம். அவர் நவீன மின்சாதனங்களான வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றுடனும், நவபௌதீகம் குறித்தும் ஏதும் அறியாதவராக இருக்கின்றார் என வைத்துக் கொள்வோம். அச்சாதனங்களைச் சுற்றிலும் — கதிரலைகள், தொலைக்காட்சி சமிக்ஞைகளைச் சுமந்திருக்கும் அலைகள், மற்றும் இவ்விஸ்வத்தின் தொலைதூரங்களிலிருந்து வரும் நுன்கதிரியக்கம் ஆகியவை உட்பட — மின்காந்த அலைகள் சூழ்ந்துள்ளன என்பது குறித்து அவரை எவ்வாறு நம்பவைப்பது? இதை எப்படித்தான் அவருக்கு எடுத்துரைப்பது? இவ்வலைகளைப் பார்க்க முடியாத நிலையிலும், அவைக் குறித்து எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையிலும், அவற்றைத் தொடவோ உணரவோ முடியாத நிலையிலும்; தங்களைச் சுற்றிலும், அவர்களூடேயுேம் ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும், ஹெப்ரூ மொழியிலும், ரஷ்ய மொழியிலும் மற்றும் பிற மொழிகளிலும் பெருமளவில் ஒலி மற்றும் ஒளித் தகவல்களைச் சுமந்த சக்தியலைகள் பாய்ந்துகொண்டுள்ளன என அவர்கள் எவ்வாறு நம்பப்போகின்றனர்? தன்னை மூழ்க்கடித்துள்ள இவ்வலைகளின் உளதாம்தன்மையை, உண்மையியலை மற்றும் பெருமதிப்பை அவருக்கு எடுத்துரைக்க இயலுமா? அல்லது ஒரு தூர கிரகத்திலிருந்து தோன்றும் மின்காந்தச் சிற்றலைகள் நிமிடத்திற்கு 12 முறை அவருடைய உடலை ஊடுருவிச் செல்கின்றன என்றோ அல்லது அவரது உடலை நியூட்ரினோ அனுக்கள் ஊடுருவிச் செல்கின்றனோ என்றோ எப்படி விளக்குவது.

இவ்விஷயங்களை நான் குறிப்பிடுவதன் நோக்கம், சமய தத்துவங்களில், நமது சமயமும் நிச்சமாக உட்பட, முக்கியமான ஒரு தத்துவம் என்னவெனில் நமது வாழ்நாள் முழுதும் நாம் அனைவரும் சக்திக்கூறுகளிலான கடல் ஒன்றினால் சூழப்பட்டுள்ளோம் என்பதே; நாம் அதனுள் மூழ்கடிக்கப்பட்டுள்ளோம்; அது நம்மைச் சுற்றிலும், மற்றும் நம் உள்ளும் இருக்கின்றது. நாம், நம்மை ஆன்மீக சக்திகள் சூழ்ந்தும், அரவணைத்தும், மற்றும் போர்த்தியும் உள்ள உருவளவை ஒன்றினுள் வாழ்கின்றோம். நாம் அவற்றைக் காணமுடியாது. நமது கருவிகள் அவற்றை அளக்க முடியாது. அவை பொதுவான ஒன்றாகவும், தொட்டுணரும் வகையிலும் இல்லை. அவை இங்குதான் உள்ளன, மற்றும் இவ்விஸ்வத்தின் உண்மையியலின் ஓர் அம்சமாக இவ்வான்மீக சக்திகளின் வலிய மற்றும் முன்னாதிக்கம் செலுத்தும் செல்வாக்கு உள்ளதென நமது சமயம் நமக்கு அறிவு புகட்டுகின்றது. ஓரிடத்தில், அப்துல் பஹா ஆவியைப் பற்றி குறிப்பிடுகையில், “…யாவற்றையும் உயிர்ப்பித்தும் ஊடுருவவும் செய்யும் தெய்வீக மூச்சுக் காற்று,”1 எனக் கூறுகின்றார். நாம் இந்த கடலில், இந்த ஆன்மீகச்சக்திகள் அடங்கிய  சூழலில் மூழ்கடிக்க மட்டும் படவில்லை, ஆனால் இவ்வான்மீகச்சக்திகள் நம்மை மர்மமான முறையில் ஆனாலும் மிகவும் இன்றியமையாத விளைவுகளுக்கு உட்படுத்துகின்றன. நமது உணர்ச்சிகள், நாம் செயல்படும் விதம், நமது ஊக்கம், நமது மேம்பாடு, நமது சந்தோஷம், நமது நோக்க உணர்வு, நமது வாழ்க்கைச் செல்லும் விதம் ஆகியவை இச்சக்திகளினால், அவற்றை நாம் கண்டுணரும் விதத்தினால், அவற்றை நாம் ஈர்க்கும் விதத்தினால் மற்றும் நாம் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தினால் பெரும்பாலும் நிர்ணயிக்கப்படுகின்றன.

இதுவே இன்றிரவு எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பின் மையமாக இருக்கின்றது எனும் எண்ணமே நான் இவற்றைக் குறிப்பிடும் காரணம். தனிநபர்கள் எனும் முறையில் நமது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளைக் கடக்கும் நமது சவால் யாதெனில், ஆழமாகவும், தன்னியக்கமாகவும், இச்சக்திகளின் பிரசன்னம் குறித்த உணர்வு பெற்றும், நாம் வாழும் மற்றும் இயங்கும் இவ்வுலகினைப் பற்றிய நமது புரிந்துணர்வில் அதைக் கணக்கில் சேர்த்துக்கொள்வதும் ஆகும். நாம் இந்த ஆழமான அறிவைப் பெற்றால் மட்டும் போதாது, ஆனால் அதற்கும் மேலாக, நாம் பிரயோஜனமான வகையில் தன்மைமாற்றம் பெற இச்சக்திகளை ஈர்த்திடக்கூடிய வழிவகைகளை நாம் செயல்படுத்த வேண்டும். இதுவே இத்தலைப்பின் சாரம் என்பது என் எண்ணம் — அதாவது இவ்வான்மீக சக்திகளை நாம் உணருவதும் நம்மை மாற்றிக்கொள்வதற்காக இச்சக்திகளை நாம் எப்படி ஈர்க்கப் போகிறோம் என்பதும் ஆகும். இதை நாம் செயல்படுத்தும் போது, நமது வாழ்க்கையில் சம்பந்தப்பட்டுள்ள இவ்வான்மீக சக்திகளின் உண்மையியல் குறித்து விழிப்புணர்வற்றவர்களுக்கு நாம் செய்யக்கூடிய இக்காரியங்கள் முற்றிலும் அறிவுக்கொவ்வாதவையாக இருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு நான் நமது புனித நினைவாலயம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அவ்வேளை அங்கு என்னைச் சுற்றிலும் நான் கண்ட இயல்நிகழ்ச்சியைப் பற்றி சிந்திப்பதற்காக என்னுடைய தியானங்களிலிருந்து வெளிவந்தேன். பார்வைக்கு வெற்றுக் கூடமாக காட்சியளித்த அந்த அரைக்குள் மக்கள் வந்தவண்ணமாக இருந்தனர்; அத்திருவாசலுக்குள் நுழையும்போது அவர்கள் கண்ணீர் மல்கவும், பெரும் பக்தியுடனும், தங்கள் சிரங்களை தரையில் தாழ்த்தியும், நினைவாலயத்தின்பால் தங்களது பக்தியினை வெளிப்படுத்தும் வேறு பல காரியங்களைச் செய்தவாறும் இருந்தனர்.  புனித நினைவாலயங்களின் மேன்மையைப் பற்றியும் அவற்றின் செயல்விளைவுகளையும் அறியாதவர்களுக்கு இக்காட்சி மிகவும் விநோதமாகவே இருக்கும். அவர்: இம்மக்கள் என்ன செய்கின்றனர்? — ஒரு வெற்றரைக்குள் இவர்கள் ஏன் நுழைகின்றனர், அங்கு பெரிதும் உணர்ச்சிவசப்படுகின்றனர், வெற்றிடத்திற்கு முன்பாக சிரந்தாழ்த்துகின்றனர்? இது எதற்காக? இவர்கள் ஏன் இதைச் செய்கின்றனர்?” ஆக, ஆன்மீக சக்திகள் குறித்த நமது புலனறிவு, வேறுவகைகளில் அறிவுக்கெட்டாத சில நடவடிக்கைகளில் நம்மை ஈடுபட தூண்டுகிறது. ஆக, இச்சக்திகள் குறித்து மிகக் கூர்மையான அறிவு பெற்றும், நமது வாழ்க்கையை தன்மைமாற்றமடையச் செய்வதற்கு அச்சக்திகளை ஈர்ப்பதற்கான வழிவகைகளை காண்பதுமே நம்முன் இருக்கும் சவாலாக உள்ளது. இது உள்ளியல்பாக இவ்விஸ்வத்தின் வலிமைகளுடன் நம்மை ஒருங்கிணைத்திடுவதில் ஏற்படும் சவாலாகும். இப்படி ஒருங்கிணந்து அச்சக்திகளோடு நாம் இயங்கும்போது நமது செயல்கள் வாழ்க்கையின் பற்பல அநுபவங்களினூடே இயல்பானவையாகவும் தன்னிச்சையானவையாகவும் இருக்கும்.

நாம் பயன்பெறவும் நமது வாழ்க்கையில் தன்மைமாற்றத்தை ஏற்படுத்தவும் இந்த ஆன்மீக சக்திகளையும் ஆதிக்கங்களையும்  நாம் எப்படி ஈர்க்கப்போகின்றோம் என்பதே இன்றிரவு நான் உங்களுடன் கலந்துரையாடவிருக்கும் விஷயமாகும். இது எனது அறிவிற்கும் வெகுவாக அப்பாற்பட்ட ஒரு மர்மமான விஷயம் என்பது தெளிவு. இது “ஒரு சில பொருளியலான விஷயங்கள் ஆன்மீக விளைவுகளை உண்டாக்குகின்றன…”2 எனும் அப்துல் பஹாவின் மர்மமான வாக்கிலிருந்து உதித்ததாகும். இந்த வாக்கை என்னால் முழுமையாக புரிந்துகொள்ள இயலவில்லை மற்றும் இதை நான் மற்ற ஒருவருக்கு நான் எவ்வாறு விளக்குவது. ஆனால் இது உண்மையியலான ஒன்று என்பதை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன் ஏனெனில் இது நமது சமயத்தில் உள்ளடங்கியுள்ள ஒரு விஷயமாகும். நமது புனித வாசகக் குறிப்புகளில், ஒரு சில பொருளியலான விஷயங்கள், பௌதீக உலகில் மேற்கொள்ளப்படும் ஒரு சில நடவடிக்கைகள், ஒரு சில எண்ணங்கள், ஒரு சில கூற்றுகள், ஒருவர் மற்றவருடன் கொள்ளக்கூடிய ஒரு சில உறவுகள் ஆகியவை, ஆன்மீக விளைவுகளை உண்டாக்குகின்றன என நாம் அறிவிக்கப்படுகிறோம். இது குறித்த மர்மத்தின் ஓர் உதாரணமாக அப்துல் பஹா மற்றும் பஹாவுல்லா ஆகியோரின் எழுத்துக்களில் வரும், ஏறக்குறைய பின்வருவது போல் இருக்கும், ஒரு வாசகக்குறிப்பாகும்: “…பௌதீக உலகில், (உடற்)தூய்மை அதியான்மீகத்திற்கு ஏதுவானதாகும்…”3 நாம் இதை எப்படித்தான் விளக்குவது? நான் தூய்மையாகவோ அல்லது தூய்மையற்றோ இருக்கின்றேன் என்பது அப்படி என்ன பெரிய விஷயம்? என் ஆன்மீகம், என் இருப்பின் உட்சாரம், என் நன்நடத்தை உருவாக்கம், இறைவனுடனான என் உறவு ஆகியவற்றுடன் இது ஏன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்? அதியான்மீகம் எதனால் தூய்மைக்கேட்டினால் பாதிப்படைகிறது? இவ்வுறவு குறித்த உறவுகள், அது இயங்கும்விதம் மற்றும் இந்த உறவு சம்பந்தமான சக்திக்கூறுகள் ஆகியவை யாவை? இக்கேள்விகளுக்கு நாம் முழுமையாக பதிலளிக்க மடியாது. ஆனால் இது உண்மை என்பது நமக்குத் தெரியும்; பௌதீக நடவடிக்கை மற்றும் அதன் அதியான்ம பின்விளைவு  ஆகியவற்றிற்கிடையே உள்ள மர்ம உறவின் ஒரு பகுதியே இது என்பதும் நமக்குத் தெரியும்.

2.    காந்தவிசை சம்பந்தமான கோட்பாடு

காந்தவிசை குறித்த கோட்பாடு நம்மைச் சுற்றியுள்ள அதியான்மீக சக்திகளை நாம் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த கலந்துரையாடலின் மையத்தில் உள்ளது. நம்மில் பலர் பள்ளிப்பாடமான பௌதீகப் பாடத்தில் காந்த சக்தியை இயற்கை குறித்த ஓர் ஆவிர்பாவமாக கண்டிருக்கலாம். ஆனால், உண்மையிலேயே காந்தவிசையென்பது நாம் புரிந்துகொள்ளமுடியாத ஒரு சக்தியாகும். நகர்ச்சியினால் பிறக்கும் மின்னனுக்களிலிருந்து காந்த சக்தி பிறக்கின்றது என்பது நமக்குத் தெரியும். ஆனால், அது காந்தவிசையின் ஆவிர்பாவம் குறித்த விவரிப்பே ஒழிய அதன் பிறப்பின் விளக்கமல்ல. இருதுருவ மற்றும் விளைவெல்லைகள் எனப்படும் கட்டுமானவடிவங்களாக அனுக்கள் மற்றும் அனுத்திரள்களின் பௌதீக அமைப்புகளினால் வேறுபட்டிருப்பதே ஒரு காந்தவஸ்து. காந்தவிசையென்பது காந்தமல்லாத ஒன்றிலிருந்து இரசாயன கலவையினாலின்றி அதன் பௌதீக உள்ளமைப்பினாலேயே வேறுபட்டுள்ளது. அவ்வமைப்பினால் ஏற்படும் பின்விளைவால், காந்தவஸ்துவோடு, காந்தவிசையென அழைக்கப்படும், கண்ணால் காணப்பட முடியாத, பன்மடங்கு தூரத்திலிருந்து செயல்படக்கூடிய ஓர் அற்புதமான சக்தி தொடர்புற்றுள்ளது. ஒரு காந்தமும், அதற்கப்பால் காந்தவிசைத் தொடர்புள்ள பொருளும் இருந்தால், அவற்றிற்கிடையே ஓர் ஈர்ப்பு சக்தி ஏற்படுகின்றது. அவ்விரண்டிற்கிடையே கையை வைத்தால் எதுவுமே ஸ்பரிசப்படாது. ஆனால், அச்சக்தி அங்குள்ளது மற்றும் அவ்விரண்டையும் கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால், அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும்.  இது, விவரிப்புக்குட்படாத ஓர் ஆழமான மர்மமாக இருந்தபோதிலும், இது ஒரு மெய்மையாகும் மற்றும் காந்தவிசையின் கலவையனுக்களின் கட்டமைப்பால் இது உருபெருகிறது.

இந்தளவிற்கு காந்தவிசையை ஒப்புவமையாக நான் இவ்வுரையில் நான் பயன்படுத்துவதற்குக் காரணம் பஹாய் சமய கோட்பாடுகளின் ஒரு வேறுபடுத்திக்காட்டும் அம்சமாக வஸ்து மற்றும் ஆவி ஆகியவற்றிற்கிடையே ஏற்படும் இனைந்தசெயற்பாட்டை விவரிப்பதற்கு காந்தவிசை எந்தளவிற்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதே ஆகும். இவ்வெளிப்பாடே இதைச் செய்துள்ள முதல் வெளிப்பாடாகும். காந்தவிசை 13வது நூற்றாண்டிலேதான் முதன்முறையாக ஆய்வுரீதியாக கருத்தில் கொள்ளப்பட்டது. ஆகவே, அதைப் பயன்படுத்தக்கூடிய முதல் திருவெளிப்பாடாக பயஹாய் வெளிப்பாடு இருப்பதானது இயல்பானதே. பௌதீக உலகில் காந்தவிசையெனப்படும், அனுக்களின் ஒரு குறிப்பிட்ட பௌதீக சேர்க்கை ஒரு மிகவும் சக்திகரமான ஆற்றலோடு தொடர்புற்றிருப்பதானது, பஹாய்கள் எனும் முறையில் அதியான்மீக ஆற்றல்களை நாம் ஈர்த்திட செய்யும் முயற்சிக்குத் தேவைப்படுபவைகளைப் புரிந்துகொள்ள மிகவும் ஆற்றல்வாய்ந்த ஓர் உதாரணமாகும். இவ்விஷயத்தை விளக்கிட பஹாய் புனித வாசகங்களிலிருந்து மேலும் சில உதாரணங்களை நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். அப்துல் பஹா கூறுகிறார்:

” நம்பிக்கையே சர்வ தயை மிக்கவரின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும் காந்தக்கல்லாகும். சேவையே தெய்வீக ஆற்றலை ஈர்க்கும் காந்தக்கல்லாகும்…”4

மேலும் அப்துல் பஹா கூறுவது:

“…இறைவனை நினைவுகூறுவதென்பது ஒரு காந்தக்கல்லைப்போல் உறுதிப்பாடுகளையும் உதவிகளையும் ஈர்க்கின்றது.”5
ஒரு காந்தவிசையின் மேற்கோளை நான் உபயோகப்படுத்துவதன் நோக்கத்தைப் பற்றி நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என நான் நினைக்கின்றேன். அந்த ஒழுங்குமுறை, நாம் எடுக்கும் நடவடிக்கைகள், அர்ப்பண உணர்வு, சமய போதனைகளுக்கேற்ப சேவையுணர்வில் பிறக்கும் செயலுணர்வு, நம்மைக் காந்தக்கற்களைப் போல் ஆக்குகின்றது. நாம் காந்தக் கற்களைப்போல் ஆகின்றோம். நாம் இரும்பை ஈர்க்கவில்லை ஆனால், இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கின்றோம். இக்கருத்து குறித்த பல வாசகப் பகுதிகள் உள்ளன. இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும் சக்தியை, அப்துல் பஹாவின் அழகான வாசகப் பகுதி ஒன்று பின்வருமாறு விவரிக்கின்றது. அவர் கூறுவதாவது:
கவனமற்ற ஆன்மாக்கள் விழிப்புணர்வு பெறவும், இறந்த ஆன்மாக்களுக்கு உயிரளிக்கவும், ஆன்மீக நோயாளிகளை குணப்படுத்தவும், எளிமையானவர்களை விவேகிகளாக்குவதற்கும், அறியாதோருக்கு அறிவுபுகட்டவும், லௌகீகமானதை ஆன்மீகமானதாக்குவதற்கும், தூரவிலகியுள்ளோரை (இறைவன்) அருகில் ஈர்த்திடவும், அன்னியர்களை நண்பர்களாக்கிடவும் இரவும் பகலும் முயற்சிப்பீர்களாக.”

“இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்த்திடும் காந்தவிசையாற்றல் இதுவே.”6

இவ்வாசகப்பகுதி ஒரு குறிப்பிட்ட செயற்பட்டியலை விவரிக்கின்றது — ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறையை விவரிக்கின்றது, இது இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும், நம்மைப்பற்றிய, நமது பேச்சு, நமதுடல், நமது எண்ணங்கள், ஆகியவைக் குறித்த செயல்கள் உருவாக்கும் அற்புதமான காந்தவிசையைப்பற்றியது. இது போன்று வேறு பல வாசகப் பகுதிகளும் உண்டு. மற்றொரு இடத்தில் பின்வருமாறு அப்துல் பஹா கூறுகிறார்:

“…இறைவனின் உறுதிப்பாடுகளை  ஈர்க்கும் காந்தக்கல்லாக ஒற்றுமையும் இணக்கமும் உள்ளன.”7
சமயத்தைப் போதிப்பதிலும், இதே கோட்பாடுகளே பொருந்துகின்றன. அப்துல் பஹா கூறுவது:
“மனிதர்களை சரியான பாதையில் வழிநடத்தும் செயலே இறைவனின் உதவிகளின்பால் நம்மை ஈர்த்திடும் காந்தக்கல்லாகும்.”8

அவர் அடுத்து கூறுவது:
“…போதகரின் நாவானது போதித்துக்கொண்டிருக்கும் போது, அவரும் இயற்கையாகவே அதனால் உற்சாகத்திற்குள்ளாகக்கூடும், சாம்ராஜ்யத்தின் தெய்வீக உதவி மற்றும் கொடைகளை ஈர்க்கும் ஒரு காந்தமாகவும் ஆகக்கூடும்…”9

இது போன்றே, தமது சார்பாக எழுதப்பட்ட ஒரு கடிதத்தில்:

“என்றுமில்லாத வகையில், இன்று, விண்ணுலக ஆசிகளை ஈர்க்கும் காந்தமாக, இறைவனின் சமயத்தைப் போதிப்பதே உள்ளது.”10

ஒரு சீரமைப்பிலோ, அல்லது ஒரு செயலிலோ, இப்பிரபஞ்சத்தின் விதிகளில் ஒன்றை பின்பற்றும்போது காந்தக்கல் குறித்த கோட்பாடு அதில் உடன்பட்டிருப்பதைக் காணலாம். இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கக்கூடிய ஆன்மீக காந்தவிசையை உருவாக்கும் செயல்கள் அல்லது சீரமைப்புக்கள் பற்றிய பிரபஞ்சம் சார்ந்த பௌதீக விதியல்லாத ஓர் ஆன்மீக விதியே இங்கு குறிப்பிடப்படுகிறது.

இந்த உரையில் காந்தவிசையின் உருமாதிரி பரவலாகப் பயன்படுத்தப்படுவதை பஹாய் புனித வாசகங்களில் காணப்படும் காந்தவிசை குறித்த உட்கருத்தின் முழுமையான ஆய்வாக கருதக்கூடாது. ஆன்மீக சபை குறித்த உட்கருத்து பலவிடங்களில் காந்தவிசையாக விவரிக்கப்பட்டுள்ளது: அதாவது, காந்தவிசையை தோற்றுவிப்பதற்காக ஒரு காந்தவிசைப்பரப்பின் மூலப்பொருள்களை குறிப்பிட்ட வகையில் சீரமைப்பு செய்வது ஓர் ஆன்மீக சபையை தோற்றுவிப்பதற்குச் சமமாகும். வேறு இடங்களில், மனிதனின் இயல்பு குறித்து விரிவுரை செய்யும் போது மனித சரீரத்தின் கூறுகளைக் குறிப்பிட்டு பின்வருமாறு கூறுகிறார்:

“…மனிதனெனும் ஜீவனில் காணப்படும் இந்த அவயங்கள், இந்த உடற்கூறுகள், இந்த கூட்டமைவு, ஆவிக்கான ஈர்ப்புகளும் காந்தவிசையுமாகும்…”

இந்தப் பகுதியில், கூட்டமைவு மற்றும் சிதைவுறுதல், வாழ்வு மற்றும் மரணம்,  ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பு குறித்தும், உடல் சிதைவுறும் போது உடலிலிருந்து ஆவி பிரிவது குறித்தும் விரிவுரை செய்கின்றார். “பஹாவுல்லா, காந்தம் எனும் வார்த்தையோடு சமஅர்த்தம் கொண்டுள்ள ‘காந்தக்கல்’ எனும் வார்த்தையை உபயோகப்படுத்தி:
“…எல்லா தேசங்களுக்கும், எல்லா உலக மக்களுக்கும் காந்தக்கல் போல செயல்படும்”12 என குறிப்பிடுகின்றார்.

ஒரு வாசகப் பகுதியில் பஹாவுல்லாவின் வருகை குறித்து பின்வருமாறு கூறுகிறார்:

“…தூர தேசங்கள் மற்றும் நாடுகளிலுள்ள புனிதமான இதயங்கள் ஈர்க்கப்படும் தற்போதைய உலகின் துருவத்தின் ஆன்மாக்கள் மற்றும் இதயங்களுக்கான காந்தவிசையை உனது ஆண்டவர் வெளிப்படுத்தியுள்ளார்… ஓர் ஈர்ப்பு மிகுந்த சரீரத்திற்காவும், இறைவனின் சாம்ராஜ்யத்தின் காந்தவிசையின்பால் ஈர்ப்புற்றதற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்துவாயாக.”13

3.    ஆன்மீக தன்மைமாற்றீடு

இறைவனின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும் காந்தவிசைகளாக மாறுவதே நாம் எதிர்நோக்கும் சவாலாக இருப்பின், அத்தகைய மாற்றத்தை நாம் எப்படி தோற்றுவிப்பது மற்றும் ஆன்மீக காந்தவிசைகளாக எப்படி மாறுவது? தன்மைமாற்றீடாகப்பட்டது இரு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பது என் நம்பிக்கை. தைரியமூட்டுவதாகவும் அதே வேளை பயமுறுத்துவதாகவும் நிலைதடுமாறச் செய்வதாகவும் இருக்கும் மாஸ்டர் அவர்களின் வாசகம் ஒன்றில் முதலாவது கோட்பாடு உள்ளது:

“…மாற்றமென்பது ஓர் அவசியமான பண்பாகவும் இவ்வுலகின் அத்தியவசிய குணங்களில் ஒன்றாகவும் உள்ளதோடு, நேரம் மற்றும் இடத்திற்கும் அது பொறுத்தமுடையதாக இருக்கின்றது.”14

இப்பகுதி தன்மாற்றீட்டோடு மிகவும் நெருங்கிய ஏற்புடைமையுள்ளதாக தெளிவுடன் விளங்குகிறது. நாம் மாற்றம் பெறுகிறோம் என அது கூறுவது மனதுக்கு தைரியமூட்டுகின்றது. எல்லாமே மேம்பாடு காணும் நிலையில் உள்ளன; இயக்கமற்றதல்லாத இயக்காற்றல் மிக்க ஓர் உலகத்தில் நாம் வாழுகின்றோம். காலப்போக்கில், மாற்றம் காண்பதற்கான ஆற்றல் நமக்குள்ளது, மேம்பாடு காணவும் பரிணமிக்கவும், அதன்மூலம் தன்மைமாற்றம் அடையவும் முடியும் என்பது மனதுக்கு உறுதியளிக்கின்றது. அதே சமயம் இந்த வாசகம் பயமளிக்கவும் செய்கின்றது, ஏனெனில் எல்லா மாற்றங்களுமே நன்மை பயக்கவல்லவையல்ல; அது மேம்பாடாகவோ தாழ்வுற்றலாகவோ இருக்கக்கூடும். நாம் முன்னோக்கியும் செல்லலாம் பின்நோக்கியும் செல்லலாம்; இப்பகுதியிலிருந்து நாம் ஒரே நிலையில் இருக்கப் போவதில்லை என்பது நிச்சயம். ஆகவே, நாம் பின்னோக்கிச் செல்லாமல் இருக்க வேண்டுமானால், நாம் வலிந்து முன்னோக்கி செல்லவேண்டும். முன்னோக்கி நாம் வலிந்து முயற்சிக்காது போதனால், நாம் பின்னோக்கியே செல்லுவோம். இதுவே மாற்றத்தின் அத்யாவசிய பண்பியல்பின் பீதியூட்டும் அம்சமாகும்.

ஆக, தன்மைமாற்றம் குறித்து ஆலோசிக்கையில், தவிர்க்கவியலா வகையிலும், மீட்கமுடியா வகையிலும், மாற்றத்திற்கு உட்பட்டவர்களாவோம், மற்றும் அதன் காரணமாக நாம் அடையும் எதிர்படையாற்ற நேர்படையான மாற்றத்தை உறுதி செய்வதற்கு நாம் கட்டாயம் முயலவேண்டும்.

தன்மைமாற்றத்தை உள்ளடக்கிய இரண்டாவது கோட்பாடு முயற்சியின் பண்பியல்பு குறித்தது. புனித வாசகங்களின் ஒரு சில குறிப்புகளைக் கொண்டு, மேலும் அதிக விளைவுகள் மிக்க ஒரு காந்தவிசையாகிட ஒரு தனி மனிதனுக்கு உதவும் ஆன்மீக ஆற்றல்களை ஈர்க்கும் காந்தவிசைகளாக முயற்சியை உள்ளடக்கிய செய்கைகள் உள்ளன. தன்மைமாற்ற செயற்பாடு முயற்சியை உள்ளடக்கியுள்ளது. முயற்சியோடு நாம் ஆரம்பித்தோமானால், நாம் மேலும் அதிக மேம்பாடு காண்பதற்கு உதவும் ஆன்மீக ஆற்றல்களெனும் வெகுமதியை இறைவன் நமக்களிப்பார். அதன்மூலம்,  ஒரு சக்கரச் செயற்பாட்டின் வழி, அதிக நற்பயன் விளைவிக்கும் முயற்சியானது அதைவிட மேலும் அதிக ஆன்மீக ஆற்றல்களை ஈர்க்கும்; மற்றும் இதன்வழி அப்துல் கூறியது போன்று, “நம்பிக்கையே தயைமிக்கவரின் உறுதிப்பாடுகளை ஈர்க்கும் காந்தமாகும்,” எனும் காந்தவிசை நிலைக்கும் ஒருவர் உயரலாம்.

இதே விஷயம் குறித்து பாதுகாப்பாளர் தமது செயலாளர் மூலம் எழுதியதாவது:

“…தான் எவ்வளவுதான் தகுதியற்றவராகத் தன்னை எண்ணியபோதிலும், சேவை செய்திடுவதற்கு எடுக்கப்படும் முயற்சியாகப்பட்டது, இறைவனின் ஆசிகளைக் கவர்ந்து அக்காரியத்திற்கு அவரை தகுதிபெற்றவராக ஆக்கிடும்.”15
மற்றும்:

“…உங்கள் குறிக்கோள்களை அடைந்திட நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முயலுகின்றீர்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக பஹாவுல்லாவின் உறுதிப்பாடுகள் அமைந்தும், நிச்சயமாக வெற்றியடைவீர்கள் எனும் உணர்வையும் பெறுவீர்கள்.”16

தெய்வீக உறுதிப்பாடுகள் வந்தடையும் செயற்பாட்டை எண்ணுகையில் இங்கு மறுபடியும், மறுவுறுதியும் அச்சுறுத்தலும் எனும் இணை அம்சங்கள் (காணப்படுகின்றன). நமது நிலையை பொருட்படுத்தாமலும், அல்லது எவ்வளவு வலுக்குறைந்தாற் போன்று ஒருவர் உணர்வு பெற்றிருந்தாலும், தேவைப்படுவதெல்லாம், அவசிய முயற்சியை மேற்கொள்ளவேண்டும்; முயற்சி மேற்கொள்ளும் செயலே உறுதிபாட்டிற்கு வழிவகுக்கும் சக்கரச் செயற்பாட்டிற்கு வழிகோளி, மேலும் அதிக முயற்சிகளுக்கு நமக்கு வலுவூட்டியும், அதன் பயனாக அதற்கும் மேலான  வலு வழங்கியும் வரும் எனும் மறுவுறுதி நமக்கு வழங்கப்படுகின்றது. இதில் அச்சுறுத்தும் அம்சமாக, நாம் இச்செயற்பாட்டில் முயற்சிகள் செய்வதை நிறுத்தியும், மனநிறைவும், தன்நிறைவுணர்வு பெற்றும், இறுமாப்பு அல்லது கர்வம் அடைத்தாலும் இந்த சூழ்நிலையின் காரணமாக நாம் முன்பு ஈர்த்துக்கொண்டிருந்த இறைவனின் உறுதிப்பாடுகளைக் குறைத்து விடுவோம். முன்பு குறிப்பிட்டது போல, “இவ்வுலகிற்கு… மாற்றம் என்பது அவசியமான ஒரு பண்பு…”14 நாம் மாற்றம் பெற உதவி காந்தவிசைகளாவதற்கு முயற்சி செய்வதெனும் செயல் இன்றியமையாததாகும்.

புனித வாசகங்களின் மூலம், நம்பிக்கையுடனும் அர்ப்பண உணர்வுடனும் முயல வேண்டும் என்பதே எனது முடிவாகும். இம்முயற்சியில் நாம் விடாது தொடர்ந்தோமானால், மாற்றங்கள் நிகழ்ந்து தன்மைமாற்றம் அதன் பயனாக விளையும். இவ்விஷயங்களைக் கருதுவதானது அப்துல் பஹாவின் இரு குறிப்புகளின்பால் எனக்கு அகக்காட்சிகள் வழங்குகின்றது. இக்குறிப்புகள் அசாதாரணமானவையாக எனக்கு அப்போது தோன்றின. இக்குறிப்புகள், வில்மட் கோவில் கட்டப்படுவதற்கான ஆரம்ப வேளையின் போது உச்சரிக்கப்பட்டவையாகும். இவற்றில் முதல் குறிப்பாக, “நீங்கள் ஆரம்பிக்க வேண்டியதுதான், யாவுமே சரியாக அமைந்துவிடும்,”17 நான் என் வாழ்க்கையிலும் சரி பிறரது வாழ்க்கையிலும் சரி பல முயற்சிகள் இந்த எளிமையான வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளேன். “நீங்கள் ஆரம்பிக்க வேண்டியதுதான், யாவுமே சரியாக அமைந்துவிடும்,” மற்ற எதுவுமே முக்கியமில்லை. உங்களுடைய தற்போதைய நிலை, உங்கள் சிரமங்கள், உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், உங்கள் துரதிர்ஷ்டங்கள் மற்றும் வாய்ப்பின்மை, எல்லாமே இந்த வாக்கின் மூலம் அழிந்துபடுகின்றன, அதாவது, “நீங்கள் ஆரம்பிக்க வேண்டியதுதான், யாவுமே சரியாக அமைந்துவிடும்,” எனும் வாக்கு.

குறிப்பிட்ட வகையில் நமது ஆர்வத்தைத் தூண்டும் மற்றொரு கூற்று, 1912ல் அக்கோவிலின் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியின் போது கூறப்பட்டது. அப்போது அங்கிருந்தோர் கூறியதாவது, அப்துல் பஹா கல்லை நட்டுவிட்டு, “கோவில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது,”18 என கூறினாராம். இது மிகவும் அதிசயமான ஒரு கூற்று.  நான் இது குறித்து ஆழமாக சிந்தித்தேன். “கோவில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது,”18 கோவிலைக் கட்டுவதற்கு முன்பாக அமெரிக்க பஹாய்கள் 40 வருட பெரும் முயற்சிகள், பிரமாண்ட தியாகங்கள், நம்பமுடியாத சிரமங்கள் ஆகியவற்றை எதிர்நோக்கினர். அது பல சவால்களை வெற்றி கண்டது. 1953ல் கட்டிடம் திறப்பு விழா காணும் வரையில், கட்டிடத்தை எழுப்பவும், கட்டிடத்தின் வெளிச் சித்திர வேளைப்பாடுகளையும் உள் வேளைப்பாடுகளை முடிக்கவும், புற நிலம் சார்ந்த வேளைகள் பூர்த்தி செய்யப்படவுமான சவால்கள் அவை. ஒரு சாதாரண கல்லை மட்டும் வைத்துவிட்டு அப்துல் பஹா ஏன் அவ்விதமாக கூறவேண்டும், “கோவில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது,” என? இதற்கான பதில் நான் இதுவரை தொட்டுப்பேசிய போதனைகளில் அடங்கியுள்ளது; முயற்சி செய்வதின் பெரும் முக்கியத்துவம், மாற்றம் ஏற்பட வேண்டும் எனும் இயல்பு, மற்றும் காந்தவிசை செல்வாக்கின் ஆற்றல் ஆகியவை. தங்களின் மாபெரும் முயற்சிகளின் மூலமாக தெய்வீக உறுதிகளை ஈர்த்திடும் ஒரு மாபெரும் காந்தக்கல்லாக தங்களை அமெரிக்க பஹாய்கள் மாற்றிக்கொண்டு இம்மாபெரும் திட்டத்தை பூர்த்தியடையச் செய்தனர். தூரநோக்கெனும் கண்களோடு, வருங்காலத்தைப் பார்த்து, அடிக்கல் நாட்டப்பட்டதும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதும் அந்த ஆரம்பத்திற்கான நடவடிக்கைகளே என்பதை உணர்ந்தார். இதனாலேயே அவர் “கோவில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது,” என கூறிட உந்தப்பட்டார்.