ஹாஜி முல்லா இஸ்மாயில்
ஹாஜி முல்லா இஸ்மாயில்-யி-கூஃமி, பஃராஹானைச் சேர்ந்தவராவார். அவரது இளமையிலேயே தாம் மிகவும் சிரத்தையுடன் அறிந்துகொள்ள முயன்ற உண்மையைத் தேடி அவர் கர்பிலாவுக்குச் சென்றார். நாஜாஃப் மற்றும் கர்பிலாவைச் சேர்ந்த முக்கிய உலாமாக்கள் பலரோடு அவர் தொடர்பு கொண்டிருந்தார். சையிட் காசிம் அவர்களின காலடியில் உட்கார்ந்து அவர் அறிவும் ஞானமும் பெற்றிருந்தார். பின்னாளில், சில வருடங்களுக்குப் பிறகு, அவர் ஷராஸில் இருந்த போது, பாப் அவர்களின் வெளிப்பாட்டை ஏற்றுக்கொள்ள இந்த அறிவும் ஞானமும் வழிவகுத்தன.
அவர் தமது நம்பிக்ககையின் திடத்தினாலும், தமது அழ்ந்த பக்தி விசுவாசத்தினாலும் தனிச்சிறப்படைந்திருந்தார். அனைவரும் கூராசானுக்கு விரைந்து செல்லுமாறு பாப் அவர்களின் ஆணையை அவர் செவிமடுத்ததுமே, மிகுந்த உற்சாகத்துடன் அவர் அதற்கு அடிபனிந்தார். பாதாஷ்ட்டை நோக்கி சென்ற அன்பர்களுடன் அவர் சேர்ந்துகொண்டார். அங்கு அவர் சிர்ருல்-வுஜுட் எனும் நாமமும் பெற்றார். அந்த அன்பர்களின் சகவாசத்தினால் சமயம் பற்றிய அவரது அறிவு மேலும் ஆழமடைந்தது. சமயத்தை மேலும் மேம்பாடடையச் செய்ய வேண்டும் எனும் அவரது அவாவும் அதே விகிதத்தில் அதிகரிக்கவும் செய்தது.
அவர் பற்றுறுதியின் மறு உருவமாகவே ஆனார். தமது சமயம் அவருக்கு அளித்த உற்சாக உணர்வைத் தகுந்த முறையில் வெளிப்படுத்திடுவதற்கு அவர் பெரிதும் ஆவலுற்றார். திருக்குர்’ஆனின் வாசகங்களின் அர்த்தங்களையும், இஸ்லாமிய மரபுகளையும் விளக்குவதில் அவர் வெளிப்படுத்திய நுண்ணறிவுக்கு இனையாக வெகு சிலரே இருந்தனர். பேச்சாற்றலுடன் அவற்றின் உண்மைகளை அவர் வெளிப்படுத்தியதானது அவரது சக சிஷ்யர்களின் போற்றுதலை பெற்றது.
பாப் அவர்களின் சிஷ்யர்களுக்கு தபார்சி கோட்டையே ஒன்றுகூடும் மையமாக விளங்கிய நாட்களின் போது, அவர் படுத்தபடுக்கையாக நோய்வாய்ப்பட்டு அல்லலுற்றிருந்தார். அவரால் அந்தக் கோட்டையின் பாதுகாப்பிற்கு உதவிடவோ அதற்குத் தமது பங்கை ஆற்றிடவோ முடியவில்லை. அவர் உடல் சௌகர்யம் அடைந்தவுடன், அந்த நினைவில் நிற்கும் முற்றுகை ஒரு முடிவிற்கு வந்திருப்பதைக் கண்டார். அதில் அவரது சக சிஷ்யர்கள் பெரும் அழிவுக்கு ஆளாகியிருந்தனர். சமயம் அடைந்திருந்த அந்த பெருத்த நஷ்டத்திற்கு அவர் தமது சுயத்தியாகமிக்க உழைப்பால் ஈடுகட்டும் எண்ணத்துடன் அவர் மேலும் அதிகமான உறுதியுடன் முன்னெழுந்தார். இந்த உறுதி, அவரை உயிர்த்தியாகமெனும் களத்திற்கு இட்டுச் சென்றும், அதன் மகுடத்தை அவருக்கு ஈட்டித் தரவும் செய்தது.
சிரசைத் துண்டிக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அதற்காக காத்திருந்த வேளை, தம்மை முந்திக்கொண்டு சிரம் துண்டிக்கப்பட்டும், ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இருக்கவும் செய்த அந்த இரு உயிர்த்தியாகிகளையும் அவர் கண்ணுற்றார். அவர்களின் இரத்தம் தோய்ந்த சிரங்களை நோக்கியவாறு, “நன்கு செய்தீர்கள் அன்புத் நண்பர்களே,” என முழங்கினார். “தெஹரானையே சுவர்க்கலோகமாக மாற்றிவிட்டீர்,” எனக் கூவினார். “நான் உங்களை முத்திக்கொள்ள முடியவில்லையே!” தமது காற்சட்டைப் பைக்குள் கையை விட்டு ஒரு காசை எடுத்து, தமது சிரச்சேதம் செய்யப்போகும் காவலாளிக்கு அதைக் கொடுத்து, அவர் தமது வாயை இனிப்பாக்கிக்கொள்வதற்கு ஏதாவது வாங்கி வருமாறு வேண்டினார்.
அதில் சிறிதை தாம் அருந்தி மற்றதை காவலாளியிடமே கொடுத்தார். கொடுத்துவிட்டு, “உனது செய்கையை நான் மன்னித்துவிட்டேன்; எம்மை அனுகி எமது சிரசைச் துண்டிக்கலாம், என்றார். முப்பது வருட காலமாக இந்தப் புண்ணியநாளுக்காக நான் ஏங்கியிருந்துள்ளேன். எங்கே எனது இந்த ஆசை நிறைவேறாமலேயே நான் எனது சவக்குழிக்குச் சென்றுவிடுவேனோ என பயந்திருந்தேன்,” என மேலும் கூறினார். விண்ணை நோக்கியவாறு, “இறைவா, எம்மை ஏற்றுக்கொள்வீர்,” எனக் கூவினார். நான் தகுதியற்றவனான போதிலும் “தியாகமெனும் பலிபீடத்தில் தங்கள் உயிர்களை காணிக்கையாக்கியுள்ள அந்த அந்த அமரர்களின் சுருள்சுவடியில் எழுதிட, முயலுகின்றேன்,” என்றார். அவர் தமது வழிபாட்டைக் கூறிக்கொண்டிருக்கையிலேயே, அவரது வேண்டுகோளின் பேரில் காவலாளி அவரது வழிபாட்டை பாதியிலேயே துண்டித்