இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ… எனும் வார்த்தைகளை நாம் அடிக்கடி கேட்டபோதிலும் அது மனதில் பதிவதில்லை. பின்வரும் படங்கள் இதை சற்று விளக்குவதாக இருக்கும்.
மாதம்: நவம்பர் 2009
‘பெர்செப்ஷன்’
‘பெர்செப்ஷன்’ (கருத்துணர்வுகள்?)
(நன்றி K. Gopal)
…உங்கள் சிந்தனைக்கு…
வாஷிங்கடன் டி.சி. மெட்ரோ நிலையத்தில் குளிர் நிறைந்த ஜனவரி 2007 காலைப்பொழுது ஒன்றில் பின்வரும் சம்பவம் நிகழ்ந்தது. வயலின் ஏந்திய மனிதர் ஒருவர் சுமார் 45 நிமிடங்களுக்கு இசைக் கலைஞர் பாக்’கின் 6 படைப்புக்களை வாசித்தார். அவ்வேளை சுமார் இரண்டாயிரம் பேர்கள் அந்த நிலையத்தை கடந்துகொண்டு இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் வேலைக்குச் செல்பவர்களாவர். சுமார் 3 நிமிடங்கள் கழித்து நடுத்தர வயதுடைய ஒருவர் அங்கு இசைக்கலைஞர் ஒருவர் இசைமழை பொழிவதைப் பார்த்தார். அவர் சற்று நிதானித்து சில வினாடிகள் நின்று பிறகு தன் வழியே விரைவாகச் சென்றார்.
4 நிமிடங்களுக்குப் பிறகு:
அந்த இசைக் கலைஞர் தமது முதல் டாலரைப் பெற்றார்: ஒரு பெண்மனி அவர் முன் இருந்த தொப்பியில் பணத்தை வீசிவிட்டு, ஆனால் நிற்காமல் தொடர்ந்து நடந்து சென்றார்…
6 நிமிடங்கள்:
ஓர் இளைஞர் சுவற்றில் சாய்ந்தவாறு இசையை செவிமடுத்தும், பிறகு தமது கைக்கடிகாரத்தைக் கவனித்துவிட்டு தொடரந்து நடக்கவாரம்பித்தார்.
10 நிமிடங்கள்:
மூன்று வயது சிறுவனொருவன் நின்றான் ஆனால் அவனுடைய தாயார் அவனை விறுவிறுவென்று இழுத்துச் சென்றாள். அச்சிறுவன் மீண்டும் இசைக் கலைஞரைத் திரும்பிப் பார்த்தான், ஆனால் அவனுடைய தாயார் அவனை மேலும் வற்புறுத்தி தொடர்ந்து நடந்தாள், சிறுவனும் அவ்வப்போது இசைக் கலைஞரைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றான். மேலும் பல சிறுவர்கள் அதே போன்று செய்தனர். ஆனால், பெற்றோர்கள் அவர்களை விரைவாகவே இழுத்துச் சென்றனர்.
45 நிமிடங்கள்:
இசைக் கலைஞர் தொடர்ந்து வாசித்துக்கொண்டே இருந்தார். ஆறே ஆறு பேர்கள் மட்டும் சற்று நின்று இசையை செவிமடுத்துச் சென்றனர். சுமார் 20 பேர்கள் பணத்தை போட்டுவிட்டு ஆனால், நிற்காமல் நடந்து சென்றனர். அம்மனிதருக்கு அன்று கிடைத்த வருமானம் 32 டாலர்.
1 மணி நேரம்:
அவர் தமது வாசிப்பை முடித்துக் கொண்டார். அங்கு நிசப்தம் நிலவியது. யாரும் எதையும் கவனிக்கவில்லை. யாரும் கை தட்டவில்லை அல்லது யாரும் அவரை அறிந்துகொள்ளவும் முயலவில்லை.
யாருக்கும் தெரியாது, ஆனால் நமது இசைக்கலைஞரின் பெயர் ஜோஷுவா பெல் ஆகும். அவர் உலகளாவிய நிலையில் ஒரு மாபெரும் இசைக்கலைஞராவார். அவர் அந்த மெட்ரோ நிலையத்தில் மிகவும் சிக்கலான இசைப் படைப்பு ஒன்றை 3.5 மில்லியன் டாலர் விலையுடைய வயலினில் வாசித்தார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஜோஷுவாவின் இசை நிகழ்ச்சி ஒன்றின் 100டாலர் மதிப்புடைய சீட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டு முடிந்து போயின.
இது ஒரு உண்மைக் கதை. ஜோஷுவாவின் அந்த நிகழ்ச்சி வாஷிங்டன் போஸ்ட்’டினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மக்களின் ‘பெர்செப்ஷன்’, சுவை மற்றும் முக்கியத்துவங்கள் குறித்த ஒரு ஆய்வின் பகுதியாக அது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு எழுந்த கேள்வி: ஒரு பொது இட சூழ்நிலையில் மக்கள் தங்கள் அலுவல்களுக்காக விரைந்துகொண்டிருக்கும் நிலையில் ‘அழகு’ கண்களுக்கு தெரிகிறதா? நிதானித்து அதை நாம் ரசிக்கின்றோமா? எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் நாம் கலையாற்றலை கண்டுகொள்கிறோமா?
பின்வருவது இதற்கான ஒரு விளக்கமாக இருக்கக்கூடும்: உலக பிரசித்தி பெற்ற ஓர் இசைக் கலைஞர், பெருமதிப்புடைய இசைக்கருவி ஒன்றில் இதுவரை எழுதப்பட்ட இசைகளுள் தலையாய இசை ஒன்றை வாசித்ததை ரசித்திடக்கூட நமக்கு நேரம் இல்லையெனில்… நாம் தினந்தோறும் வேறு எத்தனை எத்தனை விஷயங்களைத்தான் இவ்வாறு தவறவிடுகிறோமோ?
லியோ டால்ஸ்டாய்
பஹாய் சமயத்தை ஏற்றுக் கொண்டோரில் பல பிரமுகர்களும் அடங்குவர். ருமேனிய நாட்டின் (விதவை) அரசியார், சமோவா தீவின் மன்னர், பாரசீக அரச குடும்பத்தினர் சிலர் என கூறலாம். அவர்களுள் தத்துஞானியரான லியோ டால்ஸ்டாயும் அடங்குவார். பஹாய் சமயத்துடனான அவரது தொடர்புகள் குறித்து சில விவரங்கள் கீழே வழங்கப்படுகின்றன:

லியோ டால்ஸ்டாய் (1828 – 1910) ஒரு மாபெரும் ரஷ்ய தத்துவஞானியும் எழுத்தாளரும் ஆவார். “War and Peace” எனும் மாபெரும் நாவல் இவருடைய படைப்பாகும். இந்த நாவல் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.
லியோ டால்ஸ்டாய் முதன் முதலில் 1884ல் பஹாய் சமயத்தைப் பற்றி கேள்விப்பட்டார். அவர் 22 அக்டோபர் 1903ல்:
“நான் நீண்ட நாட்களாகவே பாப்’யிக்கள் குறித்து அறிந்து வைத்து அவர்களுடைய போதனைகளின்பால் எப்போதுமே ஆர்வமுள்ளவனாக இருந்துவந்துள்ளேன். இந்த போதனைகள்… பிரிவினைகள் உண்டாக்கும் குழப்புகின்ற கசடுகளை நீக்கி, மனிதகுலத்தையே ஒரே பொது சமயத்தின் கீழ் ஒன்றிணைக்கும் இலட்சியமுடைய இப்போதனைகள், என்னைப் பொறுத்தவரை… மிகவும் சிறந்த எதிர்காலமுடையவை. ஆகவே, பழைய மூடநம்பிக்கைகளைக் களைந்தும் பழைய மூடநம்பிக்கைகளிலிருந்த புதிய பிரிவுகளை உருவாக்கக்கூடிய புதியனவற்றை ஸ்தாபிக்காமலும் இருக்கும் இந்த பாப்’யிக்களின் போதனைகள்… அவை சகோதரத்துவம், சமத்துவம், மற்றும் அன்பு குறித்த முக்கிய அடிப்படை கருத்துக்களை அவர்கள் சார்ந்திருப்பதால், அவர்கள் சிறந்த எதிர்காலத்தை பெற்றிருக்கின்றனர்… ஆகவே பாப்’யி சமயம் மக்களுக்கு சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தையும், கடவுள் சேவையில் தங்கள் உலகவாழ்வையே அர்ப்பனிக்கவும் போதிப்பதால் நான் பாப்’யி சமயத்தின்பால் பெரிதும் அனுதாபம் கொண்டவனாவேன்.” மறுபடியும், 1908ல், டால்ஸ்டாய் பின்வருமாறு எழுதினார்: “இஸ்லாம் சமய பின்னனியிலிருந்து தோன்றியுள்ள பாப்’யிக்களின் போதனைகள் பஹாவுல்லாவின் போதனைகளால் சிறிது சிறிதாக மேம்பாடு கண்டு இப்போது மிகச் சிறந்ததும் மிகத் தூய்மையானதுமான சமய போதனைகளை நமக்கு வழங்குகிறது.”
மூலம்: The Promise of All Ages, Christophil (aka)
George Townshend அவர்கள் எழுதிய நூல், ப. 26
ருஷ்ய மொழியின் தற்காலிக மொழிபெயர்ப்பு:
“ருஷ்யாவில் பஹாய் சமயம்” by Nancy Ackerman & Graham Hassall, (Appendix II in the Russian edition of Hatcher & Martin அவர்களின் பஹயா சமயம் பற்றிய அறிமுக நூல்) ப. 259-262ல் உள்ள வரிகள் :
“ருஷ்யாவின் மாபெரும் சிந்தனையாளரான லியோ டால்ஸ்டாயின் கவனத்தையும் பாப்’யி சமயம் கவர்ந்தது, அவர் ஆரம்பத்தில் O.S. லெபதேவிடமிருந்து பாப்’யிக்கள் குறித்து தெரிந்துகொண்டார். அதிலிருந்து அவர் விண்ணேற்றம் அடைந்த வரை, சுமார் 16 ஆண்டுகளுக்கு அவர் பாப்’யி மற்றும் பஹாய் சமயங்கள் குறித்து அவர் தமது தபால்களிலும் நாட்குறிப்பிலும் பல முறை எழுதியுள்ளார். அதே சமயம் அவர் கிரினெவ்ஸ்காயாவின் நாடகம் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளார். (நாடக எழுத்தாளரான இசாபெல்லா கிரினெவ்ஸ்காயா பல நாடகங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் மற்றும் அவர் பாப் அவர்கள் பற்றியும் ஒரு முழு நாடகம் எழுதியுள்ளார். இந்த நாடகம் St. பீட்டர்ஸ்பர்க்கில் இரு வெற்றிகரமான அரங்கேற்றம் கண்டது. கிரினெவ்ஸ்காயா பஹாய் சமயத்தை ஏற்றுக்கொண்டு, பல முறை அப்து’ல்-பஹாவையும் ஷோகி எஃபெண்டி எஃபெண்டியையும் சந்தித்துள்ளார்.) டால்ஸ்டாய் அவருக்கு ஒரு கடிதம் எழுதி அவர் செய்து வரும் காரியங்கள் குறித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து அதில் மேலும்… பாப்’யி சமயத்தின் போதனைகள்… சகோதரத்துவம், சமத்துவம் மற்றும் அன்பு குறித்த அஸ்திவார மற்றும் அடித்தல கருத்துக்களை நிலைநிறுத்துவதால் அவற்றுக்கு மகத்தான வருங்காலம் இருப்பதாக தெரிவித்துள்ளார். (1)
டால்ஸ்டாயின் இக்கடிதம் பிரசுரிக்கப்பட்டு ருஷ்யாவில் பஹாய் சமயத்தின்பால் பெரும் ஆர்வம் குறிப்பிடத்தக்க அளவு பெருகியது.
உண்மையான சமய நம்பிக்கைகளின் ஆதரவாளராக டால்ஸ்டாய் திகழ்ந்தார், மற்றும் அவரது ஆன்மீக வேட்கை மற்றும் ஓர் அனைத்துலக சமயத்திற்கான உடனடி தேவை, உண்மையை தன்னிச்சையாக தேடுவது, சமயம் மற்றும் பகுத்தறிவுக்கிடையிலான இணக்கம், சமய சடங்கு சம்பிரதாயங்களை எளிமைப்படுத்துதல், அனைத்துலக கல்வி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்கள் பஹாய் சமயத்தின் கோட்பாடுகளோடு ஒத்திருந்தன. பஹாய் சமயத்துடனான அவரது உறவு சற்று சிக்கலானதாகவும், சில நேரங்களில் சமநிலையற்றும் இருந்தது உண்மையே: சமயத்தின்பால் அவர் வலியுறுத்திய பெரும் மதிப்பும் மற்ற நேரங்களில் அதன்பால் அவர் கொண்டிருந்த சிரத்தையின்மையும் குறைகூரல்களும் மாறி மாறி வந்தன. நம்பிக்கையான மூலாதாரங்கள் கிட்டாததால், பஹாய் சமயம் குறித்து டால்ஸ்டாயிக்கு தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை. இத்தகைய குறைபாடு நிறைந்த தகவல்களோடு அவர் தமது சொந்த தத்துவார்த்த நம்பிக்கைகளில் கொண்டிருந்த உள்ளார்ந்த முரண்பாடுகளும், அதன் நம்பிக்கைகள் அவரது கருத்துக்களோடும் இலட்சியங்களோடும் ஒத்துப்போகவில்லை என்பதால் சில வேளைகளில் அவர் பஹாய் சமயத்தை உதறித்தள்ளவும் உந்தப்பட்டார். ஆனால், அவர் பஹாய்களுடனான மற்றும் அதனை ஆய்வு செய்வோருடனான தமது தொடர்பிலும் கடவுளின் இயல்பு, தேசபக்தி, கடவுள் அவதாரங்கள், சமயங்களின் ஒற்றுமை, மற்றும் மனம் மற்றும் ஆன்மவுக்கிடையிலான தொடர்பு போன்ற தம்மை வாட்டி வந்த கேள்விகள் குறித்து ஆராயத் தவறியதில்லை: (2)
டால்ஸ்டாயின் கடிதங்களிலிருந்து சமயம் சம்பந்தமான கேள்விகளில் ஆர்வமுடையோரிடமிருந்து அவர் பல பஹாய் நூல்களைப் பெற்றிருந்தார் என்பது தெரிய வருகின்றது. அவருடைய நாட்குறிப்பிலிருந்து கிடைக்கும் பாப்’யி மற்றும் பஹாய் சமயம் பற்றிய மேலோட்டமான குறிப்புகள் தெளிவாக இல்லை, ஆனால் அவற்றிலிருந்து பஹாய் சமயத்தின் மீது அவர் கொண்டிருந்த ஆர்வம் குறையவில்லை என்பது தெளிவு. டால்ஸ்டாய் பஹாய் சமயத்தின் மீது கொண்டிருந்த ஆர்வம் அப்து’ல்-பஹாவுக்கு தெரியும் மற்றும் ருஷ்ய பிரதேசங்களில் அடங்கியிருந்த பஹாய்கள் (பாக்குவைச் சார்ந்த அலி-அக்பர் நாக்ஜவானி உட்பட) டால்ஸ்டாயோடு தொடர்பு கொண்டு பஹாய் சமயம் குறித்த உறுதியான தகவல்களை அவருக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். நாக்ஜவானிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் பாப்’யி மற்றும் பஹாய் சமயங்கள் பற்றி தாம் ஒரு நூல் வெளியிட விரும்புவதாக டால்ஸ்டாய் தெரிவித்திருந்தார். 1901ல் டால்ஸ்டாயிக்கு “அமைதி” எனும் தலைப்பிலான ஒரு கவிதையை அனுப்பியிருந்த பாரசீக தூதருக்கு எழுதிய ஒரு கடிதத்தில்: உங்கள் தாய்நாட்டில் உள்ள பாப்’யிக்களைப் போன்று உலகம் முழுவதும் மக்கள் உள்ளனர். அவர்கள் உண்மையான சமயத்தை பின்பற்றியும், எங்கெங்கும் அவர்கள் தொடர்ந்தாற்போன்றகொடுமைகளை அனுபவித்தாலும், அவர்களின் கருத்துக்கள் அதிகரிக்கும் துரிதத்துடன் பரவி இறுதியில் அவை காட்டுமிராண்டித்தனத்தை வெற்றிகொள்ளவே செய்யும்…” (3)
1902 செப்டம்பரில், அப்து’ல்-பஹாவிடமிருந்து ஒரு தனிப்பட்ட செய்தியை அஸிஸுல்லா ஜஸாப் எனும் பெயர் கொண்ட இரான் நாட்டு பஹாய், டால்ஸ்டாயின் இல்லமான யாஸ்னாயா போலியானாவுக்கு கொண்டு வந்தார். அக்கடிதத்தில் “சமயங்கள் எனும் உலகில் உங்கள் பெயர் நல்லனவற்றை ஞாபகப்படுத்திட செயல்படுக. பல தத்துவ ஞானிகள் தோன்றியுள்ளனர், மற்றும் அவர்கள் தங்கள் கொடிகளை, ஐந்து மீட்டர் அளவுக்கு என கொள்வோம், உயர்த்தியுள்ளனர். நீரோ 10 மீட்டர் அளவுக்கு உமது கொடியை உயர்த்தியுள்ளீர்; ஒறுமைத்தன்மை எனும் சமுத்திரத்தில் உம்மை ஆழ்த்திக் கொள்வீராக அதனால் என்றும் நிலையான கடவுளின் துணை உமக்குக் கிட்டும்,” எனும் வரிகள் அதில் எழுதப்பட்டிருந்தன. (4)
அந்த பஹாய் அன்பர், பஹாவுல்லா அவரது சமயம் மற்றும் டால்ஸ்டாயிக்கும் இடையில் என்னதான் தொடர்பு எனும் கேள்விக்கு டால்ஸ்டாய் பின்வருமாறு பதிலளித்தார்: “அதை (பஹாவுல்லாவின் செய்தியை) நான் எவ்வாறுதான் மறுக்கக்கூடும்?… இச்சமயம் நிச்சயமாகவே உலகையே தன்பால் வெல்லும்.” பஹாய் சமயத்தின் கோட்பாடுகள் இக்காலத்தின் உணர்வுகளோடு ஒத்திருப்பதால், அவை காலப்போக்கில், மானிடத்தின் நலனை உறுதி செய்யும் வகையில் உலகில் உறுதியாக நிலைநிறுத்தப்படும். (5)
தமது வாழ்வின் இறுதி நாட்களில், பஹாவுல்லாவின் படைப்புக்களில் பாப் அவர்களின் போதனைகள் அடைந்திருக்கும் மேம்பாடுகள், சமயங்களில் உள்ள மிக உயரிய மற்றும் தெளிவான விஷயங்களைப் பிரதிநிதிக்கின்றன எனும் முடிவுக்கு வந்தார். 1910ல் தமது மறைவுக்கு சிறிது காலத்திற்கு முன், பஹாய் சமயம் குறித்து டால்ஸ்டாய் பின்வருமாறு எழுதியுள்ளார்: “அது மிகவும் ஆழம்மிக்கது. இத்தகைய ஆழம்மிக்க சமயம் வேறு எதையும் நான் அறியேன்.” (6)
1. Moojan Momen, The Babi and Bahá’í Religions, ப. 52
2. Luigi Stendardo, Leo Tolstoy and the Bahá’í Faith, Ch. 3-4
3. L. N. Tolstoy, Polnoye sobraniye sochinenii [Complete Works] v. 80, p. 102
4. Stendardo, ப. 2
5. Momen, ப. 30
6. Tolstoy, Complete Works, v. 78, ப. 306
7. D.P. Makovitskii, U Tolstogo: 1904-1910 Yasnopolyanskiye zapiski (With Tolstoy: 1904-1910, குறிப்புகள் from Yasnaya Polyana] Moscow, Nauka 1979, v. 4, ப. 255
பஹாய் செய்தி சேவை 736
உலகின் முக்கிய சமயங்கள் சுற்றுச் சூழல் குறித்து செயல்திட்டம் ஒன்றை வழங்கியுள்ளன
4 நவம்பர் 2009
வின்சர், யுனைட்டட் கிங்டம் – பஹாய் சமயம் உட்பட உலகின் முக்கிய சமயங்களைப் பிரதிநிதிக்கும் முதன்மையாளர்கள், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நீண்டகால முயற்சி ஒன்றில் தங்கள் சமூகங்களையும் உட்படுத்தும் செயல்திட்ட தொடர்வரிசை ஒன்றை அதிகாரபூர்வமாக அமுல்படுத்திட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வின்சர் அரண்மனையில் நேற்று ஒன்றுகூடினர். (மேலும் விவரங்களுக்கு…)
மருத்துவருக்கான நிருபம்
பஹாய் சமயத்தின் ஸ்தாபகரும் இக்காலத்திற்கான கடவுளின் அவதாரமுமான பஹாவுல்லாவின் எழுத்துக்களை சுமார் 100 நூல்களாக தொகுக்கலாம். பல நூல்களையும், ஆயிரக்கணக்கில் நிருபங்களையும் அவரது 40 வருட சமயப் பணிக்காலத்தில் அவர் படைத்துள்ளார். பெரும்பாலான அவரது எழுத்துக்கள் இதுவரை மொழிபெயர்க்கப்படாமலேயே இருக்கின்றன. அவற்றுள் ஒன்று “மருத்துவருக்கான நிருபம்” என்பதாகும். உடல் நலம் குறித்து ஓர் அன்பரின் வினாக்களுக்கான பதிலாக இந்த நிருபம் வரையப்பட்டது. இந்த நிருபம் இதுவரை அதிகாரபூர்வமாக மொழிபெயர்க்கப்படவில்லை ஆனால், அதன் சில பகுதிகள் தற்காலிகமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றை கீழே காணலாம்:
பௌதீக குணப்பாடு
பஹாவுல்லாவினால் வெளியிடப்பட்ட ஒரு நிருபத்திலிருந்து, உடல்நலத்திற்கான சில கோட்பாடுகள்.
கடவுளே! அதிவுயர் அறிவாளரே! தொன்மையான நா மருத்துவர்கள் இல்லாத நிலையில் விவேகமிக்கவர்களை மனநிறைவுறச் செய்யக்கூடியதை உரைக்கின்றது.
மக்களே, பசித்தால் ஒழிய உணவருந்தாதீர்கள். உறங்கச் சென்ற பிறகு நீர் அருந்தாதீர்கள்.
வெற்று வயிறாக இருக்கும்போது உடற்பயிற்சி நன்மைபயக்கும்; அது தசைநார்களை வலுப்படுத்துகிறது. வயிறு நிறைந்திருக்கும்போது அது தீங்குமிக்கதாகும்.
தேவைப்படும் வேளையில், மருத்துவ உதவியை புறக்கணிக்காதீர்கள், ஆனால் உடல் நலமடந்தவுடன் போது அதை கைவிட்டுவிடுங்கள்
ஜீரண(செயற்பாடு) நிறைவுற்றால் தவிர ஆகாரம் அருந்தாதீர்கள். நன்கு அரைபடும்வரை உணவை விழுங்காதீர்கள்.
நோயை முதன்மையாக உணவுமுறையைக் கொண்டே குணப்படுத்துங்கள், மற்றும் மருந்துவகைகளை நாடாதீர்கள். உடல்நலத்திற்கான நிவாரணம் ஒரே ஒரு மூலிகையில் நீங்கள் காணமுடிந்தால் பல்கூட்டான மருந்துவகைகளை பயன்படுத்தாதீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும்போது மருந்துவகைகளை விட்டுவிடுங்கள், மற்றும் தேவைப்படும்போது மட்டுமே அதை பயன்படுத்துங்கள்.
வெவ்வேறு நேரெதிரான உணவு வகைகள் இரண்டு மேசைமீது வைக்கப்பட்டால் அவற்றை கலக்கவேண்டாம். அவற்றில் ஒன்றுடன் மட்டும் மனநிறைவுகொள்ளுங்கள். கெட்டிவகை உணவை உட்கொள்ளும் முன் திரவவகை உணவை முதலில் அருந்துங்கள். நீங்கள் ஏற்கணவே உண்ட உணவு ஜீரணமாவதற்குள் மறுபடியும் உணவு உண்பது ஆபத்தானதாகும்…
நீங்கள் உணவு உண்டபின் அந்த உணவு படிவுற சற்று நடக்கவும்
(பற்களால்)அரைபட கடினமானவை விவேகமிக்கவர்களால் தடைசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறாகவே அதிவுயரிய எழுதுகோல் உங்களுக்கு ஆணையிடுகிறது.
காலையில் எளிய உணவு உடலுக்கு ஒளி போன்றது.
தீங்குவிளைவிக்கும் பழக்கவழக்கங்களை தவிர்த்துவிடுங்கள்: அவை உலகில் துயரத்தை விளைவிக்கின்றன.
நோய்களுக்கான காரணங்களை கண்டறியுங்கள். இவ்வாக்கே இவ்வாய்மொழிதலின் முடிவாகும்.
(Star of the West, தொ. 13, எண். 9, டிசம்பர் 1922, ப. 252)ஆண்டவரிலேயே நமது நம்பிக்கை இருக்க வேண்டும். குணப்படுத்துபவர், அறிவாளர், உதவுபவர் அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை… மண்ணுலகு அல்லது விண்ணுலகில் உள்ள எதுவுமே கடவுளின் கைப்பிடிக்கு அப்பாற்பட்டதல்ல.
மருத்துவரே! நோயுற்றோரை குணப்படுத்துவதில், முதலில் தீர்ப்பளிக்கும் நாளுக்கு உடையவரான, கடவுளின் நாமத்தை உச்சரியுங்கள், பிறகு கடவுளால் தமது படைப்பினங்களின் குணப்பாட்டிற்கென விதிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்துங்கள். என் வாழ்வின் மீது ஆணையாக! எமது அன்பெனும் மதுவை அருந்திய மருத்துவர் (எவரோ), அவரது வருகை குணமளிக்கக்கூடியது, அவரது மூச்சு கருணையும் நம்பிக்கையும் ஆகும். உடல்கட்டமைப்பின் நலனுக்கு அவரையே பற்றிக்கொள்ளுங்கள். தமது சிகிச்சைமுறையில் அவர் கடவுளால் உறுதிபடுத்தப்படுகிறார்.
(Star of the West, தொ. 21, எண். 5, ஆகஸ்ட் 1930, ப. 160)
உலகம் அழியப்போகின்றது?
சமீப காலமாக உலகம் அழியப்போகிறது எனும் பேச்சு ஆங்காங்கு எழுந்துவருகின்றது. அது குறித்த செய்திப்படங்கள் கூட தொலைக்காட்சியில் இடம்பெற்றுள்ளன மற்றும் விரைவில் உலகம் 2012ல் அழியப்போகிறது என்பது பற்றி ஒரு முழு நீள திரைப்படமும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த உலக அழிவு குறித்த பேச்சு “2012” படத்தை நிச்சயமாக ஒரு வெற்றிப்படமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உலகம் அழியப்போகிறது இது முதன்முறையல்ல. பல முறை இது போன்ற செய்திகள் உலகை வலம் வந்துள்ளன. உதாரணமாக 1963ல் இதே போன்று உலகம் அழியப்போகிறது எனும் செய்தி கிராமப்புரங்களில் கூட பேசப்பட்டது. ஆனால் அழிந்தது என்னவோ உலகம் அழியப்போகிறது எனும் செய்திதான். இப்போது அது மறுபடியும் தலைதூக்கியுள்ளது.
“நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?” எனும் பாடல்தான் நினைவிற்கு வருகிறது. இத்தனை கோடானுகோடி வருடங்களாக உலகையும் அதனுள் வாழ்வன அனைத்தையும் இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ள படைப்பாளரான கடவுள் அதை ஒரு நொடியில் அழிப்பதற்காகவா அத்தனை முயற்சி செய்துள்ளார்?
2012ல் உலகம் அழியப்போகிறது எனும் கருத்து அமெரிக்காவின் மாயா பூர்வகுடியினரின் வழக்கிலிருந்து பிறந்ததாகும். அவர்களுடைய பஞ்சாங்கம் 2012ல் ஒரு முடிவுக்கு வருகின்றதால் உலகமும் அதனோடு அழிந்துவிடும் எனும் கருத்தும் தோன்றியுள்ளது. இதிலும் கருத்தவேறுபாடு உண்டு. சிலர் இந்த மாயா பஞ்சாங்கள் உண்மையில் 2012ல் முடியவில்லை என கூறுகின்றனர். அப்பஞ்சாங்கம் மிகவும் சிக்கலானது. அதை தவறாக புரிந்துகொண்டவர்கள் உலகம் முடியப்போகின்றது என கூறுகின்றனர்.
இது போக, உலக அழிவின் மீது மக்களுக்கு ஏன் இத்தனை ஆர்வம்? கிருஸ்துவர்களின் சில குழுவினர், விசுவாசிகளை விசுவாசம் அற்றவர்களிடமிருந்து பிரிக்கும் செயலே இது என்கிறார்கள். விசுவாசிகள் அனைவரும் இவ்வுலகிலிருந்து சுவர்கத்திற்கு நேரே போய்விடுவார்களாம். இப்படி இன்னும் பல நம்பிக்கைகள். அப்படியே உலகம் அழிவதாக இருந்தாலும், அது குறித்து கவலைப்படுபவர்கள் என யாரையும் காணமுடியவில்லை. வாழ்க்கை எப்போதும் போலவே நடந்துகொண்டிருக்கின்றது, வயதான காலத்தில் ஓய்வ்வூதியத்திற்காக பாடுபடுவோர் உலக அழிவைப் பற்றி சிறிதும் கவலையுறாமல் தமது நோக்கிலேயே கவனமாக இருக்கின்றார்கள். உடலை வருத்தி வேலை செய்வோர் அதில் முழு கவனத்துடனேயே இருக்கின்றனர். உலகில் மாமூலாக அட்டூழியங்கள் எப்போதும் போலவே நிகழ்கின்றன.
அப்படியானால் உலக அழிவு குறித்த கவனம் ஏன்? மக்களின் வாழ்க்கையில் உற்சாகத்திற்கான விஷயங்கள் குறைந்துவிட்டதா? “எக்சைட்மெண்டுக்காக” இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துகின்றோமா? இது மனித இயல்பு போலும்.
எது எவ்வாறு இருந்த போதிலும், பஹாய் திருவாக்குகளில் இந்த “உலக அழிவு” குறித்து என்ன கூறப்பட்டுள்ளது என்பதைக் காணும்போது, உலக அழிவு விரும்பிகளுக்கு சற்று ஏமாற்றமாகவே இருக்கும். பஹாவுல்லா, தமது சமயம் ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பித்து வைத்துள்ளது எனவும், அந்த சகாப்தம் ஏறக்குறைய 5,00,000 வருடங்களுக்கு நீடிக்கும் எனவும் கூறுகின்றார். இக்கால அவதாரமும் தீர்க்கதரிசியுமான அவர் பல விஷயங்கள் குறித்து தீர்க்கதரிசனமாக கூறியுள்ளார். அவை யாவும் நடந்தேறியுள்ளன. அதே போன்று உலகம் குறைந்தது மேலும் 5.00,000 வருடங்களுக்கு நீடிக்க போகின்றது என அவர் கூறியதிலும் சந்தேகம் ஏதும் ஏற்பட வழியில்லை.
ஆனால், “உலக அழிவு” என்பது ஒரு வகையில் உண்மையே. வியாக்கியானத்தில்தான் தவறே ஒழிய உட்கருத்தில் தவறு கிடையாது. இந்த “உலக அழிவு” என்பது எல்லா சமயங்களிலும் ஏதோ ஒரு வகையில் குறிக்கப்பட்டுள்ளது. இந்து சமயத்தில் பிரலயம் எனவும், கிருஸ்துவ சமயத்தில் “உலக முடிவு” எனவும், இஸ்லாத்தில் “கியாமத்” எனவும் கூறப்பட்டுள்ளது. அர்த்தங்கள் சற்று மாறுபட்டிருந்தாலும் இவை யாவும் உலகில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படும் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
பஹாவுல்லாவின் எழுத்துக்களில் பின்வரும் திருவாக்குக் குறிப்புகளை காணலாம்:
மனிதர்களே, யாம் உங்களுக்கென ஒரு குறிப்பிட்ட காலத்தை நிர்ணயித்துள்ளோம். நியமிக்கப்பட்ட நேரத்தில், நீங்கள், இறைவன்பால் திரும்பத் தவறுவீராயின், மெய்யாகவே அவர், உங்கள் மீது ஆவேசமாகக் கை வைத்து, எல்லாத் திசைகளிலிருந்தும் கடுந் துன்பங்கள் உங்களைத் தாக்குமாறு செய்திடுவார். உண்மையாகவே, அப்பொழுது உங்களின் பிரபுவானவர் உங்களுக்கு அளிக்கவிருக்கும் தண்டனைதான் எத்துணை கொடூரமானது!
உலக மக்களே! மெய்யாகவே அறிவீராக; எதிர் பாராத பேரிடர் ஒன்று உங்களைப் பின் தொடர்ந்து வருகின்றது. கடுந் தண்டனை உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது. நீங்கள் ஆற்றிய செயல்கள் எனது பார்வையில் இருந்து மறைக்கப்பட்டுவிட்டன என்று எண்ணிவிடாதீர். எனது அழகின் மீது ஆணை! உங்களின் செயல்கள் அனைத்தையும், எனது எழுதுகோல், மரகதத் தகடுகளின்மீது தெளிவான எழுத்துக்களாள் செதுக்கி வைத்துள்ளது.
உலகம் பிரசவவேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றது; நாளுக்கு நாள் அதன் கலவரம் அதிகரித்து வருகின்றது. அதன் முகமோ கீழ்ப்படியாமை, அவநம்பிக்கை ஆகியவற்றின்பால் திருப்பப்பட்டுள்ளது. அதன் அவலநிலை அத்துணை மோசமடையவிருப்பதனால் அதனை இப்பொழுது பகிரங்கப்படுத்துவது பொருத்தமுமன்று, சரியுமன்று. அதன் முறைகேடான நடத்தை நெடுங்காலத்திற்குத் தொடரும். அக்குறிப்பிட்ட நேரம் வந்ததும், மனித இனத்தின் அங்கங்களையே நடுக்கமுறச் செய்யக்கூடியதொன்று திடீரெனத் தோன்றும்; அப்பபொழுதுதான், தெய்வீகக்கொடி அவிழ்த்துப் பறக்கவிடப்படும்; விண்ணுலக இராப்பாடி (பறவை) அதன் இன்னிசையை ஒலித்திடும்.
இங்கு பஹாவுல்லா தற்போது உலகில் நிகழும் ஒழுக்கமின்மை குறித்து தமது காலத்திலேயே முன்கூறியுள்ளார். ஏதோ ஒரு நிகழ்ச்சி, உலகையே உலுக்கும் ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு உலகில் மாற்றங்கள் உண்டாகும் மற்றும் அமைதி நிலவும் என்பது புரிகிறது.
பஹாவுல்லாவின் மறைமொழிகளில் பின்வரும் வாசகத்தைக் காணலாம்:
மனிதனின் புத்திரனே! எனது பேரிடரே எனது அருள்பாலிப்பு; வெளித்தோற்றத்திற்கு அது தீயும் வஞ்சந் தீர்த்தலும் ஆகும்; ஆனால் உள்ளளூர அது ஒளியும் கருணையும் ஆகும்.
இதிலிருந்து உலக சீர்திருத்தம் அடைய பேரிடர் ஒன்று அவசியம் என பொருள்படுகின்றது. ஆனால் அதன் முடிவு ஒளி நிறைந்ததாகும்.
கிருஸ்தவ விவிலியத்தில் “உலக அழிவு” எனும் வார்த்தைகள் அக்காலத்து ரோமானிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டதாகும். சிலர் ரோமானிய மொழியில் இதற்கு மற்றொரு அர்த்தம் “காலங்களின் முடிவு” எனவும் எடுத்துக்கூறியுள்ளனர். அதாவது ஏதோ ஒன்று அழிந்து அதனிடத்தில் மற்றொன்று புதிதாக பிறக்கும் என்பதாகும். உலகம் அழியாது மாறாக, பெரும் மாற்றம் ஏதோ மனிதர்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றது. அழியப்போவது உலகம் ஒட்டுமொத்தமும் அல்ல; அழியப்போவது மனிதர்கள் குறித்த ஏதோ ஓர் அம்சம்.
கிருஸ்தவ விவிலியத்தில் பதிக்கப்பட்டுள்ள பின்வரும் பிரார்த்தனையை காண்போம்:
பரமண்டலங்களில் இருக்கும் பிதாவே
உமது நாமம் பரிசுத்தபடுவதாக
உமது இராஜ்யம் வருவதாக
உமது சித்தம் பரமண்டலங்களில் செய்யப்படுவதுப்போல
பூமண்டலத்திலும் செய்யபடுவதாக
அன்றேன்று எங்களுக்குறிய ஆகாரத்தை தாரும்
எங்களுக்கு விரோதமானவர்கள் குற்றங்கள் செய்வதை
நீங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்
எங்களை சோதனைக்குள் பிரவேசிக்கப்படாமல்
இரட்சித்துக்கொள்ளும்
உமது இராஜ்ஜியமும் வல்லமையும் மகிமையும்
என்றென்றைக்கும் உடையவைகளே
இந்த பிரார்த்தனையில் சுவர்க்கத்தில் இருப்பது போல இந்த உலகமும் ஆகிட பிரார்த்தனை செய்யப்படுகின்றது. உலகின் பௌதீக அழிவு குறித்து இதில் அறிகுறிகள் இல்லை ஆன்மீக ரீதியில்தான் மாற்றங்கள் பிரார்த்திக்கப்படுகின்றன. அதே போன்று இயேசு நாதரிடம் அவரது மறு வருகை குறித்து கேட்கப்பட்டபோது அவர் பல குறிப்புகளை வழங்கியுள்ளார். இரவில் திருடனைப்போல் வந்துசெல்வேன் என்றெல்லாம் கூறியுள்ளாரே ஒழிய உலக அழிவு பற்றி அவர் எதையுமே கூறவில்லை. சுவர்க்கத்தை போன்று இந்த உலகமும் மாறும் எனும் உற்சாகம் வழங்கும் குறிப்புகளே உள்ளன. இதைப் போன்று மேலும் பல எடுத்துக்காட்டுகளை வழங்கலாம்.
பஹாய் சமயத்தின் பாதுகாப்பாளராக விளங்கிய ஷோகி எஃபெண்டி அவர்கள் உலக நிலை பற்றி பின்வருமாறு கூறியுள்ளார்:
“தற்போது அதன் நிலையைக் காண்கையில், உண்மையில் அதன் அன்மை வருங்காலம் பெரிதும் இருள் சூழ்ந்ததாக, பெருந்துயரமளிக்கும் இருள் சூள்ந்ததாகவே உள்ளது. ஆனால், இதன் பிறகு காணப்படும் வருங்காலமோ பிரகாசம் மிக்கதாக, தேஜஸ் நிறைந்த பிரகாசம் மிக்கதாக உள்ளது.”
என கூறியுள்ளார். உலகம் ஏதோ ஒரு கட்டத்தை இப்போது அடைந்துகொண்டிருக்கின்றது. அது மிகவும் இருள் சூழ்ந்த ஒரு காலம் என்பது உண்மை. உலகையே உலுக்கும் பேரிடர் ஏதோ ஒன்று நிகழப்போகின்றது. ஆனால், இந்த துயர சூழ்நிலை அழிந்து பிரகாசம் மிக்க எதிர்காலம் இவ்வுலகிற்காக காத்துக்கொண்டிருக்கின்றது என்றே அவர் கூறுகின்றார்.
“தூய்மையான மற்றும் நற்செயல்களின் மூலமும் மெச்சத்தகுந்ததும் மிக பொருத்தமான ஒழுக்கத்தின் மூலமும் உலகசீர்திருத்தம் அடையப்படக்கூடும்,”
எனும் பஹாவுல்லா திருவாய்மொழிந்தருளியுள்ளார். அழியப்போவது இவ்வுலகமல்ல, மாறாக, உலகில் காணப்படும் ஆன்மீக இருளே. ஆகவே உலகம் அழியப்போகின்றது எனும் வீண் எண்ணத்தை விடுத்து உலக நன்மைக்காக பாடுபடுவோமாக, இவ்வுலகைச் சூழ்ந்துள்ள ஆன்மீக இருளின் அழிவிற்காக பாடுபடுவோமாக.
காதலாகிக் கசிந்து…
கடவுள் யாவற்றையும் படைத்து அவை ஒவ்வொன்றிலும் தமது பன்பு ஒன்றை உட்பதித்துள்ளார் என பஹாய் திருவாக்குகள் கூறுகின்றன. ஆனால், மனிதனில் மட்டும் அவர் தமது அனைத்து பன்புகளையும் பிரதிபலிக்கும் ஆற்றலை வழங்கியுள்ளார். மனிதப் பிறவியின் நோக்கமே கடவுள் மனிதனுக்கு வழங்கியுள்ள இந்த ஆற்றலை மேம்படுத்திக்கொள்வது ஆகும். இதன் காரணமாகவே “மனிதனென்பவன் தெய்வமாகலாம்” என கூறுகின்றோம்.
இவ்வகையில், பல திரைப்படங்களில் ஆன்மீக மனப்பாங்குகள் குறித்த கருத்து பாடல்கள் பல வெளிவந்துள்ளன. பெரும்பாலும் இவை பழைய படங்களிலேயே அதிகமாக காணப்படுகின்றன. எனக்குப் பிடித்த பழைய பாடல்களுள் பின்வரும் பாடலும் ஒன்று. இப்பாடலின் மையக்கருத்து கற்பு, சேவை போன்ற ஆன்மீக மனப்பாங்குகள் குறித்ததாகும். கேட்பதற்கு இனிமை மிகுந்து மனதை நெகிழச் செய்யும் ஒரு பாடல். சிறு வயதில் அதிகாலை 5.30மணிக்கு பள்ளிசெல்லும் வேளை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல். மனதில் அன்று பதிந்தது இன்றும் மனதைவிட்டு அகலவில்லை.
இப்பாடல் ஜிக்கி அவர்களால் கண்கள் எனும் படத்திற்காக படாப்பட்டது.
பாடலை கேட்க அல்லது பதிவிரக்கம் செய்ய:
பாடிப்பாடி தினம்…
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கியே
கற்பூரம் மென்மலர் தன்னையும் சாற்றியே
பாடிப் பாடி தினம் தேடினாலும்
அவன் பாதம் காண முடியாது
ஈசன் பாதம் காண முடியாது
அற்புதங்கள் பல செய்திடும் சித்தர்கள்
அகத்திலும் ஆண்டவன் இல்லை
நற்பயன் இல்லாத நாசவேலை செய்ய
கற்றதிலும் ஞானத்திலும்
இல்லையென்றறியாமல்
பாடிப் பாடி தினம் தேடினாலும்
அவன் பாதம் காண முடியாது
ஈசன் பாதம் காண முடியாது
விற்பனர் போல் பல வேஷமிடும் கலைஞர்
என்பவர் நெஞ்சிலும் இல்லை
கற்புள்ள மாதர்கள் காக்கும் உழவர்கள்
கற்புள்ள மாதர்கள் காக்கும் உழவர்கள்
கருத்தினில் வாழ்கிறார் கடவுள் ..ஆஆ
கற்புள்ள மாதர்கள் காக்கும் உழவர்கள்
கருத்தினில் வாழ்கிறார் கடவுள் என்றறியாமல்
பாடிப் பாடி தினம் தேடினாலும்
அவன் பாதம் காண முடியாது
ஈசன் பாதம் காண முடியாது!
பாடல் வரிகள் தெளிவாக இல்லை. பின்வருமாறும் இருக்கலாம்.
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி…
கற்பூரம் மென்மலர் சந்தணம் சாற்றியே
ஆடிப்பாடி தினம் தேடினாலும் அவன்
பாதம் காண முடியாது.. ஈசன்
பாதம் காண முடியாது.
அற்புதங்கள் பல செய்திடும் சித்தர்கள்
அகத்திலும் ஆண்டவன் இல்லை.
நற்பயன் இல்லாத நாசவேலை செய்ய
கற்றதிலும் ஞானத்திலும் இல்லை
என்றறியாதர் [அறியாதர் = அறியாதார் / அறியாதவர்]
ஆடிப்பாடி தினம் தேடினாலும் அவன்
பாதம் காண முடியாது.. ஈசன்
பாதம் காண முடியாது.
விற்பன்னர் போல் பல வேஷம் இடும் கலைஞர்
வெம்பகை நெஞ்சிலும் இல்லை.
கற்புள்ள மாதர்கள் காக்கும் உழவர்கள்
கருத்தினில் வாழ்கிறான் கடவுள்
என்றறியாதர்… (ஆடிப்பாடி)
கலந்தாலோசனை
பஹாய் சமயத்தின் நிர்வாக அமைப்புக்கள் தனிச்சிறப்பு மிக்கதும் எதிர்ப்புணர்வு அற்றதுமான கலந்தாலோசனை எனும் முடிவுகள் எடுக்கும் செயல்பாட்டை எல்லா நிலைகளிலும் பயன்படுத்துகின்றன.
கலந்தாலோசனைக்கான கோட்பாடுகள் பஹாவுல்லாவின் திருவாக்குகளில் பதிக்கப்பட்டுள்ளன, மற்றும், கருத்தொருமித்தலை பேணுவதற்கும் உண்மையை ஆராய்வதற்கும் உரிய ஒரு வழிமுறையெனும் வகையில் அக்கோட்பாடுகள் விரிவான பயன்பாட்டிற்கான உள்ளாற்றலை பெற்றிருக்கின்றன. பார்க்கப்போனால், குழுத்தீர்மானம், கூட்டுறவு ஆகியவை தேவைப்படும் எந்த சூழ்நிலையிலும் அவை பயன்மிக்கவையாக இருப்பதை பஹாய்கள் காண்கின்றனர். இக்கோட்பாடுகள் பஹாய் சமயத்தின் ஸ்தாபனங்களால் மட்டுமல்லாமல் பஹாய்களின் தொழில்களில், பஹாய்களால் நடத்தப்படும் பள்ளிகளில், மற்றும் பஹாய் குடும்பங்களில் எடுக்கப்படும் தினசரி தீர்மானங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
அதன் சாரத்தில், கலந்தாலோசனை பல்வேறு விஷயக் கூறுகளை தனித்தனியே பிரித்துப் பார்ப்பதற்கு பதிலாக அவற்றை ஒன்றிணைக்கும் வகையில் கருத்தொருமிப்பை பேணுகின்றது. அது பல்வகையான மாறுபட்ட கருத்துக்களை ஊக்குவித்து வழிவழி மரபாக பயன்படுத்தப்பட்டுவரும் தீர்மானசெயற்பாட்டு முறைகளில் இயல்பாகவுள்ள அதிகாரம் செலுத்த முயலும் போட்டி மனப்பான்மைகளை கட்டுப்படுத்துகின்றது.
பஹாய் கலந்தாலோசனை பின்வரும் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது:
பலதரப்பட்ட கருத்துக்களை குறிவைத்து முடிந்த அளவு பரவலான மூலாதாரங்களிலிருந்து தகவல் சேகரிக்கப்படவேண்டும். ஒரு வேளை, வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அல்லது அறிவியலாளர்கள் போன்ற வல்லுணர்களின் உதவி இதற்காக நாடப்பட வேண்டியிருக்கலாம். மேலும், வழிவழியான தகவல் சேகரிப்பு சாதனங்ளுக்கும் அப்பால் தகவல் சேகரிப்பட அல்லது பல்வேறு பின்னனியில் உள்ள சமூக உறுப்பினர்களின் கருத்துக்களை கண்டறிய விசேஷ முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கலாம்.
கலந்தாலோசிப்பின் போது, பங்கேற்பாளர்கள் முடிந்த அளவு ஒளிவுமறைவின்றியும் வெளிப்படையாகவும், அதே வேளை மற்றவர்களின் கருத்துக்களின்பால் பனிவான அக்கறை மனப்பான்மையை கொண்டிருக்கவும் வேண்டும். தனிநபர்களை தாக்கிப்பேசுவது, இறுதி எச்சரிக்கைகள், மற்றும் பாரபட்சமான வார்த்தைகளை தவிர்க்கவேண்டும்.
ஒரு கருத்து முன்மொழியப்பட்டவுடன் அது அக்குழுவின் உடைமையாகிவிடுகின்றது. இது கேட்பதற்கு எளிமையாக இருந்தபோதிலும், கலந்தாலோசனை குறித்த கோட்பாடுகளுள் இது ஓர் ஆழமான கோட்பாடாகும். ஏனெனில், இக்கோட்பாட்டின் அடிப்படையில் எல்லா கருத்துக்களும் எந்த தனிநபர், துணைக்குழு, அல்லது தோகுதியினருக்கும் உடைமையாகாது. தனிநபரை உயர்த்துதல் அல்லது தன்னைச்சுற்றி ஆதரவாளர்களை சேகரிக்கும் ஆசையிலிருந்து பிறக்கும் கருத்துக்களோடு ஒப்பிடுகையில், சேவையாற்றவேண்டும் எனும் தூய்மையான ஆவலிலிருந்து பிறக்கும் எண்ணங்களை இக்கோட்பாடு தூண்டிவிடுகிறது.
குழு கருத்தொருமிப்புக்காக முயலுகின்றது, ஆனால், இறுதி முடிவெடுப்பதற்காக பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தப்படலாம். இக்கோட்பாடு குறித்த ஒரு முக்கிய அம்சம் யாதெனில் ஒரு முடிவு எடுக்கப்பட்டவுடன், குழுவினர் அனைவரும் அம்முடிவுக்கு ஒற்றுமையோடு உடனடியாக கீழ்படிய வேண்டும் என்பதாகும் – இது அம்முடிவுக்கு எத்தனை பேர்கள் வாக்களித்தனர் என்பதைப் பொருத்ததல்ல.
இந்த நிலையில் கலந்தாலோசனையில் “சிறுபான்மையினர்” அறிக்கை அல்லது “எதிர்ப்பாளர்கள் நிலை” என்பது இருக்கமுடியாது. மாறாக, ஒரு முடிவு தவறான முடிவாகவே இருந்தபோதிலும், முடிவெடுக்கும் குழுவும், சார்புடைய சமூகத்தினரும் முழுமனதோடு அம்முடிவை ஆதரிக்கும் பட்சத்தில் அத்தவறு அம்முடிவின் அமலாக்கத்தின்போது கண்டிப்பாக வெளிப்படும்.
ஒரு முடிவோ திட்டமோ தோல்வியுறும்போது, (அதன் விளைவான) பிரச்சினை அக்கருத்து சார்ந்ததாக இருக்குமே ஒழிய, சமூக உறுப்பினர்களின் ஆதரவு அல்லது அக்கருத்தின் எதிர்ப்பாளர்களின் நடவடிக்கை சார்ந்ததாக இருக்காது என்பதை ஒற்றுமை குறித்த கடமையுணர்வு உறுதிசெய்கின்றது.
மீண்டும், இங்கு கோட்பாடு, ஒற்றுமையின் ஆற்றல் பற்றிய புரிந்துகொள்ளலையே சென்று சாருகின்றது. பஹாவுல்லாவின் திருமகனாரான, அப்து’ல்-பஹா, பஹாய்கள் எக்காலத்திலும் எப்பிரச்சினையிலும் கருத்தொருமிப்பு காண முயல வேண்டும் என கூறியுள்ளார்:
அவர்கள் ஒரு விஷயம் குறித்து சரியாக இருந்து ஆனால், கருத்துவேறுபாடு கொண்டவர்களாக இருப்பதைவிட தவறான கருத்து கொண்டிருந்தபோதிலும், அதில் ஒத்தகருத்தினராக இருப்பதே சாலச்சிறந்தது. ஏனெனில், கருத்துவேறுபாடு தெய்வீக அடித்தலத்தின் அழிவுக்கு வழிவகுக்கும். ஒரு சாரர் சரியான கருத்துடையவராகவும் (மற்றவர் வேறு கருத்துடையவராகவும் இருந்து) அதனால் அங்கு கருத்துவேறுபாடு நேர்ந்தால் அக்கருத்துவேறுபாட்டின் விளைவாக அங்கு ஆயிரம் தவறுகள் ஏற்படக்கூடும். ஆனால், அவ்விரு குழுக்களும் கருத்தொருமித்து ஆனால் தவறான முடிவே எடுக்கும்போது, அவர்கள் ஒற்றுமையாக இருக்கும்நிலையில் உண்மை வெளிப்பட்டு தவறு திருத்தப்படும்.
மூலாதாரம்: http://info.bahai.org/article-1-3-6-3.html