லியோ டால்ஸ்டாய்


பஹாய் சமயத்தை ஏற்றுக் கொண்டோரில் பல பிரமுகர்களும் அடங்குவர். ருமேனிய நாட்டின் (விதவை) அரசியார், சமோவா தீவின் மன்னர், பாரசீக அரச குடும்பத்தினர் சிலர் என கூறலாம். அவர்களுள் தத்துஞானியரான லியோ டால்ஸ்டாயும் அடங்குவார். பஹாய் சமயத்துடனான அவரது தொடர்புகள் குறித்து சில விவரங்கள் கீழே வழங்கப்படுகின்றன:

டால்ஸ்டாய்
டால்ஸ்டாய்


லியோ டால்ஸ்டாய் (1828 – 1910) ஒரு மாபெரும் ரஷ்ய தத்துவஞானியும் எழுத்தாளரும் ஆவார். “War and Peace” எனும் மாபெரும் நாவல் இவருடைய படைப்பாகும். இந்த நாவல் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.

லியோ டால்ஸ்டாய் முதன் முதலில் 1884ல் பஹாய் சமயத்தைப் பற்றி கேள்விப்பட்டார். அவர் 22 அக்டோபர் 1903ல்:

“நான் நீண்ட நாட்களாகவே பாப்’யிக்கள் குறித்து அறிந்து வைத்து அவர்களுடைய போதனைகளின்பால் எப்போதுமே ஆர்வமுள்ளவனாக இருந்துவந்துள்ளேன். இந்த போதனைகள்… பிரிவினைகள் உண்டாக்கும் குழப்புகின்ற கசடுகளை நீக்கி, மனிதகுலத்தையே ஒரே பொது சமயத்தின் கீழ் ஒன்றிணைக்கும் இலட்சியமுடைய இப்போதனைகள், என்னைப் பொறுத்தவரை… மிகவும் சிறந்த எதிர்காலமுடையவை. ஆகவே, பழைய மூடநம்பிக்கைகளைக் களைந்தும் பழைய மூடநம்பிக்கைகளிலிருந்த புதிய பிரிவுகளை உருவாக்கக்கூடிய புதியனவற்றை ஸ்தாபிக்காமலும் இருக்கும் இந்த பாப்’யிக்களின் போதனைகள்… அவை சகோதரத்துவம், சமத்துவம், மற்றும் அன்பு குறித்த முக்கிய அடிப்படை கருத்துக்களை அவர்கள் சார்ந்திருப்பதால், அவர்கள் சிறந்த எதிர்காலத்தை பெற்றிருக்கின்றனர்… ஆகவே பாப்’யி சமயம் மக்களுக்கு சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தையும், கடவுள் சேவையில் தங்கள் உலகவாழ்வையே அர்ப்பனிக்கவும் போதிப்பதால் நான் பாப்’யி சமயத்தின்பால் பெரிதும் அனுதாபம் கொண்டவனாவேன்.” மறுபடியும், 1908ல், டால்ஸ்டாய் பின்வருமாறு எழுதினார்: “இஸ்லாம் சமய பின்னனியிலிருந்து தோன்றியுள்ள பாப்’யிக்களின் போதனைகள் பஹாவுல்லாவின் போதனைகளால் சிறிது சிறிதாக மேம்பாடு கண்டு இப்போது மிகச் சிறந்ததும் மிகத் தூய்மையானதுமான சமய போதனைகளை நமக்கு வழங்குகிறது.”

மூலம்: The Promise of All Ages, Christophil (aka)
George Townshend அவர்கள் எழுதிய நூல், ப. 26
ருஷ்ய மொழியின் தற்காலிக மொழிபெயர்ப்பு:
“ருஷ்யாவில் பஹாய் சமயம்” by Nancy Ackerman & Graham Hassall, (Appendix II in the Russian edition of Hatcher & Martin அவர்களின் பஹயா சமயம் பற்றிய அறிமுக நூல்) ப. 259-262ல் உள்ள வரிகள் :

“ருஷ்யாவின் மாபெரும் சிந்தனையாளரான லியோ டால்ஸ்டாயின் கவனத்தையும் பாப்’யி சமயம் கவர்ந்தது, அவர் ஆரம்பத்தில் O.S. லெபதேவிடமிருந்து பாப்’யிக்கள் குறித்து தெரிந்துகொண்டார். அதிலிருந்து அவர் விண்ணேற்றம் அடைந்த வரை, சுமார் 16 ஆண்டுகளுக்கு அவர் பாப்’யி மற்றும் பஹாய் சமயங்கள் குறித்து அவர் தமது தபால்களிலும் நாட்குறிப்பிலும் பல முறை எழுதியுள்ளார். அதே சமயம் அவர் கிரினெவ்ஸ்காயாவின் நாடகம் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளார். (நாடக எழுத்தாளரான இசாபெல்லா கிரினெவ்ஸ்காயா பல நாடகங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் மற்றும் அவர் பாப் அவர்கள் பற்றியும் ஒரு முழு நாடகம் எழுதியுள்ளார். இந்த நாடகம் St. பீட்டர்ஸ்பர்க்கில் இரு வெற்றிகரமான அரங்கேற்றம் கண்டது. கிரினெவ்ஸ்காயா பஹாய் சமயத்தை ஏற்றுக்கொண்டு, பல முறை அப்து’ல்-பஹாவையும் ஷோகி எஃபெண்டி எஃபெண்டியையும் சந்தித்துள்ளார்.) டால்ஸ்டாய் அவருக்கு ஒரு கடிதம் எழுதி அவர் செய்து வரும் காரியங்கள் குறித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து அதில் மேலும்… பாப்’யி சமயத்தின் போதனைகள்… சகோதரத்துவம், சமத்துவம் மற்றும் அன்பு குறித்த அஸ்திவார மற்றும் அடித்தல கருத்துக்களை நிலைநிறுத்துவதால் அவற்றுக்கு மகத்தான வருங்காலம் இருப்பதாக தெரிவித்துள்ளார். (1)

டால்ஸ்டாயின் இக்கடிதம் பிரசுரிக்கப்பட்டு ருஷ்யாவில் பஹாய் சமயத்தின்பால் பெரும் ஆர்வம் குறிப்பிடத்தக்க அளவு பெருகியது.

உண்மையான சமய நம்பிக்கைகளின் ஆதரவாளராக டால்ஸ்டாய் திகழ்ந்தார், மற்றும் அவரது ஆன்மீக வேட்கை மற்றும் ஓர் அனைத்துலக சமயத்திற்கான உடனடி தேவை, உண்மையை தன்னிச்சையாக தேடுவது, சமயம் மற்றும் பகுத்தறிவுக்கிடையிலான இணக்கம், சமய சடங்கு சம்பிரதாயங்களை எளிமைப்படுத்துதல், அனைத்துலக கல்வி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்கள் பஹாய் சமயத்தின் கோட்பாடுகளோடு ஒத்திருந்தன. பஹாய் சமயத்துடனான அவரது உறவு சற்று சிக்கலானதாகவும், சில நேரங்களில் சமநிலையற்றும் இருந்தது உண்மையே: சமயத்தின்பால் அவர் வலியுறுத்திய பெரும் மதிப்பும் மற்ற நேரங்களில் அதன்பால் அவர் கொண்டிருந்த சிரத்தையின்மையும் குறைகூரல்களும் மாறி மாறி வந்தன. நம்பிக்கையான மூலாதாரங்கள் கிட்டாததால், பஹாய் சமயம் குறித்து டால்ஸ்டாயிக்கு தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை. இத்தகைய குறைபாடு நிறைந்த தகவல்களோடு அவர் தமது சொந்த தத்துவார்த்த நம்பிக்கைகளில் கொண்டிருந்த உள்ளார்ந்த முரண்பாடுகளும், அதன் நம்பிக்கைகள் அவரது கருத்துக்களோடும் இலட்சியங்களோடும் ஒத்துப்போகவில்லை என்பதால் சில வேளைகளில் அவர் பஹாய் சமயத்தை உதறித்தள்ளவும் உந்தப்பட்டார். ஆனால், அவர் பஹாய்களுடனான மற்றும் அதனை ஆய்வு செய்வோருடனான தமது தொடர்பிலும் கடவுளின் இயல்பு, தேசபக்தி, கடவுள் அவதாரங்கள், சமயங்களின் ஒற்றுமை, மற்றும் மனம் மற்றும் ஆன்மவுக்கிடையிலான தொடர்பு போன்ற தம்மை வாட்டி வந்த கேள்விகள் குறித்து ஆராயத் தவறியதில்லை: (2)

டால்ஸ்டாயின் கடிதங்களிலிருந்து சமயம் சம்பந்தமான கேள்விகளில் ஆர்வமுடையோரிடமிருந்து அவர் பல பஹாய் நூல்களைப் பெற்றிருந்தார் என்பது தெரிய வருகின்றது. அவருடைய நாட்குறிப்பிலிருந்து கிடைக்கும் பாப்’யி மற்றும் பஹாய் சமயம் பற்றிய மேலோட்டமான குறிப்புகள் தெளிவாக இல்லை, ஆனால் அவற்றிலிருந்து பஹாய் சமயத்தின் மீது அவர் கொண்டிருந்த ஆர்வம் குறையவில்லை என்பது தெளிவு. டால்ஸ்டாய் பஹாய் சமயத்தின் மீது கொண்டிருந்த ஆர்வம் அப்து’ல்-பஹாவுக்கு தெரியும் மற்றும் ருஷ்ய பிரதேசங்களில் அடங்கியிருந்த பஹாய்கள் (பாக்குவைச் சார்ந்த அலி-அக்பர் நாக்ஜவானி உட்பட) டால்ஸ்டாயோடு தொடர்பு கொண்டு பஹாய் சமயம் குறித்த உறுதியான தகவல்களை அவருக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். நாக்ஜவானிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் பாப்’யி மற்றும் பஹாய் சமயங்கள் பற்றி தாம் ஒரு நூல் வெளியிட விரும்புவதாக டால்ஸ்டாய் தெரிவித்திருந்தார். 1901ல் டால்ஸ்டாயிக்கு “அமைதி” எனும் தலைப்பிலான ஒரு கவிதையை அனுப்பியிருந்த பாரசீக தூதருக்கு எழுதிய ஒரு கடிதத்தில்: உங்கள் தாய்நாட்டில் உள்ள பாப்’யிக்களைப் போன்று உலகம் முழுவதும் மக்கள் உள்ளனர். அவர்கள் உண்மையான சமயத்தை பின்பற்றியும், எங்கெங்கும் அவர்கள் தொடர்ந்தாற்போன்றகொடுமைகளை அனுபவித்தாலும், அவர்களின் கருத்துக்கள் அதிகரிக்கும் துரிதத்துடன் பரவி இறுதியில் அவை காட்டுமிராண்டித்தனத்தை வெற்றிகொள்ளவே செய்யும்…” (3)

1902 செப்டம்பரில், அப்து’ல்-பஹாவிடமிருந்து ஒரு தனிப்பட்ட செய்தியை அஸிஸுல்லா ஜஸாப் எனும் பெயர் கொண்ட இரான் நாட்டு பஹாய், டால்ஸ்டாயின் இல்லமான யாஸ்னாயா போலியானாவுக்கு கொண்டு வந்தார். அக்கடிதத்தில் “சமயங்கள் எனும் உலகில் உங்கள் பெயர் நல்லனவற்றை ஞாபகப்படுத்திட செயல்படுக. பல தத்துவ ஞானிகள் தோன்றியுள்ளனர், மற்றும் அவர்கள் தங்கள் கொடிகளை, ஐந்து மீட்டர் அளவுக்கு என கொள்வோம், உயர்த்தியுள்ளனர். நீரோ 10 மீட்டர் அளவுக்கு உமது கொடியை உயர்த்தியுள்ளீர்; ஒறுமைத்தன்மை எனும் சமுத்திரத்தில் உம்மை ஆழ்த்திக் கொள்வீராக அதனால் என்றும் நிலையான கடவுளின் துணை உமக்குக் கிட்டும்,” எனும் வரிகள் அதில் எழுதப்பட்டிருந்தன. (4)

அந்த பஹாய் அன்பர், பஹாவுல்லா அவரது சமயம் மற்றும் டால்ஸ்டாயிக்கும் இடையில் என்னதான் தொடர்பு எனும் கேள்விக்கு டால்ஸ்டாய் பின்வருமாறு பதிலளித்தார்: “அதை (பஹாவுல்லாவின் செய்தியை) நான் எவ்வாறுதான் மறுக்கக்கூடும்?… இச்சமயம் நிச்சயமாகவே உலகையே தன்பால் வெல்லும்.” பஹாய் சமயத்தின் கோட்பாடுகள் இக்காலத்தின் உணர்வுகளோடு ஒத்திருப்பதால், அவை காலப்போக்கில், மானிடத்தின் நலனை உறுதி செய்யும் வகையில் உலகில் உறுதியாக நிலைநிறுத்தப்படும். (5)

தமது வாழ்வின் இறுதி நாட்களில், பஹாவுல்லாவின் படைப்புக்களில் பாப் அவர்களின் போதனைகள் அடைந்திருக்கும் மேம்பாடுகள், சமயங்களில் உள்ள மிக உயரிய மற்றும் தெளிவான விஷயங்களைப் பிரதிநிதிக்கின்றன எனும் முடிவுக்கு வந்தார். 1910ல் தமது மறைவுக்கு சிறிது காலத்திற்கு முன், பஹாய் சமயம் குறித்து டால்ஸ்டாய் பின்வருமாறு எழுதியுள்ளார்: “அது மிகவும் ஆழம்மிக்கது. இத்தகைய ஆழம்மிக்க சமயம் வேறு எதையும் நான் அறியேன்.” (6)

1. Moojan Momen, The Babi and Bahá’í Religions, ப. 52
2. Luigi Stendardo, Leo Tolstoy and the Bahá’í Faith, Ch. 3-4
3. L. N. Tolstoy, Polnoye sobraniye sochinenii [Complete Works] v. 80, p. 102
4. Stendardo, ப. 2
5. Momen, ப. 30
6. Tolstoy, Complete Works, v. 78, ப. 306
7. D.P. Makovitskii, U Tolstogo: 1904-1910 Yasnopolyanskiye zapiski (With Tolstoy: 1904-1910, குறிப்புகள் from Yasnaya Polyana] Moscow, Nauka 1979, v. 4, ப. 255

One thought on “லியோ டால்ஸ்டாய்”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: