உலகம் முழுவதும் உள்ள பல தேசத் தலைவர்களும், பல ஸ்தாபனங்களும், பொதுமக்களும் இரான் நாட்டில் பஹாய்கள் தங்கள் சமய நம்பிக்கைக்காக தொடர்ந்து கைது செய்யப்படுவதை வன்மையாக கண்டித்து வருகின்றனர். இருந்த போதும் இரான் நாட்டின் சர்வாதிகாரிகள் பஹாய்களை இம்சித்து வருவதை சிறிதும் குறைத்தபாடில்லை. மாஸ்கான் எபாடி எனும் இஸ்பாஃஹான் மாநில பஹாய் ஒருவர் 28 ஆகஸ்ட் 2010ல் தமது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். அவருடைய கணினியும் கைத்தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன் பெண்கள், சிறார்கள் ஆகியோரின் கல்வியறிவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு பஹாய்கள் அந்த நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்னமும் தடுப்பில் இருந்து வருகின்றனர். இவ்விளைஞர்களுக்கு தங்கள் குடும்பத்தினரை சந்திக்க இதுவரை 15 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் சிறையில் தங்கள் கல்வியைத் தொடர முடியாத நிலையில் இருந்து வருகின்றனர்.
மாதம்: ஓகஸ்ட் 2010
இரான் நாட்டு சிறை தண்டனை – ஒரு சகோதரரின் துயரம்
இரான் நாட்டவரான பெஹ்ரூஸ் தவாக்கோலி இரு பிள்ளைகளுக்கு தந்தை, மனோதத்துவ நிபுனர், தச்சர், மற்றும் சமூக சேவையாளர்.
அவர் அங்கவீனர்கள் மற்றும் மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பனித்தவர் — “ஒரு தேவதைக்குச் சமமானவர்”, என அவருடைய சகோதரரான அமீன் கூறுகிறார்.
அவர் பஹாய் சமயத்தின் விசுவாசியும் ஆவார். இரான் நாட்டை ஆளும் சமயசர்வாதிகாரத்தில் இது முற்றாக குற்றமாகும்.
“சமய புனிதத்தன்மையை அவமதித்தது”, ஆட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்தது மற்றும் இஸ்ரேல் நாட்டிற்கு வேவு பார்த்தது எனும் குற்றச்சாட்டுகளின் பேரில் முடிவடைந்த விசாரனைகளின் விளைவாக சென்ற வாரம், திரு தவாக்கோலிக்கும் ஆறு பஹாய்களுக்கும் தலா 20 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. “”
இரான் நாட்டைவிட்டு வெளியேறியதிலிருந்து 1984 முதல் தாம் குடியிருந்து வந்த அடிலேய்ட் நகரின் புறநகர்ப்பகுதியில் உள்ள தமது இல்லத்தில் திரு தவாக்கோலி இருந்தபோதுதான் அவர் தமது சகோதரருக்கு விதிக்கப்ப்டட தண்டனை குறித்து கேள்விப்பட்டார்.
“இச்செய்தியினால் நாங்கள் பெரிதும் திடுக்கிட்டுப்போனோம். அவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். இரான் நாட்டு சர்வாதிகார ஆட்சிக்கும் அது தெரியும். அவர்களை கைது செய்தது நியாயமல்ல, அவர்களை தடுத்து வைத்தது நியாயமல்ல, மற்றும் அவ்வாறு செய்தது இரான் நாட்டின் சட்டத்திற்கு புறம்பானதும் ஆகும்,” என அவர் மேலும் கூறினார்.
பெஹ்ரூஸ் தவாக்கோலி மற்றும் இரண்டு பெண்கள் உட்பட இரான் நாட்டு பஹாய் சமூகத்தைச் சார்ந்த அவருடை சகாக்கள் 300,000 பேர்கள் கொண்ட இரான் நாட்டு பஹாய்களின் தலைமைத்துவம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பயனாக ஜூன் 2008ல் கைது செய்யப்பட்டனர்.
இரான் நாட்டு பஹாய் சமூகம் பல்லாண்டு காலமாக திட்டமிடப்பட்ட கொடுமை, தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் மற்றும் சித்திரவதையை அனுபவித்து வந்துள்ளது. இரண்டு ஆண்டுகள் காவலில் வைக்கப்பட்ட பின்பு அவர்கள் மீது தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதை அனைத்துலக மனித உரிமை குழுக்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்கள் வண்மையாக கண்டித்துள்ளன:
அறி்க்கை ஒன்றில் ‘எம்னஸ்டி இன்டர்நேஷனல்’ பின்வருமாறு கூறியுள்ளது: “இரான் நாட்டின் அதிகாரிகள் பஹாய்கள்பால் தாங்கள் கொண்டுள்ள ஆழ்ந்த துவேஷத்தின் வெளிப்பாடே இவ் வருந்தத்தக்க பழிச்செயல். முதுமையடைந்த சிலரை உள்ளடக்கிய இ்ந்த ஏழு பஹாய் முக்கியஸ்தர்களும் நம்பிக்கைக்கு உட்பட்ட கைதிகளாவர் மற்றும் அவர்கள் தங்கள் நம்பிக்கைகள் மற்றும் அமைதியான நடவடிக்கைகளுக்காக சிறைவைக்கப்பட்டுள்ளனர்.”
கைதிகளை பிரதிநிதித்த மனித உரிமைகள் காப்பாளர்கள் எனும் மையத்தின் நோபல் பரிசாளரான ஷிரின் எபாடி, குற்றங்கள் குறித்து கேள்விப்பட்டு ‘பெரிதும் திடுக்கிட்டு’ போனதாக கூறினார். ஏனெனில், அரசாங்க வழக்கறிஞர் அவர்களின் குற்றங்கள் குறித்து ஓர் ஆதாரம் கூட வழங்கவில்லை என்றார். எம்னெஸ்டி இன்டர்நேஷனல் இவ்வழக்கு குறித்து அதை ஒரு ‘கேலிக்கூத்து’ என வருணித்து அந்த எழுவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என கூறியது.
அதிபர் மஹமூத் அஹமதிநெஜாட் பதவிக்கு வந்த சென்ற வருடம் ஜூன் மாதத்தில் நடந்த கள்ளத்தனமான தெர்தலின் பின்னனியில் நடந்த அரசியல் கொந்தளிப்பு மற்றும் பரவலான எதிர்ப்புகளை திட்டமிட்டது குறிப்பிட்ட குழுவினரும் பஹாய்களுமே என இரான் அரசாங்கம் குற்றஞ்சாட்டியது. ஆனால், பஹாய்கள் அவற்றுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்துள்ளனர்.
அடிலேட்டில் உள்ள தமது இல்லத்தில் இருந்து, ‘ஆஸ்த்திரேலிய வீக் என்ட்’ பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தமது அண்ணனின் ஒரே நடவடிக்கை இரான் நாட்டில் உள்ள பஹாய்களுக்கு சமூக, சட்ட மற்றும் சமய சேவைகள் வழங்குவதே என அமீன் தவாக்கோலி தெரிவித்தார். “எவ்வித அரசியல் நடவடிக்கையும் அறவே கிடையாது. அது பஹாய் சமயத்தில் அதன் விசுவாசிகள் எவ்விதமான அரசியல் நடவடிக்கைகளிலும் பங்கெடுக்கக்கூடாது மற்றும் அவர்களுக்கு வசிக்கும் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு நடக்கவேண்டும். இரான் பஹாய்கள் அதை நன்றாகவே கடைபிடித்தனர்.”
“சிறைபட்டிருக்கும் தலைமைத்துவ பஹாய்களுக்காக ஆஸ்த்திரேலியவின் பஹாய் சமூகம் பிரார்த்தனை கூட்டங்களை நடத்துகின்றது. அவர்களின் ஒரே குற்றம் பஹாய் சமயத்தில் மிக முக்கியமானதாக விளங்கும் மனுக்குலத்தின் ஒறுமைத்தன்மையில் அவர்கள் நம்பிக்கை வைத்ததாகும், மற்றும் அதுவே அவர்கள் செய்த ஒரே குற்றம்,” என திரு அமீன் தெரிவித்தார்.
முதல் மின்விளக்கை கண்டுபிடித்தவர்
யார் யாரோ எதை எதையோ கண்டுபிடித்தார்கள் என நாம் பள்ளிப்பாடத்தில் கற்கின்றோம். ஆனால், அந்த கண்டுபிடிப்புகள் உண்மையில் அவர்களுடையதுதானா?
எலியட், மேய்ன் – அதன் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இருநூறாவது ஆண்டு கொண்டாத்திற்கு ஒரு வாரமே இருக்கும் வேளையில், அந்த ஊரின் சரித்திரத்தையும் அதன் வரலாற்றில் முக்கியமானவர்களையும் தெரிந்துகொள்ளும் ஆவல் அதிகமாக இருக்கின்றது.
அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தோரில் மோசஸ் ஜி. பாஃர்மர் அவர்களைவிட பிரபலமானவர் யாரும் இல்லை. இவருடைய பெயர் அந்த வட்டாரத்தில் வசிப்போர் அனைவராலும் அறியப்பட்டு, அவர் விட்டுச் சென்றுள்ள நற்செயல்கள் அந்த நகரத்தின் பல மக்களின் மனதில் இன்றும் நிலைத்திருக்கின்றது.
“அவர் எலியட்டின் மக்கள் பெருமையாக பேச விரும்பும் உருச்சின்னம் ஆவார்,” என தமது வீட்டின் முன் நின்று முன்னாள் பெண்கள் கூடைப்பந்து பயிற்சியாளர் பாப் பெர்ஹாம் கூறினார். தாம் தற்போது வசிக்கும் வீடு முன்பு பாஃர்மர் அவர்களால் பயன்படுத்தப்பட்டது என அவர் தெரிவித்தார்.
“அவ்வீடு பாஃர்மர் அவர்களின் குதிரைவண்டி கொட்டகை மற்றும் பணிமனையும் ஆகும் மற்றும் அவர் இங்குதான் தமது முதல் மின்விளக்கையும் கண்டுபிடித்தார்,” என பெர்ஹாம் கூறினார்.
“முதல் மின்விளக்கை பாஃர்மர் அவர்கள் கண்டுபிடித்தபோதும் அவர் எடிசனுக்குக் கீழ் வேலை செய்ததால் அக்கண்டுபிடிப்புக்கு எடிசனே பெயர்வாங்கிக்கொண்டார்,” என பெர்ஹாம் கூறினார்.
பாஃர்மர் அவர்கள் பாஸ்டன் தீ அலாரத்தையும் கண்டுபிடித்தவர் ஆவார். இக்கருவியில் இருக்கும் கண்ணாடியை உடைத்தால் எச்சரிக்கை சப்தம் எழும் மற்றும் வேறு பல கருவிகளையும் அவர் கண்டுபிடித்தார்.
1858ல், தமது 39வது வயதில், சேலம், மாசாசுசட்டில், பாஃர்மர் தமது வீட்டின் வரவேற்பரையை மின் விளக்குகள் கொண்டு ஒளியேற்றினார். உலகில் அந்த வீடே முதன் முதலாக மின்விளக்குகள் கொண்டு ஒளியேற்றப்பட்டதாகும். எடிசன் அந்த கண்டுபிடிப்பை ஒரு சிறு விலை கொடுத்து வாங்கி அக்கண்டுபிடிப்பை தம்முடையது என உரிமைப்பதிப்பு செய்தார்.
19ம் நூற்றாண்டின் பல கண்டுபிடிப்புகளுக்கு பாஃர்மர் காரணமாக இருந்தபோதும், அவரும் அவருடைய மனைவியைும், ஆன்மீகவாதிகள் எனும் முறையில் தங்கள் கண்டுபிடிப்புகள் யாவும் கடவுளிடமிருந்தே தோன்றுகின்றன எனவும் அவற்றுக்கு தாங்கள் பெயர்வாங்கிக்கொள்வது முறையல்ல என அவர்கள் கருதியதாக பெர்ஹாம் வீட்டிற்கு அருகே திடீருணவு கடை வைத்திருக்கும் எலியட் மீட் மார்க்கெட் சக உரிமையாளரான ஸ்காட் ஜான்சன் கூறுகிறார்.
“அவர் மின்சாரத்திற்கான உரிமைப்பதிப்பை எடிசனின் ஆட்களுக்கே விட்டுக்கொடுத்தார். தமது கண்டுபிடிப்புகளுக்காக சிக்காகோ உலக சந்தையில் அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பாராட்டு நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் அவர் மரணமுற்றார்.”
மோசஸ் பாஃர்மர் தமது மனைவியான ஹான்னா ஷாப்லே அவர்களை எலியட்டிலேயே சந்தித்தார். அம் மாது ஒரு பிரபல வள்ளலாகவும், பெண்ணியம் சார்ந்தவர் ஆகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தார். அவர் அக்காலத்து பிரபலமான சீர்திருத்தவாதிகளான கிளாரா பார்ட்டன், ஹேரியட் பீச்சர் ஸ்டோவ், ஹேரியட் டப்மேன் போன்றோருடன் நன்கு பழக்கப்பட்டிருந்தார்.
வடக்கிலும் கெனடாவிலிருந்தும் சுதந்திர மாநிலங்களுக்கு தப்பிச் செல்லும் அடிமைகளுக்கு பாஃர்மர்களின் வீடு இரகசிய தொடர்வண்டி வழியில் பாதுகாப்பான பிராயணத்திற்கு ஒரு முக்கிய கூடுமிடமாக விளங்கியது.
மோசஸ் பாஃர்மரின் மறைவிற்குப் பிறகு, அவருடைய மகளான சாரா பிஸ்காட்டாக்குவா ஆற்றின் கரைகளில் கிரீன் ஏக்கர் என பெயரிடப்பட்ட ஓர் உல்லாச தங்கும் விடுதியை ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொண்டார்.
அந்த உல்லாச விடுதி முயற்சி தோல்வி கண்ட பிறகு உலகை சுற்றியுள்ள பகுத்தறிவாளர்கள், ஆன்மீக தலைவர்கள் மற்றும் மேம்பாட்டு சிந்தனையாளர்களுக்கு ஒன்றுகூடுமிடமாக பயன்படக்கூடிய ஒரு மாநாட்டு மையத்தை உருவாக்கினார்.
1894ல் அவர் கிரீன் ஏக்கர்ஸ் மாநாட்டு மையத்தை திறந்தார், மற்றும் அவருடைய ஆன்மீக விழித்தெழுதலை குறிக்கும் பிரமாண்டமான அமைதிக் கொடி ஒன்றை அங்கு ஏற்றினார்.
பின்னாட்களில், ஐரோப்பாவில் பிரயாணம் செய்த போது, அவருடை பிற்கால தீர்மானங்கள் மீது தாக்கம் செலுத்திய உற்சாக தூரநோக்கை வழங்கிய பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லாவின் மகனான அப்துல் பஹாவை சந்தித்தார்.
கிரின் ஏக்கருக்கு மீண்டும் திரும்பிய பிறகு, அவர் கிரீன் ஏக்கர் பஹாய் பள்ளியை நிறுவினார்.
அவர் எலியட் நகரில் பிட்டர்ஸ்வீட் எனும் பாஃர்மர் இல்லத்தில் 1916ல் காலமானார்.
http://www.seacoastonline.com/articles/20100802-NEWS-8020326