உலகில் ஏன் இத்தனை புரட்சிகளும் போராட்டங்களும் நடக்கின்றன?


சமீபகாலமாக உலகின் பல பகுதிகளுக்கு பரவியுள்ள எதிர்ப்புக் கூட்டங்கள் சற்று மனதை ஆச்சரியப்படவே வைக்கின்றன. திடீரென ஏன் இத்தனை உணர்வெழுச்சி? திடீர் காரணங்கள் ஏதும் இருந்ததாக தெரியவில்லை. இப்படியெல்லாம் நடக்கப்போகின்றது என்பதற்கு வெளிப்படையான அறிகுறிகளும் இல்லை. ஆனால், உலக சரித்திரத்தை சற்று ஆராய்வோமானால் இத்தகைய எதிர்ப்புகள் நிகழ்வது பல நூற்றாண்டுகளாகவே அவ்வப்போது நிகழ்ந்துள்ளன என்பது தெளிவு. ஒரே காரணத்திற்காக அன்றி அவை பல்வேறு காரணங்களுக்காக நிகழ்ந்துள்ளன. இவற்றுக்கு பஞ்சம், போர், சமயங்கள், அரசியல் என பல மூலகாரணங்களைக் கூறலாம்.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் ரோம் நகரில் ஒரு போராட்டம் நடந்தது. இது அடிமைகளால் நடத்தப்பட்ட ஒரு போராட்டம். அடிமைகளுக்கு தலைவனாக விளங்கிய ஸ்பார்ட்டகஸ் அடிமைத்தனத்திற்கு எதிராக ரோம் நகரின் பிரபுக்களுக்கு எதிராக நடத்திய போராட்டம் இது. போராட்டம் பல விதமாக சென்று இறுதியில் ஸ்பார்ட்டகஸ் தமது வீரர்களோடு போர்க்களத்தில் மரணம் அடைந்தார் என ரோம் சரித்திரம் கூறுகிறது. அதே போன்று 1381ல் இங்கிலாந்தில் நடந்த உழவர் புரட்சி அந்த நாட்டில் நடந்த ஒரு முக்கிய புரட்சியும் வருங்காலத்தில் பெரிதும் பேசப்படும் ஒரு புரட்சியாகவும் அமைந்தது.பிறகு பிரான்ஸ் நாட்டில் (1789-1799) நடந்த புரட்சியை குறிப்பிடலாம். இப்புரட்சியில் மன்னராட்சி முறையிலிருந்து மக்களாட்சி முறைக்கு சில மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால் இவை யாவும் ஆங்காங்கே தனித் தனியாக நடந்த புரட்சிகள். உலகளாவிய நிலையில் நிகழ்ந்தவை அல்ல.

19ம் நூற்றாண்டு தொடங்கி 20ம் நூற்றண்டில் கடுவேகத்துடன் செயல்பட்டு உலக அரசர்கள் பெரும்பாலோர் தங்கள் இராஜ்ஜியங்களை இழந்து நடுத்தெருவில் நின்றது மட்டுமல்லாமல் தங்கள் உயிரையும் இழக்கச் செய்தது ஓர் உலக அளவிலான புரட்சி. ரஷ்ய நாட்டின் போல்ஷெவிக் புரட்சியில் அந்த நாட்டு மன்னரும் அவர்தம் குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டது ஞாபத்திற்கு வரும். இதன் பின்னர் கம்யூனிச புரட்சியில் பல உலக நாடுகள் கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையில் தங்கள் அரசாங்கங்களை அமைத்துக்கொண்டன பிறகு அவையும் 20ம் நூற்றாண்டின் இறுதியில் அடித்த ஒரு புரட்சிப் புயலில் வேரோடு சாய்ந்து போயின. இப்போது மத்திய கிழக்கிலும் வட ஆப்பிரிக்காவிலும் இந்த புரட்சிப் புயல் அடிக்கத் துவங்கியுள்ளது. உலகத்தில் ஏற்பட்ட பல புரட்சிகளின் கணக்கிலடங்கா பட்டியலை இங்கு காணவும்:

இவ்விதமாக உலகில் காலங்காலமாக மக்கள் புரட்சிகள் என்பன தொடர்ந்தாற்போல் நடந்துவந்துள்ளன. இவ்விதமான புரட்சிகள் மனித இயல்பின் ஓர் அங்கமா அல்லது இதற்கு ஏதோ உள் காரணம் உள்ளதா எனும் கேள்வி எழுகின்றது. இதற்கு சுலபமாக பதில் காண்பது என்பது சற்று இயலாததாகும். இதற்கு பல காரணங்கள் இருக்கக்கூடும்; சமூக-பொருளாதார காரணங்கள் மற்றும் அரசியல் காரணங்களைக் கூறலாம். இவைகூட சூழ்நிலைகளைப் பொருத்தே ஏற்படுகின்றன. நடப்பில் உள்ள அரசாங்கம் வலுவிழந்து எதிர்ப்பு சக்திகள் வலுவடையும்போதும் இவ்வித புரட்சிகள் நிகழவும் வாய்ப்பேற்படுகின்றன. ஏற்கணவே கூறியது போன்று இதற்கு சுலபமான பதில் கிடையாது. மூல காரணங்களை காண்பதற்கு முன் மனிதன் என்பவன் யார், அவன் எதற்காக இப்பூமியில் உலவி வருகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இல்லையெனில் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாகிவிடும்.

இரான் நாட்டில் 1844ல் துவங்கிய பஹாய் சமயத்தின் ஸ்தாபகரும் இக்காலத்திற்கான கடவுளின் அவதாரமான பஹாவுல்லா மனிதனின் படைப்பு குறித்து பிரார்த்தனை ஒன்றில் பின்வருமாறு கூறுகிறார்:

என் கடவுளே, தங்களை அறிந்து வழிபடுவதற்கெனவே என்னைப் படைத்திருக்கின்றீர் என்பதற்கு நானே சாட்சி.

அதாவது மனிதனின் நடுநோக்கம் தன் படைப்பின் உண்மையை அறிந்து அதற்கேற்ப தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே இத்திருவாக்கின் அர்த்தமாகும். கடவுள் தமது படைப்பில் ஒவ்வொரு ஜீவராசியையும் அதனதன் விதத்தில் படைத்தார் ஆனால், மனிதனை மட்டும் அவர் தமது சாயலில் படைத்துள்ளார் என விவிலிய நூலின் பழைய ஏற்பாட்டின் ஜெனசிஸ் அத்தியாயத்தில் காண்கின்றோம். அதாவது மனிதனுக்கு கடவுளின் எல்லா தெய்வீகத் தன்மைகளையும் பிரிதிபலிக்கும் ஆற்றல் உள்ளது என்பது இதன் பொருள். பஹாவுல்லா பின்வருமாறு கூறுகிறார்:

“உலகையும் அதனுள் வாழ்வன, ஊர்வன ஆகிய அனைத்தையும் படைத்து, அவர் தமது கட்டுப்படுத்தவியாலாத மாட்சிமை பொருந்திய கட்டளையின் தெளிவான இயக்கத்தின் மூலமாக மனிதனை மட்டுமே தேர்ந்தெடுத்து, அவனுக்குத் தம்மை அறிந்து கொள்ளும், அன்பு கொள்ளும் தனிச்சிறப்பையும், ஆற்றலையும் வழங்கியுள்ளார். படைப்பு முழுமைக்கும் உயிரளிக்கும் தூண்டுதல் சக்தியாகவும் அடிப்படை நோக்கமாகவும் கருதப்பட வேண்டிய ஆற்றல் இதுவே. ஒவ்வொரு தனிப்படைப்பின் மெய்மையின் ஆழத்தினுள் அவர் தமது திருநாமம் ஒன்றின் பிராகாசத்தினைப் பாய்ச்சி அதனைத் தமது தன்மைகளின் ஒளி ஒன்றினை பெறுவதாய் ஆக்கியுள்ளார், ஆனால் அவர் மனிதனின் மெய்மையின் மீது மட்டும் தமது எல்லா நாமங்களின், பண்புகளின் பிரகாசத்தினை ஒரு கூறாக விழச் செய்து, அதனையே தம்மை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக ஆக்கியுள்ளார். படைப்பு பொருட்கள் மத்தியில் இருந்து மனிதனை மட்டுமே தனிமைப்படுத்தி அவனை இப்பெரும் சலுகைக்கும், இவ்வழியா வல்லமைக்கும் உடையவனாக ஆக்கியுள்ளார்.”

இதை அறியாமலும் அத்தகைய ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளாமலும் மனிதன் வாழும் போது அவன் மிருக நிலையிலேயே செயல்படுகிறான்.

பஹாய் திருவெளிப்பாடு 1844ல் முதலில் உண்டாகியது. அவ்வெளிப்பாட்டின் விளைவாக உலகத்தின் சமநிலை நிலைகுலைவிற்கு ஆளாகியிருப்பதாக பஹாவுல்லா கூறுகிறார்:

இம்மாபெரும், இப் புதிய உலக அமைப்பின் அதிர்வு மிக் தாக்கத்தின் மூலம் உலகின் சமநிலை நிலைகுலையச் செய்யப்பட்டுள்ளது. மனித குலத்தின் சீரான வாழ்வு இத் தனிச் சிறப்புடடைய இவ்வற்புதமிக்க அமைப்பு முறையின் மூலமாக மகத்தான மாற்றத்ததிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

பஹாவுல்லாவின் சமயத்தின் நோக்கம் உலகத்தை ஒரே உலக அரசாங்கத்தின் அடிப்படையில் ஒன்றுபடுத்துவதாகும். அதற்கான முதிர்ச்சி நிலையை மனிதன் அடைந்துவிட்டான், அவனுடைய பௌதீக ரீதியான பரிணாம வளர்ச்சி ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. இனி அவன் ஆன்மீக ரீதியில் தனது படைப்பின் குறிக்கோளை நோக்கி பயணிக்க வேண்டும். இதற்கான கல்வி முறைகள் அமைக்கப்பட வேண்டும். ஆனால், மனிதன் இனியும் அறியாமையில் வாழ்ந்து வந்தால் என்ன நடக்குமோ அதுதான் இன்று உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கின்றது.

இரான் நாட்டில் பஹாய்கள் நிலை: நட்பு கொள்வது சட்டவிரோதமானது!


ஓர் அமெரிக்க நண்பர் எழுதியது.

நட்பு கொள்வது சட்டவிரோதமானது!

வேறுபட்ட சமயத்தை சார்ந்தவர்கள் என்பதனால் ஒரே நாட்டின் மக்கள் ஒருவரோடு ஒருவர் நட்பு கொள்வது சட்ட விரோதமானது எனும் கூற்றை நீங்கள் எங்காவது கேள்விப்பட்டதுண்டா? அது மட்டுமா அவர்களின் மாடுகள் கூட ஒன்றாக மேய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இப்படியும் ஒரு நாடு!

இரான் நாட்டின் ரப்ஃஸஞ்சான் எனும் நகரில் முஸ்லிம்களோடு நட்பு கொண்டார்கள் எனும் காரணத்திற்காக அங்கு வாழும் பஹாய்கள் மீது தீவைப்பு தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. சுமார் 12 பஹாய்களின் கடைகள் தீவைக்கப்பட்டபின், பஹாய்களின் இல்லங்களுக்கு ஒரு எச்சரிக்கை கடிதம் வந்துள்ளது. அதில் அவர்கள் முஸ்லிம்களோடு நட்போ தொடர்போ கொள்ளக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது இவெல் எனும் இடத்தில் பஹாய்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதின் தொடர்பில் வந்துள்ளது. இதே இவெல் கிராமத்தில்தான் பஹாய்களின் மாடுகளும் முஸ்லிம்களின் மாடுகளும் ஒன்றாக மேயக்கூடாது எனும் கிராமத்து சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

இவ்வாரம், தங்களுடைய சமய நம்பிக்கைகளுக்காக மட்டுமே சிறையில் வைக்கப்பட்டுள்ள, ஒரு பாவமும் அறியாத அவர்களின் உறவினர்களின் விடுதலைக்காக ஐக்கிய அமெரிக்காவில் வதியும் இரான் பஹாய்கள் நால்வர் வாஷிங்டன் வரவிருக்கின்றனர். இக்கைதிகளில் மூவர் “யாரான் அல்லது தோழர்கள் ” எனப்படும் தேசிய அளவிலாக நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள் எனும் முறையில் 10 வரடு சிறை தண்டனை அனுபவிக்கின்றனர் மற்றும் வசதியற்ற இளைஞர்களுக்கு எழுத்தறிவு கல்வி குறித்த இயக்கம் ஒன்றில் பங்காற்றியதற்காக ஒரு இளம்பெண் 4 வருட சிறை தண்டனை அனுபவிக்கின்றாள். இருள் சூழ்ந்த இவ்வருந்தத்தக்க மனித உரிமை சூழ்நிலையை விளக்கும் முயற்சியில், இவ்வுறவினர்கள் பல சந்திப்புகளை நடத்தவிருக்கின்றனர் (அவையாவன: Chair of the House Foreign Affairs Committee, Representative Ileana Ros-Lehtinen; Senator Mark Kirk; Congressman Frank Wolf; as well as officials at the State Department, the U.S. Commission on International Religious Freedom and members of the press.)

சர்வாதிகார கொடுங்கோன்மைச் சூழ்நிலை தழைக்கவேண்டுமானால் — நாட்ஸி ஜெர்மனி இங்கு உடனடியாக ஞாபகத்திற்கு வருகிறது — பொதுப் பார்வையாகப்பட்டது மத்திய அதிகாரத்தினின்று “வேறு”, சாதாரனமாக பலியாடுகளாக பயன்படும் ஒரு சிறுபான்மை சமூகத்தினர் மீது படியவேண்டும். இரான் நாட்டில், அவர்களுடைய மாடுகள் உட்பட, பஹாய்களையும் இரான் நாட்டின் பிர பிரஜைகளையும் பிரித்திட, பஹாய்களை ‘மொஹாரெப்’ அல்லது ‘கடவுளின் எதிரிகள்’ என கூறுவது உட்பட சகலவிதமான வாய்ப்புக்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பஹாய்கள் எவ்விதத்திலும் எதிரிகள் அல்ல; அவர்கள் தங்கள் சமய கோட்பாட்டிற்கு இணங்க எவ்வித முரண்பாடு மற்றும் சச்சரவுகளிலும் ஈடுபடுவதில்லை. 3,00,000 உறுப்பினர்களை கொண்ட பஹாய் சமூகம் இரான் நாட்டின் சிறுபான்மை சமூகங்களிலேயே ஆகப் பெரிய சமூகமாகும். அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடுங்கோன்மைகள் இரான் நாட்டையே தற்போது சூழ்ந்துள்ள கடுங்கொடுங்கோன்மைகளையே பிரதிபலிக்கின்றன.

பல முயற்சிகள் செய்யப்பட்டும், கடந்த மூன்று பத்தாண்டுகளாக நட்பு என்பது செழிக்கும் ஒரு நாடாக இரான் நாடு விளங்கவில்லை. அமெரிக்காவிற்கும் இரானிற்கும் இடையே முறிந்துகிடக்கும் தூதரக உறவுகள், நிருபர்கள், பயணிகள், உயர்கல்வி மாணக்கர்கள், மனித உரிமை போராளிகள் மற்றும் சிறுபான்மை சமூகங்கள் இதற்கு நிறையவே சாட்சியமளிக்கின்றன. ஆனால் இது நிலைக்கலாகாது மற்றும் என்றும் நிலைத்திருக்கவும் போவதில்லை. இறுதியில் வெறுப்பாற்றல்களை அவற்றைவிட மேலும் வலுவான நட்பாற்றல்களைக் கொண்டு எதிர்ப்பதே இறுதியில் உறுதியான வெற்றியளிக்கும்.

ஆகவே, நாம் நமது சுதந்திரத்தை பயன்படுத்தி இரான் நாட்டின் சுதந்திரத்திற்காக முயற்சிகள் செய்திட உறுதிகொள்வோம். மற்றும், நட்புறவுகள் தடுக்கப்பட்டுள்ள இரான் மற்றும் அது போன்ற அடக்குமுறை நாடுகளின் நிலைக்காக ஈடுசெய்திட நாம் நம் சொந்த நாட்டிலும் புதிய ஆழமான நட்புமுறைகளை உருவாக்கிட நமது சுதந்திரத்தை பயன்படுத்துவோம். நீங்கள் கிருஸ்தவ, யூத, பௌத்த, ஹிந்து, முஸ்லிம், பஹாய் அல்லது நாஸ்திகராக இருந்தபோதிலும், உங்கள் நம்பிக்கைக்கு வேறுபட்ட ஒருவரை மதிய உணவிற்கு அழைத்து செல்லுங்கள் அல்லது அவர்களுடைய வழிபாட்டு இல்லங்களுக்கு வருகைதாருங்கள். மனுக்குலத்தின் எல்லா உறுப்பினர்களிடையே நட்பு மற்றும் ஐக்கியத்தின் பிணைப்புக்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் எனும் தங்களுடைய நம்பிக்கைக்காக தற்போது பத்தாண்டுகால சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் இரான் நாட்டில் துன்புறும் ‘யாரான்’ அல்லது ‘தோழர்கள்’ எனப்படும் சிறைவாசம் அனுபவிக்கும் பஹாய்களுக்கு நீங்கள் அவர்களின் தியாகங்களின் விளைவாக மேலும் பல புதிய நட்புகளை ஏற்படுத்திக்கொள்கிறீர்கள் எனும் செய்தி நிச்சயமாக மன ஆறுதலை தரும்.

மனவேதனையை எதிர்கொள்வது (processing pain) – ஒரு பஹாய் கண்ணோட்டம்


…எத்தகைய காரணங்களால் விளைந்தபோதும், வேதனை என்பது முறையாக பயன்படுத்தப்பட்டால் அதுவே ஆன்மீக வளர்ச்சிக்கான ஒரு தூண்டுகோலாக அமையும்.

திரு பிரென்ட் போய்டியே அவர்களின் பதிவு

கடவுளே, என் கடவுளே! தாழ்மையுடனும், மன்றாடியும் தரையில் முகம் பதித்து, எனக்கு ஊறு செய்த எவரையும் மன்னித்தருளுமாறு என் முழு மனதுடனான பிரார்த்தனையின் வாயிலாக உம்மை வேண்டிக்கொள்கின்றேன்;எனக்கெதிராக சதி செய்து என்னைப் புண்படு்த்தியவரை மன்னிப்பீராக; எனக்கு அநீதி விளைவித்தோரின் துர்செயல்களை துப்புரவு செய்திடுவீராக. உமது நல் வெகுமதிகளை அவர்களுக்கு அருள்வீராக, அவர்களுக்கு ஆனந்தமளிப்பீராக, அவர்களின் துன்பத்தைக் களைவீராக, அவர்களுக்கு அமைதியையும் செழிப்பையும் வழங்குவீராக, அவர்களுக்கு உமது பேரின்பத்தையளித்து அவர்கள் மீது உமது கொடைகளைப் பொழிவீராக. நீரே வலிமைமிக்கவர், அருள்மிக்கவர், ஆபத்தில் உதவுபவர், தன்னிறைவானவர்.

நம்பமுடியாத வகையில் பல வருடகாலமாக தமக்கு பெருந்தீங்கு செய்தோரை மன்னித்தும் ஆசீர்வதிக்குமாறும் கடவுளிடம் மன்றாடும் அப்து’ல்-பஹாவின் பிரார்த்தனை இது. ஒருவர் துன்பத்தை — அதாவது துரோகச் செயல்களால் விளையும் துன்பத்தை — எவ்வாறு எதிர்கொள்ள தூண்டுகின்றன என்பது குறித்த பஹாய் திருவாக்குகளை காண விரும்பும் எவர்க்கும் இது பெரிதும் அறிவூட்டுவதாக இருக்கின்றது.

நமது அன்பிற்குகந்த ஆனால் துரோக சிந்தனையாளர்கள் என நிரூபிக்கப்படுவோரால் ஏற்படுத்தப்படும் வேதனையை; நமது குறைபாடுகள் அல்லது பிறரால் ஏற்படுத்தப்படும் ஏமாற்றத்தின் வேதனையை; துயரம் மற்றும் பேராசைகளால் ஏற்படும் வேதனையை நாம் எல்லாருமே அனுபவித்திருப்போம். இத்தகைய சூழ்நிலைகள் ஏற்படும்போது நாம் தனிமையை நாடி, மனக்காயங்களை ஆறவைத்து, வலியை மறக்க முற்படுவோம். அவதூறுக்கு ஆளான ஒரு பஹாய் அன்பரை அத்தகைய சூழ்நிலைகளின்போது கடவுளின் பாதையில் அவருடைய சேவைகளை அதிகரிக்குமாறும், பிறரால் போற்றப்படவோ, அவர்களின் தூற்றுதல்களால் மன உளைச்சலுக்கு ஆளாகமலோ இருக்குமாறும் வலியுறுத்துகிறார்:

“ஒருவர் கடவுளால் போற்றப்பட்டும் தேர்ந்தெடுக்கவும் பட்டால் உலகின் படைப்பினங்கள் அனைத்தின் குற்றச்சாட்டுகளும் அவருக்கு எத்தகைய நஷ்டத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை; மாறாக கடவுளின் முன்னிலையில் அம்மனிதர் ஏற்றுக்கொள்ளப்படாமல் போனால், மனிதர்கள் அனைவரின் போற்றுதலும் மெச்சுதல்களும் அவருக்கு எப்பயனையும் விளைவிக்கப்போவதில்லை. இவற்றால் குறிக்கப்படுவது என்னவென்றால் உமக்கெதிராக பிரசுரிக்கப்பட்டவைகளால் நீர் வருத்தமும் துன்பமும் படலாகாது என்பதே ஆகும்; மாறாக கடவுளின் மீது உமது நம்பிக்கையை வைத்தும் மக்களின் போற்றுதல்கள் அல்லது அவர்களால் உமக்கெதிராக பரப்பப்பட்ட குற்றச்சாட்டுகளால் நீர் தளர்வுறாமலும் இருக்கவேண்டும்; கடவுளின் மீதே முழுமையான நம்பிக்கை வைத்து அவரது புனித ‘திராட்சைத்தோட்டதில்’ அவருக்கு சேவை செய்யும் முயற்சியில் உம்மை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும்.”

அது எத்தகைய காரணங்களால் விளைந்தபோதும், வேதனை என்பது முறையாக பயன்படுத்தப்பட்டால் அதுவே ஆன்மீக வளர்ச்சிக்கான ஒரு தூண்டுகோலாக அமையும். கடவுளின் அறிவை அடையும் முயற்சியில் ஈடுபடும் ஓர் ஆன்மா கடக்க வேண்டிய பல கட்டங்கள் குறித்து விவரிக்கும் தமது படைப்பான “ஏழு பள்ளத்தாக்குகள்” எனும் நூலில் பஹாவுல்லா, “வேதனையின்றி (அல்லது வலியின்றி), இப்பயனம் முடிவுறாது,” என குறிப்பிடுகின்றார்.

இதே வாக்குப்பகுதியில், அத்தர் எனும் பெயர்கொண்ட பாரசீக மர்மக் கவிஞரை பஹாவுல்லா சுட்டுகின்றார் மற்றும் அது இங்கே குறிப்பிடப்படுகின்றது: விசுவாசி தனது நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ளட்டும்; அவிசுவாசி தனது சந்தேகப்போக்கை தக்கவைத்துக்கொள்ளட்டும். ஓர் அனுவளவே ஆயினும் அத்தரின் இதயம் ‘வலி’யையே நாடுகிறது. தனிமனித வளர்ச்சிக்கான பாதையில் துன்பங்களின் வலியின் மதிப்பை அத்தர் புரிந்துகொண்டுள்ளார். மன வேதனையை எதிர்கொள்ளவும் ஆன்மாவுக்கு ஆறுதலை அளிக்கவும் உதவக்கூடிய பஹாவுல்லாவின் பின்வரும் பிரார்த்தனை ஒன்றில் இதுவே வெளிப்படுத்தப்படுகின்றது:

“என் இறைவா, மகிமை உமக்கே உரியதாகட்டும்! உமது பாதையில் அனுபவிக்கப்படும் பேரிடர்கள் மூலமாக அன்றி, உமது அன்பர்கள் எவ்வகையில்தான் கண்டுகொள்ளப்படக் கூடும்; உமது அன்பிற்காக தாங்கப்படும் சோதனைகளின் வாயிலாக அன்றி, உமக்காக ஏங்குவோரின் ஸ்தானங்கள் எவ்வகையில்தான் வெளிப்படுத்தப்படக்கூடும்? உமது வல்லமையே எனக்கு சாட்சியமளிக்கின்றது! உம்மை பூஜிப்போர் அனைவருக்கும் அவர்கள் விடும் கண்ணீரே தோழர்களாகும், உம்மை நாடுவோருக்கு அவர்களுடைய துயரக்குரல்களே ஆறுதலளிக்கின்றன, உம்மை சந்திக்க விரைவோருக்கு உணவாக அவர்களின் சிதைந்த இதயங்களின் கூறுகளே உள்ளன.”

வேதனையின் வலி, நன்முறையில் பயன்படு்த்தப்படுமானால், அதுவே மாறுதலுக்கான ஓர் ஊக்குமுகத் தூண்டுகோலும், இறைவன்பால் நம்மை நெறுக்கமுறச் செய்வதற்கான தூண்டுகையும், நமது குறிக்கொள்களை சுத்திகரிப்பதற்கான வழியும் ஆகும். மனவேதனையை குறைப்பதற்கு நேரடியாக முயலுவது அதற்கு எதிர்மாறான விளைவையே உண்டாக்கும் என்பதை நான் சுயமாக அறிந்துள்ளேன். மாறாக, வேதனை உணர்வை அரவணைத்தபடியே அவ்வலிக்கு தீர்வு காண முயலுகிறேன். பல வருடங்களுக்கு முன் ஒரு பாரசீக பழமொழியை படித்தது ஞாபகத்திற்கு வருகிறது: “ஒன்று மனதை வேதனைப்படுத்திடுமானால் — அதை அவ்வாறே விட்டுவிடுங்கள்.” இதை சாலச் சிறந்ததொரு அறிவுரையாக நான் கண்டுள்ளேன். என் வேதனைக்கான மூலகாரணம் யாது என என்னை நானே கேட்டுக்கொண்டு, எனக்குள் அவ்வேதனையை உருவாக்கிய அம் மூலகாரணத்தை அகற்றுவதற்கு தீர்க்கமாக முடிவெடுப்பேன். எனது குறைபாடுகள் வெட்ட வெளிச்சமானதனாலோ, வேறொருவரே அவ்வேதனைக்கு காரணமாக இருந்தாலோ சரி; அவ் வேதனை தொடர்ந்து என் மனதுள் வலியை உண்டாக்கிட விட்டுவிட்டு, அவ்வேதனையின் தீயில் என் அகந்தை எரிந்து சாம்பலாகிப் போவதாக நான் ஒரு கண்ணோட்டம் கொண்டால், அவ் வேதனை விலக்கின்றி எனக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் நான் மேம்பாடு அடைந்திடவே உதவுகின்றது. இது ஷோகி எஃபெண்டி அவர்களின் பின்வரும் வழிகாட்டுதலோடு ஒத்திருக்கின்றது:

“…துன்பம் என்பது தவிர்க்க இயலாத ஒரு மெய்ம்மை என்றபோதிலும், அதுவே மகிழ்ச்சிநிலையை அடைவதற்கான ஒரு வழியாக பயன்படுத்தப்படலாம். அவதாரங்களும் ஞானியர்களும் துன்பத்திற்கு தந்துள்ள விளக்கம் இதுவே. அவர்கள் கடுந்துன்பங்கள் மற்றும் சோதனைகளுக்கிடையே ஆனந்தத்தையும் களிப்பையும் உணர்ந்து வாழ்க்கையில் அதிசிறந்த மற்றும் அதிபுனிதமானவற்றை அனுபவித்தனர். துன்பம் என்பது ஓர் எச்சரிக்கை மற்றும் அது ஒரு வழிகாட்டியும் ஆகும். அது நம்மை நமது சூழ்நிலைகளுக்கு ஒப்ப வாழ்ந்திட தூண்டி, அதன் மூலம் சுயமேம்பாட்டிற்கு வழிகாட்டுகிறது.

பஹாவுல்லாவின் திருமகளாகிய பாஹிய்யா காஃனும் அவர்களைப் பற்றியும் வேதனையை எதிர்கொள்ளும் அவருடைய அதிவுயர்ந்து ஆன்மீகப் பேற்றை பற்றியும் மார்ஜரி மோர்ட்டன் பின்வருமாறு கூறுகிறார்:

“வாழ்க்கையில் தாம் சந்தித்த கொடுமைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அவர் எதிர்கொண்டதில் அவர் மன்னிக்கும் தன்மைக்கும் அப்பாற்பட்ட, அதற்கும் மேலான ஒன்றையே வெளிப்படுத்தினார். மனம் புன்படுவதும் மன்னிப்பதும் தெய்வீகமாகும், ஆனால் புரிந்துகொண்டும் மனம் புன்படாமல் இருப்பதும் இவற்றையெல்லாம் விட அதி மேலான ஒன்றாகும்.”

மற்றும்,

“… ஒருவர் அவரை நோகடிக்க முயன்றால், அவர் அம்மனிதரின் கொடூரத்திற்காக அம்மனிதனுக்கே ஆறுதல் கூற விரும்புவார்.”

சில நேரங்களில் வேதனை உணர்வைவிட அவ்வேதனைக்கான மூலகாரணம் ஆழமானதாக இருக்கும், மற்றும் கடவுளை கண்டுகொள்ளாத ஓர் ஆன்மாவின் நிலையையே அது வெளிப்படுத்துகிறது. பஹாவுல்லா, கிருஸ்தவர்கள் எதிர்ப்பார்த்திருக்கும் “அதிபெரும் இடுக்கண் (The Great Tribulation)” என்பதோடு அதை அடையாளப்படுத்துகிறார். தமது “உறுதிப்பாட்டிற்கான நூலில் (Book of Certitude) “ஏசுநாதரின் மறுவருகை குறித்த அடையாளங்கள் பற்றிய தமது விளக்கவுரையில் இதையே “கொடுங்கோன்மை” என பின்வருமாறு பஹாவுல்லா எழுதியுள்ளார்:

இறைவனின் அறிவை அடைய விரும்பும், உண்மையை தேடும் ஓர் ஆன்மா அதற்காக எங்கே செல்வது மற்றும் யாரிடமிருந்து அதை பெறுவது என்பது தெரியாமல் தவிப்பதைவிட “வேறு கொடுங்கோன்மை” என்னதான் இருக்க முடியும்?

ஒவ்வொரு யுகத்திலும் உலகத்திற்கு வழங்கப்படும் கடவுளின் வார்த்தையானது மனித ஆன்மாவினுள் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. ஒருவரின் அகத்திலும் உலகத்தில் பொதுவாகவும், தெளிவும் மேன்மைமிக்கதுமான ஓர் அமைப்புமுறை தோன்றுவதற்கு முன் பெரும் அமளியே நிலவுகிறது என பஹாவுல்லா தமது திருவாக்கு ஒன்றில் வெளிப்படுத்துகிறார்:

உமது சித்தத்தின் உள்ளாற்றல் மற்றும் குறிக்கோள் வாயிலாக முதல் வார்த்தையானது அவரது திருவாயிலிருந்து வெளிப்பட்டவுடனும் அவரது உதடுகளிலிருந்து முதல் அழைப்பு முன் சென்றவுடனும் படைப்பு முழுமையும் புரட்சிகரமான மாற்றம் கண்டு, விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள அனைத்தும் ஆழ்ந்த நெகிழ்ச்சியுற்றன. அவ்வார்த்தையின் மூலமாக படைப்பனைத்தின் மெய்ம்மைகளும் ஆட்டம் கண்டு, பிளவுகளுற்று, பிரிந்து, சிதறி, ஒன்றுசேர்க்கப்பட்டு ஒற்றுமைப்படுத்தப்பட்டு, மண்ணுலகு தெய்வீக உலகு இரண்டிலும், ஒரு புதிய படைப்பின் உருபொருள்களை வெளிப்படு்த்தி, கண்ணுக்கு புலனாகா இராஜ்ஜியங்களில் உமது ஐக்கியம் மற்றும் ஒறுமைத்தன்மையின் அடையாளங்களையும் சின்னங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. அவ்வழைப்பின் வாயிலாக நீர் உமது சேவகர்கள் அனைவருக்கும் உமது மாபெரும் திருவெளிப்பாட்டின் வருகையையும் உமது முழுநிறைவான சமயத்தின் தோன்றலையும் அறிவித்துள்ளீர்.”

துன்பம் என்பது வாழ்வின் தவிர்க்கவியலா ஒரு பகுதியாகும். நமது வேதனையின் தோற்றுவாயை கண்டுகொண்டும், நமது வாழ்க்கையில் தேவையான சீர்களை செய்தும், அதையே மேலும் அதிகமான சேவைகள் செய்வதற்கான ஊக்குமுகமாக பயன்படுத்திட முயலுவதன் மூலமும், கடவுளின் அன்மையை மேலும் நெருக்கமாக அடைந்திட மனவேதனையை கடவுள் நமக்கு வழங்கியுள்ள கருவிகளில் ஒன்றாக நாம் காணலாம். ஷோகி எஃபெண்டி அவர்களின் வழிகாட்டலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

(சமய)போதனை களத்தில் ஆற்றப்படும் இம்மாபெரும் காரியங்களின் விளைமதிப்பின்மையின் ஒரு கூறாக அச்சேவை மனவேதனைகள் சூழ்ந்த உண்மையான தியாகங்களின் மூலமாக ஆற்றப்படவேண்டும். மனிதவாழ்வு குறித்த இக்கால அமெரிக்க கண்ணோட்டத்தில் துன்பம் என்பது ஒழுங்கின்மையால் உருவாகின்றது எனவும் அது தவிர்க்கப்படக்கூடும் என்பது மட்டுமல்ல மாறாக அது நல்லதல்ல, மேலும் தேவையான ஒன்றும் அல்ல எனும் ஒரு மனப்போக்கு உள்ளது. இத்தகைய மனப்பான்மையில் சிறிது உண்மை இருந்தபோதிலும், துன்பம் என்பது நமது சேவையின் ஓர் இன்றியமையா பகுதி என்பதை பாஹாய்கள் எனும் முறையில் நாம் நம்பியே ஆகவேண்டும். கடவுள் அவதாரங்கள் கொடுந்துன்பங்களை அனுபவித்தனர், அது போன்றே அருட்தொண்டர்களும் உயிர்த்தியாகிகளும் (அனுபவித்தனர்), மற்றும் தமது அழகிய பிரார்த்தனை ஒன்றில் பஹாவுல்லா கூறுவது போன்று ‘உடைந்து போன அவ்விதயங்களின் துண்டுகளையே அவர்கள் பெரும்பாலும் உண்டுய்த்தனர்’.