குழந்தைகளுக்கு கல்வியளித்ததற்காக கைது


ஜெனேவா – பல வருடங்களுக்கு முன் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஓரிடத்தில் குழந்தைகளுக்கு கல்வியளித்த பல பஹாய்கள் இரான் நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹரான் நகருக்கு தென்-கிழக்கில் உள்ள கெர்மான் மாநிலத்தில் பாலர்-நிலை கல்வியளித்தின் தொடர்பில் இதுவரை நான்கு பஹாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை பஹாய் அனைத்துலக சமூகம் உறுதிபடுத்தியுள்ளது. அந்த நகரில் மேலும் இரண்டு பஹாய்கள் கைது 13-மார்ச் அன்று செய்யப்பட்டுள்ளனர், ஆனால் இவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டனர் என்பது தெரியவில்லை, மற்றும் அவர்கள் அக்கல்வியளிப்பில் பங்கு கொண்டனரா என்பதும் உறுதிபடுத்தப்படவில்லை.

“2003ல் நடந்த இந்த நில அதிர்வில் பாம் நகரில் இருபது விழுக்காடு ஆசிரியர்கள் உட்பட சுமார் 26,000 மக்கள் உயிரிழந்தனர்,” என ஜெனேவாவில் உள்ள ஐநாவின் பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரதிநிதியான திருமதி டையேன் அலாயி கூறினார்.

“இப் பஹாய்கள் அப்பகுதியில் கல்விமுறை ஏறத்தாழ முற்றாக அழிந்துவிட்ட அந்த இடத்தின் குழந்தைகளுக்கு இந்த அத்தியாவசியமான சேவையை வழங்கி வந்தனர்.”

சென்ற வாரம், பாம், கெர்மான் மற்றும் தெஹரான் போன்ற இடங்களில் பாலர் கல்வி எனும் பெயரில் தங்களின் சொந்த திட்டங்களை செயல்படுத்தி வந்த “பஹாய் குழு” ஒன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பாம் நகர புரட்சிமன்றத்தின் பொது-பிராசிக்யூட்டர் அறிவித்ததாக, இரான் நாட்டின் மாணவர் மன்ற செய்தி நிறுவனம் அறிவித்தது. பஹாய்கள் நில அதிரிவின் தொடர்பில் கலாச்சார, சமூக மற்றும் கல்வி தேவைகளுக்கான திட்டங்களை பஹாய்கள் துஷ்பிரயோகம் செய்ததாக முகமது ரேஸா சஞ்சாரி கூறிக்கொண்டார்.

“இப்போது நடக்கும் இந்த கைது நடவடிக்கைகள் இரான் அரசு அந்ந நாட்டில் வாழும் 3,00,000 பஹாய்கள் மீதிலான சமயரீதியான கொடுங்கோன்மை செயல்களை விரிவாக்கும் மற்றும் மேலும் அதிகப்படுத்தும் செயலின் ஓர் உதாரணமாகும்,” என திருமதி அலாயி குறிப்பிட்டார்.

இதுவும் சமீப காலமாக நடைபெறும் பிற நடவடிக்கைகளும், பஹாய்கள் தாங்கள் வாழும் இடங்களில் மக்களுக்கு தேவைப்படும் உடனடி அத்தியாவசியமான சேவைகளை வழங்கிடும்போது கூட, அவர்கள் முஸ்லிம் மக்களை நெருங்கவிடாமல் தடுப்பதில் அரசு அதிகாரிகள் என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடும் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.”

இஸ்பாஃஹான் நகரில் 18 வயதான இருவர் உட்பட மூன்று பஹாய்கள் குழந்தைகளுக்கு கல்வியளித்ததற்காக இம்மாத முற்பகுதியில் கைது செய்யபட்டனர். இவர்கள் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

இரான் நாட்டில் இதுவரை சுமார் 79 பஹாய்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.

One thought on “குழந்தைகளுக்கு கல்வியளித்ததற்காக கைது”

  1. இரான் அரசாங்கத்தின் தொல்லை எல்லை மீறிவிட்டது. தகவலுக்கு நன்றி அங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: