உலக பாரம்பரிய தலம் ஒன்றான புதிதாக மறுபுதுப்பிப்பு கண்ட தங்களின் புனித திருவிடத்தை மீண்டும் பொதுமக்களின் பார்வைக்கு பஹாய்கள் திறந்துவிடுகின்றனர்


Washington Post- 12 ஏப்ரல் 2011

ஹைஃபா, இஸ்ரேல் — பஹாவுல்லாவின் விசுவாசிகள் கடந்த செவ்வாய் அன்று இஸ்ரேல் நாட்டின் கடலோரப்பகுதியில் உள்ள புதிதாக மறுபுதுப்பிப்பு கண்ட தங்களின் புனித திருவிடம் ஒன்றை பொதுப்பார்வைக்கு திறந்துவிட்டதன் வாயிலாக, புனித நிலத்தில் உள்ள அவ்வளவாக அறிந்திரப்படாத சமயங்களுள் ஒன்றின்பால் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

புதுப்பிக்கப்பட்ட புனிதகல்லறையின் நிழற்படங்களை இங்கு காணலாம்

ஐ.நாவினால் உலக பாரம்பரிய தலங்களுள் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ள, பாப் அவர்களின் நல்லடக்கத் திருவிடத்தின் மறுபுதுப்பிப்பு சுமார் இரண்டரை ஆண்டு காலமும் 60 இலட்சம் டாலர்களும் பிடித்தது என பஹாய் தலைமைத்துவம் கூறியது.

நிலநடுக்கத்தை தாங்கிட அக்கட்டிடம் நிலைதிருத்தம் செய்யப்பட்டும் வலுப்படுத்தப்பட்டும் உள்ளது. ஹைஃபா துறைமுகப் பட்டினத்தின் நிலப்பகுதியிலேயே அதிசிறப்புடன் காட்சியளிக்கும் ஓர் அம்சமான அக்கட்டிடத்தின் கோபுரம் 11,790 புதிய பொன் முலாமிடப்பட்ட தகடுகளால் வேயப்பட்டுள்ளது.

பஹாய் சமயம் 19ம் நூற்றாண்டு இரான் நாட்டில் அதன் மூலாதாரத்தைக் கொண்டுள்ளது. பொதுவாக பாப் அல்லது வாசல் எனும் நாமத்தைக் கொண்டும் ஓர் அவதாரம் என போற்றப்பட்டவருமான மனிதர் 1850ல் சமயத்திற்கு புறம்பாக செயல்பட்டார் என மரண தண்டனை வழங்கப்பட்டு, பிறகு சுமார் 60 ஆண்டுகளுக்குப்பிறகு ஹைஃபா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டார். இன்று உலகம் முலுவதும் பஹாய் சமயம் சுமார் 50லிருந்து 60 இலட்சம் விசுவாசிகளைக் கொண்டுள்ளது.

ஹாஃபா நகரில், மலைச்சரிவில் மேலிருந்து கீழ் வரை பெரும் மெருகுடன் நிர்மானிக்கப்பட்டுள்ள பளிச்சிடும் பசுமை நிற பூந்தோட்டங்களின் நடுமத்தியில் கோபுரத்துடன் கூடிய இப் பஹாய் திருவிடம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கலிபோஃர்னியா நகரைச் சார்ந்த சையெட் சமதி எனும் பஹாய் பொறியாளர் இம் மறுசீரமைப்பு காரியங்களை மேற்பார்வை செய்தார். திரு சமதி பல்லாண்டு காலமாக துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வந்துள்ள பஹாய்களைக் கொண்ட இரான் நாட்டைச் சார்ந்தவர் ஆவார் மற்றும் 1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு இரான் நாட்டில் பஹாய் சமயம் சட்டத்திற்கு புறம்பான ஒன்றென பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சீரமைப்பு குறித்த பெரும்பாலன காரியங்கள் பஹாய் தொண்டர்களால் எவ்வித ஊதியமும் வேண்டாமல் செயல்படுத்தப்பட்டதாக திரு சமதி கூறினார். “நடைபெற்ற வேலைகளைவிட நிலவிய ஊக்கவுணர்வே முக்கியமானது,” என அவர் மேலும் கூறினார்.

வரலாற்றுகாலம் முழுவதும் புனித நிலத்தை தங்கள் ஆதிக்கத்திற்கு உட்படுத்திட முயன்ற இஸ்லாம், கிருஸ்துவம் மற்றும் யூத மதங்கள் — ஜெருசல நகரத்தை பயபக்தியுடன் அனுகும் அதே வேளை சமய உணர்வால் இல்லாமல் தனது தொழிற்சாலைகள் மற்றும் சுறுசுறுப்பான ஒரு துறைமுகத்தின் வாயிலாக மட்டுமே பிரபலமான ஹைஃபா நகரிலேயே தங்கள் சமயத்தை பஹாய்கள் மையப்படுத்தியுள்ளனர். அங்குள்ள தங்கள் புனித திருவிடத்திற்கு சென்ற வருடம் சுமார் 7,50,000 மக்கள் வருகை தந்ததாக பஹாய்கள் அறிவிக்கின்றனர்.

இஸ்ரேல் நாட்டின் வடக்கே சிறிது தூரத்தில் கடற்கரை நகரான ஆக்கோவில் அதி புனிதமிக்க திருத்தலம் ஒன்றை பஹாய்கள் கொண்டுள்ளனர். அங்கு 1892ல் ஒட்டமான துருக்கியர்களால் சிறைவக்கப்பட்டும் பிறகு அங்கேயே விண்ணேற்றம் அடைந்த பஹாவுல்லாவின் புனித நல்லடக்க திருவிடத்தை ஆக்கோ பகுதி குறிக்கின்றது.

இரான் நாட்டிலிருந்து வரும் பஹாய்கள் குறித்த செய்திகள் அமெரிக்காவிற்கு வேதனையளிக்கின்றன


வாஷிங்டன் — இரான் நாட்டின் சிறுபான்மை சமயத்தினரான பஹாய்களின் தலைமைத்துவ எழுவர் மீது இரான் நாட்டு அதிகாரிகள் மீண்டும் விதித்துள்ள 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை குறித்து ஐக்கிய அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

‘யாரான்’ எனப்படும் இரான் நாட்டின் பஹாய் தலைமைத்துவத்தின் பத்தாண்டுகள் சிறைத்தண்டனை மீண்டும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது என லண்டன் நகரில் உள்ள Amnesty International எனப்படும் மனித உரிமை குழு தெரிவித்துள்ளது.

“பஹாய் தலைமைத்துவத்திற்கு பிராசிக்கியூட்டர் ஜெனரலின் மறுமுறையீட்டின் விளைவாக அவர்களின் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மீண்டும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த இரான் நாட்டிலிருந்து வெளிவரும் செய்திகளால் நாங்கள் பெரிதும் கவலையடைந்துள்ளோம்,” என ஒரு State Department பேச்சாளரான மார்க் டோனர் செய்தியாளர்களிடம் கூறினார்.

“பொது மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த அனைத்துலக உடன்பட்டின்கீழ் இது இதுவரை நிகழ்ந்திராத இத்தகைய செயலை ஓர் அத்துமீரலென நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.”

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், இரான் நாடு ஏழு பஹாய்களை தலைவர்கள் எனும் முறையில் அவர்கள் வெளிநாடுகளுக்கு வேவு பார்த்தது, உலகில் ஒழுக்கச்சீரழிவை பரப்பியது, இஸ்லாம் சமயத்தை கீழறுப்பு செய்தது மற்றும் பேரெதிரியான இஸ்ரேலுடன் உடனுழைத்தது எனும் அபத்தமான காரணங்களுக்காக அவர்களை 20 வருட சிறைத்தண்டனைக்கு உட்படுத்தியது.

இந்த 20 வருட சிறைத்தண்டனையால் எழுந்த அனைத்துலக சமூகத்தின் கண்டனங்களின் விளைவாக அது 10 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளது என பிரான்ஸ் நாட்டு பஹாய் சமூகம் அறிவித்தது.

அதிகபட்ச ஷீயா முஸ்லிம் மதத்தினரைக் கொண்ட இரான் நாட்டில் பஹாய்களுக்கு உயர்கல்வி அனுமதிக்கப்படவில்லை, அரசாங்க வேலைகளுக்கு வாய்ப்பில்லை, மற்றும் அவர்கள் நாஸ்திகர்கள் என கருதப்பட்டு 1979 இஸ்லாமிய புரட்சிக்கு முன்னும் சரி அதற்கு பிறகும் சரி அவர்கள் என்றுமே துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்துள்ளனர்.

1817ல் பிறந்த பஹாவுல்லாவை, கடவுளால் உலகிற்கு அனுப்பி வைக்கப்பட்ட இக்காலத்திற்கான அவதாரம் மற்றும் ஆன்மீக ரீதியில் சமயங்கள் அனைத்தும் ஒரே கடவுளிடமிருந்தே வந்துள்ளன மற்றும், மனித இனம் முழுவதும் ஒரே குடும்பம் என்பது பஹய்களின் நம்பிக்கையாகும்.

இரான் நாட்டில் இதுவரை 47 பஹாய்கள் அவர்களுடைய நம்பிக்கைக்காக சிறைவைக்கப்பட்டுள்ளனர் என பஹாய் தலைமைத்துவம் கூறுகிறது.