பிர்ஜந்த் மாநிலத்தின் குஸேஃப் நகரில் வாழ்ந்த ஜெனாபி முகம்மத் குஃலி காஃன் நாக்காயி எனும் பிரபல செல்வந்தர் அருட்பேரழகரான பஹாவுல்லவின் விசுவாசியாக வாழ்ந்து வந்தார். பஹாவுல்லாவை அவர் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து அவரின் உறவினர்களும் கடவுளின் சமயத்தை ஏற்றுக்கொண்டனர்.
இந்த ஜெனாபி முகம்மத் குஃலி காஃன் நாக்காயி பஹாவுல்லாவை தரிசிக்கும் பொருட்டு புனித யாத்திரை ஒன்றை மேற்கொண்டார். சென்றடைந்தவுடன் அவர் முதல் நாள் மற்றும் மறுநாள் பிற புனிதயாத்ரீகர்களோடு பஹாவுல்லாவின் முன்னிலையை அடைந்தார். ஆனால், விடுதிக்கு வந்தவுடன் தனது மனதிலும் ஆன்மாவிலும் பின்வருமாறு சிந்தனை செய்தார்: சில ஆசாதாரன மற்றும் தெய்வீக சம்பவங்களை கண்டுகழித்திடும் பொருட்டு இந்த ஆக்கோ நகரை வந்தடைய நான் ஆறு மாத காலம் கஷ்டங்களையும் சுமைகளையும் தாங்கி பிரயானம் செய்து வந்தேன். ஆனால், பஹாவுல்லாவோ மற்ற சாதாரன மனிதர்களைப்போலவே பேசுகின்றார் ஆணைகளையும் போதனைகளையும் வழங்குகின்றார். இங்கு ஒரு வேளை அசாதாரன சம்பவங்களும் அற்புதங்களும் கிடையாது என நினைத்துக்கொண்டார்.
நான் இவ்விதமான சிந்தனைகளில் ஆழ்ந்திருந்த போது மூன்றாம் நாள் ஒரு சேவகர் என்னிடம் வந்து பஹாவுல்லா உம்மை தனியாகவும் யாருடனும் இல்லாமலும் சந்திக்க விரும்புகிறார் என அறிவித்தார். நானும் உடனடியாக அவரது முன்னிலைக்கு சென்று அவரோடு நெருக்கமுற அந்த அரையிலிருந்த திரைத்துனியை அகற்றினேன். உடனடியாக அவர் முன்னிலையில் நான் வணங்கி எழுந்த போது பஹாவுல்லாவை அதியற்புதமிக்க பிரகாசமான கண்ணைப் பறிக்கும் ஓர் ஒளியாக கண்டேன். அந்த ஒளியின் அனுபவத்தின் தீவிரத்தின் பயனாக நான் மயக்கமுற்று தரையில் சாய்ந்தேன். அவ்வேளை என் காதில் விழுந்ததெல்லாம்: “கடவுளின் பாதுகாப்பில் செல்வாயாக”, எனும் வார்த்தைகளே.
சேவகர்கள் என்னை தாழ்வாரத்திற்கு இழுத்துச் சென்றும் பிறகு யாத்ரீகர்கள் இல்லத்திற்கும் கொண்டு சென்றனர். அந்த நிகழ்ச்சிக்குப் பின் இரண்டு நாட்கள் என்னால் சாப்பிடவோ தூங்கவோ முடியவில்லை. என்ன நடந்ததென்றால், நான் சென்றவிடங்களில் எல்லாம் அவரது ஆட்கொள்ளும் பிரசன்னைத்தையே உணர்ந்தேன் மற்றும் மற்ற யாத்ரீகர்கள் அனைவரிடமும் அவர் இங்கிருக்கின்றார் இங்கிருக்கின்றார் என கூறிக்கொண்டிருந்தேன்.
என்னோடு இருந்த மற்ற யாத்ரீகர்கள் என் பிதற்றல்களால் பெரிதும் தொந்திரவு அடைந்து அப்துல் பஹாவிடம் அது பற்றி கூறி எனக்கு உதவிடுமாறு வேண்டிக்கொண்டனர். பிறகு இரண்டு நாட்கள் கழித்து அதே சேவகர் என்னிடம் வந்து பஹாவுல்லாவின் முன்னிலைக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு அவரது அன்மையை அடைந்தவுடன், அவர் என்மீது தமது அன்புக் கருணையையும் அருள்மிக்க வார்த்தைகளையும் பொழிந்தார். அவர் என்னை அமரும்படி கூறினார்.
பிறகு பஹாவுல்லா: ஜெனாபி முகம்மத் குஃலி காஃன் அவர்களே! தெய்வீக சாரத்தின் அவதாரங்கள் மனித உருவிலும் மேலங்கிகளிலும் வெளிப்படும் கட்டாயத்திற்கு உட்பட்டவர்கள். மறைவெனும் திரையின் பின் வதியும் அவர்களின் மெய்யுறு (உலகில்) தோற்றமளித்தால் உம்மைப்போன்ற மானிடர்கள் சுயநினைவிழந்தும் மயக்க நிலைக்கு சென்றுவிடுவர் என கூறினார். அவர் மேலும்: “கிளிகளுக்கு எவ்வாறு பேசக் கற்றுத்தரப்படுகிறது என உமக்கு தெரியுமாவென விளவினார்”. அதற்கு நான் தலை வணங்கி எனக்குத் தெரியாதென கூறினேன்.
பஹாவுல்லா விளக்கினார்: “கிளியின் உரிமையாளர்கள் கிளியை ஒரு கூண்டுக்கள் அடைப்பார்கள். பிறகு அவர்கள் அதற்கு முன் ஒரு கண்ணாடியை வைப்பார்கள். அதன் பின் ஒரு மனிதன் அந்த கண்ணாடிக்குப் பின் மறைந்துகொண்டு சொற்றொடர்களையும் வார்த்தைகளையும் மீண்டும் மீண்டும் உச்சரிப்பார். தன் முன் உள்ள கண்ணாடியில் பிரதிபலிக்கும் தன்னைப் போன்ற உரு கொண்ட வேறொரு கிளி பேசுகின்றது என எண்ணிக்கொண்ட அக் கிளியும் அது போன்றே தானும் பேச ஆரம்பிக்கும். மாறாக, உண்மையில் கண்ணாடிக்குப் பின்னால் உள்ள மனிதர் ஆரம்பத்திலிருந்தே தம்மை வெளிப்படுத்திக் கொண்டால், அக் கிளி பேச கற்றுக்கொள்ளப்போவதே இல்லை. அது போன்றே, தங்களின் விஷ்வரூபத்தில் தோன்றி மனிதர்களை பீதியடையச் செய்யாதிருக்க தெய்வீக அவதாரங்களும் மனிதர்களின் உருவிலும் உடையிலும் தோன்றுகின்றனர்.”
பஹாவுல்லாவின் தரிசனத்திற்கு பின் நாடு திரும்பிய இம்மனிதர் முற்றாக தன்மைமாற்றம் பெற்றவராகவும் தமது இறுதிநாள் வரை பிறருக்கு போதனை செய்தும் இவ்வுலக வாழ்வை தாம் எப்போது நீக்கப்போகின்றார் என்பது குறித்து ஆன்மீக அகவிளக்கமும் அடைந்தார்.
பாயாம் இ பஹாய்