உலக அமைதிக்கான பஹாய் தொலைநோக்குப் பார்வை


ஜோனாதன் கன்டோமியின் படைப்பின் தமிழாக்கம்
ஹஃப்பிங்டன் போஸ்ட்

http://www.huffingtonpost.com/jonathan-gandomi/a-vision-for-world-peace_b_906540.html?view=screen

“பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா “உலகம் ஒரே நாடு மனிதர்கள் அதன் பிரஜைகள்,” மற்றும்  “உங்கள் பார்வை உங்கள் மீது மட்டும் இல்லாமல் உலகந் தழுவியதாக இருக்கட்டும்,” என  19ம் நூற்றாண்டின் நடுவில் பதிவு செய்தார்.

உலகம் முழுவதிலும் சுமார் 2,000 கலாச்சார பின்னனிகளையும் இனங்களையும் பிரதிநிதிக்கும் பல பஹாய்களுக்கு இந்த எளிய ஆனால் ஆற்றல் மிகு அறிவுரைகள் அவர்களின் செயல்பாட்டுக்கான ஒரு செயல்திட்டத்தை வழங்குகின்றன. என்னையும் உட்படுத்தி பல பஹாய்களுக்கு மனிதகுல ஒருமை குறித்த இக்கோட்பாடு ஒருவரின் ஆன்மீக நம்பிக்கைக்கான அடிக்கல்லாகவும் அவர்களின் செயல்பாட்டுக்கான ஊக்கசக்தியாகவும் விளங்குகிறது.

உலகையும் அதனுள் விளங்கும் அலங்கோலத்தையும் கண்ணோட்டம் இட்டு இதற்கு இருப்பதைவிட மேலும் நல்ல தீர்வுகள் இருக்கக்கூடும் என — நம்பிக்கையின் ஒரு அம்சமாக — நம்புவது சற்றும் எளிதான முன்மொழிவு அல்ல. தனிநபர்கள் எனும் முறையில், நாம் கூட்டு செயல்பாடு குறித்த பிரச்சனையை எதிர்நோக்குகிறோம். பெரும்பாலானோர் நல்ல நோக்கம் கொண்ட முயற்சிகளில் பங்கேற்காமல் போகும்போது அவை ஆற்றலிழந்து போகின்றன. மேலும், வாழ்க்கை என்பது பெரும்பாலும் ஒரு சுழியக் கூட்டுத்தொகை ஆட்டம் (zero-sum game), அதாவது ஒருவரின் இலாபம் வேறொருவரின் நஷ்டத்தில்தான் விளைகிறது எனும் தடுமாற வைக்கும் கருத்து நிலவுகிறது

இன்றைய செய்தி பத்திரிக்கைகளின் முன்பக்கங்களை காணும்போது, உலக அமைதி கூடுமா என்பது நடக்கமுடியாத ஆனால் வேண்டப்படும் ஓர் அவாவென பலர் கருதுகின்றனர். இவர்களை யார்தான் குறை சொல்லமுடியும்? உலகின் வல்லரசுகள் கூட்டு நலத்திற்காக ஒன்று சேர்ந்து செயல்படுவதற்கான பரீட்சார்த்தமான அறிகுறிகளை வெளிப்படுத்தும் அதே வேளை தங்களின் குடிகளிடமும் அண்டை தேசங்களிடமும் தங்களின் சொந்த தேசிய தேவைகளே யாவற்றிலும் முன் அவசியம் மிக்கவை என வலியுறுத்துகின்றன. ஒரு வேளை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளான மானிட மேம்பாட்டின் இறுதியில் (இரு குற்றவாளிகள் மற்றவனை காட்டிக்கொடுக்க வேண்டிய சிக்கலிலிருந்து வெளிப்பட முடியாதது மாட்டிக்கொண்டிருப்பது போன்று) பூரணத்துவத்திற்கு சற்று வெளிப்புறமாக உள்ள விளைவுகளை மட்டுமே நாம் அடைந்துள்ளோமா?

குறிப்பிட்டது போன்று இதுதான் சூழ்நிலை என பலர் நம்புகின்றனர், மற்றும் அறிவுக்கு ஏற்புமிகு வகையிலான இத்தகைய முடிவுக்கு அவர்கள் வந்துள்ளதற்காக அவர்களை குறை சொல்லவும் முடியாது. இருந்தும் இத்தகைய இருள் சூழ்ந்த காலங்களில் நாம் இதைவிட மேலும் நல்ல சூழ்நிலையை உருவாக்கக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளது மட்டுமின்றி, நமது கூட்டு மேம்பாட்டின் உச்சமே இறுதியில் நமக்கு விதிக்கப்பட்டதும் ஆகும். “உலக அமைதி சாத்திமானது மட்டுமல்ல, மாறாக அது தவிர்க்கமுடியாததும் கூட,” “மற்றும் அது இப்பூவுலகின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமும் ஆகும்,” என பஹாய்கள் நம்புகின்றனர். ஒரு குழந்தை முதிர்ச்சி நிலைக்கு வளர்வது போன்று, ஒரு தனிச்சிறப்பு மிகு உருபொருள் எனும் வகையில் மானிட இனம் ஒரு பரிணாம செயற்பாட்டை கடந்து, பல கடுமையான மற்றும் கடக்கவேண்டிய அதிர்ச்சியான கட்டங்களைக் கடந்து இறுதியில் “ஓனாயும் செம்மறியாடும் ஒன்றாக வாழும்,” முதிர்ச்சிமிகு ஒரு நிலையை அடையும் என 19ம் நூற்றாண்டின் மத்தியில் பஹாவுல்லா போதித்தார்.

நான் தற்போது கடமையாற்றும் ஆஃப்கானிஸ்தான் நாட்டில் உள்ளது போன்று இத்தகைய அபாயமிகு சூழ்நிலையையும் வாக்களிக்கப்பட்ட அக்காலகட்டத்தை அடைவதற்கான அகண்ட இடைவெளியையும் வேறேங்கும் நான் காணவில்லை. இங்கு காணப்படும் முரண்பாடு மிகவும் சிக்கலானது. இனம், பழங்குடிகள், புவி-அரசியல், பொருளாதார, மற்றும் சமய ஆற்றல்கள் இங்கு செயல்படுகின்றன. முப்பது வருடகால உறுதியற்ற நிலை மற்றும் சச்சரவிற்குப் பிறகு, உலகில் எங்கு காண முடியாத அளவு குறிப்பாக பெண்களும் குழந்தைகளும்,  துன்பத்தை அனுபவித்த, ஒரு நிலபகுதியை காண்பது சிரமம். இதன் விளைவாக ஆஃப்கான் நாட்டின் பெரும்பகுதி மக்கள் தங்கள் நாட்டிற்கு அமைதி வேண்டும் என உறுதியாகவே விரும்புகிறார்கள். ஆனால் எப்படி?

ஓர் இராணுவத்தை பயிற்றவிப்பது, பள்ளிகள் கட்டுவது, அல்லது அரசாங்க ஊழலை குறைப்பதற்கும் அப்பால் ஆஃப்கான் நாட்டின் குழப்பத்திற்கான தீர்வு பெரிதும் சிக்கல் மிகுந்தது. இவை யாவும் போற்றுதற்குறிய முயற்சிகளாயினும், அவை அடிப்படை நோயை குணப்படுத்துவதற்கு பதிலாக நோய்க்குறிகளுக்கு மட்டுமே மருந்திடுகின்றன. அரசியல் ரீதியான முயற்சி அல்லது உதவித்திட்டம் போன்றவற்றிற்கும் மேல் அந்த நோய்க்குறிகள் புரிந்துகொள்வதற்கு மிகவும் குழப்பம் மிகுந்தவை.

மழுப்பலான  உலக அமைதியின் ஓர் அங்கமாக நாம் அனைவரும், பிரிக்கமுடியாக வகையில் இணைக்கப்பட்ட பொதுநலனைக் கொண்ட நிலையில்,  ஒருவரை ஒருவர் ஒரே மானிட இனத்தின் உறுப்பினர்களாக காணவேண்டும். “மானிட உலகு ஒரே ஒருமித்த சரீரமாகும், மற்றும் அந்த உயிர்ப்பொருளின் ஒரு பகுதி பாதிக்கப்படுமாயின் அதன் பிற அங்கங்கள் யாவுமே அதன் விளைவை அனுபவிக்கும்,” என பஹாய் திருவாக்குகள் குறிப்பிடுகின்றன. மானிடத்தின் ஒருமைத்தன்மையை மனதார ஏற்றுக்கொள்வதானது ஒருவரின் தினசரி வாழ்விற்கு ஆழ்ந்த விளைவுகளைக் கொண்ட ஓர் ஆன்மீக செயற்பாடாகும்.

இவ் விஷயத்தை அகண்ட நிலையில் பார்க்கும்போது, இது சமுதாயத்திற்கும் நமது கூட்டுத்தேர்வுகளுக்கும் பின்விளைவுகளைக் கொண்டதாக இருக்கின்றது. நமது கூட்டுநலனை உளப்பதிவு செய்வதில்தான் மானிட இனத்தின் பிழைப்பு மேம்பாடு ஆகிய இரண்டும் அடங்கியுள்ளன எனும் முடிவிற்கு உலகம், தானே தேர்வு செய்த ஓர் குழப்பம் மிகுந்த பாதையின் வழியாக இறுதியில் வந்துசேரும் என பஹாய் சமயம் போதிக்கின்றது. “தன் நாட்டை மட்டுமே விரும்புகிறான் என ஒருவன் பெருமைகொள்ள முடியாது, மாறாக உலக முழுமையையும் விரும்பும் ஒருவனே அதில் பெருமை கொள்ளமுடியும்,” என பஹாவுல்லா பதித்துள்ளார்.

பஹாய் வரலாற்றில் ஒரு முக்கிய மனிதரும், 1892ல் தமது தந்தையாரின் மறைவுக்குப் பிறகு பஹாய் சமூகத்தை வழிநடத்திய பஹாவுல்லாவின் திருமகனும் ஆகிய அப்துல் பஹா, வெடிபொருள்கள் மற்றும் ஆயுதங்களை கண்டுபிடித்த பிரபல கண்டுபிடிப்பாளராகிய எச். மேக்சிம் அவர்களை ஒரு சமயம் சந்திக்க நேர்ந்த்து. போர் மற்றும் மனித அழிவு குறித்த அறிவியலில் அவரது பெயர் மிகவும் பிரபலமாகியுள்ள அதே வேளை, மானிடத்தின் அடித்தலத்தையே ஆட்டங்காண செய்யக்கூடிய அன்பெனும் துப்பாக்கிகளை கண்டுபிடிப்பதன் வாயிலாக அமைதி குறித்த அறிவியலிலும் அவர் பிரபலமாகவேண்டும் என அப்துல் பஹா அவரிடம் கூறினார். “துப்பாக்கிகளை கண்டுபிடித்த இந்த கண்டுபிடிப்பாளரை, தேசங்களின் சச்சரவுகளுக்கு ஒரு முடிவு கண்டும் போர் எனும் மரத்தை வேரோடு சாய்த்ததற்காக; வாழ்வு மற்றும் அன்பை அதிகரிப்பதற்கான வழிகளையும் கண்டுபிடித்ததற்காக மக்கள் போற்றுவார்கள். அதன் பிறகே வரலாற்றின் ஏடுகளில் உமது பெயர் பொண்ணால் ஆன எழுதானியினால் எழுதப்படும்,” என அப்துல் பஹா கூறினார்.

அன்பு மற்றும் அமைதிக்கான பயன்விளைவுகள் மிக்க வழிகளை கண்டுபிடிப்பதற்கு மாறாக அதிக அளவில் அழிவுக்கான வழிகளை கண்டுபிடிப்பது பெரிதும் எளிதாக இருப்பதை நாம் காண்கின்றோம். கைப்பற்றும் வழிகளை உருவாக்கும் நமது திறமையாற்றல்கள், உணவு, மூலப்பொருட்கள், பொருளாதாரம், தொழில்நுட்ப ஆற்றல், சித்தாந்தம், தீவிரவாதம் ஆகியவற்றிலும் இப்போது செயல்படுகின்றன. சமுதாயம் மேம்பாடு அடையும் அதே வேளை, நமது கைவசம் உள்ள உலகை மாற்றவும் அதன் மீது தாக்கம் செலுத்தவும் கூடிய தொழில்நுட்பமும் கருவிகளும் மேம்பாடு கண்டுள்ளன. இ்ப்போது நமது பகுத்தறிவு, ஆற்றல், மற்றும் உருவாக்கும் சக்திகளை நிலையான மற்றும் உறுதியான ஒரு முறையை அமைக்கக்கூடிய  அமைதிக்கான ஆற்றல்களாக மாற்றவேண்டியது நமது கடமையாகும்.

இதே சிந்தனையில் அப்துல் பஹா பின்வருமாறு எழுதியுள்ளார்: “நாம் அமைதியைத்தான் சற்று பயன்படுத்தி பார்ப்போமே? அப்படி போர்தான் சிறந்தது எனப் பட்டால், மீண்டும் போரிடுவது ஒன்றும் சிரமமாக இருக்காது.:

ஓரினக் காதல் – ஒரு பஹாய் கண்ணோட்டம்


சமீபத்தில் ஐக்கிய அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் ஓரினக் காதல் குறித்த ஒரு சட்டம் திருத்தப்பட்டது, அதாவது ஓரின திருமணத்திற்கு இச்சட்டத்தின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதன் தொடர்பில் அங்கு பல ஒரினக் காதலர்கள் உடனடியாகத் திருமணம் செய்துகொண்டார்களாம்.
பார்க்க: http://www.bbc.co.uk/news/world-us-canada-14270593

முன்னுறை

பஹாய் சட்டம் திருமணம் செய்துகொண்டுள்ள தம்பதிகளுக்கிடையில் மட்டுமே பாலுறவை அனுமதிக்கின்றது. திருமண பந்தத்திற்கு வெளியே பஹாய் நம்பிக்கையாளர்கள் பாலுறவில் ஈடுபடாமல் இருப்பது அவசியம். அதே வேளை, பஹாவுல்லாவின் வெளிப்பாட்டை ஏற்றுக்கொள்ளாதோர் மீது பஹாய்கள் தங்கள் விதிமுறைகளை தினிக்க முயலமாட்டனர், அதாவது பஹாய் திருமண சட்டம் பஹாய்களை மட்டுமே கட்டுப்படுத்தும். பாலியல் அல்லது வேறு எந்த விஷயம் குறித்தும் மேன்மையான நடத்தையை எதிர்பார்க்கும் அதே வேளை, மனித குறைபாடுகளை மனதிற் கொண்டு பொறுமை மற்றும் புரிதலை பஹாய் போதனைகள் அறிவுறுத்துகின்றன. இக்கருத்தில், ஒரினக்காதலர்களை தப்பெண்ணத்தோடு பார்ப்பது பஹாய் போதனைகளின் உணர்விற்கு எதிர்மாறானதாகும்.

ஒரினக்காதல் குறித்த சில பஹாய் கருத்துக்களின் ஆய்வு

உலக வரலாற்றின் கால ஏடுகளில் ஒரினக்காதல் நடவடிக்கைகள் குறித்து ஆங்காங்கே காண முடிகிறது. 1951-இல் ஓரினக்காதல் குறித்து ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இ்ந்த ஆய்வு எழுபத்து ஆறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 64 விழுக்காடு நாடுகளில் ஓரினக்காதல் ஏற்றுக்கொள்ளத்தக்கதே என சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். பல நாடுகளில் ஒரின பாலுறவு என்பது ஸ்தாபிக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகவும் இருக்கின்றது. கடந்த காலத்தில் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகள், அமெரிக்காவின் சிவப்பிந்திய சமூகத்தினர், பசிபிக் சமுத்திரத்தில் சில தீவுகள், ஆஸ்திரேலிய பூர்வகுடியினரிடையே இது பழக்கமான ஒன்றாக இருந்துள்ளது. அதே போன்று அக்காலத்தில் கிரேக்கர்கள், கெல்ட்டியர்கள், ரோமானியர்கள், அராபியர்கள், சூஃபீக்கள், ஜப்பானியர் மற்றும் இந்தோ-ஐரோப்பியரின் சமய ரீதியான வழக்கமாகவும் இது காணப்படுகின்றது. இதில், பிரபஞ்சத்தின் படைப்பு, மானிடத்தின் ஆண்மை ஆகிய இரண்டின் அடிப்படையில் இலிங்கம் (phallic) சம்பந்தமான சமயப் பிரிவுகள் மற்றும் கருவள(fertility) சம்பிரதாயங்கள், புராணம், மற்றும் ஆவி, விந்து மற்றும் ஆன்மாவோடு தொடர்பு கொண்டுள்ள சமயம் சார்ந்த மற்றும் சடங்கு அடிப்படையிலான ஒரின பாலுறவியல் நிகழ்கின்றது

ஆனால், சில கலாச்சாரங்கள் மற்றும் சமயங்களின் ஒரினபாலுறவு குறித்த சடங்குபூர்வமான விஷயங்களுக்கு எதிராக, செமிட்டிக் (semitic) மதங்கள் ஒரினபாலுறவை வன்மையாக கண்டித்துள்ளன. இணக்கம் கொண்ட இரு ஆண்களிடையே ஒரினபாலுறவு நடவடிக்கைகள் அருவருக்கத் தக்கவை மற்றும் மரண தண்டனைக்கு உட்பட்டவை என விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தால்முட் (talmud) எனப்படும் யூத சாஸ்திரங்கள் மரண தண்டனை போக தன்னைத் தானே கசையால் அடித்துக்கொள்வது, பெண்கள் ஒரிணக்காதல் ஆகியவற்றையும் உட்படுத்திக் கண்டிக்கின்றன. யூத மதகுரு சாஸ்திரங்கள் ஒரினக்காதலுக்கு எதிரான வன்மையான தடை குறித்து பல காரணங்களை வெளியிட்டுள்ளன. தீர்க்கதரிசியான நோவாவின் (Noah) வாரிசுகளின் ஏழு கட்டளைகளிடையே இத்தடை ஓர் அனைத்துலக சட்டமாகக் கருதப்படுகிறது–இது மனித மேன்மையினை இழிவுபடுத்தும் இயற்கைக்கு எதிரான ஓர் முறைகேடு. இத்தகைய செயல்கள் இயல்பான பாலுறவின் இனப்பெருக்க நோக்கத்தினை முரியடிக்கின்றன மற்றும் ஒரினக்காதலன் மனைவியை கைவிடுவதன் வாயிலாக குடும்ப வாழ்வு அழிகின்றது. யூத சட்டங்கள் அன்பு(காதல்) என்னும் கருத்தில் புறமண பாலுறவு அல்லது முறையற்ற கலவி போன்றவை என்னதான் இருபாலரின் இணக்கத்திலும் தூய அன்பெனும் அடிப்படையிலும் நிகழ்ந்தாலும் அது எப்படி சட்டபூர்வமானது ஆகாதோ அதேபோன்று ஒரினக்காதலை எவ்வித உடல்சார்ந்த களிப்பின் அடிப்படையிலும் அவை ஆதரிக்கவில்லை.

என்னதான் கிருஸ்தவர்களின் மனப்பான்மைகள் காலத்தால் மாறியிருந்தாலும் கிருஸ்தவ சமயத்தில், ஒரினக்காதல் மற்றும் பாலுறவு தீய ஒழுக்கங்களோடு சேர்க்கப்பட்டு வன்மையாகக் கண்டிக்கப்படுகின்றது. திருக்குரான் ஒரினக்காதலை “தெய்வநிந்தனையான” செயல் என குறிப்பிடுகின்றது. அதே போன்று ஹதீஸ்கள் (hadith) ஒரினக்காதலர்கள் இருவரும் கொல்லப்படவேண்டும் என குறிப்பிடுகின்றன. இவ்வுலகில் தனது பாவங்களுக்குக் கடவுளிடம் மன்னிப்பு வேண்டினால் ஒழிய, மற்றொரு மனிதனிடம் ஒரின உறவு கொள்ளும் ஒருவன் மறுவுயிர்த்தெழுதல் (resurrection) நாளன்று நிலையான நரகவாசத்திற்கு ஆளாவான்.

பஹாவுல்லாவும் ஒரினக்காதலைத் தடை செய்துள்ளார். அவரது சட்ட நூலான அக்டாஸ் திருநூல் அதைத் தடை செய்துள்ளது. பின்வரும் கருத்துகள் இத்தடை குறித்த ஆய்வாகும்.

இங்கு பயன்படுத்தப்படும் சில சொற்பாங்குகளை ஆலோசித்தல் சற்று பயன்மிக்கதாக இருக்கும். ஒரின பாலுறவு என்னும் வார்த்தை இரு குறுகிய கருத்துகளை உள்ளடக்கிட சற்று விரிவான நிலையில் பயன்படுத்தப்படுகின்றது. முதலாவதானது ஓரினபாலியல்பாலான  கவர்ச்சியாகும். இது, தன்னியல்பாகவும் தூண்டுதல் இல்லாமலும் தன்னினத்தின் மீதே கவர்ச்சிகொள்ளும் மற்றும் தன்னினத்தை உள்ளடக்கிய பாலியல் மன கற்பனைகொள்ளும் ஓர் ஆண் அல்லது பெண் குறித்த மனோநிலையை அல்லது உளநிலையை குறிப்பதாகும். இரண்டாவது, ஒரினபாலுறவு நடத்தை, அதாவது தன்னினத்தோடு, ஓர் ஆண் மற்றோர் ஆணோடு அல்லது ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு உடலுறவு கொள்ளுதல். முதலாவது நிலை, சரியாக புரிந்துகொள்ளப்படாத சக்திகளினால் மற்றும் அச்சக்திகளின்மீது அக்குழந்தைக்கு எவ்வித அடக்குந்தன்மையும் இல்லாத நிலையில் குழந்தைப் பருவகால வளர்ச்சியின் போது அடையப்படுகின்றது அல்லது வெளிப்படுகின்றது. இரண்டாவது நிலை, ஒரின உறவில் சுயநினைவோடு ஈடுபடும் மற்றும் அதற்கு பொறுப்பேற்க வேண்டிய ஒரு நடத்தை குறித்ததாகும். ஒரு மனிதன் ஒரினபாலியல் மனநிலையால் பாதிக்கப்பட்டவனாக ஆனால், அத்தகைய செயல்களில் ஈடுபடாமல் இருக்கக்கூடும் மற்றும் ஒரு மனிதன் ஒரினபாலுறவு மனநிலை இல்லாதவனாக ஆனால் ஓரினபாலுறவில் ஈடுபடுபவனாகவும் இருக்கக்கூடும்.

ஓரினக்காதல் மனநிலை குறித்து பஹாய் போதனைகள் ஒருவிதமான மனப்பான்மையையும், ஒரின பாலுறவு பழக்கம் குறித்து வேறுவிதமான மனப்பான்மையையும் வலியுறுத்துகின்றன. முதலாவதானது அனுதாபம் மற்றும் இரக்க உணர்வை வருவிக்கவேண்டும்: “இவ்விதமாக பாதிக்கப்படுவது ஒரு மனச்சான்றுக்கு உட்பட்ட ஆன்மாவிற்கு பெரும் சுமையாகும்”. ஆனால், மற்றது பஹாய் திருவாக்குகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.

ஓரினக்காதல் மனோநிலையை பொறுத்தவரை, அது “மனித இயல்பின் பிறழ்ச்சி” மற்றும் “இயற்கைக்கு மாறான” ஒன்று என பஹாய் திருவாக்குகள் கூறியபோதிலும் அத்திருவாக்குகள் ஒரினக்காதலுக்கான காரணங்களைக் குறித்துக் காட்டவில்லை. அறிவியல் சமூகத்தினரிடையே ஓரினக்காதல் குறித்து எவ்வித இணக்கமும் இதுவரை ஏற்படவில்லை. ஆனால் இப்போது மரபியல் கூறு சம்பந்தமான சில தடயங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது பஹாய் நிலையோடு எவ்விதத்தில் இயைபுறும்?

இயற்கை குறித்த பஹாய் கருத்துப்படிவம் (concept) நோக்கியலானதாகும் (teleological); அதாவது, இறைவனால் மனித இயல்பிற்குச் சில பண்புகள் குறிக்கோளாகக் கொள்ளப்பட்டுள்ளன, மற்றும் இப்பண்புகளோடு இணக்கப்படாத பிற பண்புகள் “இயற்கைக்கு மாறானவை” என வருணிக்கப்படுகின்றன. அதற்காக பஹாய் திருவாக்குகளின் கண்டிப்பிற்கு ஆளாகும் சில நடத்தைகள் இயற்கையின் செயல்பாட்டினால் விளையவில்லை என பொருள்படாது. மதுப் பித்து ஒரு நல்ல உதாரணமாகும். அது மரபியல் காரணங்களாலும் ஏற்படலாம் என ஆதாரங்கள் காட்டுகின்றன. அந்த ரீதியில் அது இயற்கை காரணங்களால் விளைகின்றது, ஆனால், அதற்காக ஒரு மனிதன் மதுப்பித்தனாக இருப்பது இயல்பான ஒன்றென அர்த்தப்படாது. ஒரினக்காதல் மரபியலான, பௌதீக ரீதியிலான, அல்லது மனோவியல்பான காரணங்களால் விளைந்தபோதிலும், அது மனித இயல்பிற்கு நோக்கமாக கொள்ளப்பட்ட ஒரு பண்பு அல்லவென பஹாய் போதனைகள் தெளிவுபடுத்துகின்றன. ஏனில்லை? இதற்கான பதில் ஒரினக்காதல் சமுதாயத்தின் மீதும் தனிமனிதர் மீதும் ஏற்படுத்தும் விளைவுகளில் காணப்படலாம். ஒரினக்காதல் தனிநபரை பொருத்தவரை, 1981-இல் ஒரு பஹாய் எழுத்தாளர் மனோவியல்பு குறித்த இலக்கியங்களின் சுருக்கத் தோகுப்பு ஒன்றை உருவாக்கி அதிலிருந்து ஒரினக்காதலர் குறித்த நான்கு திடுக்கிடச் செய்யும் பண்புகளை அவை வெளிப்படுத்துவதாக உணர்ந்தார். முதலாவதாக பீதி உணர்வின் பங்கு – ஆண் ஓரினக்காதலருக்கு பெண்கள்பால் ஏற்படும் பெரும் பயத்தினால், ஒரு மனோதத்துவ நிபுணர் கூறுவது போன்று, அவர் ஆண்கள் நிறைந்த ஓர் உலகிற்குள் ஒளிந்துகொள்கின்றார். இரண்டாவது, உளஞ்சார்ந்த வலியில் அடையப்படும் சிற்றின்ப முறன்நிலை (psychic masochism) – அதாவது தன்னிரக்கம், மனம் புண்படுதல், அநியாயங்களை உள்ளத்தில் பதியவைத்துக்கொள்ளுதல் ஆகியவை. மூன்றாவது எதிர்மறையான பண்பு, மன ஆழத்தில் பதிந்துள்ள போதாத அல்லது நிலைகுறைவு உணர்வினால் வெளிப்படும் தாழ்வு மனப்பான்மை. இறுதியாக ஒரினக்காதலர்கள் வாழ்வில் பாலியலின் ஆதிக்கம் உடல்நலத்திற்கு தீங்கானது என்பது நோய்நிவாரண சிகிச்சையாளர்களின் கருத்து. இதன் பயனாக, பல சமுதாய காரணங்களின் பங்கு இதில் இருந்தபோதிலும், மதுப்பித்தின் அதிகரிப்பு, சோர்வுமனப்பான்மை, வேதனையில் அடையப்படும் சிற்றின்ப முறன்நிலை ஆகியவை அதிகமாக காணப்படுகின்றன. சராசரி 30 வயதிற்கு உட்பட்ட அமெரிக்க ஓரினக்காதலர்களிடையே நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், அவர்களுள் 26 விழுக்காட்டினர் சுமார் 1000 வேறுபட்ட நபர்களோடு பாலுறவு கொண்டுள்ளனர், மற்றும் சந்திக்கப்பட்டோரில் 74 விழுக்காட்டினர் 50 விழுக்காடு நேரம் அவர்கள் முன்பின் தெரியாதோரிடமே பாலுறவு கொண்டதாகக் கூறியுள்ளனர். இத்தகைய புள்ளி விவரங்கள், ஒரினக்காதல் வாழ்வுமுறை அமைதி நிறைந்தது மற்றும் மனநிறைவானது என்பதற்கு எதிர்வாதங்களாகும். அதற்கு மாறாக அது நிர்ப்பந்தங்கள் நிறைந்த வாழ்வுமுறையாகும். அடிக்கடி நிகழும், தற்செயல் பாலுறவுகள் ஒரினக்காதலுக்கு எதிரான (மற்றும் எத்தகைய பால்தன்மையூட்டும் உறவுக்கும் எதிரான) குற்றச்சாட்டாகும். இத்தகைய பாலுறவுகள் அதன் பின்விளைவான அபாயங்கள் (நோய்கள், உடல் வதை, அச்சுறுப்பு) குறித்து கவனமின்றியிருந்து, அது ஏதோ ஒரு பழக்கப் பித்தாக செயல்பட்டு, மனநிறைவு காணமுடியாத ஒன்றாகவும் செயல்படும்.

ஆன்மீக ரீதியில், பின்வரும் வகையில் அதன் விளைவுகள் பெரும் பாதகம் விளைவிக்கக்கூடியவை என சில பஹாய் எழுத்தாளர்கள் வாதித்துள்ளனர்: ஓர் ஓரினக்காதலரின் உள்மன பய உணர்வு நேரடியாக எதிர்கொள்ளப்படாததால், அத்தகைய நபர் சோதனைகளை நேர்முகமாக எதிர்கொள்வதால் கிடைக்கும் ஆற்றல் மேம்பாட்டை இழந்துவிடுகிறார். ஆகையால் அந்த நபரின் உளநோய் நிலையாகத் தொடர்ந்து, தற்காப்பு உணர்வுமிகு ஒரு கொடிய வட்டத்தை உருவாக்கியும், இறுதியில் பாதிக்கப்பட்ட நபரின் தன்னகமே தனக்குத் தானே பலியாகின்றது. ஆன்மீக ரீதியில் வளர்ச்சியுறாமல், அதற்கு மாறாக, அத் தனிநபர் தனது உணர்வெழுச்சிகள் மற்றும் வீண் கற்பனைகளின் சுமை மற்றும் ஆதிக்கத்திற்கு ஆளாகின்றார்.

வியாதிகளின் பரவலால் மட்டும் சமுதாயம் துன்புறவில்லை, அதற்கு மேல் தன்னைச் சுற்றியுள்ளோரை பாலியல் பொருள்களாகக் கருதுவதன் காரணத்தால் அந்த நபர் ஏற்படுத்தக்கூடிய நுண்ணய மற்றும் தவிர்க்கவியலா தாக்கங்களாலும் சமுதாயம் பாதிக்கப்படுகிறது. பயம் மற்றும் வெறுப்புணர்வு நிறைந்த தனிநபர்கள் சமுதாய ஐக்கியம் நிறைந்த ஒரு முழுமையான சூழ்நிலைக்குப் பங்காற்ற முடியாது. மற்றும், மிக முக்கியாமாக, ஓரினக்காதலர்கள் குடும்பங்களை உருவாக்கும் செயற்பாட்டை விழிப்புணர்வுடனேயே தவிர்த்துக்கொள்கின்றனர்.

பஹாவுல்லாவின் சட்டங்கள் தரிசானதும் மனிதத்தன்மையற்றதுமான ஒரு சட்டமுறையை பிரதிநிதிக்கவில்லை, மாறாக அவை தெய்வீக அறிவுரைகளாகும், மற்றும் இப்பூவுலகின் ஆற்றல்களோடு இணக்கத்துடன் வாழ்வதற்கு எவ்விதம் இயற்கையின் விதிமுறைகளை ஒழுங்காக மதித்துணர்வது உதவுகின்றனவோ, அதே போன்று அவை உண்மையான சுதந்திரம் மற்றும் ஆன்மீக களிப்புணர்வை அடைந்திட ஒரு தனிநபர் செயல்படுவதற்கான ஒரு வரைமுறையும் ஆகும். பாலியல் குறித்த பஹாய் போதனைகள் பாலியல் தூண்டுசக்தியின் தெய்வீகத்தையும் ஆற்றலையும் அங்கீகரிக்கின்றன, மற்றும் அது ஒரு வரம்பிற்குள் இருக்க (regularize) வேண்டும் எனவும் கூறுகின்றன, மற்றும் பஹாவுல்லாவின் சட்டம் திருமண உறவு குறித்த வெளிப்படுத்துதல்களோடு மட்டுமே தன்னை உட்படுத்திக்கொள்கின்றது. இனப்பெருக்கமே பாலியலின் அடிப்படை குறிக்கோளாகும். பாலியலின் வாயிலாகத் தனிநபர் களிப்புறுகிறார் என்பது இறைவனின் கொடைகளுள் ஒன்றாகும். காதல் முதல் திருமணம் வரை, குழந்தைப் பேறு, குழந்தைகளைப் பேணி வளர்த்தல், மற்றும் இரண்டு ஆன்மாக்களிடையே இவ்வுலக வாழ்விற்கும் அப்பால் நிலைக்கக்கூடிய பரஸ்பரமாக ஆதரிக்கப்படும் உறவினை ஸ்தாபிக்கும் ஒரு நீண்ட செயற்பாட்டில் பாலுறவின் பங்கு  ஒரு கணநேரமே ஆகும்.

சில தம்பதிகள் குழந்தைப் பேறு அடையமுடியாமல் தவிக்கின்றனர். அது தன்னிலையாக ஒரு பாதிப்பே ஆனாலும், திருமண உறவின் பிற கொடைகள் அனைத்தையும் இவ்விஷயம் செல்லாதவையாக்கிடவில்லை. சிலர் பலவித காரணங்களால் ஒரு துணையைப் பெற முடியாது போகின்றனர், அல்லது தனியாக வாழ்ந்திடத் தீர்மானிக்கின்றனர்; இவர்கள் பிற வழிகளில் தங்கள் நற்பண்புகளையும் ஆற்றல்களையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். ஓரினக்காதலர்கள் குழந்தைகள் பெற முடியாத ஈரினதம்பதியினர் போன்று தாங்களும் பரஸ்பரம் ஆதரவாகவும் ஒருவருக்கு ஒருவர் துணைபோகவும் நிலையான உறவுகளை ஸ்தாபித்துக்கொள்ளவும் முடியும் என நாம் முடிவுசெய்ய முடியும். இத்தகைய முடிவிற்கே சில கிருஸ்தவ சமூகங்களும் அரசாங்கங்களும் வந்துள்ளன. ஆனால் பஹாவுல்லா, மனித இயல்பு குறித்த தெய்வீக ஞானம் பெற்ற காரணத்தினால், இத்தகைய உறவு அனுமதிக்கப்படவில்லை அல்லது ஓரினக்காதலரின் நிலைக்கு அது பயன்மிக்க தீர்வும் அல்ல என குறிப்பிடுகின்றார். ஈரின திருமணத்தில் ஈடுபட முடியாத அளவிற்கு ஓர் ஓரினக்காதலர் தனது நிலையை மேம்படுத்திக்கொள்ள முடியவில்லை என்னும்போது அவர் தனிக்கட்டையாக இருந்தும், எவ்வித உடலுறுவிலும் ஈடுபடாதிருக்கவும் வேண்டும் (என்பது அறிவுரை). திருமணம் செய்துகொள்ள விரும்பாத ஓர் ஈரின பாலியலாருக்கும் இதுவே விதியாகும். ஒரினக்காதல் குறித்த ஓர் அனுகுமுறையைச் சுருக்கமாக ஆலோசித்ததில், ஓரினக்காதலர்பாலான பஹாய் மனப்பாங்கின் சில அம்சங்கள் யாவை? பஹாய் சமயத்தைச் சாராத ஓரினக்காதலர் ஒருவர்பால் கொள்ளும் அதே மனப்பான்மையே குடிப்பழக்கத்திற்கு ஆளான பஹாய் சமயத்தைச் சாராத ஒருவர்பாலும் கொள்ளப்படுகின்றது. இது குறித்த பஹாய் விதிமுறைகளை அவர் பின்பற்றிட எவ்வாறு பஹாய்கள் எதிர்ப்பார்க்கமுடியாதோ அதே போன்று அவர்கள் குடிப்பழக்கத்தை விடுவார்கள் எனவும் பஹாய்கள் எதிர்ப்பார்க்கமுடியாது. ஒரினக்காதலராக ஒரு பஹாய் இருப்பின், அதற்கான பல கருத்துக்கள் உள்ளன. பஹாய் சமயத்தின் பாதுகாவலரான ஷோகி எஃபெண்டி பின்வருமாறு எழுதியுள்ளார்: “மற்ற ஆன்மாக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை வெகு கடுமையாக நுண்ணாய்வு செய்திடும் அளவிற்கு நன்னெறி பூரணத்துவத்தின் ஒரு கட்டத்தை பஹாய்கள் நிச்சயமாகவே அடைந்திடவில்லை, மற்றும் ஒவ்வொரு தனிநபரும் அவரது சமய நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்கப்பட வேண்டும், மற்றும் தெய்வீக வாழ்க்கைத்தரத்திற்கு ஏற்ப வாழ்வதற்கான தூய விருப்பமும் வேண்டும். தெய்வீக வாழ்க்கைத்தரத்திற்கு ஏற்ப வாழ்ந்திட பல பஹாய்கள் முயல்கின்றனர், ஆனால், அவர்கள் அதில் தனிமையையும் ஒதுக்கப்பட்ட நிலையையும் மற்றும் துணையற்றநிலையையும் நம்பிக்கையின்மையும் அனுபவிக்கின்றனர், ஏனெனில், அவர்கள் தங்களின் ஓரினக்காதல் குறித்த விஷயத்தால் தாங்கள் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ வெறுக்கப்படுவோம் என்னும் பயமே அதற்கான காரணம். அதே சமயம், தங்களின் பிரச்சினையைச் சமாளிப்பதற்கும் தீர்ப்பதற்குமான முயற்சியில் உதவிக்கு எங்கு திரும்புவது என தெரியாமல் அவர்கள் தவிக்கின்றனர். இத்தகைய ஆன்மாக்களின்பால் பஹாய் சமூகங்கள் பெரும் கருணையையும் ஆதரவையும் காண்பிக்க வேண்டும். இவ்வுலகில் கடவுளின் மகிமையையும் பண்புகளையும் பிரதிபலிக்கும் முயற்சியில், தவித்துக்கொண்டிருக்கும் எல்லாவிதமான ஆன்மாக்களுக்கும் பஹாய் சமூகம் ஒரு சரனாலயமாகவும் புகலிடமாகவும் இருக்கவேண்டும். இதை அடைவதற்கு ஆதரவு மிக்க ஒரு சிந்தனையும் உணர்வும் மிகுந்த சூழ்நிலை, ஊக்குவிக்கும் மற்றும் தேவைகளை புரிந்துகொள்ளும் ஒரு சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும். ஒரு நிலையில் பார்க்கும் போது, உலகம் தான் சுமந்துகொண்டிருக்கும் மானிட பிரச்சினைகளை அது கொண்டுவருவதை வரவேற்கும் ஒரு பணிமனையாக அல்லது ஆய்வுமனையாக பஹாய் சமூகம் இருக்கவேண்டும் மற்றும் சக பஹாய்களுடன் சேர்ந்து, நம்பிக்கையுடன் பஹாய் திருவாக்குகளில் காணப்படும் கருவிகளை பயன்படுத்தி முழு முயற்சியுடன் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் மற்றும் இக்குழப்பங்களுக்கான நிவாரணம் காணவும் முயலவேண்டும். பிரார்த்தனை, தியானம், கலந்தாலோசனை, பஹாவுல்லாவின் விதிமுறைகள் வழங்கும் ஆன்மீக வழிகாட்டல் ஆகியவை இக் கருவிகளாகும். இப்பணிமனை ஒத்துழைப்பு, பரஸ்பர உதவி, ஆதரவு ஆகியவற்றால் சூழப்பட்டிருக்கவும் வேண்டும்.

இடைவிடாது வளரும் இளம் சமயம்: இஸ்ரேலில் பஹாய்


டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்

http://www.time.com/time/world/article/0,8599,2081789,00.html

பாப் அவர்களின் நல்லடக்க திருவிடத்தின் தோட்டங்களுக்குள் நுழைவது ஏதோ ஒரு மாய உலகில் நுழைவது போன்றிருக்கும். அத் தோட்டங்கள் ஹைஃபா நகர மையத்திற்கு உயரே மலையின் உச்சி வரை படிப்படியாக உயர்ந்து செல்கின்றன. படித்தொடரின் நடுமத்தியில், மத்தியதரைக் கடலின் பிரகாசமான ஒளி 150 தோட்டக்காரர்களின் குறிப்பான கைவண்ணத்தோடு சேர்ந்து, ‘ஜானி டெப்பின்’ ‘அலிஸ் இன் வொன்டர்லேன்டின்’ தயாரிப்பாளர்கள் உருவாக்க நினைத்த தெளிவு நிறைந்த ஆழம் மற்றும் கண்ணைப் பறிக்கும் வர்ணஜாலமாக, காட்சியளிக்கின்றது. இந்த நடுமையத்தில்தான், வானவெளியில் மிதந்துகொண்டிருக்கும் எல்லையற்ற ஒளிக்கடலோ என நினைக்கத் தூண்டும் பூரணத்துவம் நிறைந்த பூங்கா ஒன்றின் நடுவில் நல்லடக்க ஆலயத்தின் பளிச்சிடும் பொண்மாடம் வீற்றிருக்கின்றது. இது ‘எல்லாமே எப்படி இருக்கவேண்டுமோ அப்படியே அமைக்கப்பட்டுள்ள கருத்துநிறைந்த ஒரு பூங்கா போன்றதாகும்’ என கோப்பன்ஹேகன் நகரின் ஜோனாஸ் மேஜர் எனும் 20 வயதான மானவர் கூறுகின்றார். ‘ஆனால் இரு ஒரு புனிதத்தலமாகும். அது வேறு ஒரு கதை’.

அக்கதை பஹாய் சமயம் பற்றியது; அது 1800ம் ஆரம்ப ஆண்டுகளில் ஆரம்பித்து அதன் ஆன்மீக மையஸ்தலம், அக்கால பேரரசு சார்ந்த ஒரு சூழ்நிலையால், இங்கு இன்று இஸ்ரேல் என வழங்கப்படும் நாட்டில் அமைந்துவிட்டது. ஹைஃபா நகரில் உள்ள இந்த நல்லடக்க புனித இடம் “பாப்”, அல்லது “திருவாசல்” அவர்களின் நல்லடக்கத்தலத்தை குறிக்கின்றது. “பாப்”, அல்லது “திருவாசல்” எனப்படும் இந்த அடைமொழி ஒரு கடவுளின் அவதாரம் எனும் முறையில் சையிட் அலி முகம்மது அவர்களுக்கு வழங்கப்பட்ட பெயராகும். இவர் இரான் நாட்டின் தென்மேற்கில் உள்ள பூந்தோட்டங்கள் நிறைந்த ஷிராஸ் நகரில் பிறந்தவராவார். இவர் தமக்குப் பின் தோன்றவிருக்கும் ஒரு மாபெரும் அவதாரத்தை முன்னறிவித்து அதே வேளை ஆண் பெண் சமத்துவம் மற்றும் வன்முறை தவிர்த்தல் போன்ற தமது சமயத்தின் கோட்பாடுகளையும் அறிவித்தார். பாப் அவர்கள் ஒரு சமய முறன்பாட்டாளராக இரான் நாட்டின் சமயகுருக்களால் கொலைசெய்யப்பட்டார் மற்றும் அவரது நல்லுடல் அவரது விசுவாசிகளால் மீட்கப்பட்டு பல பத்தாண்டுகாலங்களாக ஒவ்வோர் இடமாக இரகசியமாக மறைத்துவக்கப்பட்டது.

பாப் ‘அவர்களின் பூதவுடலில் இறுதி நல்லடக்க ஸ்தலம் பாப் அவர்கள் தாம் எவருக்கு முன்னோடியாக தோன்றினாரோ அந்த கடவுளின் அவதாரமான ‘பஹாவுல்லா’ அல்லது ‘கடவுளின் ஓளி’ என பெயர்கொண்ட மிர்ஸா ஹுஸெய்ன் அலி அவர்களால் தீர்மானிக்கப்பட்டது. பஹாவுல்லா பிரபு வம்சத்தவர் எனும் காரணத்தினால் மரண தன்டனைக்கு ஆளாகவில்லை ஆனால் நாடுகடத்தப்பட்டார். இந்த நாடுகடத்தலின் முடிவில் அவர் ஹைஃபா நகரின் வலைகுடாவிற்கு எதிரேயுள்ள ஒட்டமான் அரசின் ஆக்கோ நகர சிறைசாலைக்கு கொண்டுவரப்பட்டார். பாப் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மலைச்சரிவை அவரே தேர்ந்தெடுத்தார். ஆனால், ஆக்கோ நகரில் உள்ள பஹாவுல்லாவின் நல்லடக்கத்தலத்தை நோக்கியே பஹாய்கள் தங்கள் பிரார்த்தனையின் போது முகம் திருப்புவர்.

பஹாய் சமயத்தை விளக்கிடும் போது, ‘நீங்கள் கூறுவதெல்லாம் பொது அறிவுதானே என மக்கள் கூறுவர்’, என பஹாய் உலக நிலையம் என வழங்கப்படும் ஹைஃபா நகரின் வளாகத்தில் தொடர்புத்துறை இயக்குனராக பணிபுரியும் திரு ரொப் வேய்ன்பர்க் கூறுகிறார். “பஹாய் சமயம் ஒரு கடவுள் கோட்பாடு அடிப்படையிலான சமயம். அது சமயங்கள் அனைத்தையும் அரவணைத்து, அவற்றின் பொதுவான மையக் கோட்பாடுகளை இக்காலத்திற்கு ஏற்ற வகையில் மேம்படுத்துகிறது. அதாவது, கடவுள் காலங்காலமாக உலகிற்கு தமது அவதாரங்களை அனுப்பி மனுக்குலத்திற்கு அறிவொளி வழங்கிவந்துள்ளார். ஆபிரஹாம், ஸோரோவேஸ்ட்டர், இயேசு, முகம்மது மற்றும் கிருஷ்னர், புத்தர் போன்றோர் இத்தகைய அவதாரங்கள் ஆவர். பாப் அவர்களும் பஹாவுல்லாவும் இக்காலத்திற்கு ஏற்ற ஒரு திருமுறையை கொணர்ந்துள்ளனர். மனிதர்கள் இருக்கும் வரை அவர்களிடையே அவதாரங்கள் தோன்றி அவர்களை மேம்பாட்டின் அடுத்த கட்டத்திற்கு வழிகாட்டுவர்,” என அவர் மேலும் கூறுகிறார்.

பஹாய் சமய நம்பிக்கையின் மையக்கோட்பாடுகளாக, சமத்துவம், அனைத்துலக கல்வி, சமூக நீதிமுறை மற்றும் ஏழைகளுக்கிடையிலும் செல்வந்தர்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பது. பஹாய்கள் ஒருதாரக் கொள்கை, திருமணம், குடும்பம், பொதுச் சேவை, அறிவியல் மற்றும் சமயம் (இவை இரண்டுமே மெய்ம்மையின் இரு விதமான வெளிப்பாடுகள்) ஆகிய கோட்பாடுகளை ஆராதிப்பவர்கள். இதில் சமயகுருமார்கள் கிடையாது, ஒவ்வொரு தனிமனிதரும் தமது ஆன்மீக மேம்பாட்டிற்கு தாமே பொறுப்பாளர் ஆவார். உலகில் உள்ள 60 இலட்சம் விசுவாசிகள் ஒன்றுகூடி தமது உள்ளூர் மற்றும் தேசிய ஸ்தாபனங்களை தேர்வு செய்யும்போது அது இரகசிய வாக்கெடுப்பு மூலம் வேட்பாளர் பட்டியலோ முன்மொழியப்பட்ட வேட்பாளர்களோ இன்றி நடைபெறும். ஒவ்வொரு வாக்காளரும் தகுதியான ஒருவரின் பெயரை எழுதுவார்கள்.

இந்த நல்லடக்கத் திருவிடத்தின் பின்புறத்தில் ஒரு வருகையாளர் மையம் உள்ளது. (குழுவாக வருவோருக்கு மட்டும்) இவ்விடத்தில், பஹாவுல்லா தமது திருவெளிப்பாடு குறித்த திருவாக்குகளை வெளியிடும் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கிருக்கலாக எழுதப்பட்ட ஏடுகள் உட்பட, (பஹாய்) சமயத்தின் ஆரம்பகாலம் சம்பந்தப்பட்ட பல பழம்பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மற்றும் பஹாய் சமயம் தனது பார்வையை மட்டுப்படு்த்திக்கொள்ளவில்லை. வெய்ன்பர்க்கிற்கு எதிரேயுள்ள ஒரு காரியாலயத்தில் பின்வரும் அறிக்கை ஒரு வெண்பலகையில காணப்படுகிறது: :எங்கள் கடமை: …(அ) மனிதத் தனிதன்மை (அதுவேயாம்தன்மை) …(ஆ) மனித உறவுமுறைகள் (பற்றிய கற்பது).”

இருந்தபோதும் பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. பெரும்பாலும் இவை இரான் நாட்டிலேயே ஏற்படுகின்றன. இரான் நாடு தான் பஹாய் சமயத்தின் பிறப்பிடம் என்பதை கொண்டாடவில்லை, அதற்கு வெகு மாறாக பஹாய்களை மதத் துரோகிகளாக கருதுகிறது. பிரச்சினை பஹாய் சமயத்தின் கோட்பாடுகள் குறித்து அல்ல, ஆனால், முகம்மது நபி அவர்களுக்கு பிறகு கடவுள் வேறொரு அவதாரத்தை பூமிக்கு அனுப்பியுள்ளார் என்பது குறித்தே பிரச்சினை எழுந்துள்ளது. இஸ்லாம் மதத்தினர் முகம்மது அவர்கள் கடவுளின் இறுதியான தூதர் . — தீர்க்கதரிசிகளின் முத்திரை– என நம்புகின்றனர். 1979 புரட்சியின் பயனாக முல்லாக்கள் ஆட்சியில் நடந்த கொலைகள் மற்றும் கும்பல் அராஜகத்திற்கு பிறகு இரான் நாட்டில் வாழும் 3 இலட்சம் பஹாய்கள் பகிஷ்கரிப்பிற்கும் கைது நடவடிக்கைகளுக்கும் ஆளாகியுள்ளனர். 2008ம் ஆண்டு முதல் ஏழு பஹாய் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், வேவு பார்த்தல், மற்றும் நாட்டிற்கு எதிரான பிரச்சாரம் என பல “ஜோடிக்கப்பட்ட” குற்றங்களுக்காக சிறை வைக்கப்பட்டுள்ளனர் என மனித உரிமை கண்கானிப்பு கூறுகிறது. அதிகாரபூர்வமான ஒரு திட்டமாக அவர்களின் வளர்ச்சியை தடுக்கும் ஒரு நடவடிக்கையாக, பல்கலைக்கழகம் புக விரும்பும் பஹாய் இளைஞர்கள் தங்களின் சமய நம்பிக்கையை மறைக்கவேண்டும், அல்லது, இரகசியமாக இயங்கும் ஒரு பல்கலைகழகத்தில் தங்கள் வாய்ப்புக்களை தேடவேண்டும், ஏனெனில் இரான் நாட்டில் பஹாய்கள் உயர்கல்விக்கு செல்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர்.

இவற்றிற்கு அப்பால், தற்போது 11,790 தங்கத் தகடுகளால் மறுசீர் செய்யப்பட்டுள்ள “கார்மல் இராணி” எனப்படும் பாப் அவர்களின் நல்லடக்க மாடத்தின் பிரகாசம் கண்ணைப் பறிக்கின்றது. இந்த நல்லடக்க கட்டிடம் எந்த ஒரு புனிதபயண நகரும் காணாத வகையில் நகரை அலங்கரித்தும் கம்பீரமாக வீற்றும் உள்ளது. இராக் நாட்டில் உள்ள நஜாஃப் மற்றும் கர்பிலா மற்றும் பிரான்ஸ் நாட்டின் லூர்ட்ஸ் நகர்களைப் போன்று பல்லாயிரக்கணக்கில் இங்கு புனிதப்பயணிகள் வரவில்லையெனினும், சென்ற வருடம் சுமார் 760,000 வருகையாளர்கள் வந்திருந்தனர். இவர்கள் பஹாய்களைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகம். இவர்கள் யார் என்பதை அவர்கள் அனிந்திருக்கும் நீல நிற அடையாள பெட்ஜுகளின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். இது இவர்கள் அனைவரும் பக்கத்தில் உள்ள, கிரேக்க நாட்டின் பார்த்தனன் (parthenon)வடிவில் அமைக்கப்பட்டுள்ள பழம்பொருள் காட்சியகத்திற்குள் செல்ல அனுமதியளிக்கின்றன.

“நாங்கள் இஸ்ரேல் நாட்டின் ஒற்றர்கள் என இரான் நாடு கூறுகிறது. ஆனால் நாங்கள் இஸ்ரேல் நாடு தோன்றுவதற்கு 80 வருடங்களுக்கு முன்பிருந்தே இங்கு இருந்துள்ளோம். எங்கள் புனிதஸ்தலம் ஹைஃபா நகரில் இருப்பது தற்செயலானதே,” என வேய்ன்பர்க் கூறுகிறார். இருந்தும், மற்றவகையில் இது பொருத்தமானதே. சான் பிரான்சிஸ்கோ நகரை பிரதிபலிக்கும் மலைச்சரிவான கரையோரப் பகுதியுடனும், எவ்வித தடங்கலும் இல்லாமல் இந்த நகரின் பூத மற்றும் அரபு மக்கள் பழகுவதும், இஸ்ரால் நாட்டின் நகர்களிலேயே ஹைஃபா நகரே அதிக சர்வதேசமுகமாக தோற்றமளிக்கின்றது. கடந்த ஏப்ரல் மாதம் பாப் அவர்களின் மாடத்தை மூடியிருந்து காவி நிற சாக்குத் துனி அகற்றப்பட்டு மலைச்சரிவு மீண்டும் பொண்வண்ணம் கொண்டு பிரகாசித்தவுடன், “நல்லடக்க திருவிடம் ஹைஃபா நகரின் அமைப்பின் மீது முழு தாக்கம் செலுத்துகின்றது,” என ஹைஃபா நகர மேயர் யோனா யாஹவ் கூறினார். “இது சகிப்புத்தன்மை மற்றும் பல்கலாச்சாரமான இந்த நகரத்தின் மூலமையமும் அடையாளச்சின்னமும் ஆகும்,” என அவர் மேலும் கூறினார்.