புதிய அவமதிப்பு: இரானிய பஹாய் ஒருவரை முஸ்லீம் சமய அடிப்படையில் புதைக்கப் போவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்


http://news.bahai.org/story/845

ஜெனிவா – மத பாகுபாடு குறித்த மூர்க்கத்தனமான ஒரு புதிய சம்பவத்தில், இரான் நாட்டின் டப்ரிஸ் நகரின் அதிகாரிகள் பஹாய்களின் பஹாய் சட்டங்களுக்கு ஏற்ப ஒரு உறவினர் அடக்கம் செய்யப்படுவதை அனுமதிக்க மறுத்து – அதற்கு பதிலாக இறந்து போன பெண்ணை சவப்பெட்டி இல்லாமல் முஸ்லீம் சடங்குகளின் கீழ் அடக்கம் செய்யப்போவதாக கூறியுள்ளனர்.

“மத்திய கிழக்கு கலாச்சாரத்தை புரிந்த எவருக்கும், ஒரு சமயத்தின் விசுவாசியை வேறோர் அன்னிய சமயத்தின் சடங்குகளின் கீழ் அடக்கம் செய்திட அவரின் குடும்பத்தை வற்புறுத்துவது எல்லை தாண்டிய ஒரு செயலாக விளங்கும்,” என ஜெனேவாவில் உள்ள பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரிதிநியான டையேன் அலாயி கூறினார்.

பஹாய்களின் சவ அடக்க சடங்கின்படி இறந்தவர் ஒரு சவப்பெட்டியில் வைத்தே அடக்கம் செய்யப்பட வேண்டும், ஆனால் முஸ்லிம் சட்டப்படி சவப்பெட்டி பயன்படுத்தப்படுவதில்லை.

“இந்த சம்பவம் ஈரானிய அதிகாரிகள் பஹாய்களுக்கு எதிராக தங்கள் பாரபட்சம் மற்றும் விரோதத்தை வெளிப்படுத்த எந்த அளவிற்கு செல்ல தயாராக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது,” என அவர் கூறினார்.

இவ்விஷயம் கடந்த திங்கட்கிழமையன்று ஆரம்பித்தது. டப்ரிஸ் நகர அதிகாரிகள் இறந்தவரை பஹாய் சட்டத்தின்படி உள்ளூர் இடுகாட்டில் புதைக்க இயலாது என்று திருமதி பாத்திமா-சுல்தான் குடும்பத்தினரிடம் கூறினர். மாறாக, அவர் முஸ்லீம் வழக்கத்தின் படிதான் புதைக்கப்பட வேண்டும் என கூறினர்.

இதற்கு, அந்த இடுகாடு எல்லா சமயத்தவர்களும் அவரவர் விருப்பப்படி தங்களுக்கு வேண்டியவர்களை அடக்கம் செய்ய பயன்படுத்தும் ஓர் இடமாக இருந்துவந்துள்ளது, என இறந்தவரின் குடும்பத்தினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த எதிர்ப்பு காரணமாக, அதிகாரிகள் சவப்பெட்டி இல்லாமல் திருமதி ஸையேரி புதைக்கப்பட வேண்டும் என அதிகாரத்துடன் வற்புறுத்தினர் – மற்றும் அவர்கள் இறந்தவரின் உடல் வேறு எங்காவது எடுத்து செல்லப்பட மறுத்து இறந்தவரின் உடலை, 48 மணி நேரம் தடுத்து வைத்தனர்.

நேற்று, குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் இடுகாட்டு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, இறந்தவரை வேறு எங்காவது புதைத்திட, அவரது உடலை விடுவிக்கும்படி மன்றாடினர். அதற்கு அவர்கள் இறந்தவர் முஸ்லீம் சடங்குகளின்படி , வியாழன் அன்று ஒரு சவப்பெட்டி இல்லாமல் அடக்கம் செய்யப்படுவார் என அறிவித்தனர் – மற்றும் இறந்தவரின் கனவர் மட்டுமே சவ அடக்கத்தின்போது அனுமதிக்கப்படுவார் எனவும் கூறினர்.

இது அவர்களின் இறந்தோரை அடக்கம் செய்திட பஹாய்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் நீண்ட வரலாற்றில் மிக சமீபத்திய சம்பவமாக உள்ளது. இரான் நாட்டின் பல நகரங்களில், முஸ்லீம் கல்லறைகளை பயன்படுத்துவதிலிருந்து பஹாய்கள் நீண்ட காலமாகவே தடுக்கப்பட்டு வந்துள்ளனர், மாறாக அவர்கள் தங்கள் சொந்த இடுகாடுகளை கொண்டிட அனுமதிக்கப்பட்டுவந்துள்ளனர்.

எனினும் இந்த பஹாய் கல்லறைகள் அடிக்கடி அவற்றின் புனிதம் கெடுக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வந்துள்ளன.

கடந்த ஆண்டுகளில், இரான் நாட்டின் பல நகரங்களில் உள்ள பஹாய் கல்லறைகள் டிராக்டர்கள் கொண்டு அழிக்கப்பட்டுள்ளன அல்லது சில பல வழிகளில் பஹாய் சமூகத்திற்கு அவை கிடைக்கப்படாமல் தடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் கிலாவன்ட் நகரில் மட்டும் நான்கு கல்லறைகள் ஒரு டிராக்டர் கொண்டு அத்துமீறி அழிக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்னதாக, மார்ச் மாதம், நஜாஃப் அபாட் நகரில் ஒரு பஹாய் குடும்பம் அதிகாரிகளின் அனுமதி பெற்றிருந்தும், இறந்த தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரை கல்லறையில் அடக்கம் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டிருந்தனர்.

“இரானிய அதிகாரிகள் சமய ரீதியில் தங்கள் அரசாங்கம் எவரையும் துன்புறுத்துகிறது என்பதை எப்போதுமே மறுத்து வந்துள்ளனர். பஹாய்கள் தங்கள் நாட்டிற்கு எவ்வகையிலும் அச்சுறுத்தலாக விளங்கவில்லை. ஆனால், பஹாய் கல்லறைகள் மீதான பிரச்சினைகள் மற்றும் அவை அழிக்கப்படுதல் ஆகியவை சமய ரீதியில் மட்டுமே நடைபெறுகின்றன என்பதை தெளிவுபடுத்துகின்றன,” என திருமதி அலாயி தெரிவித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: