புது டில்லி — கெனடா நாட்டின் ஒட்டாவா நகரின் ஒரு பேருந்தில் ஏறுங்கள்; பாரீஸ் நகரில் ஒரு சஞ்சிகையை புரட்டுங்கள்; அல்லது இத்தாலி நாட்டின் ரிமினி தொடர்வண்டி நிலையத்தின் மேற்புறம் பாருங்கள் — உலகம் முழுவதும், பொதுமக்களின் கவனத்தை இந்தியநாட்டின் பஹாய் வழிபாட்டு இல்லம் ஈர்க்கின்றது. அதன் 25வது ஆண்டு நிறைவை ஒட்டி, தென் ஆஃப்ரிக்காவிலிருந்து ஜப்பான் வரை, ஐக்கிய அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூர் வரை, தாமரை வடிவிலான அக்கோவில் 14 நாடுகளில் விளம்பர தட்டிகளில் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இது ‘வியத்தகு இந்தியா’ எனும் விளம்பர நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இது இந்திய நாட்டின் கலாச்சார பல்வகைத்தன்மை மற்றும் அதன் தனிச்சிறப்பு வாய்ந்த சாதனைகளை காட்சியகப்படுத்தும் ஒரு திட்டமாகும்.
“இந்திய நாடு மானிடம் முழுமையின் ஆன்மீகத் தன்மையை பிரதிநிதிக்கின்றது, மற்றும் எந்த சமயம் அல்லது நம்பிக்கையை சார்ந்தவரானாலும் தியானத்திற்காகவும் பிரார்த்தனைக்காவும் செல்லக்கூடிய ஒரே இடமாக பஹாய்களின் இத்திருக்கோவில் திகழ்கிறது,” என சுற்றுலா அமைச்சரான மதிப்பிற்குறிய சுபோத் காந்த் சஹாய் கூறினார்.
புது டில்லியில் உள்ள இக்கோவில் சுமார் ஆறு ஆண்டுகளான கட்டுமானத்திற்கு பிறகு டிசம்பர் 1986ல் திறப்புவிழா கண்டது. இதன் ஆரம்பத்திலிருந்து சுமார் ஏழு கோடி மக்கள் இக்கோவிலுக்கு வருகை தந்துள்ளனர் என மதிப்பிடப்படுகின்றது. தினசரி சுமார் 8,000த்திலிருந்து 10,000 பேர்கள் வரை இங்கு வருகை தந்து உலகத்திலேயே அதிமாக வருகை தரப்படும் இடங்களில் ஒன்றாக இது விளங்குகின்றது.

மாநில சுற்றுலா அமைச்சரான திரு சுல்தான் அஹ்மெட், “வருகை தரப்படுவதற்கு இது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த இடம். இது அனைத்துலக தரத்திலான கட்டடக்கலையில் அமைந்துள்ளது, மற்றும் தெளிந்தமைதியான சூற்றுச்சூழலையும் ஏற்றம் தரும் சூழ்நிலையையும் கொண்டுள்ளது ” என கூறுகின்றார்.
இக்கோவில் உலகம் முழுவதுமான ஏழு பஹாய் வழிபாட்டு இல்லங்களுள் ஒன்றாகும். இது அமைதியான வழிபாட்டிற்கும் தியானத்திற்கும் எல்லா மக்களுக்கும் திறந்துவிடப்பட்டுள்ள ஓரிடமாகும்.
உள்படுத்துவதான இச் செய்தி வியத்தகு இந்தியா விளம்பர நடவடிக்கையின் ஓரம்சமும் கூட என இந்திய பஹாய்களின் தேசிய ஆன்மீக சபையின் செயலாளரான திருமதி நாஸ்னீன் ரௌஹானி கூறுகின்றார்.
“இவ் விளம்பரத்தை காணும் எவருமே இது ஒரு கோவில் என புரிந்துகொள்வர், ஆனால் அதைவிட முக்கியமாக, அக்கோவில் எதற்காக என்பதையும் அது எதை பிரதிநிதிக்கின்றது என்பதையும் மக்கள் அறிந்துகொள்வார்கள்”. இவ்விளம்பரங்கள் அதை ‘பஹாய் வழிபாட்டு இல்லம் — இந்தியாவின் இனங்களின் இணக்கத்தையும்,’ அல்லது ‘இந்தியாவின் மனிதகுல ஒருமைத்தன்மையின் சின்னம்,’ அல்லது மதங்களின் ஒற்றுமை, குறித்து விளம்பரப்படுத்துகின்றன என்றார் திருமதி ரௌஹானி.
அமைதி குறித்த ஒரு செய்தி
உடனடியாக இந்த வியத்தகு இந்தியா முன்முனைவைத் தொடர்ந்து, புது டில்லியில் மற்றொரு விளம்பர இயக்கத்தின் ஒரு பகுதியாக இப் பஹாய் வழிபாட்டு இல்லத்தின் நிழற்படம் தோற்றமளிக்கவிருக்கின்றது. “டில்லி மேரி ஜான்” (என் பிரியமான டில்ல) முன்முனைவு சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்டது.
“இக்கோவிலின் 25 வருடகால நிறைவையும் இன்று காணப்படும் நவீன டில்லியின் 100 வருட கால்ததையும் நாங்கள் நினைவுகூறுகின்றோம். இது ஒரு மாபெரும் உடன்நிகழ்வு,” என டில்லி நகரின் முதலமைச்சரான ஷெலியா தீக்ஷித் விளக்கினார்.
“இது ஓர் அழகான கட்டிடம். அது உருச்சின்னமாகியுள்ளது.”
இக்கோவில் “எல்லா மக்களையும் அகப்படுத்துவதே” அதன் ஈர்ப்புசக்தியாகும், என முதல் அமைச்சர் மேலும் கூறினார்.
“பஹாய் சமயம் மனதைக்கவரும் ஒரு சமயமாகும். அது அமைதி, செழுமை மற்றும் மனக்களிப்பு குறித்த… ஒரு செய்தியை மானிடத்திற்கு வழங்குகின்றது,” என அவர் மேலும் கூறினார்.
அடுத்த மாதம் அக்கோவிலில் நடைபெறவிருக்கும் அதன் 25வருட நிறைவுவிழாவிற்கு சுமார் 50 நாடுகளிலிருந்து 4000த்திற்கும் அதிகமானோர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இக்கோவில் எல்லாருக்குமே, ஒவ்வொரு சமயம், நம்பிக்கை மற்றும் மக்களுக்கு, சொந்தம் என்பதை இந்த விளம்பர தட்டிகள் தெளிவாகவே வெளிப்படுத்துகின்றன. ஆகவே, அதன் 25 ஆண்டு நிறைவு விழாவும் எல்லாரையும் உட்படுத்துவது இயல்பானதே” என்றார் நாஸ்னீன் ரௌஹானி.