அறம் செய விரும்பு – 1


வயதான பிச்சைகாரருக்கு குடை பிடித்து உதவிய பெண்

திடீரென கடும் மழை பெய்ய துவங்கியது. கால்கள் செயலிழந்த வயதான பிச்சைக்காரர் ஒருவர் மழையில் நனைந்திட ஆரம்பித்த போது சிறு வயது பெண் ஒருவர் அது கண்டு தான் நனைந்தாலும் பரவாயில்லை அப்பெரியவர் நனையாமல் இருந்திட தன் குடையை அவர் தலைக்கு உயரே பிடித்து உதவினார். அப்போது சீருடையில் இருந்த ஒருவர் (காவலர்) அச்செயலை பார்த்துக்கொண்டிருக்கின்றார். சீனாவின் ஸூஸௌ நகரில் நடந்த ஓர் உண்மையான சம்பவம் இது. அவ்விடத்தில் இருந்த ‘நெட்டிஸன்’ ஒருவர் இப்படங்களை எடுத்துள்ளார். இப்படங்களின் உண்மையை உறுதிசெய்து அனுப்பிய நிருபர் அப்பெரியவருக்கு உதவிய பின்னர் தன் இடத்திற்கு திரும்பிய அப்பெண் அழுததாக அந்த ‘நெட்டிஸன்’ கூறியதாக எழுதியுள்ளார். அப்பெண்ணின் செயலை ‘நெட்டிஸன்கள்’ பலர் இண்டர்நெட்டில் பெரிதும் பாராட்டி, அது போன்ற ஒரு மனதை தொடும் காட்சியை தாங்கள் கண்டதே இல்லையென எழுதியுள்ளனர்.

குடை பிடிக்கும் பெண் - 1
அவசரமாக சாலையை கடக்க முடியாத நிலை
குடை பிடிக்கும் பெண் - 2
நனைந்துகொண்டே உடன் செல்கின்றார்
குடை பிடிக்கும் பெண் - 3
உதவிக்கு வந்தவர் முழுதாக நனைந்துவிட்டார்
குடை பிடிக்கும் பெண் - 4
வேடிக்கை பார்க்கும் காவலர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: