http://www.bahai.us/2011/10/12/jack-and-farzaneh-guillebeaux/
அக்டோபர் 12, 2011
பெரும்போலானோருக்கு ஜேக், பஃர்ஸானே ஜோடி காதல் வயப்பட்டது சரியாகப்படவில்லை.

1960களில் வெள்ளையருக்கும் கருப்பருக்கும் இடையிலான காதல் உறவுகள் அனுமதிக்கப்படவில்லை. தடைசெய்யப்பட்டிருந்தது.
ஆனால், பஹாய்கள் அதை அவ்வாறு காணவில்லை. வெவ்வேறு இனங்களுக்கிடையிலான திருமணங்கள் மனிதகுலத்திற்கு ஆற்றப்படும் சேவையே என ஒரு முறை பஹாவுல்லா கூறியுள்ளார் மற்றும் இவ்வார்த்தைகளே 1965ல் திருமணம் செய்துகொள்வதெனும் இந்த ஜோடியின் தீர்மானத்தின் உந்துசக்தியாக இருந்தது.
இந்த ஜோடி ஆஷ்வில் N.C. நகரின் பஹாய் விளக்க கூட்டம் ஒன்றில் சந்தித்தனர். அப்போது பாஃர்ஸானே காலேஜ் செல்லும் முடிவோடு இரான் நாட்டிலிருந்து ஐக்கிய அமெரிக்கா வந்திருந்தார்.
“நான்கு வருடங்கள் பள்ளி சென்றும் அதன்பின் வீடு திரும்புவதும் என் திட்டமாக இருந்தது. ஆனால் கடவுளின் திட்டம் வேறாக இருந்தது,” என அவர் கூறினார்.
ஆஷ்வில் பஹாய் சமூகத்தினர் இந்த இளம் ஜோடி தங்களின் உறவை வளர்த்துக்கொள்ளக்கூடிய புகலிடத்தை வழங்கியதன் வாயிலாக அவர்களுக்கு ஆதரவும் பராமரிப்பும் அளித்தனர். அக்காலத்தில் கலப்பின ஜோடியினர் வட காரோலினாவில் ஒன்றாக வாழ அனுமதியிருந்தது, ஆனால் அவர்கள் அந்த மாநிலத்தில் திருமணம் செய்துகொள்ளமுடியாது. ஆகவே அவர்கள் 500 மைல்களுக்கு அப்பால் வில்மட் நகரில் இருந்த பஹாய் வழிபாட்டு இல்லத்தில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
“ நாங்கள் பெரிதும் வறிய நிலையில் இருந்தோம். நான் மாணவியாக இருந்தேன், ஆனால், காதல் வயப்பட்ட நாங்கள் என்னதான் செய்வது? என பாஃர்ஸானே கூறினார்.”
அவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவ்வளவு தூரத்தில் நடந்த திருமணத்தில் கலந்துகொள்ள இயலவில்லை, ஆகவே திருமண தம்பதியினர் இல்லம் திரும்பியவுடன் அவர்களுக்காக ஆஷ்வில் நகர் YWCAல் ஒரு திருமண விருந்து நிகழ்வை நடத்திட தீர்மானித்தனர்.
அவ்விருந்து நிகழ்வின் போது அவர்களுக்கு பழக்கமில்லாத பல முகங்களைக் கண்டனர். அந்த பழக்கமில்லாத மனிதர்கள் அனைவரும் இத்தகைய தடுக்கப்பட்ட திருமணத்திற்கான விருந்து நிகழ்வை தாங்களே நேராக காண வந்திருந்தனர் என ஜேக் கூறினார்.

“இத்தகைய பொதுநிகழ்வை மக்கள் கண்டதில்லை என்பது அப்போது மிகவும் தெளிவாகியது, என ஜேக் கூறினார் .” சமூகத்தில் இருந்த பலருக்கு இது ஒரு மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாக இருந்தது. சிலர் அதை வெளிப்படையாகவே தெரிவித்தனர், பிறரோ இது எவ்வளவு காலத்திற்குதான் நிலைத்திருக்கும் என காத்திருந்தனர்.
அன்று இரவு அந்த விருந்து நிகழ்வில் வெடி குண்டு மிரட்டல் ஒன்று இருந்ததென ஜேக் ஜில்லபோ தம்பதியினர் கூறினர்.
புதுமணத் தம்பதியினரைப் பற்றி மக்கள் பலவாறாகப் புறம்பேசினர், அவர்களை உறுத்து பார்த்தனர், சிலர் அவர்களுக்கு வீடு வாடகைக்குக் கொடுக்கக்கூட மறுத்துவிட்டனர். கில்லபோ தம்பதியினர் இவ்விஷயங்களைப் பற்றி விவரிக்கையில் முகத்தில் புன்னகையோடே விவரித்தனர்.
“எங்களுக்கு இது மிகவும் நகைப்பாக இருந்தது. நாங்கள் தெருவில் நடந்து செல்கையில் திடீரென நாங்கள் திரும்பிபார்த்தால் எங்களையே பார்த்துக்கொண்டிருந்த பலர் தங்கள் முகத்தை அப்பால் திருப்பிக்கொள்வதைக் காண்போம்,” என சிரித்துக்கொண்டே பாஃர்ஸானே கூறினார்.
இவர்கள் எதோ ஒரு கருத்தை வலியுறுத்தவில்லை. கில்லபோ தம்பதியினர் இன தப்பெண்ணத்திற்கு எதிராக ஒரு விதமான போராட்டதை நடத்தினர்.
“கலப்புத் திருமணங்களை மானிடத்திற்கான சேவை என பஹாவுல்லா ஏன் கூறினார் என்பதை நாங்கள் நேரடியாகவே கண்டோம் . தப்பெண்ணங்கள் கற்றுக்கொள்ளப்படும் ஒன்றாகும் மற்றும் ஒரு கலப்பின தம்பதியினரை நேரில் காணும்போது அத்தகைய தப்பெண்ணங்கள் சிறிது சிறிதாக அழிவுறுகின்றன. நாங்கள் சந்திக்க நேர்ந்த மக்களில் அத்தகைய மனப்பான்மைகள் மாறுவதை நாங்கள் நேராகவே கண்டோம்,” என பாஃர்ஸானே கூறினார்.
தப்பெண்ணங்கள் அறியாமையினால் உருவாகின்றன மற்றும் எல்லா கலப்பின தம்பதியினரும், கலப்பின குழந்தைகளும் (அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றன), நாடு முன்னோக்கி செல்வதற்கு பெரிதும் உதவுகின்றன.
சில வருடங்களுக்கு பிறகு அவர்கள் இருவரும் ஜோர்ஜியாவுக்கும், பிறகு தற்போது வாழும் அலபாமாவிற்கும் மாறிச் சென்றனர். அவர்களின் வெள்ளி வருடவிழாவை, தாங்கள் 25 வருடங்களுக்கு முன் தங்களின் திருமண விழாவின் அதே ஆஷ்வில் நகரின் YWCAவில் கொண்டாட அப்போது முடிவெடுத்தனர். உள்ளூர் நிருபர்கள் அவர்களின் அந்த நிகழ்வு குறித்து செய்திகளை சேகரித்தனர் மற்றும் அதன் பயனாக கில்லபோ தம்பதியினர் மீண்டும் அந்த நகரின் உரையாடல்களின் கருப்பொருளானார்கள். ஆனால் இந்த முறை அது வேறுபட்டிருந்தது. மக்கள் அவர்களை பார்த்து இகழ்வாக சிரிக்கவில்லை. மக்கள் அவர்களின் கைகளைப்பிடித்து குலுக்கி, அவர்களை வரவேற்று சமூகம் இப்போது மாறிவிட்டதெனவும் கூறினர்.
அந்த நகரில் அவர்களை திருமணம் செய்துகொள்ளவிடாமல் தடுத்ததற்காக திருமண லைசன்ஸ் அதிகாரிகள் அவர்களிடம் மன்னிப்பு கேட்டனர்.
இந்த கோடைக் காலத்தில் அவர்கள் தங்களின் 46வது திருமண வருட விழாவை கொண்டாடினர்.
1965ஐ பார்க்கையில் சமூகம் எவ்வளவோ மாறிவிட்டிருந்த போதிலும் கலப்புத் திருமண தம்பதியினர் இப்போதும் கண்ணோட்டத்திற்கு இலக்காகவே செய்கின்றனர்.
“தாங்கள் எதைப் பார்க்கின்றனர் மற்றும் அது எதைக் குறிக்கின்றது என்பது பற்றி மக்கள் சிந்திக்கவேண்டும். புதிய விதிமுறைகள் என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்ள இது உதவுகின்றது,” என அவர் கூறினார்.
ஒரு பஹாய் ஆக இருப்பதில் முக்கிய அங்கமே இதுதான் என அவர்கள் மேலும் கூறினர்.
“எழுதப்பட்டவற்றை மெய்மைப்படுத்தி செயல்படுத்துவதற்காக முயலுவதே இதன் விளக்கம் ஆகும்,” என பார்ஸானே கூறினார்.
தங்கள் சமய நம்பிக்கையின்றி அவர்கள் இந்த நான்கு பத்தாண்டுகாலமாக தாங்கள் எதிர்நோக்கிய சவால்களை சந்தித்திருக்கவே முடியாது என அவர்கள் ஒப்புக்கொண்டனர். தங்கள் சமயநம்பிக்கையே தங்களின் ‘துருவ நட்சத்திரமாக’ விளங்கியது என ஜேக் கூறினார்.
“தங்களின் சமய நம்பிக்கை பலவிதமான கேள்விகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளது மற்றும் எங்கள் சமய போதனை எங்களுக்கு என்ன கூறுகின்றது என்பது எங்களுக்கு தெரியும் , அதிலிருந்து அப்பால் திரும்பும் எண்ணம் எங்களுக்கு இல்லை,” என அவர் கூறினார்.