தெய்வீக ‘காதல்’ கதை: ஒரு புதிய திருவெளிப்பாட்டின் தோற்றம்


இரவு வானில் புதிய ஒளிப் பிம்பங்களின் தோற்றம்
புதிய திருநாளைப் பிரகடனம் செய்யும் ஞானியர் கூட்டம்
சிசு ஒன்று உலகில் பிறந்தது
உற்சாகமுற்ற இதயங்களைக் கவர்ந்தது

எனும் இவ்வழகிய மற்றும் பழக்கமான உருமாதிரி கிருஸ்துவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல; கடவுளின் அவதாரங்கள் என பஹாய்கள் குறிப்பிடும் உலகப்பெரும் சமயங்களின் ஸ்தாபகர்களின் பிறப்போடு தொடர்புபடுத்தப்பட்டுள்ள இவ்விஷயத்தின் சில அம்சங்கள் வரலாற்றில் பலமுறை மீண்டும் மீண்டும் நிகழ்ந்துள்ளன. மேலே விவரிக்கப்பட்டுள்ள அடையாளங்கள் கடவுளுக்கும் மானிடத்திற்கும் இடையே தொன்றுதொட்டு நிகழ்ந்துவரும் ‘காதல்’ கதையின் மேலும் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாகும்.

பஹாய் எழுத்துக்களின்படி, கடவுளின் ஒரு புதிய அவதாரம் தோன்றும்போது, பொருளுலகையும் ஆன்மீக உலகையும் நிலைமாற்றம் செய்யும் புத்தம்புதியதொரு ஆற்றல் உலகில் விடுவிக்கப்படுகின்றது. இது ஒரு தினசரி நிகழ்வல்ல: சுமார் 500லிருந்து 1000 வருடங்களுக்கு ஒரு முறை மானிடத்திற்கு, குறிப்பாக அந்நாளில் தேவைப்படும் தொன்மையான விவேகங்கள், புதிய போதனைகள் இரண்டையும் கொணரும் புதிய அவதாரங்கள் கடவுளால் உலகிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்பது பஹாய்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையாகும்.

கடவுள் நம் மீது கொண்டிருக்கும் அன்புக்கு முடிவில்லை என்பதாலும் நாம் நிலையாக வளர்கின்றோம் மற்றும் மாறிவருகின்றோம் என்பதாலும், காலத்திற்கு காலம் நமக்கு ஒரு புதிய தெய்வீக வெளிப்பாடு தேவைப்படுகிறது: இத்தகைய திருவெளிப்பாடு குறித்த செயல்பாட்டுக்கு முடிவே கிடையாது என்பது பஹாய் சமூகத்தினரின் நம்பிக்கையாகும்.

பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா, இத்தகைய கடவுள் அவதாரங்களுள் ஒருவராவார். அவர் 12 நவம்பர் 1817ல் தெஹரான் நகரில் பிறந்தார். உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பஹாய்கள் வருடந்தோரும் அவருடைய பிறப்பை கொண்டாடுகின்றனர்.

ஒரு புதிய அவதாரத்தின் தோற்றத்தை ஓர் அழகிய காதல் கதையின் ஓர் அத்தியாயமாக நாம் கருதக்கூடும், மற்றும் பார்க்கப்போனால், கடவுளுக்கும் மானிட இனத்திற்குமிடையிலான இத்தகைய அன்பான உறவு குறித்து பஹாய் போதனைகளில் பல தருணங்களும் உருவகங்களும் நிறையவே உள்ளன. கடவுள் நம்மீதான அன்பை உணர்ந்திருந்தார் எனவும் ஆகவே நம்மைப் படைத்தார் எனவும் அவை குறிப்பிடுகின்றன: அதனால், நாம் அவருடைய அன்பிற்கு மறுமொழியாக அவர் மீது பிரதி அன்பு செலுத்தும்போது, நமது ஆன்மாக்கள் “உயிர் ஆவியினால்” நிறப்பப்படுகின்றன. அவர் நம்மீது வைத்துள்ள அன்பினால், அவர் நாம் இவ்வுலகில் செழிப்புடன் வாழ தேவைப்படும் அனைத்தும் இருப்பதை உறுதிசெய்துள்ளார்.

சிருஷ்டிகர்த்தாவின் குரலில் பேசும் பஹாவுல்லா, பின்வருமாறு கூறுகிறார்:
“வள்ளன்மையின் மைந்தனே! வெறுமை என்னும் கழிவுப் பொருள்களினின்று, எனது கட்டளை என்னும் களிமண்ணைக் கொண்டு, உன்னைத் தோற்றுவித்தேன்; உனது பயிற்சிக்காக, உளதாம்பொருளின் ஒவ்வோர் அணுவையும், அனைத்துப் படைப்புப் பொருள்களின் சாரத்தையும் நியமித்துள்ளேன். அவ்வண்ணமே, நீ உனது தாயின் கருப்பையிலிருந்து வெளிவருவதற்கு முன்பே, உனக்காக அன்னையின் இரண்டு மார்புகளில் பாலையும், உன்னைக் கண்காணிக்கக் கண்களையும், உன்னிடம் அன்பு காட்ட உள்ளத்தினையும் நியமித்தேன்.”

நாம் நமது ஆன்மீக அடையாளத்தை தன்வசமாக வைத்துள்ள அதே வேளை பொருள் உலக்கின் பலன்களை முழுமையாக அனுபவித்திட நாம் ஊக்குவிக்கப்படுகிறோம்: “மனிதர்களே, இறைவன் உங்களுக்கு அனுமதித்துள்ள நற்பொருள்களை உட்கொள்ளுங்கள்; அவரது அரிய வள்ளன்மைகளை இழக்கச் செய்துகொள்ளாதீர்.” இவை கடவுள் தமது அன்பினால் நமக்காக தேர்ந்தெடுத்துள்ள விஷயங்களுள் சிலவாகும்.

இக்கதையில் நமது பங்கானது கடவுள் மீது பரஸ்பரம் அன்பு செலுத்துவதாகும். பஹாவுல்லா, மறுபடியும் தெய்வீகச்சித்தத்தை வெளிப்படுத்தி, இப்பரிமாற்றத்தில் நமது மறுமொழியின் முக்கியத்துவத்தை அடிக்கோலிடுகிறார்: “உயிருருவின் புத்திரனே! என்னை நேசிப்பாயாக, அதனால் யான் உன்னை நேசிக்க இயலும். நீ என்னை நேசிக்காவிடில் எனதன்பு எவ்வகையிலும் உன்னை வந்தடைய இயலாது. ஊழியனே, இதனை நீ அறிவாயாக.”

தெய்வீக போதனைகளின்பாலான நமது கீழ்ப்படிதலுக்கு அன்பே தூண்டுகோலாக இருக்கவேண்டும்: “எமது அழகின் மீதுள்ள அன்பின் பொருட்டு எமது கட்டளைகளைக் கடைப்பிடிப்பாயாக.” நாம் கடவுள் மீது பிரதி அன்பு செலுத்தும் போது, அப் பரஸ்பர செயலானது, ஒரு ஊசலியைப் போல் அது முன்பிருந்த இடத்திற்கே மீளவும் திரும்பி, நமது வாழ்வில் தன்மைமாற்றத்தை உந்தக்கூடிய வற்றாத ஊக்கசக்தியை உற்பத்தி செய்கிறது.

நமது மனம், இதயம் ஆகியவற்றின் ஈடுபாடு மட்டுமல்ல, ஆனால் நமது செயல்களையும் நடவடிக்கைகளையும் ஈடுபடுத்தும் செயல்பாடு மிக்க ஒரு வகையான அன்பின்பால் நாம் அழைக்கப்படுகிறோம். பஹாவுல்லாவின் திருமகனாராகிய அப்துல் பஹா, அன்பானது தனது மெய்ம்மையை வெறும் வார்த்தைகளால் அல்லாமல் செயல்களாலேயே வெளிப்படுத்துகிறது – வார்த்தைகளுக்கு தனியே ஆற்றல் கிடையாது,” என நமக்கு நினைவூட்டுகிறார். பஹாவுல்லா, “சொற்கள் அன்றி செயல்களே உங்கள் அனிகலனாக இருக்கட்டும். இத்தகைய செயல்கள் அன்போடு நெருக்கமாக தொடர்புகொண்ட, நியாத்தை உள்ளடக்கியிருக்க வேண்டும். நியாயம் என்பது ஒரு வலிமைமிகு ஆற்றலாகும்…. அன்பு மற்றும் கொடைகளின் பதாகை ஏந்தி,” என பஹாவுல்லா கூறுகிறார்.

“அன்பின் ஆற்றலின் வழியிலேயே உலக விவகாரங்கள் நிர்வகிக்கப்படக்கூடும்,” என்பதே தமது வெளிப்பாட்டின் குறிக்கோளாகும் என அவர் குறிப்பிடுகின்றார். கடவுளின்பால் நமது அன்பை நமது தூய்மைமிகு வாழ்க்கை, மனிதநலனிற்காக தியாகங்கள் புரிந்திடுவது, உலகெங்கும் நீதியை பரப்பிட முயலுவது, ஆழ்மெய்நிலையின்பால் ஈடுபாடு ஆகியவற்றின் வாயிலாக வெளிப்படுத்துகின்றோம்.

கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பிற்கான இப்படிப்பட்ட ஒரு மகத்தான சூழ்நிலையில், இத்தகைய உறவில் நாம் ஈடுபடலாமா வேண்டாமா, அவர்மீது அன்புகொள்ளலாமா வேண்டாமா, மறுமொழியளிக்கலாமா வேண்டாமா என்பவற்றை நமது விருப்பத்திற்கே விட்டுவிட்டார். நாம் அவரை புறக்கனிக்கலாம், திட்டலாம் அல்லது ஆராதிக்கலாம். இத்தகைய விருப்ப சுதந்திரம் நமது செயல்களின் விருவிருப்பு மற்றும் ஆற்றலை அதிகரிக்கின்றது.

பஹாவுல்லா சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, வெறுங்கால்களில், தலைப்பாகையில்லாமல், நியாவரானிலிருந்து தெஹரான் நகர் வரை வலுக்கட்டாயமாக நடத்திச் செல்லப்பட்ட போது வழியில் அவர் சந்தித்த கலகக்கும்பல்கள், இயேசு நாதர் சிலுவையை சுமந்து தன்னந்தினியே நடந்து சென்றபோது கும்பல் எவ்வாறு ஏளனக்கூச்சிலிட்டதோ அதே போன்று பஹாவுல்லாவைப் பார்த்தும் ஏளனக்கூச்சலிட்டது. ஆனால், கலகக்கும்பலின் செயல்களெனும் பேரிருள் – இத்தெய்வீக ‘காதல்’ கதையில் நமது பங்கை நாம் நல்லமுறையில் ஆற்றிடும்போது –நம்முடையதையும் சேர்த்து பிறரின் நம்பிக்கை எனும் பிறங்கொளியை மேலும் அதிகமாகவே பிரகாசிக்க செய்கின்றது.

http://www.huffingtonpost.com/laura-weinberg/bahai-revelation-divine-love-story_b_1086896.html

துளிய (quantum) சிந்தனை


துளிய விசையியல் (quantum physics) என்பது பிரபஞ்சத்தை ஐக்கியப்பட்ட ஒரு தளமாக வரையறுக்கின்றது. அதிலுள்ள அனைத்து புள்ளிகளும் மற்ற எல்லா புள்ளிகளுடனும் இணைக்கப்பட்டுள்ளன. அல்லது, அதில் உள்ள எல்லா புள்ளிகளும் மற்ற ஒவ்வொரு புள்ளியுடனும், நேரடியான அணுக்கமற்ற ஒரு தொடர்பினை கொண்டுள்ளன என்பது பிறிதொரு கருத்தாகும்.

அல்லது, வேறொரு கண்ணோட்டத்தில், நமது உறவை மறுவரையறைப்படுத்துவதன் வாயிலாக நாம் மற்ற ஒரு புள்ளியின் மீது செல்வாக்குச் செலுத்தி அதில் மாற்றங்கள் ஏற்படுத்திட முடியும் என்பதாகும்.

இது சற்று தலைவலி அளிப்பதாக இருக்கலாம், ஆனால் இதில் நீங்கள் தனியராக இல்லை. பிரபஞ்சம் குறித்து சிந்திக்கும் விதத்தை நீங்கள் எப்படி மாற்றிக்கொள்வீர்கள் என்பதில் நாம் கொண்டுள்ள பல்வேறு யூகங்கள் மறுசிந்தனைக்கு உட்படுத்தப்பட்டும் பிரபஞ்சம் குறித்த புதிய கருத்துக்கள் ஆய்வு செய்யப்படவும் வேண்டும்.

இவ்விலக்கை அடைவது சற்று சவால் மிகுந்ததாகும்.

இதற்கு ஏன் முயல வேண்டும்? நீங்கள் இதுகாரும் இக்கருத்து குறித்து சிந்தித்து வந்துள்ளதை வேறு விதமாகவும் சிந்திக்கக்கூடும் அல்லது அவ்வாறு சிந்திப்பது பயன்மிகு வழியா என்பது தெரியாமலும் இவ்வளவு காலமாக தட்டுத்தடுமாறி வாழ்ந்துவிடவில்லையா.

மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட கருத்துக்களை நீங்கள் பெற முடியும் என்பது உங்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். ஆனால், நீங்கள் இருவருமே ஒரே விதமாக, ஆனால் வேறுபட்ட “கலவைகள்” அல்லது மொழி அல்லது தர்க்கம் அல்லது ஒருபுறசார்பாக சிந்தித்திருக்கலாம். ஒரே விதமான சிந்தனை ஆனால் உட்பொருள் குறித்த வேறுபட்ட சொல்லாட்சி திறத்தோடு (சிந்தித்திருக்கலாம்).

பல்வேறு விதமாக சிந்திக்கக் கற்றுக்கொள்வது பலனளிப்பதாக இருக்கும் ஏனெனில், அது உங்கள் சொந்த சிந்தனையில் ஏற்படும் நிலைமாற்றங்களையும் மற்றும் அத்தகைய நிலைமாற்றங்கள் உங்கள் கண்ணோட்டங்களில் ஏற்படுத்தும் விளைவுகள் உண்மையானவையாகவும் உளதாகவும் இயல்பானதாகவும் இருக்கின்றன என்பதை நீங்கள் கவனித்திட அது உங்களுக்கு உதவுகின்றது

மற்றவர்கள் சிந்திக்கும் விதத்தைப் பற்றி கற்றுக்கொள்வது அவர்களின் சிந்தனை நிலைமாற்றத்திற்கு என்ன தேவைப்படுகின்றது அல்லது அவர்களுடைய சிந்தனைகளுக்கு ஏற்ப நீங்கள் உங்கள் சிந்தனையை எவ்வாறு மாற்றிகொள்ள முடியும் என்பதை புரிந்துகொள்ள உதவுகின்றது. இது உறவுகள், பேச்சுவார்த்தைகள், இணக்க முடிவு (conflict resolution) போன்றவற்றில் மிகவும் உதவியாக இருக்கும்.

துளிய விசையியலாக சிந்திப்பது இணக்க முடிவு காண்பதில், புதிய கண்டுபிடிப்புகளில், தெரிந்திராவற்றிற்காக திட்டமிடுதலில், இணையான அல்லது பலவான பிரபஞ்சங்கள் போன்ற கணிதமுகமான அல்லது தத்துவப்படியான துறைகளிடையே இணக்கம் காண்பதில் மற்றும் இருக்கக்கூடிய அல்லது கற்பனை செய்திடக்கூடிய எதற்கும் அதிகப்படியான பலன்களை வழங்குகின்றது,

மற்றும், வரையறையாக பார்க்கையில், துளியநிலைப் பிரபஞ்சத்தில் ஒரு விஷயம் கற்பனை செய்யப்படக்கூடுமாயின், அது மெய்ம்மையாகிவிடும். இதனால்தான் துளிய இயல்நிகழ்வு குறித்த பௌதீக மொழியானது மர்மம், மந்திரம் மற்றும் இயல்கடந்த ஆய்வு போன்றவற்றின் மொழிகளோடு ஒத்திருக்கும். சிந்தனைகளும் வஸ்த்துக்களே. சிந்தனை மாற்றம்காணும்போது, நாம் அனுபவிக்கும் யாதார்த்தநிலையும் (reality) மாற்றம்காண்கிறது. அல்லது ஒரே வேளை நாம் வேறு ஒரு நிதர்சன நிலைக்கு செல்லக்கூடும். அல்லது நாம் அனுபவிக்கும் நிதர்சனநிலையை நாம் மாற்றிவிட்டிருக்கலாம்.

துளியநிலை சிந்தனையின் வாயிலாக, நாம் எக்கேள்விக்கான பதிலோடும் அனுக்கம் பெறலாம். ஏன், ஒரே கேள்விக்கான சரியான பதில்கள் பலவற்றோடு அனுக்கம் பெறலாம் மற்றும் அவற்றுள் நமக்கு ஏற்ற பதிலை தேர்ந்தெடுத்தும் கொள்ளலாம். இது பிரபஞ்சத்தின் சட்டமுறைகளை மீறவில்லை. ஐயமின்றி, தட்டையான பௌதீக உலகு குறித்த கருத்திலிருந்து அது நம்மை, கேள்விக்கான பதில் எப்படி சிந்திக்கின்றோம் என்பதில்லாமல் எதைச் சிந்திக்கின்றோம் என்பதை அடிப்படையாகக் கொண்ட, இரண்டு புள்ளிகளுக்கிடையே உள்ள குறுகிய தூரம் நேர்கோடில்லாததும், பன்முக பரிமாணம் கொண்டதுமான, ஓர் பிரபஞ்சத்திற்கு நம்மை அழைத்துச்செல்கின்றது.

Joan McKenna
jmckenna@LMI.net Her url is http://www.joanmckenna.net
Article Source: http://EzineArticles.com/867032