அமரப்பறவை மேலெழுகிறது


அமரப்பறவை மேலெழுகிறது
(பாப் அவர்களின் மரணதண்டனை)

http://www.huffingtonpost.com/shastri-purushotma/phoenix-rises-the-execution-of-the-bab_b_1620138.html

(உலகம் முழுவதும் உள்ள பஹாய்கள் பாப் எனும் திருநாமம் கொண்ட தங்களின் இரு அவதாரங்களில் ஒருவரின் தியாகமரண தினத்தை வருடா வருடம் 9 ஜூலையன்று நினைவுகூர்வர். பின்வருவது அவரின் மரணம் பற்றிய ஒரு குறுவிவரமாகும்.)

நிரபராதியென நீங்கள் நம்பும் ஒருவரைச் சுட்டுச் சாகடிக்கும் கசப்பான கடமை ஒன்றை நீங்கள் நிறைவற்ற வேண்டும் என வைத்துக்கொள்வோம். பிறகு நீங்களும் உங்கள் படைப்பிரிவும் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபரைச் சுடுவதற்கு முன் அவரை சுடுவதற்கு உங்கள் உள்ளம் இடந்தரவில்லை என்பதை அவரிடம் நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள் அதற்கு அவர் “உங்களுக்கு இடப்பட்ட ஆணையை நிறைவேற்றுங்கள், உங்கள் குறிக்கோள் தூய்மையானதாக இருக்குமானால், கடவுள் நிச்சயமாக உங்கள் குழப்பத்திலிருந்து உங்களை விடுவிப்பார்,” என கூறுகிறார். கைதியும் கைதியின் நண்பர் ஒருவரும் ஓர் உயர்ந்த சுவற்றில் கயிற்றால் தொங்கவிடப்படுகின்றனர். இச்சம்பவத்தை சுமார் 10,000 மக்கள் பாத்துக்கொண்டிருக்கின்றனர், நீங்களும் உங்கள் படைப்பிரிவினர் 750 வீரர்களும் கைதிகளைச் சுடுகின்றீர்கள் மற்றும் துப்பாக்கிகளிலிருந்து கிளம்பிய புகை மண்டலம் ஸ்தலத்தையே மறைத்துவிடுகின்றது. புகை மண்டலம் விலகியபின், கைதிகளைப் பிணைத்திருந்து கயிறுகள் துண்டிக்கப்பட்டும், கைதிகளில் ஒருவர் அங்கு உயிருடன் நின்று கொண்டும், மற்றவர் காணமலும் போய்விட்டதைக் காண்கிறீர்.

9 ஜூலை 1950ல் பாரசீக நாட்டின் தப்ரீஸ் நகரில் ஒரு படைத் தலைவனான சேம் காஃனைப் பீடித்திருந்து சங்கடநிலை இதுவே ஆகும். இதற்கான அவர் மற்றும் அவருடைய படையினரின் மறுமொழி அவர்கள் தங்களின் உத்தியோகத்தை அவ்விடத்திலேயே இராஜினாமா செய்ததாகும். சேம் காஃன் கொலை செய்வதற்குத் தயக்கம் தெரிவித்த அந்த கைதியின் பெயர் சையிட் அலி முகம்மது அல்லது “பாப்” அல்லது “திருவாசல்” என்பதாகும். அவர் மானிடத்திற்கு தாம் ஒரு புதிய செய்தியை கடவுளிடமிருந்து கொண்டுவந்துள்ளதாக அறிவித்ததே அவர் கொல்லப்படவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டதற்கான காரணமாகும். அவர் பஹாய் சமயத்தின் இரு ஸ்தாபகர்களில் ஒருவராவார்.

பாப் அவர்கள் கொல்லப்பட்ட இடம்
பாப் அவர்கள் கயிற்றால் தொங்கவிடப்பட்டு கொல்லப்பட்ட தப்ரீஸ் நகர் முகாமின் சுவர். வலப்புறம் x குறியிடப்பட்ட தூணில் அவர் கயிற்றால் கட்டப்பட்ட இடம்

பாப் அவர்கள் தமது சிறை அறையிலிருந்து கொல்லப்படுவதற்காக கொண்டுசெல்லப்படுவதற்கு முன்பாக, அவர் தமது செயலாளருடன் ஓர் உரையாடலில் ஈடுபட்டிருந்தார். சிறைச்சாலையின் தலைமை ஏவலாளி அவர் உரையாடலில் தலையிட்டு கொல்லப்படுவதற்காக அவரை கொண்டுசெல்ல வந்தான். பாப் அவர்கள் இழுத்துச் செல்லப்படும் வேளையில் அவர் சிறை அதிகாரிகளிடம் பின்வருமாறு கூறினார்: “நான் அவரிடம் (செயலாளர்) கூற விரும்பும் விஷயங்கள் அனைத்தையும் கூறுவதற்கு முன்பாக, எந்த உலக சக்தியும் என் நாவை அடக்க முடியாது.” சுடப்பட்டு கயிறுகள் அறுப்பட்டவுடன், அவர் தமது அறையில் தமது செயலாளருடனான உரையாடலில் சாந்தமாக ஈடுபட்டிருக்கக் காணப்பட்டார். தம்மைக் கண்டுபிடித்த அதே சிறை அதிகாரியிடம் பின்வருமாறு கூறினார்: “நான் என் உரையாடலை முடித்துவிட்டேன். நீர் இப்போது உமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம்.” சேம் காஃனைப் போலவே இந்த அதிகாரியும் பெரிதும் ஆட்டம் கண்டு தமது வேலையை உடனடியாக இராஜினாமா செய்தார்.

அதன் பிறகு முற்றிலும் புதிய படைத்தலைவர் ஒருவரும் படைப்பிரிவுகளும் தருவிக்கப்பட்டு மரணதண்டனை முயற்சிகளை மீண்டும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இப்புதிய படைத்தலைவனுக்கு கடந்த ஒரு மணிநேர வினோத நிகழ்வுகள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை மற்றும் சேம் காஃன் போன்று இவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. இம்முறை, புகை மண்டலம் நீங்கியபின், துப்பாக்கி ரவைகள் குறி தவரவில்லை என்பதும் முகங்கள் தவிர உடல்கள் இரண்டும் சிதைந்து உருத்தெரியாமல் போயிருந்தன என்பது தெரிந்த்து. இதன் பிறகு, தப்ரீஸ் நகரை மிகவும் அசதாரனமான கடுங்காற்று ஒன்று தாக்கி, நகரம் முழுவதும் தூசி மண்டலம் சூழ்ந்து அன்று இரவு வரை சூரியனின் ஒளியை மறைத்தது. உடல்கள் இரண்டும் நகருக்கு வெளியே ஓர் அகழியின் கரையில் வீசியெறியப்பட்டன, மற்றும் மரணதண்டனைக்கு அடுத்த நாள் நடு இரவில் உடல்களை காவல் காக்க சுற்றிலும் காவலர்கள் இருந்தும் துக்கவசப்பட்ட சில அன்பர்களால் உடல்கள் எப்படியோ மீட்கப்பட்டன.

உடல்கள் ஒவ்வோர் இடமாக கொண்டுசெல்லப்பட்டும் மறைக்கப்பட்டும், பல வருடங்கள் சென்று இறுதியில் இஸ்ரேல் நாட்டின் ஹைஃபா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டன. ஒப்பீடு மிகவும் திகைக்கவைப்பதாக இருக்கின்றது: ஒரு புறம் மிகவும் கேவலமான முறையில் இரான் நாட்டின் தப்ரீஸ் என இன்று பெயர் கொண்ட நகரில் ஒர் அகழியின் கரையில் வீசெயறியப்பட்ட உடல்கள், இன்று இஸ்ரேல் நாட்டின் ஹைஃபா நகரில் மிகவும் பேரழகு வாய்ந்த ஓர் நல்லடக்கத் திருவிடத்தின் மையமாகத் திகழ்கின்றன மற்றும் உலகளாவிய மரபுத்தலமாகவும் புனிதநிலமெனும் பேரழகின் பிரபலமான சின்னம் ஒன்றாகவும் திகழ்கின்றது.

பாப் அவர்களின் நல்லடக்க ஸ்தலம்

ஹைஃபா, இஸ்ரேலில் உள்ள பாப் அவர்களின் நல்லடக்கத் திருவிடம்

இரண்டாம் முறையாக முயன்று பாப் அவர்களைக் கொன்ற காவல் படைப்பிரிவின் உறுப்பினர்கள் அனைவருமே விரைவில் கொல்லப்பட்டனர் – சிலர் நிலநடுக்கம் ஒன்றின் போது ஒரு பெருஞ்சுவர் அவர்கள் மீது சாய்ந்ததனாலும், மற்றவர்கள் அனைவரும் கலகம் செய்ததனால் சுட்டுக் கொல்லவும் பட்டனர். உலகம் முழுவதும் பாப் அவர்களின் போதனைகள் பரவின, மற்றும் அவரது மரணத்தின் வியக்க வைக்கும் சூழ்நிலை பலரின் மனதைக் கவர்ந்தது. உதாரணமாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒரு ருஷ்ய கவிஞர் அச்சம்பவம் குறித்த ஒரு நாடகத்தை இயற்றியும் அது ஐரோப்பாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் மேடையேற்றம் காணவும் செய்தது. இந்த நாடகமே லியோ டால்ஸ்டாயை பாப் அவர்களின் போதனைகளின்பால் கவர்ந்தும் அவற்றோடு பரிச்சயப்படவும் வைத்தது. அன்மைக்காலத்தின் ஓர் உதாரணமாக கிராண்ட் ஹின்டின் மில்லரைக் குறிப்பிடலாம். இவர் நியூ சீலாந்து நாட்டைச் சார்ந்த ஓர் இசைஞர் ஆவார். இவர் தப்ரீஸ் நகரின் செங்கற்களின் மீது படிந்துள்ள சகதியின் கருவில், அந்நகரை என்றென்றும் கரைபடியச் செய்துள்ள அச் சோக நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு “dumb with despair (நம்பிக்கையின்மையால் மடைமை)” எனும் ஓர் அருமையான பாடலை இயற்றியுள்ளார்.

இவ்வருடம் ஜூலை 9ம் திகதி உலகம் முழுவதுமுள்ள பஹாய் சமூகத்தின் அரை கோடி உறுப்பினர்களுக்கும் அதிகமானோர் பாப் அவர்களின் உலக வாழ்வின் இறுதி தருணங்களைப் பிரார்த்தனை நிகழ்வுகளுடனும் திருவாக்கு வாசிப்புகளுடன் நினைவு கூர்வர். இம்மனைதைப் பிரமிக்கவைக்கும் நிகழ்வுகளைப் பற்றியோ பாப் அவர்களின் போதனைகள் பற்றியோ மேலும் அதிகமாக அறிந்துகொள்ள விரும்புவோர் உங்களுக்கு அருகாமையிலுள்ள பஹாய்களோடு தொடர்புகொள்ளலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: