ஒரு காரில் வைக்கப்பட்ட வெடிகுண்டினால் ஏற்பட்ட ஒரு தீக்கு ஒரு வீடு பலியாயிற்று. அவ்வீட்டின் செல்லப்பிராணியான அமான்டா எனும் நாய் அப்போதுதான் குட்டிகளை போட்டிருந்தது. வீடு தீப்பிடித்தவுடன் அங்கு பணியாற்றிய தீயனைப்பு வீரர்கள் தங்கள் கண்களையே நம்பமுடியாத ஒரு அதிசயம் நடந்துகொண்டிருந்தது. தாய் நாய் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தன் குட்டிகளைக் காப்பாற்றிக்கொண்டிருந்தது.
தாய் நாய் இங்கும் அங்குமாக ஓடி தன் குட்டிகளை ஒவ்வொன்றாக கவ்விக்கொண்டு வந்தது. அது தன் குட்டிகளின் பாதுகாப்பிற்காக தேர்ந்தெடுத்த இடம் அதைவிட அதிசயம் – ஆம் அது தேர்வு செய்தது அங்கு தீயை அனைப்பதற்காக கொண்டுவரப்பட்ட தீயனைப்பு வண்டிதான் அந்த நாய் தன் குட்டிகளுக்காக தெர்வு செய்த இடம்!
தன் குட்டிகள் அனைத்தும் காப்பாற்றப்படும் வரை அந்த நாய் ஓயவில்லை. அங்கிருந்த தீயனைப்பு வீரர்களுக்கு தங்கள் கண்களை நம்பமுடியவில்லை. இத்தகைய ஒரு வீரமான, புத்திசாலியான நாயை பெரும்பாலானோர் கண்டிருக்க மாட்டார்கள்!
தீயிலிருந்து தன் குட்டிகள் அனைத்தையும் காப்பாற்றிய பின், அமான்டா தன் குட்டிகளுக்கு அருகே அமர்ந்து அவற்றை தன் உடலால் மறைத்துக்கொண்டது. பார்வையாளர்கள் உடனடியாக ஒரு மிருகவைத்தியருகை அழைத்தனர். அமான்டாவும் அதன் குட்டிகளும் உடனடியாக ஒரு மிருக வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டன. தீக்காயம் பட்ட ஒரு குட்டியைத் தவிர அமான்டாவும் அதன் குட்டிகளும் அமான்டாவின் வீரச்செயலால் நலமாக உள்ளன. வாழ்க இவ்வீரத்தாய்!