மார்த்தா ரூட்


கீழ்ப்படிதலும், அளப்பரிய உழைப்பும் – மார்த்தா ரூட்

அப்துல்-பஹா மார்த்தா ரூட் பற்றி கூறுகின்றார்:

உண்மையில் நீரே இராஜ்யத்தின் முன்னோடியும், திருவொப்பந்தத்தின் முன்னறிவிப்பாளரும் ஆவீர். நீர் உண்மையிலேயே சுய அர்ப்பணம் மிக்கவராவீர். நீர் எல்லா தேசங்களுக்கும் அன்பை வெளிப்படுத்துகின்றீர். வருங்காலத்தில், ஆயிரக்கணக்கில் அறுவடையளித்திடும் ஒரு விதையை இப்பொழுது விதைக்கின்றீர். நித்திய காலமும் இலை விடும், பூக்கள் பூக்கும், கனிகள் கொடுக்கும் ஒரு மரத்தை நடுகின்றீர்; பருமனளவில் அதன் நிழல் நாளுக்கு நாள் அதிகரித்திடும்.

marthroot
மார்த்தா ரூட்

ஷோகி எஃபெண்டி, மார்த்தா ரூட்டை “பஹாவுல்லாவின் சமயத்தின் அருஞ்சேவகர் எனவும், “ஒப்பிடப்பட முடியாதவர்” எனவும் கருதியுள்ளார். 1939-இல் அவரது மரணத்தின் போது, “முதல் பஹாய் நூற்றாண்டில் அப்துல்-பஹாவின் கரங்கள் உருவாக்கியுள்ள பிரதான திருக்கரம்” என அவரது ஸ்தானத்தை விவரித்துள்ளார். ஒரு (சமய)போதகர் எனும் முறையில் அவரைக் குறிப்பிடும் போது:

…அனைத்துலக போதனைக்களத்தில் அவரது மகத்தானதும், தனித்துவமிக்கதுமான உழைப்பினால், உலகம் முழுவதுமுள்ள அவரது சக சமய போதகர்களின் சாதனைகளை பெரும் மகிமையோடு அவர் மங்கச்செய்தது மட்டுமின்றி, ஒரு முழு நூற்றாண்டினூடே சமயத்தை விருத்திசெய்தோரின் சாதனைகளையும் விஞ்சிய ஒரு மகிமை அவருடையதாகும். ஆங்காங்கு பயணம் செய்திடும் பஹாய் போதகர்களின் முன்மாதிரியும், அப்துல்-பஹாவின் மறைவிலிருந்து பஹாவுல்லாவின் கரங்கள் உருவாக்கியுள்ள முன்னணி (சமயத்)திருக்கரமுமான மார்த்தா ரூட்-இன் பன்மடங்கான சேவைகளும், அவரது விழுமிய வாழ்க்கையும் சரியாக மதிப்பிடப்பட வேண்டுமானால், அவரது சமயத்தின் முன்னணி அரசதூதர், மற்றும் ஆண் அல்லது பெண் ஆனாலும், கிழக்கில் அல்லது மேற்கிலுள்ளவரானாலும், பஹாய் போதகர்களின் ‘பெருமிதம்’ எனும் பட்டம் அவருக்கு வழங்கப்பட வேண்டும்.

விஞ்சிட முடியாத இந்த ஆன்மா, தனது உழைப்பின் தன்மைகளாலும், வென்ற வெற்றிகளின் தரத்தினாலும், அப்துல்-பஹா மேற்கு முழுவதுமான தமது பயணங்களின் போது தமது சீடர்களுக்குத் தாமே எடுத்துக்காட்டிய ஓர் உதாரணத்திற்கு அடுத்த நிலையை உள்ளடக்கியதோ எனும் ஒரு சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

martharoot-grave
ஹவாயி தீவிலுள்ள மார்த்த ரூட்டின் கல்லறை

பஹாவுல்லாவின் சமயத்தின் அருஞ்சேவகரான இவர் அவரது சமயத்திற்கு ஆற்றிய எல்லா சேவைகளிலும், ருமேனியா நாட்டின் அரசியாரின் வாழ்வின் இருள்சூழ்ந்த தருணம் ஒன்றான, கசப்பும், குழப்பமும், துன்பமும் ஒரு நேரத்தில் அந்தப் பேரார்வமும், துணிகரமும் மிக்க முன்னோடி அவ்வரசியாரின் மனதில் ஏற்படுத்திய உடனடி மறுவினையே அதி அற்புதமானதும், முக்கியத்துவமும் மிக்கதும் ஆகும். “பெருந் துக்கமும், உள்ளார்ந்த குழப்பம், துன்பம் ஆகியவை சூழ்ந்திருந்த ஒரு நேரத்தில், எல்லா மகத்துவம் மிக்க செய்திகளைப் போன்றே இதுவும் வந்தடைந்தது; ஆதலால், விதை ஆழமாகப் பதிந்தது,” என அரசியார் தமது கைப்பட எழுதிய ஒரு கடிதத்தில் சான்றளித்துள்ளார்.

மார்த்தா ரூட்டின் வாழ்க்கை, மற்றும் அவர் சமயத்திற்கு எவ்வாறு சேவையாற்றினார் என்பதைப் பற்றி ஆய்வு செய்வது, ஒருமுகமான அர்ப்பணம், தூய்மை மற்றும் தியாகத்துடன் சமயத்தைப் போதிப்பது என்றால் என்பது குறித்து மதிப்புமிகு நுண்ணறிவுகளை அடைவதாகும். பாதுகாவலர், போதகர்களுக்கான ” கட்டுக்கடங்காத காற்றைப்போல் போன்று இருங்கள்” எனும் பஹாவுல்லாவின் அழைப்பை, மார்த்தா ரூட்டில் கண்டும், பல தலைமுறைகள் பின்பற்ற முயலவேண்டிய, கீழ்ப்படிதலுக்கான ஒரு முன்மாதிரியின் உயர்வான நிலையில் அவரை மதித்தார்:

அப்துல்-பஹா தமது உயிலில் வெளிப்படுத்திய இயேசு சீடர்களின் காலடிகளைப் பின்பற்றவேண்டுமெனும் உத்தரவைப் பொறுத்தவரை:”எல்லா பிரதேசங்களிலும் பயணித்திடவும்”, “ஒவ்வொரு நாட்டிலும், யா பஹாவுல்-அப்ஹா எனும் கூக்குரலை” “ஒரு கணங் கூட ஓய்வில்லாமல்” எழுப்பிடவும், இக்காலத்தினரும், வருங்காலத்தலைமுறையினரும் பெருமைப்படுவம், பின்பற்றவும்கூடிய ஒரு கீழ்ப்படிதலை சிரஞ்சீவியான இந்த வீராங்கனை வெளிப்படுத்தினார்.

” கட்டுக்கடங்காத காற்றைப் போன்று”, தமது பயணத்திற்கான “அதி சிறந்த முன்னேற்பாடாக” தமது “முழு நம்பிக்கையையும்” கடவுளில் வைத்து, அதன் ஆணைகளை அத்தருணமே செயல்படுத்திட அவர் முன்னெழுந்திட்ட, அப்துல்-பஹாவின் நிருபங்களில் கிளர்வூட்டும் வகையில் வெளிப்படுத்தப்பட்ட விருப்பத்தை ஏறத்தாழ கடைசி வார்த்தை வரை அவர் செயல்படுத்தினார்: “மிகுந்த வறிய நிலையிலும் கால்நடையாக நடந்தும்கூட இப்பகுதிகளுக்கு நான் பயணம் செய்து, நகரங்களிலும், கிராமங்களிலும், மலைகளிலும், பாலைவனங்களிலும், சமுத்திரங்களிலும், “யா பஹாவுல்-அப்ஹா” என்ற அழைப்பினை எழுப்பி, தெய்வீகப் போதனைகளை விருத்தி செய்ய என்னால் முடியுமாயின்! அந்தோ, இதை என்னால் செய்ய முடியவில்லை. அதற்கு நான் எத்துணைக் கடுமையாக வருந்துகிறேன்! நீங்கள் அதனை நிறைவேற்ற இறைவன் விரும்பிடுவாராக.”

வாழ்க்கை வரலாற்று ஆசிரியரான மேபல் காரிஸை பொறுத்த வரை, அப்துல் பஹாவின் அவ்வார்த்தைகள், மார்த்தா ரூட்டின் உள்ளத்தைச் சூழ்ந்தும், “அவருக்குள் தங்களை உட்புகுத்திக்கொள்ளவும் செய்தன. அவரது சக்திகளுக்கான தூண்டுகோலாகவும், அவரது இல்லத்தை விடுத்து தூர தேசங்களில் இருக்கும் போது அவருக்கு ஆறுதலாகவும் அவை இருந்தன. அப்துல்-பஹா சாதிப்பதற்குத் தடுக்கப்பட்டவற்றை, பஹாய் சமயத்திற்காக மார்த்தா ரூட் செய்தார்.”

போதிப்பதற்கான மார்த்தா ரூட்டின் முயற்சிகளுக்கு பிரார்த்தனையும், தெய்வீக வழிகாட்டுதலுமே நடுமையமாக இருந்தன. “ஒரு நகரத்தில் நான் செயல்பட ஆரம்பித்துவிட்டால், என் உறவினர்களுக்காக ஒரு தபால் கார்டை எழுதுவதற்காகக் கூட நிறுத்தமாட்டேன்,” என அவரே கூறியுள்ளார். எல்லாமே, புனித ஆவி வேகமாக வீசுவதைப் போலாகின்றன. அதனால், லௌகீகங்கள் எதுவுமே முக்கியமற்றதாகிவிடும். அப்துல்-பஹா! பஹாவுல்லா! எனக்கு உதவுங்கள்… நகரத்தின் மக்களும் உதவிடுவார்களாக; அவர்களே எல்லாவற்றையும் சாதிக்கின்றனர்; நான் பிரார்த்தனை மட்டும செய்கின்றேன், வழிகாட்டலைச் செவிமடுத்து, செயல்படுகின்றேன். ஆனால், அது சந்தோஷமான நேரமாகும்.” “எப்போதெல்லாம், போதிப்பதற்காக நான் ஒரு நகரத்திற்குள் நழைந்தாலும், முதலில் நான் அஹமதுவின் நிருபத்தை பத்து முறை கூறுவேன்.” கணக்கிலடங்கா பொது சொற்பொழிவுகள், வானொலி மற்றும் பத்திரிக்கை பேட்டிகள், உலகம் முழுவதுமுள்ள நாழிதள்களில் எழுதப்பட்ட கட்டுரைகள், சுயபோதனை ஆகிவற்றின் மூலம், மில்லியன் கணக்கிலான ஆன்மாக்களுடன் சமயத்தைப் பகிர்ந்துகொண்டார்!

அவர் போதித்த விதமானது மக்களை அவர்பாலும், அவர் பகிர்ந்துகொண்ட செய்தியின்பாலும் வசீகரித்தது; அவர்கள் பஹாய்கள் ஆகாவிட்டாலும், மக்கள் அவரது முயற்சிகளுக்கு ஏதாவது வகையில் உதவிட முன்வந்தனர்.

மார்த்தாவின் உரைகள் ஒரு கல்விமானின் உரைகளல்ல; அவை எளிமையானவை, நேரடியானவை, சொல் அலங்காரமில்லாத, பஹாய் சமயத்தின் ஒன்று அல்லது இரண்டு அம்சங்களிலும், அதன் மையநாயகர்களின் வாழ்க்கைகள் மீதும் கவனம் செலுத்திடும் உரைகளாக இருந்தன. ஆனால், மார்த்தா உரையாற்றும் போது, அவரது எளிமை தன்மைமாற்றமடைந்தது. அவர் ஓர் ஆன்மீக ஒளியுடன் பிரகாசித்தார்; அவரது செய்தி மற்றும் நோக்கத்தின் தூய்மை அவரை ஓர் ஈர்ப்புமிக்கவராக ஆக்கின. அங்கு அகந்தை இல்லை; மனிதகுல ஒருமை, அதை அடைவதற்கான வழி ஆகியவை குறித்த ஒரு தேவையே இருந்தது. அங்கு வாக்குவாதம் இல்லை, உரத்த குரலொலி கிடையாது; அவர் எங்கு சென்ற போதிலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் ஓர் ஆழ்ந்த, ஊடுருவும் அன்பே இருந்தது.

மார்த்தா தமது முயற்சிகளை வெளிப்படையான விதை விதைக்கும் நடவடிக்கைளோடு மட்டுமே கட்டுப்படுத்திக்கொள்ளவில்லை.

[சீன நாட்டில்] முன்னாடியாகப் பணிபுரிந்த போது, அவர் சீன சமூகத்தின் ஒரு பகுதியாகி, (மக்களின்) வாழ்க்கைகளை வளப்படுத்திட வேறு வழிகளிலும் முயன்றார்.

தமது பத்திரிகை சாமர்த்தியத்தை வெளிப்படுத்தும் ( ) கிளப் ஒன்றை ஆரம்பித்தார்; பிறகு, அனேகமாக மேற்கத்திய இசைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இசை சார்ந்த கிளப்பையும் ஆரம்பித்தார். இதிலெல்லாம் ஈடுபடுவதற்கு அவருக்கு எங்கிருந்து சக்தியும் நேரமும் கிடைத்தது என்பது ஒரு மர்மமே.

ஒரு புதிய திருவெளிப்பாட்டின் ஒளி தோன்றும் போதெல்லாம், அதை எதிர்ப்பவர்களும் தோன்றுவர். இவ்விதமான எதிர்ப்பு குறித்த இரண்டு வெவ்வேறு தருணங்களைக் காண்பது ஒரு போதனையாக இருக்கும்.

உரைகள் வழங்கப்பட்ட மாநகரங்களிலும், நகரங்களிலும், அரங்குகளிலும், பல்கலைக்கழகங்களிலும், பள்ளிகளிலும், அரங்கங்களிலும் பார்வையாளர்கள் பொதுவாகவே ஏற்பிசைவும், உற்சாகமும் உடையவர்களாக இருந்தனர், ஆனால எப்போதுமல்ல. ஒரு நகரத்தில், சமயத்திற்கு எதிர்ப்பாக இருந்த ஒரு பெண்மணி, மார்த்தாவின் உரை, விளம்பரப்படுத்தப்பட்டது போன்று இல்லை எனவும், மேலும் உரையும் கூட பொருத்தமற்றதாக இருக்கின்றது என ஆர்ப்பாட்டம் செய்தார். அதற்குப் பிரதியாக, மார்த்தா மேடையைவிட்டு இறங்கி, அப்பெண்ணிடம் சென்று, அவரை அன்போடு அரவணைத்துவிட்டு, தம்மிடத்திற்குத் திரும்பிவந்தார். ஆர்ப்பாட்டம் செய்தவர் குழப்பமடைந்தார்; தமது வாதத்திற்கு அது எதிர்ப்பார்க்கப்பட்ட பதிலாக இல்லை. மார்த்தா அந்த ஆர்ப்பாட்டத்தினால் சற்றும் தொல்லையின்றி தமது உரையைத் தொடர்ந்தார்.

ஒரு முறை, ஒரு பிட்ஸ்பர்க் தங்கும் விடுதியில் ரோய் வில்ஹெல்ம் உரையாற்ற வேண்டியிருந்தது; அவ்வேளை இரான் நாட்டிலிருந்து திரும்பியிருந்த ஒரு மதபோதகர், அங்கு வந்து மார்த்தா ரூட்டிடம் பேசவேண்டுமென்றார். மார்த்தா அவரைப் பக்கத்திலிருந்த ஓர் அறைக்கு அழைத்துச் சென்றும், அவர் வெளிப்படுத்திய எதிர்ப்பைக் கண்டுகொண்டும், அவர் கூட்டத்தை களைத்திடும் நோக்கத்துடனேயே அங்கு வந்திருந்தார் என்பதையும் அறிந்தார். மார்த்தா அவரை அங்கிருந்து வெளியேறும்படி கண்டிப்புடன் கேட்டுக்கொண்டார். கூட்டம் எவ்வித இடையூறுமின்றி, திட்டமிடப்பட்டது போன்று தொடர்ந்தது.

போதித்தலின்பால் அவர் கொண்டிருந்த முழுமையான அர்ப்பணமும், சமயத் தலைமைத்துவத்தின் மீது சார்ந்திருந்த்தல், மற்றும் அதன் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிதலே மார்த்தா ரூட்டின் தொடர்ச்சியான, ஏறத்தாழ அதிசயமான முறையில் நடந்த வெற்றிகளுக்கான காரணமாகும். அவர் சமயத்திற்காக சேவையாற்ற முனைந்த போது, அவர் தமக்குள் தன்னல எண்ணங்கள், பொருளாதார பிரச்சனைகள், அல்லது பிறரிடமிருந்து உதவி ஏதும் இல்லாமை ஆகியவை, பஹாவுல்லாவிற்காக, என்ன செய்யப்பட வேண்டும், மற்றும் என்ன செய்யப்படக்கூடும் என்பதற்குத் தடங்கல்களாக விளங்கிட அனுமதிக்கவில்லை. “உருவாக்கக் காலத்தால் வழங்கப்பட்ட அதிசிறந்த கனிகள்” என அவரது வாழ்க்கையை விவரிக்கும் போது, பாதுகாவலர் பின்வருமாறு கூறுகின்றார்:

வயது அல்லது உடல்நோய், அவரது ஆரம்ப முயற்சிகளுக்கு இடயூறாக விளங்கிய இலக்கியங்கள் இல்லாமை, அல்லது தமது ஊழியத்தின் மீது மேலும் சுமைகளை ஏற்படுத்திய குறைந்த அளவிலான பொருள்வளங்கள், அல்லது அவர் அனுபவிக்க வேண்டியிருந்த கடுமையான சீதோஷ்ன நிலைகள், அல்லது தமது பயணங்களின்போது அவர் எதிர்நோக்கிய அரசியல் இடையூறுகள், எதுவுமே ஆன்மீக ரீதியில் ஆற்றலுமிக்க, பரிசுத்தமான அப்பெண்மணியின் உற்சாகத்தை குறைக்கவோ, கவனத்தைத் திருப்பவோ முடியவில்லை. ஒரு கொடிய, வேதனைமிகுந்த, வீரமிகு மனோபலத்துடன் அவர் சகித்துக்கொண்ட ஒரு நோய் அவரைத் தாக்கி வீழ்த்தியது வரை, தனியாகவும், பலமுறை மிகவும் ஆபத்தான சூழ்நிலையிலும், எக்காளக் குரலில், பஹவுல்வாவின் நற்செய்தியின்பால் பல்வேறு நம்பிக்கைகளையும், நிறங்கள், வகுப்புகள் சார்ந்த மக்களை, அவர் அழைத்தே அழைத்தார்.

“மார்த்தா உலகை வலம் வந்தபோது, அவரது பிரசன்னம் பணிவு மிகவும், தன்னினைவின்றியும், உணரக்கூடிய ஓர் அன்புணர்வை வெளிப்படுத்துவது போன்றுமிருந்தது. அவர்களைச் சென்றடைந்திட அவர் எடுத்த முயற்சிகளின் பயனாகவே, பன்மடங்கான, வேறுபட்ட மனிதர்களின் வாழ்க்கைகளை அவர் மாற்றியமைத்தார்.” “ஐக்கிய அமெரிக்காவில் தெய்வீகத் திட்டத்திற்கான நிருபங்கள் வெளியிடப்பட்ட அதே வருடத்தில், தெய்வீகத் திட்டத்திற்கான நிருபங்களின் அப்துல்-பஹாவினால் உரைக்கப்பட்ட சகாப்த முக்கியத்துவமிக்க ஆணைகளுக்கு மறுவிணையாக, முன்னெழுந்த முதலாமவர்; தமது உள்ளமும், பார்வையும் பஹாவுல்லாவின் சக்தி மற்றும் பேரொளியின் மீது நிலைப்படுத்தப்பட்ட மார்த்தா ரூட், வழுவாத தீர்மானத்துடனும், விழுமிய பற்றின்மையோடும், நான்கு முறை உலகையே வலம் வரச்செய்த, தமது இடைவிடாத இருபது வருடகால உலகப் பயணங்களில் ஈடுபட்டார்”; தமது ஆரம்பப் பயணங்களின்போது அப்துல் பஹாவுக்கு மார்த்த அனுப்பிய ஓர் அறிக்கையில் அப்துல் பஹா வெளிப்படுத்திய பின்வரும் எதிர்ப்பார்ப்புகளை அவர் பொருத்தமுறவே நிறைவேற்றினார்.

புனிதமிகு பஹாவுல்லாவின் ஆசிகளிலிருந்து, நீர் அவரது பாதையில் சுயத்தியாகம் செய்பவராகவும், நீர் ஓய்வு, அமைதி ஆகியவற்றை மறந்தும், விரைவாகப் பறக்கும் ஒரு பறவையைப் போன்று, நீண்ட தூரங்களை நீர் கடந்தும், எந்தெந்த நாட்டில் நீர் தங்கியபோதும், அங்கு நீர் இராஜ்யத்தின் கீதத்தை இசைத்தும், அதிசிறந்த தாளத்துடன் பாடல்களிலும், இசையிலும் ஈடுபடக்கூடும் என்பதே என் எதிர்ப்பார்ப்பாகும்.

நீர் புனித நிலத்திற்கு வருகையளித்திட வேண்டும், அதன் மூலமாக நான் உம்மைச் சந்தித்திட வேண்டுமென்பதே எனது பெரும் ஆவலாகும்; ஆனால், ஆனால் போதிக்கும் செயலே யாவற்றுக்கும் மேலாக முன் நிற்கின்றது, மற்றும் நீர் விரும்பினால், உலக மண்டலங்கள் அனைத்திலும் அதைப் பரப்புவதில் ஈடுபடுவீராக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: