பஹாவுல்லா விரும்பிய நான்கு நற்பண்புகள்


நன்றி: பஹாவுல்லா விரும்பிய நான்கு நற்பண்புகள்

பஹாவுல்லாவின் போதனைகளுக்கு ஏற்ப வாழவும், அவற்றுள் அடங்கியுள்ள மகத்தான் ஒழுக்கமுறைகளின் வரிசையைப் பின்பற்றவும் முயலும் போது, நாம் அழுத்த உணர்விற்கு ஆளாகிடக்கூடும். ஆகவே, நாம் கவனம் செலுத்தக்கூடிய பண்புகளின் நெடுக்கத்தை மட்டுப்படுத்துவது உதவியாக இருக்கும். அதிர்ஷ்டவசமாக, பஹாவுல்லா குறிப்பாக விரும்பிய நான்கு நற்பண்புகள் உள்ளன.

பஹாவுல்லா பல முறை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

மக்களில் வெளிப்படுத்தப்பட வேண்டிய, நான் காண விரும்பும் நான்கு நற்பண்புகள் உள்ளன: முதலாவது, உற்சாகமும் தைரியமும்; இரண்டாவது, புன்னை பூத்த முகமும், பிரகாசமான வதனமும்; மூன்றாவது, அவர்கள் பிறர் கண்களின் மூலமல்லாது,  தங்களின் சொந்தக் கண் கொண்டு பார்ப்பது; நான்காவது, ஆரம்பிக்கப்பட்ட ஒரு பணியை, முடிவிற்குக் கொண்டுவரும் திறன்..1

நாம் பேண வேண்டிய நற்பண்புகள் பல உள்ளன, இருப்பினும், இந்த நான்கு நற்பண்புகளையும் பஹாவுல்லா ஏன் தனிப்படுத்தியுள்ளார்? பின்வருபவை அது குறித்த என் கருத்துகள்:

1. “…உற்சாகமும் தைரியமும்…”

கடவுளை நம்புகிறேன் எனக் கூறுதல் மட்டும் போதாது: நமது கடவுள் நம்பிக்கையை நாம் செயல்களின் மூலம் வெளிப்படுத்திட வேண்டும். அதே வேளை, வெறுமனே செயல்பட்டால் மட்டும் போதாது; செய்வனவற்றை உற்சாகத்துடன் செய்திட வேண்டும். எல்லா சமயங்களிலும் வாக்களிக்கப்பட்டுள்ள ஒரு நேரத்தில் வாழ்கிறோம் என்பதை நாம் உணர்ந்திருந்தோமானால், ‘அதிவுயரிய அமைதியின்’ நிர்மாணத்தில் நமது பங்கு குறித்து நாம் மிகவும் உற்சாகமாக இருப்போம். இந்த முயற்சியில் நமக்கு முழு மனவலிமை அவசியமாகும். பஹாவுல்லாவின் போதனைகளுக்கு ஏற்ப வாழ்வதற்கு தேவையானவற்றை நாம் செய்திட வேண்டும். இத்தகைய உற்சாகத்தை கடவுள் சமயத்திருக்கரம் ரஹ்மத்துல்லா முகாஜர் போன்ற பஹாய்களிடம் நாம் கண்டோம். daringஇவர் பஹாவுல்லாவின் செய்தியை பேரார்வத்துடன் பரப்புவதில் தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டார். இதே தைரியத்தை நமது சமயத்தின் உயிர்த்தியாகிகளான மோனா மஹ்முத்நிஸாட் போன்றோரிடமும் கண்டோம். இவர் சமயத்தைத் துறப்பதற்குப் பதிலாக இறப்பதற்கே முடிவெடுத்தார். எங்கெல்லாம் பஹாய்கள் பகிஷ்கரிக்கப்படுகின்றனரோ அங்கெல்லாம் போதனைகளைப் பகிர்ந்துகொள்வதற்கு நமக்கு இதே தைரியம் தேவைப்படுகின்றது. நம்மில் பலர் எப்பொழுது பஹாய் சமயத்தை ஏற்றுக்கொண்டோம் என்பதை நினைவில் வைத்திருப்போம். ஒரு புதிய அவதாரம் தோன்றி, உலகைத் தன்மைமாற்றுவதற்காகப் புதிய போதனகளை நமக்காகக் கொண்டுவந்துள்ளார் என்பதில் பெரும் உற்சாகமடைந்திருப்போம். இச்செய்தியை பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதில் நாம் பேரார்வத்துடன் செயல்பட்டிருப்போம். அவ்வித பேரார்வத்துடன் செயல்படும்போது, நாம் பெரும் துணிச்சலைக்  கொண்டிருந்திருப்போம்.

2. “…புன்னகை பூத்த முகமும் பிரகாசமான வதனமும்…”

மக்கள் பிரகாசமான முகத்துடன் இருக்கவேண்டுமென பஹாவுல்லா விரும்பியதை வைத்து, மகிழ்ச்சியுடன் வாழ்வது முக்கியமாகும் என்பது தெளிவாகின்றது. ஓர் ஆன்மீக வாழ்க்கை வாழ்வது உணர்ச்சியின்றி வாழ்வது என அர்த்தமல்ல. brightfaceஇவ்வுலக வாழ்க்கை நிரந்தரமல்ல என்பதை நாம் கண்டுகொள்ள வேண்டுமென பஹாவுல்லா கூறும்போது நாம் கவலை அடையக் கூடாது. ஓர் ஆன்மீகப் பாதைக்கு நம்மை அர்ப்பணித்துக்கொள்வது ஒரு விதமான தீவிரத்தன்மையைக் கோருகின்றது. அதற்காக நாம் சன்னியாசிகளைப் போன்று, ஒரு மாசில்லா வாழ்க்கை வாழ்வேண்டும் என்பதில் முற்றாக மூழ்கி, அவ்விதம் வாழாதோரைப் பற்றி தப்பெண்ணம் கொள்வது என்பது அர்த்தமல்ல. அதே சமயம் துறவர வாழ்க்கையை மேற்கொண்டு நம்மை வருத்திக்கொள்ள வேண்டும் என்பதும் அர்த்தமல்ல. நாம் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமல்லாமல், அம்மகிழ்ச்சியை—சூரியன் தனது வெப்பத்தையும் ஒளியையும் பகிர்ந்துகொள்வது போன்று– நாமும் பிறருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும். பிரகாசம் எனும் பண்புடன் நகைச்சுவையும் தொடர்புள்ளதாகும், ஏனெனில் அது மக்களை மகிழ்ச்சியடையச் செய்கின்றது. பஹாவுல்லா, அப்துல்-பஹா இருவருமே பெரும் நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக இருந்தனர்.

3. “…பிறர் கண்களின் மூலமல்லாது தங்களின் சொந்தக் கண்களைக் கொண்டு போர்ப்போர்…”

investigate

சொந்தக் கண்களைக் கொண்டு பார்ப்பதென்பது, மெய்ம்மையை நாமே சுயமாக ஆராயவேண்டும், வெறும் மற்றவர்கள் சொல்வதைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதென்பதல்ல. உண்மையை ஆராய்ந்திடும்போது நாம் நீதியோடு அவ்வாறு செய்திட வேண்டும், பஹாவுல்லா பின்வருமாறு கூறுகின்றார்:

அதன் உதவியோடு நீங்கள் உங்கள் சொந்தக் கண்களைக் கொண்டு பார்த்திட முடியும், பிறர் கண்களின் மூலமல்ல; உங்களின் சொந்த அறிவைக் கொண்டு அறிந்திட முடியும், பிறர் அறிவின் மூலமாக அல்ல.2

இது எதைக் குறிக்கின்றது என்பதை அப்துல் பஹா விளக்குகின்றார்:

[…] எந்த மனிதனுமே தனது மூதாதையரையோ, முன்னோர்களையோ கண்மூடித்தனமாகப் பின்பற்றக்கூடாது. மாறாக, ஒவ்வொருவரும் தனது சொந்தக் கண்களைக் கொண்டே பார்க்க வேண்டும், சொந்த செவிகளைக் கொண்டு செவிமடுக்க வேண்டும், உண்மையை சுயமாக ஆராய்ந்திட வேண்டும், அதன் மூலமாக உண்மையைப் பின்பற்றக்கூடும், மற்றும் அதற்கு மாறாக, முன்னோர்களைக் கண்மூடித்தனமாகக் கேள்வியின்றி பின்பற்றவும்,  அவர்களின் சாயலில் நடந்துகொள்ளவும் வேண்டியதில்லை.3

இதன் மூலமாக, கலாச்சாரத்தினுள் எதிர்மறையான நடைமுறைகள் வேர்விட்டு, நிரந்தர வழக்கங்களாகிடுவதை இது தடுக்கின்றது. நாம் சுயமாக சிந்திக்க முடிவதால், நாம் நம்மைச் சுற்றியுள்ளோரின் தாக்கங்களுக்கு இடங்கொடுக்க வேண்டியதில்லை அல்லது நமது முன்னோர்களின் தவறுகளை மீண்டு செய்ய வேண்டியதில்லை.

4. “…ஆரம்பிக்கப்பட்ட பணியை  முடிப்பதற்கான திறன்.”

ஒரு பணியை ஆரம்பித்தபின் அதை முடிவிற்குக் கொண்டு வருவது முக்கியமாகும், அது பணியங்களிலானாலும் சரி, வீட்டிலானாலும் சரி. அதற்கு உறுதி, மீழ்திறன், அர்ப்பணிப்பு ஆகியவை தேவைப்படுகின்றன. finishingஇலக்குகளை அடைவதற்கும், ஒரு மேலான நோக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கும் நாம் ஆரம்பித்த ஒன்றை முடிப்பதற்கான திறன் தேவைப்படுகின்றது. விஷயங்களை நாம் முடிக்காவிடில் – நமது வாழ்க்கைகள் தட்டைநிலையை அடைகின்றன. ஏனெனில், குறைந்த முயற்சியே தேவைப்படுவனவற்றையே நாம் தேர்வு செய்வோம் அல்லது நாம் தினசரி செய்பவற்றை மட்டுமே செய்துகொண்டிருப்போம். குறிப்பாக, நாம் பிறரிடம் வாக்களித்துள்ள விஷயங்களை செய்து முடிப்பது மிகுவம் முக்கியமாகும்; ஏனெனில்,  இது மக்களிடையே நம்பகத்தை மேம்படுத்துவத்தோடு, ஒற்றுமையையும் பேணுகின்றது.

இந்த நான்கு பண்புகளும் ஆக்ககரமானவை என்பது மனதில் பதியத்தக்கதாக இருக்கின்றது. பஹாய் சமயம் செயல்படுதலையே மையமாகக் கொண்டுள்ளது என்பதை இது கான்பிக்கின்றது. இருப்பினும், நமக்கு ஏற்றுக்கொள்ளும் தன்மை, விட்டுக்கொடுத்தல், பணிவு ஆகியவை தேவை என்பது உண்மைதான். ஆனால், இவை யாவும், உலகத்தை மேம்படுத்தும் நோக்கோடு உலகோடு செயல்படுவதை இயன்றதாக்கும் நற்பண்புகளோடு இணைக்கப்பட வேண்டும். இப்பண்புகளை நாம் பார்க்கையில், ஒரு துடிப்பான ஆற்றல் மிக்க மனிதர் ஒருவர் குறித்த உருவகமே நம் கண்முன் தெரிகின்றது. இம்மனிதன் நேர்மறை மனப்பான்மையைக் கொண்டும், எதையும் செயல்படுத்துவதில் அச்சங்கொள்வதில்லை. அத்தகையோர் தங்களின் சுகமான சூழ்நிலைகளை விடுத்து சாதனைகள் புரிகின்றனர். ஒரு திட்டத்தை ஆரம்பிக்கும் போது, அத்திட்டம் முடியும்வரை அதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கின்றனர். இது அவர்களுக்கு ஒரு தொழிலல்ல: இது அவர்களின் வேட்கை.

அதே நேரம், இந்த நேர்மறையான பண்புகளுக்கு எதிராக பின்வரும் எதிர்மறையான பண்புகள் குறித்து பஹாவுல்லா கவலை கொண்டிருந்ததாக அபுல்-காசிம் ஃபையிஸி கூறுகின்றார்:

  1. தாங்கள் அறிவாளிகள் எனவும் அது குறித்து பெருமை கொள்பவர்கள்
  2. ஒரு விலைமதிப்பற்ற சேவையை செய்து அல்லது ஒரு பயனுள்ள மாற்றத்தைக் கொண்டுவந்து, ஆனால் தங்களின் சாதனையில் பெருமை கொள்பவர்கள்
  3. தங்களின் பரம்பரையைப் பற்றி பெருமை கொள்பவர்கள்
  4. தங்களின் உடலழகு மற்றும் ஈர்ப்புத்தன்மை குறித்து பெருமைகொள்பவர்கள்
  5. தங்களை தனவான்கள் எனக் கருதி அதில் பெருமையும் கொள்பவர்கள். 4

இந்த ஐந்து வரிகளிலும் மைய வார்த்தையாக இருப்பது கர்வம். மேலே விவரிக்கப்பட்ட, மகிழ்ச்சியான, அர்ப்பணமிக்க, ஆக்ககரமான வாழ்க்கையை வாழும் மனிதர் மற்றவர்களிலிருந்து தம்மை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அவர்கள் பணிவுமிக்கவர்கள் மற்றும் தங்களின் சாதனைகளைப் பற்றி விழுப்புணர்வற்றவர்கள். ஆகவே, இத்தகைய வாழ்க்கையை வாழ முயலும் நாம், உற்சாகமாகவும், தைரியமாகவும், பிராசமாகவும், சுதந்திரமாகவும், அர்ப்பணவுணர்வுடனும் இருந்திட நோக்கங்கொண்டிருக்க வேண்டும். நாம் மேம்பாடு காண்கிறோம் என்பதைக் கண்டுகொள்ளும்போது, நமது சாதனைகளில் பெருமைப்படுவதெனும் பொறிக்குள் நாம் வீழ்ந்துவிடக்கூடாது. பிறருக்கு உதவேண்டுமெனும் நமது நோக்கம் மேன்மேலும் கூர்மையடையும் போது, பெருமைப்படுவதற்கு நமக்கு நேரம் கிடைக்காது.


  1. அலி-அக்பர் ஃபுருட்டான் (ஆசிரியர்), பஹாவுல்லா பற்றிய கதைகள், 1986 [↩]
  2. பஹாவுல்லா, மறைமொழிகள், பக். 4 [↩]
  3. பஹாய் உலக சமயம்—பஹாவுல்லா மற்றும் அப்துல்-பஹாவின் எழுத்துகளிலிரு்நது, பக். 246 [↩]
  4. இனிமையும் வசீகரமும் மிக்கக் கதைகள், பக். 10 [↩]

அப்துல்-பஹாவின் விண்ணேற்றம்-2


திடீரெனவும், எதிர்ப்பாராமலும், நடந்த அவரது மறைவு நகரம் முழுவதும் காட்டுத் தீயைப் போல் பரவி, உலகின் வெவ்வேறு பாகங்களுக்கு உடனடியாகத் தந்தி மூலம் அனுப்பப்பட்டு, கிழக்கிலும், மேற்கிலுமுள்ள பஹாவுல்லாவின் நம்பிக்கையாளர் சமூகத்தை சோகத்தால் ஸ்தம்பித்திடச் செய்தது. தூரங்களிலிருந்தும் அருகிலிருந்தும், உயர்ந்தோரிடமிருந்தும் தாழ்ந்தோரிடமிருந்தும் தந்திகள் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும், துக்கவயப்பட்டிருந்த, அடக்க முடியாத சோகத்திலாழ்ந்திருந்த குடும்பத்தினருக்கு, பாராட்டுகள், பக்தி, கடுந்துயரம், அனுதாபம் ஆகியவை குறித்த செய்திகள் வந்து குவிந்த வன்னமிருந்தன.

image002

அக்காலனிகளுக்கான  பிரிட்டிஷ் மாநில செயலாளர், திரு வின்ஸ்டன் சர்ச்சில், பாலஸ்தீன உயர் ஆணையரான, சர் ஹேர்பர்ட் சமுவேலுக்கு உடனடியாகத் தந்திச் செய்தி ஒன்றை அனுப்பி, “மாட்சிமை பொருந்திய மன்னரின் அரசு சார்பாக அவர்களின் அனுதாபத்தையும், இரங்கலையும்,” பஹாய் சமூகத்திற்குத் தெரிவிக்கும்படி ஆணையிட்டார். எகிப்து நாட்டின் இளங்கோமகன் எல்லன்பி, பாலஸ்தீன உயர் ஆணையாளருக்கு ஒரு தந்தியை அனுப்பி, “மறைந்த சர் அப்துல்-பஹா எஃபென்டியின் உறவினர் மற்றும் பஹாய் சமூகத்திற்கும் அவர்களின் பெருமதிப்பிற்குறிய தலைவரின் இழப்பு குறித்த (தமது) ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்குமாறு” கேட்டுக்கொண்டார். பாக்தாத்திலுள்ள மந்திரிகள் அவை, “பரிசுத்தரான அப்துல்-பஹாவின் குடும்பத்தினருக்கு அவர்களின் இழப்பு குறித்து தங்களின் அனுதாபத்தைத்” தெரிவிக்குமாறு பிரதம மந்திரியான சையித் அப்துர்-ரஹ்மானுக்கு ஆணையிட்டனர். எகிப்திய அதிரடிப்படையின் படைத்தலைவரான, ஜெனரல் கொன்கிரீவ், பாலஸ்தீன உயர் ஆணையாளருக்கு செய்தியனுப்பி, “மறைந்த சர் அப்பாஸ் பஹாயின் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த அனுதாபத்தை  தெரிவிக்குமாறு” கேட்டுக்கொண்டார். பாலஸ்தீனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான, ஜெனரல் சர் ஆர்த்தர் மோனி, தமது துக்கத்தையும், அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்பிற்காகத் தமது அனுதாபத்தையும் எழுதியனுப்பினார். ஒரு பிரபலமான பேராசிரியரும், கல்விமானுமான ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் கல்விசார் வாழ்வின் தனிச்சிறப்புமிக்க நபர்களுள் ஒருவர் தமது சார்பாகவும், தமது மனைவி சார்பாகவும் பின்வருமாறு எழுதினார்: “தமது சிந்தனைகளை மறுமையின் மீது செலுத்தி, இம்மையில் ஓர் உயர்ந்த வாழ்க்கை வாழ்வதற்கு முயன்ற ஒருவர், (மூடு)திரைக்கு அப்பால் கடந்து பூரண வாழ்வை அடைவதானது, விசேஷ அற்புதமிக்கதாகவும், பரிசுத்தம்மிக்கதாகவும் இருந்திட வேண்டும்.”

வெவ்வேறு மொழிகளிலும், பல்வேறு நாடுகளிலும் உள்ள, லன்டன் “டைம்ஸ்”, “மோர்னிங் போஸ்ட்”, “டேய்லி மேய்ல்”, “நியூ யார்க் வர்ல்ட்”, “லெ டெம்ப்ஸ்”, “டைம்ஸ் ஆஃப் இந்தியா”, மற்றும் அது போன்ற பலவிதமான நாளிதழ்கள், மனித சகோதரத்துவம், அமைதி, ஆகியவை குறித்து அத்தகைய குறிப்பிடத்தக்கதும், அழிவில்லா சேவைகளையும் வழங்கிய ஒருவருக்கு அவற்றின் புகழுரையை பதிவு செய்தன.

உயர் ஆணையரான, சர் ஹேர்பர்ட் சாமுவேல், “அவரது (அப்துல்-பஹாவின்) சமயத்திற்கான எனது மரியாதை, அவர்மீதான எனது மதிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்திடுவதற்கு,” இறுதிச் சடங்குகளில் தாமே நேரில் கலந்துகொள்ளும் ஆவலை வெளிப்படுத்திய ஒரு செய்தியை உடனடியாக அனுப்பினார். செவ்வாய் கிழமை காலையில் நடைபெற்ற இறுதிச் சடங்கைப் பொறுத்த வரை—அது போன்று ஓர் இறுதிச் சடங்கை பாலஸ்தீன நாடு அதுவரை கண்டதில்லை—அந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு வகுப்பையும், சமயத்தையும், இனத்தையும் சார்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். பின்னாளில் உயர் ஆணையரால் நேரடியாக குறிப்பிடப்பட்டவாறு, “ஒரு பெருங்கூட்டம், அவரது மரணத்திற்காக மட்டுமின்றி, அவரது வாழ்க்கையைக் கொண்டாடவும் ஒன்றுகூடியிருந்தனர்,” அவ்வேளை ஜெருசலத்தின் ஆளுனரான சர் ரோனால்ட் ஸ்டோர்ஸ், தாமும் அந்த இறுதிச் சடங்கு குறித்து விவரித்திருந்தார்: “அந்த (இறுதிச்) சடங்கின் மிகுந்த எளிமை உருவாக்கிய அதைவிட ஒற்றுமையான ஓர் இரங்கலையும், மரியாதையும் நான் அறிந்ததே இல்லை.”

அப்துல்-பஹாவின் பூதவுடல் அடங்கிய சவப்பெட்டி அவரது அன்பர்களின் தோள்களில் அதன் இறுதி ஸ்தலத்திக்கு ஏந்திச் செல்லப்பட்டதுசவப்பெட்டிக்கு முன்பாகச் சென்ற பரிவாரத்தை மாநகர காவலர் படையினர் முன்நடத்திச் சென்று, அதற்கு மரியாதை அணியினராகச் செயல்பட்டனர். அதற்குப் பின்னால், பதாகைகளை ஏந்தியவாறு இஸ்லாமிய மற்றும் கிருஸ்துவ சமூகங்களின் சாரணர்களும், தொடர்ந்து திருக்குரான் வாசகங்களை ஓதியவாறு சென்ற இஸ்லாமிய திருக்குரான் ஒதுனர்கள், முஃப்டியின் தலைமையில் முஸ்லீம் சமூகத்தினரும், லத்தீன், கிரேக்க மற்று ஆங்கிலிக்க கிருஸ்துவ மதகுருமார்கள் நடந்து வந்தனர். அப்துல்-பஹாவின் குடும்பத்தினர், பிரிட்டிஷ் உயர் ஆணையாளரான  சர் ஹேர்பர்ட் சாமுவேல், ஜெருசல நகரின் ஆளுனரான சர் ரோனால்ட் ஸ்டோர்ஸ், புனீஷியாவின் ஆளுனரான சர் ஸ்டூவர்ட் சைம்ஸ், அரசாங்க அதிகாரிகள், ஹைஃபாவில் வாசம் செய்யும் பல்வேறு நாடுகளின் தூதர்கள், பாலஸ்தீனத்தின் பிரமுகர்கள், முஸ்லீம்கள், யூதர்கள், கிருஸ்துவர்கள், டிரூஸ்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள், துர்க்கியர்கள், அராபியர்கள், குர்தியர்கள், ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள்  சவப்பெட்டிக்குப் பின்னால் நடந்து சென்றனர். துக்கத்தில் ஆழ்ந்திருந்த அழுதுகொண்டும், புலம்பியவாறும் நடந்து சென்ற பன்மடங்கானோருக்கிடையில், நீண்டு சென்ற துக்கவசப்பட்டோர் கூட்டம், கார்மல் மலைச் சரிவின் மீது மெதுவாக நடந்து சென்றது.

நினைவாலயத்தின் கிழக்கு நுழைவாயிலுக்கு அருகே, அப்புனிதப் பேழை ஒரு சாதாரன மேஜையின் மீது வைக்கப்பட்டது. அப்பரந்த கூட்டத்தினரின் முன்னிலையில், ஹைஃபா முஃப்தியையும் உள்ளடக்கிய முஸ்லீம், யூத மற்றும் கிருஸ்தவ சமயங்களின் பிரதிநிதிகள் தங்களின் பல இறுதிச் சடங்கு குறித்த உரைகளை நிகழ்த்தினர். அவை முடிந்தவுடன், உயர் ஆணையர் பேழையின் அருகே சென்று, நினைவாலயத்தை நோக்கியபடி குனிந்த தலையுடன், தமது இறுதி மரியாதையையும், பிரியாவிடையையும் செலுத்தினார். பிற அரசாங்க அதிகாரிகளும் அவரது உதாரனத்தையே பின்பற்றினர். அதன் பின், சவப்பெட்டி நினைவாலயத்தின் அறை ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பாப் பெருமானாரின் உடல் அடங்கியிருந்த நிலவறைக்கு அடுத்த நிலவறைக்குள் துக்கத்துடனும், பக்தியுடனும் அதன் இறுதி நல்லடக்க ஸ்தலத்திற்குள் இறக்கப்ப்ட்டது.

அவரது விண்ணேற்றத்திற்கு அடுத்த வாரத்தின் போது, ஹைஃபா நகரின் ஏழைகளுள் ஐம்பதிலிருந்து, நூறு பேருக்கு தினமும் உணவளிக்கப்பட்டது; அதே நேரம், ஏழாவது நாளன்று அவரது நினைவாக அவர்களுள் சுமார் நூறு பேருக்கு சோளம் விநியோகிக்கப்பட்டது. நாற்பதாவது நாளன்று, அவரது நினைவாக நினைவில் நிற்கும் ஒரு நினைவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது, அதற்கு ஹைஃபா, அக்காநகர், மற்றும் பாலஸ்தீனத்தையும், சிரியாவையும்  சுற்றியுள்ள இடங்களிலிருந்து, அதிகாரிகளையும் பிரமுகர்களையும் உள்ளடக்கிய பல்வேறு சமயங்களையும் இனங்களையும் சார்ந்த சுமார் அறுநூறு பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அன்று நூறுக்கும் அதிகமான ஏழைகளுக்கும் உணவளிக்கப்பட்டது.

கூடியிருந்த வருகையாளர்களுள் ஒருவரான புனீஷியாவின் ஆளுனர், பின்வரும் வார்த்தைகளால் அப்துல்-பஹாவின் நினைவாக அவருக்கு இறுதிப் புகழாரம் சூட்டினார்: “அவரது பெருமதிப்பிற்குறிய உருவம் நமது வீதிகளில் நடந்து செல்வது, அவரது பணிவும், கிருபையும் மிக்க பழக்கவழக்கம், அவரது கருணை, சிறு குழந்தைகள், மற்றும் மலர்களுக்கான அவரது அன்பு, ஏழைகளுக்கும், துன்பத்திலாழ்ந்துள்ளோருக்குமான அவரது பரோபகாரம் ஆகியவை குறித்த அப்துல்-பஹா  பற்றிய ஒரு தெளிவான காட்சியை நம்மில் பெரும்பாலோர் பெற்றுள்ளோம். அவர் மிகுந்த மென்மையும், எளிமையும் மிக்கவராக இருந்ததானது, அவர் ஒரு மாபெரும் போதகர் என்பதையும், அவரது எழுத்துகளும் உரையாடல்களும் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள ஆயிரக்கணக்கானோருக்கு ஆறுதலாகவும் உற்சாகமூட்டுபவையாகவும் இருந்தன என்பதையும் அவரது முன்னிலையில் ஒருவர் மறந்துவிடக்கூடும்.

அப்துல்-பஹாவின் விண்ணேற்றம்-1


தமது முதுமையில், உலக வாழ்வின் நிலையற்றமையை அப்துல்-பஹா அடிக்கடி பஹாய்களுக்கு ஞாபகப்படுத்தி வந்தார். தம்மால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டதாகவும், பஹாவுல்லாவின் சமயத்திற்காக இரவும் பகலுமாக உழைத்தும், தாம் மேற்கொண்டுவந்த பணிகளை இனி நம்பிக்கையாளர்களே தொடர்ந்து மேற்கொள்வர் எனும எதிர்ப்பார்ப்பையும் தெரிவித்தார். “அப்துல்-பஹா எனும் மனிதரைப் பற்றி கவலைப்படாதீர்கள், ஏனெனில் இறுதியில் அவர் உங்களிடமிருந்து விடைபெற்றுக்கொள்வார்; உங்கள் பார்வையை கடவுளின் திருவாக்கின்மீது பதித்திடுங்கள்…” என்றே அறிவுறுத்தி வந்தார். எத்தகைய சூழ்நிலையிலும், எத்தகைய தாக்குதல்கள் நேரிட்ட போதும், சமயத்திற்கான சேவையிலிருந்து சற்றும் வழுவாதிருக்கும்படி கூறினார்.

abdul-baha-original-color-photo

தமது விண்ணேற்றத்திற்கு சில நாள்களுக்கு முன், அமெரிக்க அன்பர்களுக்கு எழுதிய ஒரு நிருபத்தில், இம்மையை விடுத்து மறுமையை அடைவதற்கான தேக்கி வைத்திருந்த தமது ஆவலை வெளிப்படுத்தினார்: “நான் இவ்வுலகையும், அதன் மக்களையும் துறந்துவிட்டேன்… இவ்வுலகமெனும் கூன்டில், வெருளடைந்த ஒரு பறவையைப் போன்று சிறகடிக்கின்றேன், அனுதினமும் உமது இராஜ்யத்தை நோக்கிப் பறந்திட ஆவலுறுகின்றேன். யா பஹாவுல்-அப்ஹா! தியாகமெனும் கிண்ணத்திலிருந்து என்னைப் பறுகச் செய்து, எனக்கு விடுதலையளிப்பீராக!”

அவர் கண்ட கனவுகளின் மூலமாகவும், அவர் ஈடுபட்டிருந்த உரையாடல்கள் மூலமாகவும், அவர் வெளிப்படுத்திய நிருபங்கள் மூலமாகவும், அவர் தமது உலக வாழ்வின் இறுதிப் பகுதியை நெருங்கிக்கொண்டிருந்தார் என்பது தெளிவாகியது.

அவர் கண்ட ஒரு கனவில், பஹாவுல்லா தோன்றி, “இந்த அறையை அழித்துவிடு” எனக் கூறியதாகத் தெரிவித்தார். ‘அறை’ என பஹாவுல்லா கூறியது அப்துல்-பஹாவின் உடலைக் குறிப்பிட்டே என்பதை அவரது விண்ணேற்றம் வரை எவருமே புரிந்துகொள்ளவில்லை.

தமது உலக வாழ்வின் கடைசி நாள் வரை எல்லார் மீதும், உயர்ந்தோர் தாழ்ந்தோர் அனைவர் மீதும் அவர் அதே அன்பை வெளிப்படுத்தியே வந்தார்; எழைகளுக்கும், வறியோருக்கும் அதே உதவிக்கரத்தை நீட்டினார், தமது பால பருவத்திலிருந்து அவர் ஆற்றிவந்த அதே கடமைகளைத் தமது தந்தையின் சமயத்திற்கு ஆற்றி வந்தார்.

தமது விண்ணேற்றத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமையன்று, பெரும் சோர்வையும் கருதாமல், பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளில் கலந்துகொண்டும், அதன் பிறகு ஏழைகளுக்கான தான தர்மங்களில் ஈடுபட்டார்; இறுதி நிருபங்களாக விளங்கிய–சில நிருபங்கள் எழுதப்படுவதற்கு ஆணையிட்டார்; அன்றே நடைபெறவேண்டுமென அவர் வலியுறுத்திய ஒரு நம்பகமான பணியாளரின் திருமணத்தை ஆசீர்வதித்தார்; தமது இல்லத்தில் எப்போதும் போல் நண்பர்களைச் சந்தித்தார்; அடுத்த நாள் காய்ச்சல் கண்டது; தொடர்ந்து வந்த ஞாயிற்றுக்கிழமை வெளியில் செல்வதற்கு இயலாத நிலையில் பாப் பெருமானாரின் சமாதிக்குச் சென்று அங்கு திருவொப்பந்தம் பிரகடனப்படுத்தப்பட்ட நாளையொட்டி பார்சி அன்பர் ஒருவர் வழங்கிய விருந்து ஒன்றில் கலந்துகொள்வதற்காக நம்பிக்கையாளர்கள் அனைவரையும் அனுப்பி வைத்தார்; அதே பிற்பகலில், அதிகரித்து வந்த தமது சோர்வையும் கருதாமல், ஹைஃபா நகரின் முஃப்தி, நகரத்தலைவர், போலீஸ் தலைவர் ஆகியோரை அதே தவறாத பணிவுடனும், அன்போடும் வரவேற்று உபசரித்தார்; தமது இறுதி இரவான—அன்றிரவு படுக்கச் செல்வதற்கு முன் தமது குடும்பத்தினர் ஒவ்வொருவரைப் பற்றியும், இல்லத்தின் பணியாளர்கள், புனிதப் பயணிகள், ஹைஃபா நகரிலிருந்த நண்பர்கள் அனைவரைப் பற்றியும் விசாரித்தார்.

அதிகாலை 1.15 மணிக்கு அவர் எழுந்து, தமது அறையிலிருந்த ஒரு மேஜைக்குச் சென்று, சிறிது நீரைப் பருகிவிட்டு மீண்டும் தமது படுக்கைக்குத் திரும்பினார். சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கு அவரைப் பார்த்துக்கொள்வதற்காக இருந்த மகள்கள் இருவரில் ஒருவரிடம், கட்டிலைச் சுற்றிலுமிருந்து திரைகளை தூக்கிவிடும்படி கூறி, மூச்சு விடுவதற்கு தமக்கு சிரமமாக இருப்பதாகக் கூறினார். அப்போது அவருக்கு சிறிது பன்னீர் கொண்டுவரப்பட்டும், அதில் சிறிதை அவர் பருகினார்; பிறகு சிறிது உணவு வழங்கப்பட்ட போது, “நான் விடைபெறப் போகின்றேன், எனக்கு உணவு வழங்குகின்றீர்கள்,” என மிகத் தெளிவுடன் கூறினார். இறுதியில், ஒரு நிமிடத்திற்குப் பிறகு, தமது அன்பார்ந்த தந்தையாரின் பேரொளியில் ஒன்றுசேர்க்கப்படவும், அவருடனான என்றும் நிலையான மறு இணைவு எனும் களிப்புணர்வை சுவைத்திடவும் அவரது ஆவி அதன் நித்திய உரைவிடத்திற்குச் சிறகடித்துப் பறந்து சென்றது.

அப்து’ல்-பஹா, பஹாய் போதனைகளின் பூரண உதாரன புருஷர்


வரும் 25 மற்றும் 27 நவம்பரில், உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் முதலில் திருவொப்பந்த தினத்தையும், அதற்கடுத்து அப்துல்-பஹாவின் விண்ணேற்ற தினத்தையும் அனுசரிக்கவிருக்கின்றனர்.

உலக சமயங்கள் எதிலுமே நிகழ்ந்திராத ஒன்றாக, பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா, உலக மக்களுக்குத் தமது போதனைகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல், அப்போதனகளின் முன்மாதிரியாக தமது மூத்த மகனான அப்துல்-பஹாவையும் உலகிற்கு வழங்கினார். அப்துல்-பஹா, பஹாய் சமயத்தின் முன்னோடியான பாப் பெருமானார் தமது சமயத்தைப் பிரகடனம் செய்த நாளான 23 மே 1844-இல் பிறந்தவராவார்.

abdul-baha-original-color-photo
அக்காலத்தில் வர்ணத்தில் எடுக்கப்பட்ட அப்துல் பஹாவின் நிழல்படம்

திருவொப்பந்த நாள் என்பது, அப்துல்-பஹா பஹாவுல்லாவின் வாரிசாகவும், பஹாய் திருவாசகங்களின் விளக்கவுரையாளராகவும், பஹாவுல்லாவின் போதனைகளின் உதாரன புருஷராகவும் நியமிக்கப்பட்ட தினமாகும். இதை உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் ஒவ்வொரு வருடமும், பஹாய் தேதியான ‘கௌல்’ (உரை) மாதத்தின் 4-ஆம் நாள் கொண்டாடுகின்றனர். இது ஆங்கில திகதிகளான நவம்பர் 25 அல்லது 26-க்கு ஒப்பான தினமாகும். இவ்வருடம் இந்த நாள் நவம்பர 25-ஆம் தேதி கொண்டாடப்படும்.

அதே சமயம், மே மாதல் 23-ஆம் தேதி பாப் பெருமானார் தமது சமயத்தைப் பிரகடனம் செய்த நாளாகையால், அந்த நாள் பாப் பெருமானாரோடு மட்டுமே தொடர்புப்படுத்தப்பட வேண்டுமெனவும், எந்த சூழ்நிலையிலும் தமது பிறந்த நாள் அதே தேதியில் கொண்டாடப்படக்கூடாது எனவும் அப்துல்-பஹா அறிவித்துவிட்டார். இருப்பினும் அவரது பிறந்த நாளின் அடையாளமாக வேறு ஒரு நாளை பஹாய்கள் கேட்டுக்கொண்டதன் விளைவாக, பஹாவுல்லாவின் திருவொப்பந்தத்தின் மையமாக தாம் நியமிக்கப்பட்ட நாளைக் கொண்டாடுவதற்கு அவர் ஒப்புதல் அளித்தார். இங்கும், இந்த நாள் பஹாவுல்லாவின் திருவொப்பந்தத்தைப் பற்றியே பஹாய்கள் பிரதிபலிப்பார்களே ஒழிய அப்துல் பஹாவின் பிறந்தநாள் பற்றிய அடையாளம் ஏதும் அந்த நாளின் போது இருக்காது.

abdulb5
இளைஞராக அப்துல்-பஹா

அப்துல்-பஹா பற்றிய ஒரு சுருக்க விவரம்

பஹாவுல்லாவுக்கும் அவருடைய மனைவியான ஆசிய்யா காஃனுமிற்கும் பிறந்த பிள்ளைகளுள் உயிரோடிருந்தவர் மூன்று பேர். அம்மூவரில் அப்துல்-பஹாவே மூத்தவராவார். சிறு வயது முதற்கொண்டே தமது தந்தையாரின் உயர்ந்த ஸ்தானத்தை அவர் உணர்ந்திருந்தார். பிற்காலத்தில் பஹாவுல்லா இவரையே தமது சமயத்தை வழிநடத்திச் செல்லவும் தமது போதனைகளின் அதிகாரபூர்வ விரிவுரையாளராகவும், பிழைபடா எடுத்துக்காட்டாளராகவும் நியமித்தார். இவரது இயற்பெயர் அப்பாஸ் என்ற போதிலும் இவர் தமது பெயரை அப்து’ல்-பஹா அல்லது கடவுளின் சேவகன் எனவே வைத்துக்கொண்டார்

பஹாவுல்லா சியாச் சால் சிறையில் அடைக்கப்பட்டபோது, அப்துல்-பஹாவுக்கு எட்டு வயது. அவர் தமது தந்தையை அங்கு சென்று கண்டபோது, அவரது கழுத்தில் சங்கிலி இணைக்கப்பட்ட இரும்புவளையம் மாட்டப்பட்டிருந்ததைக் கண்டார்.

abdulb7
அமெரிக்காவில் ஒரு கூட்டத்தில் அப்துல்-பஹஆ

வயது ஆக ஆக அப்து’ல்-பஹா தமது தந்தையாரின் மிக நெருக்கமான துணைவராக இருந்து பல முக்கிய காரியங்களை அவருக்காக செயல்படுத்தினார். தமது தந்தையாரைக் காண வருவோரை முன்கூட்டியே நேர்காணல் செய்து, துர்நோக்கம் கொண்டோர்களை அடையாளம் கண்டு, அவரது காரியங்களுக்கு தடைகள் நேரா வண்ணம் தகுந்தவர்களை மட்டும் அவருடைய முன்னிலைக்கு அனுப்பிவைப்பார்.

அக்காநகரில், அங்கு சிறையில் இருந்த அனைவரும் டைஃபாய்ட், மலேரியா, மற்றும் வாந்திபேதியால் பாதிக்கப்பட்ட போது சிறிதும் ஓய்வில்லாமல் நோயாளிகளுக்கு ஸ்நானம் செய்வித்து, பேணி, உணவளிக்கவும் செய்தார். இறுதியில், பெரிதும் களைத்துப் போனவராக, தாமும் நோய்வாய்ப்பட்டு சுமார் ஒரு மாத காலம் ஆபத்தான நிலையிலிருந்தார்.

தன்னலமின்மை, கற்றறிந்தமை, மிகுந்த பணிவு ஆகிய நற்பண்புகளுடன் பஹாவுல்லா அப்துல்-பஹா அவர்மீது கொண்டிருந்த வெளிப்படையான மதிப்பு ஆகியவை, அவரை ‘மாஸ்டர்’ என எல்லாரும் அழைத்திட காரணமாக இருந்தது. இன்றளவும், பஹாய்கள் அவரை இவ்வாரே அழைத்து வருகின்றனர்.

abdulb8
அமெரிக்க பஹாய்களுடன்

பஹாவுல்லா விண்ணேற்றம் அடைந்தபோது அவரது உயில் மற்றும் சாசனத்தின் வெளிப்படையான நிபந்தனைகளையும் மீறி, பொறாமை கொண்ட சில உறவினர்கள் அப்து’ல்-பஹாவின் ஸ்தானத்தை கைப்பற்ற முயற்சித்தனர். பேராசையுடைய இந்த நபர்கள் தங்களைச் சுற்றிலும் ஆதரவாளர் கூட்டம் ஒன்றை உருவாக்கவும் முனைந்தனர்.

உலகின் பிற சமயங்களில் வெகு விரைவாக உட்பிரிவுகள் ஏற்பட்டதைக் காண்கையில், இத்தகைய பிரிவினைவாதக் கும்பல்கள் எதுவுமே தங்களை நிலைப்படுத்திக்கொள்ளவோ பஹாய் சமயத்துள் உட்பிரிவுகளை உண்டாக்கவோ இயலாமல் போயினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இறுதியில், அத்தகைய உட்பிரிவுகளை உருவாக்க முனைந்த அப்பிரிவினைக் கும்பல்களின் தலைவர்கள் மடிந்த போது அக்கும்பல்களும் சிதைந்து போய் எந்த உட்பிரிவோ சமயப்பிரிவோ நீடித்திருக்கவில்லை. பஹாய்கள் இத்தகைய ஐக்கியத்தை பஹாய் ‘திருவொப்பந்தத்தின்’ ஆற்றலாகக் கருதுகின்றனர்.

மேற்கத்திய நாடுகள் புரிந்துகொள்ளும் வகையில் தமது தந்தையாரின் உலகந்தழுவிய தூரநோக்கை விளக்கிடுவதில் அப்து’ல்-பஹா முக்கிய பங்காற்றினார். இந்த நடவடிக்கையின் வெற்றி சிறிய, மத்திய கிழக்கு சார்ந்த ஒரு இயக்கமென இருந்த பஹாய் சமயத்தை இன்றிருப்பதைப் போன்று ஓர் உலக சமயமாக தன்மைமாற்றம் அடைவதை பெரிதும் துரிதப்படுத்தியது. தமது தந்தையாரின் மறைவுக்குப் பிறகும் அப்து’ல்-பஹா ஒட்டோமான் அரசின் கைதியாகவே இருந்தார். கடிதங்கள் வாயிலாகவும், நேரடித் தொடர்புகளின் வாயிலாகவும், பாலஸ்தீனத்திற்கு பயணம் மேற்கொண்ட மேற்கத்திய விசுவாசிகளுடனான தொடர்பின் வழியாக அவர் பஹாய் சமயத்தை மத்தியக் கிழக்கிற்கும் அப்பால் பரவச் செய்தார்.

இளந்துருக்கியர் புரட்சிக்குப் பின், அப்து’ல்-பஹா நாட்டிற்கு வெளியே பிரயாணம் செய்யக்கூடிய சுதந்திரத்தை அடைந்தார். ஆகஸ்ட் 1911-இல், அவர் புனித நிலத்தை விட்டு மேற்கத்திய நாடுகளுக்கான நான்கு மாத பிரயாணம் ஒன்றை மேற்கொண்டார். அப்போது அவர் லண்டன் மற்றும் பாரீஸ் நகர்களுக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் மேற்கத்திய நம்பிக்கையாளர்களுடன் சந்திப்புகள் நடத்தி, தினமும் பஹாய் சமயம் பற்றியும், அதன் குறிக்கோள்கள் குறித்தும் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.

03_historical-mountain
கார்மல் மலையில் அப்துல்-பஹா ஆரம்பத்தில் கட்டிய ஆறு அறைகள் கொண்ட பாப் பெருமானாரின் நினைவாயலம்

பின்வந்த இளவேனிற் காலத்தில், ஒரு வருடகால பயணம் ஒன்றை அப்துல்-பஹா மேற்கொண்டார். அவ்வேளை அவர் ஐரோப்பாவுக்கு மீண்டும் பிரயாணம் செய்தும், பிறகு ஐக்கிய அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் பயணங்கள் மேற்கொண்டார். இந்தப் பயணங்கள் அந்த இரு நாடுகளிலும் பஹாய் சமயத்தின் விரிவாக்கத்தை பெரிதும் தூண்டின.

வட அமெரிக்காவின் 40க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு அவர் பிரயாணம் செய்தார். அவ்வேளைகளில் நம்பிக்கையாளர் மற்றும் நம்பிக்கையாளர் அல்லாதார் அனைவராலும் அவர் பெரும் மரியாதையுடனும் ஆரவாரத்துடனும் வரவேற்கப்பட்டார். நகரம் நகரமாக அவர் தேவாலயங்களிலும், யூதக்கோவில்களிலும், புகழ்வாய்ந்தோர் முன்னிலையிலும் இயக்கங்கள் முன்னிலையிலும் சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டார்.

இதன் முடிவான விளைவுகளாக, பஹாய் சமயம் சமுதாய மற்றும் சமய சீர்திருத்தங்களுக்கான ஒரு புதிய மகத்தான சக்தியாக நிலைப்பாடு கண்டது. ஒரு புதியதும், அமைதியானதுமான மனித சமுதாயத்திற்கான பஹாய் சமயத்தின் அறைகூவலை உள்ளடக்கிய பஹாவுல்லாவின் செய்தி தொழில்துறை நாடுகளில் பிரகடணப்படுத்தப்பட்டதோடு, ஒரு புதிய தலைமுறையான நம்பிக்கையாளர்கள் பதிவு செய்யப்பட்டனர்.

சமயத்தை அனைத்துலகமயமாக்குவதற்கான தொடர்ந்து செயல்பட்டுவரும் ஒரு திட்டத்தை அப்துல்-பஹா நிறுவினார். வட அமெரிக்க நம்பிக்கையாளர்களுக்கான கடிதங்களின் வரிசை ஒன்றில், உலகம் முழுவதும் சென்று பஹாய் சமயத்தையும் அதன் கோட்பாடுகளையும் பிரகடனப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

image001
அப்துல்-பஹாவின் இறுதி ஊர்வலம்

முதலாவது உலக யுத்தம் மூள்வதற்கு முன்பாகவே அப்து’ல்-பஹா புனித நிலம் திரும்பிவிட்டிருந்தார். மேற்கு நாடுகளுக்கான அவருடைய செய்திகளில், உலகம் விரைவில் எதிர்நோக்கும் அப் போர் குறித்து எச்சரிக்கை விடுத்தும், அத்தகைய போர்களை தவிர்க்கக்கூடிய உலக காமன்வெல்த் அமைப்பு ஒன்றை நிறுவுவதன் அவசியத்தையும் தொடர்ந்தாற் போன்று எடுத்தியம்பினார். போர்க்காலத்தின் போது, அவரும் அவரது தந்தையாரும் போதித்து வந்த கோட்பாடுகளை செயல்படு்த்துவதில் அப்துல்-பஹா ஈடுபட்டிருந்தார். உதாரணமாக, அவர் டிபீரியாஸ் எனும் இடத்தில் வெகு விரிவான விவசாயத் திட்டம் ஒன்றை தாமே ஏற்பாடு செய்தார். இத்திட்டம் அப்பிரதேசத்திற்குத் தேவையான கோதுமை தானியத்திற்கான முக்கிய மூலாதாரமாக விளங்கி அப்பிரதேசத்தில் பஞ்சம் ஏற்படுவதையும் தவிர்த்தது. இதன் காரணமாக அப்துல்-பஹா பிரிட்டிஷ் அரசினால் ‘சர்(Sir)’ பட்டமளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

அப்து’ல்-பஹா நவம்பர் 28, 1921-இல் விண்ணேற்றம் அடைந்தார். சதா சச்சரவுகளும் சண்டைகளும் நிறைந்திருக்கும் புனித நிலம், அப்து’ல்-பஹாவின் மறைவின் விளைவால் அதுவரை கண்டறியாக ஒற்றுமையையும் கூட்டு உணர்ச்சிவயப்படுதலையும் கண்டது. யூதர்கள், கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், ‘ட்ருஸ் சமயத்தவர் போன்ற அனைத்து சமயக்கோட்பாட்டினர் மற்றும் சமயப்பிரிவினர்கள்; அராபியர்கள், துருக்கியர்கள், குர்ட் இனத்தவர், ஆர்மீனியர்கள் மற்றும் பிற இனத்தவர்களும் அப்துல் பஹாவின் மறைவினால் ஒன்றுசேர்க்கப்பட்டு தங்கள் அனைவருக்குமே பொதுவாக நேர்ந்த அவரது மறைவினால் துக்கம் கொண்டனர்.

170px-shrine_bab_north_west

அப்துல் பஹாவின் மறைவு பாலஸ்தீனம் தனது வரலாற்றிலேயே கண்டறியாத ஒரு நிகழ்வாக இருந்தது. அவரது இறுதி ஊர்வலத்தில் எல்லா சமய, இனத்தையும் சார்ந்த 10,000 பேர்களுக்கும் அதிகமாகவே கலந்துகொண்டனர். “அவரது மறைவால் துக்கவசமாகியிருந்த ஒரு பெரும் கூட்டம் கூடியது, ஆனால் அதே வேளைஅவர் வாழ்ந்த வாழ்க்கைகாக அவர்கள் களிப்புணர்வைக் காட்டவும் தவறவில்லை,” என பாலஸ்தீனத்திற்கான அன்றைய பிரிட்டிஷ் தூதர் குறிப்பிட்டார். ஜெருசலத்தின் ஆளுனர், “அந்த ஈம நிகழ்வின் மிகுந்த எளிமை அறைகூவிய ஒன்றுபட்ட வருத்த உணர்வையும் மரியாதையையும் நான் இதுவரை கண்டதேயில்லை,” என எழுதினார்.

அப்து’ல்-பஹாவின் பூதவுடல் கார்மல் மலையின் மீது அமைக்கப்பட்டிருந்த ‘பாப் பெருமானாரின் கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ‘பாப் பெருமானாரின் கல்லறைக்குச் செல்லும் பஹாய்கள் அப்து’ல்-பஹா அங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் அறைக்கும் சென்று பிரார்த்தனைகள் கூறுவர்.

பஹாய்கள் மீதும், நோபல் பரிசாளர் ஷிரின் எபாடி அவர்களின் மீதும் இரான் நாட்டின் தகவல் சாதனங்கள் நடத்தும் தாக்குதல்கள் “அறிவுக்கொவ்வாத பயம் மற்றும் தப்பெண்ணங்களை” உருவாக்க முயலுகின்றன


bnsheader

12 ஆகஸ்ட் 2008

(செய்தி பழையதானாலும் இதே செயல்கள் இன்னமும் தொடர்கின்றன)

நியு யார்க் — இரான் நாட்டு தகவல் சாதனங்களில், சிறைவைக்கப்பட்டுள்ள ஏழு முக்கிய பஹாய்களைப் பற்றியும், அவர்களுக்காக வாதாடும் நோபல் பரிசாளர் ஷிரின் எபாடி மற்றும் பிறரைப் பற்றியும் தவறான பல செய்திகள் வெளியிடப்படுகின்றன. இது பஹாய்களுக்கு சட்டப்படியான பிரதிநிதித்துவம் கிடைக்காமல் செய்வது மற்றும் அறிவுக்கொவ்வாத பயம் மற்றும் தப்பெண்ணங்களை உருவாக்கும் ஒரு முயற்சியாகும் இதுவென பஹாய் அனைத்துலக சமூகம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

அரசு சார்பான செய்தி வெளியீடுகளில் வெளிவரும் அறிக்கைகள் தகவல் சாதனங்களைப் பயன்படுத்தி சிறை செய்யப்பட்டுள்ள அந்த ஏழு பஹாய்கள் கீழறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் எனும் தவறான கருத்தை ஏற்படுத்தவும், அதனால் அந்த ஏழு பேருக்கும் பிரபல இரான் நாட்டு மனித உரிமை சட்ட ஆலோசகரும் நோபல் பரிசாளருமான திருமதி ஷிரின் எபாடியும் அவரின் குழுவினரும் அவர்களைப் பிரதிநிதிப்பதற்கான முயற்சியை அந்த சட்ட ஆலோசகர்களின் நற்பெயர்களை கெடுப்பதன் வாயிலாகவும் தடுக்க முயலுகின்றன. திருமதி எபாடியும் அவர்தம் குழுவினரும் அந்த ஏழு பஹாய்களுக்கு சாதகமாக வாதம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளனர்.

பஹாய் அனைத்துலக சமூகத்தின் இந்த அறிக்கை, திருமதி எபாடியின் மகள் ஒரு பஹாய், பஹாய்கள் ஜியோனிச சித்தாந்தவாதிகள், இரான் நாட்டு பஹாய்கள் இஸ்ரேலில் உள்ள தங்கள் அனைத்துலக தலைமைத்துவத்தோடு தொடர்புகொள்ளும்போது கீழறுப்புச் சதியில் ஈடுபடுகின்றனர் என்பன போன்ற குற்றச்சாட்டுகளுக்கு மறுமொழியளிக்கின்றது.

“இரான் நாட்டு அரசாங்கம் பஹாய்களை இழிவுபடுத்தும் எல்லாவித முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. பிறகு, தேவைப்படும்போது தானே உருவாக்கியுள்ள அந்த தவறான கருத்துகளின் அடிப்படையில் அந்த நபர் ஒரு பஹாய் என அறிவிக்கின்றது,” என அந்த அறிக்கை கூறுகின்றது. “இவ்விதமான செயல்களில் இரான் நாட்டு அரசாங்கம் ஈடுபடுவது இது முதல் முறையல்ல மற்றும் அதில் பாதிக்கப்பட்ட முதல் பெண்மனி திருமதி எபாடியும் அல்ல. ஒரு வழங்கறிஞர் எனும் முறையில் திருமதி எபாடி இதுபோன்ற பல தனிநபர்களுக்கும் பலவித பின்னனியைச் சார்ந்த பல குழுக்களுக்கும் வாதாடியுள்ளார்; ஆகவே திருமதி அவர்களின் நம்பிக்கைகளைத் தாமும் பின்பற்றுகிறார் என்பது அர்த்தமல்ல. பிறகு, அவருடைய மகள் ஒரு பஹாய் நம்பிக்கையாளர் என “குற்றஞ்சாற்றுவதன்”வாயிலாக அரசாங்கச் சார்புடைய தகவல் சாதனங்களின் உள்நோக்கம் என்னவாகத்தான் இருக்கமுடியும்?”

இரான் நாட்டில் இதுவரை நிகழ்ந்திராத வகையில் கடைகள் வலுக்கட்டாயமாக மூடப்படுகின்றன


bnsheader

இரான் நாடு முழுவதிலுமுள்ள, சாரி, காயெம்ஷாஹர், பன்டார் அப்பாஸ் போன்ற நகரங்கள் உட்பட, பல நகரங்களில் பஹாய்களால் நடத்தப்பட்டு வந்த வணிகநிலையங்கள், 1 மற்றும் 2 நவம்பரில் பஹாய் புனிதநாள்களை அனுசரிப்பதற்கு தற்காலிகமாக அடைக்கப்பட்ட பிறகு, இரானிய அதிகாரிகளால் முத்திரையிடப்ப்டடு நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன.

சமீப காலமாக ஐநா-வின் சமயம் மற்றும் நம்பிக்கை சார்ந்த சுதந்திரத்திற்கான விசேஷ அறிக்கையாளராலும், இரான் நாட்டிற்கான விசேஷ ஐநா அறிக்கையாளர், பிரபல வழக்குறைஞர்கள் (டாக். அப்டெல்-கரீம் லாஹிட்ஜி, ஷிரின் எபாடி போன்றோர்) ஆகியோரின் அறிக்கைகள், பஹாய் அனைத்துலக சமூகத்தால் இத்தகைய பொருளாதார அடக்குமுறை நிறுத்தப்படவேண்டுமெனும் முறையீட்டிற்குப் பிறகும் இந்த வருந்தத்தக்க செயல் நடந்துள்ளது.

shopssealed1
பஹாய்கள் ஒரு பஹாய் புனித நாளை அனுரிப்பதற்காக மூடிய தங்கள் கடைகளை மீண்டும் திறப்பதை தடைசெய்வதற்கு இரானிய அதிகாரிகள் பயன்படுத்திய முத்திரையின் மாதிரி.

இரான் நாட்டின் அதிபருக்கு பஹாய் அனைத்துலக சமூகம் சமீபத்தில் எழுதிய ஒரு கடிதம், பஹாய் வணிகநிலையங்களை முத்திரையிட்டு மூடுவது பஹாய்களுக்கு எதிரான பொருளாதார இன ஒதுக்கலுக்கான பல சூழ்ச்சிமுறைகளுள் ஒன்றாகும் என்பதை விளக்குகின்றது. மூன்று பஹாய் தலைமுறையினர்க்கு அரசாங்க வேலைகளுக்கு தடைகள் விதிப்பது, வாணிபங்களில் பணிபுரிவதை பகுதி அல்லது முழுமையாக அரசாங்க வழிகாட்டலின் கீழ் தடை செய்வது, தனியார் வேலை அனுமதிப்பத்திரங்களை கிடைப்பதை தாமதப்படுத்துவது அல்லது தடை செய்வது, முறையான பல்கலைக்கழக கல்வி பெறுவதைத் தடைசெய்வது போன்றவை பிற வழிமுறைகளாகும்.

sealedshops2
முத்திரையிடப்பட்டு மூடப்பட் கடை

“பன்மடங்கான பஹாய் வணிகநிலையங்களை (மூடு)முத்திரையிடுவது பஹாய் சமூகம் எவ்வகையிலும் ஒதுக்கப்படுதலுக்கு ஆளாக்கப்படவில்லை எனும் இரான் நாட்டு அரசாங்க உத்தரவாதத்தின் வெறுமையை வெளிப்படுத்துகின்றது,” என பஹாய் அனைத்துலக சமூகத்தின் பிரதானப் பிரதிநிதியான பானி டுகால் கூறினார். “அனைத்துலக சமூகம் இந்த அநீதியான செயல்களைக் கண்டிக்குமாறு கோரிக்கை விடுத்தும், இரானிய அரசாங்கம் வெளிப்படையான, உறுதியான நடவடிக்கைளின் மூலம் இச்சூழ்நிலையை திசைதிருப்புமாறு வலியுறுத்தவும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்,” என அவர் மேலும் கூறினார்.

துணிகர மதகுரு சித்திரத்தைப் பகுத்து, ஒற்றுமையை ஊக்குவிக்கின்றார் (bns-1135)


26 அக்டோபர் 2016

1135_00
ஆயத்துல்லா அப்தொல்-ஹமீத் மாசூமி-தெஹ்ரானியின் சித்திரப்படைப்பு; இதை நாட்டிலுள்ள எட்டு சமயங்களுடன் தொடர்புடைய எட்டுப்பகுதிகளாகப் பிரித்துள்ளார்

இச்சித்திரத்தின் சில பகுதிகளை, நாட்டிலுள்ள ஸோராஸ்த்திரிய, யூத, கிருஸ்த்துவ, மன்டேய, யார்ஸானிய, பஹாய், சுன்ன, மற்றும் ஷீயா சமயத்தினர்களுக்கு அர்ப்பணித்துள்ளார், மற்றும் இச்சமய நம்பிக்கைகள் அனைத்தையும் இரான் நாட்டின் தேசிய கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்களாகவும், அம்மண்டலம் முழுமையின் ஆன்மீக மற்றும் சமயங்களின் தேக்கமாகவும் அவர் கருதுகின்றார்.ஓவியத்தை முழுமையாகக் காண்பதற்கு

சமீபமான வருடங்களில், இரான் நாட்டிற்கு உள்ளும், வெளியிலும் உள்ள தனிநபர்களும், குழுக்களும் நாட்டில் நீதி, மனித உரிமை, மற்றும் உள்ளிணைக்கும் ஒரு கலாச்சாரத்திற்கான கோரிக்கையை எழுப்பியுள்ளனர். இக்கோசத்துடன் மேலும் பல குரல்கள் சேர்ந்துகொண்டுள்ள போதிலும், ஆதரவுக் குரலொலிகளுள் இரான் நாட்டின் மதகுரு வர்க்கத்தினரிடையே ஒரு குரலைச் செவிமடுப்பது மிகவும் அபூர்வமான ஒன்றாகும். அவ்வப்போது பிரஜைகள் மற்றும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக யாராவது மதகுரு ஒருவர் பரிந்து பேசும்போது அது எண்ணிலடங்கா உள்ளங்களில் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.

இத்தகைய பின்னணியில், ஓர் கையெழுத்துக்கலைஞரும், ஒவியரும், இரான் நாட்டின் உயர்நிலை சமயகுருவுமான, ஆயத்துல்லா அப்டொல்-ஹமீது மாஸுமி-தெஹ்ரானி ஒற்றுமை குறித்த தமது பொது அர்ப்பணத்திற்காக தனித்து நிற்கின்றார். இரான் நாட்டில் சமுதாய நல்லிணக்கத்திற்கான அவரது பங்களிப்புகள் உலகின் பல பாகங்களில் கவனத்தை ஈர்த்தும், பாராட்டைப் பெற்றுமுள்ளன.

சமீபத்தில், நாட்டிலுள்ள எட்டு சமய வகுப்பினருடன் தொடர்புடைய, எட்டுப் பகுதிகளாக வகுத்துள்ள ஒரு புதிய படைப்பை ஆயத்துல்லா தெஹ்ரானி வரைந்துள்ளார். இந்த ஓவியத்தின் சில பகுதிகளை நாட்டிலுள்ள ஸோராஸ்த்திரிய, யூத, கிருஸ்த்துவ, மன்டேய, யார்ஸானிய, பஹாய், சுன்ன, மற்றும் ஷீயா சமயத்தினர்களுக்கு அர்ப்பணித்துள்ளார். இவர்கள் அனைவரையும் “இச்சமய நம்பிக்கைகள் அனைத்தையும் இரான் நாட்டின் தேசிய கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்களாகவும், அம்மண்டலம் முழுமையின் ஆன்மீக மற்றும் சமயங்களின் தேக்கமாகவும் அவர் கருதுகின்றார்.”

“இவை ஒவ்வொன்றுமின்றி நமது தேசிய அடையாளமானது நிறைவடையாது,” என தமது இணையத்தலத்தில் எழுதியுள்ளார்.

அச்சித்திரம் பல பிரிவுகளாக்கப்பட்டுள்ளதானது, இரான் நாட்டின் குடிகள் அடங்கிய பல்வேறு மக்கள்திரள் பல துண்டுகளாக்கப்பட்டுள்ளதை குறிக்கின்றது. சமயவெறித்தன்மை, உண்மையை சிலர் மட்டுமே அறிந்துகொள்ள முடியும் ஆகியவற்றை இத்துண்டாடலுக்கான காரணங்களாக அவர் குறிப்பிடுகின்றார்.

1135_02

ஒரு பஹாய் குழுவினர் அச்சித்திரத்தின் ஒரு பகுதியை இரான் நாட்டு பஹாய்களின் சார்பாகப் பெறுகின்றனர்

 

தமது ஓவியத்தை பல பிரிவுகளாக்கியுள்ளதன் குறியீட்டியலை விளக்கும் போது, ” கருத்துவேற்றுமை மற்றும் பிரிவினைகளின் காரணமாக மானிட சமுதாய அமைப்பானது அவதிக்குள்ளாக்கப்படுவது போன்றே, இச்சித்திரத்தின் ஒவ்வொரு பகுதியும், மற்ற பகுதிகளின் துணையின்றி பூர்த்தியடைய மாட்டா. எல்லா பாகங்களும் ஒன்றிணைக்கப்படும் போது மட்டுமே இச்சித்திரம் பூர்த்தியாகும்.”

கடந்தகாலங்களில், சமய சிறுபான்மையினரின்பால் நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கான கரத்தை ஆயத்துல்லா தெஹ்ரானி நீட்டியுள்ளார். உதாரணத்திற்கு ஏப்ரல் 2014-இல், பஹாய் எழுத்தோவியங்களிலிருந்து ஒரு புனித வரியை எழுத்தோவியக்கலைப் படைப்பாக உலக பஹாய்களுக்கு ஓர் அன்பளிப்பாக வழங்கினார். இரான் நாட்டின் சமயச் சிறுபான்மையினரில் பெரும்பான்மையினராக விளங்கும் பஹாய்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை அவர் அச்செய்கையின் மூலம் ஒப்புக்கொண்டதாகியது, மற்றும் அவர்களும், தங்களின் நாட்டின் செழுமை மற்றும் மகிழ்ச்சிக்காக உழைப்பதில் தங்களின சக குடியினரிடையே தங்களுக்கு உரிய நிலையை பெறுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனும் ஒரு விருப்பத்தையும் வெளிப்படுத்தியது.

1135_01
ஆயத்துல்லா தெஹ்ரானி இரான் நாட்டின் பஹாய் சமூகத்திற்காக அர்ப்பணித்துள்ள கலைப்படைப்பின் ஒரு பகுதி

இரான் நாட்டின் சமயகுருமார்களுள ஒருவரெனும் முறையில் அவரது இத்துணிகர செயல்கள் அந்த நாட்டிற்கு உள்ளும் வெளியிலும் உள்ள பலரின் ஒப்புதலைப் பெற்றுள்ளதோடு, அமைதியாக சமயரீதியில் ஒன்றிணைந்த வாழ்விற்கான தங்களின் ஆதரவுக் குரல எழுப்பிட பிற இஸ்லாமிய பிரிவினரையும், உலகம் முழுவதுமுள்ள மற்ற சமயத்தினரையும் ஊக்குவித்துள்ளது. [இது குறித்த மேற்கொண்டு செய்திகளுக்கு (ஆங்கிலத்தில்): www.news.bahai.org செல்லவும்]

தமது சக குடியினர் பலரின் ஆவலான, “இந்த நாடு ஒரு குறிப்பிட்ட சமயம், வகுப்பு, இனம், அல்லது சித்தாந்தத்திற்கு மட்டும் சொந்தமல்ல, மாறாக அது எவ்வித பாகுபாடுமின்றி, இரானியர்கள் அனைவருக்கும், சமயம், மனப்பான்மை அல்லது பால்மை வேறுபாடின்றி சொந்தமாக இருக்கவேண்டுமெனும்” ஆவலை ஆயத்துல்லா தெஹ்ரானி தமது இச்சமீபத்திய செயலின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.