கொலம்பியா கோவில் மகிழ்ச்சிகரமாக திறப்பு விழா கண்டது


அகுவா அஸுல், கொலம்பியா – ஞாயிறு காலைப் பொழுது, கொலம்பியாவின் முதல் பஹாய் வழிபாட்டு இல்லம் அனைவருக்கும் அதன் கதவுளை திறந்திடும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தருணத்தின் போது, 1,000’க்கும் அதிகமான மக்கள் அதை கொண்டாட ஒன்றுகூடினர்.

Participants leave the Temple after praying inside for the first time.

கோவிலின் நிழலில் ஒன்றுகூடிய பங்கேற்பாளர்கள், களிப்புணர்வும் ஆர்வமிகு எதிர்ப்பார்ப்பும் நிறைந்த நிலையில், கோவிலின் உட்புற வருகைக்காக காத்திருந்தனர். கோவில் திறப்புவிழா, சமயம் 40 ஆண்டுகளுக்கு மேலாக வேரூன்றியிருந்த நோர்ட்டே டெல் கௌகா’வில் பஹாய் சமயத்தின் மடிப்பவிழ்வில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கின்றது.

அருகிலிருக்கும் வில்லா ரிக்கா நகரிலிருந்து வந்த காரமன் ரோட்ரிகுவெஸ், அத்தருணத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய பிரதிபலிப்போடு, “இங்கு ஒரு வழிபாட்டு இல்லம் இப்பொழுது பெற்றுள்ளோம் என்பதை அறிந்து எங்களுள் எழும் பெரும் களிப்புணர்வு பொங்கி வழிகின்றது,” என்றார்.

விடியலுக்கு சிறிது நேரத்திற்குப் பிறகு பேருந்துகள் வரத் தொடங்கி விழா நடைபெறும் பெரிய கூடாரத்திற்கு மக்கள் அணிவகுத்துச் சென்றனர். திறப்பு வழங்கல்களைத் தொடர்ந்து, பங்கேற்பாளர்கள் பிரார்த்தனைக்காக மைய கட்டிடத்தைத் நோக்கி நடந்தனர்.

Participants in the inauguration gathering Sunday file out of the Baha'i House of Worship in Norte del Cauca, Colombia, after praying inside for the first time.

 “நோர்ட்டே டெல் கௌகா’விற்கு மட்டுமின்றி, இம்மண்டலம் முழுவதற்குமே இந்த வழிபாட்டு இல்லம் முக்கிய தலம் என நான் நம்புகின்றேன். இந்தக் கோவிலின் உள்புற சூழல் முற்றிலும் தனித்தன்மையானது,” என்றார் அண்டை நகரமான சான்டான்டர் டெ குவிலிசாவ்’விலிருந்து வந்திருந்த ஹென்டர் மார்ட்டினெஸ்.

உலக நீதிமன்றம் 2012’இல் கோவிலைப் பற்றி அறிவித்ததிலிருந்து பல பங்கேற்பாளர்கள் அதன் வடிவம் பற்றிய ஆரம்ப கலந்துரையாடல்களில் பல பங்கேற்பாளர்கள் பங்கேற்றிருந்தனர். “வழிபாட்டு இல்லத்தின் உருவாக்கம் பற்றிய ஆரம்ப சமூக கூட்டங்களில் நானும் இருந்தேன். அதன் வடிவத்திற்கு ஒவ்வொருவரும் தங்களின் கருத்துகளையும் கருத்தாக்கங்களையும் பங்களித்திட முடிந்தது. இப்பொழுது அச்செயல்முறையின் விளைவை நாங்கள் காணமுடிகின்றது,” என அண்டை கிராமமான மிங்கோ’விலிருந்து வந்திருந்த கார்லோஸ் எவர் மெசூர் விவரித்தார்.

People reverently listen to prayers in the Temple.

ஞாயிறு திறப்பு விழா, உலக நீதிமன்றத்தின் பிரதிநிதியான திருமதி கார்மன் எலிசா டெ சாடெகியான், உள்ளூர் பிரமுகர்கள், கோவிலின் கட்டிடக் கலைஞர் ஆகியோரின் கருத்துரைகளை உள்ளடக்கியிருந்தது. திருமதி டெ சாடெகியான் பங்கேற்பாளர்களுக்கான உலக நீதிமன்றத்தின் கடிதத்தை வாசித்தார். “இந்த வழிபாட்டு இல்லம் இம் மண்டலத்திலுள்ள மேன்மையான மக்களில் உள்ளார்ந்துள்ள அழகின் ஓர் அடையாளமாக  வீற்றிருப்பதோடு, அதன் வடிவமைப்பு அவர்கள் மண்ணின் தாராளத்தன்மையை தூண்டுகின்றது,” என 22 ஜூலை 2018 எனத் தேதியிடப்பட்ட அக்கடிதம் குறிப்பிட்டது.

அந்த திறப்புவிழாவில் உரையாற்றிய முன்னாள் உலக நீதிமன்றத்தின் உறுப்பினரான திரு குஸ்ட்டாவோ கோரியா, “இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் ஒரு செயல்முறையின் முடிவல்ல. அது ஒரு மண்டலம் முழுவதற்குமே லௌகீ மற்றும் ஆன்மீக செழுமையைக் கொண்டுவர நோக்கங் கொண்டிருக்கும் ஒரு பெருமுயற்சிக்கான முக்கிய முதல் படியாகும்,” என்றார்.

A dance group performs to the song “Alma Nortecaucana,” meaning “the Soul of Norte del Cauca,” which is about the arrival of the Baha’i Faith in the region and how Baha’u’llah’s teachings are given expression in the hopes and aspirations of the people

வில்லா ரிக்கா’வின் மேயர் குமாரி ஜென்னி நாயர் கோமெஸ், ஒரு வழிபாட்டு இல்லம் குறித்த கருத்தோடு முதன் முதலில் தமது அலுவலகத்திற்கு வந்த கோரிக்கையை நினைவுகூர்ந்து ஓர் உற்சாகமான உரையாற்றினார். ஒன்றுகூடலில் இருந்த அண்டை நகரங்களின் நான்கு மேயர்களில் ஒருவரான வில்லா ரீக்கா’வின் மேயரான ஜென்னி நாயர் கோமெஸ், பங்கேற்பாளர்களுக்கு ஆற்றிய உரையில், “நோர்ட்டே டெல் கௌக்கா’வில் இந்த வழிபாட்டு இல்லத்தைப் பெற்றிருப்பது எங்களுக்கு மிகவும் பெருமை தருவதாகும்.” என உணர்ச்சியுடன் கூறினார்.

அம்மண்டலத்தில் சமயத்தின் வரலாறு குறித்த தமது உரையில் முன்னாள் உலக நீதிமன்ற உறுப்பினரான மருத்துவர் ஃபர்ஸாம் அர்பாப்: சுமார் அரை நூற்றாண்டான மேம்பாட்டிற்குப் பிறகு இம்மண்டலத்தின் மக்களை, அவர்களின் இலட்சியங்கள் ஆகியவற்றை அடையாளப்படுத்தும் மனதில் தோன்றும் சில வார்த்தைகள் சிலவற்றைக் கூறினார்: மகத்தான ஆன்மீக ஏற்பிசைவு; கூர்மையான ஆன்மீக உள்நோக்கு; ஆறிவாற்றல் சாதனைகளின்பால் உண்மையான மரியாதை; ஒருவர் மற்றவரை அரவணைக்கும் மகத்தான மகிழ்ச்சி மற்றும் வேதனைக்கான திறனாற்றல்; உள்ளத்தின் தூய்மையான கருணை மற்றும் தாராளத்தன்மை; கட்டுப்படுத்தப்படாத மனவுறுதி; மற்றும் ஒடுக்குமுறை எனும் காற்றுகள் அணைத்திட வியலாத உத்வேகத்தின் பிரகாசம்.”

திறப்பு விழாவின் மையப் பகுதியாக இசையும், பாரம்பரிய நடனமும் சிறப்பு நிகழ்ச்சிகளாக இருந்ததோடு, அந்த நிகழ்ச்சியின் உணர்வையும் பிரதிபலித்தன.

Some of the dancers pose for a photo during the dedication ceremony.

நடன கலைஞர்கள் ஆட, “வழிபாட்டு இல்லம்: நமது வரலாற்றின் ஒரு சின்னம், மண்டலம் முழுவதற்குமான அபிவிருத்தியின் அடையாளச் சின்னம்,” என இசைக் குழு பாடியது. அம்மண்டலத்திற்கு பஹாய் சமயத்தின் வருகை, மற்றும் மக்களின் எதிர்ப்பார்ப்புகள், இலட்சியங்கள் ஆகியவை பஹாவுல்லாவின் போதனைகளுக்கு எவ்வாறு உருவம் கொடுக்கின்றது என்பது பற்றிய, நோர்ட்டெ டெல் கௌகா’வின் ஆன்மா எனும் அர்த்தத்திலான “அல்மா நோர்ட்டேகௌக்கானா” எனும் அப்பாடலை ஓர் ஆடல் குழு வழங்கியது. அவ்விசைக் குழு, “லா கும்பியா டெல் ஜார்டினெரோ” எனும் பாடலையும் வழங்கியது.

நிகழ்ச்சியைத் தொடர்நது, திருமதி டெ சாடெகியான் ஐந்து குழுக்களுள் முதல் குழுவினாரை ஒரு வழிபாட்டு நிகழ்ச்சிக்காக கோவிலுக்குள் வழிநடத்தினார். நிகழ்ச்சியில் பஹாய் திருவாக்குகளிலிருந்து பிரார்த்தனைகளும் குறிப்புகளும் அடங்கியிருந்தன. அவற்றுள் சிலவற்றை பாடல்குழு பாடியது. அதன் பிறகு ஒவ்வொரு குழுவும், அடுத்த குழுவிற்கு வழிவிடுவதற்கு முன்பாக சிறிது நேரம் அங்கு நிசப்தமான பிரார்த்தனைக்காக அமர்ந்திருந்தது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த அந்த நிகழ்ச்சி, திறப்புவிழா குறித்த ஒரு மாத காலத்தை குறித்துக் காட்டியது. கோவிலுக்கான வாராந்திர விஜயங்களின் போது, சுமார் 1,500 பேர் “பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கான எனது முதல் வருகை,” எனும் விசேஷ நிகழச்சியில் பங்கெடுக்க எதிர்ப்பார்க்கப்படுகின்றனர். அந்த விசேஷ நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திறப்பு விழாவில் பல அம்சங்களை உள்ளடக்கி, மேலும் பல மக்கள் அந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க கோவில் திறப்பில் பங்கேற்க வழிவகுக்கும்.

Some of Sunday’s performers, who are students from a nearby Baha’i-inspired school, smile and wave during the gathering.

கொலம்பிய வழிபாட்டு இல்லத்தின் திறப்பு விழா, கடந்த செப்டம்பர் மாதம் கம்போடியாவில் நடந்த மற்றோர் உள்ளூர் கோவில் திறப்பு விழாவைப் பின்பற்றியதோடு, எதிர்வரும் வருடங்களில் இந்தியா, கென்யா, வானுவாத்து, கொங்கோ ஜனநாயக குடியரசு, பாப்புவா நியூ கினி ஆகிய நாடுகளில் கோவில்கள் திறப்புவிழா காணவிருக்கின்றன.

[மூலாதாரம்: http://news.bahai.org/story/1275/%5D

வெகுஜனங்களுக்குப் போதிப்பது – ரஹ்மாத்துல்லா முஹாஜிர்


Rahmatullah-muhajir.jpg

கடவுள் சமயத் திருக்கரம் டாக். ரஹ்மத்துல்லா முஹாஜிர் (சமயத்தைப்) போதிப்பது பற்றியே, குறிப்பாக புதிய இடங்களிலுள்ள மக்களுக்கு செய்தியை அல்லது பஹாவுல்லாவை எவ்வாறு கொண்டு செல்வது, என எப்பொழுதும் சிந்தித்துக்கொண்டிருப்பார். “வெகுஜன போதனையின் தந்தை” என பல பஹாய்களால் குறிப்பிடப்பட்ட டாக். முஹாஜிர், உலகின் தொலைதூர மூலைகளில் அணி அணியான பிரவேசத்தின் செயல்முறையைத் தூண்டிவிடுவதற்கான தீவிர போதனை பரப்பியக்கங்களை அபிவிருத்தி செய்திடுமாறு நண்பர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் சற்றும் அயராது ஈடுபட்டு வந்தார். ஒரு முறை ரூஹிய்யா ஃகானும் அவர்கள், டாக். முஹாஜிருடன் மேலும் நன்கு அறிமுகமாகிடும் விருப்பத்தினால், “தயவு செய்து என் அருகில் வந்து அமரவும். ….பற்றி எனக்கு ஏதாவது கூறவும்”, எனக் கூறினார்.

அவர் தாம் சந்தித்து வந்த மக்களைப் பற்றி கூறினார். அவர் அங்கு அரசாங்க மருத்துவராகப் பணிபுரிந்தும், நடுக்காட்டிற்குள் நீண்ட தூரம் நடந்து, அந்தப் பாறைகள் நிறைந்த தீவு முழுவதுமிருந்த தமது நோயாளிகளைச் சென்று கண்டுவந்தார். அங்குள்ள மக்கள் நிர்வாணமாகவும், உடல் நிறைய பச்சைக் குத்திக்கொண்டும் இருந்தனர் எனக் கூறினார். அது அப்பகுதிவாழ் மக்களின் ஒரு கலையாக இருந்தது. “நல்லது, நீர் என்ன செய்தீர்”, என நான் கேட்டேன். “அவர்களை ஆடைகள் அனியுமாறு கூறினீரா?”. அதற்கு அவர், “இல்லை. நான் ஏன் அவ்விதம் கூறவேண்டும்? நான் அங்கு சென்றது, அவர்களுக்கு பஹாவுல்லாவைப் பற்றி கூறுவதற்காக அன்றி, அவர்களை ஆடைகள் அனியுமாறு கூறுவதற்கல்ல,” என்றார். அவர் அவ்விதம் கூறியது என் உள்ளத்தை முற்றாகக் கவர்ந்துவிட்டது. அந்நாள் முதற்கொண்டு முஹாஜிருக்கான என் அன்பு சற்றும் மாறாத அன்பாகியது.

Image result for Dr Rahmatullah Muhajir

…முஹாஜிர், தொடர்ந்தாற் போன்று, சற்றும் அயராது, …உயிர் பிரிந்து உடல் கீழே சாயும் வரை …சேவையாற்றினார்

பின்வரும் உரைப்பகுதிகள், முன்னோடியாக சேவையாற்றுவது, பெற்றோர் தங்களின் பிள்ளைகள் முன்னோடிகளாகச் சேவையாற்றுவதை ஊக்குவிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி டாக். முஹாஜிர் ஆற்றிய ஓர் உரையிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.

…மனிதர்களின் ஆன்மாக்களை அறுவடை செய்ய வேண்டிய நேரம் இதுவே ஆகும். ஏனெனில், எடுக்கப்பட்ட முயற்சிகள்—அதை ஒரு நூறு வருட முயற்சியெனக் கூறலாம்; விடியலை வென்றோரிலிருந்து, உயிர்த்தியாகிகள் மூலம், முன்னோடிகள் மற்றும் நிர்வாகஸ்தர்கள் மூலம்—உலகம் இப்பொழுது சமயத்தை ஏற்பதற்குத் தயாராக இருக்கின்றது. மக்கள் தயாராகவும், ஏற்புத்திறத்துடனும் இருக்கின்றனர்; அறுவடைக்கான அனைத்துமே இப்பொழுது, பஹாய்களையும், முன்னோடிகளையுமே சார்ந்துள்ளது.

நாம் இன்றியமையா ஒரு விஷயத்தைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும்; முன்னோடியாகச் செயல்படுவதற்கெனத் தனது சமூகத்தை விடுத்துச் செல்லும் ஒவ்வொரு முன்னோடியும், அவர் அவ்வாறு செயல்படப்போகும் இடத்திற்கு மட்டுமே உத்தேகமளிப்பவராகவும், பயன்மிக்கவராகவும் மட்டும் இருப்பதில்லை, மாறாக அவர் தனது சொந்த சமூகத்திற்கும் நம்பிக்கை, உத்வேகம் ஆகியவற்றிற்கான மூலாதாரமாக இருக்கின்றார். ஒரு முன்னோடியை அனுப்பும் ஒவ்வொரு சமூகத்திற்கும் கடவுளின் அருட்கொடை வந்துசேரும்.

இளைஞர்கள் வேற்று இடங்களுக்குச் சென்று கல்வி கற்க வேண்டும் …இம்மாணவர்கள் நூல்களைக் கற்க வேண்டும்—மற்ற நாடுகளின் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் என்ன? இந்த மாணவர்களின் நகர்ச்சி ஊக்குவிக்கப்பட வேண்டும்… மாணவர்கள் முன்னெழுந்து செல்ல வேண்டுமென நாம் விரும்புகின்றோம். முன்னெழுந்து தைரியமாகச் செல்லுங்கள். பல்கலைக்கழகங்களுக்கு, கிராமங்களுக்குச் செல்லுங்கள், மாபெரும் போதனை ஸ்தலங்களுக்குச செல்லுங்கள், அங்கு மகத்தாக, அதைவிட மகத்தாக ஏதாவது செய்யுங்கள். ஒவ்வொரு தனி மற்றும் இளம் முன்னோடியின் நகர்ச்சிக்கும், சமுத்திரங்கள் அளவு நிகழ்வுகள் உண்டாகும்.

நீங்கள் உங்கள் வாழ்வில் அனைத்தையும் திட்டமிடும் போது, ஒரு முன்னோடியாவதற்கும் ஏன் திட்டமிடக்கூடாது?…நாம் திட்டமிட வேண்டும், உடனடியாகத் திட்டமிட வேண்டும், எல்லாருமே, முடிந்த விரைவில் திட்டமிட வேண்டும். குழந்தைகளையும் நாம் தயார்படுத்திட வேண்டும்… பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்காக ஒரு முன்னோடி வங்கிக் கணக்கை ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் முன்னோடிகளாகச் செல்வதை உறுதிசெய்யுங்கள், அவர்கள் வேறு எங்காவது சென்று கல்வி கற்க வேண்டும். ஒருவர் தாம் பிறந்த இடத்திலேயே மரணமுறுவது கூடாது. அது அவ்வளவுதான்! அந்த எண்ணம் அதோடு தொலைந்துவிடும். நீங்கள் நகர வேண்டும், ஆனால் நேர்மறையான திசையை நோக்கி, இறைவன் விரும்பும் வகையில் நகரவேண்டும். சரியான திசையில்… முன்னோட்டத்திற்கான ஸ்தலங்கள் எல்லாருக்குமே பொருந்தும், அது நிச்சயமாக முடியும். பணி மகத்தானது, தேவையும் அதிகமானது; எந்த நிலையிலும் உள்ள ஒவ்வொரு தனிநபரும் முன்னோடியாகச் செல்லலாம்; மற்றும் கண்டிபாகச் செல்லவும் வேண்டும்…

…நீங்கள் போக வேண்டும், போக வேண்டும், போக வேண்டும்… பஹாவுல்லா உங்களுடன் இருப்பார் என்பதில் நம்பிக்கைக்கொள்ளுங்கள், உங்கள் கரங்களைப் பற்றிக்கொள்வார், நீங்கள் உங்கள் இலக்கை அடைவீர்கள், நீங்கள் சமயத்திற்காக ஒரு மாபெரும் சேவையைச் செய்வீர்கள். இப்பொழுது உலகம் நமக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றது…