புதிய மவோரி பிரார்த்தனை நூல் உள்ளங்களை தெய்வீகத்தன்மையோடு இணைக்கின்றது


The publication of a Baha’i prayer book in the Maori language was commemorated at a local Maori community meeting grounds near Hamilton, New Zealand.
மவோரி மொழியில் பஹாய் பிரார்த்தனை நூலின் பிரசுர நிகழ்ச்சி, நியூ ஸீலாந்தின் ஹாமில்டன் நகரில், ஓர் உள்ளூர் மவோரி சமூக ஒன்றுகூடல் தளத்தில் அனுசரிக்கப்பட்டது.

ஹாமில்டன், நியூ ஸீலாந்து – தமது உள்நாட்டு மொழியான மவோரி மொழியில் பஹாய் திருவாக்குகளை மொழிபெயர்க்கும் போது, டாம் ரோவா ஒரு கடினமான பிரச்சினையை எதிர்நோக்கினார். மிகவும் ஆழ்ந்த ஆன்மீகத்துவமான அம்மொழி ‘ஆவி’, spirit) என்பதற்கு ஒரு வார்த்தையைக் கொண்டிருப்பினும் ஆன்மா எனும் சொல்லுக்கு அம்மொழியில் வார்த்தைகள் இல்லை.

“விவிலிய நூலில், வாய்ருவா எனும் அச்சொல்லுக்கு ஆன்மாக மற்றும் ஆவி எனும் அர்த்தமுள்ளது. ஆனால், மறைமொழிகள் நூலில் அதற்கு இரு வெவ்வேறு கருத்துகள் உள்ளன,” என பஹாவுல்லாவின் பிரபலமான படைப்புகளுள் ஒன்றை மொழிபெயர்க்கும் முயற்சியைப் பற்றி குறிப்பிட்டு, “ஆதலால், அவ்விரண்டிற்கும் இடையில் ஒரு வேறுபாட்டை நாங்கள் புகுத்த வேண்டியிருந்தது,” என, வாய்காட்டோ பல்கலைக்கழகத்தின் மாவோரி மொழி மற்றும் உள்நாட்டு படிப்பாய்வுகள் பேராசிரியரான டாக்டர் ரோவா விளக்கினார்.

ஆதலால், ஆன்மா எனும் சொல்லுக்கான, வாய்ரூவா-ஓரா – உயிர் ஆவி – எனும் சொல் “ஆவி” மற்றும் “உயிர்” எனும் இரண்டு சொற்களின் இணைப்பாகும்.

நியூ ஸீலாந்து நாட்டின் உள்நாட்டு மக்களின் மொழிக்கு பஹாய் திருவாக்குகளை மொழிபெயர்ப்பதில் உள்ளடங்கியுள்ள பலக்கியங்களுள் இது ஒன்றாகும். வேறு இரண்டு முக்கிய பஹாய் எழுத்தோவியங்களின் மொழிபெயர்ப்புகள் மவோரி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு பதினான்கு வருடகால முயற்சி, இம்மாதம் ஒரு குறிப்பிடத்தக்க முதல் பஹாய் பிரார்த்தனை நூல் இம்மாதம் அம்மொழியில் வெளிப்பாடு கண்டது

அந்த செயல்முறையை 2004’இல் ஆரம்பித்தபோது, மவோரி மொழியில் பிரார்த்தனைகள் கிடைப்பதை வகை செய்வதே தேசிய ஆன்மீக சபைக்கு முக்கிய ஊக்கசக்தியாக இருந்தது. விவிலியம் மற்றும் திருக்குரான் உட்பட பிற படைப்புகளை மவோரி மொழியில் மொழிமாற்றம் செய்திருந்த டாக். ரோவா’வுடன் ஒரு சிறு குழுமத்தினர் பணிபுரிந்தனர்.

 

Baha’i prayers translated into the Maori language were read at the event commemorating the release of the newly published Baha’i prayer book. Here, Huti Watson reads a prayer.
புதிதாக பிரசுரிக்கப்பட்ட பஹாய் பிரார்த்தனை நூலின் வெயீட்டை அனுசரிக்கும் நிகழ்ச்சியின் போது மவோரி மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்ட பஹாய் பிரார்த்தனைகள் வாசிக்கப்பட்டன. இங்கு ஹூத்தி வாட்சன் ஒரு பிரார்த்தனையைக் கூறுகின்றார்.

மொழிபெயர்ப்புப் பணிகள், பஹாவுல்லாவின் ஒப்புயர்வற்ற நன்னெறி சார்ந்த படைப்பான மறைமொழிகள் மற்றும் J.E. எஸ்சல்மன்ட எழுதிய பஹாவுல்லாவும் நவயுகமும் எனும் சமய அறிமுக நூலுடன் முதலில் ஆரம்பித்தன.

மொழிபெயர்ப்புக் குழுமத்தின் ஓர் உறுப்பினரான திரு ஜேம்ஸ் லாவ், “பிரார்த்தனை நூலே மணிக்கல் ஆகும்,” என்றார். “எங்களின் முயற்சிகள் எனும் மகுடத்தை இந்த மணிக்கல்லே அலங்கரிக்கின்றது. மொழிபெயர்ப்புப் செயல்முறை வெறும் ஒரு தொழில்நுட்ப பணி மட்டுமல்ல என திரு லாவ் விளக்கினார். வருடங்களினூடே மவோரி மொழியில் ஆன்மீக கருத்தாக்கங்களை புரிந்துகொள்ளவும் மொழிபெயர்க்கவுமான முயற்சிகளின் போது, குழுமம் மிகவும் ஒற்றுமையடைந்து, மிகவும் ஆழமான ஆன்மீக கருப்பொருள்களை ஆராய்ந்தனர்.

“ஒரு மவோரி பிரார்த்தனை நூல் வேண்டுமெனும் கருத்தில் பஹாய்கள் ஈடுபாட்டுடன் இருந்தனர, மற்றும் அதில் எனக்கும் ஒரு பங்கிருந்ததில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்,” என டாக். ரோவா கூறுகின்றார். “மாவோரி மொழி பேசும் மக்கள் தங்கள் சொந்த மொழியிலேயே கடவுளுடன் தொடர்புகொள்ள முடிந்ததில் மிகவும் நன்றியுடையவர்களாக இருக்கின்றனர்.

உலகில் பல உள்நாட்டு கலாச்சாரங்களைப் போன்று, மாவோரி கலாச்சாரமும் பல ஆழ்ந்த ஆன்மீக கருத்தாக்கங்களையும் தனிச்சிறப்புகளையும் கொண்டுள்ளது.

“மாவோரி மக்களின் தொன்மையான பிரார்த்தனைகளில், மாத்தாங்கி இ ஒயிய்யா எனும் சொற்றொடர் உள்ளது,” என தாமே ஒரு மாவோரியும் நியூ ஸீலாந்து தேசிய ஆன்மீக சபையின் உறுப்பினருமான ஹூத்தி வாட்சன் கூறுகின்றார். அது ‘நறுமணம் ஊட்டப்பட்ட பூங்காக்கள்’ என சுவர்க்கத்தில் உள்ள ஓரிடத்தை வர்ணிக்கின்றது. பஹாவுல்லாவும் இதே கருத்தாக்கத்தைப் பற்றி உரைக்கின்றார். மாவோரி மொழியிலேயே பிரார்த்தனைகளைக் கொண்டிருப்பது இந்த சொற்களின் மெய்நிலையோடு நம்மைத் தொடர்புபடுத்துகின்றது.”

சமீபத்தில் மொழிபெயர்க்கப்பட்டு முகநூலில் பகிர்ந்துகொள்ளப்பட்டு வரும் ஒரு பஹாய் பிரார்த்தனையை தாம் கண்ணுற்றதாக திருமதி வாட்சன் கூறினார். குழந்தைகளைப் பற்றி அப்துல்-பஹா எழுதிய இப்பிரார்த்தனை. தாய்மார்களை அங்கு இப்பிரார்த்தனையை இடுகை செய்துள்ளனர்.

‘ஆஹா, இது மிகவும் அழகானது,’ என மக்கள் கூறுவர். இதுதான் நான் வேண்டுவது,'” என திருமதி வாட்சன் குறிப்பிடுகின்றார்.

மாவோரி மொழியை மறுவுயிர்ப்பிக்கும் விரிவான முயற்சிகளுக்கிடையே இந்த முனைவு வருகின்றது. இந்த முயற்சிகளின் முன்னணியில் இருக்கும் டாக். ரோவா, நியூ ஸீலாந்து மக்களிடையே மாவோரி மொழி பேசுவோர் நலிந்து வரும் ஒரு விகிதத்தினர் என கூறுகின்றார். நியூ ஸீலாந்து நாட்டின் ஜனத்தொகையில் மவோரி மக்கள் 15 விழுக்காட்டினரே ஆவர் மற்றும் அவர்களுள் ஐந்தில் ஒரு பங்கினர் மட்டுமே மாவோரி மொழியில் பேசக்கூடியவர் என டாக். ரோவா குறிப்பிடுகின்றார்.

இருப்பினும், அம்மொழியைக் கற்பதற்கு இப்பொழுது அதிகரித்து வரும் ஆர்வம் காணப்படுகின்றது: “இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில், பள்ளியில் மாவோரி மொழி பேசியதால் தாங்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டதாக நமது முதியோர் பலர் கூறினர். ஆனால் இப்பொழுதோ பள்ளிகளில் மாவோரி மொழி ஆசிரியர்களுக்கான கூக்குரல்கள் எழுந்து வருகின்றன.”

நாடுகடத்தலுக்கு அப்பால், உலகிற்கு ஒளி – புனித நிலத்திற்கு பஹாவுல்லா வருகையின் 150’வது நினைவாண்டு.


நாடுகடத்தலுக்கு அப்பால், உலகிற்கு ஒளி – புனித நிலத்திற்கு பஹாவுல்லா வருகையின் 150’வது நினைவாண்டு.

This 1921 photo shows the prison cell in which Baha’u’llah was kept for more than two years from 1868 to 1870. It was here where he revealed some of the messages to the kings and rulers of the world.
இந்த 1921 படம், 1868 முதல் 1870 வரை இரண்டு வருடங்களுக்கு பஹாவுல்லா சிறைவைக்கப்பட்டிருந்த சிறைக் கூடத்தைக் காண்பிக்கின்றது
இங்குதான் அவர் உலகின் மன்னர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சில செய்திகளை வெளிப்படுத்தினார்.

வலையொளியை செவிமடுப்பதற்கு, கதையை இணையத்தில் படிப்பதற்கு, அல்லது மேலும் படங்களைப் பார்ப்பதற்கு, news.bahai.org செல்லவும்

பஹாய் உலக செய்தி சேவை புனிதநிலத்திற்கு பஹாவுல்லாவின் வருகை குறித்த 150’வது நினைவாண்டைப் பற்றிய ஒரு வலையொளி (பொட்காஸ்ட்) வரிசையைப் பிரசுரிக்கவிருக்கின்றது. இந்த சுருக்கமான கட்டுரை, அந்த வரிசையில் வரும் மூன்றாம் வலையொளிக்கான அறிமுகமாகும்.

பஹாய் உலக நிலையம், 14 செப்டம்பர் 2018,(BWNS) – சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன், மிகவும் கடுமையான சூழலில் ஒரு கைதியாக பஹாவுல்லா புனித நிலத்தை வந்தடைந்தார். அவரது பெரும் துன்பங்களையும் கருதாமல், தமது காலத்தின் அரசர்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு அசாதாரன திருவாக்குகளின் வரிசை ஒன்றை எழுதினார்.

அந்த வரலாற்று முக்கியத்துவம் சார்ந்த படைப்புகள், மானிடத்தின் தலைவர்களின் மூலம், மனிதகுலத்தின் ஒருமையில் அடித்தலமிடப்பட்ட ஒரு நேர்மையான உலக நாகரிகத்தை உருவாக்கிட பாடுபடுமாறு மானிடத்திற்கு அழைப்பு விடுத்தன. அக்காலத்து அரசர்கள் தங்களின் வேறுபாடுகளைக் கலையவும், ஒரு கூட்டு பாதுகாப்பு முறையை ஸ்தாபிக்கவும், ஆயுதக்கலைவை நோக்கிய ஓர் இயக்கம், நீதிக்காக பாடுபடுவது, ஏழைகளின் பொதுநலம் மற்றும் உரிமைகளுக்கு மிகுந்த அக்கறை மற்றும் கவனத்தை வெளிப்படுத்தி, நிலையான அமைதிக்கு பாடுபடுமாறு வலியுறுத்தினார். பிரதிநிதித்துவ அரசாங்க முறை மற்றும் அடிமைமுறை ஒழிப்பை பாராட்டினார்.

புனித நிலத்திற்கான பஹாவுல்லா வருகையின் 150’வது நினைவாண்டின் மூன்றாவதும் இறுதியானதுமான வலையொளி இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க செய்திகளை ஆராயும் நேர்காணல்களை உள்ளடக்கியுள்ளது. இந்த படைப்புகளில் காணப்படும் தொலைநோக்கு 19’வது நூற்றாண்டு மற்றும் இன்றைய உலகோடு சம்பந்தப்பட்டுள்ளது மட்டுமின்றி, மாறாக இத்தலைமுறைக்கும் வெகு அப்பால், உலகம் முழுமையின் மறுசீரமைப்பு மற்றும் தன்மைமாற்றத்தையும், ஆன்மீக ரீதியிலும், லௌகீக ரீதியிலும் ஒத்திசைவான ஓர் உலக நாகரிகத்தின் வெளிப்படுதலையும் முன்னுணர்கின்றது.

This photo from 1907 shows the barracks where Baha’u’llah and His companions were taken after arriving in Akka on 31 August 1868. It was inside this prison where Baha’u’llah penned some of His messages to the kings and rulers of the world.
வருடம் 1907’இல் எடுக்கப்பட்ட இந்தப் படம், பஹாவுல்லாவும் அவரது சகாக்களும் 31 ஆகஸ்ட் 1868’இல் அக்காநகரை வந்தடைந்த போது எங்கு கொண்டு செல்லப்பட்ட பாசறையைக் காண்பிக்கின்றது. இந்த சிறைக்குள்தான் பஹாவுல்லா உலக அரசர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் தமது செய்திகளை வரைந்தார்.

“அடுத்த வாரம் நியூ யார்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொது சபையின் 73’வது அமர்விற்கு உலகத் தலைவர்களின் ஒன்றுகூடலை சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் பஹாவுல்லா முன்னுணர்ந்த தொலைநோக்கு குறிப்பிடத்தக்க முறையில் நமது தற்போதைய சூழ்நிலையின் மீது கவனம் செலுத்துகின்றது”, என்கிறார் பஹாய் அனைத்துலக சமூகத்தின் தலைமைப் பிரதிநிதியான பானி டுகால்

“இன்று இந்த தலைவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மிகவும் கடுமையானவை: அமைதியும் பாதுகாப்பும், அணு ஆயுதக் கலைவு, பருவநிலை மாற்றம், செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்குமிடையிலான விரிவடைந்துவரும் இடைவெளி, மனிதக் கடத்தல், புலம் பெயர்வு, என பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது,” என திருமதி டுகால் தொடர்கிறார். “அனைத்துலக ஒத்துழைப்பிற்கான தேவை முன் எப்போதையும் விட இன்று பேரதிகமாக இருக்கின்றது.”

பஹாவுல்லாவின் காலத்து உலகத் தலைவர்களுக்கான கடிதங்கள் இன்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, ‘வானவ சேனைகள் அதிபதியின் அழைப்பாணை எனும் நூலில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இந்த திருவாக்குகளில் மிகவும் மகத்தானதாக, துருக்கி நாட்டின் எடிர்னே நகரில் வெளிப்படுத்தப்பட்ட சூரிஃ-இ-முலுக், அல்லது அரசர்களுக்கான சூரிஃ’யே உள்ளது என்கிறார் ஷோகி எஃபெண்டி. இந்த நிருபத்தில், கிழக்கிலும் மேற்கிலும் உள்ள ஆட்சியாளர்கள், சமயத் தலைவர்கள், தத்துவ ஞானியர், சட்டமியற்றுவோர் என மேலும் பலரை பஹாவுல்லா குறித்துரைக்கின்றார். அதில் அவர் தமது தூதுப்பணியின் இயல்பு மற்றும் தலைவர்களின் நடத்தையை நிர்ணயிக்கக்கூடிய நியாயமுறைகளைப் பதிவு செய்கின்றார். சூரிஃ-இ-ஹைக்கால் அல்லது திருக்கோவிலுக்கான சூரிஃ எனும் தனித்தன்மைமிக்க ஒரு சக்திவாய்ந்த மற்றும் தொலைநோக்குடைய படைப்பு, ஐந்து தலைவர்களுக்கான தனித் தனி கடிதங்களை உள்ளடக்கியுள்ளது: 9’வது போப்பாண்டவர் பையஸ், பிரான்ஸ் நாட்டின் 3’வது நெப்போலியன், ரஷ்யாவின் 2’வது ட்ஸார் அலெக்ஸாந்தர், விக்டோரியா மஹாராணி, மற்றும் இரான் நாட்டின் நாசிரித்’தின் ஷா.

அன்பின் தலைகீழ்திருப்பம்


அன்பின் தலைகீழ்திருப்பம் (inversion)

குழந்தைகள் கல்வி மற்றும் பயிற்சி குறித்து பஹாய் திருவாசகங்களில் நிறையவே கூறப்பட்டுள்ளது. முக்கியமாக குழந்தைகளுக்குத் தகுந்த பயிற்சி வழங்கப்படுவதற்குப் பெரும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. பின்வருவது அதைப் பற்றிய ஒரு கதையாகும்:

தந்தைகளும், குறிப்பாக தாய்மார்களும், தங்களின் பிள்ளைகளைத் தொட்டுத் தூக்கி அரவணைத்து, அவர்களை (செல்லம் கொடுத்து) கெடுப்பதற்கு மாறாக, தங்களின் பிள்ளைகளுக்கு எவ்வாறு மிகச் சிறப்பாக கல்வியூட்ட முடியும் என்பது பற்றி என்றுமே நிலையாக சிந்திக்க வேண்டும்; அவர்கள் கைவசமுள்ள எல்லா வழிகளிலும், வளர்ச்சியடையும் அவர்களின் உடல்கள், ஆன்மாக்கள், மனங்கள் மற்றும் ஆவிகளுள் நேர்மை, அன்பு, நம்பகத்தன்மையுடனான கீழ்ப்படிதல், உண்மையான ஜனநாயகம், மற்றும் எல்லா இனங்களின்பாலும் கருணையை உட்புகட்ட வேண்டும்; அதன் மூலம் உலக நாகரீகம் ஒரே திசையில், ஒரே வலிமையான வெள்ளோட்டமாக வழிந்தோடியும், அடுத்த தலைமுறையின் பிள்ளைகள் மானிட ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அடித்தலத்தை உறுதிப்படுத்திட இயலும்.

அவர்களின் பச்சிளம் பருவத்திலிருந்தே கடவுளின் அன்பு மற்றும் மானிடத்தின் மீதான அன்பை அவர்களின் தாயார்கள் அவர்களுக்குப் புகட்ட வேண்டும்; ஆசிய(கண்ட) வாசிகள் மீதான அன்பையல்ல, அல்லது ஐரோப்பிய (கண்ட) வாசிகள் மீதான அன்பையல்ல, அல்லது, அமெரிக்க (கண்ட) வாசிகள் மீதான் அன்பையல்ல, யாவற்றுக்கும் மாறாக மனிதகுலத்தின் மீதான அன்பையே அவர்களுக்குப் புகட்ட வேண்டும். தங்கள் குழந்தைகள் மீது விளக்கமுடியாத அன்புடைய சில தாய்மார்கள் இருக்கின்றனர். அதை அன்பின் தலைகீழ்திருப்பம் எனக் கூறலாம், அல்லது “முரட்டுத்தனமான அன்பென” பாரசீக நாட்டில் கூறப்படுவது போன்று கூறலாம். இத்தகைய அன்பு அக்குழந்தைகளுக்கு நன்மையை விட அதிக தீங்கையே விளைவிக்கும்.

பஹாவுல்லா வாழ்ந்திருந்த காலத்தில், அக்காநகரில் நான் இருந்த போது, நம்பிக்கையாளர் ஒருவரின் மகனை, பயிற்சிக்காக ஒரு ஜெர்மானிய தச்சரிடம் ஒப்படைத்தேன். அதற்கு ஒரு மாதம் கழித்து, அச்சிறுவனின் தாயார் பஹாவுல்லாவிடம் சென்று புலம்பியழுது, “எனக்கு என் மகன் திரும்பவும் வேண்டும், அவனுடைய சமயத்தைப் பழிக்கும் (அந்தத் தச்சர் ஒரு பஹாய் அல்ல) அந்தத் தச்சரோடு அவன் மகிழ்ச்சியாக இல்லை.” அதற்கு பஹாவுல்லா, “அபா’விடம் (அப்துல்-பஹாவிடம்) செல்லுமாறும், அவர் கூறுவதைக் கேட்டு அதன்படி நடக்கும்படியும் கூறினார்.” அப்பெண்மணி என்னிடம் வந்து, அவர் பக்க கதையைக் கூறினார். அதை கேட்ட பிறகு நான் இவ்வாறு கூறினேன்: “ஜெர்மானியர்கள் எவரையுமே பழிப்பதில்லை. அவர்களுக்கு அது பழக்கமுமில்லை.” அதன் பிறகு அப்பெண்மணி திரும்பிச் சென்றுவிட்டார். பிறகு ஒரு மாதம் கழித்து பஹாவுல்லாவிடம் மீண்டும் வந்து, அந்த தச்சர் ஒரு கோதுமை மூட்டையைத் தன் மகனின் முதுகில் சுமக்க வைத்தார் எனப் புகார் செய்தார். அந்த ஜெர்மானியர் அவ்வாறு செய்தாரென்றால் அது அச்சிறுவனின் ஒழுக்கத்திற்காகவே இருக்க வேண்டும் என நான் மீண்டும் கூறினேன். நான் அப்பெண்மணியை அமைதிப் படுத்தினேன், ஆனால் அவர் உள்ளூர முனுமனுத்துக் கொண்டுதான் இருந்தார். சில மாதங்கள் சென்றன; அப்பெண்மணி மேலும் சில புகார்களுடன் வந்து, தன் மகன் தம்மிடமிருந்து பிரிந்திருப்பதைத் தான் விரும்பவில்லை எனவும் தன் கண்ணின் மணியே அவன்தான் என இம்முறை வெளிப்படையாகக் கூறினார். தன் மகன்பாலான அவரது அன்பு எத்தகைய தன்னலமானது என்பதை உணர்ந்த நான், அச்சிறுவனை அவரிடமிருந்து முற்றாகப் பிரிக்கவில்லை எனவும், அச்சிறுவனின் தொழிற்பயிற்சி முடிவுறும் வரை அவன் அந்தத் தச்சருடன் எட்டு வருடங்கள் இருக்க வேண்டுமெனவும் கூறினேன். பிறகு, வேறு வழியின்றி மீறவியலாத அச்சூழலுக்கு அப்பெண்மணி கட்டுப்பட்டார். எட்டு வருடங்களுக்குப் பிறகு, அச்சிறுவன் தன் பயிற்சியாளரிடமிருந்து விடைபெற்றான்; அவனுடைய தாயார் அவன்மீது பெருமைகொண்டார், எங்குமே தேவைப்பட்ட அவனது கடும் உழைப்பை அவர் எல்லா இடங்களிலும் பாராட்டினார்.

சுருங்கக் கூறின், தாய்மார்கள் தங்களைப் பற்றி மட்டுமே நினைக்கக்கூடாது, மாறாக, அவர்கள் தங்களின் பிள்ளைகளின் மேம்பாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஏனெனில், ஆண்களானாலும் பெண்களானாலும் இன்றைய குழந்தைகளின் மீதே நாளைய நாகரிகத்தை வார்த்தல் சார்ந்துள்ளது.

(Star of the West, தொகுப்பு. VII, எண். 15, பக். 143)

நாடுகடத்தலுக்கு அப்பால் – புனித நிலத்திற்கு பஹாவுல்லா வருகையின் 150’வது நினைவாண்டு.


bnsheader

27 ஆகஸ்ட் 2018

This drawing from a book published in the 1880s depicts Akka from a beach to the city’s west. The sea gate is near the left edge of the sea wall. (Source: W.M. Thompson, The Land and the Book)
1880’இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இந்தப் படம், அந்த நகரத்திற்கு மேற்கே உள்ள கடற்கரையிலிருந்து அக்காநகரைச் சித்தரிக்கின்றது.(மூலாதாரம்: W.M. தோம்ஸன், நிலமும் நூலும்)

பஹாய் உலக செய்தி சேவை புனிதநிலத்திற்கு பஹாவுல்லாவின் வருகை குறித்த 150’வது நினைவாண்டைப் பற்றிய ஒரு வலையொளி (பொட்காஸ்ட்) வரிசையைப் பிரசுரிக்கவிருக்கின்றது. இந்த சுருக்கமான கட்டுரை, அந்த வரிசையில் வரும் முதல் வலையொளிக்கான அறிமுகமாகும்.

புனிதநிலத்திற்கான பஹாவுல்லாவின் வருகை: பாகம் 1

பஹாய் உலக செய்தி சேவையின் இந்த முதல் கதை, அக்காநகருக்கு பஹாவுல்லா நாடுகடத்தப்பட்டதன் சூழல், எடிர்னே நகரிலிருந்து அவரது புறப்பாடு, அக்காநகர் மற்றும் ஹைஃபா’வின் ஆர்வமூட்டும் வரலாறு ஆகியவற்றை ஆராய்கின்றது.

பஹாய் உலக மையம் – இந்த வாரம் இரண்டு ஆட்சியாளர்களினால் ஆணையிடப்பட்ட நாடுகடத்தல் வரிசையில் இறுதியான, புனித நிலத்திற்கான பஹாவுல்லா வருகையில் 150’வது நினைவாண்டைக் குறிக்கின்றது. இப்பொழுது, பஹாய் சமூகத்தின் அதிப்புனிதத்தளங்களின் இருப்பிடமாக விளங்கும் அக்கா/ஹைஃபா வட்டாரம் பஹாய் உலகின் ஆன்மீக மற்றும் நிர்வாக மையமாகியுள்ளது

“இந்த நாடுகடத்தல் அடக்குமுறை, அநீதி, துன்புறுத்தல் ஆகியவை குறித்த ஒரு செயலாகும்; ஆனால், அடக்குமுறை குறித்த இச்செயலை ஆன்மீக மற்றும் சுதந்திரத்திற்கான மானிடத்தின் ஒரு பயணமாக பஹாவுல்லா மாற்றினார்,” என லோஸ் ஏஞ்சல்ஸ், கலிப்போர்னியா பல்கலைக்கழகத்தின் இரானிய ஆய்வுகள் பேராசிரியரான நாடெர் சையீடி விளக்கினார். பஹாவுல்லா 1853’இல் தமது தாய்நாடான பாரசீகத்திலிருந்து நாடுகடத்தப்பட்டார்; அது நாடுகடத்தல்கள் வரிசை ஒன்றின் ஆரம்பமாகியது. பஹாவுல்லாவை வெகுதூரத்திலிருந்த சிறைச்சாலைக்கு அனுப்புவதன் மூலம் அவர் சமயத்தின் ஒளியை அணைத்தட முடியுமென பாரசீக மற்றும் ஒட்டமான் அரசாங்கங்கள் நினைத்தன.

12 ஆகஸ்ட் 1868’இல், அக்காலத்தில் ஏட்ரியாநோப்பள் என அறியப்பட்ட எடிர்னே’யில் உள்ள பஹாவுல்லாவின் இல்லத்தை ஒட்டமான் படைவீரர்கள் சூழ்ந்தனர், அதிகாரிகள் அவர் மீண்டும் நாடுகடத்தப்படுகின்றார் என அறிவித்தனர். எங்கு செல்கிறார் என்பதை அவர்கள் அறிவிக்கவில்லை. பஹாவுல்லவும் அவருடன் இருந்தவர்களும் அவர்களின் பயணத்தை ஆரம்பித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகே, அவர்கள் செல்லுமிடத்தை அறிந்தனர்: ஒட்டமான் பாலஸ்தீனத்தின் பழங்கால சிறைநகரான ஆக்கோ எனவும் அழைக்கப்படும் அக்கா நகர்.

This recent photo shows the House of Rida Big, one of the homes Baha’u’llah lived in during his time in Edirne, Turkey. The Ottoman Empire banished Baha’u’llah from Edirne on 12 August 1868, eventually sending him to Akka. The edifice in Edirne is now a holy place, which Baha’is can visit.
ரைடா பிக்’கின் இல்லத்தை இந்த சமீபத்திய படம் காண்பிக்கின்றது; அது பஹாவுல்லா துருக்கி, எடிர்னே நகரில் வாழ்ந்த இல்லங்களில் ஒன்றாகும். ஒட்டமான அரசு 12 ஆகஸ்ட் 1868’இல் எடிர்னே’யிலிருந்து நாடுகடத்தி, இறுதியில் அவரை அக்காநகருக்கு அனுப்பியது. எடிர்னே’யில் உள்ள இக்கட்டிடம் பஹாய்கள் விஜயம் செய்யக்கூடிய ஒரு புனிதஸ்தலமாகும்.

பிரதானமாக, ஒட்டமானியர்களுக்கு, ஆக்கோ நகர் குற்றவாளிகளுக்கான ஒரு சிறைச்சாலையாகவும், பிறகு கண்காணிக்கப்பட வேண்டியோர் என அவர்கள் எண்ணிய பலவிதமான மக்கள் நாடுகடத்தப்படுவதற்கான ஓரிடமாகவும் ஆகியது. பஹாய்களும் அந்த வகையான மக்களாக இருந்தனர்,” என ஒட்டமான் சாம்ராஜ்யம் குறித்த வரலாற்று ஆசிரியரான டேவிட் குஷ்னர் விளக்கனார். பல நாகரிகங்களைக் கடந்து வந்துள்ள அக்காநகர் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரும், ஒருகாலத்தில் ஒட்டமான் பாலஸ்தீனத்தில் ஒரு முக்கிய மையமாகவும் இருந்துள்ளது. இருப்பினும் 1868’ற்குள், மறக்கப்படுவதற்கு ஏதுவான இடமாக பாழடைந்த நகராக ஒட்டமானியர்கள் அதை ஒரு சிறைநகராகப் பயன்படுத்தினர்.

இப்பொழுது, பஹாவுல்லாவின் வாழ்க்கை மற்றும் போதனைகளின்பால் பக்கிசார்ந்த ஒரு செயலாக, புனிதப்பயணத்திற்காக அக்கா/ஹைஃபா வட்டாரத்திற்கு ஆயிரக்கணக்கான பஹாய்கள் வருகையளிக்கின்றனர்.

புனிதநிலத்திற்கு பஹாவுல்லாவின் வருகை: பாகம் 2

பஹாய் உலக நிலையம் – கோடை வெய்யிலில் விரிகுடா வழியே அப் பாய்மரக் கப்பல் மெதுவாக நகர்ந்து வந்து, பஹவுல்லாவையும் அவருடன் இருந்த சக கைதிகளையும் அக்கா’விற்கு கொண்டுவந்து சேர்த்தது. அது வெள்ளிக்கிழமை 150 ஆண்டுகளுக்கு முன் 31 ஆகஸ்ட் 1868 ஆகும்.

அக்காநகர் துறைமுகம் பயணிகள் இறங்குவதற்கு முறையான வசதிகளைக் கொண்டிருக்கவில்லை, ஆதலால் கப்பல் நகருக்கு வெளியே நீரில் ஆழமில்லா ஓரிடத்தில் நின்றது. கைதிகள் கடல்வாயிலை நோக்கி நீரில் நடந்து சென்றபோது, அங்கு எதிர்ப்புணர்வோடு கேலிக்கூச்சலிட்டுக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தை எதிர்நோக்கினர்.

நகரின் குறுகிய மற்றும் வளைந்து செல்லும் சந்துகளின் வழி, கடல்வாயிலிலிருந்து அப்பொழுது ஒரு சிறையாகப் பயன்படுத்தப்பட்ட பாசறையை நோக்கி பஹாவுல்லா கொண்டுசெல்லப்பட்டார்.

பஹாய் சமயத்தின் முதல் நூற்றாண்டின் வரலாறாகிய, ஷோகி எஃபெண்டி எழுதிய கடவுள் கடந்து செல்கின்றார் எனும் நூலில்: “அக்காநகரில் பஹாவுல்லாவின் வருகையானது, இறுதிக் கட்டமாகிய, உண்மையில் அவரது சமய ஆட்சிக்காலம் முழுவதும் அவர் அனுபவித்த நாடுகடத்தலின் உச்சகட்டமாகிய அவரது நாற்பது வருட சமய ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டத்தின் ஆரம்பத்தை, குறிக்கின்றது. அக்காநகரில் அவரது சிறைவாச காலம், மெதுவாக முதிர்ச்சியுறும் ஒரு செயல்முறையின் கனிவுறுதலை அதனுடன் கொண்டுவந்ததோடு, அந்த சமயப்பணியின் சிறந்த கனிகள் இறுதியில் சேகரிக்கப்பட்ட ஒரு காலகட்டமாகவும் விளங்கியது.”

Baha’u’llah entered Akka on 31 August 1868 through the sea gate, which can be seen left of center along the sea wall. This photo, from 1920, shows what the sea gate would have looked like at the time of Baha’u’llah’s arrival, with water running directly to the wall. Today, this area along the old sea wall is a paved promenade.
கடல் சுவர் வழியே அதன் மையத்தின் இடதுபுறத்தில் காணப்படும், கடல்வாயிலின் வழியே 31 ஆகஸ்ட் 1868’இல் பஹாவுல்லா அக்காநகர் பிரவேசித்தார். 1920’இல் எடுக்கப்பட்ட இந்தப் படம், பஹாவுல்லாவின் வருகையின் போது, கடல்சுவரில் கடல்நீர் மோதும் நிலையில் பார்ப்பதற்கு அந்த கடல்சுவர் எப்படி இருந்திருக்கும் என்பதைக் காட்டுகின்றது. இன்று, பழைய கடல்சுவரின் அருகே இந்தப் பகுதி ஓர் உலாமேடையாக இருக்கின்றது.

நகரின் மோசமான நிலைமையும், அவர்கள் வருகையின் போது பஹாவுல்லாவுக்கும் அவரது சகாக்களும் அச்சமூட்டும் வகையில் நடத்தப்பட்டதும் அவர்களின் உடனடி அழிவு, பஹாவுல்லாவின் சமயத்தின் முடிவு ஆகியவற்றைக் சமிக்ஞையிடும் நோக்கங் கொண்டவையாகும். இருப்பினும், அந்த காட்சி குறித்த பஹாவுல்லாவின் வர்ணனை முற்றிலும் வேறு விதமாக இருந்தது: “எமது வருகையைப் பொறுத்தவரை, ஒளியின் பதாகைகளுடன் நாங்கள் வரவேற்கப் பட்டோம்; அப்பொழுது ஆவியின் குரல்,” ‘விரைவில் பூமியில் வாழ்கிற அனைவருமே இந்த பதாகையின் கீழ் பட்டியலிடப்படுவார்கள்’”என்று கூக்குரலிட்டது.” பஹாய் வரலாற்றில் சில அசாதாரன மேம்பாடுகளுக்கான தளமாக அக்காநகர் விளங்கவிருந்தது.

அக்காநகரிலிருந்த தமது சிறையிலிருந்தவாறே பஹாவுல்லா தமது மிகவும் உறுதியான சில படைப்புகளை வெளிப்படுத்தினார். அவற்றுள் தமது காலத்தில் வாழ்ந்த பல அரசர்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு தனித்தனியே எழுதப்பட்ட கடிதங்கள் அடங்கும்: போப்பாண்டவர் 9’வது பியுஸ், 3’வது நெப்போலியன், ஸ்சார் 2’வது அலெக்ஸான்டர், விக்டோரியா மகாராணி, மற்றும் நாசிரிட்டீன் ஷா. இதே அக்காநகரில்தான் அவர் தமது அதிப்புனித நூலாகிய கித்தாப்-இ-அக்டாஸ் திருநூலையும் வெளிப்படுத்தினார்.

பஹாவுல்லா, தமது வாழ்நாளில் எஞ்சியிருந்த வாழ்நாள்களை அந்த சிறை நகரிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் கழித்தார். பழைய அக்காநகருக்கு அருகில் வெளியே உள்ள அவரது இறுதி நல்லடக்கத்தலம், இன்று உலக பஹாய்களுக்கு அதிப்புனிதத்தளமாக இருக்கின்றது.