மார்ச் 25, 2020

சிட்னி – உலகின் எல்லா பகுதிகளிலும் உலகளாவிய சுகாதார நெருக்கடி சமுதாயத்தில் இடையூறுகள் விளைவித்து வரும் வேளை, சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கான பஹாய்களின் முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன. பொது சுகாதார தேவைகளுக்கு ஏற்ப, இப்பொழுது வெளிப்பட்டுள்ள குறிப்பிட்ட ஆன்மீக மற்றும் லௌகீக தேவைகளில் கவனம் செலுத்தும் பரஸ்பர செயல்பாடுகளின் புதிய வழிகளை சமூகங்கள் விரைவாகவும் ஆக்ககரமாகவும் பயன்படுத்துகின்றன.
ஆஸ்திரேலிய பஹாய் சமூக வெளிவிவகார அலுவலகத்தின் துர வீனஸ் காலெஸ்ஸி, “எங்கள் அண்டைப்புறங்களுக்கு சேவை செய்வதற்கான ஓழ் ஆழ்ந்த உறுதிமனப்பான்மை உருவாகியுள்ளது. எல்லைக்குட்பட்டசமூகத் தொடர்புகளிலும் கூட, நாங்கள் சமுதாயத்தின் வாழ்வில்—குறிப்பாக வயதானோர் அல்லது பாதிப்புக்குள்ளாகக்கூடியோர் மற்றும் ஒருவர் மற்றவரின் தேவைகள் குறித்து உணர்திறத்தோடு — பங்களிப்பதற்கான எங்களின் முயற்சிகளை பலப்படுத்தி வருகின்றோம்.
அதே சமயம், தற்போதைய சூழ்நிலைகள் மக்களில் அச்சத்தையும் பதட்டத்தையும் தூண்டிவிடும் போது, உலக மக்கள் பிரார்த்தனையில் நம்பிக்கைக் காண்கின்றனர். எல்லாவிடங்களிலும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தூரமாக அல்லது குறுகிய தூரத்தில் உள்ள அல்லது கண்டங்களில் உள்ளோருடன் இணையதள தொடர்பை ஏற்படுத்தி உற்சாகப்படுத்தும் வழிபாடுகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

சாந்தியாகோ நகரில், பிரார்த்தனை மற்றும் இசையுடன் கூடிய 19 குறு காணொளிகள் தயாரிக்கப்பட்டு இணையத்தில் வழங்கப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்காவின் வில்மட் வழிபாட்டு இல்லத்தில், வாடிக்கையான வழிபாடுகள் இணையத்திற்கு நகர்த்தப்பட்டும், கோவிலுக்குள் அமர்ந்திருப்பது போன்றதோர் உணர்வை உண்டாக்குவதற்கு ஒரு காட்சி வழங்கலையும் உள்ளடக்கியுள்ளன.பஹாய் வழிபாட்டு இல்லங்கள் நீண்டகாலமாகவே ஆன்மாவிற்கும் கூட்டு வழிபாட்டிற்குமான மையங்களாக விளங்கி வந்துள்ளன. பிற பொதுவிடங்கள் போன்று, பாதுகாப்பிற்காக கோவிலின் கதவுகளை அவர்கள் மூடவேண்டியுள்ளது. இருப்பினும், பஹாய் கோவில்கள் உள்ள இடங்களில், இந்த கட்டிடங்கள் உள்ளடக்கியிருக்கும் உணர்வை சமுதாயத்தில் பரவலாக உட்புகுத்துவதற்கு புதிய அணுகுமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தடங்கல் ஏற்படுத்தும் இந்த சூழ்நிலைகளிலும் பஹாய் கல்வியல் முயற்சிகள் தொடர்கின்றன. அரசாங்க வழிகாட்டிகளுக்கு மதிப்பளித்து, தேகத் தொடர்பின்றி இந்த நடவடிக்கைகளை நடத்துமாறு பஹாய் ஸ்தாபனங்கள் சமூகங்களை ஊக்குவித்துள்ளன.
ஆஸ்த்திரிய பஹாய் சமூகத்தின் வெளிவிவகார அலுவலகத்தின் லெய்லா தாவெர்நாரோ-ஹைடாரியான், “எங்கள் சமூகம் மிகவும் விரைவாகத் தழுவியுள்ளது. சில நாள்களுக்குள் சமுதாய சேவைக்கான எல்லா திறனாற்றல் உருவாக்க நடவடிக்கைகளும் இணையதளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. முன் எப்போதும் விட இப்போது அதிகமாக தேவைப்படும் இத்தகைய ஊடக முறைகள் சிறுவர்களுக்கான இந்த வகுப்புகளை தொடர்ந்து நடத்த எங்களுக்கு வசதியளிக்கின்றன. ஆஸ்திரியா நாட்டில் சிறுவர்களுக்கான ஒரு பஹாய் ஆன்மீக வகுப்பு இணையதளத்தில் நடைபெறுகின்றது. முன் எப்போதும் விட இப்போது அதிகமாக தேவைப்படும் இத்தகைய ஊடக முறைகள் சிறுவர்களுக்கான இந்த வகுப்புகளை தொடர்ந்து நடத்த எங்களுக்கு வசதியளிக்கின்றன. மீழ்ச்சித்திறன், சமூகத்தின்பால் கவனம் செலுத்துவது, ஒன்றுபட்டிருப்பது ஆகிய யோசனைகள் அவர்கள் பயணிக்கின்ற இத்தருணத்தில் அவர்களுக்கும் பொருந்துகின்றன,” என்றார்
தனது அண்டைப்புறத்தில் சிறுவர்களுக்கான ஆன்மீகக் கல்வி வகுப்புகளை நட்த்தும் இலன்டன் மாநகரைச் சேர்ந்த ஓர் இளைஞர், தற்போதைய சூழ்நிலைகளில் சேவை செய்வதற்கான அர்த்தமிகு வழிகளைக் காண்கின்றனர்: “இந்த நடவடிக்கை மாற்றம் குறித்து கலந்தாலோசித்தல் ஒரு எண்ணத்தைத் தூண்டிவிட்டது: இந்த சூழ்நிலை அதிகரிக்கும் போது ஒவ்வொரு பெற்றோரையும் சாத்தியமுள்ள ஒர் ஆசிரியராக எங்களால் நினைத்துப் பார்க்க முடிகின்றதா?” இப்பொழுது, தொலைபேசி உரையாடல்களின் மூலம் பெற்றோர்களுக்கு ஆதரவளித்து வருகின்றார்.

இந்த தொற்றினால் அதிகம் பாதிக்கப்படாத அப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள பஹாய்கள் வைரஸ் குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டனர். நெப்பால் நாட்டின் மோதிபஸ்தியில் உள்ள ஒரு குழுமம் தகவல்திறம் மிக்க பதாகைகளை தயாரித்தனர். அவர்கள் ஒருவர் மற்றவரிடமிருந்து தூர தள்ளி நின்று தேவைப்படும் பாதுகாப்பு உடைகளை அணிந்து– தகவல்திறம் மிக்க பதாகைகளை தயாரித்து, சுய மற்றும் கூட்டு சுகாதார கோட்பாடுகள் பற்றிய முக்கிய தகவலை வழங்கினர். கைகழுவுவதற்காக சவர்க்காரம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
தமது சமுதாயத்தின் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் குறித்து பிரதிபலிக்கின்ற டாக். தாவெர்னாரோ-ஹைடரியான், “அண்டையர்களுக்கிடையிலான பலகனி வழி உரையாடல்களாயினும், அல்லது பொது ஆளுமைகளும் பத்திரிக்கை இதழாளர்களும் உரையாடும் முறையிலானாலும், ஒரு உலகளாவிய சவாலை எதிர்கொள்வதில் ஒரு பகிர்ந்துகொள்ளப்பட்ட மற்றும் விரிவடைந்துள்ள அடையாள உணர்வில் ஒரு பெரிய மாற்றத்தை இங்கு ஆஸ்த்திரியாவில் ஒருவரால் காணமுடிகிறது. ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு குறித்த கருத்தாக்கங்களின்பால் தீவிர கவனம் செலுத்தப்படுகின்றது. பல்வேறு குழுமங்கள் இந்த பிரச்சினை குறித்து கவனம் செலுத்துவதற்காக தங்களுக்கிடையிலான வேறுபாடுகளில் அக்கறை செலுத்தவில்லை மற்றும் மக்கள் சமய வேறுபாடுகளைத் தாண்டி ஒன்றாக பிரார்த்திக்கின்றனர்,” என்றார்.
இந்தியா நாட்டின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் நீலாக்ஷி ராஜ்கோவா, அதே போன்று ஒரு போக்கைத் தமது நாட்டில் காண்கின்றார். இந்த நேரத்தில், ஆன்மீக மற்றும் சமுதாய தன்மைமாற்றம் குறித்த ஓர் ஆழ்ந்த உரையாடலுக்காக நாம் எல்லாரையும் அணுக முடியும் என நாங்கள் உணர்கின்றோம், ஏனெனில் பஹாவுல்லாவின் செய்தியில் அடங்கியுள்ள மைய யோசனை குறித்து மக்கள் அதிகம் விழிப்படைந்து வருகின்றனர்: நாம் அனைவரும் ஒன்று, நாம் ஒருவரை ஒருவர் பரஸ்பரமாக சார்ந்துள்ளோம், மற்றும் நாம் ஒருவர் மற்றவருக்கு ஆதரவளித்திட கோரப்படுகின்றோம்.
https://news.bahai.org/story/1404/