பருவநிலை மாற்றத்தின் தார்மீக பரிமாணங்களில் கவனம் செலுத்தும் அவசியத்தை தொற்று நோய் வலியுறுத்துகின்றது


பருவநிலை மாற்றத்தின் தார்மீக பரிமாணங்களில் கவனம் செலுத்தும் அவசியத்தை தொற்று நோய் வலியுறுத்துகின்றது


8 அக்டோபர் 2021


காலேஜ் பார்க், மேரிலான்ட், ஐக்கிய அமெரிக்கா – தற்போது நிலவுகின்ற உலகளாவிய சுகாதார நெருக்கடியும் அதன் விளைவுகளும் எதிர்வரும் சுற்றுச்சூழல் சாவல்கள் குறித்த புதிய எச்சரிக்கைகளைத் விடுக்கின்றன. மேரிலான்ட் பல்கலைகழகத்தின் உலக அமைதிக்கான பஹாய் இருக்கையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இணையதள மாநாடு, மானிடத்தின் ஒருமை மற்றும் இயற்கையுடனான அதன் உறவு குறித்த அதிகரித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள ஒரு நேரத்தில் இச்சவால்களை ஆராய்ந்திட பங்கேற்பாளர்களுக்கு ஒரு கருத்தரங்கை வழங்கியது.

மேரிலான்ட் பல்கலைகழகத்தின் உலக அமைதிக்கான பஹாய் இருக்கையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இணையதள மாநாடு, மானிடத்தின் ஒருமை மற்றும் இயற்கையுடனான அதன் உறவு குறித்த அதிகரித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள ஒரு நேரத்தில் இச்சவால்களை ஆராய்ந்திட பங்கேற்பாளர்களுக்கு ஒரு கருத்தரங்கை வழங்கியது.

மாநாட்டில், உலக அமைத்திக்கான பஹாய் இருக்கையின் பொறுப்பாளரான ஹோடா மஹ்மூடி, தமது ஆரம்ப உரையில், “தற்போதைய உலகளாவிய சுகாதார நெருக்கடி, ஒரு பொது பிரச்சினையின் மீது கவனம் செலுத்துவதற்கு தனிநபர்கள், சமூகங்கள், ஸ்தாபனங்கள் மற்றும் அரசாங்கங்கள் ஒன்றுகூட வேண்டும் என்பதை வெளிப்படுத்துகின்றது,” என்றார். இந்த நெருக்கடி, அறிவியல் ஆதாரம், நெறிமுறை கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த  கட்சிசார்பற்ற, ஒற்றுமையான நடவடிக்கையைக் கோருகின்றது. அது தார்மீக தைரியத்தை அழுத்தமாகக் கோருகின்றது. பருவநிலை மாற்றத்திற்கும் இது பொருந்துவதாகும்.

ஹவாயி பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியரான மேக்ஸீன் புர்க்கெட்’டை உள்ளடக்கிய மாநாட்டு பேச்சாளர்கள், மிகவும் பாதிக்கப்படக்கூடியோர் மீது கவனம் செலுத்தப்படுவதை உறுதிசெய்யும் அதே நேரம், பங்காளித்துவம், நம்பகம், உலகம் முழுவதுமான சவால்களை எதிர்நோக்குவதில் பகிரப்பட்ட நோக்கம் ஆகியவற்றை நிர்மாணிப்பதன் தேவையை ஆராய்ந்தனர்.

மாசாசுஸெட்ஸ் வூட்ஸ் ஹோல் ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானியான ரிச்சர்ட் ஹௌட்டன், சூழ்நிலையின் துயரத்திற்கு ஒப்புதல் அளித்து, உலகளாவிய உமிழ்வுகள் குறைந்துள்ளது குறித்து பேசினார்.

“மக்கள், தேவைகளின் காரணமாக, தங்களின் பொருள்வளங்கள் குறித்து அதிக புத்திசாலிகளாகவும் அதிக பாதுகாப்பு உணர்வுடையவர்களாகவும் இருக்கின்றனர். இது, எது நடைமுறைப்படும் என்பது குறித்த பாடங்களை வழங்கிடக்கூடும். … பருவநிலை மாற்றத்திற்கு மேலும் உன்னிப்பான கவனம் செலுத்துவதற்கான ஒரு நேரமாக இந்தக் கல்வியூட்டும் காலத்தை, நாம் பயன்படுத்திக்கொள்ளக் கூடும் என நான் எதிர்ப்பார்க்கின்றேன்.  நச்சுயிரியின்பால் நாம் செலுத்தும் கவனமானது, பருவநிலைக்கும் என்ன செய்யப்பட வேண்டுமென்பதற்கும் பயன்படுத்தப்படக் கூடும்.”

ஆகாயப் பயணங்களால் உருவாக்கப்படும் உமிழ்வுகளை தவிர்ப்பதற்காக பல மாதங்களுக்கு முன் திட்டமிடப்பட்ட இணையதள கூட்டமான இந்த மாநாடு, சுகாதார நெருக்கடி இருந்தபோதிலும், ஆஸ்திரேலியா, கம்போடியா, ஹவாயி, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து ஆராய்ச்சியாளர்களை ஒன்றுதிரட்டியது. பங்களிப்பாளர்கள் கல்வியல் ஒழுக்கங்களின் ஒரு நெடுக்கத்திலிருந்து முன்னோக்குகளை வழங்கினர்.

மாநாட்டின் கலந்துரையாடல்களில், மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் தத்துவம் மற்றும் ‘டிம்னிக்’ இருக்கை பேராசிரியரான காய்ல் வய்ட், புதிய எரிசக்தி தொழில்நுட்பங்களின் அறிமுகத்தைச் சுற்றிய கொள்கைகள், நீதி மற்றும் நியாயம் குறித்த விஷயங்கள் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மாநாட்டின் கலந்துரையாடல்களில், மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் தத்துவம் மற்றும் ‘டிம்னிக்’ இருக்கை பேராசிரியரான காய்ல் வய்ட், புதிய எரிசக்தி தொழில்நுட்பங்களின் அறிமுகத்தைச் சுற்றிய கொள்கைகள், நீதி மற்றும் நியாயம் குறித்த, குறிப்பாக பூர்வகுடியினர் மற்றும் பாதிப்புக்கு ஆளாகும் குழுமத்தினர் தொடர்பான விஷயங்கள் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். “இயல்பாகவே ஒரு நல்ல விஷயம் என பல மக்கள் நம்பும் ஓர் எரிசக்தி மாற்றமானது” இப்போதிருந்து 50 ஆண்டுகளில் முழு மக்கள்தொகையின் இடம்பெயர்வுக்கு வழிவகுத்த ஒன்றென கருதப்படக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

அவரும் ஆஸ்திரேலியாவின் எடிலேய்ட் பல்கலைகழகத்தின் சமுதாய அறிவியல்கள் பகுதியின் இடைக்கால தலைவரான மெலிஸ்ஸா நேர்ஸி-பிரேய்’யும் அவற்றைப் பாதிக்கும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் உள்ளூர் சமூகங்களும் ஈடுபட வேண்டுமென கூறினர். டாக்டர் நேர்ஸி-பிரேய், “எதிர்காலத்தையும், ஓர் உலகளாவிய தீர்வை நோக்கி நகர்வதில், உள்ளூர் இட அடிப்படை பிரதிசெயல்களையும் நாம் உண்மையில் கருத்தில் கொள்வது அவசியம்,” என்றார்.

“ஒரு பொதுப் பிரச்சினையை எதிர்கொள்ள தனிநபர்கள், சமூகங்கள், ஸ்தபானங்கள், மற்றும் அரசாங்கங்கள் ஒன்றுதிரள வேண்டும் என்பதை தற்போதைய உலகளாவிய சுகாதார நெருக்கடி… எடுத்துக் காண்கின்றது. சமீபமாக நடந்தேறிய ஓர் இணையதள மாநாட்டில், உலக அமைதிக்கான பஹாய் இருக்கையின் பொறுப்பாளரான ஹோடா மஹமூடி, “பருவநிலை மாற்றத்திற்கும் இது பொருந்தும்,” எனக் கூறினார்.

மாநாட்டைப் பற்றி பிரதிபலித்த டாக்டல் மாஹ்மூடி, அனைத்தும் சமுதாய மற்றும் சூற்றுச்சூழலுக்கு மகத்தான தாத்பர்யங்கள் கொண்டுள்ள பொருளாதாரம், நுகர்வியம், சுகாதாரம், நல்வாழ்வு ஆகியவை குறித்த அனுமானங்கள் தற்போது எவ்வாறு சவாலுக்கு உட்படுத்தப்படுகின்றன என்பதை வர்ணித்தார்.

இன்று மக்கள் எதிர்நோக்கும் சுற்றுச்சூழல், பொருளாதார, சமுதாய நெருக்கடிகள் அனைத்தின் அடித்தலமும் ஓர் ஆன்மீக நெருக்கடியே.  மனிதர்கள் எனும் முறையில் நாம் யார் என்பது குறித்து உலக மக்களிடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டாலின்றி இந்த முக்கியமான பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியாது. ஒருவர் மற்றவர் மீது கொண்டிருக்க வேண்டிய மற்றும், கிரகத்தின் அறங்காவலர்கள் எனும் முறையில் நமது தார்மீக பொறுப்பு என்ன? எந்தக் கொள்கைகளைச் சுற்றி நாம் ஒற்றுமையடைய இயலும்?  மனிதகுல ஒருமை பற்றி நாம் பேசும்போது, அது தோழமை மற்றும் நேசம் குறித்தது மட்டுமல்ல, ஆனால் இந்த வைரஸ் சுட்டிக் காட்டியுள்ளபடி, நுணுக்கமாக ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான முற்றிலும் புதிய அணுகுமுறையுடன்  ஒரு வேறுபட்ட உலகத்தை உருவாக்குவதற்கான அழைப்பும் ஆகும். இந்த நெருக்கடிக்குப் பிறகு, இந்தத் திசையில் நடவடிக்கைகள் எடுப்பதற்கு நமக்கு வாய்ப்பு ஏற்படலாம்.

மாநாட்டின் வழங்கல்கள் அனைத்தையும் நீங்கள் இணையதளத்தில் காணலாம்

மூலாதாரம்: https://news.bahai.org/story/1430/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: