சமுதாய ஒத்திசைவு பற்றிய உரையாடல்கள் நோய்த் தொற்றின் ஆரம்பத்திலிருந்து ஆஸ்த்திரேலியாவில் விரைவடைந்து வருகின்றன


சமுதாய ஒத்திசைவு பற்றிய உரையாடல்கள் நோய்த் தொற்றின் ஆரம்பத்திலிருந்து ஆஸ்த்திரேலியாவில் விரைவடைந்து அடைந்து வருகின்றன


8 அக்டோபர் 2021


சிட்னி – நோய்த் தொற்றின் ஆரம்பத்திலிருந்து இன மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், ‘நாமும் அவர்களும் (அந்நியர்கள்) ’ குறித்த கருக்கோள்கள், முடிவெடுக்கும் செயல்முறைகளில் குறைந்த பங்கேற்பு ஆகியன பற்றிய உரையாடல்கள் ஆஸ்த்திரேலியாவில் பிரபலமடைந்து வருகின்றன. சமுதாய ஒத்திசைவின் மீதான பொது சொல்லாடலுக்குப் பங்களிப்பதெனும் அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஆஸ்த்திரேலிய வெளிவிவகாரத்திற்கான பஹாய் அலுவலகத்தனால் நடத்தப்பெற்ற ஓர் இணையதள கருத்தரங்கில் இந்த விஷயங்களும், வேறு பல விஷயங்களும் ஆராயப்பட்டன.

சமுதாய ஒத்திசைவின் மீதான பொது சொல்லாடலுக்குப் பங்களிப்பதெனும் அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஆஸ்த்திரேலிய பஹாய் சமூகம் “எழுந்து நிற்பதா முன்னோக்கிச் செல்வதா” எனத் தலைப்பிடப்பட்ட ஓர் இணையதள கருந்தரங்களை நடத்தியது.

“இந்த நெருக்கடி, மேலும் அதிக சமத்துவமின்மை மற்றும் பாரபட்சமான அணுகுமுறைகளை வெளிப்படுத்தியுள்ள போதும், நம்மை ஒரே குடும்பமென காண்பதை நோக்கிய ஓர் இயக்கத்தை அது தூண்டிவிட்டுள்ளது,” என்கிறார் வெளிவிவகார அலுவலகத்தின் ஐடா வால்க்கர். “குடும்பத்தின் ஓர் உறுப்பினருக்காக அதே குடும்பத்தின் மற்றொரு உறுப்பினர் துன்பத்திற்கு ஆளாகுதலை நாம் காண நேர்ந்தால் அங்கு நிலவும் ஏற்றத்தாழ்வுக்கு நாம் உடனடியாக ஒப்புதலளித்திடுவோம். அதே போன்று, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் நாம் அதே விதத்தில் கண்ணுற வேண்டும்.”

“குதித்தெழுவதா முன்னோக்கிச் செல்வதா” என தலைப்பிடப்பட்ட அந்த இணைய கருத்தரங்கில், ஒரு பிரபல ஆஸ்த்திரேலிய எழுத்தாளரும் சமுதாய மனவியலாளருமான  ஹியூ மேக்கே’யுடன், (தனிநபர்) சமுதாய பிளவுகளின் மீது கவனம் செலுத்துவதற்கா, அடையாளம், செழுமை, மற்றும் பொருளாதார வாழ்க்கையை சமுதாய பிளவுகள் குறித்த அதன் கருத்துகளை அவரது சமுதாயம் எவ்வாறு மறுபரிசீலனை செய்திட முடியும் என்பது பற்றி கலந்துரையாடினார்.

வெளிவிவகாரத்திற்கான ஆஸ்த்திரேலிய பஹாய் அலுவலகம், ஒரு பிரபல ஆஸ்த்திரேலிய எழுத்தாளரும் சமுதாய மனவியலாளருமான ஹியூ மேக்கே’யுடன், எவ்வாறு ஆஸ்த்திரேலிய சமுதாயம் சமுதாய பிளவுகளின் மீது கவனம் செலுத்துவதற்காக, (தனிநபர்) அடையாளம், செழுமை, மற்றும் பொருளாதார வாழ்க்கையை சமுதாய பிளவுகள் குறித்த அதன் கருத்துகளை அவரது எவ்வாறு மறுபரிசீலனை செய்திட முடியும் என்பது பற்றி ஆராய்ந்தது.

“இந்த அனுபவத்தினால் நாம் மேலும் அதிக கருணையுடையவர்களாக இருப்பதற்கான திறனாற்றல் நமக்கு உள்ளது என்பதைக் கண்டுணர நாம் வற்புறுத்தப்பட்டுள்ளோம்,” என்றார் திரு மேக்கே. “ வெகு சில விதிவிலக்குகளைத் தவிர, ஒருவர் மற்றவர் மேல் அக்கறையுடன் நடந்துகொள்வதற்கான முற்றிலும் வேறுபட்ட ஒரு வழியில் வாழ்ந்திட நாம் தயாராக உள்ளோம் என்பதை இந்த சமுதாயம் காட்டியுள்ளது. அது மிகவும் நம்பிக்கையூட்டும் அறிகுறி என்று நான் நினைக்கிறேன்.”

நெருக்கடியின் அடிப்படையில் குறைவான நடமாட்டம் அண்டைப்புற வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு வழிவகுத்தது என்பதையும், ஒரே அடுக்குமாடி கட்டிடம் அல்லது தெருவில் வசிக்கும் மக்கள் தங்களை ஒரே சமூகத்தின் ஒரு பகுதியாக ஒருவருக்கொருவர் பார்த்திட வழிவகுத்திருப்பதையும் திரு மேக்கே குறிப்பிட்டார். “இவர்கள் நாம் ஒன்றாக வாழ நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல, ஆனால் அவர்கள்‘ அண்டையினர் ’என்ற இந்த விசித்திரமான மனித அந்தஸ்தைக் கொண்டவர்கள். மற்றும், எந்தவொரு சமூகத்தின் ஆரோக்கியத்திற்கும் குடிமக்கள் அண்டையினரைப் போல செயல்படுவது முக்கியமாகும்.”

250 பங்கேற்பாளர்களை ஈர்த்த அந்த இணைய கருத்தரங்கு, ஒரு வட்டமேஜைகள் வரிசைகள் வழி சமுதாய ஒத்திசைவின் மீதான ஓர் உரையாடலை மேம்படுத்துவதற்காக ஆஸ்த்திரேலிய பஹாய் சமூக முயற்சிகளின் ஒரு பகுதியாக நடைபெற்றது. கருத்தரங்கில் பங்கேற்றவர்களில் அதிகாரிகள், சிவில் சமூக அமைப்புகள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் நம்பிக்கை சமூகங்களின் பிரதிநிதிகள் அடங்குவர், மற்றும் அவர்களில் பலர் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் அரசாங்கக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தங்கள் பங்களிப்புகள் எவ்வாறு அறிவூட்டும் என்பதை வெளிப்படுத்தினர்.

தற்போதைய உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஒரு படம். சமுதாய ஒத்திசைவு குறித்த உரையாடல்களை மேம்படுத்துவதற்காக, ஆஸ்த்திரேலிய பஹாய் சமூகம், இங்கு காணப்படுவது போன்ற, பலதரப்பட்ட சமுதாய நடவடிக்கையாளர்கள், கல்வியாளர்கள், சமயம் சார்ந்த சமூகங்கள் கலந்துகொள்ளும் வட்டமேஜை (கருத்தரங்குகளை) அவ்வப்போது நடத்திவருகின்றது.

கருத்தரங்கு மற்றும் கடந்த சுற்று வட்ட மேஜைகள் பற்றி பிரதிபலிப்பதில், திருமதி வாக்கர், “சமூகத்தின் பல பிரிவுகளிடையே தேசிய அக்கறை தொடர்பான பிரச்சினைகளில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கு பங்களிப்பதே இந்த கலந்துரையாடல்கள் குறித்த எங்கள் நோக்கமாகும்,” எனக் கூறினார்.

“பஹாய் கலந்தாலோசனை கோட்பாட்டைப் பயன்படுத்துவதன் மூலம், மாறுபட்ட கண்ணோட்டங்கள் ஒத்திசைவுறும் மற்றும் ஒற்றுமைக்கான விவரங்கள் மிகைப்படும் ஓர் இடம் உருவாக்கப்படுவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு நபரும் தங்கள் முன்னோக்கை பற்றின்மையுடன் வழங்குகிறார்கள், அதன் மூலம் அது அனைவரையும் ஆராய அனுமதிக்கிறது. தன்னலமின்மை, அன்பு மற்றும் நல்லுறவு ஆகியவை ஒருமித்த கருத்தையும் செயலில் ஒற்றுமையையும் அடையத் தேவைப்படுகின்றன.”

பஹாய் வெளிவிவகார அலுவலகம் ஆஸ்திரேலியாவில் இந்த கலந்துரையாடல்களின் மூலம், ஆஸ்த்திரேலியாவில் சமுதாய ஒத்திசைவு குறித்த ஓர் உள்ளடக்கும் தொலைநோக்கை வெளிப்படுத்த முற்படும், ஓர் ஆவணத்தில் சமூக ஒத்திசைவு பற்றிய அனைத்து முன்னோக்குகளையும் உள்ளடக்கிய பல்வேறு கண்ணோட்டங்களை ஒன்றிணைக்கிறது. இந்த ஆவணம் இந்த ஆண்டு இறுதியில் அரசு மற்றும் பொது சமூக அமைப்புகளுக்கு வழங்கப்படும்.

“எந்தவொரு ஆன்மீக நம்பிக்கையின் முழுமையான வெளிப்பாடும் செயலில் மட்டுமே காணப்படுகிறது.   எல்லா மட்டங்களிலும், குறிப்பாக சுற்றுப்புறங்களில், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ளவும், நமது சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் மக்கள் தீர்வுகள் பெறக்கூடிய இடங்கள் நமக்கு தேவை.   ஆன்மீகக் கோட்பாடுகள், பலதரப்பட்ட முன்னோக்குகள் மற்றும் அவர்களின் கலாச்சாரங்களிலிருந்து நேர்மறையான விழுமியங்களைப் பெற மக்களை அனுமதிப்பதன் மூலம் அதிக ஒத்திசைவை உருவாக்குவதற்கான வாய்ப்பை கலந்தாலோசனை வழங்குகிறது.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1432/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: