
8 அக்டோபர் 2021
பஹாய் உலக மையம் – தற்போதைய தொற்றுநோயின் சூழலில், மானிடத்தின் நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டுடன் சம்பந்தப்பட்ட கருப்பொருள்கள் குறித்த கட்டுரைகளை வெளியிட்டு வரும் ‘பஹாய் உலகம்’ இணையதள வெளியீட்டில் இரண்டு புதிய கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

“ஓர் உலகளாவிய முன்னோக்கிலிருந்து புலம்பெயர்வை மறுசிந்தனை செய்தல்” (எனும் கட்டுரை) சமுதாய தன்மைமாற்றம் மற்றும் எல்லைக்குள் மற்றும் எல்லைதாண்டிய ஜனங்களின் நகர்வை ஆராய்கின்றது. ஏறத்தாழ ஒவ்வொரு சமுதாயத்தையும் பாதித்து வரும் ஓர் உலகளாவிய இயல்நிகழ்வு குறித்து அதிக புரிதலைப் பெறும் முயற்சியில், கட்டுரையானது பஹாய் போதனைகளிலிருந்தும் சமுதாய அறிவியல்களில் இருந்தும் உட்பார்வைகளை கோடிட்டு காட்டுகின்றது.
உருமாற்றத்தின் கருத்தாக்கம் மற்றொரு கண்ணோட்டத்தில் “ஒளி இருளில் இருந்தது: துன்பத்தின் வலியில் மறைந்துள்ள வளர்ச்சி குறித்த பிரதிபலிப்புகள்” எனும் முன்னோக்கிலிருந்து அணுகப்படுகின்றது. இந்தக் கட்டுரை, மனிதகுலத்தின் வளமான ஆன்மீக மற்றும் தத்துவ பாரம்பரியத்திலிருந்து ஈர்த்து, மனித அனுபவத்திற்குத் தனித்துவமான, துன்பத்தின் ஒரு வடிவமாகிய, இருத்தலியல் மனவழுத்தத்தைப் பரிசீலிப்பதுடன், தனிநபர் வளர்ச்சி, அபிவிருத்தி ஆகியவற்றுடனான அதன் உறவை ஆராய்கிறது.

உலகில் சமயத்தின் நோக்கத்தைப் பிரதிபலிக்கும் பஹாய் சிந்தனை மற்றும் செயலில் மேம்பாடுகளை வழங்கிடும், பரந்த பொதுமக்களுக்குப் பயனளிக்கும் பல கருப்பொருள்களிலான சிந்தனையார்ந்த வியாசங்களையும் நீள-கட்டுரைகளையும் பஹாய் உலகம் இணையத்தளம் வழங்குகின்றது.
இது குறித்த ஒரு மின்னஞ்சல் சந்தா வழங்கப்படுகின்றது, மற்றும் புதிய கட்டுரைகள் பிரசுரிக்கப்படும் போது சந்தாதாரர்களுக்கு தகவலளித்திட இது வகை செய்யும்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1441/