பல்கலைக்கழக மாணவர்கள் சமுதாய மாற்றம் குறித்த உரையாடல்களில் ஈடுபடுகின்றனர்


பலகலைக்கழக மாணவர்கள் சமுதாய மாற்றம் குறித்த உரையாடல்களில் ஈடுபடுகின்றனர்


8 அக்டோபர் 2021


பஹாய் உலக நிலையம் – உறுதியின்மை மேலோங்கியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், உலகம் எத்திசையில் செல்கிறது, அதில் அவர்களின் நிலை என்ன என்பன போன்ற குறிப்பான பல கேள்விகளை இளைஞர்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் இத்தகைய கேள்விகளை கடந்துவர உதவுவதற்காக, உலகளாவிய செழுமைக்கான ஆய்வுக் கழகம் (ISGP) குவிந்த கவன உரையாடல்களில் ஒன்றிணைவதற்கான தளங்களை அவர்களுக்காக உருவாக்கி வருகிறது.

உலகளாவிய செழுமைக்கான ஆய்வுக் கழகத்தால் ஊக்குவிக்கப்படும் ஒன்றுகூடல்களில் சமுதாய மாற்றம் மற்றும் தொற்றுநோய் குறித்த கேள்விகளை உலகம் முழுவதிலுமிருந்து இளைஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

கெனடா நாட்டின் பங்கேற்பாளர் ஒருவர்: “ஒற்றுமை, நீதி போன்ற, பொருத்தமான ஆன்மீக கருத்தாக்கங்களை அடையாளங் காண்பதன் மூலம், தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து பிரதிபலித்தடவும் புதிய முன்னோக்குகளைப் பெறவும் எங்களின் உரையாடல்கள் எங்களுக்கு உதவி வருகின்றன.”

பெரும்பாலும், இணையதளத்தில் நடைபெறும் இந்த ஒன்றுகூடல்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்காக ISGP வழங்கும் ஒரு நான்கு வருட கருத்தரங்கு திட்டத்திற்கு நிரப்பமாக செயல்படுகின்றன.  தற்போது நிலவும் தொற்றுநோய் மற்றும் தற்போது சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கான அவர்களின் முயற்சியின் அடிப்படையில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கருத்தரங்குகளில் படிக்கப்பட்ட பல கருத்தாக்கங்களை இந்த ஒன்றுகூடல்களில் மறு ஆய்வு செய்கின்றனர்.

“தற்போதைய நிலைமைகளைப் பற்றிய எங்கள் பகுப்பாய்விற்கு தெளிவை வரவழைத்த கருத்துக்களில் ஒன்று பஹாய் போதனைகளிலிருந்து வருகிறது, இது மனிதகுலம் அதன் கூட்டு முதிர்ச்சியை அடைகிறது, அப்போது அதன் அத்தியாவசிய ஒற்றுமை அங்கீகரிக்கப்படும் மற்றும் புதிய சமூக கட்டமைப்புகள் வடிவம் பெறும்.  முதிர்ச்சியை நோக்கிய இந்த இயக்கம் சிதைவு, ஒருங்கிணைப்பு எனும் இரு செயல்முறைகளையும் உள்ளடக்கியது.  ஆனால் நாம் காண்பதெல்லாம் சிதைவு என்றால், நமக்கு ஒரு துல்லியமான காட்சி கிடைக்காது, மற்றும் ஒரு  நம்பிக்கையற்ற நிலையே எஞ்சியிருக்கும்.  எவ்வளவு நுட்பமானதாயினும், இந்தக் கலந்துரையாடல்களின் மூலம் முன்னேற்றத்தை அடையாளங்காணவும் சமூகத்திற்கு நாம் பங்களிக்கக்கூடிய வழிகளைப் பற்றி சிந்திக்கவும் கற்றுக்கொள்கிறோம், ”என்கிறார் பிரான்சிலிருந்து ஒரு பங்கேற்பாளர்.  

தென் ஆப்பிரிக்க ஒன்றுகூடல் ஒன்றில் பங்கேற்கும் இளைஞர்கள்

அவர்கள் எந்த நாட்டில் வசித்தாலும், சுகாதார நெருக்கடி பங்கேற்பாளர்களுக்கும் அவர்களது சகாக்களுக்கும் தனிநபருக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை மேலும் வெளிப்படுத்துகிறது.

பிரான்சில் இருந்து ஒரு பங்கேற்பாளர் இவ்வாறு கூறுகிறார்: “ஒரு நல்ல குடிமகனாக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதையும்,‘ சமூக ஒப்பந்தம் ’பற்றிய கருத்துகளையும் பலர் மறுபரிசீலனை செய்கிறார்கள். மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருப்பது மட்டும் போதாது. நமது அத்தியாவசிய ஒற்றுமையை உணர்ந்து இதை நனவாக்கும் செயல் மிகவும் மகத்தான ஒன்றைக் குறிக்கிறது.”

“சுகாதார நெருக்கடி நம் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை மேலும் அம்பலப்படுத்தியுள்ளது, அத்துடன் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நாம் அனைவரும் செலுத்த வேண்டிய பொறுப்பை இன்னும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது” என்று ஒரு பங்கேற்பாளர் கூறுகிறார்.

ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு மாணவர் இவ்வாறு கூறுகிறார்: “மனிதகுலத்தின் உயிர்மமான ஒற்றுமை, மனித ஆத்மாவின் மேன்மை, தங்களின் சொந்த உள்ளார்ந்த சாத்தியங்களை மேம்படுத்தவும் தங்களின் சமுதாயத்திற்குப் பங்களிக்கவுமான தனிநபரின் இரு மடங்கு தார்மீக நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் புதிய கருக்கோள்கள் தேவைப்படுகின்றன.

இத்தகைய கலந்துரையாடல்கள் அறிவியலுக்கும் மதத்துக்கும் இடையிலான உறவை பங்கேற்பாளர்கள் மேலும் ஆராய்வதற்கு வழிவகுக்கிறது, குறிப்பாக, வளர்ச்சியுற்று வரும் அறிவு மற்றும் நடைமுறை முறைமைகள், அறிவியலும் சமயமும்  தப்பெண்ணங்களையும் மூடநம்பிக்கைகளையும் ஒழிப்பதற்கும் மனித முன்னேற்றத்தைத் தூண்டுவதற்கும் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும்.

ISGP கருத்தரங்கில் பிரேஸில் நாட்டு இளைஞர்கள்

பிரேசிலில் இருந்து ஒரு பங்கேற்பாளர் இவ்வாறு கூறுகிறார்:  “வைரஸ் குறித்து சமூக ஊடகங்களில் ஏராளமான குழப்பம் விளைவிக்கும் தகவல்கள் பரப்பப்படுகின்றன. உலகை ஆய்வு செய்வதற்கான ஒரு வழிமுறையாக அறிவியலைப் பயன்படுத்தினால், மெய்மையைப் பற்றிய முடிவுகளை எட்டக்கூடிய முறைகள் மற்றும் கருவிகளைப் புரிந்துகொள்வோம்.  தொற்றுநோய்களின் போது இன்னும் மோசமாகிவிட்ட பொருளாதார சமத்துவமின்மை போன்ற பிரச்சினைகளுக்கு நீதி மற்றும் மனிதகுலத்திற்கிடையிலான இடைத்தொடர்பு போன்ற ஆன்மீகக் கொள்கைகள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைக் கருத்தில் கொள்ள சமயம் நமக்கு உதவுகிறது.”

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் (CAR) வழிநடத்துனர் ஒருவர், எவ்வாறு பங்கேற்பாளர்கள் தங்களின் சமூகங்களுக்கு சுகாதார நெருக்கடி குறித்து நம்பகமான தகவலை வழங்கிட முயல்கின்றனர் என்பதை விவரிக்கின்றார்.

“தொற்றுநோய்க்கு தீர்வு காண்பதில் அறிவியல், சமயம் ஆகிய இரண்டாலும் வழிநடத்தப்படும் ஒற்றுமையான நடவடிக்கை தேவை. உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் தொற்றுநோயைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி அறிந்துகொள்வது, புதிய தகவல்களை எடைபோடுவதற்கு ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்வது ஆகியவற்றின் மூலம் குழப்பம், நம்பிக்கையின்மை, தப்பெண்ணம் ஆகிய மக்களின் சிந்தனையைக் குழப்புகின்ற மற்றும் குழப்பத்தை பரப்புகின்ற தவறான தகவல்களை அகற்றுவதன் மூலம் நம் குடும்பங்களுக்கும் அண்டை நாடுகளுக்கும் உதவ, விஞ்ஞானத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை நாங்கள் கற்றுக் கொண்டிருக்கிறோம்.. அதே சமயம், பஹாய் போதனைகளில் ஆராயப்பட்ட ஆன்மீகக் கருத்துக்களால் நாம் வழிநடத்தப்படுகிறோம், குறிப்பாக ஒட்டுமொத்த மானிடமும் ஒரே உடலாக இருக்கின்றது எனும் புரிதல் மற்றும் ஒரு தேசத்தை பாதிக்கும் எதுவுமே மற்ற தேசத்தையும் பாதிக்கும்.”

ISGP ஒன்றுகூடலில் ஜோர்டான் நாட்டு இளைஞர்கள்

கூட்டங்களில், தற்போதைய சுகாதார நெருக்கடியைப் பற்றி விவாதிக்க சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது தேவையான எச்சரிக்கையையும் விவேகத்தையும் பங்கேற்பாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். “தொற்றுநோயைப் பற்றிய இணைய உரையாடல்கள் தன்மையில் முற்போக்கானவையாகவும் சமூகத்தின் தன்மைமாற்றத்துடன் தொடர்புடைய இளைஞர்களுக்கு கவர்ச்சிகரமானதாகவும் தோன்றுகின்றன” என்று இந்தியாவிலிருந்து ஒரு பங்கேற்பாளர் கூறுகிறார். “ஆனால் அவற்றில் சிலவற்றில் ஆழ்ந்த பாகுபாடான அரசியல் அடித்தளங்கள் உள்ளன, அவை விரைவாக முரண்பாடுகளுக்கு வழிவகுக்கும் மிகவும் ஆவேசமான விவாதங்களாக கட்டவிழக்கக்கூடும்.”

இந்தியாவில் இருந்து மற்றொரு பங்கேற்பாளர் கூறுகிறார்; “எங்கள் சமுதாய மெய்ம்மை நிலையை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்யும் ஒரு மொழியை, நம்பிக்கை மற்றும் சாத்தியங்களுடன் ஒன்றிணைத்து, எங்கள் எண்ணங்களையும் யோசனைகளையும் வெளிப்படுத்தும் விதம், தொற்றுநோய்களின் போது இன்னும் முக்கியமாகின்றது.”

இந்த கூட்டங்களின் போது விவாதிக்கப்பட்ட கருத்துகள் மற்றும் யோசனைகளை பல்கலைக்கழக மாணவர்கள் பிரதிபலிக்கையில், அவர்களும் சக மாணவர்களுடனும் மற்றும் பிறருடனும் பங்கேற்கக் கூடிய தங்களைச் சுற்றியுள்ள ஆக்கபூர்வமான உரையாடல்களை அவர்கள் அடையாளம் காண்கின்றனர். அதாவது சமூகத்தில் சமயத்தின் பங்கு, சிறார்கள் மற்றும் இளைஞர்களின் அறிவுசார் மற்றும் தார்மீக கல்வி, இளைஞர்கள், மற்றும் உண்மையான செழிப்பின் லௌகீக மற்றும் ஆன்மீக பரிமாணங்கள் போன்றவை.

மாறுபட்ட சமூக தளங்களில் பொது சொல்லாடல்களுக்குப் பங்களிப்பதன் மதிப்பை அங்கீகரிக்கும் அதே வேளையில், சமூக மட்டத்தில் சமூக மாற்றத்தை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதை பங்கேற்பாளர்கள் பார்க்கிறார்கள்.

“நம்மில் எவரேனும் சமூகத்தை எவ்வாறு மாற்ற முடியும் என்பதைப் பற்றி சிந்திப்பது மிகவும் பலக்கியமான ஒரு விஷயமாகும்” என்று ரஷ்ய பங்கேற்பாளர் ஒருவர் கூறுகிறார். எவ்வாறாயினும், ஓர் அண்டை அல்லது கிராம மட்டத்தில் மற்றும் அவர்களின் தொழில்களுக்குள் ஒன்றாகச் செயல்படும் மக்களின் முயற்சிகள் மூலம் மாற்றத்தை நாம் காணலாம். இந்த மட்டங்களில் சேவை மற்றும் ஒத்துழைப்பு பற்றி நாம் கற்றுக்கொள்ளலாம். ”

“ஒரு சவால் என்னவென்றால், பல நகர அண்டைப்புறங்கள் ஒரு சிறிய நகரத்தின் அளவைப் போலவே பெரியவை. ஆனால் தொற்றுநோய் நம் இடத்தை சுருக்கி, நம் அண்டையர்களை ஒரு புதிய பார்வையோடு பார்க்க வைத்துள்ளது. மாடிகளில் வாழும் மக்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது, சிறிய அளவிலான சமூக வாழ்க்கை எப்படி இருக்க முடியும் என்பதையும், வெவ்வேறு அமைப்புகளில் ஒற்றுமை எவ்வாறு நிர்மாணிக்கப்பட முடியும் என்பதையும் பற்றி நமக்கு ஒரு நுண்காட்சியை அளித்துள்ளது.”

கெனடா, மற்றும் உலகம் முழுவதும், இளைஞர்கள் தங்களி ISGP கருத்தரங்கு உபகரணங்களை தொடர்ந்து கற்பதற்கு தொடரான ஒன்றுகூடல்கள் நிகழ்கின்றன.

இந்த கலந்துரையாடல்கள் பங்கேற்பாளர்களுக்கு நம்பிக்கையூட்டுகின்றன; சமுதாயத்தின் சிதைவு சக்திகளின் மனச்சோர்வை ஏற்படுத்தும் விளைவுகளை எதிர்க்கவும், மனிதகுலத்தை ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கித் தூண்டும் ஒருங்கிணைப்பு சக்திகளுடன் அவர்கள் எவ்வாறு தங்கள் முயற்சிகளை இணைவாக்க முடியும் என்பதைப் பார்க்கவும் அக்கலந்துரையாடல்கள் உதவுகின்றன.

இந்த உரையாடல்களில் ஈடுபட்டுள்ள பலரின் உணர்வுகளை எதிரொலிக்கும் விதமாக, இந்தியாவில் இருந்து ஒரு பங்கேற்பாளர் கூறுகிறார்: “இது ‘இயல்புநிலை’ என்று அழைக்கப்படும் ஒரு காலத்திற்குத் திரும்புவதற்காக காத்திருந்து, நேரத்தை நழுவவிடுவதற்கான ஒரு தருணம் அல்ல. “இந்த காலகட்டத்தில் ஆக்கபூர்வமாக பங்களிக்க விரும்பினால் நிறையவே செய்ய வேண்டியிருக்கிறது.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1449/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: