டக்லஸ் மார்ட்டின், 1927-2020



8 அக்டோபர் 2021


பஹாய் உலக மையம் – உலக நீதிமன்றத்தின் முன்னாள் உறுப்பினரான டக்லஸ் மார்ட்டின், செப்டம்பர் 28, 2020 அன்று கனடாவின் டொராண்டோ நகரில் காலமானார். அவருக்கு 93 வயது.

உலக நீதிமன்றம் அனைத்து தேசிய ஆன்மீக சபைகளுக்கும் பின்வரும் செய்தியை அனுப்பியுள்ளது.

* * *

துக்ககரமான இதயங்கள் ஏற்கனவே துக்கத்தில் மூழ்கியுள்ளன. நாங்கள் மிகவும் நேசித்த, மிகவும் பாராட்டப்பட்ட முன்னாள் சகாவான டக்ளஸ் மார்ட்டின் மறைவை அறிவிக்கிறோம். ஓர் இளைஞராக பஹாவுல்லாவின் சமயத்தைத் தழுவிய அவர், பல தசாப்தங்களாக சிறப்பான சேவையில் தனது வாழ்க்கையைக் கடவுளின் சமயத்திற்காக அர்ப்பணித்தார். ஈரான் நாட்டில் பஹாய் சமூகத்தைத் தீவிரமாகப் பாதுகாப்பது உட்பட, அவரது பொது வழங்கல்களில் இருந்ததைப் போலவே, சமயத்தைத் தெளிவாகவும் தொலைநோக்குடனும் முன்வைப்பதற்காக அவர் பெற்ற சிறந்த ஆற்றல்கள் அவரது அறிவார்ந்த எழுத்துக்களில் பிரகாசித்தன. சமயத்தின் நிர்வாகத்தில் சுமைமிகுந்த பொறுப்புகளை நிறைவேற்றும் அதே வேளை இந்தப் பணிகளில் பெரும்பாலானவற்றையும் அவர் மேற்கொண்டார். கனடாவின் தேசிய ஆன்மீக சபை உறுப்பினராகக் கழித்த கால் நூற்றாண்டும் இதில் அடங்கும். அவ்வேளை பெரும்பான்மையாக அவர் அதன் செயலாளராக இருந்தார். வரலாறு சார்ந்த மகத்தான சக்திகளைப் பற்றிய அவரது பிரகாசமான அறிவாற்றல் மற்றும் அசாதாரணமான புரிதல், அவரது வலிமையான வெளிப்படுத்தும் சக்திகளுடன் இணைந்து, பஹாய் அனைத்துலக சமூகத்தின் மக்கள் தகவல் அலுவலகத்தின் பொது இயக்குநராக அவர் கழித்த ஆண்டுகளின் போது மிகவும் வெளிப்படையாக இருந்துடன், பன்னிரண்டு ஆண்டுகள் அவர் உலக நீதிமன்ற உறுப்பினராக பணியாற்றுவதற்கான முன்னோடியாகவும் இருந்தது. உறுதியான, சாதுர்யமான, மற்றும் கூரிய நுண்ணறிவால் ஆசீர்வதிக்கப்பட்ட அவரது இழப்பு ஆழமாக உணரப்படும்.

இப்போது தமது அன்பு மனைவி எலிசபெத்துடன் மீண்டும் ஒன்றிணைந்துள்ள அன்பார்ந்த டக்லஸ், அப்ஹா இராஜ்யத்தில் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படவும், அவருடைய ஒளிரும் ஆத்மா உயர்விலுள்ள எல்லையற்ற பகுதிகளில் நித்தியமாக மேம்பாடு காணக்கூடும் என்றும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள நண்பர்கள் சூழ்நிலைகள் அனுமதிக்கும் விதம் ஒவ்வொரு வழிபாட்டு இல்லத்திலும் வழிபாடுகள் உட்பட அஞ்சலிகள் ஏற்பாடு செய்வதன் மூலம் அவருக்கு மரியாதை செலுத்துமாறு அழைக்கப்படுகிறார்கள்.

உலக நீதிமன்றம்

மூலாதாரம்: https://news.bahai.org/story/1455/

அப்துல்-பஹா நினைவாலயத்தின் அடித்தலம் பூர்த்தியாகிவிட்டது


பஹாய் உலக மையம் – சில மாதங்களுக்கு முன்பு ‘அப்துல்-பஹா நினைவாலயத்திற்கான வடிவமைப்பு கருத்துரு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தக் கட்டிடத்தின் அஸ்திவாரங்கள் இப்போது போடப்பட்டு, கட்டுமானம் ஒரு புதிய கட்டத்தை நெருங்கியுள்ளது. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்தே இந்த திட்டம் தொடர்வதுடன், சம்பந்தப்பட்ட அனைத்து பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொருத்தமான சுகாதார நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன.

சில மாதங்களுக்கு முன்பான அப்துல்-பஹா நினவாலயத்தின் வடிவமைப்பு கருத்துருவின் அறிவிப்பைத் தொடர்ந்து, அக்கட்டிடத்தின் அடித்தலங்கள் நிறுவப்பட்டு, கட்டுமானம் ஒரு புதிய கட்டத்தை அணுகிக்கொண்டிக்கின்றது.

கடந்த மாதங்களில் ஆழமான நிலத்தடி தூண்களால் ஆதரிக்கப்படும் நிலையான அஸ்திவாரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஒரே இரவில் கான்கிரீட் ஊற்றப்பட்டு, 2,900 சதுர மீட்டர் பரப்பளவிலான ஒரு தளமேடை சமீபத்தில் தளத்தின் மையத்தில் போடப்பட்டது. இது மத்திய அடித்தல பணிகளை நிறைவு செய்தது.

ஒரே இரவில் கான்கிரீட் ஊற்றப்பட்டு, 2,900 சதுர மீட்டர் பரப்பளவிலான ஒரு தளமேடை சமீபத்தில் தளத்தின் மையத்தில் போடப்பட்டது. இது மத்திய அடித்தல பணிகளை நிறைவு செய்தது.

தளத்தின் பரந்த வட்டத்திற்குள், சரிவான தோட்டங்களுக்கு அடித்தலம் அமைக்கப்பட்டுள்ளது. அவை சுற்றிவரும் பாதையிலிருந்து உயர்ந்து, ‘அப்துல்-பஹாவின் புனித உடல் நல்லடக்கம் செய்யப்படவிருக்கும் இடத்தின் உச்சக்கட்டத்தை அடைகின்றன.

கட்டுமானத்தின் இறுதி கட்டங்களுக்குத் தேவையான அனுமதியைப் பெறுவதற்கான பல்கூறான செயல்முறை இப்போது நிறைவடைந்துள்ளது. நினைவாலயத்தின் வடிவமைப்பைச் செயல்படுத்த உள்ளூர் அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். இது மைய கட்டமைப்பை அடிவாரத்திற்கும் அஸ்திவாரத்திற்கும் மேலாக உயர்த்த அனுமதிக்கிறது.

கட்டுமானத்தின் இறுதி கட்டங்களுக்குத் தேவையான அனுமதியைப் பெறுவதற்கான பல்கூறான செயல்முறை இப்போது நிறைவடைந்துள்ளது. நினைவாலயத்தின் வடிவமைப்பைச் செயல்படுத்த உள்ளூர் அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். இது மைய கட்டமைப்பை அடிவாரத்திற்கும் அஸ்திவாரத்திற்கும் மேலாக உயர்த்த அனுமதிக்கிறது.
தளத்தின் பரந்த வட்டத்திற்குள், சரிவான தோட்டங்களுக்கு அடித்தலம் அமைக்கப்பட்டுள்ளது. அவை சுற்றிவரும் பாதையிலிருந்து உயர்ந்து, ‘அப்துல்-பஹாவின் புனித உடல் நல்லடக்கம் செய்யப்படவிருக்கும் இடத்தின் உச்சக்கட்டத்தை அடைகின்றன.

உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த முக்கியமான முயற்சியை மேற்கொள்வதில் பஹாய் உலகம் ‘அப்துல்-பா’வின் உதாரணத்திலிருந்து அதன் உத்வேகத்தைப் பெறுகிறது.

அக்காநகரத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், ‘அப்துல்-பஹா கார்மல் மலையில் ஒரு பொருத்தமான நினைவாலயத்தின் கட்டுமானத்தை வழிநடத்தினார். இந்த சன்னதி, இறுதியில் பாப் பெருமானார் திருவுடலின் நிரந்தர ஓய்விடமாக இருக்கும்.

“அந்தக் கட்டிடத்தின் ஒவ்வொரு கல்லும், அதற்குச் செல்லும் சாலையின் ஒவ்வொரு கல்லும், எல்லையற்ற கண்ணீருடனும் பெரும் செலவிலும் எழுப்பப்பட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளன,” என அப்துல்-பஹா குறிப்பிட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த முக்கியமான முயற்சியை மேற்கொள்வதில் பஹாய் உலகம் ‘அப்துல்-பா’வின் உதாரணத்திலிருந்து அதன் உத்வேகத்தைப் பெறுகிறது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1454/