“ஒரு பொருத்தமான நிர்வாகம்”: ஐநா’வின் 75’ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்க பி.ஐ.சி (BIC) ஓர் அறிக்கை வெளியிடுகிறது


“ஒரு பொருத்தமான நிர்வாகம்”: ஐநா’வின் 75’ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்க பி.ஐ.சி (BIC) ஓர் அறிக்கை வெளியிடுகிறது


8 அக்டோபர் 2021


B.I.C. நியூயோர்க், 22 அக்டோபர்   2020, (BWNS) — பஹாய் அனைத்துலக சமூகம் (பி.ஐ.சி.) ஐக்கிய நாடுகள் சபையின் 75ம் ஆண்டு நிறைவின் தொடக்கத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டு, ஐ.நா. அதிகாரிகள், உறுப்பு நாடுகளின் தூதர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் இதர சமூக பணியாளர்களைச் சர்வதேச அமைதிக்கான சமூகத்தின் முன்னெடுப்பை ஆய்வு செய்ய அழைப்புவிடுக்கின்றது.

ஐ.நா’வின் 75’வது ஆண்டுநிறைவை ஒட்டி பஹாய் அனைத்துலக சமூகம் (BIC)  ஓர் அறிக்கையை வெளிட்டது. அந்த நிகழ்ச்சிக்கு ஐ.நா. அதிகாரிகள், உறுப்பு நாடுகளின் தூதர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் இதர சமூக பணியாளர்களைச் சர்வதேச அமைதிக்கான சமூகத்தின் முன்னெடுப்பை ஆய்வு செய்ய அழைப்புவிடுத்தது.

“பொருத்தமானதொரு நிர்வாகம்: ஒரு நேரிய உலகளாவிய ஒழுங்கை நோக்கிய மனுக்குலமும் பாதையும்,” எனும் அவ்வறிக்கை செப்டம்பரில் வெளியிடப்பட்ட குறுகிய காலத்திலேயே அனைத்துலக அமைப்புகள் பற்றிய ஆழ்ந்த பிரதிபலிப்பையும்  ஆலோசிக்கவல்ல உரையாடல்களையும் தூண்டியுள்ளது.

அவ்வறிக்கையைப் பற்றி தமது கருத்தை வெளிப்படுத்திய ஸ்பெயின் நாட்டின் இராஜ்யப் பிரதிநிதியும் கெ.எ.ஐ.சி.ஐ.ஐ.டி-யின் துணை பொதுச் செயலாளருமான எச்.இ.அல்வாரோ அல்பகேட், “ [அறிக்கையில்] உலகளாவிய கூட்டணி குறித்த கருத்து நன்முறையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது….ஐ.நா. உறுப்பு நாடுகளை மட்டுமின்றி, உலகளாவிய கூட்டணியை ஏற்படுத்திட முக்கிய பங்காற்றும் பணியாளர்களை நான் பாராட்டுகின்றேன். அந்த உலகளாவிய கூட்டணிகளை ஏற்படுத்திடும் சமய பணியாளர்களின்மீது நான் கவனம் செலுத்த விரும்புகிறேன். மேம்பாடு, கல்வி, நலவாழ்வு இன்னும் பல துறைகளில் அவர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

“இன்று, ஐ.நா.வில், பல-சமய ஆலோசகர் பேரவை என்னும் ஓர் ஆக்கபூர்வமான அமைப்பைக் கொண்டுள்ளோம். ஐக்கிய நாடுகளின் சபையில் சமயங்களின் குரல் எழுப்பப்பட்டுவரும் நிலையில், அது ஒரு முதல் படியாகத் திகழ்கிறது. அப்பேரவை, பஹாய் சமூகம் மற்றும் அதன் பிரதிநிதியான, பாணி டுகால் அவர்களால் தலைமை வகிக்கப்படுகிறது. ஐ.நா. சபையில், அந்த முக்கியத்துவம் வாய்ந்த பேரவையின் வழி மேற்கொள்ளப்படும் நற்பணிகளுக்காக நான் பஹாய் சமூகத்தைப் பாராட்ட விரும்புகிறேன்.”

அவ்வறிக்கையைப் பற்றி தமது கருத்தை வெளிப்படுத்திய ஸ்பெயின் நாட்டின் இராஜ்யப் பிரதிநிதியும் கெ.எ.ஐ.சி.ஐ.ஐ.டி-யின் துணை பொதுச் செயலாளருமான எச்.இ.அல்வாரோ அல்பகேட், “ [அறிக்கையில்] உலகளாவிய கூட்டணி குறித்த கருத்து நன்முறையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது….அந்த உலகளாவிய கூட்டணிகளை ஏற்படுத்திடும் சமய பணியாளர்களின்மீது நான் கவனம் செலுத்த விரும்புகிறேன். மேம்பாடு, கல்வி, நலவாழ்வு இன்னும் பல துறைகளில் அவர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

அமைதிக்கான சமயங்களின் பொதுச் செயலாளரான அஸ்ஸா கராம், அவ்வறிக்கையைப் பற்றி: “அது இக்காலகட்டத்தைப் பற்றியும் இம்மண்ணிலுள்ள ஒவ்வொரு மனிதன் மற்றும் ஒவ்வொரு ஸ்தாபனத்தின் தேவையைப் பற்றியும் மிகவும் அழுத்தமாகப் பேசுகிறது.” அவர் மேலும்: ”நாம் ஒன்றுகூதுவதற்கான . . . தேவை குறித்து அவ்வறிக்கை தெளிவாகவும் தீர்க்கமாகவும் சொல்திறமிக்கதாகவும் இருப்பதானது என்னை மிகவும் கவர்ந்துள்ளது. உலகெங்கிலுமுள்ள எல்லா சமய பாரம்பரியங்களிலும் மூலாதாரமாக இருக்கும் அதனைப் புரிந்துகொள்ள பஹாய் சமயம் எப்பொழுதுமே எனக்கு ஊக்கமளிகின்றது:. . . நாம் அனைவரும் ஒன்று. . . இக்கிரகத்தில் நமது உயிர்வாழ்வு, இக்ககிரகத்தின் உயிர்வாழ்வு இந்த எளிய விஷயத்தை நமது முறைமைகளில்(systems) ஆழப் பதிக்க விரும்புகிறோமா இல்லையா என்பதைப் பொறுத்தேயிருக்கின்றது. நாம் ஒன்றுபட்டால் வெற்றிபெறுவோம். நமது எல்லைகளே முக்கியமென கருதுவோமானால் நமது சுய-அழிவைத் தேடிக்கொள்வோம்,” எனக் கூறினார்.

அவ்வறிக்கை, “ஓர் உலக சமுதாயத்தை தோற்றுவிக்க மனுக்குல மேம்பாட்டினை உயிர்ப்பூட்டும் விசாலமான அனைத்துலக மனப்போக்கின் மீது கவனம் செலுத்துகிறது,” என ஐ.நா. 2020 பரப்பியக்கத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினர் ஃபெர்குஸ் வாட் கூறுகிறார்.

திரு வாட்ஸ், அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள ஒற்றுமை குறித்த கருத்தாக்கம், “தேசிய, சட்ட, கலாச்சார, மற்றும் அரசியல் பாரம்பரியங்களை எவ்வாறு அரவணைக்கின்றது, ஆனால் ஒரு நெறிமுறை அடிப்படைக்குள் இருந்து, எங்குமுள்ள மக்களுக்கு அடிப்படையான பொது விழுமியங்களை நமக்கு நினைவூட்டுகின்றது: பரஸ்பர சார்புமை, நீதி குறித்த ஒரு பகிர்ந்துகொள்ளப்பட்ட நெறிமுறை, மற்றும் மனிதகுலம் ஒன்றென்பதை கண்டுணர்தல்.

“நடப்பிலுள்ள உருமாற்றம் ஒரு சீரான செயற்பாடு என்பதையும் அது ஒரு படிப்படியான செயற்பாடு என்பதையும் ஒவ்வொரு படியும் அடுத்த படியைச் சாத்தியமாக்கும் என்பதையும் அவ்வறிக்கை அங்கீகரிக்கின்றது.”

“ஒரு பொருத்தமான நிர்வாகம்: ஒரு நீதியான உலகளாவிய முறையை நோக்கிச் செல்லும் மானிடத்தின் பாதையும்” எனும் அவ்வறிக்கை, வெளியிடப்பட்ட சிறிது காலத்திற்குள் அனைத்துலக கட்டமைப்புகளின் பங்கு குறித்த ஆழ்ந்த பிரதிபலிப்பையும் சிந்தனையார்ந்த கலந்துரையாடலையும் தூண்டிவிட ஆரம்பித்துள்ளது.

அமைதி மற்றும் உலகளாவிய ஆட்சிமுறைக்கான மையத்தின் சொவைடா ம’ஆனி யுவிங், “ஒரே உயிரினமாக இருப்பது உலகளாவிய சவால்களுக்கு நம்மை ஆளாக்குகிறது என்பதை நாம் அறிய வருகிறோம். ஆனால், இப்பிரச்னைகளைச் சமாளிக்க தேவைப்படும் உலகளாவிய தீர்மானிக்கும் அமைப்பு துல்லியமாக இல்லை என்பதை நாம் உணர்கிறோம். அதனால்தான் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் அனைத்துலக சபை போன்ற ஒரு புதிய அமைப்பு தேவைப்படுகிறது,” என்கிறார்.

ஸ்டீம்சன் மையத்தின் நேரிய பாதுகாப்பு 2020 காரியத்திட்ட இயக்குநர், ரிச்சார்ட் பொன்ஜியோ, அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உலகளாவிய குடிமை நெறிமுறை குறித்த கருத்து உயரிய நிலையிலான அனைத்துலக ஒத்துழைப்பை நிர்மாணிப்பதற்கு அத்தியாவசியம் எனச் சிறப்பித்துக் கூறுவதோடு: “உலகளாவிய குடிமை நெறிமுறை பற்றி ஒவ்வொருவர்க்கும் சொந்த அபிப்ராயம் உண்டு. ‘பொருத்தமானதோர் ஆட்சிமுறை,’ எனும் அறிக்கையில் அது குறிப்பிடப்பட்டுள்ளதும் அந்த நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து எந்த பிரச்னையும் இல்லாமல் நாம் ஒன்றுகூடி, சவால்களைச் சமாளிக்க ஓர் உலகளாவிய அமைப்பு, ஸ்தாபனங்கள், விதிமுறைகள் மற்றும் கருவிகளை மட்டும் உருவாக்காமல், இந்த ஸ்தாபனங்களுக்கு அஸ்திவாரமாக இருக்கும் நெறிமுறை மற்றும் ஒழுக்கக் கோட்பாடுகளும் இருக்க வேண்டுமென நமக்கு சவால்விட்டிருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உலகளாவிய குடிமை நெறிமுறையின் மையத்தில் அது இருக்கிறது.

வருகின்ற கால் நூற்றாண்டு—ஐக்கிய நாட்டுச் சபையின் 75ம் ஆண்டு விழாவிலிருந்து அதன் நூற்றாண்டு வரைக்கும்—மனுக்குலத்தின் நற்பேற்றினை நிர்ணயிக்கும் இக்கட்டான காலகட்டமாக இருக்குமென (பி.ஐ.சி.)   பஹாய் அனைத்துலக சமூகம் எதிர்பார்க்கின்றது.

வருகின்ற கால் நூற்றாண்டு—ஐக்கிய நாட்டுச் சபையின் 75ம் ஆண்டு விழாவிலிருந்து அதன் நூற்றாண்டு வரைக்கும்—மனுக்குலத்தின் நற்பேற்றினை நிர்ணயிக்கும் இக்கட்டான காலகட்டமாக இருக்குமென (பி.ஐ.சி.)   பஹாய் அனைத்துலக சமூகம் எதிர்பார்க்கின்றது. உலகெங்கிலுமிருந்து 200 பங்கேற்பாளர்களை வரவேற்றிருந்த அந்தத் தொடக்க விழா, உலகளாவிய ஒத்துழைப்பு முறைமைகளை   வலுப்படுத்திடும் தேவை குறித்த உரையாடல்களுக்காக  பஹாய் அனைத்துலக சமூகம் வழங்கும்  பல பங்களிப்புகளில் ஒன்றான இதனை மேலும் ஆய்வு செய்வதற்கான அழைப்பாகவும் திகழ்கிறது.

பஹாய் அனைத்துலக சமூகத்தின் தலை பிரதிநியான பானி டுகால்: “இது தொடர்ச்சியான உரையாடல்களின் ஆரம்பமாகும். இது உலக அரசாங்கங்கள் மற்றும் மக்களிடையே சமத்துவம், ஒற்றுமை, நீடித்த அமைதி மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்ட ஐ.நா.வின் நூற்றாண்டு நிறைவுக்கு நம்மை கொண்டுவருவதற்கான மாற்றம் சார்ந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும். அடுத்த 25 ஆண்டுகளும் மானிடத்தில் வாழ்வில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1461/