ஆஸ்திரேலிய பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அச்சமூகத்தின் நூறாம் ஆண்டுவிழாவை குறிக்கின்றனர்


ஆஸ்திரேலிய பிரதமரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அச்சமூகத்தின் நூறாம் ஆண்டுவிழாவை குறிக்கின்றனர்


13 நவம்பர் 2020


கேன்பரா, ஆஸ்த்திரேலியா – ஆஸ்த்திரேலிய பிரமரான, ஸ்காட் மொரிஸன், மற்றும் பிற தேசிய தலைவர்களும் ஆஸ்த்திரேலிய பஹாய் சமூகம் அந்த நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டு நூறு வருடங்கள் ஆனதையொட்டி அச்சமூகத்திற்குத் தங்களின் கனிவான பாராட்டைத் தெரிவித்துள்ளனர்.

பிரதமரும் பிற பாராளுமன்ற உறுப்பினர்களும் பஹாய் சமயத்தின் நூறாம் ஆண்டு விழாவை பாராளுமன்ற மற்றும் பிற நிகழ்ச்சிகளில் குறிக்கின்றனர்.

“பஹாய் நம்பிக்கை உள்ளிணைவு, மரியாதை ஆகியவற்றைக் கொண்டதாகும்” என்று பிரதமர் கூறினார். “பஹாய் சமயத்தின் மக்கள் சமத்துவம், உண்மை, மரியாதை ஆகிய விழுமியங்களின் மூலம் நமது சமூக நன்மைக்குப் பங்களிப்பு செய்கிறார்கள். இந்த விழுமியங்கள் ஒரு வளமான, பன்முக கலாச்சார, பல சமய சமுதாயத்திற்கான நமது தேசிய உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன. … கடந்த 100 ஆண்டுகளாக பஹாய் சமூகம் நமது ஆஸ்திரேலிய சமூகத்தில் ஒரு தாராள மற்றும் மதிப்புடைய சமயக் குழுவாக இருந்து வருகிறது. சமயம் என்பது நம்பிக்கை சார்ந்தது மட்டுமின்றி அது இணைப்பைப் பற்றியதும் ஆகும். அது சமூகம் பற்றியது. இது பல வழிகளில் நம்மை ஒன்றிணைக்கிறது.”

இந்த நூறாம் ஆண்டைக் குறிக்கும் சவால்மிகு சூழ்நிலைகளைக் குறிப்பிட்டு, பிரதமர் தொடர்ந்து, “கோவிட்-19 தொற்றுநோயின் இந்த நேரத்தில் உங்கள் சமூகத்தை ஒட்டுமொத்தமாக பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான உறுதிப்பாட்டை மதிக்கும் அதே வேளையில், உங்கள் நம்பிக்கையை கொண்டாடுவதற்கும், உங்கள் சமூகத்தை இணைப்பதற்கும் தொடர்ந்து வழிகளைக் கண்டுபிடிப்பதற்கு பஹாய் சமூகத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். … நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கையும் சமய நம்பிக்கையின் முக்கியத்துவமும் நாம் ஒன்றாக எதிர்கொள்ளும் இந்த சவால்களினூடே நமக்கு வழிகாட்டட்டுமாக.”

பஹாவுல்லாவின் பிறப்பு சார்ந்த ஆண்டு மற்றும் ஆஸ்திரேலியாவில் பஹாய் சமூகத்தின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் பாராளுமன்ற நிகழ்ச்சிக்கான தமது செய்தியில், எதிர்க்கட்சித் தலைவரான அந்தோனி அல்பானீஸ்: “இந்த பூமியை நமது பொதுவான பந்தமாகப் பகிர்ந்து கொள்ளும் நாம் அனைவரும் ஒரே மனித குடும்பத்தின் சமமான உறுப்பினர்கள் என்று பஹாய் சமயம் கற்பிக்கிறது. இது நாம் பல வழிகளில் பகிர்ந்து கொள்ளும் ஒரு தத்துவமாகும்,” எனக் கூறினார்.

கான்பெர்ராவில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பஹாவுல்லா பிறந்த இருநூறாம் ஆண்டு விழாவிற்கான பாராளுமன்ற வரவேற்பறையில் பிரதமரின் பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. பாராளுமன்றத்தின் 14 உறுப்பினர்களும் அரசாங்க விருந்தினர்களும் இராஜதந்திரிகளும் உட்பட – சமய சமூகங்களும் பிற அமைப்புகளும் கலந்துகொண்டன — ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினர் நேரடியாகவும் பிறர் இணையதளத்தின் வழியாகவும்.

பிரதமர் வெளிப்படுத்திய உணர்வுகளில் மற்ற தேசிய தலைவர்களும் இணைந்து கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவரான அந்தோனி அல்பானீஸ் தமது செய்தியில், “இந்தப் பூமியை நமது பொதுவான பந்தமாகப் பகிர்ந்து கொள்ளும் நாம் அனைவரும் ஒரே மனித குடும்பத்தின் சமமான உறுப்பினர்கள் என்று பஹாய் சமயம் கற்பிக்கிறது. … உங்கள் சமூகத்தின் உணர்வுகள் மற்றும் அன்பின் மூலம் உங்கள் ஒற்றுமை மற்றும் சமூக ஒத்திசைவு கொள்கைகள், நிச்சயமாக மனிதகுலம் அனைத்திற்குமான மரியாதை, என கொண்டாடுவதற்கு உங்களுக்கு நிறையவே இருக்கிறது.”

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, வியாழக்கிழமையன்று “பஹாவுல்லாவின் பிறப்பைக் கொண்டாடுவதிலும், ஆஸ்திரேலியாவில் 100 வருடமான பஹாய் சமூகத்தை நினைவுகூர்வதிலும் (சபை) மகிழ்ச்சியடைகிறது,” என ஆஸ்திரேலிய செனட் சபை ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

பாராளுமன்ற உறுப்பினர் ஜேசன் ஃபாலின்ஸ்கி (இடமிருந்து மூன்றாவது) பஹாய் சமூகத்தின் பிரதிநிதிகளுடன் நூற்றாண்டு விழாவைக் குறிப்பதற்கு கடந்த வாரம் சிட்னியில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கான வருகை.

ஆஸ்திரேலியாவில் பஹாய் சமயத்தின் வரலாறு 1920’ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து ஜான் ஹென்றி ஹைட் டன் மற்றும் கிளாரா டன் ஆகிய இரு பஹாய்களின் வருகையுடன் தொடங்கியது. அவர்களின் ஆரம்பகால முயற்சிகளிலிருந்து, இந்த சமூகம் அதன் சமூகத்தின் லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் மக்களின் பெரும் பல்வகையான மக்களை உள்ளடக்கியதாக வளர்ந்துள்ளது.

நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் கடந்த வாரம் சிட்னியில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்திற்கு விஜயம் செய்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசன் ஃபாலின்ஸ்கி, “பஹாய்கள் தங்கள் நூற்றாண்டு விழாவை, மக்களை ஒன்றுகூட்டுவதன் மூலம் கொண்டாடுகிறார்கள். இது ஆஸ்திரேலியாவிற்கும் உண்மையில் உலகத்துக்கும் அவர்கள் அளித்த பங்களிப்பு குறித்து நிறையவே உரைக்கின்றது.

“நமது சமூகத்திற்கான உங்கள் பங்களிப்பு வளர்ந்து வருகிறது. … உங்கள் செய்தியும், ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் ஞானம் பற்றிய உங்கள் நம்பிக்கைகளும், நாம் அனைவரும், குறிப்பாக ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள சமூகங்களைப் பிரதிநிதிக்கும் நம் அனைவரும், இதை மனதில் பதித்துக்கொள்வது மட்டுமின்றி, தினசரியும் அதை நடைமுறைப்படுத்த முயலவும் வேண்டும்.”

ஆஸ்திரேலிய பஹாய் சமூகம் நாட்டில் அதன் நிறுவலின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது. 1920’ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து இரண்டு பஹாய்கள், ஜான் ஹென்றி ஹைட் டன் மற்றும் கிளாரா டன் ஆகியோரின் வருகையுடன் ஆஸ்திரேலியா பஹாய் சமயத்தின் வரலாறு ஆரம்பித்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: