
அப்துல் பஹாவின் நினைவாலயம்: கட்டமைப்பு அஸ்திவாரங்களுக்கு மேல் உயர்கின்றது
8 அக்டோபர் 2021
பஹாய் உலக மையம் – அப்துல்-பஹா நினைவாலயத்தின் அஸ்த்திவாரங்களின் பூர்த்திக்குப் பிறகு, முதல் செங்குத்தான அம்சங்கள் இப்பொழுது எழுப்பப்படுகின்றன. வட்ட வடிவவியலின் அடியில் அமைந்திருக்கும் கட்டமைப்பின் நிலத்தடி பகுதியும் வடிவம் பெறத் தொடங்குகிறது.
மத்திய சதுக்கத்தின் இருபக்கங்களிலும் உள்ள விளிம்புகளுக்கு ஸ்திரத்தன்மையை வழங்கும் கான்கிரீட் தளங்களைப் போடுவதற்கான பணி தீவிரமடைகின்றது.
கீழே வழங்கப்பட்டுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் தற்போது நடப்பிலிருக்கும் பணிகளின் ஒரு காட்சியை வழங்குகின்றன.

மத்திய அடித்தலங்கள் போன்றே, பல ஆதரவுத் தூண்கள் தரைக்குள் மிக ஆழமாக பதிக்கப்பட்டும், இப்போது இவை பல கட்டங்களிலான, நிலக்காட்சி விளிம்புகளுக்கான தளங்கள் அமைக்க வலுவூட்டப்பட்ட கான்கிரீட் அடுக்குடன் மூடப்பட்டிருக்கின்றன.

கட்டமைப்பின் ஒரு பகுதியின் நெருக்கக் காட்சி

சன்னதியின் வடிவமைப்பு மத்திய சதுக்கத்தை உள்ளடக்கிய இரண்டு சாய்வான விளிம்புகளை உள்ளடக்கியுள்ளது. பிளாசாவுக்கு மேலே உள்ள ஒரு சிக்கலான குறுக்கு நெடுக்கான தட்டி கட்டமைப்பின் உள் பகுதிக்கு விளிம்புகளை இணைக்கிறது. ஒவ்வொரு விளிம்புக்கும் ஒரு கான்கிரீட் தளம் தயாரிக்கப்பட்டு, மேலே அமரும் நிலப்பரப்புக்கு ஸ்திரத்தன்மையை வழங்குகிறது.

கான்கிரீட் தளங்களை மண்ணிலிருந்து பிரித்திட “முந்தைய வெற்றிட” தொகுதிகள் ஒன்றாகப் பொருத்தப்படுகின்றன.

“முந்தைய வெற்றிட” தொகுதிகள் பொருத்தப்பட்டவுடன், கான்கிரீட் ஊற்றப்பட வலுப்படுத்தும் கம்பிகள் போடப்படுகின்றன.

தளத்தின் ஒரு பிரிவு முடிந்ததும், அடுத்ததின் தயாரிப்பு தொடர்கிறது. விளிம்புகளுக்கான கான்கிரீட் தளங்களின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

அப்துல்-பஹா சன்னதியின் கட்டுமானம் படிப் படியாகத் தொடர்கிறது.
கட்டுரைகள் மற்றும் சுருக்கமான அறிவிப்புகள் மூலம் செய்திச் சேவை திட்டத்தின் முன்னேற்றங்களைத் தொடர்ந்து வழங்கிவரும், அவை வலைத்தளத்தின் சிறப்புப் பிரிவில் காணப்படலாம்.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1467/