ஐநா தீர்மானம் இரான் நாட்டில் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கின்றது


ஐநா தீர்மானம் இரான் நாட்டில் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கின்றது


19 நவம்பர் 2020


BIC நியூ யார்க் — ஐக்கிய நாட்டு பொது சபையின் செயற்குழு ஒன்று கடந்த புதன்கிழமையன்று, இரான் நாடு அதன் பஹாய் சமய உறுப்பினர்கள் உட்பட அதன் பிரஜைகள் அனைவர்பாலும் மனித உரிமைகளைக் கடைப்பிடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

நியூ யார்க்கில், ஐநா பொது சபை மண்டபம்

பொதுச் சபையின் மூன்றாவது செயற்குழு 79 வாக்குகள்  சாதகமாகவும் 32 வாக்குகள் எதிராகவும் பங்கெடுப்பில் கலந்துகொள்ளாத 64 வாக்குகளுடன் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தது.

தீர்மானம் ஈரானை “சட்டம் மற்றும் நடைமுறையாக, … பொருளாதார கட்டுப்பாடுகள் உட்பட சிந்தனை, மனசாட்சி, மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில், பஹாய் சமூகத்தின் உறுப்பினர்கள் உட்பட, கல்வி பெறுவதற்கான மறுப்பு மற்றும் கட்டுப்பாடுகள் உட்பட அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்க வேண்டும் … “தீர்மானம், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத மத சிறுபான்மையினருக்கு எதிரான பிற மனித உரிமை மீறல்களுக்கும் “முற்றுப்புள்ளி” வைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானில் உள்ள ஒட்டுமொத்த பஹாய் சமூகமும் அரசினால் ஆதரிக்கப்படும் துன்புறுத்தல்களுக்கு உட்பட்டுள்ளது, பஹாய் அனைத்துலக சமூகம் (BIC) இதைப் பல தலைமுறைகளாக அதன் ஒவ்வொரு உறுப்பினர்களையும் ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கை, மற்றும் மரணத்திலும் கூட பாதிக்கும் பல பரிமாணங்கள் கொண்ட ஒரு செயலாக விவரிக்கிறது.

BIC, “ஈரானிய அதிகாரிகள் பயன்படுத்தும் குறிப்பிட்ட தந்திரோபாயங்கள் சில நேரங்களில் மாறிவிட்டாலும், ஒரு சாத்தியமிக்க அமைப்பு எனும் முறையில் பஹாய் சமூகத்தை அழிக்கும் நோக்கம் ஈரானில் முழு ஆற்றலுடன் தொடர்கிறது.”

ஐக்கிய நாடுகள் சபை BIC’யின் முதன்மை பிரதிநிதி பானி டுகால், “அதிகாரிகள் உன்னிப்பான கவனத்துடன் பல்வேறு வழிகளில், பஹாய்களை பொதுத் துறையிலிருந்து விலக்குவதற்கும், தங்கள் நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதைத் தடுப்பதற்கும், பொருளாதார ரீதியாக அவர்களை வறுமைப்படுத்துவதற்கும், அவர்களின் அறிவுசார் முன்னேற்றம், அவர்களின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தடயங்களை அழிப்பதுடன், அவர்களைப் பற்றிய தவறான தகவல்களையும் பரப்பி, அவர்களுக்கு எதிராக வெறுப்புமிக்க ஒரு சூழலை உருவாக்குவதற்கு அவர்களுக்கு எதிராக பொதுமக்களைத் தூண்டுவதன் மூலம், இதைச் செய்துவருகின்றனர்.

“ஈரான் நாடு இந்த தீர்மானத்தில் உள்ள பரிந்துரைகளுக்கும், அதன் குடிமக்களின் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான சர்வதேச சமூகத்தின் கோரிக்கைக்கும் இனி கவனம் செலுத்தும் என்று நம்புவோமாக.”

தீர்மானம் டிசம்பர் மாதம் பொதுச் சபையின் பிரதான அமர்வில் உறுதிப்படுத்தப்படும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1468/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: