கொங்கோ நாட்டின் தேசிய வழிபாட்டு இல்லத்திற்கான நிறைவடைந்துள்ள அடித்தலத்தின் விண்வெளி காட்சி
கின்ஷாசா, காங்கோ ஜனநாயக குடியரசு – ஆப்பிரிக்காவில் இரண்டு பஹாய் வழிபாட்டு இல்லங்களை நிர்மாணிப்பதில் சமீபத்திய வாரங்களில் நிலையான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசில், வழிபாட்டு இல்லத்தின் அஸ்திவாரங்களுக்கான அகழ்வாராய்ச்சி முடிந்த எட்டு வாரங்களுக்குப் பிறகு, மத்திய கட்டுமானத்தின் தளத்தை உருவாக்கும் வலுவூட்டப்பட்ட கான்கிரீட் அடுக்கு முடிக்கப்பட்டுள்ளது. தளத்தில் கூடுதல் கட்டிடங்களின் பணிகள் சீராக முன்னேறி வருகின்றன.
இதற்கிடையில், 3,000 கிலோமீட்டர் தொலைவில், கென்யாவின் மாத்துண்டா சோய்’இல் உள்ள உள்ளூர் வழிபாட்டு இல்லத்தின் கட்டுமானம் இறுதி கட்டத்தை அடைகிறது. கோயிலின் வெளிப்புறம் கிட்டத்தட்ட முழுமை அடைந்துள்ளது, மைதானத்தில் துணை கட்டமைப்புகளும் நிறைவடைந்துள்ளன. அப்பகுதியின் குடியிருப்பாளர்கள் கோயிலைச் சுற்றியுள்ள தோட்டங்களைத் உருவாக்குவதற்கு உதவுகிறார்கள், பிரார்த்தனைக்காக அவர்கள் தவறாமல் கூடிவருவதால் பணிகளை பயபக்தியுடன் மேற்கொள்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாக இரு கோயில்களின் கட்டுமான முன்னேற்றம் கீழே உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் ஆராயப்படுகிறது.
கின்ஷாஷா, கொங்கோ ஜனநாயக குடியரசு
வலுவூட்டப்பட்ட கான்கிரீட் தரை அடுக்கைக் கட்டுவதற்கான தயாரிப்பில் கோயிலின் முழு தளத்திலும் ஈரத் தடை வைக்கப்பட்டுள்ளது. அஸ்திவாரங்களை சுற்றி, மத்திய பகுதிக்கு வெளியே உடனடியாக நிலத்திற்கு மண் வேலைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
கோயிலின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் வியாழக்கிழமை புதிதாக முடிக்கப்பட்ட தரை அடுக்கில் இந்த திட்டத்தின் முக்கிய மைல்கல்லைக் குறிப்பதற்கு ஒன்றுகூடினர்
கின்ஷாசாவில் உள்ள வழிபாட்டு மன்றத்தின் நுழைவாயிலுக்கு அருகில் வருகையாளர்கள் மையம் கட்டப்பட்டு வருகிறது.
வருகையாளர் மையத்திற்கான அடித்தளங்கள் ஏற்கனவே தளத்தில் இருக்கும் மரங்களைச் சுற்றி கட்டப்பட்டுள்ளன, அவை முற்றத்தை அழகுபடுத்துகின்றன.
பார்வையாளர்களின் மையத்திற்கான தரை அடுக்குகள் இப்போது (சிமென்ட்) ஊற்றப்படுகின்றன.
தளத்தின் மற்ற இடங்களில், தற்போதுள்ள பல கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இங்கே காண்பிக்கப்படும் ஒரு கட்டிடம், கட்டுமான அலுவலகமாக பயன்படுத்தப்படுகிறது. எதிர்காலத்தில், இந்த கட்டிடங்கள் கல்வி வசதிகளாகவும், காங்கோ ஜனநாயக குடியரசின் தேசிய பஹாய் ஆன்மீக சபைக்கான அலுவலகங்களாகவும் பயன்படுத்தப்படும்.
மாத்துன்டா ஸோய், கென்யா
கென்யாவின் மாத்துண்டா ஸோய்’இல் உள்ள உள்ளூர் பஹாய் வழிபாட்டு இல்லத்தின் வெளிப்புறம் நிறைவடையும் தருவாயில், கோயிலின் வடிவமைப்பின் நேர்த்தியான வடிவம் தெரிய ஆரம்பிக்கின்றது. இந்த வடிவமைப்பு அப்பிராந்தியத்திற்கு பாரம்பரியமான குடிசைகளால் தூண்டப்பட்டுள்ளது. வெளிப்படுத்தப்பட்ட கூரை விட்டங்கள் மாளிகையின் ஒன்பது பக்கங்களையும் முன்னிலைப்படுத்துகின்றன.
கோயில் கூரையின் ஒன்பது பக்கங்களிலும் ஸ்கைலைட்டுகள் நிறுவப்பட்டுள்ளன, மேலும் கூரை ஓடுகள் வைக்கப்பட்டு கென்ய கலாச்சாரத்திற்கு நன்கு தெரிந்த ஒரு வைர வடிவ மையக்கருத்தை உருவாக்குகின்றன.
கோயிலின் ஒன்பது கதவுகளின் உட்புறமும் வெளிப்புறமும் மரம் மற்றும் பேஸ்டரால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதவையும் சுற்றியுள்ள பின்னல் வேலைகள் மாதுண்டா ஸோய் பகுதியில் உள்ள ஒரு பட்டறையில் தயாரிக்கப்பட்டு, கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ம்வூலே மரத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
வரவேற்பு மையத்தின் கட்டுமானம் மற்றும் தளத்தில் உள்ள பிற வசதிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன, மேலும் அவை விரைவில் கோயில் தளத்திற்கு வருபவர்களை வரவேற்க தயாராக இருக்கும்.
கோவில் தலத்திற்கான பிரதான வாயில் தயாராகின்றது
கோயிலைச் சுற்றியுள்ள தோட்டங்களுக்கான ஏற்பாடுகள் உட்பட, தளத்தின் பல்வேறு பணிகளுக்கு உதவுவதில் உள்ளூர்வாசிகள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
பல தலைமுறை அனுபவமுள்ள நிலத்தை பன்படுத்தும் விவசாய சமூகமான மாதுண்டா ஸோயில் வசிப்பவர்கள் கோயில் மைதானத்தை உற்சாகத்துடன் பராமரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
பஹாய்கள் வருடாந்திர உண்ணா நோன்பு காலத்தைத் தொடங்குகிறார்கள்
8 அக்டோபர் 2021
(இது 1 மார்ச் 2007’இல் வெளிவந்த செய்தி. அதன் உள்ளடக்கம் இன்னமும் தொடர்புடையதாக இருப்பதால் மீண்டும் வெளியிடப்படுகிறது)
ஹைஃபா, இஸ்ரேல் – வெனிசுவெலா கல்லூரி மாணவர் ஆஸ்கார் கடந்த ஆகஸ்ட் மாதம் பஹாய் சமயத்தில் சேர்ந்தார், இந்த மாதம் முதல் முறையாக உண்ணாவிரதத்தை கடைபிடிக்கவிருக்கின்றார்.
அவர் அதைப் பற்றி தனது தாயாரிடம் சொன்னபோது, அவர் பதற்றமடைந்தார். தமது மகன் வயதில் சிறிய இளைஞன், அவனுடைய உடல்நிலை பாதிக்கப்படும் என்று அவர் கவலைப்பட்டார்.
“ஆனால் நோன்பு நோற்றல் ஒரு பாக்கியம்!” ஆஸ்கார் தன் தாயிடம் உறுதியாகச் சொன்னான். “இது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே, இது கடவுளின் கட்டளை.”
அவரது தாயார் வெளிப்படையாக புரிந்து கொண்டார், திரு. ஆஸ்காரின் கூற்றுப்படி, அவர் சிரித்தவாறு தமது சம்மதத்தை தெரிவித்தார்.
உலகெங்கிலும், பஹாய்கள் வயது 15 முதல் 70 வரை மார்ச் 2 ஆம் தேதி தங்கள் வருடாந்திர 19 நாள் உண்ணா நோன்பைத் தொடங்குகின்றனர்; ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை உணவு மற்றும் பானங்களைத் தவிர்க்கின்றனர். தங்கள் சமயத்தின் ஸ்தாபகர் பஹாவுல்லாவினால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து அவர்கள் அதைச் செய்கிறார்கள். நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஒரு சில பிரிவுகளுக்கு விலக்குகள் உள்ளன.
“இது முந்தைய மதங்களில் இருந்து வந்த உண்ணாவிரதத்தின் அடிப்படைக் கொள்கையின் பரிணாமம்” என்று “கித்தாப்-இ-அக்டாஸின் சட்டங்கள்” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தின் இணை ஆசிரியர் பஹாரீ ரூஹானி மானி கூறினார்.
“நோன்புக் கட்டளையின் சான்றுகள் ஜோராஸ்ட்ரிய சமயத்தைத் தவிர்த்து கிட்டத்தட்ட நடப்பிலுள்ள எல்லா மதங்களிலும் காணப்படுகின்றன, இது உண்ணாவிரதத்தை உறுதிப்படுத்துகிறது” என்று புத்தகம் கூறுகிறது.
கடவுளின் சட்டங்களைப் பற்றி வகுப்புகள் கற்பித்துள்ள திருமதி மா’ஆனி, பஹாவுல்லா மற்ற மதங்களை விட உண்ணா நோன்பை எளிதாக்கியுள்ளதாக உணர்கிறேன் என்று கூறுகிறார்.
உதாரணமாக, பாவநிவிர்த்தி நாளான யொம் கிப்பூரில் (Yom Kippur) யூதர்கள் ஒரு நாள் மட்டுமே நோன்பு நோற்கிறார்கள், ஆனால் அவர்கள் ஒரே நேரத்தில் 24 மணி நேரத்திற்கும் மேலாக உணவு மற்றும் பானம் தவிர்த்து விடுகிறார்கள் என்று அவர் விளக்கினார்.
முஸ்லீம் பாரம்பரியம் பஹாய் நடைமுறைக்கு ஒத்ததாக இருக்கிறது, தவிர ஒவ்வொரு நாளும் முஸ்லிம்கள் விடியற்காலை முதல் சாயங்காலம் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள் – இது சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை நோன்பிருப்பதற்கும் சற்ற நீண்ட காலமாகும். மேலும், முஸ்லிம்கள் சந்திர நாள்காட்டியைப் பின்பற்றுகிறார்கள், அதாவது சில நேரங்களில் கோடை காலத்தில் நாட்கள் நீடிக்கும் மற்றும் மிகவும் சூடாக இருக்கும் போது விரதம் நிகழும் என திருமதி மானி கூறினார்.
பஹாய் நோன்பு எப்போதும் மார்ச் மாதத்தில் விசுவத்திற்கு சற்று முன்னதாகவே வருகிறது, எனவே உலகின் பெரும்பாலான பகுதிகளில் சுமார் 12 மணிநேர நோன்பே மட்டுமே உள்ளது. நாட்கள் கணிசமாக நீளமாக இருக்கும் சில இடங்களில், நம்பிக்கையாளர்கள் கடிகார நேரத்தைப் பின்பற்றி, சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை 12 மணிநேரம் நோன்பிருக்கலாம்.
“துன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே நாம் கஷ்டப்படுவதை பஹாவுல்லா விரும்பவில்லை” என்று திருமதி ம’னி கூறினார்.
உண்ணாவிரதம் குறியீடாகும் – பஹாய் திருவாக்குகளின்படி, “சுயநல மற்றும் சரீர ஆசைகளிலிருந்து விலகியிருத்தலை அது நினைவூட்டுகிறது”.
“இது அடிப்படையில் தியானம் மற்றும் பிரார்த்தனை, ஆன்மீக மீளுருவாக்கம் ஆகியவற்றின் காலமாகும், இதன் போது நம்பிக்கையாளர் தனது அக வாழ்க்கையில் தேவையான மறுசீரமைப்புகளைச் செய்திட முயல வேண்டும், மேலும், அவரது ஆத்மாவில் மறைந்திருக்கும் ஆன்மீக சக்திகளைப் புதுப்பித்து புத்துயிர் பெற வேண்டும்” என திருவாக்குகள் கூறுகின்றன.
கூடுதலாக, பஹாவுல்லா கூறுகையில், ஏழைகளின் துன்பங்களை மக்கள் நன்கு அறிந்துகொள்ள உண்ணாவிரதம் உதவுகிறது.
பஹாவுல்லாவின் மகனும் நியமிக்கப்பட்ட வாரிசுமான அப்துல்-பஹா கடவுளின் தீர்க்கதரிசிகளான – மோசஸ், இயேசு மற்றும் பஹாவுல்லா உட்பட அனைவருமே எவ்வாறு நோன்பு நோற்றார்கள் என்பதை விவரித்துள்ளார். ஆதலால், பஹாய் உண்ணாவிரத காலத்தில் நம்பிக்கையாளர்கள் ஒரே சமயத்தில் ஒரே விஷயத்தை அனுபவிப்பதன் மூலம் முக்கிய மதங்களின் ஸ்தாபகர்களுடன் நெருக்கமாகிட அனுமதிக்கிறது என அவர் கூறினார்.
பஹாய் நோன்பைப் பற்றிய ஒரு கையேட்டின் தொகுப்பாளரான டுவேய்ன் எல். ஹெர்மன், சாப்பிடுவதைத் தவிர்ப்பது மட்டுமே இங்கு அர்த்தமல்ல என்று குறிப்பிடுகிறார். விஷயம் “பற்றின்மை எனும் உள் ஆவி பற்றியதாகும், இதில் சாப்பிடுவது (ஒரு) வெறும் சின்னம் அல்லது வெளிப்புற பிரதிபலிப்பு மட்டுமே.”
வெனிசுவெலாவில் உள்ள திரு ஆஸ்கார் தனது சொந்த புதிதாக அடைந்துள்ள புரிதலை சுருக்கமாகக் கூறியது போல், “உண்ணா நோன்பின் போது, கடவுளை நன்கு அறிந்துகொள்ள நாம் ஒரு முயற்சியை நாம் மேற்கொள்கிறோம்.”