அப்துல்-பஹா: அப்துல்-பஹாவும் யூத பாதிரியாரும்


அப்துல் பஹாவும் யூத பாதிரியாரும் (எழுத்து- வில்லார்டு பி. ஹெட்ச்)

அப்துல் பஹாவின் வார்த்தையானது எப்படி “அவரது திருவாக்காகவும், இறைவனுடைய சக்தி மற்றும் அவரது வெற்றியாகவும்” விளங்கி வந்தது என்பதைக் கீழ் காணப்படும் சம்பவக் கதை எடுத்துரைக்கின்றது. அது 1912ம் ஆண்டின் இலையுதிர் காலம்.

450, சட்டர் தெரு, சான் பிராசிஸ்கோ நகர் எனும் முகவரியில், அமைந்திருந்த யூதர்களின் இமானுவெல் எல் மறுமலர்சி தேவாலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. தேவாலயத்தின் பால்கனியின் தரையில் அடியேன் உட்கார்ந்துகொண்டு அங்கு நடந்து கொண்ருந்தவற்றைப் பார்க்கவும், பேசப்பட்டதைக் கேட்கவும் முடிந்தது.

பிரதான மேடையில் நான் கண்ட காட்சி, பண்டைய காலத்து ஓவியம் ஒன்றை நினைவுபடுத்துவதாக இருந்தது. தலைப்பாகை அணிந்த நிலையில், ஒரு மகான் போன்று காட்சியளித்த அப்துல்-பஹா உரையாற்றிக் கொண்ருந்தார்; அவரது ஒளிமிகு பாரசீக காலஅளவுகளின் உயிராற்றலானது அவர் மீது மட்டுமே அனைவரது கவனமும் தீவிரமாக மையப்பட்டிருக்கும் அளவுக்கு சக்திமிக்கதாக இருந்தது; அவர் பேசிய வார்த்தைகளின் மொழிபெயர்ப்பைப் பற்றி எவரும் கருதிடாத அளவுக்கு அந்த உயிராற்றல் சக்திமிக்கதாயிருந்தது.

மக்களின் முன்னேற்றத்திற்கு ஓர் உன்னத வழிமுறையாகத் திகழ்வது சமயமே என்பதை அப்துல் பஹா மறுத்தொதுக்கவியலாத தர்க்க ரீதியில் நிரூபித்துக் கொண்ருந்தார். “மனிதன் மீது சமயம் நித்திய வாழ்வை வழங்கி, தார்மீகப் பண்புகள் எனும் பாதையில் அவனது கால்களுக்கு வழிகாட்டுகின்றது. முடிவுறா மகிழ்ச்சியின் கதவுகளை அது திறந்து விட்டு, மானிட இராஜ்யத்தின் மீது என்றென்றும் நீடித்து நிலைக்கவல்ல நன்மதிப்பை வழங்குகின்றது. மனிதகுலத்தின் வரலாற்றில் அனைத்து நாகரிகத்தின் அடிப்படையாக சமயம் இருந்து வந்துள்ளது,” என அவர் கூறினார். “ஆபிரஹாமிய குடும்பம் மற்றும் அதனைத் தொடர்ந்து வந்துள்ள யூத சிறுதூதர்களின் வாழ்வுகளில் ஏற்பட்ட சம்பவங்கள்; அவர்களுடைய புகழ்மிகு வரலாறு மற்றும் பேஃரோ மன்னனின் ஆட்சியின் கீழ் நிலவிய அடிமைத்தனம்; எகிப்திய மக்களால் ஆட்டிடையர் என அழைக்கப்பட்ட தூதர் மோஸஸ் அவர்களால் அம்மக்கள் காப்பாற்றப்பட்ட சம்பவம்; புகழொளிமிக்க சோலமன் நாகரிகம் எனும் தெய்வீக ஸ்தாபனத்தை அமைத்திடும் அளவுக்கு அவர் எப்படி சமயமெனும் சக்தியினால் உதவப்பட்டார் என்பதையெல்லாம் எடுத்துரைத்து அவர் தமது வாதத்தைச் சித்தரித்துக் கொண்டிருந்தார். “சமயம் என நான் குறிப்பிடும்போது சமயத்தின் மெய்நிலையையே நான் குறிப்பிடுகின்றேன்.” கண்மூடித்தனமாக நம்பிக்கைகள் அழிவைக் கொண்டு வருவதுடன், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு இழிவைக் கொண்டு வந்து, அம்முன்னேற்றத்திற்குத் தடையாகவும் அமைந்து விடுகின்றது. “இறைவனுடைய சட்டத்தின் அடிப்படைகளை அவர்கள் ஆட்டங்கொள்ளச் செய்தபோது, நெபுச்சாட்நேசர் அவர்களுடைய நாட்டின் மீது படையெடுத்து புனித பூமியை வென்று விட்டான்….” எழுபதாயிரம் யூதர்கள் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்… ரோமாபுரியின் கி.பி.70ம் ஆண்டின் தளபதி டைட்டஸ் ஆட்சியின் கீழ், புனித பூமி வெல்லப்பட்டு சூறையாடப்பட்டது.”

5 மே 1912’இல் அப்துல்-பஹா பிலிமத் கொங்கிரிகேஷனல் சர்ச்’இல் உரையாற்றுகின்றார்.

அப்துல் பஹா தமக்கே உரிய மாட்சிமையுடனும், வலிமையுடனும் பின்வரும் கருத்தைக் கூறினார்; “உண்மை ஒன்றே ஆகும் என்பதனால், எல்லா சமயங்களின் அப்படையும் ஒன்றே. சமயம் என்பது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலில், எல்லா இறைத்தூதர்தகளினாலும் கூறப்படும் அதே அதிமுக்கிய சமய போதனைகள்; இரண்டாவதாக, தமது காலத்தினுடைய மக்களின் தேவைக்காக ஒவ்வோர் இறைத்தூதரும் விதிக்கும் விதிமுறைகள்.”

அதன் பிறகு, புனித இயேசு கிறிஸ்துவானவர் மோஸஸின் அதி உன்னத நண்பர் என்பதனையும், மோஸஸின் ஸ்தானத்தை கிறிஸ்து நிலைநாட்டினார் என்பதையும், இந்தியாவிலோ, அண்டை நாடான ஐரோப்பாவிலோ மோஸஸ் யார் என்பது முன்பு தெரிந்திருக்கவில்லையென்பதையும், கிறிஸ்துவ திருநூலையும், மோஸஸஸையும், இஸ்ரேலிய திருத்தூதர்களையும் ஏற்றுக் கொண்டதனால் தோஃரா எனும் புனித நூலை இயேசு கிறிஸ்து அங்கீகரித்தார் என்பதையும், பழைய ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டதனால் கிறஸ்துவர்கள் எதனையும் இழக்கவில்லை என்பதையும், இயேசு கிறிஸ்து, ஒரு யூத தாயாரின் மகன் என்பதையும், அவர் இயற்கையாகவே யூதர்களின் நண்பர் என்பதையும் அப்துல் பஹா மிகச் சக்தி வாய்ந்த நிலையில் சித்தரித்தபோது, அவரது உரை எனும் சமுத்திரம் மிக ஆழமானப் பகுதிகளிலும் பிரவேசித்தது.

அக்காட்சி மிகத் தத்ரூபமாக இருந்தது. தேவாலயத்தின் மிக இளமையானவரும், கனத்த உடலைக் கொண்டவருமான பாதிரியார், இலையுதிர்காலம் வெப்பமாக இல்லாதிருந்தபோதும், தனது நெற்றியில் அரும்பியிருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துக் கொண்டார். அங்குக் கூடியிருந்த ஒரு யூதர் கூட அங்கு வழங்கப்பட்ட உரையை மறுத்துப் பேசவில்லை.

மோஸஸ் மற்றும் கிறிஸ்துவின் ஸ்தானத்தை தூதர் முஹம்மது நிலைநாட்டினார் என்பதையும், “வெளித்தோற்றத்திற்கு முஹம்மது கல்லாதவராகவும், இறைவனுடைய புனித நூல்களைப் பற்றி அறியாதவராகவும் தோன்றியபோதிலும் கூட” காட்டு மிராண்டித்தனம் மிக்க அராபிய உலகை மாற்றி அராபிய நாடுகள் முதல் ஸ்பெய்ன் வரை மற்றும் ஐரோப்பிய கல்வியில் செல்வாக்குச் செலுத்தவல்ல ஒரு மாபெரும் நாகரிகத்தைத் தூதர் முஹம்மது ஸ்தாபித்தார். இம்மாபெரும் இறைத்தூதர்களில் சச்சரவுமிக்க நம்பிக்கையாளர்கள்தான் தங்களுடைய சமயங்களின் ஸ்தாபகர்களுடைய செய்தியைத் திசைமாற்றி, குற்றம் சுமத்தும் போக்குக் கொண்ட மதவெறியை ஏற்படுத்தி விட்டனர் என அப்துல் பஹா பிறகு எடுத்துரைத்தார்.

எல்லா சமயங்களினுடைய இறைத்தூதர்களை ஏற்றுக் கொள்வதை பஹாய் சமயத்தின் ஸ்தாபகரான பஹாவுல்லா பாராட்டியுள்ளதுடன், அச்செயலில் ஈடுபட்டவர்கள் துவேஷ உணர்வு ஏதுமற்ற நிலையில் மனிதகுலத்தின் பொதுநலனை நிலைநாட்டுபவர்கள் எனவும் கூறியுள்ளார் என்பதை எடுத்துரைத்த அப்துல் பஹா, தாம் மோஸஸை ஏற்றுக் கொள்ளும் செயலாகப்பட்டது, எல்லா இறைத்தூதர்களையும் ஏற்றுக் கொள்வதற்குச் சமமாகும் என்பதனால், தாம் எப்விதத் தயக்கமின்றி மோஸஸை ஏற்றுக் கொள்ளதாக தெளிவாகக் கூறினார்.

அவரது அந்த உரையைக் கேட்டு ஆழமாக மனம் நெகிழ்ந்த கூட்டத்தினர், அதன் பிறகு தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பினர்……..

இந்நிகழ்ச்சி முடிந்த சிறிது காலத்திற்குள், அத்தேவாலயம் அமைந்திருந்த தெருவுக்கு நேர் எதிர்புறத்தில் இருந்த ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தின் இயக்குனர்கள், தங்களுடைய பழைய தேவாலாயம் இருந்த அதே இடத்தில் ஒரு புதிய தேவாலயத்தை எழுப்ப தீர்மானித்தனர்; அதன் காரணமாக, அப்புதிய கட்டடத்தை எழுப்புவதற்கு முன் அவர்கள் பழைய கட்டத்தை உடைக்க வேண்டியிருந்தது. அந்நிலையில், புதிய கட்டடம் கட்டப்படுகின்ற வரை, அங்கு வழிபாட்டுக்காக வருகின்ற கிறிஸ்துவர்கள் வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக ஓர் இடம் தேவைப்பட்டது. எனவே, இயேசு கிறிஸ்துவின் மெய்நிலையை எந்த யூத தேவாலயத்தில் அப்துல் பஹா நிலைநாட்டியும் முன்னெடுத்தும் பேசினாரோ, அதே தேவலாயத்தின் யூதகுருவான மார்ட்டின் ஏ. மேயர் அவர்கள் (அவரது ஆன்மா சாந்தியடையுமாக), நெடு நீண்ட காலத்திற்கு யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்குமிடையே நிலவி வந்த துவேஷ உணர்வுகளிலிருந்து முற்றாக விடுபட்ட நிலையில், தனது யூத தேவாலயத்தில் ஒவ்வொரு ஞாற்றுக் கிழமையிலும் தங்களுடைய வழிபாட்டை நடத்திக் கொள்ளுமாறு கிறிஸ்தவர்களுக்கு அன்புடன் அழைப்பு விடுத்தார்.

இந்தத் தயாளமிக்க அழைப்பு உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் பிறகு சுமார் ஒன்பது மாதங்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் யூத தேவாலயம் தனது பழைய ஏற்பாடு தொடர்பான வழிபாட்டை நடத்திய நிலையில், அதே இடத்தில் கிறிஸ்துவ தேவாலயம் தனது பழைய மற்றும் புதிய ஏற்பாடு தொடர்பான வழிபாட்டை நடத்தி வந்தது.

இயேசு கிறிஸ்துவின் காலத்திலிருந்து இதற்கு முன்பு இது போன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளதா? யூதர்களும் கிறிஸ்தவர்களும் சம்பந்தப்பட்ட ஐக்கிய சந்திப்புக் கூட்டங்கள் உட்பட பல வேளைகளில் பல்வேறு சமயத்தினரின் ஐக்கிய சந்திப்புக் கூட்டங்கள் கடந்த காலங்களில் நடந்திருப்பது உண்மையே. பஹாய் சமயம் முதன் முதலாக உலக அளவில் 1893ம் ஆண்டு சிக்காகோ நகரில் அறிமுகம் செய்யப்பட்ட உலக சமயங்களின் மாநாட்டில் பல்வேறு சமயத்தினர் ஒன்றுகூடி வழிபாடு நடத்தியிருக்கின்றனர். ஆனால், ஒரு விஷேச அழைப்பின்பேரில், ஒப்வொரு வாரமும், ஒப்வொரு ஞாயிற்றுக் கிழமைதோறும், பல மாதங்களுக்கு ஒரு யூத தேவாலயத்தில் ஒரு கிறிஸ்தவ பிரிவினர் வழிபாடு நடத்தும் செயல் முந்தைய வரலாற்றில் நடைபெற்றுள்ளதா?

இது பற்றி அப்துல் பஹாவுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவரும் பின்வரும் ஒரு நிருபத்தை எழுதினார்:

“பாதிரியார் மார்ட்ன் ஏ. மேயர் அவர்கள் வெளிப்படுத்தியுள்ள மேன்மைநிலை மற்றும் மனிதத்தன்மை தொடர்பாக, கிறிஸ்தவர்கள் தங்களது வழிபாட்டை நடத்திக் கொள்வதற்குத் தனது யூத தேவாலயத்தில் பாதிரியார் மார்ட்ன் ஏ. மேயர் அவர்கள் இடம் வழங்கியுள்ள செயலும், நடவடிக்கையும் நித்திய காலமும் நிலைத்து நிற்கும். எதிர்வரும் காலங்களிலும், சகாப்தங்களிலும் மார்ட்ன் ஏ. மேயர் அவர்களின் நன்நோக்கம் நூல்களில் குறித்துக் கொள்ளப்படுவதுடன், உலக வரலாற்றின் பணிகள் எல்லா மனிதர்களின் உதடுகளிலும் நிலையாக வலம் வரும். ” தனது தேவாலயத்தின் புத்தக அறையில் மார்ட்ன் ஏ. மேயர் அவர்கள் அமர்ந்திருந்தபோது ஒரு நாள் அவரிடம் இச்செய்தி வழங்கப்பட்டது. அதன் காரணமாக அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். (ஆதாராம் மே

ற்கின் நட்சத்திரம், தொகுதி 20, எண்.4, ஜூலை 1929)

#ItsTheirLand: முன்னோடியற்ற எதிர்வினை ஓர் ஈரானிய கிராமத்தில் துன்புறுத்தப்பட்ட பஹாய்களின் குரலை உலகமயமாக்குகிறது



8 அக்டோபர் 2021


BIC GENEVA, 5 மார்ச் 2021, (BWNS) – ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், மத பிரமுகர்கள், மற்றும் முஸ்லீம் தலைவர்கள், வழக்கறிஞர்கள், முக்கிய மனித உரிமை வக்கீல்கள், விவசாயிகள் சங்கங்கள், நடிகர்கள் மற்றும் பிற முக்கிய நபர்களையும் உள்ளிட்ட ஈரானில் துன்புறுத்தப்பட்ட பஹாய்களுக்கு ஆதரவாக ஓர் உலகளாவிய பிரச்சாரம் முன்னோடியில்லாத வகையில் ஒருமைப்பாட்டை உருவாக்கியுள்ளது.

பிரச்சார ஆதரவாளர்கள் ஈரானில் பஹாய்களின் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், குறிப்பாக வடக்கு ஈரானில் உள்ள இவெல் என்ற கிராமத்தில் உள்ள பஹாய்களுக்குச் சொந்தமான மூதாதையர் நிலங்களை திருப்பித் தருமாறும் அழைப்பு விடுத்தனர்; அவை நில உரிமையாளர்களின் மத நம்பிக்கைகள் காரணமாக ஈரானிய அரசாங்கத்தால் சட்டவிரோதமாக பறிமுதல் செய்யப்பட்டிருந்தன..

ஈரானிய பஹாய்கள் பல தசாப்தங்களாக அனுபவித்து வரும், பன்முகத்தன்மை மற்றும் புவியியல் பரவலில் தனிச்சிறப்பான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான கூக்குரலை அதன் கவலை அலை பிரதிபலிக்கிறது.

“கடந்த வாரத்தில், ஈரானில் ஒரு சிறிய கிராமத்தில் பஹாய்களின் குரல்கள் உலகளாவியதாக மாறியது. இது, அரசாங்கங்கள், அமைப்புகள், முக்கிய நபர்கள், குழுக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான நேர்மையான நபர்கள் வழங்கிய அசாதாரண ஆதரவின் பலன்” என ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பஹாய் சர்வதேச சமூகத்தின் பிரதிநிதி டயேன் அலாய் கூறினார். “இந்த அசாதாரன ஆதரவு ஈரானின் நடவடிக்கைகளை கண்டனம் செய்வது மட்டுமல்லாமல், சர்வதேச சமூகம் ஈரானில் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ள பஹாய்களுக்கு ஆதரவாக இருக்கின்றது என்பதைக் காட்டுகிறது.”

ஈவெலில் உள்ள பஹாய்களுக்குச் சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய ஈரானிய நீதிமன்றங்கள் தீர்ப்பளித்ததன் பின்னணியில், இந்த பிரச்சாரம் வந்துள்ளது, இப்பறிமுதலினால் டஜன் கணக்கான குடும்பங்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்து பொருளாதார ரீதியாக வறிய நிலையில் உள்ளனர். பஹாய்கள் ஈரானின் மிகப்பெரிய முஸ்லீம் அல்லாத மத சிறுபான்மையினர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் விரிவாக ஆவணப்படுத்தப்பட்ட 42 ஆண்டுகால அரசு அனுமதி பெற்ற முறைமையான துன்புறுத்தலின் இலக்காக இருந்து வந்துள்ளனர்.

மத அல்லது நம்பிக்கை சுதந்திரத்திற்கான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் அஹ்மத் ஷாஹீத், “முறையான துன்புறுத்தல்களை [மற்றும்] உரிமை மீறல்களை எதிர்கொள்கின்ற”, ஈரான் பஹாய்களுடன் தான் ஒன்றுபட்டிருப்பதாகக் கூறிறார்.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஐ.நாவின் முன்னாள் சிறப்பு அறிக்கையாளர் மிலூன் கோதாரி ஆகியோரின் பங்களிப்புடன் இவெலின் நிலைமை குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஒரு webinar (இணைய கருத்தரங்கு) நடைபெற்றது. கூடுதலாக, ஈரான் உறவுகளுக்கான ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவின் தலைவரான கொர்னேலியா எர்ன்ஸ்ட், பஹாய்களை ஒரு “குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள சமூகம்” என அழைத்ததோடு ஈரானிய அரசாங்கத்தின் “பஹாய்களுக்கு எதிரான பேரழிவுகரமான கொள்கைகளைக்” கண்டித்தார்.

ஈரானின் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசிக்கான, 50’க்கும் மேற்பட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் ஆகியோரின் திறந்த கடிதத்தில் முன்னாள் கனேடிய பிரதம மந்திரி பிரையன் முல்ரோனி கையெழுத்திட்டார். நீதிமன்ற தீர்ப்பு “சர்வதேச மனித உரிமைத் தரங்களிலிருந்து மட்டுமல்ல, ஈரானிய அரசியலமைப்பின் உரை மற்றும் நோக்கத்திலிருந்தும் வேறுபட்டுள்ளது” என அக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அத்திறந்த மடல் தி குளோப் மற்றும் மெயில் செய்தித்தாள் மற்றும் சிபிசி உட்பட பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டது.

ஐ.நா. அபிவிருத்தி திட்டத்தின் அதிகாரிகள், உலக வங்கி, ராக்ஃபெல்லர் அறக்கட்டளை, வணிக பிரமுகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களின் கல்வியாளர்கள் உட்பட உலகளாவிய உணவு முறைகள் மற்றும் விவசாய வல்லுநர்கள், இவெலில் உள்ள பஹாய்களை “கடின உழைப்பு , குறைந்த வருமானம் கொண்ட விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களைத் தவிர்த்து வாழ்வாதாரத்தை சம்பாதிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் வழிமுறைகள் இல்லாதவர்கள்” என விவரிக்கும் மற்றும் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதில் “அச்சத்தை” வெளிப்படுத்தும் ஒரு திறந்த மடலில் கையெழுத்திட்டனர்

ஆஸ்திரேலியாவில் உள்ள விவசாய சமூகத்தின் சார்பாக ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் மனதை நெகிழச் செய்யும் வீடியோ செய்தியால் இந்த அழைப்பு ஆதரிக்கப்பட்டது. இது ஈரானிய அரசாங்கத்தையும் நீதித்துறையையும் “நிலத்தையும் சொத்துக்களையும் அவற்றின் உரிமையாளர்களான இவெலில் உள்ள பஹாய் விவசாயிகளுக்குத்” திருப்பித் தருமாறு கோரிக்கை விடுத்தது.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பிரச்சாரத்திற்குத் தங்கள் குரல்களையும் ஒரு வீடியோவில் சேர்த்தனர். அதில் அவர்கள் ஈரானுக்கு “பஹாய் சொத்துக்களை திருப்பித் தரவும், ஈரானின் குடிமக்களாகிய அவர்களின் மனித உரிமைகளை மதிக்கவும்” கோரிக்கை விடுத்தனர்.

கனடா மற்றும் ஸ்வீடனின் வெளியுறவு அமைச்சர்கள், மார்க் கார்னியோ மற்றும் ஆன் லிண்டே, ஒவ்வொருவரும் இவெலின் நிலைமை குறித்து அறிக்கைகளை வெளியிட்டனர், பாகுபாடு மற்றும் பஹாய்களுக்குச் சொந்தமான சொத்துக்களைப் பறிமுதல் செய்வது குறித்து எச்சரிக்கையை வெளிப்படுத்தினர். பிரேசில், ஜெர்மனி, நெதர்லாந்து, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்காவிலிருந்து பிற அரசாங்க அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இவெலில் நடைபெற்ற பறிமுதலைக் கண்டித்ததுடன், பஹாய்களைத் துன்புறுத்துவதை நிறுத்துமாறு ஈரானை வலியுறுத்தினர்.

ஈரானில் பஹாய் சமூகத்திற்கு அங்கீகாரம் வழங்கும்படி இரண்டு அரசாங்கங்களின் அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். “இவெல் கிராமத்தில் பஹாய் சொத்துக்களை பறிமுதல் செய்வதை நிறுத்துங்கள்” என்று நெதர்லாந்தின் மதம் அல்லது நம்பிக்கைக்கான சிறப்பு தூதர் ஜோஸ் டூமா கூறினார். “கடைசியாக பஹாய்களை ஒரு மத சமூகமாக அங்கீகரிக்கவும்.” உலகளாவிய மத சுதந்திரத்திற்கான ஜெர்மன் மத்திய அரசு ஆணையர் மார்கஸ் க்ரூபெல், ஈரான் பஹாய்களை அங்கீகரிக்கவும், “பஹாய் சமூகங்களின் பாகுபாடு மற்றும் துன்புறுத்தலுக்கு” ​​முற்றுப்புள்ளி வைக்கவும் அழைப்பு விடுத்தார்.

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் வெளியிட்டுள்ள அமெரிக்க அறிக்கை, ஈரானிய அரசாங்கத்தின் “ஈரானில் பஹாய்களை அவர்கள் சமயத்தின் அடிப்படையில் குறிவைக்கும் நடவடிக்கைகளின் “ ஆபத்தான விரிவாக்கத்தை ”கண்டித்தது.

உலகெங்கிலும் உள்ள முஸ்லீம் தலைவர்களும் இந்தப் பிரச்சாரத்தில் இணைந்தனர், “இந்த அநீதியை நிவர்த்தி செய்ய” ஈரானுக்கு அழைப்பு விடுத்து, “வேறு மதத்தை பின்பற்றுவதால் குடிமக்களிடமிருந்து நிலத்தை பறிமுதல் செய்ய இஸ்லாம் ஒரு அரசாங்கத்தை அனுமதிக்காது,” எனக் கூறினார்.

இந்தியாவில் உள்ள முஸ்லீம் தலைவர்களிடமிருந்து (அகில இந்திய தன்சீம் ஃபலாஹுல் முஸ்லிமீன் மற்றும் அகில இந்திய சஃபி சங்கம்), அமெரிக்கா, யுனைடெட் கிங்டம், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்றிலிருந்து வரும் அறிக்கைகள் ஈரானின் அரசாங்கத்திற்கு ஒரு சக்திவாய்ந்த சமிக்ஞையை அனுப்பியது. அதில் அதன் கூற்றுக்களுக்கு மாறாக, இரானிலுள்ள அவர்களின் இணை மதவாதிகள் தங்கள் நடவடிக்கைகளை இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக இருப்பதாக பார்க்கவில்லை என குறிப்பிடப்பட்டது.

இது தவிர, ஈரானுக்கு வெளியே உள்ள பதினான்கு முக்கிய ஈரானிய மத அறிஞர்கள் ஈரானின் அரசாங்கம் “நாடு முழுவதும் பஹாய் சொத்துக்களை மிருகத்தனமாக பறிமுதல் செய்வதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்றும் பஹாய்களைப் பாதித்துள்ள “துன்புறுத்தல், பகைமை மற்றும் அவமானங்களை” நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் “அவசரமாகக் கோருவதற்கு” ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டது. ஈரானில் மனித உரிமைகள் குறித்த நிபுணரான ரெஸா அஃப்ஷரி எழுதிய வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் ஒரு முக்கிய கருத்து கட்டுரையும் வெளியிடப்பட்டது.

ஜனநாயகத்திற்கான அமெரிக்க இஸ்லாமிய மன்றம், மத்திய கிழக்கு சிறுபான்மையினர் மீதான அவதூறு எதிர்ப்பு லீக் பணிக்குழு, யுனைடெட் ஃபோர் இரான், ஈரானில் மனித உரிமைகளுக்கான அப்துர்ரஹ்மான் போரமண்ட் மையம், சுதந்திர மாளிகை, டீட்ரிச் போன்ஹோஃபர் நிறுவனம் உள்ளிட்ட அமெரிக்காவில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பிறர், தீர்ப்பை வழங்கிய இரண்டு நீதிபதிகளான திரு ஹசன் பாபேய் மற்றும் திரு சதேக் சவட்கோஹி ஆகியோருக்கான மற்றொரு திறந்த கடிதத்தில் கையெழுத்திட்டனர்.

உலகளாவிய கிறிஸ்தவ ஒற்றுமை, ரவுல் வாலன்பெர்க் மையம், பிரேசிலின் தேசிய தேவாலயங்கள் கவுன்சில், தென்னாப்பிரிக்காவின் சட்ட வள மையம் மற்றும் ஜெர்மனியின் மனித உரிமைகளுக்கான சர்வதேச சங்கம் ஆகியவையும் இவெலில் உள்ள பஹாய்களுடன் ஒற்றுமையுடன் நின்ற பல நம்பிக்கை மற்றும் சிவில் சமூக குழுக்களில் அடங்கும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், நடிகர்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் ஆயிரக்கணக்கானோர் ஒரு ட்விட்டர் புயலில் சேர்ந்து #ItsTheirLand என்ற ஹேஷ்டேக்குடன் (hash tag) இவெலில் நில அபகரிப்பு பற்றிய கட்டுரைகளையும் ஒருமைப்பாடு சார்ந்த செய்திகளையும் பகிர்ந்து கொண்டனர். சமூக ஊடக உந்துதல் 35,000 ட்வீட்களை உலகெங்கிலும் சுமார் 52 மில்லியன் மக்களை சென்றடைந்தது, ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியாவில் இந்த ஹேஷ்டேக் பிரபல நிலையில் இருந்தது. பாரசீக மொழி ட்விட்டரிலும் இதற்குச் சமமான ஹேஷ்டேக் பிரபலமானது.

ஈரானுக்கு வெளியே உள்ள பிரபல ஈரானிய கல்வியாளர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள், நடிகர்கள் மற்றும் கலைஞர்கள், மாசி அலினெஜாட், மேக்ஸ் அமினி, நாசனின் பொனியாடி, நினா அன்சாரி, அப்பாஸ் மிலானி, சினா வலியோல்லா, ஓமிட் ஜலிலி, மஜியார் பஹாரி, லடன் போரமண்ட் மற்றும் பலர் ட்விட்டர் புயலில் இணைந்தனர். அதே போன்று அமெரிக்க நடிகர்களான ரெய்ன் வில்சன், ஜஸ்டின் பால்டோனி மற்றும் ஈவா லாரூ மற்றும் பிரிட்டிஷ் நாவலாசிரியரும் நகைச்சுவை நடிகருமான டேவிட் பேடியலும் இதில் இணைந்தனர்.

“பஹாய் துன்புறுத்தலுக்கான ஈரானிய அரசாங்கத்தின் மத அடிப்படையிலான உந்துதல் உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதை இவெலில் பஹாய்களுக்கான ஆதரவின் வெளிப்பாடு நிரூபிக்கிறது. ஈரான் தனது பஹாய் சமூகத்தை நடத்தும் விதம் முன்னெப்போதையும் விட, சர்வதேச சமூகத்தில் மட்டுமல்ல, ஈரானியர்களாலும் அரசாங்கங்கள், சிவில் சமூக குழுக்கள் மற்றும் தனிநபர்களின் வளர்ந்து வரும் கோரஸால் கண்டிக்கப்படுகிறது, ”என்று திருமதி அலாய் கூறினார். “நம்புவதற்கான சுதந்திரம் ஒரு அடிப்படை உரிமையாகும், அது எந்தவொரு தனிநபரிடமிருந்தும் ஓர் அரசாங்கத்தால் பறிக்கப்பட முடியாது. உலகம் ஈரானைப் பார்த்துக் கொண்டிருக்கிறது, அப்பாவி பஹாய்களின் நம்பிக்கைகளுக்காக முற்றிலும் ஆதாரமற்ற துன்புறுத்தலை அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கோருகிறது.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1495/