“ஒற்றுமையைப் பேணுவதில் 100 வருடகாலம்”: நூறாம் ஆண்டு நிறைவடையும் போது சமுதாய ஒன்றிணைவு குறித்த உரையாடல்கள் ஆஸ்த்திரேலியா முழுவதும் நிகழ்கின்றன



8 அக்டோபர் 2021


அதன் வெளியீட்டிற்கு ஐந்து மாதங்களுக்குப் பிறகு, “ஓர் உள்ளடக்கும் மொழிவை உருவாக்குதல்” ஆஸ்த்திரேலியா முழுவதும் ஆழ்ந்த கலந்துரையாடல்களைத் தூண்டுகிறது.

சிட்னி, 27 ஏப்ரல் 2021, (BWNS) – சில மாத காலப்பகுதியில், கடந்த நவம்பரில் வெளியிடப்பட்ட ஆஸ்திரேலிய பஹாய் சமூகத்தின் வெளியீடான ஓர் உள்ளடக்கிய மொழிவை உருவாக்குதல், நாட்டின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் முழுவதும் நடைபெற்ற கூட்டங்களில், அரசாங்க அதிகாரிகள், சமூக நடிவடிக்கையாளர்கள், பத்திரிகையாளர்கள், மத சமூகங்கள் மற்றும் பிறரில் ஓர் ஆழ்ந்த கலந்துரையாடலைத் தூண்டியுள்ளது.

சமீபமாக, சிட்னியில் உள்ள பஹாய் வழிபாட்டு இல்லத்தில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது, இது, ஆஸ்திரேலிய பஹாய் சமூகத்திற்கு ஒரு முக்கிய நேரமான, அந்த நாட்டில் சமயம் நிறுவப்பட்ட நூறாவது ஆண்டு நிறைவின் போது, வந்துள்ளது,. “பஹாய் சமூகத்தின் நூற்றாண்டானது, பன்முகத்தன்மையில் ஒற்றுமையை வளர்ப்பது பற்றி நூறு ஆண்டுகால கற்றலைக் குறிக்கிறது” என்று நாட்டின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் வீனஸ் கலெஸி கூறுகிறார்.

ஆஸ்திரேலியாவின் பிரதமர் சார்பில் கருத்துக்கள் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசன் ஃபாலின்ஸ்கி, “நமது ஒத்திசைவைப் பாதுகாப்பது என்பது அரசாங்கத்திற்கு மட்டுமல்ல. அது நம் அனைவருக்கும் சொந்தமான ஒன்று … பஹாய் ஆஸ்திரேலியர்கள் நமது பல்கலாச்சார தேசத்தையும் உள்ளடக்கும் தேசிய அடையாளத்தையும் நிர்மாணிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர்,” என அக்கூட்டத்தில் குறிப்பிட்டார்.

“சமயம் ஒரு சக்திவாய்ந்த ஒன்றிணைக்கும் சக்திக்கான திறனைக் கொண்டுள்ளது. அது மக்களை, உள்ளடக்கும் மற்றும் இணக்கமான உணர்வில் ஒன்றாகக் கொண்டுவருகிறது. …இது பல ஆஸ்திரேலியர்களுக்கு ஆறுதல், நிம்மதி, மீட்சித்திறம் ஆகியவற்றுக்கான மூலாதாரமாக இருக்கின்றது. “

கடந்த நூற்றாண்டில் பஹாய் சமூகத்தின் பயணமானது அதிக ஒற்றுமைக்கான ஒரு சக்திவாய்ந்த தூண்டுதல் எனும் முறையிலான கதை என நாட்டின் பஹாய் தேசிய ஆன்மீக சபையின் உறுப்பினரான ஃபியோனா ஸ்காட் விளக்கினார். ஆஸ்திரேலியாவின் கரையில் வந்திறங்கிய முதல் பஹாய் குழுவைப் பற்றி பேசிய டாக்டர் ஸ்காட், “மனித இனத்தின் பன்முகத்தன்மையை மதிக்கின்ற மற்றும் ஒத்திசைவாக்கும் ஓர் அமைதிமிகு ஓர் உலகம் குறித்த கருத்தால் அவர்கள் எவ்வாறு தூண்டப்பட்டார்கள்,” என்பதை விவரித்தார்.

“நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய பஹாய் சமூகம் இந்தத் தேசமானது, 417’க்கும் மேற்பட்ட உள்ளூர்களில் 80’க்கும் மேற்பட்ட இன மற்றும் இனக்குழுக்களைக் கொண்டிருக்கும் என அவர்கள் கனவில் கூட கண்டிருக்க மாட்டார்கள்.”

தென் ஆஸ்திரேலிய மாநிலத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், தெற்கு ஆஸ்திரேலிய ஆட்சித்தலைவரின் உதவி அமைச்சரான ஜிங் லீ, சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘ஓர் உள்ளடக்கிய மொழிவை உருவாக்குதல்’ வெளியீடு பற்றி குறிப்பிட்டார்: “பஹாய் சமயத்தின் கோட்பாடுகள் தனிநபர்களையும் சமூகத்தையும் நிறுவனங்களையும் கூட. இணைக்கின்றன. நான் இங்கே ஒரு தனிநபர் எனும் முறையில் நிற்கின்றேன், ஆனால் நான் ஒரு சமூகம் மற்றும் ஒரு ஸ்தாபனத்திலிருந்தும் – இந்த பாராளுமன்ற மாளிகையான, நமது ஜனநாயக அமைப்பிலிருந்தும் வருகின்றேன்.”

இந்த வெளியீடு தெரிவிப்பது என்னவென்றால், “மனிதகுலத்தில் ஒற்றுமையை வளர்ப்பது, ஆணும் பெண்ணும் சமம், நம் அனைவருக்கும் உடனுழைத்தல் கட்டமைப்பில் ஒரு கூட்டுப் பொறுப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு அவை அனைத்தும் ஒன்றாக வருகின்றன,” என தொடர்ந்து கூறினார். அதன் பின்னணியில் உள்ள அனைத்து ஆய்வுகளின் அடிப்படையில், மேலும் இதைப் பற்றி பேசுவது மட்டுமல்லாமல், பொதுவான இலக்குகளை நோக்கி செயல்படுவதற்கும் கூட்டாக இன்னும் சிறிது யோசிக்க சவால் விடுகிறது… . ”

தெற்கு ஆஸ்திரேலியாவின் பல்சமய சங்கங்களின் தலைவரான ஃபிலிப்பா ரோலண்ட், “வெளியீடு… நமது [சமூகம்] நமது சமூகம் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்த ஓர் அகன்ற காட்சிக்குள் தனிப்பட்ட முன்னோக்குகளை இணைக்கின்றது. மிக முக்கியமாக, இது நாம் எங்கிருந்து வந்துள்ளோம் என்பதைக் கற்றுக்கொண்டதிலிருந்து, தற்போது நாம் எங்கு இருக்கின்றோம் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தும், நம் அனைவருக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை நாம் கொண்டு வர முடியும் என்பதைக் கற்பனை செய்வதற்கான கூட்டு தைரியத்திலிருந்தும் ஒரு நடைமுறை வளைவை வரைகிறது.

“ஓர் உள்ளடக்கிய மொழிவை நாம் எவ்வாறு உருவாக்க முடியும் என்பது குறித்த இந்த உரையாடல், ஒரு பன்முக கலாச்சார சமுதாயத்தில் சமய நல்லிணக்கம் மற்றும் அமைதியான பரஸ்பர பலனளிக்கும் சகவாழ்வு ஆகியவற்றை நோக்கி வலுவாக உரைக்கும் ஒரு முக்கியமான பயணத்தின் அகத்தில் உள்ளது” என்று அவர் தொடர்ந்தார்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1504/

அப்துல்-பஹா: குழந்தைகளுடனான ஒரு சந்திப்பு


குழந்தைகளுடனான ஒரு சந்திப்பு

ஒரு நாள் மாலை வேளை ஜூலியட் (தோம்ஸன்) மற்றும் அவரின் நண்பர்கள் சிலரும் அப்துல்-பஹாவை அவரது தோட்டத்தின் பாதைகளின் வழி பின்பற்றிச் சென்றபோது திடீரென சில குழந்தைகள் அருகிலிருந்த புதர்களிலிருந்து கத்தியபடி வெளியே வந்து சிரித்துக்கொண்டு குழுவினரின் மீது கற்களை எறிந்தனர். தூரத்திலிருந்து அப்துல்-பஹா அவர்களைப் பார்த்து, “உலக மக்கள் குருடர்களாகிவிட்டனர்,” என துக்கத்துடன் கூறினார். சிறார்கள் எப்படி தோன்றினார்களோ அதே போன்று மறைந்தனர். பிறகு மாஸ்டர், “அவர்கள் என்னைப் பார்த்துச் சிரித்தனர், இருந்தும் என் உடை இயேசுவின் உடை, அவர் அனிந்திருந்த அதே உடைதான்,” என்றார்.

ஜூலியட் தோம்சன்

அதற்கு அடுத்த நாள், ஜூலியட் மற்றும் அவரின் நண்பர் ஒருவரும் அப்துல்-பஹாவின் குழுவோடு திரு மற்றும் திருமதி ஹேரிஸ் தம்பதியினரை அடுக்குமாடி இருப்பிடப் பகுதியில் சந்திக்கச் சென்றனர். அப்போது அங்கும் சில குழந்தைகள் தங்கள் விளையாட்டை விடுத்து மாஸ்டரை “குழந்தைகள் சிலுவைப்போர்” போன்று பின்தொடர்ந்து சென்றனர். ஜூலியட் சென்ற இரவு குழந்தைகளின் நடத்தையிலும் இக்குழந்தைகளின் நடத்தையிலும் இருந்த பெரும் வேறுபாட்டை எண்ணி அதிசயித்தார். ஒரு சிறு பெண், “தயவு செய்து கூறுங்கள், இவர் இயேசுவா?” எனக் கேட்டாள். குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருந்த ஜூலியட் தமது நண்பரை ஹேரிஸ் தம்பதியினரின் இல்லத்தில் இருந்த மாஸ்டரிடம் நிகழ்ந்ததை தெரிவிக்கும்படி அனுப்பினார். அந்த நண்பரும் அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை அக்குழந்தைகள் அனைவரும் கின்னி தம்பதியரின் இல்லத்தில் அப்துல்-பஹாவோடு சேர்ந்துகொள்வதற்கான அழைப்போடு திரும்பிவந்தார்.

ஹோவார்ட் கோல்பி ஐவ்ஸ் தாம் இப்போது அடிக்கடி விஜயம் செய்யும் கின்னி தம்பதியினரின் இல்லத்தில் தாம் கண்ட ஓர் அருமையான காட்சியை வருணித்தார். அன்று, ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்த ரெவரன்ட் ஐவ்ஸ் “சப்தமிட்டவாறும் அவ்வளவு சீரான உடைகள் அனியாத,.. ஆனால் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருந்த சுமார் முப்பது தெருச்சிறுவர்கள், வீட்டிற்குள் நுழைந்ததைக் கண்டு அதிசயித்தார். அவர் அச்சிறுவர்களைப் பின்தொடர்ந்து மாடி சென்றார். அங்கு அப்துல்-பஹா அவர்களை புன்னகையுடனும் நகைத்துக்கொண்டும் ஒருவர் ஒருவராக வரேவற்பதைக் கண்டார்.  இறுதியாக தோன்றியது ஒரு கருப்பினச் சிறுவன். மாஸ்டர் அவனைக் கண்டபோது, அவரது முகம் பிரகாசமடைந்தது முகத்தில் ஒரு தெய்வீகமான புன்னகை தோன்றியது. அவர், “இதோ ஒரு கருப்பு ரோஜா!” என உரக்கக் கூறினார். கூடியிருந்த எல்லோரும் ஓர் அதிசய உணர்வில் ஆழ்ந்திருந்தனர். அப்துல்-பஹா ஒவ்வொரு குழந்தையிடமும் சென்று அன்பாகப் பேசி சாக்லட்டுகளை வழங்கிய போது அவ்வுணர்வு மேலும் அதிகரித்தது. அவர் வெகு கருப்பான ஒரு சாக்ல்ட்டை கையில் எடுத்துக்கொண்டு அக்கருப்பின சிறுவனிடம் சென்று, “ஒரு வார்த்தையும் பேசாமல், ஆனால் கூடியிருந்தோரை நோக்கிய குறும்புப் பார்வையுடன், அச்சிறுவனின் கருப்புக் கண்ணத்தில் அக்கருப்புச் சாக்லட்டை வைத்தார். அப்துல்-பஹாவின் முகம் பிரகாசமடைந்திருந்தது… அப்பிரகாசம் அறையை ஒளிரச் செய்தது.” குழந்தைகள் அவனை அதற்குமுன் பார்த்ததே இல்லை போன்று அக்கருப்பினச் சிறுவனை அதிசயத்துடன் பார்த்தனர். “அச்சிறுவனைப் பொருத்தவரையில்… அவன் கண்கள் மாஸ்டரை உன்னிப்புடனும், உவகையுடனும் பார்த்துக்கொண்டிருந்தன. அந்நேரம் அவன் நிலைமாற்றமடைந்திருந்தான். அவனுடைய மெய்நிலை வெளிக்கொணரப்பட்டிருந்தது, தேவதை எனும் அவன் நிலை வெளிப்பட்டிருந்தது.

அப்துல்-பஹா: இண சமத்துவம்


இன சமத்துவம் குறித்து அப்துல்-பஹா

Baha'i Heroes & Heroines: Louis Gregory – First Hand of the Cause of Negro  race; “noble-minded”; “golden-hearted”; “pride (and) example (to the) Negro  adherents (of the) Faith”
லூயி கிரேகரி

அப்துல்-பஹா அமெரிக்கா சென்றடைந்தது முதல் இன சமத்துவம் குறித்த தமது அகநோக்கை தைரியத்துடனும் அசாதாரன வழிகளிலும் வெளிப்படுத்தினார். வாஷிங்டன் நகரில், ஒரு பஹாய் நம்பிக்கையாளரும் பிரபலமான பாரசீக ராஜ தந்திரியுமான ஒருவரின் இல்லத்தில் 23 ஏப்ரல் 1912ல் தமக்காக வழங்கப்பட்டிருந்த ஒரு பகல்விருந்தின் போது அவர் இதை வெளிப்படுத்தினார். தமது இருக்கையில் அமர்ந்து, வெகு நேர்த்தியான உணவு பரிமாறும் அறையில், அவரவர் தரத்திற்கும் சமூக அந்தஸ்திற்கும் ஏற்ற வகையில் வாஷிங்டன் நகரின் சமூக நெறிமுறைகளுக்கிணங்க அங்கு கூடியிருந்த வெள்ளை முகங்களை அவர் நோட்டமிட்டார். எழுந்து நின்று “திரு கிரேகரி எங்கே? அவரை இங்கு அழைத்துவாருங்கள்,” என விருந்தளிப்பவரை நோக்கிக் கூறினார். தர்மசங்கடத்தில் ஆழ்த்தப்பட்ட விருந்தளிப்பவர் வேறு வழியின்றி அவ்விடத்தின் அமர்கையை மாற்றியமைத்து அப்போதுதான் உரையாற்றி முடித்திருந்த அப்துல்-பஹாவை ஹோவார்ட் பல்கலைக்கழகத்திலிருந்து அந்த இராஜதந்திரியின் வீட்டிற்கு அழைத்துவந்திருந்த, ஆப்பிரிக்க-அமெரிக்கரும் வழக்குறைஞருமான லூயி கிரேகரிக்கு மேற்கொண்டு ஓர் இருக்கையை ஏற்பாடு செய்தார். திரு கிரேகரி அப்போது விடைபெற்றுக்கொண்டிருந்தார். அப்துல்-பஹா அவரும் அவ்விருந்தில் கலந்துகொள்ளவேண்டுமென வற்புறுத்தி மேஜையின் மரியாதைக்குறிய தலைப்பகுதியில் தமக்கருகே அமரச்செய்தார். அதன் வாயிலாக, வாஷிங்டன் நகரின் மரபிற்கு எதிராக செயல்பட்டு இனவாரியாக பிரித்தலையும் சமூகரீதியாக பாகுபடுத்துவதையும் புறக்கணித்து, ஒரு வலுவான உதாரணத்தை வெளிப்படுத்தி, வெகுவாகப் பிளவுபட்டுக்கிடந்த அத்தலைநகரின் வழக்கமுறைகளுக்குச் சவால் விட்டார். அவர் தமது ஐக்கிய அமெரிக்கப் பயணத்தின் எல்லா நேரங்களிலும் தாம் உரையாற்றிய எல்லா இடங்களும் எல்லா இனங்களுக்கும் திறந்துவிடப்படவேண்டுமென வலியுறுத்தினார்.

அப்துல்-பஹா இனங்களை ஐக்கியப்படுத்தும் ஒருவழியாக கலப்புத்திருமணங்களை ஊக்குவித்தார். அத்தகைய திருமணங்கள் திடகாத்திரமும் அழகும் மிக்க, புத்திசாலிகளும் திறமைசாலிகளுமான குழந்தைகளை உருவாக்கிடும் என அவர் கூறினார். இத்தகைய முதல் கலப்புத் திருமணம் 1914ல் நடைபெற்றது.

லூயி கிரேகரி மற்றும் அவரது மனைவி

ஹோவார்ட் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய ஓர் உரையில், அலங்காரத்திற்கும் வசீகரத்திற்கும் அல்லாது, தோல் நிறம் என்பது கடவுளின் முன்னிலையில் வேறு எவ்வகையிலும் முக்கியமானதல்ல என சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் எடுத்துக்கூறினார். மனிதர்களுக்கு இடையில் மட்டும்தான் தோல் நிறம் வேற்றுமைக்கான காரணமாக உள்ளது என அவர் மேலும் வலியுறுத்தினார்.

“மானிட உலகும், ஒரு பூங்காவைப் போன்றது, மனித இனம் அதன் பல்வர்ணப் பூக்களைப் போன்றவர்கள். ஆகவே, வேறுபட்ட நிறங்கள் அலங்காரமாகவே திகழ்கின்றன.”

“மிருகங்கள், அவற்றுக்கு பகுத்தறிவும் புரிந்துகொள்ளும் தன்மையும் இல்லாத போதும் நிறங்களை வேற்றுமைக்கான காரணமாக்கவில்லை. பகுத்தறிவுடைய மனிதன் மட்டும் ஏன் முறன்பாட்டை உருவாக்க வேண்டும். இது அவனுக்கு முற்றிலும் ஏற்புடையதல்ல.”

அப்துல்-பஹா சிக்காகோவில் ஹுல் இல்லம் எனும் ஓரிடத்தில் பின்வருமாறு கூறினார்: “மானிடத்தின் ஒருமைத்தன்மையை பஹாவுல்லா பிரகடனப்படுத்தியுள்ளார். பல்வேறு நாடுகளையும் வேறுப்பட்ட நம்பிக்கைகளையும் ஒற்றுமைப்பட செய்துள்ளார். இனம், நிறம் ஆகியவை ஒரு தோட்டத்தின் வர்ணங்களால் வேறுபடும் அழகைப் போன்றவையாகும். நீங்கள் ஒரு தோட்டத்தில் நுழையும்போது, அங்கு மஞ்சள், வெள்ளை, நீலம், சிகப்பு நிறப் பூக்கள் நிறைந்து அழகுடன் காணப்படலாம். அவை ஒவ்வொன்றும் பிரகாசத்தடனும் ஒன்று மற்றொன்றிலிருந்து வேறுபட்டும் அவற்றின் தனியழகு ஒட்டுமொத்தத்திற்கு அழகு சேர்க்கவும் செய்கின்றன. மனிதர்களுக்கிடையிலான இன வேற்றுமையும் அதே போன்றதுதான். ஒரு தோட்டத்தின் மலர்கள் யாவும் ஒரே நிறமாக இருந்தால், அது சலிப்பு தருவதாகவும் கண்களுக்குச் சோர்வளிப்பதாகவும் அமையும்.”

“ஆகவே, மானிடத்தின் பல்வேறு இனங்கள் ஒட்டுமொத்தத்திற்கும் கூட்டான இணக்கத்தையும் அழகையும் வழங்குகின்றன. ஆகவே, மானிடம் எனும் இம்மாபெரும் பூங்காவில் தங்களுக்கிடையில் எவ்வித வேற்றுமையோ கருத்துவேறுபாடோ இல்லாமல் அருகருகே வளரும் பூக்களைப் போன்று எல்லோரும் கலந்துறவாட வேண்டும்.”

Bahai.org: அது ஆரம்பித்து 25’வது வருடத்தில் அனைத்துலக வலைத்தளம் முக்கிய மறுவடிவமைப்பைக் காண்கிறது



8 அக்டோபர் 2021


புதுப்பிக்கப்பட்ட Bahai.org’யின் காட்சி, மேம்பாடுகள், கூடுதல் பிரிவுகள் மற்றும் பிற அம்சங்களை உள்ளடக்கியுள்ளதோடு, ஆண்டு முழுவதும் புதிய கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை வெளியிட வழி வகுக்கிறது

பஹாய் உலக மையம், 22 ஏப்ரல் 2021, (BWNS) – உலகளாவிய பஹாய் சமூகத்தின் http://www.bahai.org ‘இல் புதிதாக மறுவடிவமைக்கப்பட்ட வலைத்தளம் தொடங்கப்பட்டது, இது 1996’ஆம் ஆண்டில் தளம் முதன்முதலில் உருவாக்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியான மேம்பாடுகளில் சமீபமான மேம்பாட்டைக் குறிக்கிறது. .

விரிவான மறுசீரமைப்பானது, மேம்பட்ட காட்சி அனுபவத்தையும் தளத்தின் 140 கட்டுரைகளின் எளிதான அணுகலை நோக்கமாகக் கொண்டுள்ள கூடுதல் அம்சங்களையும் வழங்குகிறது,

தளத்திற்கான புதுப்பிப்புகளில் இரண்டு புதிய பிரிவுகள் அடங்கும் – “பிரத்யேக கட்டுரைகள்” மற்றும் “பிரத்யேக காணொளிகள்” – இது பஹாய் சமூக வாழ்க்கையில் பஹாய் சமூகத்தின் ஈடுபாடு, அனைத்துத் தரப்பு மக்களின் சமூக மற்றும் லௌகீக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகள் மற்றும் பஹாய் சமூக வாழ்க்கையில் சேவை மற்றும் வழிபாட்டின் ஒருங்கிணைப்பு பற்றிய Bahai.org வலைத்தள குழுமங்களிலிருந்து பெறப்பட்ட உள்ளடக்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றையும், புதிய காணொளிகளையும் ஒன்றாகக் கொண்டுவருகிறது.

தளத்தின் புதிய பதிப்பு வரவிருக்கும் மாதங்கள் மற்றும் வருடங்களுக்குத் திட்டமிடப்பட்ட கூடுதல் சேர்க்கைகளுக்கான வழியைத் திறக்கிறது, இது உலகளாவிய பஹாய் சமூகத்தின் வளர்ச்சியையும், பஹாவுல்லாவின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு, சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க முயலும் உலகெங்கிலும் உள்ளவர்களின் அனுபவத்தையும் ஆராயும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1503/

கம்போடியாவில், இளைஞர் முன்முயற்சி வெள்ளத்தின் போது நில அரிப்பை குறைக்கின்றது



8 அக்டோபர் 2021


இளம் வயதினர் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கும் வெப்பத்திலிருந்து தங்குமிடம் வழங்குவதற்குமான முயற்சிகள், வெள்ளம் தாக்கும் போது ஒரு சாலை அரிக்கப்படாமல் தடுப்பதற்கான கூடுதல் நன்மையைக் கொண்டிருந்தன.

ஒக்சேய், கம்போடியா, 14 ஏப்ரல் 2021, (BWNS) – 2019’ஆம் ஆண்டில், கம்போடிய கிராமமான ஒக்சேயில் இளைய இளைஞர் குழு ஒன்று காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கும் வெப்பத்திலிருந்து தங்குமிடம் வழங்குவதற்கும் ஒரு சாலை வழியாக மரங்களை நடவு செய்ய புறப்பட்டது. அந்த நேரத்தில், ஒரு வருடம் கழித்து வந்த வெள்ளத்தின் போது சாலையின் இந்தப் பகுதி கடுமையான அரிப்புகளிலிருந்து பாதுகாக்கப்படும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க முடியாது.

அதன் தாக்கத்தில் மிதமானதாக இருந்தாலும், இந்தத் திட்டம் மற்றும் அதை எவ்வாறு தொடர்ந்து ஆதரிக்க முடியும் என்பதும் சமீபத்தில் அண்டை கிராமங்களின் உள்ளூர் தலைவர்களிடையே விவாதிக்கப்பட்டது.

“இந்த இளைஞர்கள் தங்கள் திட்டத்தைத் தொடங்கவில்லை என்றால், நாங்கள் முழு சாலையையும் இழந்திருக்கக்கூடும். அவர்கள் தங்களின் முயற்சிகளைத் தொடர நாங்கள் அவர்களுக்கு இ்பபோது உதவினோமானால், எதிர்காலத்தில் வெள்ளம் குறித்த விஷயத்தில் ஒரு பெரும் வித்தியாசத்தை நாம் காணலாம் ”என்று ஓக்சே கிராமத்தின் தலைவர் செர்ட் சே கூறினார்.

சமுதாய சேவைக்கான திறன்களை வளர்க்கும் பஹாய் கல்வித் திட்டங்களில் பங்கேற்பதன் மூலம் இந்த முயற்சியை மேற்கொள்ள இளைஞர்கள் தூண்டப்பட்டனர். குழுவில் பணிபுரியும் ஒரு மூத்த இளைஞரான பீயப், இந்த கல்வித் திட்டங்களின் ஒரு முக்கிய அம்சத்தை விவரிக்கிறார்: “இந்த இளைஞர்கள் தங்கள் கிராமத்தின் சமூக மெய்நிலையை விவரிக்கவும், அவர்கள் தீர்க்கக்கூடிய தேவைகளை அடையாளம் காணவும் ஓர் அத்தியாவசிய திறனை வளர்த்து வருகின்றனர்.”

குழுவின் இளம் உறுப்பினர்களில் ஒருவர் திட்டத்தின் பின்னணியில் உள்ள சிந்தனையை விளக்குகிறார். “கோடையில் வெப்பம் அதிகரிக்கிறது, சாலையில் நடப்பவர்களுக்கு நிழல் இல்லை, எனவே நாங்கள் மரங்களை நடவு செய்ய முடிவெடுத்தோம்.”

“மரங்கள் பூக்களையும் பழங்களையும் கொடுக்கின்றன, இது எங்கள் கிராமத்தை மிகவும் அழகுபடுத்துகிறது” என்று மற்றொரு இளைஞர் கூறுகிறார்.

கிராமத்தின் பிற இளைஞர்கள் உட்பட உள்ளூர் தலைவர்களும் சமூக உறுப்பினர்களும் ஆரம்பத்தில் இருந்தே இந்தத் திட்டத்தை ஆர்வத்துடன் ஆதரித்தனர். மிகவும் பொருத்தமான தாவர இனங்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆலோசனை வழங்கி மரங்களை நடவு செய்வதற்கு உதவி செய்தனர்.

திரு. சே குழுவைப் பற்றிய தமது அவதானிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்: “இது பஹாய் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது, ஏனென்றால், எங்கள் கிராமத்தின் இளைஞர்கள் பள்ளியிலிருந்து திரும்பி வந்த பின்னர் தங்கள் நேரத்தை அர்த்தமுள்ள கருப்பொருள்களைப் பற்றி விவாதிக்கவும் கிராம சேவையில் ஈடுபடவும் செய்கிறார்கள்.” இந்த வாரம் அவர்களின் மிகச் சமீபத்திய கூட்டத்தில், இளைஞர்கள் தங்கள் முயற்சிகளை எவ்வாறு தொடரலாம் என்பதைப் பற்றி பிரதிபலிப்புச் செய்தனர். ஓர் இளைஞர், “கிராமத்தில் உள்ள அனைவரையும் மகிழ்ச்சியாகக் காணும்போது, ​​எங்கள் இதயங்கள் களிப்பால் நிறைந்திருக்கின்றன. ஒரு புதிய நாகரிகத்தை உருவாக்க எங்கள் பங்கை எவ்வாறு ஆற்ற முடியும் என்பதை நாங்கள் உணர்கிறோம்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1502/

அப்புட் இல்லம்: புனிதஸ்தலத்தின் மறுசீரமைப்பு பூர்த்தியடைந்தது



8 அக்டோபர் 2021


திட்டம், 1950’களில் ஷோகி எஃபெண்டியினால் ஆரம்பிக்கப்பட்ட மறுசீரமைப்புப் பணியை நீட்டிக்கும் வகையில், கட்டிடத்தின் மோசமடைந்திருந்த பகுதிகளை மறுசீரமைப்புச் செய்ததுடன் அதன் நில அதிர்வு எதிர்ப்பையும் வலுப்படுத்தியது.

பஹாய் உலகமையம், 8 ஏப்ரல் 2021, (BWNS) – காலப்போக்கில் மோசமடைந்துவிட்ட கட்டிடத்தின் சில பகுதிகளை மீட்டெடுக்கும் போது ‘அபுட் இல்லத்தின் நில அதிர்வு எதிர்ப்பை வலுப்படுத்திய இரண்டு ஆண்டு கால திட்டம் முடிவடைந்தது. இந்த நடவடிக்கை 1950’களின் முற்பகுதியில் ஷோகி எஃபெண்டி, புனித ஸ்தலத்தை புனித யாத்திரைக்கு ஆயத்தமாக்கியபோது அவர் மேற்கொண்ட பாதுகாப்புப் பணிகளின் விரிவாக்கமாகும்.

நாடுகடத்தப்பட்டவர்களாகவும், வீட்டுக் காவலில் இருந்தபோதும், பஹாவுல்லாவும் அவரது குடும்பத்தினரும் 1871’ஆம் ஆண்டில் இந்தக் கட்டிடத்திற்கு வந்து மிகவும் நெருக்கடியான நிலையில் வாழ்ந்தனர். ஒரு கட்டத்தில் 13 க்கும் மேற்பட்டோர் ஒரே அறையில் வசிக்க வேண்டியிருந்தது.

இந்தப் புனிதஸ்தளத்தில்தான், 1873’ஆம் ஆண்டில், பஹாவுல்லா தமது அதிப்புனித நூலான கித்தாப்-இ-அக்டாஸை வெளிப்படுத்தினார், இந்த நூல் அவருடைய சமயத்தின் அத்தியாவசிய சட்டங்களையும் கொள்கைகளையும் கோடிட்டுக் காட்டுகிறது; பஹாய் ஸ்தாபனங்களுக்கான அடித்தளத்தை அமைக்கிறது; பஹாய் திருவாக்குகளில் “எதிர்கால உலக நாகரிகத்தின் சாசனம்” என குறிப்பிடப்படுகிறது.

அப்புட் இல்லத்தின் மறுசீரமைப்பு“ பல நூற்றாண்டுகளாக கட்டிடத்தைப் பொருத்தமான நிலையில் பாதுகாப்பதை ”நோக்கமாகக் கொண்டுள்ளது என உலக நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை பஹாய் தேசிய ஆன்மீக சபைகளுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது
.
மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளின் வெவ்வேறு அம்சங்களை பின்வரும் படத்தேர்வுகளில் காணலாம்.

வீட்டின் கிழக்கு முகப்பின் ஒரு வரலாற்று (இடது) மற்றும் தற்போதைய (வலது) நிலையின் காட்சி. இது பஹாவுல்லா மற்றும் அவரது குடும்பத்தினரால் முதன்முதலில் குடிவரப்பட்ட வீட்டின் ஒரு பகுதியாகும் – இது ஊடி கம்மார் இல்லம் என அழைக்கப்படுகிறது – பஹாவுல்லா, பஹாய் சமயத்தின் அதிப்புனித நூலான கிதாப்-இ-அக்டாஸை இந்த அறையில் (மேல் இடதுபுறத்தில்) வெளிப்படுத்தினார்.
கிதாப்-இ-அக்தாஸை பஹாவுல்லா வெளிப்படுத்திய அறையில், மரச் சுவர் பேனல்களின் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது, அவற்றில் பல நெளிவுற்றோ நிறமாற்றமோ அடைந்துள்ளன. ஒவ்வொன்றும் நேராக்கப்பட்டு, வலுவூட்டப்பட்டு, மீண்டும் பூச்சு அளிக்கப்பட்டன.
இல்லத்தின் சோஃபா செட் அவற்றின் அசல் தோற்றத்திற்கு மீட்டெடுக்கப்பட்டன. மெத்தைமுறை சில புகைப்படங்களிலிருந்து மீண்டும் உருவாக்கப்பட்டு, ஒரு துணி தயாரிப்பாளரால் துணியை நகலெடுக்க பயன்படுத்தப்பட்டது.
அறைகளில் ஒன்று அழகாக வடிவமைக்கப்பட்ட உட்கூரை மற்றும் துத்தநாக பேனல்களில் வரையப்பட்ட ஒரு பலக்கிய சித்திரவடிவம் (ஃப்ரீஸ்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மறுசீரமைப்பாளர்கள் ஃப்ரீஸ் வடிவத்தை ஆவணப்படுத்தி, பேனல்களை சரிசெய்தனர், மற்றும் ஓவியங்களை மீட்டெடுத்தனர். இது ஒட்டமான் காலத்திய கலைப்படைப்புகளின் குறிப்பிடத்தக்க பாதுகாப்பாகும்
அப்புட் இல்லத்தில் மறுசீரமைக்கப்பட்ட உட்கூரை ஒன்று
அப்புட் இல்லத்தில் மறுசீரமைக்கப்பட்ட கலைவேலைபாட்டின் (frieze) அம்சங்கள்
மற்றோர் அறையில் காலப்போக்கில் மங்கிவிட்டிருந்த உட்கூரை வடிவங்கள் மீட்டெடுக்ப்பட்டுள்ளன.
அப்புட் இல்ல அறை ஒன்றின் உட்கூரையின் அணுக்கத் தோற்றம்
அப்புட் இல்ல மறுசீரமைப்பின் ஒரு முக்கிய அம்சம் சுமார் 5,000 சதுர மீட்டர் உள் மற்றும் வெளிப்புற சுவர்களை மாற்றியமைத்தது. வரலாறு சார்ந்த கட்டிடங்களின் மறுசீரமைப்பிற்குப் பயன்படுத்த பாதுகாப்பு நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட சுண்ணாம்பு அடிப்படையிலான காரை பயன்படுத்தப்பட்டது. புதிய பிளாஸ்டர் மற்றும் வண்ணப்பூச்சு சுவர்களுக்குள் ஈரப்பதத்தை உருவாக்குவதைத் தடுக்கும்.
இல்லம் முழுவதும் கூரையின் மரச்சட்டங்கள் பழுதுபார்க்கப்பட்டு, சில இடங்களில் நிலைவெள்ளி எஃகுவினால் வலுப்படுத்தப்பட்டன.
ஜன்னல் கண்ணாடிகளை உருவாக்குவதற்கு பாரம்பரிய கண்ணாடிமுறை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
மத்திய தரைக்கடல் கடலை எதிர்நோக்கியவாறு இருக்கும் சீரழிந்துவிட்ட பளிங்கு தூண்கள் மற்றும் மேற்பகுதிகள் ஒரே மாதிரியான பிரதிகளைக் கொண்டு மாற்றப்பட்டன.
கட்டிடத்தில் மறுசீரமைக்கப்பட்ட தரை கற்களின் உதாரணம்
பொது சுகாதார கட்டுப்பாடுகளின் தளர்வு அனுமதித்தவுடன், யாத்ரீகர்களின் வரவிற்கு அப்புட் இல்லத்தின் கதவுகள் மீண்டும் திறக்கப்படும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1501/

கட்டார் பஹாய்களை வெளியேற்றுதல் மற்றும் தடுப்புப்பட்டியலில் சேர்த்தல் மத சுத்திகரிப்பு முறையைக் குறிக்கலாம்


நியூயார்க் – 31 மார்ச் 2021— பஹாய் சர்வதேச சமூகம் (பி.ஐ.சி) பல ஆண்டுகளாக கட்டாரி அதிகாரிகள் கட்டாரில் இருந்து பஹாய்களைத் தடுப்புப்பட்டியலில் சேர்த்து அவர்களை நாடு கடத்தும் திட்டமிட்ட முயற்சிகளால் மிகவும் கவலை கொண்டுள்ளது.

டோஹா, கட்டார்

கட்டாரில் பிறந்த ஒரு முக்கிய பஹாய் ஆன, ஓமிட் சியோஷான்சியன், கட்டாரில் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்ட சமீபத்தியவராவார். குறிப்பிடப்படாத குற்றவியல் மற்றும் தேசிய பாதுகாப்பு குற்றச்சாட்டுகள் இந்த வெளியேற்றங்களைத் தூண்டுவதாக நாட்டின் சில அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆதாரமில்லாமல் சுமத்தப்பட்ட இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் கட்டார் நீதித்துறை அமைப்பில் கடுமையான தண்டனைகளைத் தாங்கிவரக்கூடும்.

ஒருமுறை, தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டவுடன் பஹாய்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள், மீண்டும் உள்ளே வர அவர்கள் நிரந்தரமாக அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு சந்தர்ப்பத்தில், கட்டாரி பஹாயின் துணைவருக்கு வசிப்பிடம் மறுக்கப்பட்டதன் விளைவாக அத்தம்பதியினரின் முழு குடும்பமும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கட்டாரி அல்லாத பஹாய்கள், அவர்களின் முதலாளிகளால் அல்லது ஆதரவாளர்கள் நாட்டில் தங்குவதற்கு ஆதரவளிக்கப்பட்ட போதிலும் அவர்களுக்கு வசிப்பிட அனுமதிகள் மறுக்கப்படுகின்றன, அல்லது புதுப்பிக்கப்படுவதில்லை,.

பல்வேறு தொழில்முறை மற்றும் தேசிய பின்னணியிலிருந்து வந்தவர்களான, நாடுகடத்தப்பட்ட அனைவரையும் இணைப்பது அவர்களின் பஹாய் நம்பிக்கையாகும். ஈரான் மற்றும் யேமனில் பஹாய்கள் எதிர்கொண்ட துன்புறுத்தல்களுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளது. தடுப்புப்பட்டியலையும் நாடுகடத்தலையும் எதிர்கொண்டவர்களில் பெரும்பாலோர் கட்டாரில் பிறந்து வளர்ந்தவர்கள், வேறு எந்த வசிப்பிடத்தையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை, சிலர், அந்த நிலத்தில் பல தலைமுறைகள் நீண்டு, கட்டார் மாநிலத்தின் சுதந்திரத்திற்கு முன்னர் இருந்தே அங்கு வசித்துவந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

“இந்த நாடுகடத்தல் முறை மத சுத்திகரிப்புக்கு ஒப்பானது-அது தொடருமானால், ஒரு முழு மத சமூகத்தையும் சில ஆண்டுகளில் அழிக்கக் கூடியதாகும்” என்று ஐக்கிய நாடுகள் சபையின் BIC’யின் முதன்மை பிரதிநிதி பானி டுகால் கூறினார்.

கட்டாரின் பஹாய் சமூகமும் பி.ஐ.சியும் இந்த வழக்குகளை ஏற்கனவே கட்டாரி அதிகாரிகள் மற்றும் கட்டாரின் தேசிய மனித உரிமைகள் குழுவிடம் எழுப்பியுள்ளன. இந்த வழக்குகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதவை என்றும் அவை ஒவ்வொன்றும் ஒரு தேசிய பாதுகாப்பு அக்கறை கொண்டவை என்றும் கவலைகளை எழுப்பிய ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் இராஜதந்திரிகளிடம் அதிகாரிகள் ஆதாரமின்றி குற்றம் சாட்டியுள்ளனர்.

மார்ச் மாதத்தில், நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், இந்த விஷயத்தை மனித உரிமைகள் பேரவை முன் எழுப்பிட BIC கட்டாயப்படுத்தப்பட்டது. அப்பட்டமான பாகுபாட்டின் இந்த முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், அதன் மனித உரிமைகள் உறுதிப்பாட்டை நிலைநிறுத்தவும் கட்டார் கேட்டுக் கொள்ளப்பட்டது.

பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிகள் இருப்பினும், அடுத்த ஆண்டு உலகக் கோப்பைக்கு முன்னதாக உலகப் பார்வை கட்டார் பக்கம் திரும்பியிருப்பினும், கட்டாரி அதிகாரிகள் இப்போது ஓமிட் சியோஷான்சியனை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக தடுப்புப்பட்டியலில் வைத்து நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளனர். கட்டார் நாட்டில் பல தலைமுறைகளாக வசித்து வந்த திரு. சியோஷான்சியனுக்கு வேறு வசிப்பிடம் எதுவும் கிடையாது. இந்த நிகழ்விலிருந்து, பஹாய் தலைமைத்துவத்தைக் குறிவைப்பது கட்டாரி அதிகாரிகளின் மூலோபாயம் என்பது இப்போது தெரிய வருகிறது.

“தெளிவற்ற தேசிய பாதுகாப்புக் குற்றங்களில் அப்பாவி நபர்களை சேர்ப்பது, ஆதாரமின்றி, கட்டார் தன்னைப் பிணைத்துள்ள மனித உரிமைக் கடப்பாடுகளுக்கு எதிராக உள்ளது, மற்றும் உலகம், அனைத்துலக சமூகம், கட்டாரின் சொந்த ‘நேஷனல் விஷன் 2030’ ஆகியவற்றின் பார்வையில் அதன் நிலைப்பாட்டைத் தரங்குறைக்கிறது,” என்கிறார் திருமதி டுகால் .

“அமைதியாக ஒன்றிணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்கும் பங்களிப்பு செய்த தலைமுறையினரான ஒரு சமூகத்தின் உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கு கட்டார் மாநிலம் தேர்ந்தெடுத்துள்ளதினால் பஹாய் சர்வதேச சமூகத்திற்குப் பெரிதும் கவலையளித்துள்ளது.” என்று திருமதி டுகால் மேலும் கூறினார். . “இதுபோன்ற நடவடிக்கைகள் அதன் சொந்த சமூக ஒற்றுமையையும், சர்வதேச சமூகத்தில் அதன் நற்பெயரையும், ஒரு தேசமாக அதன் வளர்ச்சியையும் எவ்வாறு குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்பதை கட்டார் நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். அதிகாரிகள் இந்த வழியை விரைவிலேயே மாற்றியமைப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.”

மூலாதாரம்: https://www.bic.org/

இடம்பெயர்வு: ஸ்லோவாக்கியாவில் எல்லைகளை விரிவுபடுத்துதல்



8 அக்டோபர் 2021


பிராட்டிஸ்லாவா, ஸ்லோவாக்கியா, 1 ஏப்ரல் 2021, (BWNS) – மனித இயல்பு மற்றும் திறன் பற்றிய ஒரு சிறிய ஆனால் வளர்ந்து வரும் உரையாடல் ஸ்லோவாக்கியாவில் வேரூன்றி வருகிறது, இடம்பெயர்வு மற்றும் சிறுபான்மையினர் பற்றிய பொதுவான கருத்துக்களுக்கு இது சவாலிடுகிறது, அத்துடன் அதிக பங்கேற்பு மற்றும் பரஸ்பர ஆதரவை வளர்க்கிறது. கடந்த பல ஆண்டுகளாக, ஸ்லோவாக்கியாவின் பஹாய் சமூகம் இந்தப் பிரச்சினைகள் குறித்த விவாதங்களுக்குப் பங்களிப்பு செய்து வருகிறது, மேலும் இடம்பெயர்வு குறித்த சிந்தனை முன்னேறக்கூடிய தளங்களை உருவாக்குகிறது.

“பல சமூகங்களில் ஒரு பொதுவான அனுமானம் என்னவென்றால், ஒரு நாடு புலம்பெயர்ந்தோரை ஏற்பது ஒரு சுமை” என ஸ்லோவாக்கியாவின் பஹாய் வெளிவிவகார அலுவலகத்தின் வீனஸ் ஜஹான்பூர் கூறுகிறார்.

“ஒரு புதிய நாட்டிற்கு வருபவர்கள் புதிய இடத்தில் அமர்வதற்கும் பல்வேறு தேவைகளைத் தீர்ப்பதற்கும் அவர்களுக்கு ஆதரவு தேவைப்படலாம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது, குறிப்பாக, அவர்கள் மோதலையும் ஒடுக்குமுறையையும் விட்டு வெளியேறுபவர்களாக இருந்தால்” என திருமதி ஜஹான்பூர் கூறுகிறார். “ஆனால் அவர்களின் வாழ்க்கையில் மேலும் பல விஷயங்கள் உள்ளன.

” மனிதர்கள் தன்னலமற்ற சேவை மற்றும் தாராள மனப்பான்மைக்கு பெரும் திறனைக் காட்ட முடியும் எனும் மனித இயல்பைப் பற்றிய வித்தியாசமான பார்வையுடன் மக்கள் தங்களுக்கு இடையில் பிளவுகளை உருவாக்கும் கருத்துகளைத் தாண்டி ஒருவரை ஒருவர் சக மனிதராகக் காண முடியும்.”

உரையாடல்கள் இதை ஒரு தொடக்கப் புள்ளியாகக் கொண்டு பிரச்சினையின் பல்வேறு அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. மேலும், அரசாங்க, மனித உரிமை அமைப்புகள் மற்றும் மத சமூகங்கள் போன்ற சமூக நடவடிக்கையாளர்களிடையே ஒத்துழைப்பையும் உடனுழைப்பையும் பலப்படுத்தியுள்ளன என்று அலுவலகம் கண்டறிந்துள்ளது.

ஸ்லோவாக்கியாவின் மனித உரிமைகள் கழகம் சமீபத்தில் நடத்திய குடிமை ஈடுபாடு குறித்த மாநாட்டில், திருமதி ஜஹான்பூர் நல்லாட்சிக்கான இந்த யோசனைகளின் தாக்கங்களை விவரித்தார். “மக்கள் ஒரு நாட்டிற்கு வரும்போது, அவர்கள் முழு நம்பிக்கையுடனும், சிறந்த வாழ்க்கையை எதிர்பார்த்தும் வருகிறார்கள். அவர்கள் புதிய முன்னோக்குகளையும், தங்கள் புதிய இல்லத்தின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க வேண்டும் என்ற வலுவான விருப்பத்தையும் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் சீக்கிரத்தில் சம அந்தஸ்து உள்ளவர்களாக ஈடுபடுத்தப்பட வேண்டும். புதிதாக வந்தவர்கள் மற்றும் அவர்களது சக தோழர்களிடையே கலந்துரையாடல் மற்றும் பரஸ்பர கற்றலுக்கான தளங்கள் உருவாக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான சாளரம் ஆரம்பத்திலேயே உள்ளது. ”

தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் சக்தியளிப்பு குறித்து பஹாய் உலக செய்தி சேவையுடன் பகிர்ந்து கொண்ட தனது கருத்துக்களில், மாநாட்டின் வழிநடத்துனரும், இன மற்றும் கலாச்சார ஆராய்ச்சி மையத்தின் பிரதிநிதியுமான அலெனா ஹோல்கா சுட்ஸிக் பஹாய் சமூகத்தின் அனுபவத்தைச் சுட்டிக்காட்டி, இவ்வாறு கூறுகிறார்: “உள்ளூர் சமூகங்களில் அவர்களின் வலுவான ஈடுபாட்டின் மூலம், உள்ளூர் நடவடிக்கைகள், தொடர்புகள் மற்றும் உறவுகளில் மிகவும் மாறுபட்ட நபர்களை ஈடுபடுத்துவதில் பஹாய்கள் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளனர்… பஹாய்களுள் நாம் கண்ணுறும் சமூகக் கடமை உணர்வு புலம்பெயர்ந்தோரைச் சேர்த்துக்கொள்வதற்கான சிறந்த இயக்கியாகும்.

“மனிதர்களாக நம்மை ஒன்றிணைப்பதில் அவர்கள் கவனம் செலுத்துவதே புலம்பெயர்ந்தோரைச் சேர்ப்பதற்கான ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்குகிறது என நான் நினைக்கின்றேன்… ஒவ்வொரு தனிமனிதனும் முக்கியத்துவம் வாய்ந்தவனாகவும், ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவதற்கான பெரும் ஆற்றலைக் கொண்டவனாகவும் இருக்கின்றான் என்ற எண்ணம் இடம்பெயர்வு மற்றும் புலம்பெயர்ந்தோரைச் சேர்ப்பது பற்றிய விவாதத்தில் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும். ”

ஸ்லோவாக்கியாவின் பஹாய் சமூகத்தின் உறுப்பினர் மோனிகா குச்டோவா மேலும் கூறுகையில், “மக்களை ‘பூர்வீகம்’ மற்றும் ‘வெளிநாட்டவர்,’ ‘பெரும்பான்மை’ மற்றும் ‘சிறுபான்மையினர்’ போன்ற பிரிவுகளாகப் பிரிக்கும் போக்கு உள்ளது. ஆனால் மக்கள் ஒன்று கூடி தப்பெண்ணத்திற்கான மூல காரணத்தையும் அவர்களின் சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கான வழிகளையும் ஆராய்ந்திடும்போது, இந்த பிளவுகள் விலகிவிடும், நாம் ஒரே மக்களாக மாறுகிறோம். ஒரு தோட்டத்தைப் போல, நமது பன்முகத்தன்மையின் அழகைக் காண வருகிறோம்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1500/