அப்துல்-பஹா நினைவாலயம்: பிரதான கட்டிடத்தின் முதல் தம்பங்கள் எழுப்பப்பட்டுள்ளன



8 அக்டோபர் 2021


பஹாய் உலக மையம், 13 மே 2021, (BWNS) – அப்துல் ‑ பஹா நினைவாலயத்தின் பிரதான கட்டிடத்தின் முதல் இரண்டு தம்பங்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் இப்போது மத்திய பொது சதுக்கத்திலிருந்து 11 மீட்டர் உயரம் கொண்டுள்ளன.

இறுதியில் எட்டு தம்பங்கள் கட்டப்பட்டு, பிரதான கட்டிடத்தின் சுவர்களின் ஒரு பகுதியை உருவாக்கி, மத்திய சதுக்கத்தைப் பரப்பும் குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டிக்கு ஆதரவளிக்கும்.

பிரதான கட்டிடத்தின் மேற்கில், மத்திய சதுக்கத்தைச் சுற்றியுள்ள மடிப்புச் சுவர்களின் முதல் மூன்று பகுதிகள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் பத்து ஒத்தவிதமான பகுதிகள் ஒவ்வொன்றாக கட்டப்பட்டு வருகின்றன.

News.bahai.org’இல் உள்ள படங்களின் தொகுப்பு, நெடுவரிசைகள் மற்றும் சதுக்க சுவர்களில் பணியின் முன்னேற்றத்தையும், தளத்தின் வேறு சில முன்னேற்றங்களையும் காட்டுகிறது. அங்கு வழங்கப்பட்டுள்ள படங்கள் அனைத்தின் முழு காட்சிகளையும் இங்கு காணலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட முதல் தம்பம் வலப்புற படத்தில் காணப்படுகின்றது. இடதுபுறத்தில் கடந்த வாரம் பூர்த்தி செய்யப்பட்ட இரண்டாவது தம்பத்தில் பணிகள் நடைபெறுகின்றன.
மஞ்சள் நிறத்தில் காணப்படும் எஃகு கட்டமைப்பு நிலைப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் காரை ஊற்றப்பட்டு இறுகிட விடப்படுகிறது. இறுதியில் அந்த எஃகிலான உருவமைப்பு அச்சுகள் கழற்றப்பட்டு அடுத்த பகுதிக்கு பயன்படுத்தப்படுகின்றன.
மடிப்பான சுவர்கள் – இவை பின்னர் கற்களால் அனிவிக்கப்படும்
வடக்கு மற்றும் தெற்கு சதுக்கங்களை சூழும் நான்கு வாசல் சுவர்கள் பூர்த்தியாகியுள்ளன.
பல்வேறு வடிவிலான தொட்டிகள் வடக்கு சதுக்கத்தை அலங்கரிக்கவிருக்கும் தோட்டங்களுக்காகக் கட்டப்படுகின்றன.
வடக்கு சதுக்கத்தின் தற்போதைய மேம்பாடு இடப்புறம் காணப்படும் வடிவமைப்பிற்கு வலப்புறத்தில் காணப்படுகிறது

மூலாதாரம்: https://news.bahai.org/story/1509/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: