கோவிட் தடுப்பூசி தேவை(யா?)


கோவிட்-19’க்குக் காரணமான நவல் கொரோனா நச்சுயிரி–இது SARS-CoV-2 எனப் பின்னர் பெயரிடப்பட்டது–குறித்த முதல் மனித தொற்று கடந்த டிசம்பர் 2019’இல் சீன நாட்டின் வூஹான் நகரின் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது. கொரொனாவுக்கு முதன் முதலில் பலியானவர் அறுபது வயதைத் தாண்டிய வயோதிகர் ஒருவர். பின்னர் சீன சுற்றுலா பயணி ஒருவரினால் இந்த நோய் பிரான்ஸ் நாட்டிற்குப் பரவியது. வருடம் 2020 மார்ச் மாதத்தில் உலக சுகாதார அமைப்பு இந்த நோயை ஒரு பெருந்தொற்றாக பிரகடனம் செய்தது. இதற்குப் பிறகு இந்த நோய் உலகம் முழுவதும் பரவியது. பெரும்பாலான நாடுகள் இந்தத் தொற்று பரவாமல் தடுப்பதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதில் முடக்க நடவடிக்கை, நடமாட்டக் கட்டுப்பாடு போன்றவை முக்கிய நடவடிக்கைகளாகும்.

நோய் மிகவும் மோசமாகப் பரவிய போது, இதற்கான தடுப்பு மருந்தைத் தயாரிக்க பல நாடுகள் முயன்றன. ஐக்கிய அமெரிக்காவில் இந்தத் தடுப்பூசியைத் தயாரிக்கும் பணி மும்முரமாகியது. முதல் மனிதர் மீதான சோதனை இரண்டு தடுப்பு மருந்துகளான அஸ்ட்ரா ஸெனேக்கா மற்றும் நோவாவேக்ஸ் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இன்று பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன மற்றும் தயாரிக்கப்பட்டும் வருகின்றன.

இந்த கோவிட்-19 நோய் பெருந்தொற்றாகிய போது, பல வதந்திகள் பரவ ஆரம்பித்தன. உதாரணமாக, இது மனிதர்களால் தயாரிக்கப்பட்ட ஒரு நச்சுயிரி எனவும் அது தவறுதலாக ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து வெளியாகி மனிதர்களிடையே பரவியது எனவும், இந்த தடுப்பூசிகளால் பல பக்கவிளைவுகள் உண்டாகின்றன எனவும் பெரும் மருந்தீட்டு நிறுவணங்களின் (pharmaceutical companies) பணம் சம்பாதிப்பதற்கான ஒரு சூழ்ச்சியாகவும் இது இருக்கலாம் எனவும் பலவிதமான வதந்திகள் உலா வந்தன.

எவ்வித வந்திகளானாலும் அவற்றின் வாய்மையைக் கண்டறியாமல் அவற்றின் மீது நம்பிக்கை வைப்போர் பலர் உள்ளனர். இதைத்தான் வள்ளுவர், “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”, எனக் கூறியுள்ளார். தன்னிச்சையாக உண்மையை ஆராய்தல் பஹாய் கொள்கைகளில் ஒன்றாகும். இது சமயம் சம்பந்தமானது மட்டுமல்ல, இது எல்லா துறைகளுக்கும் பொருந்தும். சந்தேகங்கள் இருப்பின் நல்ல அனுபவசாலிகளான மருத்துவர்களின் ஆலோசனையை நாட வேண்டுமென பஹாய் சமயம் அறிவுறுத்துகின்றது.

white and black plastic bottle

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதனால் அவர்களுக்கு மோசமான சில பக்கவிளைவுகள் ஏற்படுவதாகக் கூறி, தாங்கள் மட்டுமல்ல, தங்களுடன் சேர்ந்து பிற பெற்றோர்களையும் இதை நம்ப வைத்துள்ளனர். இவ்வித வதந்திகளின் பரவலில் முகநூல் (Facebook) முக்கிய பங்காற்றியுள்ளது. ஒரு செய்தி உண்மையா அல்லவா என்பது அறியப்படுவதற்குள் அது காட்டுத் தீ போன்று உலகம் முழுவதும் பரவிவிடுகின்றது.

சில இடங்களில், பல சாமியார்களும் இந்த தொற்றுநோய் வராமல் தங்களால் தடுக்க முடியும் எனக் கூறினர். அதில் ஒரு சாமியார் அதே கோவிட் தொற்றினால் தாமே இறந்தும் போனார். வேறு சிலரோ, வெண்ணீர் அருந்தினால் இந்த நோய் வராமல் தடுக்க முடியலும் என்றனர். சிலர் நாட்டு மருந்துகளைப் பரிந்துரைத்தனர். நாட்டு மருந்துகள் பரவாயில்லை ஆனால் அவை மட்டும் கோவிட்-19’ஐத் தடுத்திட முடியும் எனக்கூறுவது அபத்தமானது.

எவ்வாறாயினும், கோவிட்-19 ஒரு மெய்ம்மை, அதற்கு எதிராக நம்மைப் பாதுத்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்வது நம்மைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல, மாறாக, கோவிட் நோய் நம்மூலமாக பிறருக்குப் பரவாமல் இருப்பதற்கும் தடுப்பூசி ஒரு முக்கிய வழியாகும். நாம் நம்மைப் பற்றி மட்டும் நினைக்காமல் நமது சொந்து விருப்பு வெறுப்புகளைப் பற்றி மட்டும் பார்க்காமல் எதையும் முடிவு செய்வதற்கு முன்னால் நமது சமுதாயம் சார்ந்த கடமைகள் மற்றும் பொது நலன்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும்.

பெரும்பாலும் தடுப்பூசிகள், பல வருட காலங்களுக்கு சோதனை செய்யப்பட்ட பின்பே சந்தைக்கு வருகின்றன. ஆனால், கொரோனா-19’இன் கோரத் தாண்டவத்தினால் தடுப்பூசிகள் மிகவும் விரைவாக தயாரிக்கப்பட வேண்டிய ஒரு சூழ்நிலை உண்டாகியது. இருப்பினும், இத்தடுப்பூசி நன்கு பரிசோதிக்கப்பட்ட பிறகே பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது.

இன்று இந்த கோவிட் பரவலினால் வேறு பல சமுதாய பிரச்சினைகளும் இன்று படிப்படியாகத் தோன்றியுள்ளன: உடல்நிலையில் நிரந்தர பாதிப்பு, முழு கதவடைப்பினால் பலர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர், மற்றும் இழந்தும் வருகின்றனர், குடும்ப வன்முறைகளில் அதிகரிப்பு, மாணவர்கள் பள்ளி செல்ல முடிவதில்லை, அப்படியே இணையம் மூலம் கல்வியைத் தொடர்வதானாலும், அதற்குத் திறன்பேசிகள் அல்லது கணினிகள் வேண்டும், குடும்ப உறுப்பினர்களின் இறப்பால் பல குழந்தைகள் இன்று அநாதைகள் ஆகியுள்ளனர், வேலையிழந்து, உணவுக்கு வழியில்லாமல், இன்று தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.

இந்த கொரொனா தொற்றின் நீண்டகால பாதிப்புகள் என்னவென்பதை நம்மால் முழுமையாக கணிக்க முடியாவிட்டாலும், ஓரளவுக்காவது அதன் பாதிப்புகளை நம்மால் உணர முடிகிறது. முக்கியமாக இன்றை இளைய தலைமுறையினர் மீதான தாக்கம் மிகவும் மோசமானதாகவே இருக்கும். இந்தக் கொரோனா இன்னும் பல வருடங்கள் நீடிக்கக் கூடியதாக இருந்தாலும், அது தோய்ந்து போவதற்குள் வேறு பல தொற்றுகளும் உண்டாக வாய்ப்புகள் உண்டு. மனிதர்கள் இன்று சுகாதாரம், மருத்துவம் போன்றவற்றில் நம்பிக்கை வைத்தாலும் கடவுள் நம்பிக்கை எனும் புளியங்கொம்பில் தங்களின் முழு நம்பிக்கையை வாக்காத வரை உலகில் இத்தகைய நோய்களும் தொல்லகளும் உண்டாகிக் கொண்டேதான் இருக்கும்.

நீ உன்னையே துறந்து என்பால் திரும்பும் வரை, உனக்கு அமைதி கிடையாது; யான் தனியனாகவும், இருப்பனவற்றிற்கெல்லாம் மேலாகவும் நேசிக்கப்படுவதையே விரும்புவதனால், உனது சொந்தப் பெயரிலல்லாது எனது பெயரில் பெருமை கொள்வதுவும், உன்னிலல்லாது என்னில் நம்பிக்கை வைப்பதுவுமே உனக்குப் பொருத்தமாகும். -பஹாவுல்லா

புதிய கெனேடிய பாராளுமன்ற மாநாடு சமுதாயத்தில் மதத்தின் பங்கை ஆராய்கிறது



29 ஜூன் 2021


ஒட்டாவா, கனடா, 29 ஜூன் 2021, (BWNS) – ஆளுகைக்கு சமயத்தின் பங்கு பற்றிய ஒரு அரிய உரையாடலில், கெனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாட்டின் மத சமூகங்களின் பிரதிநிதிகள் சமீபத்தில் அனைத்து கட்சி நாடாளுமன்ற இடைக்கால மாநாட்டின் தொடக்கக் கூட்டத்தை நடத்தினர் – இது, நாடு எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய ஆய்வில் சமய கொள்கைகளும் நுண்ணறிவுகளும் எவ்வாறு பங்களிக்கக்கூடும் என்பதை ஆராய்வதற்கான ஒரு புதிய தளமாகும்.

“நாம் யார், எவற்றிற்கு மதிப்பளிக்கிறோம் என்பதை மதம் வரையறுக்கிறது என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு மற்றும், மாற்றத்திற்காக நாம் அறிவூட்டும் ஒரு வாகனமாக இருக்கும் ஜனநாயகமானது பெரும்பாலும் இந்த விழுமியங்களால் வழிநடத்தப்படுகிறது” என கெனேடிய செனட் சபையின் உறுப்பினரான மொபினா ஜாஃபர் கூறினார்.

சமீபத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து-கட்சி கோக்கஸ் (மாநாடு) கெனடாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் உறுப்பினர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது மற்றும் நியமிக்கப்பட்ட செனட் மற்றும் கெனேடிய சமய நல்லிணக்க உரையாடலின் (சிஐசி) ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கெனடாவின் பஹாய் சமூகமும் உறுப்பினராக உள்ளது.

“தொற்றுநோய் அரசாங்கத்திற்கும் மத சமூகங்களுக்கும் இடையில் புதிய வகையான உரையாடல்களை உருவாக்கியுள்ளது” என்று கெனேடிய பஹாய் பொது விவகார அலுவலகத்தின் ஜெஃப்ரி கேமரூன் கூறினார். “இது அவர்களின் சமூகத்திற்குச் சேவை செய்ய மக்களை ஊக்குவிப்பதில் மதம் தொடர்ந்து வகிக்கும் முக்கிய பங்கைத் தலைவர்களுக்கு மேலும் உணர்த்தியுள்ளது.”

முன்னாள் எம்.பி.யும் அமைச்சரவை அமைச்சருமான ஸ்டாக்வெல் டே, குறிப்பாக நெருக்கடிமிக்க காலங்களில், ஆறுதலையும் நம்பிக்கையையும் கொண்டுவருவதற்கான மதத்தின் சக்தி குறித்து பேசினார். “நமது சமுதாயத்தில் மதம் குறித்த எண்ணமானது, அது ஒரு தலைவரின் மீது கட்டுப்பாடு கொண்டுள்ளது என்பதையும், தன்னை விட அல்லது தாம் தொடர்புகொண்டுள்ள குழுவைவிட ஒரு மகா சக்தி உள்ளது என்னும் சாத்தியத்தினாலும் அவருள் ஒருவித பணிவு இருக்க வேண்டும்

கடந்த டிசம்பரில், கனடா முழுவதிலும் உள்ள பஹாய் தேசிய ஆன்மீக சபை மற்றும் உள்ளூர் ஆன்மீக சபைகளின் உறுப்பினர்கள் உட்பட பலதரப்பட்ட மதத் தலைவர்கள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைச் சந்தித்து, தொற்றுநோய்களின் பின்னணியில் மத சமூகங்களின் பங்களிப்பு குறித்து பேசினர்.

தொடர்ந்து அவர்: “தனிநபர்களுக்கு மத உணர்வு இருந்தால், நம்மைவிட மகத்தான ஒன்று இருக்கின்றது எனும் போது – அது ஓர் ஆறுதலளிக்கும் உணர்வை எற்படுத்துகிறது.

“எனவே இது ஓர் அரசியல் அமைப்பினுள் மில்லியன் கணக்கான குடிமக்கள் மீதான பரவலை நாங்கள் கற்பனை செய்கிறோம், அவர்களில் கணிசமான பகுதியினர் உண்மையில் அங்கே கடவுளின் சக்தி இருப்பதாக நம்புகிறார்கள், [அவர்கள்] பெரும் மரியாதை உணர்வுடன் வாழ்வதுடன், ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுகின்றனர் என நாம் நம்புகின்றோம்.”

தனிநபர் உத்வேகத்திற்கும் அப்பால், கோட்பாடு வகுக்கும் செயல்முறைக்கு மதம் முக்கிய பங்களிப்புகளை வழங்க முடியும் என பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கார்னெட் ஜெனுயிஸ் கூறுகையில், “மதத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு கருத்துக்கள் உள்ளன: ஒன்று அன்பு, மற்றொன்று உண்மை. அந்த இரண்டு கருத்துக்களும் ஒன்றாகச் கைகோர்த்துச் செல்ல வேண்டும். உங்களிடம் அன்பு இருந்து, ஆனால் உண்மை உணர்வு இல்லையெனில்,… உண்மையில் என்ன நடக்கிறது அல்லது ஒருவரின் உண்மையான தேவைகள் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர். உங்களுக்கு சத்தியத்தைப் பின்தொடரும் ஓர் உணர்வு இருந்து, ஆனால் செயல்பாட்டில் எந்த அன்பும் இல்லையெனில், அதுவும் தெளிவாகவே ஒரு குறைபாடாகும்… அன்பு என்பது கடுமையான அநீதியை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகும். ”

அனைத்து தரப்பு இடைக்கால கோக்கஸ் மாநாட்டின் எதிர்காலம் குறித்து செய்தி சேவையுடன் பேசிய பஹாய் பொது விவகார அலுவலகத்தின் டாக்டர் கேமரூன் இவ்வாறு கூறுகிறார்: “கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சமய சமூகங்களிடையே புதிய உறவுகளை வளர்ப்பது மற்றும் உரையாடல்களை உருவாக்குவதுடன், ஒவ்வொரு சிக்கலையும் ஒர் இரும (பைனரி) தேர்வாக வடிவமைப்பதை விட, பயனுள்ள ஆராய்வின் மூலம் மக்கள் தங்கள் சிந்தனையில் கூட்டாக முன்னேற முடியும். “”மனிதகுலத்தின் இன்றியமையாத ஒற்றுமையின் பஹாய் கொள்கை சமுதாயத்தில் மதத்தின் பங்கு பற்றிய சொற்பொழிவுக்கு அலுவலகத்தின் பங்களிப்புகளுக்கு அடிப்படையானது,” என்று அவர் தொடர்ந்து கூறினார். இந்த கோக்கஸ், அதன் ஆரம்ப கட்டங்களில் இருந்தாலும், அந்தக் கொள்கையின் வெளிப்பாடு மற்றும் அதிக சமூக ஒற்றுமைக்கான ஓர் எடுத்துக்காட்டாக இருக்கின்றது.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1516/

கோவிலின் வருகை பசிபிக் மையத்தில் ஒரு புதிய விடியலைக் குறிக்கின்றது



22 ஜூன் 2021


அதன் கட்டுமானத்திற்கான முக்கிய அம்சங்கள் தொலைதூர தீவான தன்னாவிற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் வானுவாத்துவில் உள்ள உள்ளூர் பஹாய் கோயிலின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன,

லெனகெல், வானுவாத்து, 22 ஜூன் 2021, (BWNS) – வனுவாத்துவின் தலைநகரான போர்ட் வில்லாவிலிருந்து சில நாட்களுக்கு முன்பு தொலைதூரத் தீவான தன்னாவிற்கு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சரக்கானது படகில் பயணம் செய்தது. அது தீவை அடைந்த நேரத்தில், 250’க்கும் மேற்பட்ட மக்கள் அது சுமந்து வந்த சரக்குகளுக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடியிருந்தனர்: உள்ளூர் பஹாய் வழிபாட்டு இல்லத்தின் முக்கிய அம்சங்கள் லெனகெல் நகரில் கட்டப்பட உள்ளன.

படகு வந்தபின், அருகிலுள்ள நகரத்தின் பஹாய் உள்ளூர் ஆன்மீக சபையின் உறுப்பினர் ஜோசப் துவாக்கா, “இந்த தருணத்திற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றோம். “ஒரு நாள், தன்னா மக்கள் ஒரே இல்லத்தி ஒன்றாகப் பிரார்த்திப்பார்கள் எனும் ஒரு பாரம்பரிய நம்பிக்கை உள்ளது. அந்த நாள் இப்போது வந்துவிட்டது.”

அரசாங்கத்திற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளின்படி தனிநபர் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மேல் இடது: தன்னாவின் குடியிருப்பாளர்கள் தீவின் உள்ளூர் பஹாய் வழிபாட்டு இல்லத்தின் அம்சங்களின் வருகையைக் குறிக்கும் ஒரு வழிபாட்டு நிகழ்ச்சியை நடத்துகின்றனர். மேல் வலது: படகுக் குழுவினர் தன்னாவுக்கு வந்தபின் இறங்கத் தயாராகிறார்கள். கீழே: குழுவினர் இறக்குவதற்கு அலை மாற்றத்திற்காக காத்திருக்கும்போது, குடியிருப்பாளர்கள் அவர்களை கரைக்கு வரவேற்று, கழுத்தில் மலர் பரிசுகளை பாராட்டுதலின் வழக்கமான அடையாளமாக வைக்கின்றனர்.

வானுவாத்துவின் பஹாய் தேசிய ஆன்மீக சபை உறுப்பினரான நலாவ் மனகெல் கூறுகின்றார்: “தன்னா மக்களின் பல பாரம்பரிய பாடல்களும் கதைகளும் ஒரு புதிய வாழ்க்கை முறையைப் பற்றி பேசுகின்றன, எல்லா பகைவும் இல்லாமல் போகும், அமைதியும் நல்லிணக்கமும் வரும் . எங்கள் சமூகத்தில் ஒரு பஹாய் கோயில் தோன்றுவது இந்தத் தீவில் ஆன்மீக ரீதியாகவும் பொருள் ரீதியாகவும் நடைபெற்று வரும் ஒரு பெரிய மாற்றத்தைச் சுட்டிக்காட்டுகிறது. ”

வழிபாட்டு சபையின் முக்கியத்துவத்தைப் பற்றி மேலும் பேசிய கோயிலின் இயக்குனர் டிஸ்லைன் லபூம் பின்வருமாறு கூறினார்: “கோயிலை ஆன்மீக அடைக்கலமாக நாங்கள் பார்க்கிறோம்; அங்கு நாங்கள் ஒன்றுகூடி பிரார்த்திப்போம்; மகிழ்ச்சி அல்லது நெருக்கடியான காலங்களில் எங்கள் சமூகத்திற்கு சேவை செய்வதற்கான உத்வேகத்தை அதிலிருந்து பெற்றிடுவோம்,”

கோயிலின் மைய மண்டபம் ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மர சுவர்கள் மற்றும் வானுவாத்துவின் பாரம்பரிய கட்டிடக்கலைக்கு மாதிரியாக ஒரு கூரை மறைக்கப்பட்ட எஃகு கட்டமைப்பால் ஆதரிக்கப்படுகிறது. இந்த கட்டமைப்பின் பல்வேறு பகுதிகள் வானுவாத்து மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு, தன்னாவிற்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு, தலைநகரான போர்ட் விலாவில் அவை தயாரிக்கப்பட்டன.

வழிபாட்டு சபைக்கு நவம்பரு 2019’இல் அடிக்கல் நாட்டியதிலிருந்து, பலரும் கோவில் தளத்தில் ஒன்று கூடி பிரார்த்தனை செய்து திட்டத்தின் பல்வேறு அம்சங்களுக்கு உதவி வழங்குகிறார்கள்.

சுற்றியுள்ள துணை கட்டமைப்புகளில் ஒன்றிற்கான உறைப்பூச்சு செய்ய சிலர் மூங்கில் நெசவு செய்கிறார்கள். சிலர் பசிபிக் பெருங்கடலைக் காணும் ஒரு படித்தள சரிவில் பெரிய சமூகக் கூட்டங்களுக்கு ஒரு ஆம்ஃபிதியேட்டரைத் தயாரிக்கிறார்கள். சிலர், மேலும், அந்தப் பகுதியின் பசுமையான தாவரங்களுடன் தளம் அதிகமாக வளரவிடாமல் தடுப்பதன் மூலம் மைதானத்தின் பராமரிப்பிற்கு உதவுகிறார்கள்.

“இளைஞர்கள், தாய்மார்கள், தந்தைகள், முதல்வர்கள், எல்லோரும், தங்கள் கருவிகளுடன் வந்து உதவுகிறார்கள்” எனத் திரு. மனகெல் கூறினார்.”. அதையெல்லாம் அவர்கள் மகிழ்ச்சியுடன் செய்கிறார்கள் என்பதை அவர்களின் முகங்களில் காணலாம். வருங்கால சந்ததியினருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காரியத்திற்கு அவர்கள் பங்களிப்பு செய்கிறார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். ”

மத்திய மாளிகைக்கான பொருள் தன்னாவுக்கு வந்ததிலிருந்து, முக்கிய எஃகு அமைப்பு லெனகெல் நகரில் உள்ள கோயில் தளத்தில் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோவிலின் உச்சியில், வழிபாட்டு மன்றத்தில் ஒளியை அனுமதிக்கும் ஒரு கண்ணாடி ஓக்குலஸ் (occulus) அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு தற்காலிக மைய நெடுவரிசையைப் பயன்படுத்தி நிலைப்படுத்தப்பட்டுள்ள முதல் பகுதியாகும். இந்த எரிமலை தீவின் நிலப்பரப்பைக் குறிக்கும் ஆழமான பள்ளத்தாக்குகள் வடிவிலான கூரையின் ஒன்பது இறக்கைகள் பின்னர் அதைச் சுற்றி ஒவ்வொன்றாகப் பொருத்தப்பட்டன.

எரிமலைத் தீவின் நிலப்பரப்பைக் குறிக்கும் ஆழமான பள்ளத்தாக்குகளின் வடிவிலான கூரையின் ஒன்பது இறக்கைகள், ஓக்குலஸைச் சுற்றி ஒவ்வொன்றாக பொருத்தப்பட்டன.

எதிர்காலத்தைப் பற்றி பிரதிபலிக்கும் திரு. மனக்கெல் கூறுவதாவது, “பசிபிக் பெருங்கடல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தற்போது உலகில் சில பஹாய் கோயில்கள் மட்டுமே உள்ளன, அவற்றில் பல எழுப்பப்பட்டு அல்லது பசிபிக் கரையில் கட்டப்பட்டும் வருகின்றன. ஒரு நாள் அனைத்து பெருங்கடல்களிலும் கண்டங்களிலும் உள்ள பல கிராமங்களும் நகரங்களும் கோவில் எழுவதைக் கண்டபோது நாங்கள் அனுபவித்த அதே மகிழ்ச்சியை அவர்களும் உணருவார்கள் என நம்புகிறோம் — கடலின் நடுப்பகுதியில் இருந்து நம்பிக்கையின் ஓர் ஒளி பிரகாசிப்பதைப் போன்று.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1515/

ஓர் ஒன்றுபட்ட அமெரிக்காவை நோக்கிய பாதை



16 June 2021



8 அக்டோபர் 2021


வாஷிங்டன், டி.சி, 16 ஜூன் 2021, (BWNS) – நூறு ஆண்டுகளுக்கு முன்பு, மே மாதத்தில், ஐக்கிய அமெரிக்காவில் முதல் இன நட்பு மாநாடு வாஷிங்டன் டி.சி.’யில் அமெரிக்க பஹாய் சமூகத்தால் நடத்தப்பட்டது, இது நாட்டில் இன ஒற்றுமையை நோக்கிய பாதையில் ஒரு வரையறுக்கும் தருணமாக இருந்தது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியின் விளக்கம் பின்வருமாறு இருந்தது: “அரை நூற்றாண்டுக்கு முன்பு அமெரிக்காவில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது. தப்பெண்ணத்தை வெல்லும் பொருட்டு இப்போது மற்றொரு பெரிய முயற்சி தேவை. தற்போதைய தவறுகளை திருத்துவதற்கு எந்த இராணுவமும் தேவையில்லை, ஏனெனில் நமது குடிமக்களின் இதயங்களே நடவடிக்கைக்கான தளங்களாகும்.”

அந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில், அமெரிக்க பஹாய் பொது விவகார அலுவலகம் கல்வியாளர்கள், பொது சமூகத் தலைவர்கள் மற்றும் பிற சமூக நடிகர்களை, ஒன்றாக மேம்பாடு காண்பது: ஒரு நியாயமான, உள்ளடக்கிய மற்றும் ஒருங்கிணைந்த சமூகத்தை நோக்கிய ஒரு பாதையை உருவாக்குதல் என தலைப்பிடப்பட்ட ஒரு மூன்று நாள் இணைய கருத்தரங்கிற்கு ஒன்றுகூட்டியது.

ஐக்கிய அமெரி்கக பஹாய் பொது விவகார அலுவலகம் நடத்திய மூன்று நாள் இணையதள கருத்தரங்கின் குழு உறுப்பினர்கள், ஒன்றாக முன்னேறுதல்: ஒரு நியாயமான, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் ஒருங்கிணைந்த சமூகத்தை நோக்கிய ஒரு பாதையை உருவாக்குதல்

“இன்று இங்கு கூடியிருந்த நாங்கள், சமுதாயத்தின் கட்டமைப்பில் ஓர் ஆழ்ந்த உயிர்ம மாற்றத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளோம் என்பதை நாங்கள் அறிவோம்” என அவ்வொன்றுகூடல் அலுவலகத்தின் பி.ஜே. ஆண்ட்ரூஸ் கூறினார்.

“நாட்டில் நீதியை உருவாக்கத் தேவையான மாற்றம் சமூக மற்றும் பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல, அது தார்மீகமும் ஆன்மீகமும் சார்ந்ததாகும்” என அவர் தொடர்ந்தார்.

பஹாய் உலக செய்தி சேவை போட்காஸ்ட் சமீபத்திய குறுந்தொடர் கருத்தரங்கின் சிறப்பம்சங்களை வழங்குகிறது. இதில், குழு உறுப்பினர்கள் பகிரப்பட்ட அடையாள உணர்வை வளர்ப்பதில் மொழியின் பங்கு, உண்மைக்கும் நீதிக்கும் இடையிலான உறவு, சமூக நீதியை நோக்கிய முயல்வுகளில், ஒழுங்குமுறை சார்ந்த மாற்றங்களை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியம் உள்ளிட்ட தலைப்புகளைப் பற்றி விவாதித்தனர்.

சிம்போசியத்தில் நடந்த விவாதங்கள், நாடு முழுவதும் உள்ள சுற்றுப்புறங்களில் உள்ள பல்வேறு பின்னணியிலான மக்களிடையே ஒத்துழைப்பு மற்றும் வலுவான நட்பின் பிணைப்பை வளர்ப்பதில் ஐக்கிய அமெரிக்க பஹாய் சமூகத்தின் அனுபவங்களைப் பார்த்தன. இந்த முயற்சிகளில் சில இங்கே படம்பிடிக்கப்பட்டுள்ளன.

கூட்டத்தில் உரையாடல்கள் முழுவதும் மனிதகுலத்தின் இன்றியமையாத ஒற்றுமையின் ஆன்மீகக் கொள்கை இழையோடியது. பஹாய் போதனைகளிலிருந்து, பஹாய் பொது விவகார அலுவலகத்தின் மே லாம்பிள் கூறியதாவது: “நமது சமூகத்திலிருந்து அனைத்து வகையான இனவெறிகளையும் ஒழிக்க முற்படும் எந்தவொரு இயக்கமும் சாராம்சத்தில் அனைத்து மனிதர்களும் சமம் எனும் கருத்தின் அடிப்படையில் கணிக்கப்பட வேண்டும். , அவர்கள் கண்ணியத்திற்கு தகுதியானவர்கள், அவர்கள் தனித்துவமான திறன்களையும் திறமைகளையும் கொண்டிருக்கிறார்கள். மேலும், அவர்கள் பாதுகாப்பு, காப்பீடு ஆகியவற்றுக்கு உரியவர்கள்.

“நமது ஒற்றுமை மற்றும் பரஸ்பர தொடர்புமையைப் புரிந்து கொள்ளாத நிலையில் நம் வாழ்க்கையில் தேவையான மற்றும் மதிப்புமிக்க பலக்கியதன்மை. அழகு ஆகியவற்றை சேர்ப்பதற்கு மாறாக, நமது வேறுபாடுகளே மிகப் பெரிதாகத் தோன்றுகின்றன.”

இந்தக் கருத்தரங்கு, இன ஒற்றுமை குறித்த சொற்பொழிவுக்கு அமெரிக்காவில் உள்ள பஹாய் பொது விவகார அலுவலகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பின் ஒரு பகுதியாகும். கருத்தரங்கு விவாதங்களின் பதிவுகளை இங்கே காணலாம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1514/

நிலைபேற்றுக்கு விவசாய முறைமைகளில் மாற்றம் அவசியம் – பஹாய் அனைத்துலக சமூகம்



8 ஜூன் 2021


BIC BRUSSELS, 8 ஜூன் 2021, (BWNS) – ஒவ்வொரு ஆண்டும், ஆப்பிரிக்காவிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பாவுக்குச் சென்று ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் உள்ள பண்ணைகளில் வீழ்ச்சியடைந்து வரும் எண்ணிக்கையிலான தேசிய விவசாயத் தொழிலாளர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனர். இந்தத் தொழில்துறை புலம்பெயர்ந்து வரும் பருவகால தொழிலாளர்களை அதிகரப்புடன் சார்ந்துள்ளது.

[படம்: பஹாய் சர்வதேச சமூகத்தின் பிரஸ்ஸல்ஸ் அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆகியவை விவசாயம், கிராமப்புற நிலைத்தன்மை மற்றும் இடம்பெயர்வு ஆகியவற்றுக்கு இடையிலான உறவை ஆராய ஒரு கருத்தரங்கு தொடரைத் தொடங்கின.]

ஏப்ரல் 2020’இல் தொற்றுநோய் அனைத்துலக பயணத்தை சீர்குலைத்தபோது, ஐரோப்பா முழுவதும் வசந்தகால அறுவடை ஆபத்தில் சிக்கியது, இது பருவகால தொழிலாளர்கள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்புமையின் அளவையும் அவர்களின் கடினமான வாழ்க்கை நிலைமைகளையும் வெளிப்படுத்துகிறது. கூடுதலாக, தொற்றுநோய் பொருளாதார நெருக்கடிகள், விவசாயிகளால் நிலம் இழப்பு மற்றும் ஆப்பிரிக்காவில் கிராமப்புறங்களை விட்டு வெளியேற மக்களைத் தூண்டும் பிற காரணிகள் குறித்து புதிதான கவனத்தை கொண்டுவந்துள்ளது.

“விவசாய விவகாரங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட விதம் நிலையானவையாகவோ சமமானவையாகவோ இல்லை, அது ஐரோப்பா, ஆபிரிக்கா அல்லது உலகில் வேறு எங்காயினும் சரி. மனிதகுலத்தின் ஒற்றுமை போன்ற கொள்கைகளின் வெளிச்சத்தில் உன்னிப்பாக ஆராயப்பட வேண்டிய அடிப்படை கேள்விகள் உள்ளன, ”என்று கடந்த புதன்கிழமை அலுவலகம் நடத்திய ஆன்லைன் கருத்தரங்கில் பஹாய் சர்வதேச சமூகத்தின் (BIC) பிரஸ்ஸல்ஸ் அலுவலகத்தின் ரேச்சல் பயானி கூறினார். .

இந்த கூட்டம் பிரஸ்ஸல்ஸ் அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) இணைந்து நடத்திய ஒரு கருத்தரங்குத் தொடரின் ஒரு பகுதியாகும், இது ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவிலிருந்து கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொது சமூக அமைப்புகளை ஒன்றுகூட்டி, வேளாண்மை, கிராமப்புற நிலைத்தன்மை மற்றும் இடம்பெயர்வுக்கிடையிலான தொடர்பை, குறிப்பாக இரு மண்டலங்களுக்கிடையிலான, கூட்டாண்மை சூழலில் ஆராயும்.

FAO’இன் பிரஸ்ஸல்ஸில் உள்ள தொடர்பு அலுவலகத்தின் இயக்குனர் ரோட்ரிகோ டெ லாபூர்டா, கருத்தரங்குகளின் புதிய அணுகுமுறையைப் பற்றி பேசினார்: “அனைத்து இடம்பெயர்வுகளும் 80% கிராமப்புறங்களை உள்ளடக்கியுள்ளன என FAO மதிப்பிடுகிறது. வேளாண் உணவு முறைகளின் நீடித்தலுடன் இடம்பெயர்வு மற்றும் கிராமப்புற மாற்றம் முற்றிலும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இருப்பினும், இந்த இரண்டு பிரச்சினைகளும் பெரும்பாலும் கூட்டாக கவனிக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை. ”

கூட்டங்களில் கலந்துகொண்டவர்கள் இடம்பெயர்வுக்கும் விவசாயத்துக்கும் இடையிலான தொடர்புகளின் வெவ்வேறு அம்சங்களை எடுத்துரைத்துள்ளனர். “கிராமப்புறங்களில் இருந்து மக்கள் ஏன், எப்படி இடம்பெயர்கிறார்கள் என்பதை பல காரணிகள் பாதிக்கின்றன … [ஆனால்] இந்த இடம்பெயர்வு தேவையை விட விருப்பத்திற்காக செய்யப்படுவது அவசியம்” என இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் மண்டல இயக்குனர் திரு ஓலா ஹென்ரிக்சன் கூறினார். IOM).

மிகச் சமீபத்திய கருத்தரங்கின் ஒரு குறிப்பிட்ட கவனமானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் விவசாயத் துறையின் நம்பகத்தன்மை மற்றும் உற்பத்தி முறைகளை மறுபரிசீலனை செய்வதன் அவசியம் ஆகியவற்றில் செலுத்தப்பட்டது.

“நமது உணவுப் பாதுகாப்பு என்பது நமது வேளாண் உணவுத் தொழிலாளர்களின் உரிமைகளுக்குரிய மரியாதை செலுத்தலைப் பொறுத்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என FAO’இன் தலைமை பொருளாதார வல்லுனரான மாக்சிமோ டோரெரோ கல்லன் சமீபத்திய கூட்டம் ஒன்றில் கூறினார். “புலம்பெயர்ந்தோர் எவ்வளவு இன்றியமையாதவர்கள் என்பதை இந்த தொற்றுநோய் நமக்குக் காட்டியுள்ளது … ஆனால் இது [விவசாய] துறையில் உள்ள மோசமான வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் இந்த தொழிலாளர்கள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் தன்மை பற்றியும் சரியான கவனத்தை ஈர்த்துள்ளது.”

டாக்டர் டோரேரோ கல்லன் மற்றும் பிற பங்கேற்பாளர்கள், நிலையான உணவு மற்றும் விவசாய அமைப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஆபிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் மண்டல அமைப்புகளின் கொள்கைகள், விவசாயத் தொழிலாளர்களின் நலன்கள், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மையத்தில் வைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

“பல ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் தங்களது பருவகால தொழிலாளர் திட்டங்களை முதன்மையாக உள்நாட்டில் தொழிலாளர் சந்தை தேவைகளை பூர்த்தி செய்வதன் அடிப்படையில் வடிவமைக்கின்றன” என ஐரோப்பாவின் இடம்பெயர்வு கொள்கை நிறுவனத்தின் காமில் லு கோஸ் கூறினார். ஆனால் சில நாடுகள் “இணை அபிவிருத்தி” யைச் சுற்றியுள்ள இடம்பெயர்தல் கொள்கைகளை உருவாக்குவது உட்பட பிற அணுகுமுறைகளைப் பார்க்கின்றன என அவர் எடுத்துரைத்தார் – அனுப்புகின்ற மற்றும் பெறுகின்ற நாடுகளுக்கும் தொழிலாளர்களுக்கும் நன்மை பயக்கும் ஏற்பாடுகளை உருவாக்குதல்.

கூட்டத்தைப் பற்றி பிரதிபலிக்கும் திருமதி பயானி கூறுகிறார்: “நமது தற்போதைய பொருளாதார மற்றும் விவசாய அமைப்புகள் மற்றும் இடம்பெயர்வு, சுற்றுச்சூழல், ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரங்களுக்கான அவற்றின் தாக்கங்கள் ஆகியன உன்னிப்பாக ஆராயப்பட வேண்டும். இந்த உரையாடலில் உதவக்கூடிய நுண்ணறிவுகளை பஹாய் போதனைகள் வழங்குகின்றன: பொருளாதாரம் பற்றிய கேள்வி விவசாயியிடமிருந்து தொடங்கப்பட வேண்டும். ஏனெனில், விவசாயி ‘மனித சமுதாயத்தில் முதல் ஆக்ககர முகவராவார்.’ இந்த யோசனை வெவ்வேறு உற்பத்தி முறைகளைப் பார்ப்பதற்கான வழிகள் குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய்ந்திட நம்மை அனுமதிக்கும். ”

அவர் தொடர்கிறார்: “இந்தக் கருத்தரங்குகளில் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள் மனிதகுலத்திற்கு முன் சில ஆழமான கேள்விகளை மட்டுமே பிரதிபலிக்கின்றன. பொருளாதார உறவுகள் உட்பட சமூகத்தின் ஒவ்வொரு கூறுகளும் மனிதகுலத்தின் ஒற்றுமையின் அத்தியாவசியக் கொள்கையின் வெளிச்சத்தில் ஆழமான மாற்றத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என பஹாய் போதனைகள் கருதுகின்றன. ”

வரவிருக்கும் மாதங்களில் எதிர்கால கருத்தரங்குகள் கல்வி மற்றும் கிராமங்களின் எதிர்காலம் போன்ற தலைப்புகளில் கவனம் செலுத்தி, விவசாயம் மற்றும் இடம்பெயர்வு குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1513/

“போர்களுக்கிடையில் சகிப்புத்தன்மை”: ஒரு மீள்ச்சித் திறமிக்க சமூகம் மத்திய ஆப்பிரிக்க குடியரசில் ஆர்வநம்பிக்கையைப் பேணுகிறது.



1 ஜூன் 2021


பாங்குய், மத்திய ஆபிரிக்க குடியரசு, 1 ஜூன் 2021, (BWNS) – மத்திய ஆபிரிக்க குடியரசில் (CAR) பல ஆண்டுகளாக ஆயுத மோதல்கள் நாடு முழுவதும் வாழ்க்கையை சீர்குலைத்து, நூறாயிரக்கணக்கான மக்களை இடம்பெயர செய்துள்ளன.

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் பஹாய் தேசிய ஆன்மீக சபையினால் ஸ்தாபிக்கப்பட்ட அவசர செயற்குழுவின் உறுப்பினர்கள், மூன்று நாட்களாக தலைநகரான பங்கூயிலிருந்து பம்பாரி நகரத்திற்கு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் சென்றனர் வழியில் வனப் பகுதிகளில் தஞ்சம் அடைந்து மீண்டும் திரும்பி வந்த மக்களுக்கு, தண்ணீரினால் பரவும் நோய்களுக்கான மருந்து போன்ற அத்தியாவசியங்களை வழங்குவதற்காக நான்கு நகரங்களில் நிறுத்தினர்.

இந்த நெருக்கடியின் மத்தியில், பஹாய் தேசிய ஆன்மீக சபை நாட்டின் பஹாய்களுக்கு சமூக முன்னேற்றத்திற்குப் பங்களிக்கும் முயற்சிகளில் வழிகாட்டி வந்துள்ளது, மிகச் சமீபத்தில் சமூக நிர்மாணிப்பு செயல்களில் ஈடுபடும் நபர்களின் வலையமைப்பைப் பயன்படுத்தி, உதவி தேவைப்படும் போது தேவைப்படும் உதவிகளை வாய்க்காலிட உதவியுள்ளது.

செய்தி சேவையுடன் பேசிய தேசிய ஆன்மீக சபை உறுப்பினரான ஹெலீன் பாத்தே, நாட்டின் சில பகுதிகளில் இதுபோன்ற முயற்சிகள் நடைபெற்று வரும் சூழலை விவரிக்கிறார்: “நாடு கடுமையான சவால்களை எதிர்கொண்டது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்கள் உள்ளன. அவர்கள், குடியிருப்புகளைக் கைவிட்டு, வாழ்வாதாரத்தை இழந்து அங்கிருந்து தப்பி ஓட வேண்டியிருந்தது. பல மண்டலங்களில் இதுவே நிலை.”

இந்த நிலைமைகள் இருந்தபோதிலும்கூட, இந்த பகுதிகளில் உள்ள பஹாய்கள், பல போர் சுழற்சிகளின் வழி நிலைத்து வந்துள்ள மீள்ச்சித்திறத்தைப் பேணவும் ஒரு துடிப்பான சமூக வாழ்க்கையை வளர்க்கவும் உதவியுள்ளனர். பல தசாப்தங்களாக, பிரார்த்தனைக்கான வழக்கமான கூட்டங்கள் நட்பின் பிணைப்பை வலுப்படுத்தி வந்துள்ளன. மேலும், பஹாய் கல்வித் திட்டங்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே அனைத்து மக்கள், இனங்கள் மற்றும் மதங்களின் ஒற்றுமைக்கான ஆழ்ந்த மதிப்புணர்வை மேம்படுத்தி வந்துள்ளன.

​​முழு மக்கள் தொகைகளும் தங்கள் கிராமங்களை கைவிட வேண்டியிருந்த கடுமையான மோதல்களின் போது, ​​பஹாய் உத்வேகம் பெற்ற ஓர் அமைப்பின் ஆதரவுடன் நிறுவப்பட்ட சமூகப் பள்ளிகளின் ஆசிரியர்கள் தற்காலிகமான இடங்களில் திட்டங்களை மீண்டும் நிறுவுவதற்கான வழிகளை நாடினர் என திருமதி பாத்தே விளக்கினார்.

நெருக்கடிகளுக்கு விடையிறுக்கும் அதன் திறனை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, தேசிய ஆன்மீக சபை மார்ச் மாதத்தில் ஓர் அவசர குழுவை அமைத்தது. திருமதி பாத்தே உட்பட, குழுவின் உறுப்பினர்கள், விரைவாகச் செயல்பட்டனர். சில வாரங்களுக்குள் அவர்கள் ஓர் அணியைத் திரட்டி, அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று உதவி செய்தனர்.

மூன்று நாட்களாக, அவர்கள் தலைநகரான பங்கூயிலிருந்து பம்பாரி நகரத்திற்கு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் சென்றனர். வழியில் வனப் பகுதிகளில் தஞ்சம் அடைந்து மீண்டும் திரும்பி வந்த மக்களுக்கு, தண்ணீரினால் பரவும் நோய்களுக்கான மருந்து போன்ற அத்தியாவசியங்களை வழங்குவதற்காக நான்கு நகரங்களில் நிறுத்தினர். மனிதாபிமான முயற்சிகளுக்கு விதிவிலக்கின் காரணமாக இந்தச் சமூகங்களுக்கான பயணம் அரசாங்க சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கிராமவாசிகளிடையே நிவாரணப் பொதிகளின் விநியோகத்தை ஒருங்கிணைப்பதில் அவசரக் குழு பஹாய் உள்ளூர் ஆன்மீக சபைகளுடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளது. திருமதி. பாத்தே கூறுகிறார்: “நாங்கள் பெறக்கூடிய தகவல்களுடன் நேரத்திற்கு முன்பே முடிந்த அளவு நாங்கள் ஆயத்தம் செய்திருந்தோம். ஆனால், நாங்கள் ஒரு ஊருக்கு வந்தவுடன், உள்ளூர் சபை உறுப்பினர்களுடன் அமர்ந்து, ஒன்றாக ஜெபிரார்த்தித்தோம் மற்றும், அவர்கள் நெருக்கமாக அறிந்திருந்த தேவைகளைப் பற்றி ஆலோசித்தோம்.”

இந்த முயற்சிகளில் இளைஞர்கள் முன்னணியில் இருந்து வந்துள்ளனர் என்று திருமதி பாத்தே கூறுகிறார். “செயற்குழுவினர் ஆதரவளிக்கும்படி சமூகத்தைக் கோரியவுடன், இளைஞர்கள் நடவடிக்கையில் ஈடுபடத் தயாராகினர். அவர்கள் இந்தப் பணியை தங்கள் அண்டைப்புற சேவைகளின் ஒரு விரிவாக்கமாக கருதுகின்றனர்: சமூகத்தின் லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கான ஒரு பங்களிப்பு.

“சில தேவைகளை நேரடியாக மக்களுக்கு வழங்குவதற்காக பல நாட்கள் செய்த இப்பயணம், உடனடி தேவையை நிவர்த்தி செய்வதற்கு மட்டுமல்ல என்பதை அவர்களால் காண முடிந்தது. இவ்வளவு காலமாக துண்டிக்கப்பட்டு வந்தவர்களைச் சந்திப்பதும் பேசுவதும் ஊக்கத்தைக் கொடுத்ததுடன், ஒற்றுமையின் உறவுகளை வளர்த்துக் கொள்ளவும் உதவியது. அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினர் போன்று, தங்கள் சவால்களில் அவர்கள் தனியாக இல்லை என்பதை உணர்ந்தனர். நாடு முழுவதும் மற்றவர்களும் அவர்கள் மீது அக்கறை செலுத்தி அவர்களுடன் உடன் வருகின்றனர்.”

செயற்குழு அமைக்கப்பட்ட இரண்டு மாதங்களிலிருந்து, உள்ளூர் உணவு உற்பத்திக்கான திட்டங்கள் உட்பட நீண்டகால தேவைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது குறித்து குழு சிந்தித்து வந்துள்ளது.

அது பெற்றுள்ள அனுபவத்துடன், செயற்குழு இப்போது நாடு முழுவதும் இன்னும் பல பஹாய் உள்ளூர் சபைகளைத் தொடர்புகொள்வதன் மூலம் தனது முயற்சிகளை விரிவுபடுத்துகிறது. “இந்த நிவாரண முயற்சிகளில், எவ்வாறு அப்துல்-பஹா, தேவைகள் உள்ளோர்பால் எவ்வாறு கவனத்துடன் இருந்தும், பிரதிசெயல்பட தயாராகவும் இருந்தார் என்பதை நாங்கள் அடிக்கடி நினைவில் கொள்கிறோம்‘  ”என்றார் திருமதி பாத்தே. “அப்துல்-பஹா ஒருபோதும் உதவி வழங்க தயங்கவில்லை. தேசிய ஆன்மீக சபை நம் நாட்டு மக்களுக்கும் அவ்வாறே செய்ய விரும்புகிறது.. ஒரு தேசிய அமைப்பாக நம்மை வருத்துவது என்னவென்றால், அது நாடு முழுவதன் மீதும் கவனம் செலுத்த முடியாது. இதுவரையிலான எங்கள் முயற்சிகள் ஒரு சிறிய தொடக்கம்தான். அனைவரையும் எவ்வாறு சென்றடைவது என்பதை நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுவருகிறோம்.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1512/