கோவிட் தடுப்பூசி தேவை(யா?)


கோவிட்-19’க்குக் காரணமான நவல் கொரோனா நச்சுயிரி–இது SARS-CoV-2 எனப் பின்னர் பெயரிடப்பட்டது–குறித்த முதல் மனித தொற்று கடந்த டிசம்பர் 2019’இல் சீன நாட்டின் வூஹான் நகரின் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது. கொரொனாவுக்கு முதன் முதலில் பலியானவர் அறுபது வயதைத் தாண்டிய வயோதிகர் ஒருவர். பின்னர் சீன சுற்றுலா பயணி ஒருவரினால் இந்த நோய் பிரான்ஸ் நாட்டிற்குப் பரவியது. வருடம் 2020 மார்ச் மாதத்தில் உலக சுகாதார அமைப்பு இந்த நோயை ஒரு பெருந்தொற்றாக பிரகடனம் செய்தது. இதற்குப் பிறகு இந்த நோய் உலகம் முழுவதும் பரவியது. பெரும்பாலான நாடுகள் இந்தத் தொற்று பரவாமல் தடுப்பதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதில் முடக்க நடவடிக்கை, நடமாட்டக் கட்டுப்பாடு போன்றவை முக்கிய நடவடிக்கைகளாகும்.

நோய் மிகவும் மோசமாகப் பரவிய போது, இதற்கான தடுப்பு மருந்தைத் தயாரிக்க பல நாடுகள் முயன்றன. ஐக்கிய அமெரிக்காவில் இந்தத் தடுப்பூசியைத் தயாரிக்கும் பணி மும்முரமாகியது. முதல் மனிதர் மீதான சோதனை இரண்டு தடுப்பு மருந்துகளான அஸ்ட்ரா ஸெனேக்கா மற்றும் நோவாவேக்ஸ் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இன்று பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன மற்றும் தயாரிக்கப்பட்டும் வருகின்றன.

இந்த கோவிட்-19 நோய் பெருந்தொற்றாகிய போது, பல வதந்திகள் பரவ ஆரம்பித்தன. உதாரணமாக, இது மனிதர்களால் தயாரிக்கப்பட்ட ஒரு நச்சுயிரி எனவும் அது தவறுதலாக ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து வெளியாகி மனிதர்களிடையே பரவியது எனவும், இந்த தடுப்பூசிகளால் பல பக்கவிளைவுகள் உண்டாகின்றன எனவும் பெரும் மருந்தீட்டு நிறுவணங்களின் (pharmaceutical companies) பணம் சம்பாதிப்பதற்கான ஒரு சூழ்ச்சியாகவும் இது இருக்கலாம் எனவும் பலவிதமான வதந்திகள் உலா வந்தன.

எவ்வித வந்திகளானாலும் அவற்றின் வாய்மையைக் கண்டறியாமல் அவற்றின் மீது நம்பிக்கை வைப்போர் பலர் உள்ளனர். இதைத்தான் வள்ளுவர், “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”, எனக் கூறியுள்ளார். தன்னிச்சையாக உண்மையை ஆராய்தல் பஹாய் கொள்கைகளில் ஒன்றாகும். இது சமயம் சம்பந்தமானது மட்டுமல்ல, இது எல்லா துறைகளுக்கும் பொருந்தும். சந்தேகங்கள் இருப்பின் நல்ல அனுபவசாலிகளான மருத்துவர்களின் ஆலோசனையை நாட வேண்டுமென பஹாய் சமயம் அறிவுறுத்துகின்றது.

white and black plastic bottle

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதனால் அவர்களுக்கு மோசமான சில பக்கவிளைவுகள் ஏற்படுவதாகக் கூறி, தாங்கள் மட்டுமல்ல, தங்களுடன் சேர்ந்து பிற பெற்றோர்களையும் இதை நம்ப வைத்துள்ளனர். இவ்வித வதந்திகளின் பரவலில் முகநூல் (Facebook) முக்கிய பங்காற்றியுள்ளது. ஒரு செய்தி உண்மையா அல்லவா என்பது அறியப்படுவதற்குள் அது காட்டுத் தீ போன்று உலகம் முழுவதும் பரவிவிடுகின்றது.

சில இடங்களில், பல சாமியார்களும் இந்த தொற்றுநோய் வராமல் தங்களால் தடுக்க முடியும் எனக் கூறினர். அதில் ஒரு சாமியார் அதே கோவிட் தொற்றினால் தாமே இறந்தும் போனார். வேறு சிலரோ, வெண்ணீர் அருந்தினால் இந்த நோய் வராமல் தடுக்க முடியலும் என்றனர். சிலர் நாட்டு மருந்துகளைப் பரிந்துரைத்தனர். நாட்டு மருந்துகள் பரவாயில்லை ஆனால் அவை மட்டும் கோவிட்-19’ஐத் தடுத்திட முடியும் எனக்கூறுவது அபத்தமானது.

எவ்வாறாயினும், கோவிட்-19 ஒரு மெய்ம்மை, அதற்கு எதிராக நம்மைப் பாதுத்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்வது நம்மைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல, மாறாக, கோவிட் நோய் நம்மூலமாக பிறருக்குப் பரவாமல் இருப்பதற்கும் தடுப்பூசி ஒரு முக்கிய வழியாகும். நாம் நம்மைப் பற்றி மட்டும் நினைக்காமல் நமது சொந்து விருப்பு வெறுப்புகளைப் பற்றி மட்டும் பார்க்காமல் எதையும் முடிவு செய்வதற்கு முன்னால் நமது சமுதாயம் சார்ந்த கடமைகள் மற்றும் பொது நலன்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும்.

பெரும்பாலும் தடுப்பூசிகள், பல வருட காலங்களுக்கு சோதனை செய்யப்பட்ட பின்பே சந்தைக்கு வருகின்றன. ஆனால், கொரோனா-19’இன் கோரத் தாண்டவத்தினால் தடுப்பூசிகள் மிகவும் விரைவாக தயாரிக்கப்பட வேண்டிய ஒரு சூழ்நிலை உண்டாகியது. இருப்பினும், இத்தடுப்பூசி நன்கு பரிசோதிக்கப்பட்ட பிறகே பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது.

இன்று இந்த கோவிட் பரவலினால் வேறு பல சமுதாய பிரச்சினைகளும் இன்று படிப்படியாகத் தோன்றியுள்ளன: உடல்நிலையில் நிரந்தர பாதிப்பு, முழு கதவடைப்பினால் பலர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர், மற்றும் இழந்தும் வருகின்றனர், குடும்ப வன்முறைகளில் அதிகரிப்பு, மாணவர்கள் பள்ளி செல்ல முடிவதில்லை, அப்படியே இணையம் மூலம் கல்வியைத் தொடர்வதானாலும், அதற்குத் திறன்பேசிகள் அல்லது கணினிகள் வேண்டும், குடும்ப உறுப்பினர்களின் இறப்பால் பல குழந்தைகள் இன்று அநாதைகள் ஆகியுள்ளனர், வேலையிழந்து, உணவுக்கு வழியில்லாமல், இன்று தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.

இந்த கொரொனா தொற்றின் நீண்டகால பாதிப்புகள் என்னவென்பதை நம்மால் முழுமையாக கணிக்க முடியாவிட்டாலும், ஓரளவுக்காவது அதன் பாதிப்புகளை நம்மால் உணர முடிகிறது. முக்கியமாக இன்றை இளைய தலைமுறையினர் மீதான தாக்கம் மிகவும் மோசமானதாகவே இருக்கும். இந்தக் கொரோனா இன்னும் பல வருடங்கள் நீடிக்கக் கூடியதாக இருந்தாலும், அது தோய்ந்து போவதற்குள் வேறு பல தொற்றுகளும் உண்டாக வாய்ப்புகள் உண்டு. மனிதர்கள் இன்று சுகாதாரம், மருத்துவம் போன்றவற்றில் நம்பிக்கை வைத்தாலும் கடவுள் நம்பிக்கை எனும் புளியங்கொம்பில் தங்களின் முழு நம்பிக்கையை வாக்காத வரை உலகில் இத்தகைய நோய்களும் தொல்லகளும் உண்டாகிக் கொண்டேதான் இருக்கும்.

நீ உன்னையே துறந்து என்பால் திரும்பும் வரை, உனக்கு அமைதி கிடையாது; யான் தனியனாகவும், இருப்பனவற்றிற்கெல்லாம் மேலாகவும் நேசிக்கப்படுவதையே விரும்புவதனால், உனது சொந்தப் பெயரிலல்லாது எனது பெயரில் பெருமை கொள்வதுவும், உன்னிலல்லாது என்னில் நம்பிக்கை வைப்பதுவுமே உனக்குப் பொருத்தமாகும். -பஹாவுல்லா

புதிய கெனேடிய பாராளுமன்ற மாநாடு சமுதாயத்தில் மதத்தின் பங்கை ஆராய்கிறது



29 ஜூன் 2021


ஒட்டாவா, கனடா, 29 ஜூன் 2021, (BWNS) – ஆளுகைக்கு சமயத்தின் பங்கு பற்றிய ஒரு அரிய உரையாடலில், கெனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாட்டின் மத சமூகங்களின் பிரதிநிதிகள் சமீபத்தில் அனைத்து கட்சி நாடாளுமன்ற இடைக்கால மாநாட்டின் தொடக்கக் கூட்டத்தை நடத்தினர் – இது, நாடு எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய ஆய்வில் சமய கொள்கைகளும் நுண்ணறிவுகளும் எவ்வாறு பங்களிக்கக்கூடும் என்பதை ஆராய்வதற்கான ஒரு புதிய தளமாகும்.

“நாம் யார், எவற்றிற்கு மதிப்பளிக்கிறோம் என்பதை மதம் வரையறுக்கிறது என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு மற்றும், மாற்றத்திற்காக நாம் அறிவூட்டும் ஒரு வாகனமாக இருக்கும் ஜனநாயகமானது பெரும்பாலும் இந்த விழுமியங்களால் வழிநடத்தப்படுகிறது” என கெனேடிய செனட் சபையின் உறுப்பினரான மொபினா ஜாஃபர் கூறினார்.

சமீபத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து-கட்சி கோக்கஸ் (மாநாடு) கெனடாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் உறுப்பினர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது மற்றும் நியமிக்கப்பட்ட செனட் மற்றும் கெனேடிய சமய நல்லிணக்க உரையாடலின் (சிஐசி) ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கெனடாவின் பஹாய் சமூகமும் உறுப்பினராக உள்ளது.

“தொற்றுநோய் அரசாங்கத்திற்கும் மத சமூகங்களுக்கும் இடையில் புதிய வகையான உரையாடல்களை உருவாக்கியுள்ளது” என்று கெனேடிய பஹாய் பொது விவகார அலுவலகத்தின் ஜெஃப்ரி கேமரூன் கூறினார். “இது அவர்களின் சமூகத்திற்குச் சேவை செய்ய மக்களை ஊக்குவிப்பதில் மதம் தொடர்ந்து வகிக்கும் முக்கிய பங்கைத் தலைவர்களுக்கு மேலும் உணர்த்தியுள்ளது.”

முன்னாள் எம்.பி.யும் அமைச்சரவை அமைச்சருமான ஸ்டாக்வெல் டே, குறிப்பாக நெருக்கடிமிக்க காலங்களில், ஆறுதலையும் நம்பிக்கையையும் கொண்டுவருவதற்கான மதத்தின் சக்தி குறித்து பேசினார். “நமது சமுதாயத்தில் மதம் குறித்த எண்ணமானது, அது ஒரு தலைவரின் மீது கட்டுப்பாடு கொண்டுள்ளது என்பதையும், தன்னை விட அல்லது தாம் தொடர்புகொண்டுள்ள குழுவைவிட ஒரு மகா சக்தி உள்ளது என்னும் சாத்தியத்தினாலும் அவருள் ஒருவித பணிவு இருக்க வேண்டும்

கடந்த டிசம்பரில், கனடா முழுவதிலும் உள்ள பஹாய் தேசிய ஆன்மீக சபை மற்றும் உள்ளூர் ஆன்மீக சபைகளின் உறுப்பினர்கள் உட்பட பலதரப்பட்ட மதத் தலைவர்கள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைச் சந்தித்து, தொற்றுநோய்களின் பின்னணியில் மத சமூகங்களின் பங்களிப்பு குறித்து பேசினர்.

தொடர்ந்து அவர்: “தனிநபர்களுக்கு மத உணர்வு இருந்தால், நம்மைவிட மகத்தான ஒன்று இருக்கின்றது எனும் போது – அது ஓர் ஆறுதலளிக்கும் உணர்வை எற்படுத்துகிறது.

“எனவே இது ஓர் அரசியல் அமைப்பினுள் மில்லியன் கணக்கான குடிமக்கள் மீதான பரவலை நாங்கள் கற்பனை செய்கிறோம், அவர்களில் கணிசமான பகுதியினர் உண்மையில் அங்கே கடவுளின் சக்தி இருப்பதாக நம்புகிறார்கள், [அவர்கள்] பெரும் மரியாதை உணர்வுடன் வாழ்வதுடன், ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுகின்றனர் என நாம் நம்புகின்றோம்.”

தனிநபர் உத்வேகத்திற்கும் அப்பால், கோட்பாடு வகுக்கும் செயல்முறைக்கு மதம் முக்கிய பங்களிப்புகளை வழங்க முடியும் என பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கார்னெட் ஜெனுயிஸ் கூறுகையில், “மதத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு கருத்துக்கள் உள்ளன: ஒன்று அன்பு, மற்றொன்று உண்மை. அந்த இரண்டு கருத்துக்களும் ஒன்றாகச் கைகோர்த்துச் செல்ல வேண்டும். உங்களிடம் அன்பு இருந்து, ஆனால் உண்மை உணர்வு இல்லையெனில்,… உண்மையில் என்ன நடக்கிறது அல்லது ஒருவரின் உண்மையான தேவைகள் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர். உங்களுக்கு சத்தியத்தைப் பின்தொடரும் ஓர் உணர்வு இருந்து, ஆனால் செயல்பாட்டில் எந்த அன்பும் இல்லையெனில், அதுவும் தெளிவாகவே ஒரு குறைபாடாகும்… அன்பு என்பது கடுமையான அநீதியை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகும். ”

அனைத்து தரப்பு இடைக்கால கோக்கஸ் மாநாட்டின் எதிர்காலம் குறித்து செய்தி சேவையுடன் பேசிய பஹாய் பொது விவகார அலுவலகத்தின் டாக்டர் கேமரூன் இவ்வாறு கூறுகிறார்: “கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சமய சமூகங்களிடையே புதிய உறவுகளை வளர்ப்பது மற்றும் உரையாடல்களை உருவாக்குவதுடன், ஒவ்வொரு சிக்கலையும் ஒர் இரும (பைனரி) தேர்வாக வடிவமைப்பதை விட, பயனுள்ள ஆராய்வின் மூலம் மக்கள் தங்கள் சிந்தனையில் கூட்டாக முன்னேற முடியும். “”மனிதகுலத்தின் இன்றியமையாத ஒற்றுமையின் பஹாய் கொள்கை சமுதாயத்தில் மதத்தின் பங்கு பற்றிய சொற்பொழிவுக்கு அலுவலகத்தின் பங்களிப்புகளுக்கு அடிப்படையானது,” என்று அவர் தொடர்ந்து கூறினார். இந்த கோக்கஸ், அதன் ஆரம்ப கட்டங்களில் இருந்தாலும், அந்தக் கொள்கையின் வெளிப்பாடு மற்றும் அதிக சமூக ஒற்றுமைக்கான ஓர் எடுத்துக்காட்டாக இருக்கின்றது.”

மூலாதாரம்: https://news.bahai.org/story/1516/