
6 ஜூலை 2021
பஹாய் உலக மையம் — பணிகள் மேம்பாடு காண்கையில், அப்துல்-பஹா நினைவாலய வடிவமைப்பின் தனித்துவமான கட்டிடக்கலை அம்சங்கள் பல வெளிப்படையாகி வருகின்றன.
மத்திய கட்டிடத்தின் எட்டு தூண்கள் இப்பொழுது பூர்த்தியாகிவிட்டன. மத்திய தளத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மடிவு சுவர்கள் பூர்த்தியாகி, தெண் தளத்தின் வாசல் சுவர் ஒன்றுடன் இணைக்கப்பட்டு வருகின்றன.
அதே நேரம், மத்திய தளத்தின் வழி ஓர் நுண்மையான தட்டி கட்டமைப்பை நிர்மாணிக்கும் பணிக்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த அம்சங்கள் குறித்த மேம்பாடு கீழ்காணப்படும் படத் தொகுப்பில் சித்தரிக்கப்பட்டுள்ளன.

இந்த அகல்பரப்பு படம் எட்டு தூண்களில் ஆறைக் காட்டுகிறது. அவை அனைத்தும் முடிவடைவதற்கு முன்னர் பிரதான கட்டிடத்தின் முக்கிய கட்டமைப்பு அம்சங்களாகும்.

பிரதான கட்டிடத்தின் எட்டு தூண்கள் இப்போது நிறைவடைந்துள்ளன, மேலும் தூண்கள் மற்றும் முடிக்கப்பட்ட மடிப்பு சுவர்களுக்கு இடையிலான இடைவெளியில் சாரக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது.

மடிப்பு சுவர்களின் அரை வட்டம் இப்போது மத்திய தளத்தின் ஒரு பக்கத்தை உள்ளடக்கியுள்ளது. மடிப்பு சுவர்களின் இரண்டாவது தொகுப்பு இப்போது கட்டப்பட்டு வருகிறது, இது தளத்தின் எதிர் பக்கத்தில் முதலாவதை பிரதிபலிக்கிறது.

மடிப்பு சுவர்களின் பூர்த்தி செய்யப்பட்ட தொகுப்பு தெற்கு தளத்தின் வாசல் சுவர்களில் ஒன்றில் இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இடதுபுறத்தில் தெரியும், நினைவாலயத்தைச் சுற்றியுள்ள பாதைக்காக கட்டப்பட்ட அடித்தளங்கள். பாதை மற்றும் சுவர்களுக்கு இடையிலான இடைவெளி இறுதியில் ஒரு சாய்வான தோட்ட தடுப்புச் சுவரினால் நிரப்பப்படும்.

வடக்கு தள பகுதியில் உள்ள தோட்டத் தோட்டிகளின் முன்னேற்றம் இங்கே காணப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட தொட்டிகளின் இரண்டு செட்டுகளுக்கு இடையிலான இடைவெளி வடக்கு பிளாசா வழியாக சுற்றி வளைக்கும் பாதை எங்கு செல்லும் என்பதைக் காட்டுகிறது.

வடமேற்கில் இருந்து ரித்வான் தோட்டத்தை நோக்கிய ஒரு வான்வழி காட்சி.
மூலாதாரம்: https://news.bahai.org/story/1517/