அப்துல்-பஹா: ஏழைகளைப் பராமரித்தல்


“இறைவனின் முன்னிலையில் ஏழைகளைப் பற்றி சிந்திப்பதைவிட சிறப்பானது வேறு என்ன இருக்கமுடியும்? ஏனெனில் ஏழைகளே நமது தெய்வீகத் தந்தையினால் நேசிக்கப்படுகிறார்கள். இயேசு கிருஸ்து இவ்வுலகில் தோன்றியபோது, ஏழைகளும் தாழ்ந்தவர்களுமே அவர்மீது நம்பிக்கைக் கொண்டு அவரைப் பின்பற்றி ஏழைகளே இறைவனின் அருகாமையில் இருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தினர். ஒரு பணக்காரர் கடவுளின் அவதாரத்தின் மீது நம்பிக்கைக் கொண்டும் அவரை பின்பற்றவும் செய்திடும்போது, அவரது செல்வம் அதற்கு ஒரு தடையல்ல எனவும் அவர் மோட்ச கதியை அடைவதை அது தடுக்கவில்லை என்பதற்கும் சான்றளிக்கின்றது. அவர் சோதனைக்கும் பரீட்சைக்கும் உட்படுத்தப்பட்ட பிறகு, அவரது செல்வங்கள் அவரின் சமய வாழ்வில் ஒரு தடையாக இருக்கின்றனவா அல்லவா என்பது வெளிப்படும். ஆனால், ஏழைகள் கடவுளின் தனிச்சிறப்பான அன்புக்குகந்தவர்கள். அவர்களின் வாழ்வு இன்னல்கள் நிறைந்திருக்கின்றது, அவர்களின் சோதனைகள் தொடர்ச்சியானவையாக இருக்கின்றன, அவர்களின் நம்பிக்கை கடவுளில் மட்டுமே இருக்கின்றது. ஆகவே, நீங்கள் முடிந்தவரை, உங்களைத் தியாகம் செய்தாவது ஏழைகளுக்கு உதவ வேண்டும். கடவுளின் முன் ஏழைகளுக்கு உதவும் செயலைவிட மனிதனால் ஆற்றப்படும செயல்கள் எதுவுமே பெரியதல்ல. ஆன்மீகச் சூழல்கள் லௌகீக பொக்கிஷங்களைப் பெற்றிருப்பதிலோ அவற்றின் இல்லாமையையோ சார்ந்திருக்கவில்லை. ஒருவர் லௌகீக ரீதியில் வறியநிலையில் இருக்கும்போது, அவர் மனதில் ஆன்மீக எண்ணங்களே மேலோங்கியிருக்கும். ஏழ்மை இறைவனின்பாலான ஒரு தூண்டுகோலாகும். நீங்கள் ஒவ்வொருவரும் ஏழைகளின்பால் பெரிதும் இரக்கம்கொண்டு அவர்களுக்கு உதவிட வேண்டும். அவர்களுக்கு உதவிடுவதற்காகவும் அவர்களின் ஏழ்மையின் அதிகரிப்பை தடுத்திடவும் முயற்சிகள் மேற்கொள்ளுங்கள். சிலர் கோடீஸ்வரர்களாகவும் பலர் வறியோராகவும் இருப்பதைத் தடுத்திடும் வகையில் சமூகத்தின் சட்டங்கள் தக்க முறையில் இயற்றப்படவும் அமல்படுத்தப்படவும் வேண்டும். மனித சமுதாயத்தில் வாழ்வாதாரத்திற்கான வழிகளை ஒழுங்குப்படுத்துவது பஹாவுல்லாவின் போதனைகளுள் ஒன்றாகும். இத்தகைய ஒழுங்கினால் மனிதர்களின் வாழ்வில் செல்வம், தாரகம் இரண்டிற்கிடையில் அகன்ற இடைவெளி இருக்காது. ஓர் இராணுவத்தில் தளபதி, அதிகாரிகள் மற்றும் தரைப்படையினர் இருப்பது போன்று சமூகத்திலும் நிதியாளர், விவசாயி, வணிகர், தொழிலாளி ஆகியோர் தேவைப்படுகின்றனர். எல்லாருமே தளபதிகளாக இருக்கமுடியாது; எல்லாருமே தரைப்படையினராக இருக்கவும் முடியாது. சமூக அமைப்பில் அவரவர் ஸ்தானத்தில் ஒவ்வொருவரும் திறன்வாய்ந்தவர்களாக இருக்கவேண்டும் — ஒவ்வொருவரும் தமது ஆற்றலுக்கு ஏற்ப கடமையாற்றவேண்டும் ஆனால், எல்லாருக்குமே நீதியும் வாய்ப்புக்களும் கிடைக்கவேண்டும்.

மனிதர்களுக்கிடையில் ஆற்றல்கள் குறித்த வேறுபாடுகள் இயல்பானவையாகும். எல்லோருமே ஒரே மாதிரியாகவும், சமமாகவும், விவேகத்துடனும் இருப்பது இயலாலததாகும். வேறுபடும் மானிட திறனாற்றல்களின் சரிப்படுத்தலை சாதிக்கக்கூடிய கோட்பாடுகளையும் சட்டங்களையும் பஹாவுல்லா வெளிப்படுத்தியுள்ளார். மானிட நிர்வாகத்தில் சாதிக்கப்படக்கூடிய அனைத்தும் அவரது கோட்பாடுகளின் வாயிலாக செயல்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்….

…அதே போன்று, செல்வந்தர்கள் ஏழைகளுக்குத் தாராளமாக வழங்கிட வேண்டுமேன பஹாவுல்லா ஆணையிட்டுள்ளார். குறிப்பிட்ட வருமானமுடையோர் அதிலிருந்து ஐந்தில் ஒரு பகுதியை விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்த இறைவனுக்கு வழங்கிட வேண்டும் என கித்தாப்-இ-அக்டாஸ் திருநூலில் அவரால் மேலும் பதிக்கப்பட்டுள்ளது.

(Adapted from – The Promulgation of Universal Peace July 1, 1912, Talk at 309 West Seventy-eighth Street, New York. Notes by Howard MacNutt)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: