“எங்கள் கண்களுக்கு எதிரே அதுதோற்றம் பெறுகிறது”: வெளிப்பாடு காணும் காங்கோ (DRC) கோவில் அதிகரிக்கும் எண்ணிக்கையினரை செயல்பட தூண்டுகிறது



8 அக்டோபர் 2021


அதன் ஆரம்ப கட்டங்களில் இருப்பினும், பஹாய் கோயில் காங்கோ சமுதாயத்தின் லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட அதிக நடவடிக்கைக்கு வழிவகுக்கிறது.

கின்ஷாசா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, 29 ஜூலை 2021, (BWNS) – காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) பஹாய் வழிபாட்டு இல்லத்தின் அஸ்திவாரங்கள் முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு, மத்திய கட்டிடத்தின் கீழ் பகுதியை உருவாக்கும் கண்ணைக் கவரும் கட்டமைப்புக் கூறுகள் தென்பட ஆரம்பிக்கின்றன.

சமுதாயத்தின் லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட அதிக நடவடிக்கைகளுடன் கோவில் கட்டுமானத்தில் மேற்கொள்ளப்படும் விரைவான முன்னேற்றம் ஒன்றாக மேம்பாடு காண்கிறது.

“வழிபாட்டு இல்லம் நம் கண்ணெதிரே தோன்றுகிறது” என்று நாட்டின் பஹாய் தேசிய ஆன்மீக சபையின் செயலாளர் லாவோசியர் முடோம்போ சியோங்கோ கூறுகிறார்.

அவர் தொடர்ந்து கூறுவதாவது: “அதே சமயம், கோவில் எதைக் குறிக்கிறது என்பதன் மூலம் தூண்டப்பட்ட நடவடிக்கைகளின் தீவிரத்தை நாங்கள் காண்கிறோம். வழிபாட்டுக் கூட்டங்கள், கல்வி முயற்சிகள் மற்றும் குடும்பங்கள் மற்றும் இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் ஆறுகள் மற்றும் நீர் ஆதாரங்களை சுத்தம் செய்தல் போன்ற அனைத்து முயற்சிகள் முதல் உணவு பாதுகாப்பு மற்றும் வேளாண்மை, கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்கள் சக்தியளிப்பு ஆகிய துறைகளில் முறையான நடவடிக்கைகள் வரை அனைத்தும் அதிகரித்து வருகின்றன. ”

கின்ஷாசாவின் புறநகரில் அமைந்துள்ள தேசிய வழிபாட்டு இல்லம் பற்றிய உரையாடல்கள் மூலம் பேணப்படும் கடவுள் வழிபாட்டுக்கும் மனிதகுலத்துக்கான சேவைக்கும் இடையிலான உறவின் ஒரு மதிப்புணர்வானது, அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்கான காரணமென திரு சியோங்கோ கூறுகிறார்.

லுபும்பாஷியின் பஹாய் சமூகத்தைச் சேர்ந்த அனிஸ் என்னும் இளைஞர், சேவைக்கும் வழிபாட்டுக்கும் இடையிலான உறவைப் பற்றிய பிரதிபலிப்புடன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “அது இன்னும் கட்டுமானத்தில் இருந்தபோதிலும், மக்கள் வழிபாட்டுக்காக கோவிலுக்குச் செல்லும்போது, ​​அவர்கள் மேற்கொள்ள விரும்பும் செயல்கள் பற்றி அவர்கள் அதிக தெளிவுடன் செல்கிறார்கள், ஏனெனின், பிரார்த்தனை மற்றும் தியானத்தில் மூழ்குவது ஆன்மீக உணர்வை உருவாக்குகிறது. அந்தத் தருணங்களில், வாழ்க்கையில் எது முக்கியம் என்பதை நாம் காண்கிறோம் — சமுதாய நன்மைக்கான ஆதாரமாக மாறி, சக குடிமக்களுக்கு உதவியாக இருப்பது.”

வளர்ந்து வரும் வழிபாட்டு இல்லத்தின் விளைவுகள் அந்த இடத்தைப் பார்வையிட முடிந்த அப்பகுதியின் குடியிருப்பாளர்களால் மட்டுமல்ல, மேலும் தொலைவில் உள்ள மக்களாலும் உணரப்பட்டுள்ளன.

தேசிய ஆன்மீக சபை, பஹாய் திருவாக்குகளில் ஒரு மாஷ்ரிகுல்-அஸ்கார் அல்லது “கடவுள் புகழப்படும் மூலஸ்தானம்” என குறிப்பிடப்படும் வழிபாட்டு இல்லம் பற்றி பல கலந்துரையாடல்களை காங்கோ முழுவதும், அரசாங்க பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இணங்கத் தூண்டி வருகிறது, என திரு. ஷியோங்கோ விளக்குகிறார்.

தெற்கு கிவுவின் பராக்காவில் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய இரண்டாவது தலைமை ம்’முவா லுவேயா ஔலால்வா, பஹாய் கோயில்கள், கிராம பெரியவர்களிடையே பிரார்த்தனை மற்றும் சமூக விஷயங்களில் கலந்துரையாடலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இடமாக, லுபுங்காவின் நினைவுகளை எவ்வாறு நினைவில் கொள்கின்றன என்பதை விவரித்தார்.

“நவீன வாழ்க்கையிலிருந்து கிட்டத்தட்ட மறைந்துவிட்ட லுபுங்கா, கிராம பெரியவர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதற்கும் சமூக விஷயங்களுக்கு உதவும்போது வழிகாட்டல்களைக் கோருவதற்கும் இடமளிக்கிறது. இன்று, நாங்கள் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரையும் ஒன்றாகக் கூட்டி, அவர்களின் படைப்பாளருடன் இணைக்கக்கூடிய ஒரு மையமான மாஷ்ரிகுல்-அஸ்கார் பற்றி கற்று வருகிறோம்.”

கட்டுமானப் பணியின் முன்னேற்றம் கீழ்க்காணும் படங்களின் வழி சித்தரிக்கப்படுகின்றது.

Since the temple’s foundations were completed in February, workers have been raising the concrete structural elements that make up the lower portion of the edifice and will support the steel superstructure of the dome and surrounding canopies.
பிப்ரவரியில் கோவிலின் அஸ்திவாரங்கள் நிறைவடைந்ததிலிருந்து, தொழிலாளர்கள் கட்டடத்தின் கீழ் பகுதியை உருவாக்கும் குவிமாடம் மற்றும் சுற்றியுள்ள விதானங்களின் எஃகு பிரதான கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் கான்கிரீட் கட்டமைப்பு கூறுகளை எழுப்பி வருகின்றனர்.
The upper gallery level has been built, supported by nine struts that will also serve as staircases. The dome will be anchored at nine points around the gallery.
மேல் கேலரி தளம் கட்டப்பட்டுள்ளது, அது ஒன்பது ஸ்ட்ரட்களால் ஆதரிக்கப்படுவதுடன் அவை படிக்கட்டுகளாகவும் செயல்படும். கேலரியைச் சுற்றி ஒன்பது இடங்களில் குவிமாடம் நங்கூரமிடப்படும்.
The struts will direct the weight of the dome outward into the foundations, leaving the entire lower floor of the temple free of support columns.
கோவிலின் கீழ் தளம் முழுவதும் ஆதரவு நெடுவரிசைகள் இன்றி, ஸ்ட்ரட்கள் குவிமாடத்தின் எடையை அஸ்திவாரங்களுக்குள் செலுத்தும்,
Two ring beams have been built, one above the gallery and the other above the temple’s outer wall. At the center of this image is a space in the outer wall that will be one of the nine doorways into the temple.
இரண்டு வளையக் கற்றைகள் கட்டப்பட்டுள்ளன, ஒன்று கேலரிக்கு மேலேயும் மற்றொன்று கோயிலின் வெளிப்புறச் சுவருக்கும் மேலேயேம். இந்த படத்தின் மையத்தில் வெளிப்புற சுவரில் கோவிலுக்குள் ஒன்பது வாசல்களில் ஒன்றாக இருக்கும் ஓர் இடம் உள்ளது,
Last week, the innermost of the two ring beams was completed. At 8 meters above the ground, the concrete portion of the structure has now reached its full height. More than 90 percent of the concrete for the edifice has been poured, opening the way for the steel superstructure to be erected.
கடந்த வாரம், இரண்டு வளையக் கற்றைகளின் உட்புறம் நிறைவடைந்துள்ளது. தரையிலிருந்து 8 மீட்டர் உயரத்தில், கட்டமைப்பின் கான்கிரீட் பகுதி இப்போது அதன் முழு உயரத்தையும் எட்டியுள்ளது. கட்டடத்திற்கான 90 சதவீதத்திற்கும் அதிகமான கான்கிரீட் ஊற்றப்பட்டு, எஃகு சூப்பர் ஸ்ட்ரக்சர் அமைக்க வழி திறக்கப்பட்டது.
Work on the grounds and auxiliary structures around the temple continues. Here, gardeners plant a lawn near the rising temple.
கோயிலைச் சுற்றியுள்ள மைதானம் மற்றும் துணை கட்டமைப்புகளின் பணிகள் தொடர்கின்றன. இங்கே, தோட்டக்காரர்கள் உயர்ந்துவரும் கோவிலுக்கு அருகில் ஒரு புல்வெளியை நடவு செய்கிறார்கள்.
The walls and roof of the future visitors’ center have been completed.
வருகையாளர் மையத்தின் சுவர்களும் கூரையும் பூர்த்தியாகியுள்ளன
In-person gatherings held according to safety measures required by the government. Area residents have been visiting the site and engaging in conversations about the House of Worship and the relationship between worship of God and service to humanity.
அரசாங்கம் நியமித்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளின்படி நேரடி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அப்பகுதிவாசிகள் தளத்திற்கு வருகை தந்து வழிபாட்டு இல்லம் மற்றும் கடவுள் வழிபாடு மற்றும் மனிதகுல சேவை ஆகியவற்றுக்கு இடையேயான உறவு பற்றிய உரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
In-person gatherings held according to safety measures required by the government.  Residents of Kinshasa have been volunteering with many aspects of the project.
அரசாங்கத்திற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ப நேரடி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. கின்ஷாசாவில் வசிப்பவர்கள் கோயில் தளத்தில் தன்னார்வத் தொண்டு செய்து வருகின்றனர், திட்டத்தின் பல அம்சங்களுக்கு உதவுகிறார்கள்.
In-person gatherings held according to safety measures required by the government. Gatherings across the DRC have been stimulating many discussions about the House of Worship.
அரசாங்கம் நியமித்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளின்படி நேரடி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. டி.ஆர்.சி முழுவதும் கூடிவரும் கூட்டங்கள், சமூகத்தின் மையத்தில் வீற்றிருந்து எல்லா மக்களுக்கும் திறந்திருக்கும் வழிபாட்டு இல்லம் பற்றிய பல விவாதங்களைத் தூண்டி வருவதுடன், அது பிரார்த்தனை, தியானம் ஆகியவை சமூகத்திற்கான சேவையை ஊக்குவிக்கும் இடமுமாகும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1521/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: