புதிய ஆய்வு சமூக வாழ்க்கையில் ஆன்மீகக் கொள்கைகளின் பயன்பாட்டை ஆராய்கிறது


புதிய ஆய்வு சமூக வாழ்க்கையில் ஆன்மீகக் கொள்கைகளின் பயன்பாட்டை ஆராய்கிறது

8 அக்டோபர் 2021


இந்தூர், இந்தியா – இந்தியாவின் இந்தூரில் உள்ள தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டுக்கான ஆய்வுகளின் பஹாய் இருக்கை மற்றும் உலகளாவிய செழுமைக்கான ஆய்வுக் கழகம் (ISGP) இணைந்து வெளியிட்ட ஒரு புதிய ஆய்வுக் கட்டுரை, சமூகங்கள் மனிதகுலத்தின் ஒற்றுமை மற்றும் இயற்கையுடன் மனிதகுலம் ஒன்றோடொன்று இணைந்திருத்தல் போன்ற கொள்கைகளை பொது நன்மைக்காக பங்களிக்க எப்படி பயன்படுத்துகின்றன என்பதை ஆராய்கிறது.

ஆர்வநம்பிக்கை மற்றும் மீள்ச்சித்திறம்: சமூக வாழ்க்கைக்கு ஆன்மீக கோட்பாடுகளின் பயன்பாடு என்னும் தலைப்பில், நகர்ப்புற முறைசாரா குடியேற்றங்களின் சூழலில் நீர் தொடர்பான சவால்களை நிர்வகிப்பதில் வலுவான சமூக ஆதரவின் வலையமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது மற்றும் இது ISGP-யின் தொடர் ஆராய்ச்சி பிரசுரங்களின் ஒரு பகுதியாகும். இவை ‘நடைமுறையிலிருந்து அகப்பார்வை பற்றிய அவ்வப்போதான ஆவணங்கள்’ என அழைக்கப்படுகின்றன.

இந்தத் தொடர் வெளியீடுகள் குழுக்கள், சமூகங்கள் மற்றும் அமைப்புகளாக வெளிப்படும் வடிவங்களை ஆராய்கின்றன. அவை எதிர்கொள்ளும் சவால்களைச் சந்திக்கவும் சமுதாய மேம்பாட்டுக்குப் பங்களிக்கவும் அவற்றின் தினசரி வாழ்க்கை மற்றும் நடவடிக்கைகளுக்கு ஒன்றிணைக்கும் மற்றும் ஆக்கபூர்வமான கொள்கைகளைப் பயன்படுத்தவும் முனைகின்றன.

“பல மக்கள் ஆன்மீக நம்பிக்கைகளின்பால் ஆழ்ந்த அர்ப்பணத்துடன் இருக்கிறார்கள் என்பது இன்று நாம் பார்க்கும் ஒரு விஷயமாகும், மற்றும் அவர்களின் நம்பிக்கையானது, அவர்கள் நல்லொழுக்கமுள்ள வாழ்க்கையை வாழவும் மற்றும் அவர்களின் சமூகங்களின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கவும் ஒரு சக்திவாய்ந்த உந்துசக்தியாகும்” என உதவி பேராசிரியர் மற்றும் பஹாய் நாற்காலியின் தலைவரான அராஷ் ஃபாஸ்லி கூறுகிறார்.

அவர் மேலும் கூறுகிறார்: “இந்த யோசனையானது, அபிவிருத்தி குறித்த கல்வி இலக்கியத்தில் போதுமான அளவு அங்கீகரிக்கப்படவில்லை, ஆதலால், பல சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு முயற்சிகள் இந்த ஊக்குவிப்புக்கான மூலாதாரங்களிலிருந்து பயன்பெற முடியவில்லை.”

இந்தக் கட்டுரை மேலும் விரிவாக விவரிக்கிறது: “மனித வாழ்க்கை மற்றும் சமுதாயத்தின் ஆன்மீக, கலாச்சார மற்றும் மத அம்சங்களைக் கணக்கிடத் தவறுதல், சமுதாயம் மனிதகுலத்தின் செழுமை மற்றும் பொதுநலனை தடுத்திடும் என  பல ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திட்டமிடுபவர்கள் அதிகரிக்கும் அளவில் அங்கீகரிக்கின்றனர்.”

இருக்கை மற்றும் ISGP-க்கு இடையிலான உடனுழைப்பு அபிவிருத்தி குறித்த சொற்பொழிவுக்குப் பங்களிக்கும் அவை ஒவ்வொன்றின் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

பஹாய் இருக்கை, மனித செழுமையானது லௌகீக மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தின் விளைவாகும் எனக் கருதும் ஒரு கண்ணோட்டத்தில் வளர்ச்சித் துறையில் இடைநிலை ஆராய்ச்சி மற்றும் புலமையை ஊக்குவிக்க ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்தாபிக்கப்பட்டது.

ISGP என்பது 1999-இல் ஸ்தாபிக்கப்பட்ட பஹாய் போதனைகளின் உத்வேகம் பெற்ற ஓர் இலாப நோக்கற்ற ஆராய்ச்சி மற்றும் கல்வியல் அமைப்பாகும். ISGP-யின் நோக்கங்களில் ஒன்று, மற்றவர்களுடன் சேர்ந்து–பரிணமித்து வரும் முறைமைகள் எனும் தொடர்பில் அறிவியலும் மதமும்–நாகரிகத்தின் மேம்பாட்டில் ஆற்றக்கூடிய நிரப்பமளிக்கும் பங்கு, மற்றும் மனிதகுலத்தின் வாழ்க்கைக்குத் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுவதும் ஆகும்.

இந்தத் தாள் ISGP இணையதளத்தில் கிடைக்கும்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1535/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: