பஹாய் உலக நிலையம்—உலகம் முழுவதும் எண்ணிலடங்கா மக்களும் சமூகங்களும், வரும் நவம்பரில் அவர் மறைந்த நூறாம் நினைவாண்டின் நினைவேந்தலுக்கு அவர்கள் தயாராவதில் மானிடத்திற்கான அப்துல்-பஹாவின் சேவை சார்ந்த வாழ்க்கையைப் பற்றி ஆழமாகப் பிரதிபலிக்கின்றனர்.
அவ்வாறு செய்கையில், பெண் ஆண் சமத்துவம், இன தப்பெண்ணத்தை அகற்றுவது, அறிவியல் மற்றும் சமயத்திற்கிடையிலான இணக்கம், மதத்தின் ஒருமை, சர்வலோக அமைதி உட்பட, மானிடத்தின் பொதுநலன் மற்றும் மேம்பாட்டுக்குப் பொருத்தமான கருப்பொருள் சார்ந்த அப்துல்-பஹாவின் எழுத்துகள் மற்றும் உரைகளின் புதிய பதிப்புகளை வெளியிடுவதற்கான உத்வேகத்தை அவர்கள் பெற்றுள்ளனர். சமீபமான வாரங்களில் அவருடைய பிரார்த்தனைகள், அவர் வாழ்க்கையின் வரலாற்றுக் குறிப்புகள், குறிப்பாக இந்த விசேஷ காலகட்டத்தில் சமுதாய தன்மைமாற்றத்திற்குப் பங்களிப்பதற்கு உலகைச் சுற்றிலுமுள்ள பஹாய் சமூகங்களின் முயற்சிகள் பற்றிய கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட தொகுப்பு, உலகம் முழுவதுமுள்ள நாடுகளில் இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வைக் குறிப்பதற்கு சமீபமான வாரங்களிலும் மாதங்களிலும் வெளிவந்துள்ள பிரசுரங்களின் ஒரு நுண்காட்சியை மட்டுமே வழங்குகிறது.
ருமேனியாவில், அப்துல்-பஹாவின் உயிலும் சாசனத்தின் ஒரு புதிய மொழிபெயர்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்தோனீசியாவில், பூக்களின் சித்திரங்களுடன் ஒளிரும் ஒர் பிரார்த்தனை புத்தகம் பஹாசாவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எகிப்து, ஹாய்ட்டி, ருவான்டா, துர்க்கி ஆகிய நாடுகளில் அப்துல்-பஹாவின் வாழ்க்கை பற்றிய கதைகளை புதிய வெளியீடுகள் வழங்குகின்றன.
ஜப்பானில், அந்த நாட்டின் ஆன்மீக எதிர்காலம் குறித்த அப்துல்-பஹாவின் தொலைநோக்கை ஒரு புதிய கட்டுரைத் தொகுப்பு ஆராய்கிறது. பெர்மூடா, ஜோர்தான், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் தினசரி பத்திரிக்கை கட்டுரைகள் தங்கள் சமுதாயங்களுக்கான இந்த பஹாய் சமூகங்களின் பங்களிப்பைப் பார்க்கின்றன.
பிரேசில், கெனடா, ஓமான, பெரு, ஐக்கிய குடியரசு, மற்றும் ஐக்கிய அமெரிக்காவில், குழந்தைகளின் கதைப்புத்தகங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அவை அப்துல்-பஹாவின் அசாதாரன குணநலன்களையும் மானிடத்திற்கான அவரது சேவையையும் இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன.
சமீபத்திய மாதங்கள், ஆர்மீனிய, கிரேக்க, ஹிந்தி மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் பேசப்படும் பிற 13 மொழிகள், இத்தாலிய, ஜப்பானிய, கசாக், குர்திஷ் (குர்மஞ்சி மற்றும் சோரானி), மங்கோலிய, நேபாளி, ஸ்பானிஷ், டெட்டம் மற்றும் ட்ஷிலுபா உள்ளிட்ட மொழிகளில் முதல் முறையாக கிடைக்கச் செய்யப்பட்ட பஹாய் எழுத்துகளின் புதிய தேர்வுகளையும் கண்டுள்ளன.
அப்துல்-பஹாவின் பிரார்த்தனைகள் மற்றும் சொற்பொழிவுகளின் புதிய மொழிபெயர்ப்புகளும் உள்நாட்டு மொழிகளில் செய்யப்பட்டுள்ளன. அவரது வாழ்க்கையைப் பற்றிய கதைகளின் கையேடு சிலுண்டாவில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் லுண்டா மக்களிடையே பரவலாகவும் பகிர்ந்து கொள்ளப்பட்டது, அவர்களின் மக்கள் அங்கோலா, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் சாம்பியா பகுதிகளில் பரவியுள்ளனர். பிரேசிலில், அப்துல்-பஹா என்ற புத்தகத்தின் கையேடு ஸுபுக்குவாவில் தயாரிக்கப்பட்டுள்ளது, இது Karirí-Xocó (காரிரி-ச்சோக்கோ) மத்தியில் பேசப்படுகிறது. அந்த அழியும் தருவாயில் உள்ள மொழிக்கு புத்துயிர் வழங்கும் முயற்சிகளின் இது ஒரு பகுதியாகும். இதே கையேடு பிரேசிலின் புல்ஞியோ மக்களால் பேசப்படும் மொழியான யாட்டேயில் கிடைக்கும். தென்னாப்பிரிக்காவில், அப்துல்-பஹா வாழ்க்கையின் கதைகள் செபேடி மற்றும் ஸூலு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இன்னும் சில வாரங்களில் மாஸ்டர் அப்துல் பஹா மறைந்து ஒரு நூற்றாண்டு முடிவுறப் போகின்றது. அந்த நிகழ்வை உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் ஒரு நினைவேந்தலாக அனுசரிக்கவிருக்கின்றனர். பஹாய் உலகில் இது போன்ற நூற்றாண்டுகள் சில வந்து சென்றுள்ளன. உதாரணத்திற்கு பாப், பஹாவுல்லா பிறந்தநாள்கள், பாப் பெருமானார் 1844-இல் செய்த பிரகடனம், 1863-இல் ரித்வான் தோட்டத்தில் பஹாவுல்லாவின் அறிவிப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
1963-இல் உலகம் அழியப்போகிறது எனும் ஒரு செய்தி அங்காங்கே நிலவியது. கிராமப்புறங்களில் கூட இது பேசப்பட்டது. இதற்கான காரணம் பைபளில் காணப்படும் ஒரு தீர்க்கதரிசனமாகும். ஆனால் இந்த தீர்க்கதரிசனத்தின் உண்மையை அப்துல்-பஹாவும் ஷோகி எஃபெண்டியும் விளக்கியுள்ளனர். முக்கியமாக, ஷோகி எஃபெண்டி இந்த தீர்க்கதரிசனத்தை 1953-இல் அவர் ஆரம்பித்த பத்தாண்டுத் திட்டத்தின் முடிவுடன் ஒப்பிடுகின்றார். இந்த பத்தாண்டு உலகளாவிய அறப்போர் 1963-இல் முடிவுற்றது. ஆனால், 1957-இல் ஷோகி எஃபெண்டியின் எதிர்பாரா மறைவினால் ஏற்பட்ட நிகழ்வுகள் அதன் பின்னர் சில முக்கிய சம்பவங்களுக்கு வழிவகுத்தன.
1963-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட உலக நீதிமன்றத்தின் முதல் 9 உறுப்பினர்கள் (ஹியூ சான்ஸ், ஹூஷ்மன் ஃபாத்தியாஸம் அமோஸ் கிப்ஸன், லுட்ஃபுல்லா ஹாக்கிம், டேவிட் ஹோஃப்மன், போரா கேவ்லின், அலி நாக்ஜவானி, இயன் செம்ப்பல், சார்ல்ஸ் வால்கொட்)
லன்டனில், ஷோகி எஃபெண்டியின் எதிர்பாரா மறைவுக்குப் பிறகு சமயத்தின் தலைமைத்துவ பொறுப்பு ஷோகி எஃபெண்டியினால் நியமிக்கப்பட்ட, ‘தலைமை கலபதிகள்’ என்னும் கடவுள் சமயத்தின் திருக்கரங்கள் மீது விழுந்தது. இந்தத் திருக்கரங்கள் தங்களுள் இருந்து 9 பேரை தேர்ந்தெடுத்துக் கொண்டு, அந்த ஒன்பது பேர் கொண்ட குழு சில முடிவுகளுக்கு வந்தது. அதில் முக்கியமானது, ஷோகி எஃபெண்டி எந்த உயிலையும் விட்டுச் செல்லவில்லை என்பதும் அடுத்து என்ன செய்யப்பட வேண்டும் எனும் பொறுப்பு பஹாவுல்லா கித்தாப்-இ-அக்டாஸில் குறித்துள்ள உலக நீதிமன்றத்திற்கே உள்ளது என்பதும் ஆகும். ஆனால், உலக நீதிமன்றம் இன்னமும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. திருக்கரங்கள், பத்தாண்டுத் திட்டத்தில் மீதமிருந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு 1963-இல் உலக நீதிமன்றத்தின் தேர்தல் நடைபெற வேண்டும் எனும் முடிவுக்கு வந்தனர். அது போன்றே, 1963-இல் உலக நீதிமன்றத்தின் தேர்தலும் நடைபெற்றது.
ராயல் அல்பர்ட் அரங்கில் முதலாம் உலக நீதிமன்றத்தின் உறுப்பினர்கள் அறிவிக்கப்படுகின்றனர்
உலக சமய வரலாற்றில் உலக நீதிமன்றத்தில் தேர்தல் போன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற்றதே இல்லை. “தள்ளாடிக்கொண்டிருக்கும் ஒரு நாகரிகத்தின் இறுதிப் புகலிடம்” என ஷோகி எஃபெண்டியினால் வர்ணிக்கப்பட்ட, தவறிழைக்காமை எனும் தன்மை வழங்கப்பட்ட, கடவுளின் சார்பாக உலகை நிர்வகிக்கும் ஒரு ஸ்தாபனம் 1963-இல் நிறுவப்பட்டது. இந்த நிகழ்ச்சியே பைபளில் தீர்க்கதரிசனமாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அப்துல்-பஹாவோ ஷோகி எஃபெண்டியோ அதை நேரடியாகக் குறிப்பிடவில்லை. மாறாக, ஷோகி எஃபெண்டி அதை பத்தாண்டு அறப்போரின் முடிவு எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த முதல் தேர்தல் ஹைப்பா நகரில் உள்ள மாஸ்டர் அப்துல்-பஹாவி்ன் இல்லத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 56 தேசிய ஆன்மீக சபைகள் பங்குபெற்றன. இதைத் தொடர்ந்து, தேர்தலைப் பற்றியும் அதன் முடிவுகளை அறிவிக்கவும் லன்டனில் உள்ள ராயல் அல்பர்ட் அரங்கில் ஒரு மாபெறும் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் சுமார் 6000 பேர் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டுக்காக அந்த முதல் உலக நீதிமன்றம் அதன் முதல் செய்தியை வழங்கியிருந்தது. அதை இங்கு காணலாம்:
உலகின் பல பாகங்களில், வருடம் 1914-க்குள் மானிடத்திற்கான அவரது சேவைக்காக அப்துல்-பஹா நன்கு அறிமுகமாகியிருந்தார். அவர் தமது வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்திருந்த புனித நிலத்தில், ஏழைகள் மற்றும் வறியோருக்கான அவரது சேவைக்காகவும் உள்ளூர் மற்றும் மண்டல அளவில் உயர் பதவியில் உள்ளோருடன் சொல்லாடல்களில் ஈடுபட்டு வந்ததற்காகவும் அவர் மிகவும் மதிக்கப்பட்டவராக இருந்தார். ஐரோப்பா, மற்றும் வட அமெரிக்காவுக்கான அவரது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விஜயங்களுக்கு முன்னும் பின்னும் எகிப்பு நாட்டில் அவர் கழித்த நாள்கள் குறிப்பிடத்தகும் அளவு கவனத்தை ஈர்த்து, வாழ்க்கையின் எல்லா பகுதிகளையும் சார்ந்தோர் அவரது இரசிகர்களாயினர். 1914-இல், அவர் தமது மேற்கத்திய நாடுகளுக்கான பயணங்களை முடித்துக்கொண்டு அப்போதுதான் நாடு திரும்பியிருந்தார். அந்தப் பயணங்களின் விவரங்கள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவை, உலகளாவிய அமைதிக்கான அவசரத்தின் சூழலில் அவரது தந்தையார் போதனைகள் குறித்த, முறையான, முறைசாரா, மற்றும் பல்வகையான மக்களுக்கான அவரது விளக்கங்கள், அவரை உலக அரங்கில் ஒரு தனித்துவம் மிக்கவராக எடுத்துக்காட்டியது. யுத்த காலங்களில், தமது தாயகத்தில் உள்ள ஹைஃபா மற்றும் அக்காநகர் சார்ந்த மண்டலங்களில் ஏற்பட்ட பஞ்சத்தை நிவர்த்தி செய்வதற்கான அவரது உதவிக்கு அவர் பரவலான பாராட்டைப் பெற்றார். உலகைச் சுற்றிலும் உள்ள பலருக்கு, அவரது வாழ்க்கையின் உதரணமும் அவரது எண்ணிலடங்காக திருவாசகங்களும் அப்போதும் இப்போதும் வழிகாட்டலுக்கும் தெளிவுரைகளுக்கும் மூலாதாரங்களாக இருந்து வருகின்றன.
ஆனால், மத்திய கிழக்கில் நவீன கல்விக்கான அப்துல்-பஹாவின் தொடர்ந்தாற் போன்ற ஊக்குவிப்பு, இன்று அவ்வளவாக அறிந்திருக்கப்படவில்லை. இதன் தொடர்பில், பெய்ரூட் நகரில் ஒரு பஹாய் மாணவர் குழுவினர், பஹாய்கள் என்னும் அவர்களின் அடையாளத்துடன் ஒத்துப்போகும் முறையில், உயர் கல்வியை நாடுவதற்கு எவ்வாறு பல வருட காலங்களாக, அவர்களை அவர் ஊக்குவித்துப் பராமரித்து வந்தார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றது.
1914-இல் அப்துல்-பஹாவின் பல விருந்தினர்களுள், சிரியா புரொட்டெஸ்டன் காலேஜின் (Syrian Protestant College) தலைவரான ஹோவார்ட் பிலிஸ் என்பவரும் உள்ளார். இந்த ஸ்தாபனத்துடன் அப்துல்-பஹா நீண்டகால உறவைக் கொண்டிருந்தார். அந்த ஸ்தாபனத்தில், பிப்ரவரி மாதத்தில் பிலிஸ் அவர்களின் ஹைஃபா வருகைக்கு முன்பாகவே ஒரு பஹாய் மாணவர் குழுவினர் அங்கு தங்களை நன்கு ஸ்தாபித்துக்கொண்டிருந்தனர்.1 பிலிஸ், பெய்ரூட்டில் உள்ள அந்த காலேஜில் தமது வாழ்க்கையைக் கழித்திருந்தார் (அவரது தந்தையான டேனியல் பிலிஸ், அந்த காலேஜின் முதல் தலைவராக இருந்தவர்). அரபு மொழியில் நன்கு உரையாடக்கூடியவரான பிலிஸ், அந்தக் காலேஜில் பயின்ற பஹாய் மாணவர்கள் தங்களின் வசந்தகால விடுமுறையை ஹைப்பாவில் பாப் பெருமானார் மற்றும் பஹாவுல்லாவின் நினைவாலயங்களுக்கு அருகில் கழிப்பதற்கும் அதன் மூலம் அப்துல்-பஹாவிடமிருந்து கற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதற்கும் அப்துல்-பஹாவைக் காண வந்திருந்தார். ஆனால், அவர்களுக்கிடையிலான உரையாடல் அப்துல்-பஹாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்குத் தாவியது. தமது பயணங்களின்போது பலமுறை அவர் செய்தது போன்று, தமது மாணவர்களுள் பிற விஷயங்களுக்கிடையில், ‘மானிட உலகின் ஒருமை’ குறித்த கொள்கையைப் பேணுமாறு அப்துல்-பஹா பிலிஸ்ஸை ஊக்குவித்தார். அதன் மூலம் அம்மாணவர்களின் கல்வி “சர்வலோக அமைதியின்பால்”2 வழிநடத்தப்படக்கூடும்.
அப்துல்-பஹாவின் கருத்துகளுக்கும் ஊக்குவிப்பிற்கும் பிலிஸ்ஸின் ஏற்பிசைவு பத்து நாள்களுக்குப் பிறகு அவர் வழங்கிய ஓர் உரையில் வெளிப்பட்டது. பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி, அப்பள்ளியின் வளமான பல்வகைமையைப் பிரதிநிதிக்கும் ஒரு மாணவர் குழுவுடனான சந்திப்பில், அக்குழுவின் “பணிகளில்” ஒன்றாக “சர்வலோக அமைதியை ஸ்தாபிப்பதும் இருக்க வேண்டுமென பிலிஸ் வலியுறுத்தினார்.”3 அப்துல்-பஹாவுக்கும் பிலிஸுக்கும் நடந்த பரிமாற்றம், உண்மையில், பஹாய் சமூகமும் கல்லூரியும் பல ஆண்டுகளாக நடத்திவந்த, பஹாய் மாணவர்கள் பங்களிக்க முயன்று வரும் அந்த காலேஜின் சுயமான “சமய ஒன்றிணைவு ஆய்வின்” மீது மையப்படுத்தப்பட்ட ஒரு விரிவான உரையாடலின் அடையாளமாக இருந்தது.
“அப்துல்-பஹா: உலக அமைதியின் வாகையர்” என்னும் கட்டுரை அப்துல்-பஹா தமது காலத்தின் முன்னணி சிந்தனையாளர்களுடன் ஈடுபடுவதன் மூலம் மட்டுமல்லாமல், உலகின் ஆன்மீகமயமாக்கலுக்கான திட்டத்தின் மூலம் அமைதிக்கான இயக்கத்தை எவ்வாறு மேம்படுத்தினார் என்பதை ஆராய்கிறது..
“அப்துல்-பாஹாவும் பஹாய் மாணவர்களும்” என்னும் தலைப்பில் மற்றொரு புதிய கட்டுரை, மத்திய கிழக்கில் கல்வி பற்றிய சொல்லாடலுக்கு அப்துல்-பஹாவின் பங்களிப்பு மற்றும் பெய்ரூட் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பஹாய் மாணவர்களுக்கு அவர் வழங்கிய வழிகாட்டுதலைப் பார்க்கிறது.
அடுத்த மாதம் உலகெங்கிலும் உள்ள பஹாய் சமூகங்கள் அப்துல்- பஹா மறைவின் நூறாம் ஆண்டை நினைவுகூரவிருக்கின்றன. இந்தப் புதிய கட்டுரைகள், அப்துல்-பஹா மறைவின் நூற்றாண்டை கௌரவிக்கும் கட்டுரை வரிசையின் ஒரு பகுதியாகும்.
பஹாய் உலகம் வலைத்தளம் மனிதகுலத்தின் முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்கான கருப்பொருள்களை ஆராயும் கட்டுரைகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பை வழங்குகின்றது, அவை, உலகளாவிய பஹாய் சமூகத்தில் சிந்தனை மற்றும் செயலின் நிலைகளில் மேம்பாடுகளை முன்னிலைப்படுத்துவதுடன் பஹாய் சமயத்தின் இயலாற்றல் மிக்க வரலாறு குறித்தும் பிரதிபலிக்கின்றன.
அப்துல்-பஹா தமது உடல்நலக் குறைவின் காரணமாக நிகழ்ச்சிகளுக்குச் செல்ல இயலாமல் இருந்தார். அவர் மொண்ட்ரியலிலிருந்து கிளம்புவதற்குப் பல நாட்களாயின. அவர் அவ்வப்போது, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், காரில் சிறிது ஓய்வாகப் பிரயாணம் செய்யவோ நடக்கவோ செய்வார். ஒரு நாள் அவர் தன்னந்தனியாகச் சென்று டிராம் வண்டியில் ஏறினார். டிராம் வண்டி அவரை நகரத்திலிருந்து சிறிது வெளியில் கொண்டு சென்றது. பிறகு அவர் அவ்வண்டியிலிருந்து இறங்கி நகரத்திற்கு வெளியே செல்லும் வேறொரு வண்டியில் ஏறினார். அதன் பிறகு ஒரு வாடகைக் காரை நிறுத்தினார், ஆனால் தாம் தங்கியிருந்த விடுதியின் பெயரை அவரால் நினைவுகூறமுடியவில்லை. இருந்தபோதும், விடுதிக்கு செல்லும் சரியான திசையை அவரால் குறிப்பிட முடிந்தது. பிறகு, அவர் தமது உதவியாளர்களிடம் அந்த நிகழ்வை அதிக நகைப்போடு குறிப்பிட்டார்.
அந்த நிகழ்வு புனித நிலத்தில் நடந்த வொறொரு நிகழ்வை அவருக்கு நினைவூட்டியது. ஆக்கா நகர பஹாய் ஒருவரான ஆஃகா ஃபராஜ் என்பவர் ஒரு முறை வழியைத் தவறவிட்டுவிட்டார். அப்துல்-பஹா அவரிடம் அவர் பயணம் செய்த கோவேறு கழுதையின் கடிவாள வாரை அவிழ்த்துவிடச் சொல்லியிருந்தார். கடிவாளத்திலிருந்து விடுபட்ட கழுதை பிறகு சரியான திசையை நோக்கிச் சென்றது. அதே போன்றே, தாமும் வாடகை காரின் ஓட்டுனருக்கு சரியான வழியை காட்ட முடிந்ததென அப்துல்-பஹா சிரித்துக்கொண்டே கூறினார்.
செப்டம்பர் 9ம் தேதி பஃப்பலோ நகரத்திற்கான பயணம் மிகவும் நீண்டதாகவும் சோர்வடையச் செய்வதாகவும் இருந்தது. டோரொண்டோ நகரில் இரயில் வண்டிகள் மாற்றப்பட வேண்டும். அங்குள்ள இரயில் நிலையத்தில் சற்று நடந்த அப்துல்-பஹா தமது பெரும் சோர்வு குறித்து கவைலப்பட்டு, கலிபோர்னியாவுக்கு எவ்வாறு பயணம் செய்யப்போகிறோம் என நினைத்தார். ஆனால் அவர் சென்றுதான் ஆகவேண்டும், ஏனெனில், இறைவனின் பாதையில் இன்னல்களே கொடைகளாகும், கடும் உழைப்பே மாபெரும் அருள்பாலிப்புமாகும். அன்றிரவு, வெகு நேரத்திற்குப் பிறகு பஃப்பலோ நகர் சென்றடையப்பட்டது. அதனால், அந்த நகரத்து பஹாய்களுக்கு அப்துல்-பஹாவின் வருகை உடனடியாக அறிவிக்கப்படவும் இல்லை.
(HM Balyuzi, ‘Abdu’l-Bahá: The Centre of the Covenant of Bahá’u’lláh, p. 265)
ஜூலியட் தாம்ஸனும் பிற பஹாய்களும் மாஸ்டருக்கு ஒரு பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்திட தீர்மானித்தார்கள். சிலர் பிறந்தநாள் கேக் ஒன்றையும் செய்தனர். நாங்கள் பல வாடகை டாக்சிகளில் பிராங்க்ஸ் சென்றோம். முதல் டாக்சியில் மாஸ்டர் பிராயணம் செய்தார். மாஸ்டரின் டாக்சி அங்கு சென்றடைந்தவுடன், அவர் இறங்கி அருகிலுள்ள பூங்காவினுள் எல்லோருக்கும் முன்பாக நடந்து சென்றார்.
சில பையன்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு சிரிக்கவாரம்பித்தனர். அவர்களுள் சிலர் அவர் மீது கற்களை எறிந்தனர். அதைக் கண்டு மனம் பதறிய சில நண்பர்கள் அவரை நோக்கி விரைந்தனர். ஆனால், அவர் அவர்களை வரவேண்டாமென தடுத்தார். அச் சிறுவர்கள் மாஸ்டரின் அருகில் வந்து அவரைப் பார்த்து கேலி செய்தும், அவரது மேலங்கியைப் பிடித்து இழுக்கவும் செய்தனர். மாஸ்டர் அதற்கெல்லாம் பதட்டப்பாடமல் நிதானமாக இருந்தார். அவர் அச்சிறுவர்களைப் பார்த்து பிரகாசத்துடன் புன்னகைத்தார். ஆனால், அச்சிறுவர்கள் தொடர்ந்து தங்கள் செய்கைகளில் ஈடுபட்டவாறே இருந்தனர். பிறகு மாஸ்டர் நண்பர்களின்பால் திரும்பி, “நீங்கள் தயாரித்த கேக்கைக் கொண்டுவாருங்கள்” என்றார். கேக் ஒன்று செய்யப்பட்டிருப்பதை யாருமே அவரிடம் அதுவரை தெரிவித்திருக்கவில்லை.
எங்களில் சிலர், “ஆனால், அப்துல்-பஹா, கேக்கை நாங்கள் உங்கள் பிறந்நாளுக்காக அல்லவா செய்தோம்,” என்றோம். அப்பஞ்சு போன்ற கேக்கை ஒரு நண்பர் கொண்டுவந்தார். அதன்மீது பனி போன்று வெள்ளை ‘ஐஸிங்’ செய்யப்பட்டிருந்த அந்த கேக்கை அந்த நண்பர் அப்துல்-பஹாவிடம் கொடுத்தார். அச்சிறுவர்கள் அந்த கேக்கைக் கண்டவுடன் அமைதியடைந்தும் பிறகு அந்த கேக்கையே பசியோடு பார்த்துக்கொண்டும் இருந்தனர்.
மாஸ்டர் அந்த கேக்கை தமது கைகளில் எடுத்து அதை ஆனந்தத்துடன் பார்த்தார். சிறுவர்கள் இப்போது அவரைச் சுற்றி நின்றுகொண்டிருந்தனர். “ஒரு கத்தி கொண்டுவாருங்கள்” என அப்துல்-பஹா கூறினார். ஒரு நண்பர் அவர் கேட்ட கத்தியைக் கொண்டுவந்தார். மாஸ்டர் தம்மைச் சுற்றிலும் நின்றுகொண்டிருந்த சிறுவர்களை எண்ணிக்கையிட்டு அந்த கேக்கை அதே எண்ணிக்கையில் வெட்டினார். பையன்கள் ஒவ்வொருவரும் ஒரு துண்டை ஆவலுடன் பெற்றும், அதை ஆர்வத்துடன் சாப்பிட்டனர். பிறகு அவர்கள் ஓடி மறைந்தனர்.
பஹாவுல்லா கூறுகிறார்: கோப்பை ஏந்தி வருபவர், எவ்வாறு, தேடுபவரைக் காணும் வரை அதனை வழங்க முன்வரமாட்டாரோ, எவ்வாறு, அன்பர் ஒருவர் தன் நேசரின் அழகினை நோக்கிடும்வரை, தனது இதயத்தின் ஆழத்திலிருந்து குரலெழுப்ப மாட்டாரோ, அவ்வாறே விவேகிகள், கேட்க ஒருவர் கிடைத்தாலன்றி, பேசமாட்டார்… (பாரசீக மறைமொழிகள் 36)
மாஸ்டரின் அக்காநகர் இல்லத்தில் குழந்தைகளுக்கு பிரெஞ்சு மொழியை கற்பிப்பதற்காக ஹைஃபாவில் ஓர் ஏழை குடும்பத்திலிருந்து வந்த மேடமுய்ஸேல் (குமாரி) லெட்டீஷியா என்பவரைப் பற்றி ஒரு கதை கூறப்படுகின்றது. அப்பெண்மணி ஒரு கத்தோலிக்கராக இருந்தபோதும், கான்வென்ட்டிலுள்ள கன்யாஸ்த்ரீகள் அவரை கவனித்து வந்த போதும் அவர் அப்துல்-பஹாவின் இல்லத்தில் மகிழ்ச்சியாகவே இருந்தார். ஒரு நாள், பிரெஞ்சு புனிதப் பயணி ஒருவர் வருகையளித்திருந்தார். மொழிபெயர்ப்பாளர் ஒருவர் தேவைப்பட்டது. யாருக்குமே பிரெஞ்சு மொழி தெரியாததால் லெட்டீஷியாவின் உதவி கோரப்பட்டது. மேடமூய்ஸேல் இக்கட்டுக்கு ஆளாகி அந்நிகழ்ச்சி குறித்து கன்யாஸ்த்ரீகளிடம் தெரிவித்துவிட்டார்.
அதன் பிறகு பல நாட்களுக்கு லெட்டீஷியா முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டிருந்தார். இதைக் கண்ணுற்ற அப்துல்-பஹா அவரைத் தம்மிடம் அழைத்து அவரைச் சாந்தப்படுத்த ஓர் உறுதிமொழியை வழங்கினார். லெட்டீஷியா, உனது மதிப்புக்குரிய கன்யாஸ்த்ரீகளிடம் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் என கூறிவிடு. என் இல்லத்தில் யாருக்குமே பிரெஞ்சு மொழி தெரியாததால்தான் மொழிபெயர்ப்பு செய்திட நான் உன்னைக் கேட்டுக்கொண்டேன், உனக்கு (பஹாய் சமயத்தைப்) போதிப்பதற்காக அல்ல. தங்களுக்குப் கற்பிக்குமாறு உளமாறவும் முழு அன்புடனும் கெஞ்சியவாறு பன்மடங்கான பஹாய்கள் இங்கு வருகின்றனர். அவர்களுக்கு மட்டுமே நாங்கள் எங்களின் விலைமதிப்பற்ற போதனையை வழங்குகிறோம். நான் (எங்கள் போதனையை) உனக்கு வழங்குவதற்கு முன் நீ அதற்காகப் பலமுறை கெஞ்சி (கூத்தாட) வேண்டும். அப்போதும் கூட நான் அதை உனக்கு வழங்குவேன் என்பது உறுதியல்ல; ஏனெனில், விரும்பப்படாத இடத்தில் அதை வழங்க வேண்டிய அளவுக்கு அது மலிவானதல்ல.
‘எங்கள் இல்லத்தில் இருக்க விரும்பினால் இரு, இங்கு உனக்கு மகிழ்ச்சியாக இல்லையெனில் நீ போகலாம்.
நீ இங்கு தங்க விரும்பினால் அது எங்களுக்கு மகிழ்ச்சியே, ஆனால் நாங்கள் உன்னை ஒரு பஹாய் ஆக்கிட முயல்வோம் எனும் பயத்தை உன் இதயத்திலிருந்து நீக்கிவிடு.’
அன்னமேரி ஹொன்னொல்ட் – அப்துல்-பஹா வாழ்க்கையிலிருந்து சில காட்சிகள்
ஜோகன்னஸ்பர்க், தென்னாப்பிரிக்கா – பெருந்தொற்றானது, இனப் பிளவுகள், பொருளாதார சிரமங்கள், கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, ஓரங்கட்டப்பட்ட மக்களின் உரிமைகள் போன்ற ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய உன்னத இலட்சியங்களால் ஈர்க்கப்பட்ட மக்கள் ஒன்றுகூடும் போது, முன்னேற்றத்திற்கான சாத்தியங்களின்பால் பல சமூகங்களை எழுப்பியுள்ளது. .
அதே சமயம், உலகளாவிய சுகாதார நெருக்கடி தற்போது நிலவும் பல சிக்கல்களை மோசமாக்கியுள்ளது, பெண்களுக்கு எதிரான வன்முறை அவற்றில் முக்கியமானவை, ஐக்கிய நாடுகள் சபை இதை “நிழல் தொற்று” என வர்ணித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில், ஜனாதிபதி சிரில் ரமபோசா மார்ச் 2020-இல் முதல் நாடு தழுவிய முடக்கத்திற்கு சில வாரங்களுக்குப் பிறகு ஒரு திறந்த கடிதத்தில் இப்பிரச்சினை குறித்து தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தார்.
இந்த தேசிய உரையாடலுக்குப் பங்களிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தென்னாப்பிரிக்காவின் பஹாய் வெளியுறவு அலுவலகம் அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூக நடவடிக்கையாளர் மற்றும் கல்வியாளருடனான வரிசையான கலந்துரையாடல் மூலம் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் குடும்பத்தின் பங்கை எடுத்துக்காட்டி வருகிறது.
“பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் சமூகத்தில் உணரப்பட வேண்டிய ஒன்று மட்டுமல்ல, அது மனித இயல்பு பற்றிய ஒரு உண்மையும் ஆகும். மனித இனத்தின் உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் பகிரப்பட்ட அடையாளம் கொண்டுள்ள, பாலினம் இல்லாத ஆன்மா என கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் பஹாய் வெளியுறவு அலுவலகத்தின் மிலிங்கன் போஸ்வாயோ கூறினார்.
தொடர்ந்து அவர்: “இந்த உண்மையின் விழிப்புணர்வு தூண்டப்பட்டு செயல்பாட்டுக்கு வரக்கூடிய ஒரு சக்திவாய்ந்த சூழலை குடும்பம் வழங்குகிறது. ஆதலால், குடும்பம் மற்றும் சமூகத்திற்குள் சிறு வயதிலிருந்தே பெண்கள் மற்றும் ஆண்கள் சமத்துவம் பற்றிய தார்மீக கல்வி அவசியமாகும்.
துணிவார்ந்த சட்டம் அறக்கட்டளையின் நிறுவனர் பாபலெட்ஸ்வே டிஃபோகோ, தார்மீகக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார்: “பாலின சமத்துவம் பற்றி இளைஞர்களுக்குக் கல்வி கற்பிப்பதற்கு ஓர் உலகளாவிய அணுகுமுறை கிடையாது. எனவே, நமக்கு வழிகாட்ட கலாச்சாரம் மற்றும் சமூக விதிமுறைகளை நம்ப வேண்டியுள்ளது, அவற்றில் சில ஏற்கனவே காலாவதியானவை.”
கலாச்சார மாற்றத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, கல்வி மற்றும் சமூக சேவகரான தாலலே நாதனே இவ்வாறு கூறினார்: “கடந்த காலத்தில் பெண்கள் ‘இன்கோசிகாஸி’ என அழைக்கப்பட்டனர், இது மரியாதைக்குரிய சொல் (ஸூலு மொழியில்) மற்றும் இது குடும்பத்திலும் சமூகத்திலும் தலைமைத்துவம் மற்றும் முடிவெடுப்பதிலும் ஒரு முக்கிய பங்கு வகித்து வந்தது. . இருப்பினும், சமூகத்தில் பெண்களின் இடத்தை சிதைக்கும் சில மனப்பான்மைகளும் நடைமுறைகளும் வெளிப்பட்டுள்ளன.
தொடர்ந்து அவர்: “பெண்கள் மற்றும் ஆண்கள் சமத்துவத்தின் அடிப்படையில் தென்னாப்பிரிக்க குடும்பங்களில் நான் முன்னேற்றம் காண விரும்புகிறேன்.”
விவாதங்களைப் பிரதிபலிக்கும் விதமாக, தென்னாப்பிரிக்காவின் பஹாய் தேசிய ஆன்மீக சபையின் உறுப்பினர் ஷெமோனா மூனிலால், பஹாய் கல்வித் திட்ட அனுபவங்களின் அடிப்படையில் ஒரு நம்பிக்கைமிக்க கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொள்கிறார். “இந்த நிகழ்ச்சிகளில், இளம் பெண்களும் சிறுவர்களும் ஆன்மீக குணங்கள் மற்றும் கொள்கைகளைப் பற்றி ஒன்றாகக் கற்கின்றனர், இது அவர்களின் வாழ்க்கையின் தொடக்க ஆண்டுகளில் இருந்தே, ஒருவர் மற்றவரைச் சமமாகப் பார்க்கவும் உடனுழைத்தல் கலாச்சாரத்தைப் பேணவும் வாய்ப்புகளை வழங்குகிறது.”
அவர் மேலும் கூறுகிறார்: “இந்த முயற்சிகளில் பேணப்பட்ட அணுகுமுறைகள் மற்றும் முன்னோக்குகள் சமூகத்திற்குச் சேவை செய்யும் திறனையும் அவர்களுள் வளர்க்கின்றன. இளம் பெண்களும் ஆண்களும் ஒன்றாகக் கலந்தாலோசிக்கவும், முடிவுகள் எடுக்கவும், தங்கள் சமூகங்களின் ஆன்மீக மற்றும் லௌகீக நல்வாழ்வுக்காக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கவும் கற்றுக்கொள்கிறார்கள்.
“நாங்கள் என்ன காண்கின்றோம் என்றால், நாடு முழுவதும் உள்ள அண்டைப்புறங்கள் மற்றும் உள்ளுர் பகுதிகளில் அதிக இளைஞர்கள் இந்த செயல்பாட்டில் பங்கேற்கும்போது, பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவத்தின் வெளிப்பாடுகள் மேலும் அதிகரிக்கின்றன மற்றும் குடும்பங்களை பிணைக்கும் ஆன்மீக உறவுகள் வலுவாகின்றன.”
பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் ஆண்கள் மற்றும் சிறுவர்களின் பங்கு போன்ற விஷயங்களில் கூடுதல் விவாதங்களை நடத்த வெளிவிவகார அலுவலகம் திட்டமிட்டுள்ளது.
பஹாய் உலக மையம்-நவம்பர் மாதம் அப்துல்-பஹாவின் நூற்றாண்டு நிறைவின் உலகளாவிய நினைவேந்தலுக்கான (commemoration) ஏற்பாடுகள், சமாதானத்தின் தூதர், சமூக நீதியின் வாகையர், மனிதகுல ஒருமை கொள்கையின் நிலைநிறுத்துனர் எனும் முறையில் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் உத்வேகம் பெற்ற கலை வெளிப்பாடுகளின் பொழிவுகளை உருவாக்கியுள்ளன. .
இசை, அசைவூட்டம் (animation), ஓவியம், நாடகம், கதைசொல்லல், கவிதை மற்றும் பிற கலை வடிவங்கள் மூலம் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள், அப்துல்-பஹா தமது உரையாடல்கள் மற்றும் எழுத்துகளில் குறித்துரைத்த தப்பெண்ணங்களை நீக்குதல், பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம், உலகளாவிய அமைதி மற்றும் மனிதகுலத்திற்குத் தன்னலமற்ற சேவை போன்ற ஆன்மீக கருத்தாக்கங்களை ஆராய்கின்றனர். .
பின்வருவது ஒரு தனித்துவ நிலையுடைய ஓர் ஆளுமையின் நினைவாக உலகம் முழுவதும் உருவாக்கப்படும் எண்ணற்ற கலைப் படைப்புகளின் மாதிரிகளாகும்.
எத்தியோப்பியா நாட்டின் ஓவியர் ஒருவர் வெவ்வேறு வர்ண காகிதங்களை வெட்டி இணைத்து, பாப் பெருமானார் மற்றும் அப்துல் பஹா இருவரின் நினைவாலயங்களை உருவாக்கியுள்ளார்
கனடாவைச் சேர்ந்த ஒரு கலைஞரின் இந்த ஓவியம், ‘அப்துல்-பஹா நான்கு தசாப்தங்களாக வாழ்ந்த’ அக்காநகரின் காட்சியை சித்தரிக்கிறது. அவர் தனது தந்தை பஹாவுல்லாவுடன் கைதியாகவும் நாடுகடத்தப்பட்டவராகவும் அந்த நகரத்திற்கு வந்தார். அங்கு அவர் அனுபவித்த பல துயரங்கள் மற்றும் துன்பங்கள் இருந்தபோதிலும், ‘அப்துல்-பஹா’ அக்காநகரைத் தமது வீடாக ஆக்கிக்கொண்டு, அந்த நகர மக்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு சேவை செய்ய தம்மை அர்ப்பணித்தார். காலப்போக்கில், அவர் இப்பகுதி முழுவதும் அறியப்பட்டு மதிக்கப்பட்டார்.
இந்த பாடல் கேமரூனைச் சேர்ந்த ஒரு இசைக்கலைஞரால் உருவாக்கப்பட்டது, அவர் அப்துல்-பஹா எழுதிய ஒரு பிரார்த்தனைக்கு இசையமைத்தார். பிரார்த்தனையின் ஒரு பகுதி: “O Thou forgiving Lord! Thou art the shelter of all these Thy servants. Thou knowest the secrets and art aware of all things. We are all helpless, and Thou art the Mighty, the Omnipotent.”
அவரது எழுத்துக்களில், ‘அப்துல்-பஹா, நாகரிகத்தின் முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதில் உலகின் பழங்குடி மக்களின் முக்கிய பங்கைக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பூர்வீக கலைஞரின் இந்த பகுதி பாரம்பரிய உள்நாட்டு கலை மற்றும் பஹாய் மோதிரக்கல் சின்னத்தை ஒன்றாகக் கொண்டுவருகிறது, இது அவரது வெளிப்பாடுகள் மூலம் மனிதகுலத்திற்கும் கடவுளுக்கும் இடையிலான உறவைக் குறிக்கிறது.
நார்வேயின் ஸ்டாவாங்கரில் பஹாய் சமூகக் நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்பாளர்கள் கலைகள் மூலம் ‘அப்துல்-பஹா’வின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து வருகின்றனர். வரவிருக்கும் நாடகத்திற்காக அவர்கள் ஒரு காகித மரத்தை இங்கே செய்கிறார்கள்.
உலகளாவிய கல்விக்கான பஹாய் கொள்கை குறித்த அப்துல்-பஹாவின் ஊக்குவிப்பைப் பிரதிபலித்த பிறகு, ஐக்கிய இராஜ்யத்தைச் சேர்ந்த ஒரு கலைஞர் பஹாய் எழுத்துக்களிலிருந்து மேற்கோள் காட்டப்பட்ட பின்வரும் பத்தியால் ஈர்க்கப்பட்டு இந்த முப்பரிமாணத்தை உருவாக்கினார்: மதிப்பிட முடியாத இரத்தினங்கள் அடங்கிய ஒரு சுரங்கமாக மனிதனைக் கருதுங்கள். கல்வி மட்டுமே அதன் பொக்கிஷங்களை வெளிப்படுத்தும் …
சமோவா தீவைச் சேர்ந்த ஒரு பாடல் குழுவின் இப்பதிவு பஹாவுல்லாவின் மறைமொழிகளிலிருந்து சில மேற்கோள்களை சித்தரிக்கின்றன. O SON OF MAN! Deny not My servant should he ask anything from thee, for his face is My face; be then abashed before Me. O SON OF LIGHT! Forget all save Me and commune with My spirit. This is of the essence of My command, therefore turn unto it. O SON OF MAN! Put thy hand into My bosom, that I may rise above thee, radiant and resplendent. O SON OF MAN! The temple of being is My throne; cleanse it of all things, that there I may be established and there I may abide.
சுவிட்சர்லாந்தில், பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்பாளர்கள் ‘அப்துல்-பாஹா’வின் வாழ்க்கையால் உத்வேகம் பெற்ற உருவகங்களைக் கொண்ட இந்த விரிப்பை உருவாக்க தங்கள் மாறுபட்ட கலாச்சாரப் பின்னணியை ஈர்த்தனர். அவர்களின் உள்ளூர் சமூக மையத்திற்கு இவ்விரிப்பு பரிசாக வழங்கப்பட்டது.
இவ்விரு பீங்கான் படைப்புகளும் கஃஸாக்ஸ்தானில் உள்ள ஒரு கலைஞரால் உலகளாவிய அமைதி பற்றிய ‘அப்துல்-பாஹா’வின் எழுத்துக்களில் இருந்து உருவகங்களை சித்தரிக்கின்றன.
The Nyota Ya Alfajiri Choir (Morning Star Choir), comprising youth in Kakuma, northern Kenya, has composed this song about the life of ‘Abdu’l-Bahá and His unique station in Bahá’í history.
கென்யா இளைஞர்கள் அப்துல் பஹாவின் வாழ்க்கை மற்றும் பஹாய் வரலாற்றில் அவரது தனிச்சிப்பான ஸ்தானம் குறித்த ஒரு பாடலை இயற்றியுள்ளனர்.
கஃஸாக்ஸ்தான் ஓவியர் ஒருவர் இந்தப் பேனா சித்திரத்தை, அப்துல் பஹாவின் பிரார்த்தனை ஒன்றின் உருவக சித்தரிப்பாகும்
நெதர்லாந்தில், தேசிய அஞ்சல் சேவை நூற்றாண்டு நினைவேந்தலுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முத்திரையை வெளியிட்டுள்ளது, இது ‘அப்துல்-பஹா’ கோவிலின் வடிவமைப்பு கருத்தின் காட்சியை கொண்டுள்ளது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் “ஒளியாக இருங்கள்” என்னும் தலைப்பில் ஒரு பாடலில் ஒத்துழைத்தனர், இது ‘அப்துல்-பஹாவின் எழுத்துக்களிலிருந்து பின்வரும் மேற்கோள்களின் உத்வேகம் பெற்றது: “தெய்வீகக் கல்வி கடவுள் ராஜ்யத்தின் கல்வி: அது தெய்வீகப் பரிபூரணங்களைப் பெறுவதில் அடங்கும், இதுவே உண்மையான கல்வி.”
தமது வாழ்க்கையில் அனுபவித்த பெரும் சிரமங்களுக்கு எதிரில் அப்துல் பஹாவின் மீள்ச்சித்திறம் மற்றும் பற்றுறுதி குறித்த பிரதிபலிப்பில் சிங்கப்பூர் ஓவியர் ஒருவர் இந்த சித்திரத்தை வரைந்தார்
“அவர்கள் பார்வையில்” என தலைப்பிடப்பட்ட ஓர் அசைவூட்டம் ஐக்கிய அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. அதில் லியோ டால்ஸ்டாய், ஃகாலில் ஜிப்ரான், யோனே நோகுச்சி போன்ற அப்துல் பஹாவின் இரசிகர்களின் விமர்சனங்கள் வழங்கப்பட்டடுள்ளன.
காங்கோ ஜனநாயகக் குடியரசில், பல இசைக்கலைஞர்கள் ‘அப்துல்-பாஹாவின் குணாதிசயங்கள் மற்றும் மனிதகுலத்திற்கான அவரது சேவை ஆகியவற்றின் அசாதாரண குணங்களைப் பற்றி ஒரு பாடலைப் பதிவு செய்துள்ளனர்.
ருமேனியாவைச் சேர்ந்த ஒரு கலைஞர் அக்காவில் உள்ள அப்துல்லா பாஷாவின் அறையில் இந்த விளக்கப்படத்தை உருவாக்கினார், அங்கு, பாரீஸில் வசிக்கும் ஐக்கிய அமெரிக்க பஹாய் ஆன லாரா ட்ரேஃபஸ் பார்னி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக 1904 மற்றும் 1906 க்கு இடையில் ‘அப்துல்-பாஹா’ மூலம் தொடர்ச்சியான உரைகள் வழங்கப்பட்டன.பின்னர், உரைகளின் படியெடுத்தல் சில பதிலளிக்கப்பட்ட கேள்விகள் எனும் புத்தகமாக வெளியிடப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகள் குழு அப்துல்-பஹா பற்றிய கதையைப் படித்த பிறகு இந்த ஓரிகமி துண்டுகளை உருவாக்கியது.
கனடாவைச் சேர்ந்த ஒரு கலைஞர் காகித அட்டைகளைத் தயாரித்துள்ளார், ஒவ்வொன்றும் ‘அப்துல்-பஹா’ இயற்றிய பிரார்த்தனையைக் கொண்டுள்ளது. பின்வரும் பிரார்த்தனையில் காணப்படும் இயற்கை உலகின் உருவகத்தின் உத்வேகம் பெற்ற பிரார்த்தனை அட்டைகள் பூக்களின் ஓவியங்களால் ஒளிரும்: “They have bloomed like sweet blossoms and are filled with joy like the laughing rose. Wherefore, O Thou loving Provider, graciously assist these holy souls by Thy heavenly grace which is vouchsafed from Thy Kingdom…”
அப்துல் பஹாவின் நினைவாலய வடிவ கருத்தாக்கத்தின் அடிப்படையில் துனீசிய பஹாய் ஒருவர் இந்த நீர்வர்ண சித்திரத்தை வரைந்துள்ளார்.
ஆண் பெண் சமத்துவம் குறித்த அப்துல் பஹாவின் எழுத்துகளில் காணப்படும் உவமைகளை இந்திய நாட்டைச் சேர்ந்தவரின் இந்த ஓவியம் தூண்டுகிறது
சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு இசைக் குழுவினர் அப்துல் பஹா எழுத்துகளின் சில உரைப்பகுதிகளுக்கு இசையமைத்துள்ளனர்
தென் ஆப்பிரிக்காவில் பஹாய் சமூக நிர்மாணிப்பின் பங்கேற்பாளர்கள் இந்த கலைத்துவ படைப்புகளை உருவாக்கியுள்ளனர். இவை மானிடத்திற்கான அப்துல் பஹாவின் தன்னலமற்ற சேவை மற்றும் அன்பிலிருந்து உத்வேகம் பெற்றவை
மானிடத்திற்கான அப்துல் பஹாவின் சேவை குறித்த கதைகளை கொலம்பியா நாட்டின் குழந்தைகளும் இளைஞர்களும் பகிர்ந்துகொள்ளும் பல காணொளிகளில் இதுவும் ஒன்று
ஆர்மேனியா நாட்டின் இந்த அனிமேஷன், குழந்தைகளுக்கான அப்துல் பஹாவின் பிரார்த்தனைக்கு இசையூட்டியுள்ளது. “கடவுளே என்னைப் பாதுகாத்து….”
கனடா நாட்டைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் அப்துல் பஹாவுடன் தொடர்புடைய முக்கிய இடங்கள் குறித்த சித்தரிப்புகளை உருவாக்கியுள்ளார்– அப்துல் பஹாவின் நினைவாலயம், பாஹ்ஜி மாளிகை மற்றும் ஹைஃபாவிலுள்ள அப்துல் பஹாவின் இல்லம்
இரான் நாட்டிலுள்ள வெவ்வேறு ஓவியர்கள் அப்துல் பஹாவின் பிரார்த்தனைகள் மற்றும் எழுத்துகளின் உத்வேகம் பெற்ற கையெழுத்துக்கலை படைப்புகளை உருவாக்கியுள்ளனர்
வாழ்வின் ஆன்மீகப் பரிமானங்கள் குறித்த அப்துல் பஹாவின் எழுத்துகளிலிருந்து உரைப்பகுதிகளை உள்ளடக்கிய, இரான் நாட்டில் உருவாக்கப்பட்ட பல அனிமேஷன்களில் இதுவும் ஒன்று
This animation is one of several that have been created in Iran, incorporating passages from the writings of ‘Abdu’l-Bahá about the spiritual dimension of life.
மானிடத்திற்கான தன்னலமற்ற சேவை குறித்த ஒரு பாடலை தீமோர் லெஸ்ட்டெ இளைஞர்கள் உருவாக்கியுள்ளனர்
இரான் நாட்டு இசைக் கலைஞர்கள் உருவாக்கிய அப்துல் பஹாவின் வாழ்க்கை குறித்த பாடல்களுள் இதுவும் ஒன்று. இப்பாடல் மகிழ்ச்சி, ஆன்மீக உத்வேகம், கடவுளிடம் அணுக்கம் மற்றும் அமைதி
பஹாய் போதனைகளில் காணப்படும் எதிர்காலத்திற்கான ஆர்வநம்பிக்கைமிக்க தொலைநோக்கினால் உத்வேகம் பெற்ற கருத்தியல் ஓவியம்
பஹாய் வரலாற்றில் அப்துல் பஹாவின் தனித்துவமான ஸ்தானம் குறித்த இப்பாடலை மக்காவ் தீவின் இசைக்கலைஞர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு இசைக்கலைஞரும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு இசையமைப்பாளரும் பஹாவுல்லா மற்றும் ‘அப்துல்-பாஹா’ ஆகியோரின் எழுத்துக்களில் இருந்து எடுக்கப்பட்ட உரைப்பகுதிகளுக்கு இசை அமைத்து ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஆல்பத்தின் கவர் ஸ்பெயின் கலைஞர் ஒருவரால் உருவாக்கப்பட்டது.
இந்தச் சித்தரிப்பு, சிலி நாட்டைச் சேர்ந்த ஒரு கலைஞரின் பேனா வரைபடங்களின் ஒரு பகுதியாகும், இது அப்துல்-பஹாவுடன் தொடர்புடைய இடங்களைச் சித்தரிக்கிறது. இந்த வரைபடம் கனடாவின் மாண்ட்ரீலில் உள்ள மேக்ஸ்வெல் குடியிருப்பின் நுழைவாயிலாகும், அங்கு அவர் 1912 இல் அந்த நகரத்திற்கு பத்து நாள் வருகையின் போது பொது பார்வையாளர்களிடம் பேசினார். சமயங்களின் ஒருமை, தப்பெண்ணங்களை அகற்றுதல், பொருளாதார சமத்துவமின்மை போன்ற விஷயங்கள் பரவலாக ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழி செய்தித்தாள்களால் வெளியிடப்பட்டது.
இத்தாலி பஹாய் சமூகத்தால் உருவாக்கப்பட்ட இந்த அனிமேஷன் வீடியோ, ‘அப்துல்-பஹா’ எழுதிய ஒரு பிரார்த்தனையை இசையமைக்கிறது, “O God! Educate these children. These children are the plants of Thine orchard, the flowers of Thy meadow, the roses of Thy garden.”
ஜெர்மனியில் இந்த கலை கண்காட்சி ‘அப்துல்-பஹா’வின் அன்பு, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் குறித்த வார்த்தைகளைப் பிரதிபலிக்கிறது. அவரது எழுத்துக்களிலிருந்து நிர்மாணிக்கப்பட்ட மேற்கோள்கள் அவை உத்வேகமூட்டிய கலைப்படைப்புகளில் அமைக்கப்பட்டன.
இந்த வீடியோவில், இந்திய பஹாய் சமூகத்தின் உறுப்பினர்கள் அனைத்து மக்களுக்குமான ‘அப்துல்-பஹா’வின் அன்பு பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இந்த வீடியோவில், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனின் அண்டைப்புறத்தில் சமூகக் நிர்மாணிப்பு நடவடிக்கைகளின் பங்கேற்பாளர்கள், ‘அப்துல்-பஹாவின் வாழ்க்கை பற்றிய பாடல்களைப் பாடுகிறார்கள்.
பெருவில் உள்ள ஒரு கலைஞரின் இந்த ஓவியம் ஒளியை ‘அப்துல்-பஹா’வின் ஒற்றுமைக்கான அழைப்பின் உருவகமாகப் பயன்படுத்துகிறது.
ஸ்வீடனின் லுண்டின் க்ளோஸ்டர்கார்டன் அண்டைப்புறத்தில் சமூகக் நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பங்கேற்பாளர்களால் பாடப்பட்ட பாடல்களின் பதிவு இது.
“புயல்” என்று பெயரிடப்பட்ட இந்த பாடல், அமெரிக்கா முழுவதும் உள்ள மக்களால் இயற்றப்பட்டது மற்றும் சமூகத்திற்கு சேவை செய்வதன் மூலம் மனிதகுலம் எதிர்கொள்ளும் சவாலான நேரங்களை வழிநடத்துவது உட்பட பல்வேறு கருப்பொருள்களைத் தொடுகிறது.
அமெரிக்காவில் ஒரு கலைஞரால் உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் கலைப்படைப்பு, பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் குறித்த ‘அப்துல்-பஹா’வின் வார்த்தைகளின் உத்வேகம் பெற்றது, அதில் அவர் மனிதகுலத்தை இரண்டு இறக்கைகள் கொண்ட பறவையுடன் ஒப்பிடுகிறார்.
இந்த அட்டைகள் ஜப்பானின் ஃபுகுஷிமாவில் ஒரு கலைஞரால் தயாரிக்கப்பட்டன, பாரிசில் ‘அப்துல்-பாஹா’ வழங்கிய பொது உரைகளில் இருந்து ஒற்றுமையை ஊக்குவிப்பதில் மதத்தின் பங்கு மற்றும் வாழ்க்கையின் உண்மையான நோக்கம் போன்ற பல்வேறு கருப்பொருள்களை அவை உள்ளடக்கியுள்ளன
தென்னாப்பிரிக்காவில் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளின் பங்கேற்பாளர்கள் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட களிமண் கட்அவுட்களை உருவாக்கியுள்ளனர், இது பஹாய் சமயத்தின் அடையாளமான, ஒன்பது-புள்ளி நட்சத்திரத்தை உருவாக்க ஒன்றாக ஏற்பாடு செய்யப்படும். எண் 9 ஒற்றுமை மற்றும் முழுமையை குறிக்கிறது.
அஜர்பைஜானின் பாகுவில் உள்ள இசைக்கலைஞர்கள் இந்த பாடலை அசர்பைஜானி, துருக்கி, ரஷ்யன், பாரசீக மற்றும் ஆங்கிலத்தில் பாடல் வரிகளுடன் சமூகத்திற்கான சேவை பற்றி எழுதியுள்ளனர். இந்த பாடல் பாகு நகரத்தின் ‘அப்துல்-பஹா’வுடனான வரலாற்று உறவுகளால் உத்வேகம் பெற்றதாகும். பாஃகு பஹாய் சமூகத்தின் ஆரம்ப வளர்ச்சி ‘அப்துல்-பஹா’வால் பேணப்பட்டது.
யுனைடெட் கிங்டமிலிருந்து ஒரு கலைஞர் இந்த ஓவியங்களை ‘அப்துல்-பஹாவின் அறிக்கையான “ஒரு கப்பலின் கலபதி அடிக்கடி சோதனையிலும் கடினமான பயணத்திலும் ஈடுபடும் போது அவரது அறிவு அதற்கேற்றவாறு அதிகரிக்கின்றது” குறித்து பிரதிபலிப்பின் பயனாக உருவாக்கினார்.
பூட்டப்பட்ட நிலையில், ருமேனியாவில் உள்ள ஒரு குடும்பம் 1911 இல் ‘அப்துல்-பஹா ஐரோப்பாவிற்கு விஜயம் செய்த முதல் நாட்களின் முக்கிய நிகழ்வுகளின் வியத்தகு விளக்கக்காட்சியைப் பதிவு செய்தது. இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள நாடகம்,’ அப்துல் பஹாவை சந்தித்த சிலரை சித்தரிக்கிறது. இந்த சந்திப்புகள் அவர்கள் மீது ஏற்படுத்திய மாற்றத்தை இந்த வீடியோ நினைவுகூர்கின்றது
உலகின் பூர்வீக மக்களுக்கான ‘அப்துல்-பஹா’வின் அன்பையும், அனைத்து மக்களும் “ஒரு தோட்டத்தின் மலர்கள்” என்னும் பஹாய் எழுத்துகள் உரைப்பகுதியயைப் பிரதிபலித்த பிறகு, கனடாவில் ஒரு பழங்குடி கலைஞர் ஒரு தையல்காரருடனும் டஜன் கணக்கான மற்ற மக்களுடனும். ஒத்துழைத்து பாரம்பரிய உள்நாட்டு மணிகள் கொண்ட எம்பிராய்டரியை உருவாக்கினார்.
ஸ்பெயினில் உள்ள ஒரு கலைஞரின் குழந்தைகளுக்கான இந்த விளக்கப்படங்கள் பஹாய் போதனைகளிலிருந்து கல்வி பற்றிய கருத்துக்களை ஆராய்கின்றன, பஹாவுல்லாவின் பின்வரும் அறிக்கையை பயன்படுத்துகின்றன: “மனிதனை ஒரு விலைமதிப்பிட இயலாத இரத்தினங்கள் அடங்கிய சுரங்கமென கருதுங்கள்…”
இந்த வீடியோவில் பாப்புவா நியூ கினியின் குடெனோஃப் தீவில் இருந்து ஒரு பாடகர் குழு இடம்பெற்றுள்ளது, தற்போது போர்ட் மோர்ஸ்பியில் கட்டப்பட்டு வரும் பஹாய் வழிபாட்டு இல்லம் பற்றிய பாடல்களை இக்குழு பாடுகின்றது
இந்த மண்டலம் ஒரு பொலீவிய நாட்டு ஓவியரால் எம்பிராய்டரி செய்யப்பட்டது. இவர் அப்துல் பஹாவின் மானிடம் அனைத்திற்குமான அன்பின் உத்வேகத்தைப் பெற்றிருந்தார்.
ரஷ்யாவில் ஒரு மெஸ்ஸோ-சோப்ரானோ மற்றும் டெனோர் இரட்டையர்கள், ஓர் ஓப்ரா பாணியில், ‘அப்துல்-பஹா இயற்றிய பிரார்த்தனைக்கு இசையமைத்தனர். “கடவுளே, எனக்கு நல்வழி காட்டி, என்னைப் பாதுகாத்து…” என இந்தப் பிரார்த்தனை ஆரம்பிக்கின்றது.
நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு கலைஞரின் இந்தப் பேனா சித்திரம், “அப்துல்-பாஹாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,” பதிலளிக்கப்பட்ட சில கேள்விகள் மீது தியானம் “என்னும் தலைப்பில் வரவிருக்கும் வெளியீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
அப்துல்-பாஹாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட மேலும் பல பாடல்களை இந்தப் பட்டியலில் காணலாம்.
பஹாய் சமயத்தின் முன்னோடி அவதாரமான பாப் பெருமானார் தாம் ஒரு கடவுளின் அவதாரம் என 23 மே 1844-இல் பிரகடனப்படு்த்திக் கொண்டார். இந்தப் பிரகடனத்தை முதன்முதலில் செவிமடுத்தவர் முல்லா ஹுசேன் ஆவார். பாப் பெருமானாரின் இந்தப் பிரகடனத்தைத் தொடர்ந்து பல்லாயிரக் கணக்கான இரானிய மக்கள் பாப் பெருமானாரின் நம்பி்க்கையாளர் ஆகினர்.
பாப் பெருமானார் 9 ஜூலை 1850-இல் ஓர் அவசர விசாரனைக்குப் பிறகு மரண தண்டனை விதிக்கப்பட்டு தப்ரீஸ்நகர் சதுக்கம் ஒன்றில் 750 துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானார். காலப்போக்கில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட இவருடைய நம்பி்க்கையாளர் பலர் வீரமரணத்திற்கு உட்படுத்தப்பட்டனர்.
பாப் பெருமானார் தியாகமரணத்தால் மனநிலை பாதிக்கப்பட்ட சில பாப்’யி இளைஞர்கள், பாப் பெருமானாரின் மரணத்திற்கு அந்நாட்டின் ஷா மன்னனே பொறுப்பாளி என முடிவு செய்து, அவரைக் கொலை செய்யும் முயற்சியில் இறங்கினர். அந்த முயற்சியில் ஈடுபட்ட நான்கு இளைஞர்களுள் இருவர் சம்பவம் நடத்த இடத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டனர், மற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கொலை முயற்சியில் வேறு யாருக்கும் சம்பந்தமில்லை என கைது செய்யப்பட்ட இளைஞர்கள் வலியுறுத்திய போதும், அப்போது பாப்’யிக்களுள் மிகவும் பிரபலமாக இருந்த மிர்ஸா ஹுசேய்ன் அலி எனப்படும் பஹாவுல்லாவே இதைத் தூண்டிவிட்டார் என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கைது ஆணை பிறப்பிக்கப்பட்டபோது, பஹாவுல்லா தெஹரான் நகருக்கு அருகிலிருந்த அஃப்சே எனப்படும் கிராமத்தில் இருந்தார். ஷா மன்னனின் ஆணையிலிருந்து அவரை தப்பிக்க வைக்க அவரது நண்பர்கள் முயன்றனர், ஆனால் பஹாவுல்லா அதற்கு இணங்காமல் தம்மைக் கைது செய்ய வந்தோரை சந்திப்பதற்காக நேரில் சென்றார்.
பஹாவுல்லா கைது செய்யப்பட்ட அஃப்சி கிராமம்
கை செய்யப்பட்ட பஹாவுல்லா, உச்சி வெய்யிலில், தலையில் தலைப்பாகை இன்றி, வழிநெடுக கால்நடையாக தெஹரான் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வழியில் இருபுறமும் வேடிக்கைப் பார்ப்பதற்காகக் கூடியிருந்த மக்கள் அவர்மீது கற்களையும் கையில் கிடைத்த பொருட்களையும் கொண்டு தாக்கியதுடன் பெரும் அவமதிப்புக்கும் அவரை ஆளாக்கினர்.
இவ்வாறாக, பஹாவுல்லா கொண்டு செல்லப்பட்டு, தெஹரான் நகரில், கருங்குழி (சிய்யாச்சால்) என அழைக்கப்பட்ட, ஒரு காலத்தில் நீர்த்தேக்கமாகப் பயன்பட்ட ஒரு நிலவறைக்குள் சிறை வைக்கப்பட்டார். இந்தக் கருங்குழி, அதன் துர்நாற்றம், அசுத்தம் மற்றும் காரிருளுக்கு பெயர்போன ஒன்றாக அப்போது இருந்தது. இங்குதான் பஹாவுல்லா தம்மில் உள்ளார்ந்திருந்த தெய்வீக திருவெளிப்பாட்டின் முதல் அறிகுறிகளைப் பெற்றார்.
பின்னர் அவர் இவ்வாறு எழுதினார்: “அரசனே, பிறரைப் போன்று நானும் என் மஞ்சத்தில் துயில் கொண்டிருந்தேன். அவ்வேளை, சர்வ பேரொளிமிக்கவரின் தென்றல் என்மீது தவழ்ந்து சென்று, இதுவரையிலான அனைத்தைப் பற்றிய அறிவையும் எனக்குப் புகட்டியது. இது என்னிடமிருந்து வந்ததல்ல; சர்வ வல்லவரும் எல்லாம் அறிந்தவருமான ஒருவரிடமிருந்து வந்துள்ளது. மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையில் என் குரலை ஒங்கச் செய்யுமாறு அவர் என்னைப் பணித்தார்.” (ஓநாயின் மைந்தனுக்கான நிருபம்)
ஆனாலும், இத்திருவெளிப்பாட்டைப் பகிரங்கமாக அறிவிக்கும் நேரம் அப்போது கனிந்திருக்கவில்லை.
கருங்குழிக்கான நுழைவாயில்
சிய்யாச்சால், ஒரு காலத்தில் நீர்தேக்கமாகப் பயன்பட்டும் பின்னர் கைவிடப்பட்டு, பின்னர் ஒரு நிலவறையாக மாற்றப்பட்டிருந்தது. ஒளி அறவே புகமுடியாத அந்த நிலவறைக்குள் இறங்குவதற்கு மூன்று தளமான படிக்கட்டுகள் இருந்தன. முறையான கழிவறை கிடையாததுடன் அது மிகவும் சிறிய இடமாகவும் இருந்தது.
பஹாவுல்லா அங்கு சிறைப்பட்டிருந்த போது அவருடன் சுமார் 150 பேர், பல்வேறு குற்றங்களுக்காக சிறைப்பட்டிருந்தனர்.
இந்த சிய்யாச்சாலில் பஹாவுல்லா நான்கு மாத காலம் சிறைப்பட்டிருந்தார். அந்த அனுபவத்தை அவர் தமது சொந்த வார்த்தைகளில் விவரிக்கின்றார்:
இத் தவறிழைக்கப்பட்டோனும் அது போன்று தவறிழைக்கப்பட்ட பிறரும் அடைக்கப்பட்டிருந்த அந்த நிலவறையைப் பார்க்கும் போது, ஒரு குறுகலான குழி அதைவிட சிறந்ததாகும். அங்கு நாங்கள் வந்தடைந்த போது, நாங்கள் ஓர் காரிருள் சூழ்ந்த தாழ்வாரம் வழி வழிநடத்தப்பட்டோம். அங்கிருந்து மூன்று செங்குத்தான படிக்கட்டுளில் இறங்கி எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்தோம். அந்த நிலவறையில் காரிருள் சூழ்ந்திருந்தது. எமது சக கைதிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நூற்றைம்பது ஆன்மாக்களாகும்: திருடர்கள், கொலைகாரர்கள், வழிப்பறி கொள்ளையர். அங்கு கூட்டம் நிறைந்திருந்த போதும், அதிலிருந்து வெளியேறுவதற்கு நாங்கள் வந்த வழியைத் தவிர வேறு வழி கிடையாது. எந்த எழுதுகோலும் அந்த இடத்தை விவரிக்கவியலாது, அல்லது எந்த நாவும் அதன் துர்நாற்றத்தை வர்ணிக்கவியலாது. அம்மனிதர்களுள் பெரும்பான்மையினருக்கு உடைகள் கிடையாது அல்லது தூங்குவதற்குப் படுக்கை கிடையாது. மிகுந்த துர்நாற்றம் வீசிய, இருண்ட இடத்தில் எமக்கு என்ன நேர்ந்தது என்பதை கடவுள் மட்டுமே அறிவார்! [3]
நாங்கள் அனைவரும் ஒரே அறையில் குழுமியிருந்தோம்; எங்கள் கால்கள் மரச்சட்டங்களில் பூட்டப்பட்டும் கழுத்துகளில் படுமோசமான சங்கிலிகள் பொருத்தப்பட்டும இருந்தது. நாங்கள் சுவாசித்த காற்று படு அசுத்தம் நிறைந்ததாக இருந்தது. நாங்கள் உட்கார்ந்திருந்த தரை மாசு படர்ந்தும் பூச்சிப்புழுக்கள் நிறைந்ததாகவும் இருந்தது. அந்த கொள்ளைநோய் நிலவறையை ஊடுருவதற்கு அல்லது அதன் பனிபோன்ற குளிரை சூடாக்கிட எந்த ஒளிக் கதிரும் அனுமதிக்கப்படவில்லை. [4]
ஒவ்வொரு நாளும் எமது சிறை காவலாளிகள், எமது அறைக்குள் நுழைந்து, எமது சகபாடியருள் ஒருவரின் பெயரை உச்சரித்து, அவரைத் தூக்குமேடைக்குத் தம்மைப்பின்த்தொடர்ந்து வரும்படி ஆணையிடுவர். [5] (ஓநாயின் மைந்தனுக்கான நிருபம்)
சிய்யாச்சால் உட்புறம்
பஹாவுல்லா இங்கு சிறைப்பட்டிருந்த காலத்தில், அவரது கழுத்தில் இரண்டு சங்கிலிகள், ஒன்று அல்லது மற்றொன்று மாட்டப்பட்டிருக்கும். அச்சங்கிலிகள், அவை ஒவ்வொன்றும் அவற்றின் சொந்தப் பெயர்களைப் பெற்றிருக்கும் அளவிற்கு பிரசித்திபெற்றிருந்தன.
எப்பொழுதாவது மாட்சிமை பொருந்திய ஷா அவர்களின் பாதாளச் சிறையைக் காண நேரிடுமாயின், காரா-குஹார் மற்றும் சலாசில் எனும் இரு சங்கிலிகளை உங்களுக்குக் காண்பித்திடுமாறு இயக்குநர் மற்றும் தலைமை சிறைக்காவலர் ஆகியோரிடம் கேளுங்கள். நீதி என்னும் பகல் நட்சத்திரத்தின்மீது சாட்சியாக, நான்கு மாதமாக இத்தவறிழைக்கப்பட்டோன் சித்திரவதை செய்யப்பட்டு அந்தச் சங்கிலிகளில் ஒன்றினாலோ மற்றொன்றினாலோ யாம் பிணைக்கப்பட்டிருந்தோம்.[5]
இச்சங்கிலிகளுள் ஒன்று 51 கிலோகிராம் எடையுடையது, அவற்றின் பாரமானது அத்தகையதாக இருந்ததனால், அவற்றின் பலுவைச் சுமப்பதற்கு உதவியாக ஒரு மரத்திலான கவைக்கோல் அவற்றுக்கு வழங்கப்பட்டிருந்தது.
எமது கழுத்தில், அச்சங்கிலிகளின் தழும்புகள் இன்னமும் உள்ளன. எமது உடலில் ஓர் அடங்கா கொடுமையின் தடயங்கள் பதிந்துள்ளன. [6]
ஒரு நாள், தமது தந்தையாரைச் சந்திப்பதற்காக அப்துல்-பஹா கொண்டுசெல்லப்பட்டார் (அப்போது அவருக்கு வயது ஒன்பது) என அடிப் தாஹெர்ஸாடே பதிவுசெய்துள்ளார்.
அவர் படிக்கட்டுகளில் பாதி தூரம் மட்டுமே இறங்கியிருப்பார். அப்போது பஹாவுல்லா அவரைக் கண்டுகொண்டு, சிறுவரான அப்துல்-பஹாவை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்படும்படி ஆணையிட்டார். வெளியே சிறை முற்றத்தில் கைதிகள் அனைவரும் தூய்மையான காற்றுக்காக ஒரு மணி நேர அவகாசத்தில் வெளியே கொண்டு வரப்படும் வரை அப்துல்-பஹா காத்திருப்பதற்கு அனுமதிக்கப்பட்டார். தமது சகோதரர் மகனுடன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த தமது தந்தையாரை அப்துல்-பஹா கண்ணுற்றார்… அவர் பெரும் சிரமத்துடன் நடந்துவந்தார், அவரது தாடியும் முடியும் திருத்தப்படாமல் இருந்தன, ஒரு கனமான எஃகு வளையத்தின் பலுவினால் அவரது கழுத்து காயப்பட்டும் வீங்கியும் இருந்தது, சங்கிலியின் கனத்தினால் அவரது முதுகு வளைந்திருந்தது. இந்தக் காட்சியைக் கண்ட அப்துல்-பஹா மயக்கமுற்று, பிரக்ஞையற்ற நிலையில் வீட்டிற்குத் தூக்கிச் செல்லப்பட்டார். [அடிப் தாஹெர்சாடே, பஹாவுல்லாவின் திருவெளிப்பாடு 1853-63, பக். 8]
மிகவும் இருள்சூழ்ந்த இந்த நேரத்தில், பஹாவுல்லா தனியாக இல்லை. தமது சகாக்களை “இறைவன் எனக்குப் போதுமானவர்…” எனும் பிரார்த்தனையைப் பாடுவதில் வழிநடத்துவார்.
எப்பொழுதாவது மாட்சிமை பொருந்திய ஷா அவர்களின் பாதாளச் சிறையைக் காண நேரிடுமாயின், காரா-குஹார் மற்றும் சலாசில் எனும் இரு சங்கிலிகளை உங்களுக்குக் காண்பித்திடுமாறு இயக்குநர் மற்றும் தலைமை சிறைக்காவலர் ஆகியோரிடம் கேளுங்கள். நீதி என்னும் பகல் நட்சத்திரத்தின்மீது சாட்சியாக, நான்கு மாதமாக இத்தவறிழைக்கப்பட்டோன் சித்திரவதை செய்யப்பட்டு அந்தச் சங்கிலிகளில் ஒன்றினாலோ மற்றொன்றினாலோ யாம் பிணைக்கப்பட்டிருந்தோம்.[5]
ச
மிகவும் இருள்சூழ்ந்த இந்த நேரத்தில், பஹாவுல்லா தனியாக இல்லை. தமது சகாக்களை “இறைவன் எனக்குப் போதுமானவர்…” எனும் பிரார்த்தனையைப் பாடுவதில் வழிநடத்துவார்.
மற்றோர் உணர்வில் பஹாவுல்லா தனியராக இருக்கவில்லை.
தெஹ்ரான் சிறையில் நான் கிடந்த நாள்களின் பொது, சங்கிலியின் அபார பாரமும் துர்நாற்றம் நிறைந்த காற்றும் எனக்கு மிகக் குறைவான தூக்கத்தையே அனுமதித்த போதிலும், அவ்ப்போதான இலேசான துயிலின் போது, ஓர் உயர்ந்த மலையின் உச்சியினின்று பூமியின் மீது பொழிந்திடு ஒரு வலிய புயலைப் போன்ற, எதோ ஒன்று எனது சிரசின் உச்சியினின்று மார்பின் மீது வழிந்தொடுவதாக நான் உணர்ந்தேன். அதன் விளைவாக, என் உடலின் ஒவ்வோர் அங்கமும், தீப்பற்றிக்கொள்ளும். அத்தருணங்களில், எந்த மனிதனும் செவிமடுக்க முடியாதவற்றை எனது நா உச்சரித்தது. [7]
ஓரிரவு, ஒரு கனவில், இம்மேன்மைமிக்க சொற்கள் எல்லா பக்கங்களிலும் செவிமடுக்கப்பட்டன: “மெய்யாகவே உம்மாலும் உமது எழுதுகோலினாலும் உம்மை யாம் வெற்றியடையச் செய்வோம். உமக்கு நேர்ந்தவற்றினால் நீர் கவலையுற வேண்டாம், அல்லது அச்சமுறவும் வேண்டாம், ஏனெனில், நீர் பாதுகாப்பாக இருக்கின்றீர். விரைவில் பூமியின் பொக்கிஷங்கள, உம்மூலமாகவும் தம்மைக் கண்டுணர்ந்தோரின் இதயங்களை அவர் உயிர்ப்பித்துள்ள உமது நாமத்தின் மூலமாகவும் கடவுள் வெளிக்கொணர்வார்.”[8]
“துயரங்களால் சூழ்ந்துள்ள வேளையில், யாம் மிக அற்புதமான, மிக இனிமையானதொரு குரல், எமது தலைக்கு மேல் குரல் எழுப்பப்படுவதைச் செவிமடுத்தோம். எமது வதனத்தை யாம் திருப்பியபோது, – எமதாண்டவரின் நாமமெனும் நினைவின் திருவுருவாக இருக்கும் – எம்முன் அந்தரத்தில் இயங்கிநிற்கும் ஒரு தேவதையைக் கண்டேன். அவள் தனது ஆன்மாவினுள் எத்துனை பெருமகிழ்ச்சி கொண்டிருந்தாள் என்றால், அவளது வதனம் கடவுளின் நல்விருப்பம் எனும் அனிகலனால் பிரகாசித்தது; மேலும் அவளது கன்னங்கள் சர்வ கருனைமிக்கவரின் பிரகாசத்தினைக் கொண்டு கனலொளி வீசின. மண், விண் ஆகியவற்றுக்கிடையே அவள் மனிதர்களின் இதயங்களையும் மனங்களையும் வயப்படுத்திடும் ஓர் அழைப்புக் குரலை எழுப்பினாள். எனது அகம், புறம் ஆகிய இரண்டு ஜீவனிடமும், எனதான்மாவையும், கடவுளின் மதிப்பிற்குரிய ஊழியர்களின் ஆன்மாக்களையும் மகிழ்வுறச் செய்திடும் நற்செய்திகளை அவள் பகிர்ந்து கொண்டாள்.
எமது சிரசை நோக்கி அவளது விரலைக் காட்டி, விண்ணிலுள்ள அனைவரையும் மண்ணிலுள்ள உள்ள அனைவரையும் நோக்கி அவள் இவ்வாறு கூறினாள்: கடவுளின் பெயரால்! இவர்தாம் உலகங்களின் அதிநேசராவார்; ஆயினும் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. அதனை நீங்கள் புரிந்துகொள்ளக் கூடுமாயின், இவர்தாம் உங்கள் மத்தியிலுள்ள கடவுளின் திருவழகாவார், உங்களுள் இருக்கும் அவரது மாட்சியிமையின் சக்தியுமாவார். அறிந்துணர்வோருள் ஒருவராக நீங்கள் ஆகினால், இவர்தான் கடவுளின் மர்மமும் அவரது பொக்கிஷமும் ஆவார்; திருவெளிப்பாடு, படைப்பு ஆகிய இராஜ்யங்களுள் உள்ள அனைவருக்கும் கடவுளின் சமயமும் அவரது புகழொளியும் ஆவார். இவர்தாம் நித்தியமெனும் இராஜ்யவாசிகள், புகழொளி என்னும் திருக்கூடாரத்தினுள் வசிப்போர் அனைவரின் தீவிர ஆவலாவார். அவ்வாறிருந்தும் நீங்கள் அவரது திருவழகிடமிருந்து அப்பால் திரும்புகின்றீர்.”[9]
சிய்யாச்சால் இருந்த இடம்
1868-ஆம் ஆண்டில், இந்த சியாச்சால் சிறை மண்ணால் நிரப்பப்பட்டு அதன் மீது ஒரு ஓப்ரா சங்கீத மண்டபம் கட்டப்பட்டது. இந்த இடம் 1954 முதல் 1979 இஸ்லாமிய புரட்சி வரை இந்த இடம் பஹாய்களின் கைவசம் இருந்தது.