அப்துல்-பஹா மறைவின் நூறாம் ஆண்டு: ஓர் அசாதாரன மனிதரின் வாழ்க்கையை வெளியீடுகள் நினைவுபடுத்துகின்றன



29 அக்டோபர் 2021


பஹாய் உலக நிலையம்—உலகம் முழுவதும் எண்ணிலடங்கா மக்களும் சமூகங்களும், வரும் நவம்பரில் அவர் மறைந்த நூறாம் நினைவாண்டின் நினைவேந்தலுக்கு அவர்கள் தயாராவதில் மானிடத்திற்கான அப்துல்-பஹாவின் சேவை சார்ந்த வாழ்க்கையைப் பற்றி ஆழமாகப் பிரதிபலிக்கின்றனர்.

அவ்வாறு செய்கையில், பெண் ஆண் சமத்துவம், இன தப்பெண்ணத்தை அகற்றுவது, அறிவியல் மற்றும் சமயத்திற்கிடையிலான இணக்கம், மதத்தின் ஒருமை, சர்வலோக அமைதி உட்பட, மானிடத்தின் பொதுநலன் மற்றும் மேம்பாட்டுக்குப் பொருத்தமான கருப்பொருள் சார்ந்த அப்துல்-பஹாவின் எழுத்துகள் மற்றும் உரைகளின் புதிய பதிப்புகளை வெளியிடுவதற்கான உத்வேகத்தை அவர்கள் பெற்றுள்ளனர். சமீபமான வாரங்களில் அவருடைய பிரார்த்தனைகள், அவர் வாழ்க்கையின் வரலாற்றுக் குறிப்புகள், குறிப்பாக இந்த விசேஷ காலகட்டத்தில் சமுதாய தன்மைமாற்றத்திற்குப் பங்களிப்பதற்கு உலகைச் சுற்றிலுமுள்ள பஹாய் சமூகங்களின் முயற்சிகள் பற்றிய கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட தொகுப்பு, உலகம் முழுவதுமுள்ள நாடுகளில் இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வைக் குறிப்பதற்கு சமீபமான வாரங்களிலும் மாதங்களிலும் வெளிவந்துள்ள பிரசுரங்களின் ஒரு நுண்காட்சியை மட்டுமே வழங்குகிறது.

ருமேனியாவில், அப்துல்-பஹாவின் உயிலும் சாசனத்தின் ஒரு புதிய மொழிபெயர்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்தோனீசியாவில், பூக்களின் சித்திரங்களுடன் ஒளிரும் ஒர் பிரார்த்தனை புத்தகம் பஹாசாவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எகிப்து, ஹாய்ட்டி, ருவான்டா, துர்க்கி ஆகிய நாடுகளில் அப்துல்-பஹாவின் வாழ்க்கை பற்றிய கதைகளை புதிய வெளியீடுகள் வழங்குகின்றன.

ஜப்பானில், அந்த நாட்டின் ஆன்மீக எதிர்காலம் குறித்த அப்துல்-பஹாவின் தொலைநோக்கை ஒரு புதிய கட்டுரைத் தொகுப்பு ஆராய்கிறது. பெர்மூடா, ஜோர்தான், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் தினசரி பத்திரிக்கை கட்டுரைகள் தங்கள் சமுதாயங்களுக்கான இந்த பஹாய் சமூகங்களின் பங்களிப்பைப் பார்க்கின்றன.

பிரேசில், கெனடா, ஓமான, பெரு, ஐக்கிய குடியரசு, மற்றும் ஐக்கிய அமெரிக்காவில், குழந்தைகளின் கதைப்புத்தகங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அவை அப்துல்-பஹாவின் அசாதாரன குணநலன்களையும் மானிடத்திற்கான அவரது சேவையையும் இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன.

சமீபத்திய மாதங்கள், ஆர்மீனிய, கிரேக்க, ஹிந்தி மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் பேசப்படும் பிற 13 மொழிகள், இத்தாலிய, ஜப்பானிய, கசாக், குர்திஷ் (குர்மஞ்சி மற்றும் சோரானி), மங்கோலிய, நேபாளி, ஸ்பானிஷ், டெட்டம் மற்றும் ட்ஷிலுபா உள்ளிட்ட மொழிகளில் முதல் முறையாக கிடைக்கச் செய்யப்பட்ட பஹாய் எழுத்துகளின் புதிய தேர்வுகளையும் கண்டுள்ளன.

அப்துல்-பஹாவின் பிரார்த்தனைகள் மற்றும் சொற்பொழிவுகளின் புதிய மொழிபெயர்ப்புகளும் உள்நாட்டு மொழிகளில் செய்யப்பட்டுள்ளன. அவரது வாழ்க்கையைப் பற்றிய கதைகளின் கையேடு சிலுண்டாவில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் லுண்டா மக்களிடையே பரவலாகவும் பகிர்ந்து கொள்ளப்பட்டது, அவர்களின் மக்கள் அங்கோலா, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் சாம்பியா பகுதிகளில் பரவியுள்ளனர். பிரேசிலில், அப்துல்-பஹா என்ற புத்தகத்தின் கையேடு ஸுபுக்குவாவில் தயாரிக்கப்பட்டுள்ளது, இது Karirí-Xocó (காரிரி-ச்சோக்கோ) மத்தியில் பேசப்படுகிறது. அந்த அழியும் தருவாயில் உள்ள மொழிக்கு புத்துயிர் வழங்கும் முயற்சிகளின் இது ஒரு பகுதியாகும். இதே கையேடு பிரேசிலின் புல்ஞியோ மக்களால் பேசப்படும் மொழியான யாட்டேயில் கிடைக்கும். தென்னாப்பிரிக்காவில், அப்துல்-பஹா வாழ்க்கையின் கதைகள் செபேடி மற்றும் ஸூலு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1544/

1963 – முதல் உலக நீதிமன்றத்தின் தேர்தல்


இன்னும் சில வாரங்களில் மாஸ்டர் அப்துல் பஹா மறைந்து ஒரு நூற்றாண்டு முடிவுறப் போகின்றது. அந்த நிகழ்வை உலகம் முழுவதுமுள்ள பஹாய்கள் ஒரு நினைவேந்தலாக அனுசரிக்கவிருக்கின்றனர். பஹாய் உலகில் இது போன்ற நூற்றாண்டுகள் சில வந்து சென்றுள்ளன. உதாரணத்திற்கு பாப் மற்றும் பஹாவுல்லாவின் பிறந்தநாள்கள், பாப் பெருமானார் 1844-இல் செய்த பிரகடனம், 1863-இல் ரித்வான் தோட்டத்தில் பஹாவுல்லாவின் அறிவிப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

1963-இல் உலகம் அழியப்போகிறது என்னும் ஒரு செய்தி
ஆங்காங்கே நிலவியது. கிராமப்புறங்களில் கூட இது பேசப்பட்டது. இதற்கான காரணம் பைபளில் காணப்படும் ஒரு தீர்க்கதரிசனமாகும். ஆனால் இந்த தீர்க்கதரிசனத்தின் உண்மையை அப்துல்-பஹாவும் ஷோகி எஃபெண்டியும் விளக்கியுள்ளனர். முக்கியமாக, ஷோகி எஃபெண்டி இந்த 1335 எண் குறித்த தீர்க்கதரிசனத்தை 1953-இல் அவர் ஆரம்பித்த பத்தாண்டுத் திட்டத்தின் முடிவுடன் ஒப்பிடுகின்றார். இந்தப் பத்தாண்டு உலகளாவிய அறப்போர் 1963-இல் முடிவுற்றது. ஆனால், 1957-இல் ஷோகி எஃபெண்டியின் எதிர்பாரா மறைவினால் ஏற்பட்ட நிகழ்வுகள் அதன் பின்னர் சில முக்கிய சம்பவங்களுக்கு வழிவகுத்தன.

1963-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட உலக நீதிமன்றத்தின் முதல் 9 உறுப்பினர்கள் (ஹியூ சான்ஸ், ஹூஷ்மன் ஃபாத்தியாஸம் அமோஸ் கிப்ஸன், லுட்ஃபுல்லா ஹாக்கிம், டேவிட் ஹோஃப்மன், போரா கேவ்லின், அலி நாக்ஜவானி, இயன் செம்ப்பல், சார்ல்ஸ் வால்கொட்)

லன்டனில், ஷோகி எஃபெண்டியின் எதிர்பாரா மறைவுக்குப் பிறகு சமயத்தின் தலைமைத்துவ பொறுப்பு ஷோகி எஃபெண்டியினால் நியமிக்கப்பட்ட, ‘தலைமை கலபதிகள்’ என்னும் கடவுள் சமயத்தின் திருக்கரங்கள் மீது விழுந்தது. இந்தத் திருக்கரங்கள் தங்களுள் இருந்து 9 பேரை (ருஹிய்யா ரப்பானி, சார்ல்ஸ் மேசன் ரெமி, அமீலியா இ. காலின்ஸ்,லெராய் சி. ஐயோஸ், ஹஸான் பால்யூசி, அலி-அக்பர் ஃபுருட்டான், ஜலால் காஸே, போஃல் ஈ. ஹேனி, அடெல்பெர்ட் முஹ்லஷெல்) தேர்ந்தெடுத்துக் கொண்டு, அந்த ஒன்பது பேர் கொண்ட குழு சில முடிவுகளுக்கு வந்தது. அதில் முக்கியமானது, ஷோகி எஃபெண்டி எந்த உயிலையும் விட்டுச் செல்லவில்லை என்பதும் அடுத்து என்ன செய்யப்பட வேண்டும் என்னும் பொறுப்பு பஹாவுல்லா கித்தாப்-இ-அக்டாஸில் குறித்துள்ள உலக நீதிமன்றத்திற்கே உள்ளது என்பதும் ஆகும். நிர்வாகம் சம்பந்தமான எந்த முடிவெடுக்கும் உரிமையும் உலக நீதிமன்றத்திற்கே உள்ளது, ஆனால், உலக நீதிமன்றம் இன்னமும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. திருக்கரங்கள், எல்லா கேள்விகளுக்குமான பதில், பத்தாண்டுத் திட்டத்தில் மீதமிருந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு 1963-இல் உலக நீதிமன்றத்தின் தேர்தலே ஆகும் என்னும் முடிவுக்கு வந்தனர். அது போன்றே, 1963-இல் உலக நீதிமன்றத்தின் தேர்தலும் நடைபெற்றது.

ராயல் அல்பர்ட் அரங்கில் முதலாம் உலக நீதிமன்றத்தின் உறுப்பினர்கள் அறிவிக்கப்படுகின்றனர். ஷிராஸ் நகரில் பாப் பெருமானின் பிரகடனம், ரித்வான் பூங்காவில் பஹாவுல்லாவின் பிரகடனத்திற்குப் பிறகு உலகையே அதிரச் செய்திடும் ஒரு மாபெரும் நிகழ்வு ஹைஃபா நகரில் அமைதியாக நடைபெற்றது.

உலக சமய வரலாற்றில் உலக நீதிமன்றத்தில் தேர்தல் போன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற்றதே இல்லை. “தள்ளாடிக்கொண்டிருக்கும் ஒரு நாகரிகத்தின் இறுதிப் புகலிடம்” என ஷோகி எஃபெண்டியினால் வர்ணிக்கப்பட்ட, தவறிழைக்காமை என்னும் தன்மை வழங்கப்பட்ட, கடவுளின் சார்பாக உலகை நிர்வகிக்கும் ஒரு ஸ்தாபனம் 1963-இல் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியே பைபளில் தீர்க்கதரிசனமாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அப்துல்-பஹாவோ ஷோகி எஃபெண்டியோ அதை நேரடியாகக் குறிப்பிடவில்லை. மாறாக, ஷோகி எஃபெண்டி அதை பத்தாண்டு அறப்போரின் முடிவு எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த முதல் தேர்தல் ஹைப்பா நகரில் உள்ள மாஸ்டர் அப்துல்-பஹாவி்ன் இல்லத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 56 தேசிய ஆன்மீக சபைகள் பங்குபெற்றன. இதைத் தொடர்ந்து, தேர்தலைப் பற்றியும் அதன் முடிவுகளை அறிவிக்கவும் லன்டனில் உள்ள ராயல் அல்பர்ட் அரங்கில் ஒரு மாபெறும் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் சுமார் 6000 பேர் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டுக்காக அந்த முதல் உலக நீதிமன்றம் அதன் முதல் செய்தியை வழங்கியிருந்தது. அதை இங்கு காணலாம்:

அப்துல்-பஹாவும் பஹாய் மாணவர்களும்


வெள்ளிக்கிழமை
22 அக்டோபர் 2021

உலகின் பல பாகங்களில், வருடம் 1914-க்குள் மானிடத்திற்கான அவரது சேவைக்காக அப்துல்-பஹா நன்கு அறிமுகமாகியிருந்தார். அவர் தமது வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்திருந்த புனித நிலத்தில், ஏழைகள் மற்றும் வறியோருக்கான அவரது சேவைக்காகவும் உள்ளூர் மற்றும் மண்டல அளவில் உயர் பதவியில் உள்ளோருடன் சொல்லாடல்களில் ஈடுபட்டு வந்ததற்காகவும் அவர் மிகவும் மதிக்கப்பட்டவராக இருந்தார்.  ஐரோப்பா, மற்றும் வட அமெரிக்காவுக்கான அவரது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விஜயங்களுக்கு முன்னும் பின்னும் எகிப்பு நாட்டில் அவர் கழித்த நாள்கள் குறிப்பிடத்தகும் அளவு கவனத்தை ஈர்த்து, வாழ்க்கையின் எல்லா பகுதிகளையும் சார்ந்தோர் அவரது இரசிகர்களாயினர். 1914-இல், அவர் தமது மேற்கத்திய நாடுகளுக்கான பயணங்களை முடித்துக்கொண்டு அப்போதுதான் நாடு திரும்பியிருந்தார். அந்தப் பயணங்களின் விவரங்கள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவை, உலகளாவிய அமைதிக்கான அவசரத்தின் சூழலில் அவரது தந்தையார் போதனைகள் குறித்த, முறையான, முறைசாரா, மற்றும் பல்வகையான மக்களுக்கான அவரது விளக்கங்கள், அவரை உலக அரங்கில் ஒரு தனித்துவம் மிக்கவராக எடுத்துக்காட்டியது. யுத்த காலங்களில், தமது தாயகத்தில் உள்ள ஹைஃபா மற்றும் அக்காநகர் சார்ந்த மண்டலங்களில் ஏற்பட்ட பஞ்சத்தை நிவர்த்தி செய்வதற்கான அவரது உதவிக்கு அவர் பரவலான பாராட்டைப் பெற்றார். உலகைச் சுற்றிலும் உள்ள பலருக்கு, அவரது வாழ்க்கையின் உதரணமும் அவரது எண்ணிலடங்காக திருவாசகங்களும் அப்போதும் இப்போதும் வழிகாட்டலுக்கும் தெளிவுரைகளுக்கும் மூலாதாரங்களாக இருந்து வருகின்றன.

ஆனால், மத்திய கிழக்கில் நவீன கல்விக்கான அப்துல்-பஹாவின் தொடர்ந்தாற் போன்ற ஊக்குவிப்பு, இன்று அவ்வளவாக அறிந்திருக்கப்படவில்லை. இதன் தொடர்பில், பெய்ரூட் நகரில் ஒரு பஹாய் மாணவர் குழுவினர், பஹாய்கள் என்னும் அவர்களின் அடையாளத்துடன் ஒத்துப்போகும் முறையில், உயர் கல்வியை நாடுவதற்கு எவ்வாறு பல வருட காலங்களாக, அவர்களை அவர் ஊக்குவித்துப் பராமரித்து வந்தார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றது.

1914-இல் அப்துல்-பஹாவின் பல விருந்தினர்களுள், சிரியா புரொட்டெஸ்டன் காலேஜின் (Syrian Protestant College) தலைவரான ஹோவார்ட் பிலிஸ் என்பவரும் உள்ளார். இந்த ஸ்தாபனத்துடன் அப்துல்-பஹா நீண்டகால உறவைக் கொண்டிருந்தார். அந்த ஸ்தாபனத்தில், பிப்ரவரி மாதத்தில் பிலிஸ் அவர்களின் ஹைஃபா வருகைக்கு முன்பாகவே ஒரு பஹாய் மாணவர் குழுவினர் அங்கு தங்களை நன்கு ஸ்தாபித்துக்கொண்டிருந்தனர்.1  பிலிஸ், பெய்ரூட்டில் உள்ள அந்த காலேஜில் தமது வாழ்க்கையைக் கழித்திருந்தார் (அவரது தந்தையான டேனியல் பிலிஸ், அந்த காலேஜின் முதல் தலைவராக இருந்தவர்). அரபு மொழியில் நன்கு உரையாடக்கூடியவரான பிலிஸ், அந்தக் காலேஜில் பயின்ற பஹாய் மாணவர்கள் தங்களின் வசந்தகால விடுமுறையை ஹைப்பாவில் பாப் பெருமானார் மற்றும் பஹாவுல்லாவின் நினைவாலயங்களுக்கு அருகில் கழிப்பதற்கும் அதன் மூலம் அப்துல்-பஹாவிடமிருந்து கற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதற்கும் அப்துல்-பஹாவைக் காண வந்திருந்தார். ஆனால், அவர்களுக்கிடையிலான உரையாடல் அப்துல்-பஹாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்குத் தாவியது.  தமது பயணங்களின்போது பலமுறை அவர் செய்தது போன்று, தமது மாணவர்களுள் பிற விஷயங்களுக்கிடையில், ‘மானிட உலகின் ஒருமை’ குறித்த கொள்கையைப் பேணுமாறு அப்துல்-பஹா பிலிஸ்ஸை ஊக்குவித்தார். அதன் மூலம் அம்மாணவர்களின் கல்வி “சர்வலோக அமைதியின்பால்”2 வழிநடத்தப்படக்கூடும்.

அப்துல்-பஹாவின் கருத்துகளுக்கும் ஊக்குவிப்பிற்கும் பிலிஸ்ஸின் ஏற்பிசைவு பத்து நாள்களுக்குப் பிறகு அவர் வழங்கிய ஓர் உரையில் வெளிப்பட்டது. பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி, அப்பள்ளியின் வளமான பல்வகைமையைப் பிரதிநிதிக்கும் ஒரு மாணவர் குழுவுடனான சந்திப்பில், அக்குழுவின் “பணிகளில்” ஒன்றாக “சர்வலோக அமைதியை ஸ்தாபிப்பதும் இருக்க வேண்டுமென பிலிஸ் வலியுறுத்தினார்.”3 அப்துல்-பஹாவுக்கும் பிலிஸுக்கும் நடந்த பரிமாற்றம், உண்மையில், பஹாய் சமூகமும் கல்லூரியும் பல ஆண்டுகளாக நடத்திவந்த, பஹாய் மாணவர்கள் பங்களிக்க முயன்று வரும் அந்த காலேஜின் சுயமான “சமய ஒன்றிணைவு ஆய்வின்” மீது மையப்படுத்தப்பட்ட ஒரு விரிவான உரையாடலின் அடையாளமாக இருந்தது.

(தொடரும்)

பஹாய் உலகம் வெளியீடு: அப்துல்-பஹாவின் வாழ்க்கையை கௌரவிக்கும் புதிய கட்டுரைகள் அமைதி மற்றும் உயர்கல்வியின் மீது கவனம் செலுத்துகின்றன



22 அக்டோபர் 2021


பஹாய் உலக மையம்பஹாய் உலகம் என்னும் இணைய வெளியீடு இரண்டு புதிய கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

“அப்துல்-பஹா: உலக அமைதியின் வாகையர்” என்னும் கட்டுரை அப்துல்-பஹா தமது காலத்தின் முன்னணி சிந்தனையாளர்களுடன் ஈடுபடுவதன் மூலம் மட்டுமல்லாமல், உலகின் ஆன்மீகமயமாக்கலுக்கான திட்டத்தின் மூலம் அமைதிக்கான இயக்கத்தை எவ்வாறு மேம்படுத்தினார் என்பதை ஆராய்கிறது..

அப்துல்-பாஹாவும் பஹாய் மாணவர்களும்” என்னும் தலைப்பில் மற்றொரு புதிய கட்டுரை, மத்திய கிழக்கில் கல்வி பற்றிய சொல்லாடலுக்கு அப்துல்-பஹாவின் பங்களிப்பு மற்றும் பெய்ரூட் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பஹாய் மாணவர்களுக்கு அவர் வழங்கிய வழிகாட்டுதலைப் பார்க்கிறது.

அடுத்த மாதம் உலகெங்கிலும் உள்ள பஹாய் சமூகங்கள் அப்துல்- பஹா மறைவின் நூறாம் ஆண்டை நினைவுகூரவிருக்கின்றன. இந்தப் புதிய கட்டுரைகள், அப்துல்-பஹா மறைவின் நூற்றாண்டை கௌரவிக்கும் கட்டுரை வரிசையின் ஒரு பகுதியாகும்.

பஹாய் உலகம் வலைத்தளம் மனிதகுலத்தின் முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்கான கருப்பொருள்களை ஆராயும் கட்டுரைகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பை வழங்குகின்றது, அவை, உலகளாவிய பஹாய் சமூகத்தில் சிந்தனை மற்றும் செயலின் நிலைகளில் மேம்பாடுகளை முன்னிலைப்படுத்துவதுடன் பஹாய் சமயத்தின் இயலாற்றல் மிக்க வரலாறு குறித்தும் பிரதிபலிக்கின்றன.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1543/

அப்துல்-பஹா: நகைச்சுவை


அப்துல்-பஹாவின் நகைச்சுவை உணர்வும் உளவலிமையும்

அப்துல்-பஹா தமது உடல்நலக் குறைவின் காரணமாக நிகழ்ச்சிகளுக்குச் செல்ல இயலாமல் இருந்தார். அவர் மொண்ட்ரியலிலிருந்து கிளம்புவதற்குப் பல நாட்களாயின. அவர் அவ்வப்போது, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், காரில் சிறிது ஓய்வாகப் பிரயாணம் செய்யவோ நடக்கவோ செய்வார். ஒரு நாள் அவர் தன்னந்தனியாகச் சென்று டிராம் வண்டியில் ஏறினார். டிராம் வண்டி அவரை நகரத்திலிருந்து சிறிது வெளியில் கொண்டு சென்றது. பிறகு அவர் அவ்வண்டியிலிருந்து இறங்கி நகரத்திற்கு வெளியே செல்லும் வேறொரு வண்டியில் ஏறினார். அதன் பிறகு ஒரு வாடகைக் காரை நிறுத்தினார், ஆனால் தாம் தங்கியிருந்த விடுதியின் பெயரை அவரால் நினைவுகூறமுடியவில்லை. இருந்தபோதும், விடுதிக்கு செல்லும் சரியான திசையை அவரால் குறிப்பிட முடிந்தது. பிறகு, அவர் தமது உதவியாளர்களிடம் அந்த நிகழ்வை அதிக நகைப்போடு குறிப்பிட்டார்.

அந்த நிகழ்வு புனித நிலத்தில் நடந்த வொறொரு நிகழ்வை அவருக்கு நினைவூட்டியது. ஆக்கா நகர பஹாய் ஒருவரான ஆஃகா ஃபராஜ் என்பவர் ஒரு முறை வழியைத் தவறவிட்டுவிட்டார். அப்துல்-பஹா அவரிடம் அவர் பயணம் செய்த கோவேறு கழுதையின் கடிவாள வாரை அவிழ்த்துவிடச் சொல்லியிருந்தார். கடிவாளத்திலிருந்து விடுபட்ட கழுதை பிறகு சரியான திசையை நோக்கிச் சென்றது. அதே போன்றே, தாமும் வாடகை காரின் ஓட்டுனருக்கு சரியான வழியை காட்ட முடிந்ததென அப்துல்-பஹா சிரித்துக்கொண்டே கூறினார்.

செப்டம்பர் 9ம் தேதி பஃப்பலோ நகரத்திற்கான பயணம் மிகவும் நீண்டதாகவும் சோர்வடையச் செய்வதாகவும் இருந்தது. டோரொண்டோ நகரில் இரயில் வண்டிகள் மாற்றப்பட வேண்டும். அங்குள்ள இரயில் நிலையத்தில் சற்று நடந்த அப்துல்-பஹா தமது பெரும் சோர்வு குறித்து கவைலப்பட்டு, கலிபோர்னியாவுக்கு எவ்வாறு பயணம் செய்யப்போகிறோம் என நினைத்தார். ஆனால் அவர் சென்றுதான் ஆகவேண்டும், ஏனெனில், இறைவனின் பாதையில் இன்னல்களே கொடைகளாகும், கடும் உழைப்பே மாபெரும் அருள்பாலிப்புமாகும். அன்றிரவு, வெகு நேரத்திற்குப் பிறகு பஃப்பலோ நகர் சென்றடையப்பட்டது. அதனால், அந்த நகரத்து பஹாய்களுக்கு அப்துல்-பஹாவின் வருகை உடனடியாக அறிவிக்கப்படவும் இல்லை.

(HM Balyuzi, ‘Abdu’l-Bahá: The Centre of the Covenant of Bahá’u’lláh, p. 265)

அப்துல்-பஹா: ப்ரொங்க்ஸில் (Bronx) பிறந்தநாள்


ப்ரோங்க்ஸில் பிறந்தநாள்

ஜூலியட் தாம்ஸனும் பிற பஹாய்களும் மாஸ்டருக்கு ஒரு பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்திட தீர்மானித்தார்கள். சிலர் பிறந்தநாள் கேக் ஒன்றையும் செய்தனர். நாங்கள் பல வாடகை டாக்சிகளில் பிராங்க்ஸ் சென்றோம். முதல் டாக்சியில் மாஸ்டர் பிராயணம் செய்தார். மாஸ்டரின் டாக்சி அங்கு சென்றடைந்தவுடன், அவர் இறங்கி அருகிலுள்ள பூங்காவினுள் எல்லோருக்கும் முன்பாக நடந்து சென்றார்.

சில பையன்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு சிரிக்கவாரம்பித்தனர். அவர்களுள் சிலர் அவர் மீது கற்களை எறிந்தனர். அதைக் கண்டு மனம் பதறிய சில நண்பர்கள் அவரை நோக்கி விரைந்தனர். ஆனால், அவர் அவர்களை வரவேண்டாமென தடுத்தார். அச் சிறுவர்கள் மாஸ்டரின் அருகில் வந்து அவரைப் பார்த்து கேலி செய்தும், அவரது மேலங்கியைப் பிடித்து இழுக்கவும் செய்தனர். மாஸ்டர் அதற்கெல்லாம் பதட்டப்பாடமல் நிதானமாக இருந்தார். அவர் அச்சிறுவர்களைப் பார்த்து பிரகாசத்துடன் புன்னகைத்தார். ஆனால், அச்சிறுவர்கள் தொடர்ந்து தங்கள் செய்கைகளில் ஈடுபட்டவாறே இருந்தனர். பிறகு மாஸ்டர் நண்பர்களின்பால் திரும்பி, “நீங்கள் தயாரித்த கேக்கைக் கொண்டுவாருங்கள்” என்றார். கேக் ஒன்று செய்யப்பட்டிருப்பதை யாருமே அவரிடம் அதுவரை தெரிவித்திருக்கவில்லை.

எங்களில் சிலர், “ஆனால், அப்துல்-பஹா, கேக்கை நாங்கள் உங்கள் பிறந்நாளுக்காக அல்லவா செய்தோம்,” என்றோம். அப்பஞ்சு போன்ற கேக்கை ஒரு நண்பர் கொண்டுவந்தார். அதன்மீது பனி போன்று வெள்ளை ‘ஐஸிங்’ செய்யப்பட்டிருந்த அந்த கேக்கை அந்த நண்பர் அப்துல்-பஹாவிடம் கொடுத்தார். அச்சிறுவர்கள் அந்த கேக்கைக் கண்டவுடன் அமைதியடைந்தும் பிறகு அந்த கேக்கையே பசியோடு பார்த்துக்கொண்டும் இருந்தனர்.

மாஸ்டர் அந்த கேக்கை தமது கைகளில் எடுத்து அதை ஆனந்தத்துடன் பார்த்தார். சிறுவர்கள் இப்போது அவரைச் சுற்றி நின்றுகொண்டிருந்தனர். “ஒரு கத்தி கொண்டுவாருங்கள்” என அப்துல்-பஹா கூறினார். ஒரு நண்பர் அவர் கேட்ட கத்தியைக் கொண்டுவந்தார். மாஸ்டர் தம்மைச் சுற்றிலும் நின்றுகொண்டிருந்த சிறுவர்களை எண்ணிக்கையிட்டு அந்த கேக்கை அதே எண்ணிக்கையில் வெட்டினார். பையன்கள் ஒவ்வொருவரும் ஒரு துண்டை ஆவலுடன் பெற்றும், அதை ஆர்வத்துடன் சாப்பிட்டனர். பிறகு அவர்கள் ஓடி மறைந்தனர்.

அப்துல்-பஹா: பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர்


பஹாவுல்லா கூறுகிறார்: கோப்பை ஏந்தி வருபவர், எவ்வாறு, தேடுபவரைக் காணும் வரை அதனை வழங்க முன்வரமாட்டாரோ, எவ்வாறு, அன்பர் ஒருவர் தன் நேசரின் அழகினை நோக்கிடும்வரை, தனது இதயத்தின் ஆழத்திலிருந்து குரலெழுப்ப மாட்டாரோ, அவ்வாறே விவேகிகள், கேட்க ஒருவர் கிடைத்தாலன்றி, பேசமாட்டார்… (பாரசீக மறைமொழிகள் 36)  

மாஸ்டரின் அக்காநகர் இல்லத்தில் குழந்தைகளுக்கு பிரெஞ்சு மொழியை கற்பிப்பதற்காக ஹைஃபாவில் ஓர் ஏழை குடும்பத்திலிருந்து வந்த மேடமுய்ஸேல் (குமாரி) லெட்டீஷியா என்பவரைப் பற்றி ஒரு கதை கூறப்படுகின்றது. அப்பெண்மணி ஒரு கத்தோலிக்கராக இருந்தபோதும், கான்வென்ட்டிலுள்ள கன்யாஸ்த்ரீகள் அவரை கவனித்து வந்த போதும் அவர் அப்துல்-பஹாவின் இல்லத்தில் மகிழ்ச்சியாகவே இருந்தார். ஒரு நாள், பிரெஞ்சு புனிதப் பயணி ஒருவர் வருகையளித்திருந்தார். மொழிபெயர்ப்பாளர் ஒருவர் தேவைப்பட்டது. யாருக்குமே பிரெஞ்சு மொழி தெரியாததால் லெட்டீஷியாவின் உதவி கோரப்பட்டது. மேடமூய்ஸேல் இக்கட்டுக்கு ஆளாகி அந்நிகழ்ச்சி குறித்து கன்யாஸ்த்ரீகளிடம் தெரிவித்துவிட்டார்.

அதன் பிறகு பல நாட்களுக்கு லெட்டீஷியா முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டிருந்தார். இதைக் கண்ணுற்ற அப்துல்-பஹா அவரைத் தம்மிடம் அழைத்து அவரைச் சாந்தப்படுத்த ஓர் உறுதிமொழியை வழங்கினார். லெட்டீஷியா, உனது மதிப்புக்குரிய கன்யாஸ்த்ரீகளிடம் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் என கூறிவிடு.  என் இல்லத்தில் யாருக்குமே பிரெஞ்சு மொழி தெரியாததால்தான் மொழிபெயர்ப்பு செய்திட நான் உன்னைக் கேட்டுக்கொண்டேன், உனக்கு (பஹாய் சமயத்தைப்) போதிப்பதற்காக அல்ல. தங்களுக்குப் கற்பிக்குமாறு உளமாறவும் முழு அன்புடனும் கெஞ்சியவாறு பன்மடங்கான பஹாய்கள் இங்கு வருகின்றனர். அவர்களுக்கு மட்டுமே நாங்கள் எங்களின் விலைமதிப்பற்ற போதனையை வழங்குகிறோம்.  நான் (எங்கள் போதனையை) உனக்கு வழங்குவதற்கு முன் நீ அதற்காகப் பலமுறை கெஞ்சி (கூத்தாட) வேண்டும். அப்போதும் கூட நான் அதை உனக்கு வழங்குவேன் என்பது உறுதியல்ல; ஏனெனில், விரும்பப்படாத இடத்தில் அதை வழங்க வேண்டிய அளவுக்கு அது மலிவானதல்ல.  

‘எங்கள் இல்லத்தில் இருக்க விரும்பினால் இரு, இங்கு உனக்கு மகிழ்ச்சியாக இல்லையெனில் நீ போகலாம்.  

நீ இங்கு தங்க விரும்பினால் அது எங்களுக்கு மகிழ்ச்சியே, ஆனால் நாங்கள் உன்னை ஒரு பஹாய் ஆக்கிட முயல்வோம் எனும் பயத்தை உன் இதயத்திலிருந்து நீக்கிவிடு.’

அன்னமேரி ஹொன்னொல்ட் – அப்துல்-பஹா வாழ்க்கையிலிருந்து சில காட்சிகள்

பாலின சமத்துவம்: குடும்பத்தில்தான் மாற்றம் ஆரம்பிக்கின்றது, தென் ஆப்பிரிக்க பஹாய்கள் கூறுகின்றனர்



19 அக்டோபர்


ஜோகன்னஸ்பர்க், தென்னாப்பிரிக்கா – பெருந்தொற்றானது, இனப் பிளவுகள், பொருளாதார சிரமங்கள், கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, ஓரங்கட்டப்பட்ட மக்களின் உரிமைகள் போன்ற ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய உன்னத இலட்சியங்களால் ஈர்க்கப்பட்ட மக்கள் ஒன்றுகூடும் போது, முன்னேற்றத்திற்கான சாத்தியங்களின்பால் பல சமூகங்களை எழுப்பியுள்ளது. .

அதே சமயம், உலகளாவிய சுகாதார நெருக்கடி தற்போது நிலவும் பல சிக்கல்களை மோசமாக்கியுள்ளது, பெண்களுக்கு எதிரான வன்முறை அவற்றில் முக்கியமானவை, ஐக்கிய நாடுகள் சபை இதை “நிழல் தொற்று” என வர்ணித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில், ஜனாதிபதி சிரில் ரமபோசா மார்ச் 2020-இல் முதல் நாடு தழுவிய முடக்கத்திற்கு சில வாரங்களுக்குப் பிறகு ஒரு திறந்த கடிதத்தில் இப்பிரச்சினை குறித்து தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தார்.

இந்த தேசிய உரையாடலுக்குப் பங்களிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தென்னாப்பிரிக்காவின் பஹாய் வெளியுறவு அலுவலகம் அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூக நடவடிக்கையாளர் மற்றும் கல்வியாளருடனான வரிசையான கலந்துரையாடல் மூலம் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் குடும்பத்தின் பங்கை எடுத்துக்காட்டி வருகிறது.

“பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் சமூகத்தில் உணரப்பட வேண்டிய ஒன்று மட்டுமல்ல, அது மனித இயல்பு பற்றிய ஒரு உண்மையும் ஆகும். மனித இனத்தின் உறுப்பினர்களாகிய நாம் அனைவரும் பகிரப்பட்ட அடையாளம் கொண்டுள்ள, பாலினம் இல்லாத ஆன்மா என கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் பஹாய் வெளியுறவு அலுவலகத்தின் மிலிங்கன் போஸ்வாயோ கூறினார்.

தொடர்ந்து அவர்: “இந்த உண்மையின் விழிப்புணர்வு தூண்டப்பட்டு செயல்பாட்டுக்கு வரக்கூடிய ஒரு சக்திவாய்ந்த சூழலை குடும்பம் வழங்குகிறது. ஆதலால், குடும்பம் மற்றும் சமூகத்திற்குள் சிறு வயதிலிருந்தே பெண்கள் மற்றும் ஆண்கள் சமத்துவம் பற்றிய தார்மீக கல்வி அவசியமாகும்.

துணிவார்ந்த சட்டம் அறக்கட்டளையின் நிறுவனர் பாபலெட்ஸ்வே டிஃபோகோ, தார்மீகக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார்: “பாலின சமத்துவம் பற்றி இளைஞர்களுக்குக் கல்வி கற்பிப்பதற்கு ஓர் உலகளாவிய அணுகுமுறை கிடையாது. எனவே, நமக்கு வழிகாட்ட கலாச்சாரம் மற்றும் சமூக விதிமுறைகளை நம்ப வேண்டியுள்ளது, அவற்றில் சில ஏற்கனவே காலாவதியானவை.”

கலாச்சார மாற்றத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, கல்வி மற்றும் சமூக சேவகரான தாலலே நாதனே இவ்வாறு கூறினார்: “கடந்த காலத்தில் பெண்கள் ‘இன்கோசிகாஸி’ என அழைக்கப்பட்டனர், இது மரியாதைக்குரிய சொல் (ஸூலு மொழியில்) மற்றும் இது குடும்பத்திலும் சமூகத்திலும் தலைமைத்துவம் மற்றும் முடிவெடுப்பதிலும் ஒரு முக்கிய பங்கு வகித்து வந்தது. . இருப்பினும், சமூகத்தில் பெண்களின் இடத்தை சிதைக்கும் சில மனப்பான்மைகளும் நடைமுறைகளும் வெளிப்பட்டுள்ளன.

தொடர்ந்து அவர்: “பெண்கள் மற்றும் ஆண்கள் சமத்துவத்தின் அடிப்படையில் தென்னாப்பிரிக்க குடும்பங்களில் நான் முன்னேற்றம் காண விரும்புகிறேன்.”

விவாதங்களைப் பிரதிபலிக்கும் விதமாக, தென்னாப்பிரிக்காவின் பஹாய் தேசிய ஆன்மீக சபையின் உறுப்பினர் ஷெமோனா மூனிலால், பஹாய் கல்வித் திட்ட அனுபவங்களின் அடிப்படையில் ஒரு நம்பிக்கைமிக்க கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொள்கிறார். “இந்த நிகழ்ச்சிகளில், இளம் பெண்களும் சிறுவர்களும் ஆன்மீக குணங்கள் மற்றும் கொள்கைகளைப் பற்றி ஒன்றாகக் கற்கின்றனர், இது அவர்களின் வாழ்க்கையின் தொடக்க ஆண்டுகளில் இருந்தே, ஒருவர் மற்றவரைச் சமமாகப் பார்க்கவும் உடனுழைத்தல் கலாச்சாரத்தைப் பேணவும் வாய்ப்புகளை வழங்குகிறது.”

அவர் மேலும் கூறுகிறார்: “இந்த முயற்சிகளில் பேணப்பட்ட அணுகுமுறைகள் மற்றும் முன்னோக்குகள் சமூகத்திற்குச் சேவை செய்யும் திறனையும் அவர்களுள் வளர்க்கின்றன. இளம் பெண்களும் ஆண்களும் ஒன்றாகக் கலந்தாலோசிக்கவும், முடிவுகள் எடுக்கவும், தங்கள் சமூகங்களின் ஆன்மீக மற்றும் லௌகீக நல்வாழ்வுக்காக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கவும் கற்றுக்கொள்கிறார்கள்.

“நாங்கள் என்ன காண்கின்றோம் என்றால், நாடு முழுவதும் உள்ள அண்டைப்புறங்கள் மற்றும் உள்ளுர் பகுதிகளில் அதிக இளைஞர்கள் இந்த செயல்பாட்டில் பங்கேற்கும்போது, ​​பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவத்தின் வெளிப்பாடுகள் மேலும் அதிகரிக்கின்றன மற்றும் குடும்பங்களை பிணைக்கும் ஆன்மீக உறவுகள் வலுவாகின்றன.”

பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் ஆண்கள் மற்றும் சிறுவர்களின் பங்கு போன்ற விஷயங்களில் கூடுதல் விவாதங்களை நடத்த வெளிவிவகார அலுவலகம் திட்டமிட்டுள்ளது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1542/

அப்துல்-பஹா மறைவின் நூற்றாண்டு நிறைவு: கலை படைப்புகள் வரலாற்று நிகழ்வைக் குறிக்கின்றன



16 அக்டோபர் 2021


பஹாய் உலக மையம்-நவம்பர் மாதம் அப்துல்-பஹாவின் நூற்றாண்டு நிறைவின் உலகளாவிய நினைவேந்தலுக்கான (commemoration) ஏற்பாடுகள், சமாதானத்தின் தூதர், சமூக நீதியின் வாகையர், மனிதகுல ஒருமை கொள்கையின் நிலைநிறுத்துனர் எனும் முறையில் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் உத்வேகம் பெற்ற கலை வெளிப்பாடுகளின் பொழிவுகளை உருவாக்கியுள்ளன. .

இசை, அசைவூட்டம் (animation), ஓவியம், நாடகம், கதைசொல்லல், கவிதை மற்றும் பிற கலை வடிவங்கள் மூலம் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள், அப்துல்-பஹா தமது உரையாடல்கள் மற்றும் எழுத்துகளில் குறித்துரைத்த தப்பெண்ணங்களை நீக்குதல், பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம், உலகளாவிய அமைதி மற்றும் மனிதகுலத்திற்குத் தன்னலமற்ற சேவை போன்ற ஆன்மீக கருத்தாக்கங்களை ஆராய்கின்றனர். .

பின்வருவது ஒரு தனித்துவ நிலையுடைய ஓர் ஆளுமையின் நினைவாக உலகம் முழுவதும் உருவாக்கப்படும் எண்ணற்ற கலைப் படைப்புகளின் மாதிரிகளாகும்.

எத்தியோப்பியா நாட்டின் ஓவியர் ஒருவர் வெவ்வேறு வர்ண காகிதங்களை வெட்டி இணைத்து, பாப் பெருமானார் மற்றும் அப்துல் பஹா இருவரின் நினைவாலயங்களை உருவாக்கியுள்ளார்
This painting by an artist from Canada depicts a view of ‘Akká, where ‘Abdu’l-Bahá was a resident for four decades. He arrived in that city as a prisoner and an exile alongside His Father, Baha’u’llah. Despite the many tragedies and adversities He suffered there, ‘Abdu’l-Bahá made Akka his home and dedicated Himself to serving the people of that city, especially its poor. In time, He came to be known and revered throughout the region.
கனடாவைச் சேர்ந்த ஒரு கலைஞரின் இந்த ஓவியம், ‘அப்துல்-பஹா நான்கு தசாப்தங்களாக வாழ்ந்த’ அக்காநகரின் காட்சியை சித்தரிக்கிறது. அவர் தனது தந்தை பஹாவுல்லாவுடன் கைதியாகவும் நாடுகடத்தப்பட்டவராகவும் அந்த நகரத்திற்கு வந்தார். அங்கு அவர் அனுபவித்த பல துயரங்கள் மற்றும் துன்பங்கள் இருந்தபோதிலும், ‘அப்துல்-பஹா’ அக்காநகரைத் தமது வீடாக ஆக்கிக்கொண்டு, அந்த நகர மக்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு சேவை செய்ய தம்மை அர்ப்பணித்தார். காலப்போக்கில், அவர் இப்பகுதி முழுவதும் அறியப்பட்டு மதிக்கப்பட்டார்.
இந்த பாடல் கேமரூனைச் சேர்ந்த ஒரு இசைக்கலைஞரால் உருவாக்கப்பட்டது, அவர் அப்துல்-பஹா எழுதிய ஒரு பிரார்த்தனைக்கு இசையமைத்தார். பிரார்த்தனையின் ஒரு பகுதி: “O Thou forgiving Lord! Thou art the shelter of all these Thy servants. Thou knowest the secrets and art aware of all things. We are all helpless, and Thou art the Mighty, the Omnipotent.”
In His writings, ‘Abdu’l-Bahá has made reference to the important role of the indigenous peoples of the world in contributing to the advancement of civilization. This piece by an indigenous artist from the United States brings together traditional indigenous art and the Baháʼí ringstone symbol, which symbolizes the relationship between humanity and God through His Manifestations.
அவரது எழுத்துக்களில், ‘அப்துல்-பஹா, நாகரிகத்தின் முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதில் உலகின் பழங்குடி மக்களின் முக்கிய பங்கைக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பூர்வீக கலைஞரின் இந்த பகுதி பாரம்பரிய உள்நாட்டு கலை மற்றும் பஹாய் மோதிரக்கல் சின்னத்தை ஒன்றாகக் கொண்டுவருகிறது, இது அவரது வெளிப்பாடுகள் மூலம் மனிதகுலத்திற்கும் கடவுளுக்கும் இடையிலான உறவைக் குறிக்கிறது.
Participants of Bahá’í community-building activities in Stavanger, Norway, have been exploring different aspects of the life of ‘Abdu’l-Bahá through the arts. They are seen here making a paper tree for an upcoming play.
நார்வேயின் ஸ்டாவாங்கரில் பஹாய் சமூகக் நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்பாளர்கள் கலைகள் மூலம் ‘அப்துல்-பஹா’வின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து வருகின்றனர். வரவிருக்கும் நாடகத்திற்காக அவர்கள் ஒரு காகித மரத்தை இங்கே செய்கிறார்கள்.
Reflecting on ‘Abdu’l-Bahá’s promotion of the Bahá’í principle of universal education, an artist from the United Kingdom created this triptych inspired by the following passage quoted from the Bahá’í writings: “Regard man as a mine rich in gems of inestimable value. Education can, alone, cause it to reveal its treasures…”
உலகளாவிய கல்விக்கான பஹாய் கொள்கை குறித்த அப்துல்-பஹாவின் ஊக்குவிப்பைப் பிரதிபலித்த பிறகு, ஐக்கிய இராஜ்யத்தைச் சேர்ந்த ஒரு கலைஞர் பஹாய் எழுத்துக்களிலிருந்து மேற்கோள் காட்டப்பட்ட பின்வரும் பத்தியால் ஈர்க்கப்பட்டு இந்த முப்பரிமாணத்தை உருவாக்கினார்: மதிப்பிட முடியாத இரத்தினங்கள் அடங்கிய ஒரு சுரங்கமாக மனிதனைக் கருதுங்கள். கல்வி மட்டுமே அதன் பொக்கிஷங்களை வெளிப்படுத்தும் …
சமோவா தீவைச் சேர்ந்த ஒரு பாடல் குழுவின் இப்பதிவு பஹாவுல்லாவின் மறைமொழிகளிலிருந்து சில மேற்கோள்களை சித்தரிக்கின்றன. O SON OF MAN! Deny not My servant should he ask anything from thee, for his face is My face; be then abashed before Me.
O SON OF LIGHT! Forget all save Me and commune with My spirit. This is of the essence of My command, therefore turn unto it.
O SON OF MAN! Put thy hand into My bosom, that I may rise above thee, radiant and resplendent.
O SON OF MAN! The temple of being is My throne; cleanse it of all things, that there I may be established and there I may abide.
In Switzerland, participants of Bahá’í community-building activities drew on their diverse cultural backgrounds to create this quilt featuring metaphors inspired by the life of ‘Abdu’l-Bahá. The quilt was gifted to their local community center.
சுவிட்சர்லாந்தில், பஹாய் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்பாளர்கள் ‘அப்துல்-பாஹா’வின் வாழ்க்கையால் உத்வேகம் பெற்ற உருவகங்களைக் கொண்ட இந்த விரிப்பை உருவாக்க தங்கள் மாறுபட்ட கலாச்சாரப் பின்னணியை ஈர்த்தனர். அவர்களின் உள்ளூர் சமூக மையத்திற்கு இவ்விரிப்பு பரிசாக வழங்கப்பட்டது.
These two ceramic compositions were made by an artist in Kazakhstan depicting imagery from the writings of ‘Abdu’l-Bahá on universal peace.
இவ்விரு பீங்கான் படைப்புகளும் கஃஸாக்ஸ்தானில் உள்ள ஒரு கலைஞரால் உலகளாவிய அமைதி பற்றிய ‘அப்துல்-பாஹா’வின் எழுத்துக்களில் இருந்து உருவகங்களை சித்தரிக்கின்றன.

The Nyota Ya Alfajiri Choir (Morning Star Choir), comprising youth in Kakuma, northern Kenya, has composed this song about the life of ‘Abdu’l-Bahá and His unique station in Bahá’í history.

கென்யா இளைஞர்கள் அப்துல் பஹாவின் வாழ்க்கை மற்றும் பஹாய் வரலாற்றில் அவரது தனிச்சிப்பான ஸ்தானம் குறித்த ஒரு பாடலை இயற்றியுள்ளனர்.
An artist from Kazakhstan created this pen drawing after reflecting on imagery from this prayer composed by ‘Abdu’l-Bahá.
கஃஸாக்ஸ்தான் ஓவியர் ஒருவர் இந்தப் பேனா சித்திரத்தை, அப்துல் பஹாவின் பிரார்த்தனை ஒன்றின் உருவக சித்தரிப்பாகும்
In the Netherlands, the national postal service has issued a stamp designed for the centenary that features a view of the design concept of the Shrine of ‘Abdu’l-Bahá.
நெதர்லாந்தில், தேசிய அஞ்சல் சேவை நூற்றாண்டு நினைவேந்தலுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முத்திரையை வெளியிட்டுள்ளது, இது ‘அப்துல்-பஹா’ கோவிலின் வடிவமைப்பு கருத்தின் காட்சியை கொண்டுள்ளது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் “ஒளியாக இருங்கள்” என்னும் தலைப்பில் ஒரு பாடலில் ஒத்துழைத்தனர், இது ‘அப்துல்-பஹாவின் எழுத்துக்களிலிருந்து பின்வரும் மேற்கோள்களின் உத்வேகம் பெற்றது: “தெய்வீகக் கல்வி கடவுள் ராஜ்யத்தின் கல்வி: அது தெய்வீகப் பரிபூரணங்களைப் பெறுவதில் அடங்கும், இதுவே உண்மையான கல்வி.”
An artist in Singapore created this painting after reflecting on ‘Abdu’l-Bahá’s resilience and perseverance in the face of the great difficulties He endured during His lifetime.
தமது வாழ்க்கையில் அனுபவித்த பெரும் சிரமங்களுக்கு எதிரில் அப்துல் பஹாவின் மீள்ச்சித்திறம் மற்றும் பற்றுறுதி குறித்த பிரதிபலிப்பில் சிங்கப்பூர் ஓவியர் ஒருவர் இந்த சித்திரத்தை வரைந்தார்
“அவர்கள் பார்வையில்” என தலைப்பிடப்பட்ட ஓர் அசைவூட்டம் ஐக்கிய அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. அதில் லியோ டால்ஸ்டாய், ஃகாலில் ஜிப்ரான், யோனே நோகுச்சி போன்ற அப்துல் பஹாவின் இரசிகர்களின் விமர்சனங்கள் வழங்கப்பட்டடுள்ளன.
காங்கோ ஜனநாயகக் குடியரசில், பல இசைக்கலைஞர்கள் ‘அப்துல்-பாஹாவின் குணாதிசயங்கள் மற்றும் மனிதகுலத்திற்கான அவரது சேவை ஆகியவற்றின் அசாதாரண குணங்களைப் பற்றி ஒரு பாடலைப் பதிவு செய்துள்ளனர்.
An artist from Romania created this illustration of the room in the House of ‘Abdu’lláh Páshá in ‘Akká where a series of table talks were given by ‘Abdu’l-Bahá between 1904 and 1906 in response to questions posed by Laura Dreyfus-Barney, an American Bahá’í resident in Paris. The transcriptions of the talks were later published as the book Some Answered Questions.
ருமேனியாவைச் சேர்ந்த ஒரு கலைஞர் அக்காவில் உள்ள அப்துல்லா பாஷாவின் அறையில் இந்த விளக்கப்படத்தை உருவாக்கினார், அங்கு, பாரீஸில் வசிக்கும் ஐக்கிய அமெரிக்க பஹாய் ஆன லாரா ட்ரேஃபஸ் பார்னி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக 1904 மற்றும் 1906 க்கு இடையில் ‘அப்துல்-பாஹா’ மூலம் தொடர்ச்சியான உரைகள் வழங்கப்பட்டன.பின்னர், உரைகளின் படியெடுத்தல் சில பதிலளிக்கப்பட்ட கேள்விகள் எனும் புத்தகமாக வெளியிடப்பட்டது.
A group of children in Australia created these origami pieces after reading a story about ‘Abdu’l-Bahá in which He sells an expensive coat that He had received in order to buy more coats for those in need.
ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகள் குழு அப்துல்-பஹா பற்றிய கதையைப் படித்த பிறகு இந்த ஓரிகமி துண்டுகளை உருவாக்கியது.
An artist from Canada has prepared paper cards, each containing a prayer composed by ‘Abdu’l-Bahá. The prayer cards are illuminated by paintings of flowers inspired by the imagery of the natural world found in these prayers, including the following: “They have bloomed like sweet blossoms and are filled with joy like the laughing rose. Wherefore, O Thou loving Provider, graciously assist these holy souls by Thy heavenly grace which is vouchsafed from Thy Kingdom…”
கனடாவைச் சேர்ந்த ஒரு கலைஞர் காகித அட்டைகளைத் தயாரித்துள்ளார், ஒவ்வொன்றும் ‘அப்துல்-பஹா’ இயற்றிய பிரார்த்தனையைக் கொண்டுள்ளது. பின்வரும் பிரார்த்தனையில் காணப்படும் இயற்கை உலகின் உருவகத்தின் உத்வேகம் பெற்ற பிரார்த்தனை அட்டைகள் பூக்களின் ஓவியங்களால் ஒளிரும்: “They have bloomed like sweet blossoms and are filled with joy like the laughing rose. Wherefore, O Thou loving Provider, graciously assist these holy souls by Thy heavenly grace which is vouchsafed from Thy Kingdom…”
An artist in Tunisia created these watercolor paintings based on the design concept for the Shrine of ‘Abdu’l-Bahá.
அப்துல் பஹாவின் நினைவாலய வடிவ கருத்தாக்கத்தின் அடிப்படையில் துனீசிய பஹாய் ஒருவர் இந்த நீர்வர்ண சித்திரத்தை வரைந்துள்ளார்.
This painting by an artist in India evokes profound metaphors from ‘Abdu’l-Bahá’s writings on the equality of women and men.
 ஆண் பெண் சமத்துவம் குறித்த அப்துல் பஹாவின் எழுத்துகளில் காணப்படும் உவமைகளை இந்திய நாட்டைச் சேர்ந்தவரின் இந்த ஓவியம் தூண்டுகிறது
சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு இசைக் குழுவினர் அப்துல் பஹா எழுத்துகளின் சில உரைப்பகுதிகளுக்கு இசையமைத்துள்ளனர்
Participants of Bahá’í community-building activities in South Africa created these artistic pieces, which were inspire by stories from ‘Abdu’l-Bahá’s life on the themes of selfless service to humanity and love.
தென் ஆப்பிரிக்காவில் பஹாய் சமூக நிர்மாணிப்பின் பங்கேற்பாளர்கள் இந்த கலைத்துவ படைப்புகளை உருவாக்கியுள்ளனர். இவை மானிடத்திற்கான அப்துல் பஹாவின் தன்னலமற்ற சேவை மற்றும் அன்பிலிருந்து உத்வேகம் பெற்றவை
மானிடத்திற்கான அப்துல் பஹாவின் சேவை குறித்த கதைகளை கொலம்பியா நாட்டின் குழந்தைகளும் இளைஞர்களும் பகிர்ந்துகொள்ளும் பல காணொளிகளில் இதுவும் ஒன்று
ஆர்மேனியா நாட்டின் இந்த அனிமேஷன், குழந்தைகளுக்கான அப்துல் பஹாவின் பிரார்த்தனைக்கு இசையூட்டியுள்ளது. “கடவுளே என்னைப் பாதுகாத்து….”
An artist in Canada has produced a series of illustrations of significant places associated with ‘Abdu’l-Bahá. The top-left image depicts the design concept of His Shrine, the top-right image is of the Mansion of Bahjí, and the bottom image is of the House of ‘Abdu’l-Bahá in Haifa.
கனடா நாட்டைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் அப்துல் பஹாவுடன் தொடர்புடைய முக்கிய இடங்கள் குறித்த சித்தரிப்புகளை உருவாக்கியுள்ளார்– அப்துல் பஹாவின் நினைவாலயம், பாஹ்ஜி மாளிகை மற்றும் ஹைஃபாவிலுள்ள அப்துல் பஹாவின் இல்லம்
Different artists in Iran created these calligraphic works inspired by prayers and writings of ‘Abdu’l-Bahá.
இரான் நாட்டிலுள்ள வெவ்வேறு ஓவியர்கள் அப்துல் பஹாவின் பிரார்த்தனைகள் மற்றும் எழுத்துகளின் உத்வேகம் பெற்ற கையெழுத்துக்கலை படைப்புகளை உருவாக்கியுள்ளனர்
வாழ்வின் ஆன்மீகப் பரிமானங்கள் குறித்த அப்துல் பஹாவின் எழுத்துகளிலிருந்து உரைப்பகுதிகளை உள்ளடக்கிய, இரான் நாட்டில் உருவாக்கப்பட்ட பல அனிமேஷன்களில் இதுவும் ஒன்று

This animation is one of several that have been created in Iran, incorporating passages from the writings of ‘Abdu’l-Bahá about the spiritual dimension of life.

மானிடத்திற்கான தன்னலமற்ற சேவை குறித்த ஒரு பாடலை தீமோர் லெஸ்ட்டெ இளைஞர்கள் உருவாக்கியுள்ளனர்
இரான் நாட்டு இசைக் கலைஞர்கள் உருவாக்கிய அப்துல் பஹாவின் வாழ்க்கை குறித்த பாடல்களுள் இதுவும் ஒன்று. இப்பாடல் மகிழ்ச்சி, ஆன்மீக உத்வேகம், கடவுளிடம் அணுக்கம் மற்றும் அமைதி
This abstract painting from the Netherlands was inspired by a hopeful vision of the future as found in the Bahá'í teachings.
பஹாய் போதனைகளில் காணப்படும் எதிர்காலத்திற்கான ஆர்வநம்பிக்கைமிக்க தொலைநோக்கினால் உத்வேகம் பெற்ற கருத்தியல் ஓவியம்
A musician in Macau has released this song about ‘Abdu’l-Bahá’s unique station in Bahá’í history.
பஹாய் வரலாற்றில் அப்துல் பஹாவின் தனித்துவமான ஸ்தானம் குறித்த இப்பாடலை மக்காவ் தீவின் இசைக்கலைஞர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
A musician from Ireland and a composer from Singapore have produced an album that sets passages from the writings of Bahá’u’lláh and ‘Abdu’l-Bahá to music. The album cover has been created by an artist in Spain.
அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு இசைக்கலைஞரும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு இசையமைப்பாளரும் பஹாவுல்லா மற்றும் ‘அப்துல்-பாஹா’ ஆகியோரின் எழுத்துக்களில் இருந்து எடுக்கப்பட்ட உரைப்பகுதிகளுக்கு இசை அமைத்து ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஆல்பத்தின் கவர் ஸ்பெயின் கலைஞர் ஒருவரால் உருவாக்கப்பட்டது.
This illustration created by an artist from Chile is of the entrance to the Maxwell residence in Montreal, Canada, where ‘Abdu’l-Bahá gave talks to public audiences during His ten-day visit to that city in 1912.
இந்தச் சித்தரிப்பு, சிலி நாட்டைச் சேர்ந்த ஒரு கலைஞரின் பேனா வரைபடங்களின் ஒரு பகுதியாகும், இது அப்துல்-பஹாவுடன் தொடர்புடைய இடங்களைச் சித்தரிக்கிறது. இந்த வரைபடம் கனடாவின் மாண்ட்ரீலில் உள்ள மேக்ஸ்வெல் குடியிருப்பின் நுழைவாயிலாகும், அங்கு அவர் 1912 இல் அந்த நகரத்திற்கு பத்து நாள் வருகையின் போது பொது பார்வையாளர்களிடம் பேசினார். சமயங்களின் ஒருமை, தப்பெண்ணங்களை அகற்றுதல், பொருளாதார சமத்துவமின்மை போன்ற விஷயங்கள் பரவலாக ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழி செய்தித்தாள்களால் வெளியிடப்பட்டது.
இத்தாலி பஹாய் சமூகத்தால் உருவாக்கப்பட்ட இந்த அனிமேஷன் வீடியோ, ‘அப்துல்-பஹா’ எழுதிய ஒரு பிரார்த்தனையை இசையமைக்கிறது, “O God! Educate these children. These children are the plants of Thine orchard, the flowers of Thy meadow, the roses of Thy garden.”
This art exhibit in Germany invites reflection on ‘Abdu’l-Bahá’s words of love, unity, and harmony. Framed quotations from His writings are set among artworks they have inspired.
ஜெர்மனியில் இந்த கலை கண்காட்சி ‘அப்துல்-பஹா’வின் அன்பு, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் குறித்த வார்த்தைகளைப் பிரதிபலிக்கிறது. அவரது எழுத்துக்களிலிருந்து நிர்மாணிக்கப்பட்ட மேற்கோள்கள் அவை உத்வேகமூட்டிய கலைப்படைப்புகளில் அமைக்கப்பட்டன.
இந்த வீடியோவில், இந்திய பஹாய் சமூகத்தின் உறுப்பினர்கள் அனைத்து மக்களுக்குமான ‘அப்துல்-பஹா’வின் அன்பு பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இந்த வீடியோவில், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனின் அண்டைப்புறத்தில் சமூகக் நிர்மாணிப்பு நடவடிக்கைகளின் பங்கேற்பாளர்கள், ‘அப்துல்-பஹாவின் வாழ்க்கை பற்றிய பாடல்களைப் பாடுகிறார்கள்.
This painting by an artist in Peru uses light as a metaphor for ‘Abdu’l-Bahá’s call for unity.
பெருவில் உள்ள ஒரு கலைஞரின் இந்த ஓவியம் ஒளியை ‘அப்துல்-பஹா’வின் ஒற்றுமைக்கான அழைப்பின் உருவகமாகப் பயன்படுத்துகிறது.
ஸ்வீடனின் லுண்டின் க்ளோஸ்டர்கார்டன் அண்டைப்புறத்தில் சமூகக் நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பங்கேற்பாளர்களால் பாடப்பட்ட பாடல்களின் பதிவு இது.
“புயல்” என்று பெயரிடப்பட்ட இந்த பாடல், அமெரிக்கா முழுவதும் உள்ள மக்களால் இயற்றப்பட்டது மற்றும் சமூகத்திற்கு சேவை செய்வதன் மூலம் மனிதகுலம் எதிர்கொள்ளும் சவாலான நேரங்களை வழிநடத்துவது உட்பட பல்வேறு கருப்பொருள்களைத் தொடுகிறது.
This digital artwork, created by an artist in the United States, is inspired by the words of ‘Abdu’l-Bahá on the equality of women and men, in which He likens humanity to a bird with two wings.
அமெரிக்காவில் ஒரு கலைஞரால் உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் கலைப்படைப்பு, பெண்கள் மற்றும் ஆண்களின் சமத்துவம் குறித்த ‘அப்துல்-பஹா’வின் வார்த்தைகளின் உத்வேகம் பெற்றது, அதில் அவர் மனிதகுலத்தை இரண்டு இறக்கைகள் கொண்ட பறவையுடன் ஒப்பிடுகிறார்.

இந்த அட்டைகள் ஜப்பானின் ஃபுகுஷிமாவில் ஒரு கலைஞரால் தயாரிக்கப்பட்டன, பாரிசில் ‘அப்துல்-பாஹா’ வழங்கிய பொது உரைகளில் இருந்து ஒற்றுமையை ஊக்குவிப்பதில் மதத்தின் பங்கு மற்றும் வாழ்க்கையின் உண்மையான நோக்கம் போன்ற பல்வேறு கருப்பொருள்களை அவை உள்ளடக்கியுள்ளன
Participants in community-building activities in South Africa have created clay cutouts of various shapes and sizes that will be arranged together to form a nine-pointed star, a symbol of the Bahá’í Faith. The number nine represents unity and perfection.
தென்னாப்பிரிக்காவில் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளின் பங்கேற்பாளர்கள் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட களிமண் கட்அவுட்களை உருவாக்கியுள்ளனர், இது பஹாய் சமயத்தின் அடையாளமான, ஒன்பது-புள்ளி நட்சத்திரத்தை உருவாக்க ஒன்றாக ஏற்பாடு செய்யப்படும். எண் 9 ஒற்றுமை மற்றும் முழுமையை குறிக்கிறது.
அஜர்பைஜானின் பாகுவில் உள்ள இசைக்கலைஞர்கள் இந்த பாடலை அசர்பைஜானி, துருக்கி, ரஷ்யன், பாரசீக மற்றும் ஆங்கிலத்தில் பாடல் வரிகளுடன் சமூகத்திற்கான சேவை பற்றி எழுதியுள்ளனர். இந்த பாடல் பாகு நகரத்தின் ‘அப்துல்-பஹா’வுடனான வரலாற்று உறவுகளால் உத்வேகம் பெற்றதாகும். பாஃகு பஹாய் சமூகத்தின் ஆரம்ப வளர்ச்சி ‘அப்துல்-பஹா’வால் பேணப்பட்டது.
An artist from the United Kingdom created these paintings after reflecting on ‘Abdu’l-Bahá’s statement “The more often the captain of a ship is in the tempest and difficult sailing the greater his knowledge becomes.”
யுனைடெட் கிங்டமிலிருந்து ஒரு கலைஞர் இந்த ஓவியங்களை ‘அப்துல்-பஹாவின் அறிக்கையான “ஒரு கப்பலின் கலபதி அடிக்கடி சோதனையிலும் கடினமான பயணத்திலும் ஈடுபடும் போது அவரது அறிவு அதற்கேற்றவாறு அதிகரிக்கின்றது” குறித்து பிரதிபலிப்பின் பயனாக உருவாக்கினார்.
பூட்டப்பட்ட நிலையில், ருமேனியாவில் உள்ள ஒரு குடும்பம் 1911 இல் ‘அப்துல்-பஹா ஐரோப்பாவிற்கு விஜயம் செய்த முதல் நாட்களின் முக்கிய நிகழ்வுகளின் வியத்தகு விளக்கக்காட்சியைப் பதிவு செய்தது. இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள நாடகம்,’ அப்துல் பஹாவை சந்தித்த சிலரை சித்தரிக்கிறது. இந்த சந்திப்புகள் அவர்கள் மீது ஏற்படுத்திய மாற்றத்தை இந்த வீடியோ நினைவுகூர்கின்றது

After reflecting on ‘Abdu’l-Bahá’s love for the indigenous peoples of the world and on the passage from the Bahá’í writings which states that all people are “the flowers of one garden,” an indigenous artist in Canada collaborated with a seamstress and dozens of other people to create embroidery featuring traditional indigenous beadwork.
உலகின் பூர்வீக மக்களுக்கான ‘அப்துல்-பஹா’வின் அன்பையும், அனைத்து மக்களும் “ஒரு தோட்டத்தின் மலர்கள்” என்னும் பஹாய் எழுத்துகள் உரைப்பகுதியயைப் பிரதிபலித்த பிறகு, கனடாவில் ஒரு பழங்குடி கலைஞர் ஒரு தையல்காரருடனும் டஜன் கணக்கான மற்ற மக்களுடனும். ஒத்துழைத்து பாரம்பரிய உள்நாட்டு மணிகள் கொண்ட எம்பிராய்டரியை உருவாக்கினார்.

These illustrations for children by an artist in Spain explore concepts from the Bahá’í teachings about education, drawing on the following statement from Bahá’u’lláh: “Regard man as a mine rich in gems of inestimable value. Education can, alone, cause it to reveal its treasures, and enable mankind to benefit therefrom.”
ஸ்பெயினில் உள்ள ஒரு கலைஞரின் குழந்தைகளுக்கான இந்த விளக்கப்படங்கள் பஹாய் போதனைகளிலிருந்து கல்வி பற்றிய கருத்துக்களை ஆராய்கின்றன, பஹாவுல்லாவின் பின்வரும் அறிக்கையை பயன்படுத்துகின்றன: “மனிதனை ஒரு விலைமதிப்பிட இயலாத இரத்தினங்கள் அடங்கிய சுரங்கமென கருதுங்கள்…”

இந்த வீடியோவில் பாப்புவா நியூ கினியின் குடெனோஃப் தீவில் இருந்து ஒரு பாடகர் குழு இடம்பெற்றுள்ளது, தற்போது போர்ட் மோர்ஸ்பியில் கட்டப்பட்டு வரும் பஹாய் வழிபாட்டு இல்லம் பற்றிய பாடல்களை இக்குழு பாடுகின்றது

This mandala was embroidered by a Bolivian artist who was inspired by ‘Abdu’l-Bahá’s immense love for all of humanity.
இந்த மண்டலம் ஒரு பொலீவிய நாட்டு ஓவியரால் எம்பிராய்டரி செய்யப்பட்டது. இவர் அப்துல் பஹாவின் மானிடம் அனைத்திற்குமான அன்பின் உத்வேகத்தைப் பெற்றிருந்தார்.
ரஷ்யாவில் ஒரு மெஸ்ஸோ-சோப்ரானோ மற்றும் டெனோர் இரட்டையர்கள், ஓர் ஓப்ரா பாணியில், ‘அப்துல்-பஹா இயற்றிய பிரார்த்தனைக்கு இசையமைத்தனர். “கடவுளே, எனக்கு நல்வழி காட்டி, என்னைப் பாதுகாத்து…” என இந்தப் பிரார்த்தனை ஆரம்பிக்கின்றது.
This pen drawing by an artist from New Zealand is among several others that will be included in an upcoming publication, titled “Meditations on Some Answered Questions,” in honor of the centenary of ‘Abdu’l-Bahá’s passing.
நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு கலைஞரின் இந்தப் பேனா சித்திரம், “அப்துல்-பாஹாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு,” பதிலளிக்கப்பட்ட சில கேள்விகள் மீது தியானம் “என்னும் தலைப்பில் வரவிருக்கும் வெளியீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
More songs produced in honor of the centenary of the passing of ‘Abdu’l-Bahá can be found on this playlist.
அப்துல்-பாஹாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட மேலும் பல பாடல்களை இந்தப் பட்டியலில் காணலாம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1541/