விவசாயம்: கோட்பாடு உருவாக்கத்தில் விவசாயிகளின் பங்கை BIC வலியுறுத்துகின்றது



8 அக்டோபர் 2021


BIC ஜெனீவா, 5 அக்டோபர் 2021, (BWNS) – ஒவ்வொரு ஆண்டும் ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் உணவளிக்க போதுமான அளவு உணவு உற்பத்தி செய்யப்பட்டாலும், உணவு அமைப்புகள் மனிதகுலம் முழுவதற்கும் உணவு பாதுகாப்பு வழங்குதலில் போதாக்குறையுடன் இருப்பது எப்படி?

இந்தக் கேள்வியை ஆராய்வதற்காக, பஹாய் அனைத்துலக சமூகத்தின் ஜெனீவா அலுவலகம் ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய உணவு முறைகள் உச்சமாநாட்டின் போது ஒரு விவாதத்தை நடத்தியது- இது நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்ட 1996-க்குப் பின்னர் நடைபெறும் முதல் பெரிய உணவு உச்சமாநாடு ஆகும். 

இந்த நிகழ்ச்சி குறிப்பாக உணவு உற்பத்தி பற்றிய விவாதங்களில் விவசாயிகளை நடுமையத்தில் வைக்க வேண்டியதன் அவசியத்தைப் பார்த்ததுடன், ஐ.நா. உணவு முறை உச்சமாநாட்டிற்கு ஐ.நா.வின் சிறப்புத் தூதர், உலக உணவு பாதுகாப்புக் குழுவின் செயலாளர், கேர் (CARE) இன்டர்நேஷனலில் அறிவு மேலாண்மை மற்றும் கற்றல் இயக்குனர், ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பிரதிநிதிகள்,  அத்துடன் தொடர்புடைய அனுபவம் கொண்ட பஹாய் உத்வேக அமைப்புகளையும் உள்ளடக்கியிருந்தது.

“அதிகரித்து வரும் ஆதாரங்கள், கிராமப்புற உற்பத்தித் துறை சார்ந்த மேம்பாடுகள் உள்ளூர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் மக்களை பெரிதும் சார்ந்துள்ளன என்பதைக் காட்டுகின்றன- இது பெருந்தொற்றின் போது முன்னெப்போதையும் விட வெளிப்படை ஆகிவிட்டது,” என ஜெனீவா அலுவலகத்தின் பிரதிநிதியான சிமின் ஃபஹண்டேஜ் கூட்டத்தில் கூறினார்.

அவர் மேலும் கூறினார்: “இருப்பினும், உணவு அமைப்புகள் மற்றும் கொள்கை உருவாக்க செயல்முறைகள் குறித்த உயர்மட்ட உரையாடல்களில் பெரும்பாலும் அவர்களின் குரலோ அனுபவமோ காணப்படவில்லை.

“விவசாயக் கொள்கை மற்றும் உணவு பாதுகாப்பு பற்றிய முடிவுகளில் பெரும்பாலானவை பொதுவாக நடைமுறையில் கொள்கைகள் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை வடிவமைக்கும் கிராமப்புற அமைப்புகள் மற்றும் உள்ளூர் மெய்நிலைகளுக்கும் வெளியே வெகு தொலைவில் எடுக்கப்படுகின்றன.” 

பஹாய் போதனைகளின் அடிப்படையில், திருமதி ஃபஹண்டேஜ் தொடர்ந்து விளக்கினார். மாற்றத்தை அடைவதற்கு, சமூகத்தில் விவசாயிகளின் பங்கு பற்றிய புதிய கருத்தாக்கங்கள் தேவை. “நாம் விவசாயிகளை ‘மனித சமூகத்தின் முதல் செயலூக்க முகவராக’ அரவணைத்து, சமூகங்களின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான கேள்விகளை விவசாயிகளிலிருந்து ஆரம்பிக்க அனுமதித்தால் எவ்வித புதிய சாத்தியக்கூறுகள் உருவாகலாம் என கற்பனை செய்து பாருங்கள்?”

இந்த அடிப்படையில், விவசாயிகள் மற்றும் சமூகங்களின் உணவு உற்பத்தி பற்றி உள்ளூர் மட்டத்தில் உருவாக்கப்படும் அறிவு உணவு மற்றும் விவசாயம் பற்றிய சர்வதேச கொள்கைகளுக்கு எவ்வாறு அறிவூட்ட முடியும் என்பதைக் குழு உறுப்பினர்கள் ஆராய்ந்தனர்.

கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் விரிவான அனுபவம் கொண்ட பஹாய் உத்வேக அமைப்பான FUNDAEC-இன் பிரதிநிதியான எவர் ரிவேரா, ஒவ்வொரு மனிதனின் மேன்மையையும் பார்க்கும் மற்றும் பாரபட்சம் மற்றும் தந்தைமனப்பான்மைக்கு எதிராக ஒவ்வொருவரையும் பாதுகாக்கும் மனித இயல்பு பற்றிய ஆழமான புரிதலுடன் குறுகிய மற்றும் வரையறுக்கப்பட்ட கருத்தாக்கங்கள் குறுகிய மற்றும் வரையறுக்கப்பட்ட கருத்தாக்கங்களை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதை விவரித்தார்.  

திரு. ரிவேரா மேலும் விளக்கி, மக்கள் தங்கள் சமூகங்களின் நல்வாழ்வுக்குப் பங்களிக்கும் திறனை வளர்ப்பதற்கான, குறிப்பாக உணவு தன்னிறைவு நோக்கத்தை கொண்ட முன்முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் FUNDAEC-இன் அணுகுமுறையை விவரித்தார்.

“விவசாயிகளின் ஆழமான பாரம்பரிய அறிவு மற்றும் நவீன அறிவியலின் சிறந்த நடைமுறைகளை ஈர்க்கும் அணுகுமுறைகளை FUNDAEC ஊக்குவிக்கிறது. இது உணவு உற்பத்தி செயல்முறைகளை மேம்படுத்தவும், கூட்டு நல்வாழ்வை ஆதரிக்கும் சமூக கட்டமைப்புகள் மற்றும் புதிய அமைப்புகளை உருவாக்கவும் விவசாயிகளுக்கு உதவுகிறது.

“ஒருவர் மற்றவருடன் ஒத்துழைத்து ஆதரவளிக்கும் சிறு விவசாயிகள் குழுக்களை நிறுவுதல், அனைவரையும் அணுமதிக்கும் ஒரு கிராம களஞ்சியத்தை உருவாக்குதல், விவசாய நடைமுறைகளில் மாற்றங்கள் மற்றும் விவசாய பொருட்களை சந்தைக்கு கொண்டு வருவதில் தேவையற்ற இடைத்தரகர்களை அகற்ற விளைபொருட்களை விநியோகித்தல் ஆகியவை இதில் அடங்கும்.”

மண் அரிப்பு, பெரிய அளவிலான காடழிப்பு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை போன்ற சுற்றுச்சூழல் சீரழிவின் சில பெரிய சவால்களின் தீங்கு விளைவிக்கும் தாக்கத்தையும் கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் குறித்துரைத்தன. ஐ.நா. உணவு முறை உச்சமாநாட்டிற்குச் சிறப்புத் தூதரான டாக்டர் மார்ட்டின் ஃப்ரிக் கூறுகையில், “இந்தத் தவறுகள் அனைத்தும் சரிசெய்யப்பட, உணவு முறைகள் மூலம் அல்லாமல் வேறு எந்த வழியும் இல்லை. மனித கண்ணியத்தையும் … அதிகார சமநிலையின்மையும் குறித்துரைப்பதால் மட்டுமே பிரச்சினைகள் தீர்க்கப்பட முடியும்.

இந்த பிரச்சினைகளை ஆராயும் கூட்டங்களை தொடர்ந்து நடத்துவதால், BIC-யின் ஜெனீவா அலுவலகம் விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான கருப்பொருள்கள் பற்றிய அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1538/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: